Contact us at: sooddram@gmail.com

 

கார்த்திகை 2010 மாதப் பதிவுகள்

கார்த்திகை 30, 2010

பிரித்தானியா சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானியா சென்றுள்ளார். இவர் விசேட விமானமொன்றில் இன்று மாலை பிரித்தானியா நோக்கிச் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி பிரித்தானியா சென்றுள்ளார். பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார். ஜனாதிபதி தனது இந்த விஜயத்தின் போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விசேட உரையொன்றினையும் நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். முன்னதாக ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவிருந்தபோதும் பல காரணங்களுக்காக அது பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 30, 2010

பட்ஜெட்டை எதிர்த்து கூட்டமைப்பு வாக்களிக்காது

‘ஜனாதிபதிக்கு தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவே இம்முடிவு’

ஜனாதிபதிக்கு எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காதிருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி. மாவை சேனாதிராஜா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எமது மக்களின் மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் அரசியல் தீர்வுக்காக பங்க ளிக்கவும் தயாராக உள்ளோம். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள திட்டங்களை முன் னெடுக்கையில் அங்கிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களை புறக் கணிப்பது ஏற்க முடியாதது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

SRI LANKAN OFFICIALS TARGET NEW LTTE LEADER VINAYAKAM

Sri Lankan defence authorities moved quickly last week to target the self-styled new leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) organization who is operating in Europe under the nom de guerre Vinayakam. A team of Police and intelligence officials sought and obtained on November 24, a warrant for the arrest of Sekarapillai Vinayakamoorthy alias Vinayakam from the Chief Magistrates Courts in Colombo. Since the person concerned is operating in areas beyond national jurisdiction, Sri Lankan officials have sought and obtained the services of the International Criminal Police Organization –INTERPOL – to issue an “INTERPOL Red Notice” regarding Vinayakamoorthy alias Vinayakam for the alleged offence of terrorism. (more...)

கார்த்திகை 30, 2010

தொடரும் 1883 இனக்கலவர மலையகத் தமிழ் அகதிகள் நிலை...

மலையகத் தமிழர் பல்லாயிரவர் யாழ்-குடாநாடு வந்தனர். பல மாதங்கள் அகதி முகாம்களில்…பல மாதங்களின் பின் பலர் மலையகம் திரும்பினர். 101 குடும்பங்களை அறவழிப்போராட்டக் குழுவினர் பொறுப்பேற்றனர். யாழ் குடாநாட்டில் தங்குமாறு கோரினர். யாழ்ப்பாணப் பொதுமக்களிடம் பணம் திரட்டி நிலம் வாங்கினர். வீட்டு நிலம் தோட்ட நிலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பகிர்ந்தனர். கெற்பலி என்ற ஊரில் 61 குடும்பங்கள். மறவன்புலவு என்ற ஊரில் 40 குடும்பங்கள். 1985இல் நிலங்களை அன்பளிப்பாக வெற்றுத் தாளில் கடிதம் கொடுத்தனர். சட்டபூர்வமற்ற கடிதம் அது. சட்டபூர்வ உறுதியைக் கேட்டு அகதிகள் 25 ஆண்டுகளாக அறவழிப் போராட்டக்குழுவிடம் அலைகின்றனர். (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

மூன்று ஆண்டுகள் நெருங்கும் இவ்வேளையில் வியத்தகு அடைவுகளை எய்தியிருக்கிறோம் -கிழக்கு மாகாண சபையின் பட்ஜட் உரையில் முதலமைச்சர்

வளம்மிக்க எமது கிழக்கு மாகாணமானது யுத்தத்தின் கோரப்பிடியிலும், ஆயுத அச்சுறுத்தலிலும், சகோதர முரண்பாட்டிலும் இருந்தது. இயற்கை கிழக்கு மண்ணுக்கு தனது அருட்கொடைகளை வாரி வழங்கியிருந்தது. அழகிய கடற்கரை, நெல் விளையும் விளைநிலங்கள், ஆறுகள், குளங்கள், மலைத்தொடர்கள் என அனைத்து விதமான வளங்கள் இருந்த போதிலும் அதனை முழுமையாக அனுபவிப்பதற்கோ, அதன் பலாபலங்களை பெற்றுக்கொள் வதற்கோ வாய்ப்புக்கள் எமக்கிருக்கவில்லை. தொடர்ந்து கொண்டிருந்த கொடிய ஆயுதப் போராட்டத்தின் மூலம் எம்மக்களுக்காக எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதனை உணர்ந்து ஜனநாயக அரசியல் நீரோட் டத்தில் தான் எமது மக்களுக்கான அரசியல் அதிகாரங்களையும், அபிவிருத்தியினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் எமது ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ கட்சி உதயமானது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

Interpol “Red Notice” issued for new LTTE leader Vinayakam

Sri Lankan defence authorities moved quickly last week to target the self-styled new leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) organization who is operating in Europe under the nom de guerre Vinayakam. A team of Police and intelligence officials sought and obtained on November 24th, a warrant for the arrest of Sekarapillai Vinayakamoorthy alias Vinayakam from the Chief Magistrates Courts in Colombo. (more...)

கார்த்திகை 30, 2010

அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள

இளவாலை, வித்தகபுரத்தில் ஒரு மாதத்திற்குள் மீள்குடியேற்றம் - விநாயகமூர்த்தி முரளிதரன்

இளவாலை வட மேற்கு, வித்தகபுரம், இளவாலை வடக்கு ஆகிய பகுதிகளில் ஒருமாத காலத்தில் மக்கள் மீள்குடியேற்றப்பட உள்ளனர். இதேபோன்று மயிலிட்டியில் கண்ணி வெடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதோடு விரைவில் அங்கும் மீனவ குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவர். மயிலிட்டி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்ற பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார். மயிலிட்டியில் மக்களை மீள் குடியேற்று வதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு யாழ். இராணுவத்தளபதியுடன் பேசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இங்கு மக்களை மீள் குடியேற்ற ஏற் கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

தோழர் செந்தில்வேல் என்ன நீங்க பேசுறீங்க……

கடந்தகாலங்களில் புலிகளின் போராட்டத்தை பகிரங்கமாக ஆதரித்த கட்சிகளில் தோழர் செந்தில்வேல்  அவர்களின் பு.ஜ.மா.லெ.கட்சி முக்கியமானது. புலிகளின் அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் புலிகளை ஆதரித்து நின்றது. புலிக்கும் இடதுசாரிக்கொள்கை களுக்கும் ஏழாம் பொருத்தம். வர்க்கப்போராட்டம் என்றால் கிறுக்குப்போராட்டம் என விளக்கம் கொடுக்கும் புலிகளின் போராட்டத்தில் என்ன நியாயத்தை கண்டு பு.ஜ.மா.லெ.கட்சி ஆதரித்ததோ தெரியவில்லை. தற்போது புலிகள் இல்லை. தோழர் செந்தில்வேல் புலிகளையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். நல்ல விடயம். தமிழ்மக்கள் மத்தியில் இருந்த கொஞ்ச நஞ்ச இடதுசாரிச் சிந்தனைகளுக்கு ஆப்பு வைத்ததே புலிகள் இயக்கம் அது ஆடிய கரகாட்டத்தில் எல்லாச் சிந்தனைகளும் மழுங்கடிக்கப்பட்டு புலியிசம் மட்டுமே தமிழ்மக்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கொள்கையாக இருந்தது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

கடற்கரை பாதுகாப்பு, மாற்று செயல்திட்டம்

(முனைவர் தி.ராஜ்பிரவின்)

இந்தியாவின் மிக நீண்ட கடற் கரையை கொண்டுள்ள மாநிலங்களில் தமிழகம் ஒன்று. குறிப்பாக 1013 கி.மீ. நீளத் துடன் சுமார் 25 சதவீதம் மக்கள் தொகை யை கொண்ட தமிழக மீனவக் கிராமங் களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும், மதச் சிறுபான் மையினர் மட்டுமே. கடல்செல்வங்களுடன் இயற்கை முறையில் அமைக்கப்பட்டுள்ள இப்பாரம் பரிய மக்களின் வாழ்க்கை, வாழ்வியல் தேவைகள், பொருளாதார நலன்கள் கடலை நம்பியே உள்ளது. மீன் சம்பந்தப் பட்ட தொழில்கள், மதிப்பு கூட்டும் தொழில்கள், கடலோரப்பகுதி வேளாண் மை கூட கடலின் தன்மை மற்றும் இயற்கை வளங்கள், கட்டமைப்புகளை சார்ந்தே உள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

நாட்டின் எப்பாகத்திலும்

இனவிகிதாசாரத்தை மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை - அமைச்சர் பசில் ராஜபக்ஷ

நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஓர் இனத்தினதும் இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன விகிதாசாரத்தை மாற்றும் எந்த குடியேற்றத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். வடக்கில் இந்திய இராணுவம் இருந்த போதும் சரி. போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலமானாலும் சரி உயர் பாதுகாப்பு வலயங்களில் யாரும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதன் முதலாகத் தமிழ் மக்களைக் குடியமர்த்தினார். 20 வருடங்களுக்கு முன் இடம்பெயர்ந்த முஸ்லிம்களைக்கூட குடியமர்த்தவில்லை. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

உலகம் முழுவதும் அமெரிக்கா அட்டூழியம்: தூதரக ரகசிய ஆவணங்கள் அம்பலம்  ஒபாமா நிர்வாகம் அதிர்ச்சி

இராக் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட் டதைத் தொடர்ந்து, ‘விக்கிலீக்ஸ்’ இணையதள நிறுவனம் தற்போது உலகம் முழுவதிலும் அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க தூதர கங்களும் நடத்தி வரும் நாசகர பேச்சுவார்த்தைகள், பேரங்கள், அராஜகங்களை அம்பலப்படுத் தும் விதமாக லட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட் டுள்ளது. இதனால் தனது நண்பர்கள், கூட்டாளிகளுடனான உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அமெரிக்க நிர்வாகம் கதிகலங்கிப் போயுள்ளது. இதையடுத்து விக்கி லீக்ஸ் நிறுவனத்தை மூடுவதற்கும் முயற்சிகளை மேற்கொண் டுள்ளது.
(மேலும்.....)

கார்த்திகை 30, 2010

பிறரின் உணர்வை மதிப்பவர்கள் ஏழைகள்

‘பணக்காரர்களை விட ஏழைகளே பிறரின் உணர்ச்சிகளை அறிந்து கனிவுடன் அவர்களை பெருந்தன்மை யாக நடத்துகின்றனர்’ என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், பணத்துக்கும் மனித மனத்தின் மகிழ்ச் சிக்கும் இடையிலான உறவு குறித்து ஏற்கனவே ஓர் ஆய்வு செய்தனர். அதில், பணம் அதிகம் வைத்துள்ளவர் களைவிட சாதாரண மக்களே சந்தோ ஷமாக இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது. இப்போது அதே பல்கலையின் ஆய்வாளர்கள், இரு தரப்பினரின் குணங்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டதில் சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் அரபு நாடுகளுக்காக இந்தியா பேசும் - சிரியா நம்பிக்கை

ஐ.நா. பாதுகாப்பு கவுன் சிலில் நிரந்தரமற்ற உறுப் பினராக ஆகும் இந்தியா, அரபு விவகாரத்தை உல கிற்கு எடுத்துக் காட்ட, இந்த சர்வதேச அமைப்பை பயன்படுத்தும் என சிரியா நம்பிக்கை தெரிவித்தது. இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் 9 நாள் பயணமாக அரபு அமீரகம் மற்றும் சிரியா சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் சிரியா சென்றுள்ள பிரதிபா பாட்டீலுக்கு அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் - ஆசாத் விருந்து அளித்தார். அப்போது பஷார் பேசுகை யில், அரபு விவகாரத்தை உலகிற்கு கொண்டு செல்ல, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை இந்தியா பயன் படுத்தும் என சிரியா நம்பு கிறது. அரபு நாடுகளின் உரி மைகளை இந்தியா ஆத ரித்து வந்துள்ளது.(மேலும்.....)

கார்த்திகை 30, 2010

மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல.

மாவீர்களும்… விற்பனர்களும்…

(அலெக்ஸ் இரவி)

ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராடடம் தொடங்கிய காலத்திலிருந்து பல உயிர்கள் தியாகங்கள் செய்து வீரகாவியம் படைத்து எம்மை விட்டு துறந்தும் இன்றும் எத்தனையோ பெற்றோருக்கு தம் பிள்ளைகளின் உயிர் அகன்ற உடல்களை பார்க்கவோ… அவர்களின் நினைவு கல்லறை பார்க்கவோ கிடைக்காமல் தம் துயரை தம்மினுள்ளே அமிழ்த்தி… துயரும் வேளை புலம் பெயர்ந்த நாடுகளிலோ பரநாட்டியம் பயிலும் தம் பிள்ளைகளின் நடனத்தை மேடையேற்றி பார்ப்பதற்கும்… ஓர் மாவீரர் திருவிழா…!!(மேலும்.....)

கார்த்திகை 30, 2010

செய்தி வலைத்தளத்தினை தொடங்குகிறது டுவிட்டர் இணையத்தளம

மிகவும் பிரபலமான சமூக வளைத் தளங்களில் ஒன்று டுவிட்டர். இந்த வலைத்தளம் விரைவில் செய்தி வலைத் தலங்களை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. டுவிட்டர் இணையத்தளம் ஒரு மைக்ரோ புளொக் இணையத்தளம் ஆகும். உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண தொழிலாளர்கள் வரை தங்களது கருத்துக்களை இந்த வலையத் தளம் வாயிலாகத் தெரிவிக்கும் வகை யில் சேவையினைச் செய்து வருகிறது. இது 175 மில்லியன் உறுப்பினர்களை பதிவு செய்து வைத்துள்ளது. இந்நிலையில் செய்தி இணையத்தளம் ஒன்றை தொடங்க டுவிட்டர் முடிவு செய்துள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

விக்கிலீக்ஸ் அறிக்கை வெளியானதால் அரசியல், இராணுவ முக்கியஸ்தர்களுக்கு ஆபத்து

விக்கிலிக்ஸ் அறிக்கைகள் வெளியானதால் முக்கிய ராஜதந்திரிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்த இராணுவ இரகசியங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளதால் நேட்டோ படைகள் முன்னெடுக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் இனி வருங்காலங்களில் பாரிய சவால்களுக்குள்ளாகுமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

ஜெகன் ரெட்டி விலகினார்

காங்கிரஸ் கட்சியில் இருந் தும், எம்.பி. பதவியில் இருந்தும் விலகுவதாக 37 வயது ஜெகன் மோகன் ரெட்டி திங்களன்று அறிவித்தார். தங்களது குடும்பத் திற்கு காங்கிரஸ் பெரும் மனப் புழுக்கத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுத்த தாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக 5 பக்கம் கொண்ட ஜெகன் ரெட்டியின் வெளிப்படையான கடிதம் அவ ரது சாக்ஷி தொலைக் காட்சியில் திங்களன்று காலை படிக்கப்பட்டது. ஜெகன் ரெட்டி மறைந்த முன்னாள் ஆந் திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா எம்.பி.யும் ஆவார். தனது தாயாரும், புலிவேந் துலா சட்டசபை தொகுதி உறுப் பினருமான விஜயம்மாவும் பதவி விலகுவதாக அவர் தெரிவித்தார். (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

பலஸ்தீன மக்களுக்கான எமது ஆதரவு தொடரும் - அமைச்சர் பெளஸி

இலங்கை பல்வேறு சமூக மற்றும் மொழிகளைக் கொண்ட நாடாக இருந் தாலும் வேறுபாடுகளை மறந்து பலஸ் தீனத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை - பலஸ்தீனத்துக்கு ஒத்து ழைப்பு வழங்கும் என்றார். இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக் கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர்-அல்-அக்ஹான்; ஆறு தசாப்தங்களாக பலஸ்தீன மக்களை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி சர்வதேசம் அறியும். பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடை யிலான சமாதானப் பேச்சுக்கள் தடைப் பட்டிருப்பதுடன் இவை தொடரவேண்டு மென்றே உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. 10,000 பலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

இந்திய மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்

மெல்போர்ன்: கடந்த சில ஆண்டு களாக இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலிய நாட்டில் தொடர்ச்சியான இனவெறி தாக் குதல்களை சந்தித்து வருகின்றனர். அண் மையில் நடத்தப்பட்ட இனவெறி தாக்கு தலில் மனையியல் பயிலும் மாணவர் தாக் கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மே மாதம் முதல் சுமார் 100 இந்தி யர்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள் ளாகியுள்ள இந்தச் சூழலில் காவல்துறை யின் சார்பில் தேடுதல் மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கார்த்திகை 30, 2010

வடகொரிய ஜனாதிபதியின் கொடும்பாவி எரிப்பு, சீனத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

வடகொரிய ஜனாதிபதி ஜோன் கீம்பின் கொடும்பா வியை எரித்த தென் கொரியர்கள் சீனாவின் தூதரகம் முன்னால் வடகொரியாவுக்கு எதிராகக் கோஷமெழுப்பினர். வட கொரியாவின் அத்துமீறல் நடவடிக்கைகளை சீனா கண்டிக்காததற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வடகொரியாவுடனான உறவை சீனா உடனடியாகத் துண்டிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர். சீனாவின் வெளிநாட்டமைச்சர் தென்கொரியாவில் தங்கியுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப் பாட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. வட கொரியா வீழ்க. சர்வாதிகாரம் ஒழிக. வடகொரியாவை உடனடியாகத் தண்டிக்கவும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

கார்த்திகை 30, 2010

அனைவரும் சகல மொழிகளிலும் கருமமாற்றும் நிலை உருவாக்கப்படும்

மொழி உபயோகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு சகலரும் சகல மொழிகளிலும் செயலாற்றும் நிலையை உருவாக்கப் போவதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்றைய தினம் தமது கடமை களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சில் நேற்று நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில் அமைச்சர்கள் ஏ. எச். எம். பெளஸி, டக்ளஸ் தேவானந்தா, மைத்திரிபால சிறிசேன, டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண ஆகியோருட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கார்த்திகை 30, 2010

பெருந்தோட்ட தரிசு நிலங்களில் மலையக இளைஞர்களுக்கும் காணி

மலையகப் பெருந்தோட்டங்க ளில் தரிசாக கைவிடப்பட்டுள்ள காணிகளில் தோட்ட இளைஞர் களுக்கும் பெற்றுக்கொடுக்கப்படு மென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்ற த்தில் தெரிவித்தார். பெருந்தோட்டத் தரிசு நிலங்களில் மீள் பயிர்ச்செய்கை மேற் கொள்வதில் இளைஞர்களையும் இணைத்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுமென்றும் அவர் குறிப்பிட்டார். ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக அமைச்சர் பசில் பதில் அளித்தார். பயிர்ச் செய்கை பண்ணப்படாத காணிகளை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கார்த்திகை 30, 2010

 

பட்ஜட்டின் 2வது வாசிப்பு 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 104 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 150 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளும் கட்சி எம். பிக்கள் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐ. தே. க, ஜனநாயக தேசிய முன்னணி என்பன எதிராக வாக்களித்ததோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சபையில் வழமையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே வாக்கெடுப்பைக் கோருவார்கள். ஆனால், நேற்று ஜே. வி. பி. (ஐ. தே. கூ) உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கோரினார். அதன்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியினரும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பினரும் எதிராக வாக்களித்தனர். தமிழ்க் கூட்டமைப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ள வில்லை. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நேற்று 29ஆம் திகதி வரை ஆறு நாட்களாக நடைபெற்றது. விவாதத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிறைவுசெய்தார்.

கார்த்திகை 30, 2010

பதக்கங்களும் புகழும் உயர...

16வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் குவாங்சௌ நகரில் அழகுற, திறனுற நடந்து முடிந்தன. போட்டிகளை எவ்வித களங்கமும் இடையூறுமின்றி நடத்திய சீனா வுக்கு பாராட்டுகள். சீனா விளையாட்டுலகில் தான் ஒரு பெருவல்லரசு என்பதை 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்குப் பின் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்திய வீரர்களின் வெற்றியும் பாராட்டுக் குரியது. பதக்கப்பட்டியலில் 14 தங்கப்பதக்கங் கள் உள்ளிட்டு 64 பதக்கங்களை வென்று ஆறாவது இடத்தில் உள்ளது. வீரர்களின் அர்ப்பணிப்பும் திறமையும் போற்றுதலுக்குரியது. காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்தது. ஆசிய விளை யாட்டுகளில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்தது. இரு போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்த அணிக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள இடைவெளி மிகப்பெரியது. (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

ஆரம்பகால தமிழ் அமைப்புகள் உயிருடன் இருக்கின்றனவென்றால் விடுதலைப்புலிகளும் உயிருடன் இருந்தேதானே ஆகவேண்டும்...!

ஈழப்போராட்டம் பல உயிர்களை பலி கொடுத்திருக்கிறது அவர்கள் அனைவரும் ஒரு சந்தர்ப்பத்தில் நினைவு கூறப்படவேன்டியவர்கள் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை உயிர் நீத்த அனைத்து தமிழ் பேசும் மக்கள் அனைவரயும்  தமிழர்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் நினைவு கூறவேண்டும் அது பொதுமகனாக இருக்கட்டும் விடுதலை புலிகளிலிருந்து ஆரம்பகால் போராட்டகுழுக்கள் அல்லது மாற்று ஆயுத குழுக்கள் ,இறுதியாக தோற்றம்பெற்ற தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளில் இருந்து ஈழப்போராட்டம் காரணமாக உயிர் நீத்த அனைத்து உயிர்களும் உறவுகளும் நினைவு கூறப்படவேண்டியவர்களே . இதனை உயிர் இழப்புகளுக்கும் காரணங்கள் பல இருக்கின்றன சகோதர படுகொலை , துரோகம் , காட்டிக்கொடுப்பு , சுயலாப படுகொலைகள் , போர்களப்பலி, விபத்து இப்படி எத்தனையோ இருக்கின்றன இவை அனைத்தும்  ஆயுதபோராட்டம் என்றொன்று ஆரம்பித்ததன் பின்னே பலியெடுக்கப்பட்ட உயிர்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது . (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

ஐ. நா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள  பலஸ்தீன ஒத்துழைப்பு தினம் இன்று


(இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்)


பலஸ்தீனம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேசத்தை உலக வரைபடத்தில் இருந்து அழித்தொழித்து இற்றைக்கு சுமார் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகின்றன. இவ்வாறான சிதைவினை ஏற்படுத்திய ஏகாதிபத்திய பேரரசர்களின் தலைவர்கள் அந்தப் புனித பூமியில் இஸ்ரேல் எனும் நாட்டினை செயற்கையாக வளர்ந்தது, அந்த பூமியைத் தாயகமாகக் கொண்ட அதிகமான மக்களை அங்கிருந்து வெளியேற்றினர். பலஸ்தீன தாயக பூமியிலிருந்து வெளி யேற்றப்பட்ட தாய்மார்கள், தந்தையர்கள், குழந்தைகள் தமது மூல வாசஸ்தலங்களுக்குச் செல்வதற்கு இன்னமும் ஆவலாய் இருக்கின்றனர். பலவந்தமான முறையில் கைப்பற்றியுள்ள நிலப் பிரதேசங்களிலிருந்து இஸ்ரேலுக்கு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ள வற்புறுத்தலும் ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள வெறும் வார்த்தை களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளன. (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

யாழ்., மன்னார், கற்பிட்டி, சிலாபம் பகுதிகளில் வெள்ளம்

பல பகுதிகளிலும் கடும் மழை, 9 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக 8646 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 395 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார். மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்கள் ஊடாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப் பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார். இம்மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 101 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 21 வீடுகளும் பகுதியாக சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையப் பேச்சாளர் கூறினார். யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1283 குடும்பங்கள் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டி ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

இந்தியா, இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி - எஸ்.எம். கிருஷ்ணா

இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார். அம்பாந்தோட்டை புது வீதியில் இந்திய துணைத் தூதரக அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி சென்ற வருடத்திலிருந்து 50 சதவீதத்திற்கு கூடுதலாக அதிகரித்தது. இலங்கையின் நான்கு பாரிய முதலீட்டாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் இலங்கையின் முதலீடுகளும் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. எங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வடக்கு, தெற்கு உட்பட நாடுபூராவும் வளர்ச்சியடைந்துள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

கொரியன் குடாவில் பாரிய வெடியோசைகள், தீப்பிளம்புகள்

அமெரிக்கா, தென் கொரியா பயிற்சியை ஆரம்பித்ததால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன

வட கொரியா மீது எத்தகைய தாக்குதல் கள் தொடுக்கப்பட்டாலும் அதன் எதிரொலி மிகக் கடுமையாக இருக்குமென வட கொரியா கடுமையான தொனியில் எச்சரித்தது. கொரியன் குடாவை நோக்கி அமெரிக்க தென்கொரிய இராணுவங்கள் முன்னேறிவரும் நிலையில் ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற மிகப் பெரிய போர்க்கப்பலும் களத்தில் இறங்கியுள்ளன. இதில் விமான ஓடுபாதைகள் ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட நவீன இராணுவ, ஆயுத உபகரணங்களும் உள்ளன. வட கொரியாவை இலக்கு வைக்கும் தாக்குதல் திசையை நோக்கி ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற இந்தக் கப்பல் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் தென் கொரிய, அமெரிக்க இராணுவங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நான்கு நாள் போர்ப்பயிற்சியை நேற்று ஆரம்பித்த மைக்கான ஆதாரமாக பாரிய வெடியோசை கள் விண்ணையும், மண்ணையும் அதிர வைத்ததாகப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

வெயிலுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு

“சூரிய வெளிச்சத்துக்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளது” என இந்திய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனித உடலில், கணையப் பகுதியில் சுரக்கும் “இன்சுலின் ஹோர்மோன், இரத்தத்தில் உள்ள சீனியின் அளவை சீர் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. “இன்சுலின்” சுரக்க, “கல்சியம் மற்றும் விட்டமின் டி” அவசியம். இவற்றின் அளவு குறையும் போது இரத்தத்தில் உள்ள சீனியின் அளவு உயர்ந்து “நீரிழிவு நோய்” ஏற்படுகிறது. இந்தியாவில் நீரிழிவு நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உணவுக் கட்டுப்பாடு, மாறுபட்ட வாழ்க்கை முறைகள், உடல் பருமன் மற்றும் மரபணு, மன அழுத்தம் போன்றவையே இதற்கு காரணம். பால் சார்ந்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட தானியங்கள் மற்றும் எண்ணெய் வகைகள், கொழுப்பு நிறைந்த மீன்கள் ஆகியவற்றில் “விட்டமின் டி” நிறைந்துள்ளது.(மேலும்.....)

கார்த்திகை 29, 2010

கிருஷ்ணாவுடனான தமிழ்க் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஆகியவற்றின் சந்திப்பு ரத்து

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சந்தித்து பேச இருந்த போதிலும் இந்தச் சந்திப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள் ளன. நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமையினாலேயே இந்தச் சந்திப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டதாக குறித்த கட்சிகளுக்கு இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கை வந்திருந்த கிருஷ்ணா, யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மற்றும் அங்கு ஏற்பாடாகியிருந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அதனைத் தொடர்ந்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

கொளுத்திப் போடும் ஐ.தே.க

சிங்களவர்கள் குடியேறுவதற்கு ஏற்ப யாழ். தேசவழமைச் சட்டம் மாற்றப்பட வேண்டும் -ஐ.தே.க எம்.பி _

யாழ்ப்பாணத்தில் வழக்கிலுள்ள தேசவழமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான பிரேரணையின் மீது அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றியபோது அவர் மேலும் கூறியதாவது, கொழும்பில் சகல இன மக்களும் ஒற்று மையாக வாழ்கின்றனர். இதேபோன்று யாழ்ப் பாணத்திலும் சகல இன மக்களும் வாழ வேண்டும். இதனால் சிங்கள மக்கள் அங்கு குடியேறுவதற்கு ஏற்ப தேச வழமைச் சட்டத் தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியதற்குப் பதிலளிக்கும் முகமா கவே நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஓர் இனவாதி யல்ல எனவும் அவர் இவ்விடயத்தை ஆராய்வார் எனவும் சுஜீவ சேனசிங்க எம்.பி. கூறினார்.

 

கார்த்திகை 29, 2010

பாகிஸ்தானில் விமான விபத்து

நாசகார வேலை காரணமா....?

பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் நேற்று சரக்கு விமான மொன்று நிலையத்திலிருந்து புறப்படும் போது விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேர் மரணமடைந்தனர். அருகிலிருந்த கட்டடங்கள் பல கடுமையாகச் சேதமுற்றன. சூடானுக்குப் புறப்பட்ட இந்த சரக்கு விமானம் கராச்சி ஜின்னா விமான நிலையத்திலிருந்து எழும்போது விபத்தானது. மீட்புப் பணியாளர்கள் மரணமடைந்த நான்குபேரின் சடலங்களையும் கண்டெடுத்ததுடன் தொடர்ந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பலியானோரின் சடலங்கள் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளன. நான்கு மாதங்களுக்குள் பாகிஸ்தானில் இடம்பெற்ற மூன்றாவது விமான விபத்து இதுவாகும். இதில் 07 பேர் காயமடைந்தனர். இவர்கள் அருகிலிருந்த வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கராச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு நிமிடத்தில் இந்த சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது.

கார்த்திகை 29, 2010

அமெரிக்கா அலறல்  ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டாம் : விக்கி லீக்ஸ் நிறுவனத்திற்கு ஒபாமா கோரிக்கை

இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாட்டிற் காக அமெரிக்க நிர்வாகம் என்னவெல்லாம் செய்தது என்பது உட்பட உலகம் முழுவதும் அமெரிக்கா எத் தகைய அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளது என்பது தொடர்பான ரகசிய ஆவ ணங்களை ‘விக்கி லீக்ஸ்’ எனும் நிறுவனம் ஞாயிறன்று வெளியிடப்போவதாக அறிவித்தது. அமெரிக்க அரசின் இந்த ரகசிய ஆவணங்களை வெளியிடுவது, உலகளாவிய முறையில் அமெரிக்கா நடத்தி வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், தனது கூட்டாளிகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என் றும் ஒபாமா நிர்வாகம் கருதுகிறது. எனவே, இத்த கைய ஆவணங்களை வெளியிட வேண்டாம் என்று ஒபாமா நிர்வாகம், விக்கி லீக்ஸ் நிறுவனத்துக்கு அவசர அவசரமாக வேண்டு கோள் விடுத்துள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

பூக்களை வெட்டி எறியக்கூடும்...

(ஜான் செரியன்)

ஜனாதிபதி கோரியா தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள முற்போக்கான இடதுசாரித் தலைவர்களில் ஒருவராவார். கலகக்கார காவல்துறைப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போது கோரியா அவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டார். மேற்படி கலகக்காரர்கள் அவரைப் பதவியிலிருந்து விலகுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள். ஆனால் ஜனாதிபதி கோரியா சிறிது கூடக் கலங்காமல் உருக்கு உறுதியுடன் தலைநிமிர்ந்து நின்றார். “நீங்கள் விரும்பினால் என்னைச் சுட்டுத்தள்ளுங்கள்” என்று அவர் கலகக்காரர்களைப் பார்த்து தலைநிமிர்ந்து கம்பீரமாகக் கூறினார். காவலர்களின் தாக்குதல்களில் காயம்பட்ட ஜனாதிபதி கோரியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து தொலைபேசி மூலம் பேசிய அவர் பின்வருமாறு கூறினார் “மருத்துவமனையை விட்டு நான் அதிபராக மீண்டு வருவேன் அல்லது பிணமாகக் கொண்டு வரப்படுவேன்”. மேலும் வெனிசுலா நாட்டுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மக்கள் கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதை வரியொன்றை மேற்கோள் காட்டிப் பேசினார். “அவர்கள் பூக்களை வெட்டியெறியக்கூடும், ஆனால் மீண்டும் ஓர் புதுவசந்தம் வருவதை அவர்களால் தடுத்திட முடியாது” என்பதே மேற்படி கவிதை வரியாகும். (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

இளைஞர் பாராளுமன்றத்திற்கு 329 உறுப்பினர்கள் தெரிவு

இளைஞர் பாˇளுமன்றத்தின் முதலாவது தேர்தலில் 329 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் 27ஆம் திகதி தெரிவாகியுள்ளனர். 332 மாவட்ட செயலாளர் பிரிவுகளை கேந்திரமயப்படுத்தி 1395 பேர் போட்டியிட்ட போதே மேற்படி 329 பேரும் தெரிவு செய்யப்பட்டனர். ஹொரவத்பத்தான, எஹலியகொடை ஆகிய மாவட்ட செயலக பிரிவுகளின் பெறுபேறுகள் ரத்துச் செய்யப்பட்டதாகவும் புதுக்குடியிருப்பு பிரிவில் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் இளைஞர் விவகார மற்றும் தொழில் முயற்சிகள் அமைச்சின் செயலாளரும் பிரதான தெரிவத்தாட்சி அதிகாரியுமான சூளோ ஹேவாபதிரன கூறினார். இளைஞர் விவகார அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டி லேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன் ரத்துச் செய்யப்பட்ட இரு தேர்தல் பிரிவுகளில் மீண்டும் எதிர்வரும் 4ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். அதேவேளை ஆதிவாசிகளின் பிரதிநிதி ஒருவர் உட்பட மொத்தம் 335 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறும் என்றும் செயலாளர் மேலும் கூறினார்.

கார்த்திகை 29, 2010

 

சீனக் கப்பல்கள் ஜப்பான் படையினரால் தடுத்து வைப்பு

ஜப்பானிய கடற்படையினர் சீனாவின் இரண்டு கப்பல்களை நேற்று காலை 07 மணியளவில் தடுத்து நிறுத்தினர். இவை இரண்டும் சர்ச்சைக்குரிய கடல் எல்லைக்குள் பிரவேசிக்க முயன்ற வேளையிலே ஜப்பானிய கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது ஜப்பான் – சீனா ஆகிய இரண்டு நாடுகளும் பொதுவான கடற்பிரதேசத்தை உரிமை கோருகின்றன. சென்காகு என்று ஜப்பானும் டையாயு என்று சீனாவும் இக்கடல் பிரதேசத்தை அழைக்கின்றன. இக்கடல் சர்ச்சை நீண்டகாலமாக இவ்விரு நாடுகளிடையேயும் மோதல் போக்கை உண்டாக்குகின்றன. அண்மையில் சீனாவின் கப்பலையும் அதன் தலைவரையும் ஜப்பான் கடற்படையினர் கைதுசெய்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 29, 2010

அம்பாந்தோட்டையில் இந்திய துணைத் தூதரகம் திறப்பு

அம்பாந்தோட்டை புது வீதியில் நேற்று இந்திய துணைத் தூதரக அலுவலகம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவினால் திறந்து வைக்கப்பட்டது. இது வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப் படவிருந்தது. சீரற்றகால நிலை காரணமாக இந்த திறப்பு விழா ஒத்திவைக்கப் பட்டிருந்தது. இதற்கமைய நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஸ்ரீ எஸ். எம். கிருஷ்ணாவுடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், இந்திய இலங்கைத் தூதுவர் அசோக் கே. காந்தா, இந்திய வெளியுறவுச் செயலா ளர் நிருபமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கார்த்திகை 29, 2010

போலித் தலிபான் தலைவருடன் பேச்சு நடத்தவில்லையென என்.டி.எஸ் அறிவிப்பு

ஆப்கான் அரசாங்கம் போலியான தலிபான் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான செய்தியை அந்நாட்டு உளவுப் பிரிவான (என்.டி.எஸ்) நிராகரித்தது. அண்மையில் ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் அல்கார்ஸாயி தலிபான் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இவர் தலிபான் அமைப்பின் உண்மையான தலைவரல்ல. அந்தப் பிரதேசத்திலுள்ள முக்கியஸ்தரே இவர் என லண்டன் வாஷிங்டன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. தலிபான்களுக்குள் பல அமைப்புகள் உள்ளன. இவற்றில் பழங்குடி அமைப்புக்களின் தலைவர்களுடன் ஆப்கானின் அரசு பேச்சு நடத்தியவேளை பிரிட்டன் விமானப்படைத் தலிபான் தலைவரென ஒருவரை காபுலுக்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் செய்தது. இவருடன் பிரிட்டன் உளவாளியும் இருந்தார். பின்னர் பேச்சு வார்த்தையில் பங்கேற்றவர் உண்மையான தலிபான் அமைப்பைச் சேர்ந்த வரல்ல என பிரிட்டன். அமெரிக்கப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதை நிராகரித்த ஆப்கான் உளவுத்துறை அவ்வாறு போலியான ஒருவர் ஆரம்பித்தில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாகவும் பின்னர் உண்மை தெரியவர அவரை பேச்சு வார்த்தையிலிருந்து அப்புறப்படுத்தியதாகவும் (என்.டி.எஸ்) அறிவித்தது.

கார்த்திகை 29, 2010

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கோப் சிற்றி திறப்பு

ஒலுவில், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் புதிய கோப் சிற்றி பல்பொருள் விற்பனை நிலையம் இன்று 29ம் திகதி திங்கட்கிழமை மு. ப. 10.00 மணிக்கு வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப் படவுள்ளது. அட்டாளைச்சேனை கூட்டுறவுச் சங்கத்தினால் நிர்வகிக்கப்படவுள்ள இக் கோப்சிற்றி விற்பனை நிலையத்தை திறப்பதற்கான அனுமதியை கிழக்கு மாகாண சுகாதார, சுதேசிய வைத்திய த்துறை அமைச்சு வழங்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் யூ. எல். ஏ. அஸீஸ் தெரிவித்தார். அட்டாளைச்சேனை கூட்டுறவுச் சங்கத் தலைவர் எஸ். எல். சனூஸ் தலைமையில் நடைபெறவுள்ள கோப் சிற்றி திறப்பு விழா வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார சுதேசிய வைத்தியத் துறை அமைச்சர் எம். எஸ். சுபையிர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

கார்த்திகை 29, 2010

பாகிஸ்தானில் வான் தாக்குதல்

பாகிஸ்தானின் வடக்கு வஸிரிஸ்தான் மாகாணத்தில் காட்டி கிராமத்தில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பலியானவர்களில் 3 பேர் பயங்கரவாதிகள் என்றும் 3 பேர் துறைமுகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர். வஸிரிஸ்தான் மாகாணத்தில் நேட்டோ படைகள் மேற்கொள்ளும் வான் தாக்குதல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ் வான் தாக்குதலால் அமெரிக்க, பாகிஸ்தான் உறவுகளில் மேலும் விரிசல் ஏற்படாம் என அரசியல் அவதானிகள் கருத்த தெரிவிக்கின்றனர். கடந்தமாதம் பாகிஸ்தான் வான்பரப்பை ஏவுகணைத் தாக்குதலுக்கு அமெரிக்கா பாவித்ததை பாகிஸ்தான் கண்டனத்துடன் எதிர்பையும் தெரிவித்திருந்தது.

கார்த்திகை 29, 2010

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவர் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவர் தெரிவுசெய்யப்பட்டு ஜனாதிபதிக்கு பிரேரணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. தற்போதைய துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் உள்ளிட்ட 12 பேர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தனர். தெரிவு சபையில் இருந்து 21 பேர் தலா 3 வாக்குகள் மூலம் வாக்களித்தனர். இவர்களில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், பேராசிரியர் வசந்தி அரசரத்தினம், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹோல் ஆகிய மூவரும் தெரிவு செய்யப்பட்டு பதிவாளரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி புதிய துணைவேந்தராக தெரிவு செய்வார்.

கார்த்திகை 29, 2010

தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் சேவை வெகுவிரைவில்

தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் அமைதியான சூழ் நிலையை தொடர்ந்து தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கார்த்திகை 29, 2010

இன உறவுக்கு அத்திவாரமிடும் வட்டாரத் தேர்தல் முறை

 

(கீர்த்தி ஸ்ரீ ஏ. பி. தாவூட் )

விகிதாசார தேர்தல் முறையால் தெரிவு செய்யப்படுபவர் குறித்து ஒரு பிரதேசத்தை பிரதிநிதித்துவப் படுத்த முடிவதில்லை, மாறாக அம்மன்றத்தின் முழுப் பிரதேசத்தை யுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். இதனால் வாக்களித்த மக்கள் தங்களுடைய பிரதிநிதி யாரென்று இனங்காண முடியாமல் உள்ளது. அத்துடன் பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூறும் உரிமையையும் பிரதிநிதிகள் கொண்டிருப்ப துமில்லை. இவ்வாறான தேர்தல் முறைகளினால் தான் இனவாதக் குழுக்களும் தலை தூக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இத்தேர்தல் முறையால் இன ஒற்றுமைக்கு வேட்டு வைக்கப்படுகின்றது. வாக்காளர்கள் கட்சி ரீதியாக அன்றி இன ரீதியாக மத ரீதியாக சாதி ரீதியாக பிரிபடுவதற்கு விருப்பு வாக்கு முறை வழி கோலியுள்ளது. ஆனால் புதிய வட்டார அடிப்படையிலான தேர்தல் முறையால் மக்கள் கட்சிகளின் சின்னத்திற்கு மட்டுமே வாக்களிப்பர். இங்கு இன மத சாதி வேறுபாடுகள் பேணப்படுவதில்லை. நேரடியாகவே விரும்பும் கட்சிக்கு வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியும். (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

Top LTTE operative nabbed

(By Tissa Ravindra Perera)

A top operative of the international LTTE network who had returned to the country in the guise of an investor was nabbed last week by the State Intelligence Service (SIS) from a leading hotel in Colombo. The sleuths had been on the trail of this Tiger operative for sometime, informed sources said. It has been revealed that this Tiger operative, known as Kiran was among the Tiger leaders who had been handling the financial transactions relating to the LTTE’s illegal armament purchases via Thailand. He had been functioning as the leader of the LTTE fund-raising wing in Australia and Switzerland. He had also been engaged in human trafficking by sea. Kiran, who had been on the ‘most wanted’ list of the national intelligence services since 1999, had returned here under an assumed name purportedly to start a foreign exchange centre. He is also said to own a tea estate in Deniyaya. It has now come to light that about 50 former LTTE operatives and sympathisers who had skipped the country and found refuge in certain European countries have returned to Jaffna recently posing as investors.

கார்த்திகை 28, 2010

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வைப்பிலிட்ட தொகையினை பட்டியலிட்ட ஜனாதிபதி

யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்த தமிழ் மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்ட வங்கிகளில் வைப்புச் செய்த பணம் மற்றும் நகைகளின் விபரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடனான சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார். இராமநாதன் முகாமில் அமைக்கப்பட்டிருந்த வங்கியில் 400 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் மனிக்பாம் முகாமில் 973 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் கிளிநொச்சியில் 1.43 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை வங்கியில் 500 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

புலம்பெயர் தேசங்களில்

விடுதலைப் புலிகளின் மாவீரர்தின நிகழ்வு

இந்த நிகழ்வுகளுக்கு பல ஆயிரக்கணக்கான மேற்கத்தைய நாணயங்கள் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் போர் முடிந்து போன இலங்கையில், இந்த தமிழர்களால் மாவீரர்கள் என்று அழைக்கப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டத்துக்காக தமது உயிர்களை பலிகொடுத்த அந்த அமைப்பின் உறுப்பினர்களின் குடும்பங்கள் பல எந்தவிதமான உதவிகளும் இன்றி சிரமப்பட்டுக் கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. அதேவேளை புலம்பெயர் அமைப்புக்கள் இந்த நிகழ்வை பெரும் எடுப்பில் அனுட்டித்தாலும், அவர்களின் மத்தியில் பிளவுகள் அதிகரித்திருப்பதோடு, அவர்களால் கடந்த ஒன்றரை வருடத்தில் ஆக்கபூர்வமாக எதனையும் சாதிக்க முடியவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

அதிகாரப் பகிர்வு அரசியல் தீர்வுக்கான சூழலை ஏற்படுத்தும் - கிருஷ்ணா

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அமைந்த அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுப் பொதி ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துமென நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார். யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத்துணைத் தூதரகத்தை நேற்றுத் திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அனைத்து சமூகங் களையும் உள்ளடக்கி இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக் கப்படும் எனக் கருதுகிறோம் என்றார். (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

இனவாதத்தை தூண்டுவதே மங்களவின் நோக்கம்

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கைகோர்த்து பயணம் செல்ல வேண்டிய காலம் இது. ஆனால், மங்கள சமரவீர எம்.பி. பிரிவினைவாதத்தை தூண்டி, நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இனவாதக் கருத்துகளை சபையில் வெளியிட்டார். அவரின் கருத்துகளை ஊக்குவிக்க வேண்டாமென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை கோருகிறேன். ஏனென்றால், இத்தகைய நடவடிக்கை தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை தூரமாக்கும். இனவாதத்தை தூண்டிவிட்டு, அதனூடாக மீண்டும் யுத்தமொன்றை ஏற்படுத்துவதே மங்களவின் நோக்கமாகும். சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரையின் காபன் பிரதியாகவே மங்களவின் உரை அமைந்தது. (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

மாவீர்களும்... விற்பனர்களும்...

மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே, ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல.

(அலெக்ஸ் இரவி)

ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து பல உயிர்கள் தியாகங்கள் செய்து, வீரகாவியம் படைத்து எம்மை விட்டு துறந்தும் இன்றும் எத்தனையோ பெற்றோருக்கு தம் பிள்ளைகளின் உயிர் அகன்ற உடல்களை பார்க்கவோ... அவர்களின் நினைவு கல்லறை பார்க்கவோ கிடைக்காமல் தம் துயரை தம்மினுள்ளே அமிழ்த்தி... துயரும் வேளை, புலம் பெயர்ந்த நாடுகளிலோ பரநாட்டியம் பயிலும் தம் பிள்ளைகளின் நடனத்தை மேடையேற்றி பார்ப்பதற்கும்... ஓர் மாவீரர் திருவிழா...!!! தாயகத்தில் பாடசாலைக்கு சென்ற பிள்ளை வீடு திரும்பாமல் விடுதலை என்னும் பிள்ளை பிடித்த கூட்டத்தால் கூட்டிச்சென்று வயிற்றில் குண்டை கட்டி குற்றுயிராக்கப்பட்ட வேளை... புலம் பெயர்ந்த நாடுகளிலோ பாடசாலை செல்லும் பிள்ளைகளை தவறான வழியில் வழிநடத்தி வளரும் சமுதாயத்தை மரமண்டையக்குவதர்க்கு... ஓர் மாவீரர் திருவிழா...!! (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

உல்லாசப் பயணத் துறையில் சீனா 450 மில். அமெரிக்க டொலர் முதலீடு

சுற்றுலாக் கைத்தொழில் துறை யில் உலகின் முன்னணி நிறுவன மாகத் திகழும் சீனாவின் சங்கிரில்லா நிறுவனம் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட முன்வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்த முதலீடு தொடர்பான உடன்படிக்கை நேற்று முன்தினம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்ட தாகவும் கூறினார். இந்த முதலீட்டின் மூலம் இராணுவ தலைமையகம் அமைவுற்றிருக்கும் பிரதேசம் அடங்கலான பகுதியில் உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட்டார். இராணுவ தலைமையகம் உள் ளிட்ட முப்படை தலைமையகங்களும் பத்தர முல்லையிலுள்ள 55 ஏக்கர் விஸ் தீரணம் கொண்ட காணியில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார். (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

பாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு

விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை, இருதரப்பு பேச்சு இன்று ஆரம்பம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகப் பதவிப் பிரமாணம் செய்ததன் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் சர்தாரி ஆவார். இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீபா வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக ஆராயப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் இலங்கையுடன் மிக நீண்டகாலம் நட்புறவு பேணும் நாடு. பல்வேறு இக்கட்டான காலகட்டங்களில் இலங்கைக்கு கைகொடுத்து உதவிய நாடு. (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

அபிவிருத்தியை நோக்கிய அடுத்த கட்ட நகர்வு

தமிழ்க் கட்சிகள் அரசியல் பேதங்களை மறந்து மக்களுக்காக வேண்டி நடுநிலையான தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கும், தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் ஒருமைப்பாட்டுடன் செயல்படுவ தற்காக ஜனாதிபதியினால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் சரி யான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விதண்டாவாத அரசியலோ அல் லது எதிரும் புதிருமான அரசியலோ தமிழ் மக்களுக்கு இனியும் தேவையில்லை. பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கத்தினால் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வினைக் காணலாம் என்பது ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

இரணைமடு தண்ணீர் இன்னொரு காவிரிப் பிரச்சினையாகுமா?

(விசு கருணாநிதி)

விவாதத்தில் தமிழ்க் குரல்கள் ஓங்கி ஒலித்ததையும் காணக்கூடியதாக இருந்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஈ. சரவணபவன் உரையாற்றுகையில், ‘கிளிநொச்சி இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக்கொண்டு செல்ல முயற்சி செய்வதாகக் கூறி பல தில்லுமுல்லுகள் இடம்பெறுகின்றன. இதனை முறையாகப் பலனளிக்கும் விதத்தில் மேற்கொள்ளாவிட்டால் காவிரி நீருக்காக தமிழகமும் கர்நாடகமும் மோதிக்கொள்வதைப் போன்று யாழ்ப்பாண விவசாயிகளும் கிளிநொச்சி விவசாயிகளும் மோதிக்கொள்ளும் நிலை உருவாகும் என்றார். வரவு- செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நடைபெற்றபோது, அமைச்சர் விமல் வீரவன்ச உரையாற்றி விவாதத்திற்கு சூடேற்றினார். (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

இளைஞர் பாராளுமன்ற தேர்தல்

நாடுமுழுவதும் சுறுசுறுப்பான வாக்களிப்பு

332 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1395 பேர் போட்டியிடும் இளைஞர் பாராளுமன்ற தேர்தல்கள் நேற்று நாடு முழுவதும் 332 வாக்களிப்பு நிலையங்களில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. தென் மாகாணத்தில் 46 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், மேல் மாகாணத்தில் 40 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், மத்திய மாகாணத்தில் 36 பேரும், ஊவாவில் 20 பேரும், வடமத்தியில் 30 பேரும், வடமேல் பகுதியில் 46 பேரும், சப்ரகமுவவில் 28 பேரும், கிழக்கில் 44 பேரும், வடக்கில் 33 பேருமாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள மாதிரி பாராளு மன்றத்தில் நடைபெறும்.

கார்த்திகை 28, 2010

பேராதனை பல்கலைக்கழக

தமிழ் பேசும் கிழக்கு நண்பர்களின் ஒன்றுகூடல், பாராட்டு இன்று

1982/1983ஆம் கல்வியாண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கு அனுமதிக்கப்பட்டு கல்விகற்று 1985ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய பேராதனைப் பல்கலைக்கழக கிழக்கு நண்பர்களின் ஒன்றுகூடலும், பாராட்டு வைபவமும் இன்று 27ம் திகதி திருகோண மலை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும். பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் வி. பி. பாலசிங்கம் கலந்து கொள்வார். உயர் பதவி வகிப்பவர்களான கிழக்கு மாகாண சுகதார, சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் யூ. எல். ஏ. அஸீஸ், கிழக்கு மாகாண நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.சீ.எம். ஷரீப், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பா ளர் எம்.ரீ.ஏ. நிஸாம், அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி பீடாபதி ஏ. எல். ஏ. றஸுல், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆபிரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரி. ரவீந்திரன் ஆகியோர் இந்நிகழ்வில் பாராட்டி கெளரவிக்கப் படவுள்ளனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட தமிழ் பேசும் பட்டதாரிகள் பட்டம் பெற்று கால் நூற்றாண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு உயர் பதவிகள் வகிப்போரை பாராட்டி கெளரவிக்க வேண்டுமென்பதற்காக இவ்வாறான விழா நடைபெறு கிறது.

கார்த்திகை 28, 2010

'ஈழமா? படிப்பா?" யாழ், பல்கலைக்கழகத்தில் மாணவர்களை அச்சுறுத்தும் சுவரொட்டிகள்

மாணவர்களை அச்சுறுத்தும் விதமாக 'ஈழமா? படிப்பா?" என்று வாசகமிட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் ஒட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும் விடுதிகளிலும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அச்சுவரொட்டிகளில் படிப்பா? ஈழமா? என்ற கேள்விக்குறியில் வீடுகள் எரிந்த நிலையிலான படங்களும், அழிவுகளின் படங்களும் காணப்பட்டன. இறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என போடப்பட்டிருந்தது. இருந்தும் இது யாழ்ப்பாண மாணவர் ஒன்றியத்தினால் ஒட்டப்படவில்லையெனவும் இனந்தெரியாத யாரோ ஒட்டியுள்ளனர் என்றும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கார்த்திகை 28, 2010

கொரிய தீபகற்பத்தில் போர் மேகம்: வடகொரியா மீண்டும் எச்சரிக்கை

தென் கொரியாவிற்கெதிராக எந் நேரத்திலும் போர் தொடுக்க தாம் தயாராக இருப்பதாக வடகொரியா எச்சரித்துள்ளது. மேலும் அமெரிக்கப் படைகளுடனான தென்கொரியாவின் போர் ஒத்திகைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அது தெரிவித்துள்ளது. 75 போ‌ர் ‌விமான‌ங்க‌ள், 6000 படைவீரர்களுடன் ‌வீர‌ர்களுட‌ன் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் யு.எ‌‌ஸ்.எ‌ஸ் வொ‌‌ஷி‌ங்ட‌ன் எ‌ன்ற போ‌ர் க‌ப்ப‌ல் கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌திற்கு வருகைதந்துள்ளது. அமெ‌‌ரி‌க்காவு‌ம், தெ‌ன் கொ‌ரியாவு‌ம் இணை‌ந்து அங்கு போ‌ர் ஒ‌த்‌திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நேற்றும் வட கொரியா 'யொங்பயொங்' தீவுகளின் மீது 2 ஆவது தடவையாகவும் ஆட்லறித்தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து வட கொ‌ரியா ‌மீது போ‌ர் தொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ன் கொ‌ரியாவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தெ‌ன் கொ‌ரியா‌‌வி‌ன் 'யொங்பயொங்' ‌தீ‌வி‌ல் வட கொ‌ரியா அண்மையில் பீரங்கித்தாக்குதல்களை நடத்தியது இ‌தி‌ல் 4 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். இத‌ற்கு ப‌‌திலடியாக தெ‌ன் கொ‌‌ரியாவு‌ம், வட கொ‌ரியா ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தியது. மேலும் அவ்விடத்தில் வசித்த சுமார் 1200 பேர் அங்கிருந்து வெளியேறினர். அங்கு தொடரும் இப்பதற்ற சூழ்நிலையால் எந்நேரமும் போர் மூளும் அபாயம் நிலவுவதாக கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திகை 28, 2010

இலங்கையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு புதிய விசாமுறை அறிமுகம்

இலங்கையில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு விரும்பியபோது வந்து செல்வதற்கான விசா முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விசாக்கள் வழங்கப்படவுள்ளது. இலங்கையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்கள் இதுவரைகாலமாக சுற்றுலா விசாக்களிலேயே இலங்கைக்கு வருகின்றனர். எனவே விரும்பியபோது தடைகள் இன்றி இலங்கைக்கு வந்து செல்வதற்காக 'மல்டிபல்' விசா முறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்

கார்த்திகை 28, 2010

தொண்டே துணையாய் உமாபாய்...

(இலங்கையில் போர்க் காலத்திலும் போருக்கு பிந்தைய கால கட்டத்திலும் பல 'தொண்டர்' அமைப்பக்கள் சிறிப்பாக தமிழ் பிரதேசங்களில் இயங்கி வருகின்றன. இவற்றை மதிப்பீடு செய்ய இக்கட்டுரை உதவலாம் என்பதன் அடிப்படையில் இங்கு பிரசுரம் செய்யப்படுகின்றது.)

இன்று தொண்டு நிறுவனம் தொடங் குவது என்பது நல்ல தொழில். இன்னும் சொல்லப் போனால் நல்ல வியாபாரம். ஆனால், அரசு உத வியோ வெளிநாட்டு உதவியோ எது வுமே இல்லாமல் அந்தப் பெண் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கு கிறார். அவ்வாறு தொடங்குமாறு அவருக்கு ஆணையிட்டவர் மகா த்மா காந்தி. இது நடந்தது 1946ஆம் ஆண்டு. அதாவது சுதந்திரத்திற்கு முன். கஸ்தூர்பாய் அறக்கட்டளை யின் கர்நாடகக் கிளையை உமாபாய் குந்தாபூர் தொடங்கினார். சல்லிக் காசு கையில் கிடையாது. கிராமப் புற மக்களை குறிப்பாக பெண்களை கைதூக்கிவிட வேண்டும் என்கிற காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற புயலெனப் புறப்பட்டார். இளம் விதவைகள், கணவனால் கைவிடப் பட்டோர், குழந்தைகள், அனாதை கள், இவர்களின் புகலிடமாய் அந்த நிறுவனம் உருப்பெற்றது.(மேலும்.....)

கார்த்திகை 28, 2010

மலையக மக்களை இந்திய வம்சாவளியினரென அழைக்கக் கூடாது  - பிரதமர்

ஏனைய நாடுகளை விட இலங்கைக்கு இந்தியாவின் மீதே கூடுதலான நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த நம்பிக்கையும் நீண்ட நாள் நட்புறவும் ஒரு போதும் பாதிப்படையக் கூடாது. மலையக மக்கள் இந்திய வம்சாவளியினர் என்று அழைக்கப்படுவதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர்கள் இலங்கையர்களேயாவர் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவிடம் பிரதமர் டி. எம். ஜயரத்ன எடுத்துக் கூறியுள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

தமிழ், முஸ்லிம் மக்கள் கொழும்பில் வசிக்கும் போது சிங்களவர்கள் ஏன் வடக்கில் மீள்குடியேற முடியாது - ஜனாதிபதி

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கொழும்பில் வசிக்கும் போது சிங்களவர்கள் ஏன் வடக்கில் மீள்குடியேற முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தமிழ் கட்சிகள் அரங்கத்திடம் கேள்வி எழுப்பியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் குமரகுருபரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை சந்தித்தது. இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக குருபரன் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தற்போது இராணுவத்தினருக்கு சொந்தமானவர்களை மீள்குடியேற்றம் செய்து வருவதாக முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சுட்டி காட்டிய போது, ஜனாதிபதி மறு மொழியாக, கொழும்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் போது வடக்கில் சிங்களவர்கள் ஏன் மீள்குயேற முடியாது. இதனை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.  (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

 

K.A.Subramaniam's 21th Anniversary Memorial Lecture will be held at 5pm

on Sunday 28 November 2010

Venue: 571/15 Galle Road Colombo 06, Sri Lanka

குறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது

(மேலும்.....)

கார்த்திகை 27, 2010

அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்
(ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

(கார்த்திகை 20/21 ரொறன்ரோவில் நடைபெற்ற பன்முகவெளி 2 இல் ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் இனால் வாசிகப்பட்ட கட்டுரை இது.)

தன்னுடைய கருத்தக்களை ஒரு முழுமையான வசனமாகவேனும் ஒப்புவிக்கத் முடியாத ஒரு மனிதனின் துப்பாக்கி முனையில் எமது பேச்சுரிமையை இழந்து வாய்மூடி மௌனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

 

இந்திய அரசின் 50,000 வீடுகள்

நிர்மாணப் பணிகள் இன்னும் 20 நாட்களில் ஆரம்பம்

இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்படும் 50 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் இன்னும் 20 நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன நேற்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கின் உறுதிமொழிக்கு அமைவாக இந்த வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணி ஆரம்பிக்கப்படுவதாகவும் முதற் கட்டமாக ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுமென்றும் பொறுப்புடன் அறிவிப்பதாகவும் குணவர்தன எம்.பி. தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் எம்.பி. உரையாற்றுகையில், வடக்கு, கிழக்கில் மீளக்குடியமர்ந்தவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். இதற்குப் பதில் அளித்து உடன் கருத்துத் தெரிவித்த சஜின் வாஸ் குணவர்தன, “நாமல் ராஜபக்ஷ எம்.பியும் அருகில் இருக்கிறார். நான் பொறுப்புடன் கூறுகிறேன். இன்னும் 20 நாட்களில் வீடமைப்பு நிர்மாணப் பணி ஆரம்பமாகும்” என்றார்.

கார்த்திகை 27, 2010

அபிவிருத்தியையும் ஐக்கியத்தையுமே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்

இரண்டாவது பதவியேற்புக்கு பின்னர் ‘இந்து’வுக்கு ஜனாதிபதி பேட்டி

(நேற்றைய தொடர்)

நான் அபிவிருத்திப் பணியில் கவனத்தைச் செலுத்துகின்றேன் என்பது எனது மக்களுக்கு விடுக்கும் செய்தியாகும். அறிவு, சக்தி, வர்த்தகம், கடல் வழிப்போக்கு வரத்து, விமானப் போக்குவரத்துப் போன்றவற்றில் அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்க விரும் புகின்றேன். இதனை வெற்றி கொள்ள எமது மக்கள் ஒன்று பட்டிருப்பது அவசியமாகும். மக்களுக்காக அரசாங்கத்தின் ஆதரவளிக்க வேண்டும். சர்வதேச சமூகத்துக்கு நான் விடுக்கும் செய்தி எமது நிலைப்பாட்டை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதாகும். நாங்கள் பயங்கரவாதிகளைத் தோற்கடித்திருக்கிறோம். சுதந்திரப் போராளிகளை அல்ல. முழு உலகுமே இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. ஆதலால் நாங்கள் எதனை வென்றெடுத்துள் ளோம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு நாட்டை வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய உதவ வேண்டும். சமூகங்களுக்கிடையே இடை வெளியை அதிகரிப்பதற்கு அல்லாமல் அவர்களை நெருக்கமாக்குவதற்கு அவர்கள் உதவ வேண்டும். கடந்து சென்றது கடந்து சென்றவை தான். காயங்களைக் கிளற வேண்டாம். எதிர்மறையாக அல்லாமல் நாம் சாதகமாகச் சிந்திப்பது அவசியம். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

குழந்தைகளும் கனவு காண்கின்றனர்

‘புதிதாக பிறந்த குழந்தைகளும் கனவு காணும்’ என பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித மூளையில் ஞாபக சக்திக்கென தனிப் பிரிவு உள்ளது. நியூரோன்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள இப்பகுதியின் உதவியில்தான், நடந்தவற்றையும், எதிர்காலம் பற்றியும் காட்சி வடிவங்களில் நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஞாபக சக்திக்கு மூளைகளில் உள்ள நியூரோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

ஐரோப்பிய யூனியன்  வேலையின்மையால் மக்கள் பரிதவிப்பு

வேலையின்மையின் அளவு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அதிகரித்து வருவதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்ற பட்டியலில் இருக்கும் ஐரோப்பிய இளைஞர்களில் பாதிப்பேருக்கு மேல் குறைந்தது ஓராண்டுக்கு வேலையில்லாமல் இருக்கிறார்கள். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 30 விழுக்காடாகவே இருந்தது. ஒட்டுமொத்தத்தில் ஐரோப்பிய யூனியனின் வேலையின்மை விகிதம் 9.6 விழுக்காடாகும். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

வடக்கு ரயில் பாதை நிர்மாணம்

416 மில். டொலர் கடன் வழங்க இந்தியா இணக்கம்

வடக்கு ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு 416 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை பெற்றுக் கொடுக்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தமொன்று ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று (26) கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பின் பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கிற்கான புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் மூன்று கட்டங் களாக இடம்பெறவுள்ளன. மடு முதல் தலைமன்னார் வரையும் மதவாச்சியிலிருந்து மடு வரையும் மற்றும் ஓமந்தையில் இருந்து பலாலி வரையும் பூர்த்தி செய்யப்படவுள்ளன. (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

வட கொரிய - தென் கொரிய விவகாரம்

சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தி பதற்றத்தை தவிர்க்க வேண்டும் - ஒபாமா

வட கொரியா விவகாரத்தில், சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அங்கு நிலவும் பதற்றத்தை குறைக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். வட கொரியா- தென்கொரியா நாடுகளின் எல்லையையொட்டிய கடல் பகுதியில், தென்கொரியாவுக்கு சொந்தமான பியாயோங் தீவு உள்ளது. இங்கு தென்கொரியாவின் ராணுவ தளம் உள்ளது. இத்தீவின் மீது, வட கொரியா அண்மையில் குண்டுகளை வீசி, திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, வடகொரியா மீது தென்கொரியா தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமது கட்சி தமிழ் அரங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சி.கா செந்திவேல் ரிபிசியில் தெரிவித்துள்ளார்.

பொதுவான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் அரங்கம் முன் வைக்குமானால் அதில் மக்களின் எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கியிருக்குமானல் கட்சியில் கோட்பாடுகளுக்கு அப்பால் சென்று ஆதரிக்கத் தயார் என புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின் பொதுச் செயலாளார் சி.கா செந்திவேல் தெரிவித்தார். இன்றைய நிலையில் அரசுடன் சேர்ந்து இருக்கின்றவர்கள் அல்லது அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு ஜனநாயகம் பேசுகின்றவர்கள் தங்களின் சொந்த நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் சுயநலன்களுக்காகவும் எனவும் தெரிவித்த அவர், புலிகளின் ஆதரவாளர்கள் அரசாங்கத்தை ஆதரிப்பது தம்மிடம் இருக்கும் சொத்துக்களை பாதுகாத்து கொள்ளவே எனவும் குறிப்பிட்டார். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

எய்ட்ஸ் நோயை தடுக்க மாத்திரை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் எய்ட்ஸ் நோயை தடுக்க புதிய மாத்திரையை அமெரிக்க டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர், “துருவதா” எனப்படும் அந்த மாத்திரையை இரண்டு ஆண்டுகளுக்கு தினமும் சாப்பிட் டால் “எய்ட்ஸ்” கிருமிகள் அணுகாது என கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வுக்காக பிரேசில், பெரு, தென்னாபிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, ஈக்குவடார் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த 2500 ஆண்களிடம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது, எய்ட்ஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் வரை குறைந்திருப்பது தெரிய வந்தது. இந்த மாத்திரையை சாப்பிட்டாலும் பாதுகாப்பான உடலுறவை தொடருவது சிறந்தது என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். ஒரு ஆண்டுக்கு “துருவதா” மாத்திரையை சாப்பிட எவ்வளவு செலவு தெரியுமா? ரூ. 18 லட்சம்.

கார்த்திகை 27, 2010

ஆரோக்கியமான சமுதாயத்தை அமைப்போம்

இலங்கையில் ஒவ்வொரு ஆயிரம் பிள்ளைகளில் 12 பேரே மரணிக்கிறார்கள். பிரசவத்தின்போது, ஒவ்வொரு லட் சம் தாய்மாரில் 45 பேர் மாத்திரமே மரணிக்கிறார்கள். இலங் கையில் ஆண்களின் ஆயுட்காலம் 77 வருடங்களாகவும், பெண் களின் ஆயுட்காலம் 68 வருடங்களாகவும் அதிகரித்து இரு க்கிறது. பெரும்பான்மையான வளர்முக நாடுகளுடன் ஒப்பி ட்டுப் பார்க்கும் இடத்து, எமது நாட்டின் சுகாதார துறையின் வளர்ச்சியை இது பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. எங்கள் நாட்டிலிருந்து இளம்பிள்ளை வாதம், அம்மைநோய் முற்றாக தடுக்கப்பட்டிருக்கிறது. உலகளாவிய ரீதியில் சிறுவர் களுக்கு நோய்த் தடுப்பு ஊசி போடுவதிலும் நாம் இன்று முன்னணியில் திகழ்ந்து வருகிறோம். 75 ஆண்டுகளுக்கு கூடுதலான காலப் பகுதியில் இந்நாட்டு மக்களுக்கு இலவச வைத்திய சிகிச்சையை வழங்கும் ஒரு நாடு என்ற சிறப்பை யும் நாம் பெற்றுள்ளோம். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

கிராமங்களை குறிவைக்கும்  பன்னாட்டு நிறுவனங்கள்

உலகமயத்தின் மூலம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவியுள்ள ஏகாதிபத்தியம் ஏற்கெனவே பல துறைகளில் தனியாட்சி நடத்தி வருகிறது. தற்போது இந்திய கிராமங்களில் தனது கழுகு கண் பார்வையை திருப்பியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களும், பெரிய கார்ப்ப ரேட் நிறுவனங்களும் தங்களின் உற்பத்திப் பொருட்களை நுகரும் சந்தையாக இந்திய கிராமங்களை தயார்ப்படுத்தும் வேலையை செய்து வந்தன. இதில் ஓரளவு வெற்றியும் பெற்றி ருக்கின்றன. அதன் எதிரொலிதான் தற்போது இந் திய கிராமங்களில் காலை உணவுக்கு பதிலாக 33 விழுக்காட்டினர் பிஸ்கெட்டுகளை சாப்பிடு கின்றனர் என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள் ளது. (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, மக்களின் வாழ்வாதாரம்

ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க தமிழ்த் தலைவர்கள் முடிவு

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அப்பகுதி மக்களின் நலன், வாழ்வாதாரம் தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடனும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற வெற்றியுடனும் எதிர் காலத்தில் மிகப் பெரிய சேவையை செய்வதற்கு ஜனாதிபதிக்கு இன்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்பதையும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியது. (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

மதவாச்சி - தலைமன்னார் ரயில்பாதை நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பம்

மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதை நிர்மாணப் பணியின் ஆரம்ப வைபவம் இன்று மதவாச்சியில் இடம்பெறவுள்ளது. இந்திய அரசின் 120 மில். அமெரிக்க டொலர் செலவில் இப்பாதை நிர்மாணிக்கப் படவுள்ளது.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில் வாணிப அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெறும் இன்றைய நிகழ்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மற்றும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் இன்று திறப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கிறார். இன்று காலை யாழ்ப்பாணம் செல்லும் அவர், விவசாயிகளுக்கு 500 டிராக்டர் வண்டிகளைக் கையளிப்பதுடன், யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் துணைத் தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற் கட்டமான 1,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அரியாலையில் அங்குரார்ப்பணம் செய்யவுள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

தென் கொரியாக்கு எச்சரிக்கை

அமெரிக்க படைகளுடன் சேர்ந்து ராணுவத்தை குவிக்கும் நடவடிக்கையில் இறங்கினால் தென் கொரியா மீது அடுத்தடுத்து தொடர் தாக்குதல்கள் நடத்த தயங்க மாட்டோம் என வட கொரியா நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதனால், கொரியா தீபகற்ப பகுதியில் போர் மேகம் சூழ்ந்து பதற்றம் அதிகரித்து இருக்கிறது. எனினும் வழக்கமான கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ளவே அமெரிக்க கப்பல் தென்கொரியா செல்வதாக கூறப்படுகிறது. கொரிய கடற் பகுதியில் இரு நாட்டுப் படைகளும் அடுத்தவாரம் கூட்டு கடற்படை போர் பயிற்சி மேற்கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வட கொரியாவுக்கு சீனாவின் ஆதரவு இருந்து வருகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து சீனாவுடன் பேச தென் கொரியா முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஏனெனில், தென்கொரியாவுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொள்ள இருந்த சீன வெளியுவு அமைச்சர் யாங் ஜியாச்சி, தனது பயணத்தை ஒத்திவைத்துவிட்டார். வட கொரியாவை சீனா பகிரங்கமாக கண்டித்தால் மட்டுமே இந்த போர் பதற்றம் தணியும் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

கார்த்திகை 26, 2010

யாழ் பல்கலைக்கழகத்தில்

புலிகளால் கொண்டாடப்படும் மாவீரர் தின நிகழ்வை கொண்டாடுவதற்கு கோரும் துண்டுப்பிரசுரங்கள்

இன்று காலை இனந்தெரியாத சில புலி நபர்கள் பல்கலைக்கழக வளாத்தில் இத்துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் ஒரு சில நிமிடங்களில் காணால் போய் விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புலிகளின் தலைவர் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுடரை ஏற்றும் வகையிலான புகைப்படத்துடனேயே மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்து இத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிகப்பட்டுள்ளன. இதனிடையே பல்கலைக்கழகத்தின் சில பகுதிகளில் இந்தத் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் பல்கலைக்கழக நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தவோ அல்லது இது குறித்த தகவல்களை தெரிவிக்கவோ மறுத்து விட்டது. புலி செயற்பாடுகள் இருக்கும்வரை இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் அவசரகால தடைசட்டம் நடைமுறையில் இருக்கும். மக்களே சிந்தியுங்கள் புலி பயங்கரவாதத்தை இல்லாத செய்தால் இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியும்

கார்த்திகை 26, 2010

இலங்கையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா

இந்தியா-இலங்கை இரு நாட்டு நல்லுறவுகளைப் பேணும் விதமாக 4 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கை வந்தடைந்தார். விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்த பிறகு வருகை தரும் தலைவர் என்கிற வகையில் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகள் குறித்து வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் வரவு இலங்கை யின் நிதி நலனுக்கு உதவும் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெய்ரீஸ் கருத்து தெரிவித்தார்.  இலங்கை அதிபருடனான பேச்சு வார்த்தை மற்றும் இரு நாடுகளுக்கி டையேயான இருதரப்பு உறுதிமொழி களைக் காப்பது போன்ற விஷயங்கள் தவிர்த்து, இலங்கையில் இரண்டு தூத ரகங்களை எஸ்.எம். கிருஷ்ணா திறந்து வைக்கிறார். உள்நாட்டில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான 50,000 வீடுகளைக் கட்டித்தரும் திட்டத்திலும் பங்கேற்கிறார்.

கார்த்திகை 26, 2010

அபிவிருத்தியையும் ஐக்கியத்தையுமே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்

இரண்டாவது பதவியேற்புக்கு பின்னர் ‘இந்து’வுக்கு ஜனாதிபதி பேட்டி

(நேற்றைய தொடர்)

பல்வேறு தலைவர்களின் இரண்டாவது பதவிக் காலத்தை நான் பார்த்துள்ளேன். இலங்கையில் மட்டுமல்ல, ஏனைய நாடுகளிலும் இதனைப் பார்த்திருக்கிறேன். ஏனெனில் முதலாவது வருடத்தில் (இரண்டாவது பதவிக் காலத்தில்) உங்களால் வேலை செய்ய முடியும். நீங்கள் வாக்குறுதிகளை அளிப்பீர்கள். முதல் வருடத்தில் பணியாற்ற முடியும். இரண்டாவது வருடம் வரும் போது கட்சிக்குள் அடுத்த தலைவர் யாரென அறிவதற்கு மோதல் ஆரம்பிக்கும். அரச ஊழியர்கள், அடுத்த தலைவர் யாரென பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பணியாற்ற மாட்டார்கள். ஜனாதிபதி செயற்பட முடியாதவராக இருப்பார். சந்திரிகாவின் கடைசிப் பதவிக் காலத்தில் என்ன நடந்ததென்பதைப் பாருங்கள். ஜே. ஆர். ஜயவர்தனவிற்கு என்ன நடந்ததென்பதைப் பாருங்கள். ஏனையோருக்கு என்ன நடந்தது. நான் அதனைப் பார்த்துள்ளேன். (மேலும்.....)

கார்த்திகை 26, 2010

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு லண்டனில் வசிக்கும் தமிழர் உபவேந்தராக நியமனம்?

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சிங்களவர் ஒருவரை உபவேந்தராக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்த நிலையில் அதனை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகத்தின் அக்கறையுள்ள மாணவர்கள் மற்றும் பிரதியமைச்சர் முரளிதரன், தமிழ் தேசிய கூடடமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் ஆகியோர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பில் எமக்கு லண்டனில் இருந்து கருத்து தெரிவித்த கலாநிதி எஸ்.திருச்செல்வம், தம்மை மீள பல்கலைக்கழகத்தில் வந்து இணைந்துகொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். (மேலும்.....)

கார்த்திகை 26, 2010

அவர்களே அவர்களைப்பற்றி கூறுகின்றார்கள்

ஐயா ஜெயானந்த மூர்த்தி அவர்களே! ஓய்வூதியம் அல்ல ஒற்றுமை ஐயா ஒற்றுமை வேண்டும்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரே ! உங்களுக்கு மீண்டும் ஒரு மடல். பல மடல் எழுதியும் நீங்கள் பதில் தருவதில்லை என்பது எனது வருத்தம். ஆனாலும் தமிழீழ தேர்தலில் உங்களுக்கு வாக்களித்தவன் என்ற முறையில் ஒரு திறந்த மடல். உங்கள் ஓய்வூதியம் மாவீரர் குடும்பத்துக்கு அளிப்பது பற்றி அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி !. உங்கள் பணம் அல்ல மனம் இங்கே முக்கியமாக தெரிகிறது ! ஆனால் இது வெறுமனே இலங்கையில் செய்யும் அரசியலாக மாற கூடாது . உங்கள் ஓய்வூதியம் இங்கிலாந்தில் ஒருவருட அடிப்படை சம்பளத்தின் சிறு பகுதியாகத்தான் இருக்க முடியும் என்பது எனது கணிப்பீடு. இங்கேதான் நான் கூறுகிறேன் , இது அரசியல் பேச்சாக இருக்க வேண்டாம்.  நீங்கள் உண்மையில் எங்கள் மக்களுக்கு பல விதங்களில் உதவலாம். தமிழீழ அரசை நிர்மாணிக்கும் போது என்னை போன்ற சாதாரண மக்கள் எவ்வளவு மகிழ்வடைந்தோம் ! (மேலும்.....)

கார்த்திகை 26, 2010

யெமனில் ஷியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்

யெமனில் ஷியா முஸ்லிம்களை இலக்குவைத்து கடந்த புதன்கிழமை தற்கொலை கார்க் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 23 ஷியா முஸ்லிம்கள் உயிரிழந்தனர். எமெனில் ஷியா சுன்னி மத மோதல்களை உண்டு பண்ணும் நோக்கில் அல் கைதா இத்தாக்குதலை நடத்தியதாக ஷியா முஸ்லிம்களின் அமைப்பு தெரிவித்தது. யெமன் அரசுக்கெதிராகப் போராடும் ஷெய்டி ஷியா அமைப்பின் ஆதரவாளர்களே இந்தத் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவை அண்மித்துள்ள எமென் சுன்னி முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. 2004ம் ஆண்டு முதல் ஷியா முஸ்லிம்களின் அமைப்பு எமென் அரசுக்கெதிராகப் போரிடுகின்றது. சென்ற பெப்ரவரியில் ஷியா அமைப்புக்கும், எமென் அரசுக்கும் தற்காலிக யுத்த நிறுத்தம் கைச்சாத்தானது. இந்நிலையில் ஷியா முஸ்லிம்களை நோக்கி அல்கைதா தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல், அமெரிக்காவின் உளவுத் துறையும் இத்தாக்குதலின் பின்னணியிலுள்ளதாக ஷியா அமைப்பு குற்றம் சாட்டியது. உயிரிழந்த 11 பேரை ஷியா அமைப்பு பொறுப்பேற்று அடக்கம் செய்தது. ஏனைய 12 பேரையும் ஹித் இனத்தவர்கள் அடக்கம் செய்தனர்.

கார்த்திகை 26, 2010

மோதல் காரணமாக

 

பெற்றோரை இழந்த 1746 பிள்ளைகளுக்கு விசேட திட்டம்

மோதல் காரணமாக பெற்றோரை இழந்த பிள்ளைகள் 1746 பேர் உள்ளனர். இவர்களுக்கு கல்வி, சுயதொழில், தொழிற் பயிற்சி என்பன வழங்க விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தது. வாய்மூல விடைக்காக அநுர திசாநாயக்க எம்.பி. எழுப்பியிருந்த கேள்விக்கான பதிலை மீள்குடியேற்ற அமைச்சர் சார்பாக ஆளும் கட்சி பிரதம கொரடா, அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபையில் சமர்ப்பித்தார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; பெற்றோரை இழந்த பிள்ளைகளில் பாடசாலை மாணவர்கள் 1608 பேர் உள்ளனர். அதில் 1551 பேர் பாடசாலை செல்கின்றனர். இவர்களுக்காக அவுஸ்திரேலிய உதவி வழங்கும் அமைப்புகள் நிதி உதவி வழங்குகின்றன. பாடசாலை மாணவர்களுக்காக சீருடை, சப்பாத்து, தைத்த உடை என்பன வழங்கப்படுகின்றன. மாலைவேளையில் விசேட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தொழிற்பயிற்சி வழங்க 17 நிலையங்கள் அமைக்கப்பட்டு ள்ளதோடு சுயதொழில் மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்த விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை 26, 2010

பீகார் மாநிலத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மறக்கமுடியாத அடி

பீகார் மாநிலத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம் என்று மார் தட்டிய காங்கிரஸ் கட்சிக்கு இத்தேர்தல் முடிவு மறக்க முடியாத அடிதான். பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியாவும் அவரது புதல்வர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் அல்லாத கட்சிகள் பீகார் மாநிலத்தை சீரழித்து விட்டதாக சாடினார்கள். இந்தியாவிலேயே பீகார் மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்க அக்கட்சிகளே காரணம் என்றும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பீகாரை வளமான பாதைக்கு கொண்டுசெல்லமுடியும் என்றும் வறுத்தெடுத்தனர். (மேலும்.....)

கார்த்திகை 26, 2010

போதைக்கும்பல் கடத்தல்காரர்களுக்கு எதிராக

பொலிவியாவில் இராணுவம் பொலிஸார் சுற்றிவளைப்பு

பொலிவியாவில் போதைக் கும்பல் ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிஸாரும் இராணுவமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். ஹெலிகொப்டர்கள் பறந்த வண்னம் நிலைமைகளை அவதானித்தன. பீரங்கிகள், கவச வாகனங்கள் வீதியெங்கும் நிறுத்தப்பட்டன. பொலிவியாவின் இருபது நகரங்களில் பொலிஸார், இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது பெருமளவான போதைப்பொருட்களும், ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. இந்த திடீர் நடவடிக்கையின்போது இரண்டு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் சிலர் கைது செய்யப்பட்டனர். போதைக் கும்பலையும் குற்றம் செய்வோரையும் தோற்கடிப்பதென்ற தீர்மானத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இராணுவம் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக பொலிவிய ஜனாதிபதி லூலாடி சில்வா தெரிவித்தார்.

கார்த்திகை 26, 2010

ஜனநாயக காவலன் என கூறும் நாடுகள் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றன

அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதில் சிறுபான்மை மக்களும் பூரண பங்களிப்பு வழங்கவேண்டுமென தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரி வித்தார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதென நாம் ஓய்ந்துவிட முடியாது. சர்வதேச நாடுகளில் அதன் செயற்பாடுகள் துடிப்புடன் இடம்பெறுகின்றன. ஜனநாயகத்தின் காவலர்கள் என்று கூறப்படும் நாடுகளே அதற்கு ஒத்துழைப்பை வழங்குகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார். புலிகளின் முக்கியஸ்தரான ருத்ரகுமாரைப் பிரதமராகக் கொண்ட நாடுகடந்த அரசாங்கம் அண்மையில் அமைக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. அதேபோன்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த தமிழ்ச் செல்வனுக்கு பிரான்ஸில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் அந்நாட்டின் பிராந்திய ஆளுநர் ஒருவரே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுள்ளார். அரசாங்கம் எத்தகைய தீர்மானங்களை எடுத்த போதும் அதனை சில மணித்தியாலங்களுக்குள் மாற்றவேண்டிய நிர்ப்பந்தத்தை எங்கோ பதுங்கு குழிக்குள் இருந்த ஒரு தனி மனிதன் ஏற்படுத்திய யுகம் ஒன்றை மறந்துவிட முடியாது. இன்றும் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்ட போதும் புலிகள் அரசாங்கம் அமைத்து தம்மை நிலை நிறுத்திக்கொள்ள முயலும் நடவடிக்கைகள் சர்வதேச மட்டத்தில் இடம்பெறுகின்றன. அதனை சில சர்வதேச நாடுகள் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ள நிலையையும் காணமுடிகிறது.

கார்த்திகை 26, 2010

காதலுக்கு வில்லனாக மாறிய தகப்பனுக்கு கனடாவில் ஐந்து வருட கடூழிய சிறை

மகளின் காதலுக்கு வில்லனாக மாறிய தகப்பனுக்கு கனேடிய நீதிமன்றம் ஒன்று ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து உள்ளது. இளைய மகள், இளைய மகளின் காதலன், மூத்த மகளின் கணவன் ஆகியோரை 2007 ஆம் ஆண்டு வாகனத்தால் மோதி கௌரவக் கொலை செய்ய முயன்றார் என்று குற்றஞ்சாட்டி ஒன்ராரியோவில் உள்ள உயர்நிலை நீதிமன்றம் ஒன்றில் Scarborough நகரவாசியான செல்வநாயகம் செல்லத்துரை ( வயது-47) என்பவருக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்துள்ளது. இம்மூவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினார் என்கிற குற்றச்சாட்டை செல்வநாயகம் ஒப்புக் கொண்டார். (மேலும்.....)

கார்த்திகை 26, 2010

On The Outcome of the Obama Visit

The outcome of the visit of President Obama of the United States is to further strengthen the strategic alliance with the United States. The Joint Statement issued after the visit indicates that the main agenda was to prise open the Indian market for the business and commercial interests of the United States and its efforts to draw India into a closer security and military relationship. Against the backdrop of the deep recession and high unemployment afflicting its economy, the US is desperately trying to reduce imports and increase its exports worldwide. The framework for economic cooperation contained in the joint statement reflects this agenda. (more....)



கார்த்திகை 26, 2010

ஜனாதிபதியின் துணிச்சல் மிகு பேட்டி, பாராட்டு

எனக்கு இரண்டிற்கு மேற்பட்ட தவணைகள் ஜனாதிபதி ஆசனத் தில் வீற்றிருப்பதில் ஆர்வம் இல்லை. ஆனால், எனது 2வது தவ ணையின் போது, என்னுடைய அதிகாரத்தை கடைசி நாள் வரை நெறியாக வைத்திருப்பதற்கு ஒருவர் எத்தனை தவணை களும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற மாற்ற த்தை சட்டபூர்வமாக ஏற்படுத்தினேன். எனக்குப் பின்னர் மக்கள் எவரையும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கலாம். அதனை நான் தடுக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத்தை உதாசீனம் செய்து தன்னிச் சையாக நாட்டில் ஆட்சியை மேற்கொண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் முகமாகவே, நான் அரசியல் சாச னத்தில் திருத்தம் செய்து ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத் திற்கு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையாவது வந்து, நாட்டு மக்களின் இதயத் துடிப்பு எவ்விதம் அமைந்திருக்கிறது என் பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். (மேலும்.....)

கார்த்திகை 26, 2010

மன்னார் கடற்பரப்பு எண்ணெய் அகழ்வு

வழங்குநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

மன்னார் கடற்பரப்பில் எண்ணெய்க் கிணறுகளை அகழ்வதற்குத் தேவையான பொருட்கள், சேவை வழங்குநர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார். முதற் கட்டத்தின்போது மன்னார் கடற்பரப்பில் மூன்று எண்ணெய்க் கிணறுகளை அகழ்வது தொடர்பில் கெயான் லங்கா கம்பனியுடன் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. மேற்படி கம்பனிக்கு ஆய்வு செய் வதற்கு 3,000 சதுர கிலோ மீற்றர் பரப்பரளவு வழங்கப்பட்டுள்ளது. செயான் லங்கா கம்பனி ஆய்வுபூர்வ அகழ்வு நடவடிக்கைகளை 2011 அக்டோபர் 15ஆம் திகதி பூர்த்தி செய்ய வேண்டும். இதேவேளை, இலங்கையின் தெற்கு கரைகடந்த பிரதேசத்தில் வண்டல் படுக்கையில் எண்ணெய் வளம் இருப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள மேலதிக தரவுகள் திரட்டப்படவுள்ளன. செய்மதித் தரவுகள் மூலம் இரு பிரதேசங்கள் அடையாளங் காணப் பட்டன. இதன்படி 740 சதுர கிலோ மீட்டர் பரப்பில் தரவுகள் திரட்டப் பட்டன.

கார்த்திகை 26, 2010

Given up for dead after 50 days adrift in South Pacific, 3 teens rescued by passing trawler

Three teenagers survived 50 days adrift in a tiny boat in the South Pacific by drinking rainwater and eating raw fish and a seagull before being rescued by a passing trawler, a senior crewman on the fishing vessel said. The trio — Samuel Pelesa and Filo Filo, both 15, and Edward Nasau, 14 had been given up for dead on their coral atoll in the Tokelau islands, where a memorial service was held for them after extensive searches failed to find them. The boys set off on Oct. 5 in their aluminum dinghy from their home island to one nearby. It's not known how they went missing, but the outboard motor on their boat may have broken down at sea. (more....)

கார்த்திகை 25, 2010

வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்ற விவகாரம்

ஜனாதிபதியுடனும் எஸ். எம். கிருஷ்ணாவுடனும் பேச தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தீர்மானம்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீள்குடியேறி வரும் மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடனும் இலங்கை வரும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவுடனும் சந்தித்து பேச்சு நடத்த தமிழ்க் கட்சிகளின் அரங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் காத்திரமான பங்களிப் பினைக் கருத்திற்கொண்டும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலை யிலும் மீள்குடியேற்ற நடவடிக் கைகளில் இந்திய அரசாங்கம் தற்சமயம் வழங்கி வரும் பங்களிப் பினை கருத்திற்கொண்டும் மேற்படி சந்திப்பானது அவசியமானது என இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனிடையே இம்மாத இறுதிக் குள்ளாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் மக்களது மீள் குடியேற்றம் தொடர்பிலும் தற்சம யம் மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசிய மற்றும் அன்றாட பிரச்சினைகள் தொடர் பிலும் கலந்துரையாடுவதற்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி மக்கள் சென்ற போது புலிகள் சுட்டனர் : சிவபாலன் _

யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு பொது மக்கள் செல்ல முற்பட்ட போது புலிகள் பொது மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக வைத்திய கலாநிதி சிவபாலன் தெரிவித்தார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையிலேயே சிவபாலன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பொது மக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்ல முற்பட்ட பொதுமக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். எனவேதான் பொது மக்கள் இரவு நேரத்தில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கிச் சென்றனர். ஆனால் இராணுவத்தினர் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கார்த்திகை 25, 2010

புலிகளின்சீறோ வன்பேஸ்வதை முகாம் கண்டுபிடிப்பு

26 படை வீரர்களது எலும்புக் கூடுகள் முல்லைத்தீவில் தோண்டி எடுப்பு

புலிகளால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 26 படை வீரர்களது எலும்புக் கூடுகள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார். தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் புலி உறுப்பினரொருவர் வழங்கிய தகவலையடுத்து, முல்லைத்தீவு, பரந்தன் வீதியில் 9 கி. மீ. தூரத்தில் வல்லிபுரம் என்ற இடத்தில் (காட்டுப் பகுதியில்) இந்தப் புதை குழி தோண்டப்பட்டுள்ளது. இந்தப் புதை குழியைத் தோண்டுவதற்கென 100 பேர் கொண்ட குழுவொன்று அங்கு சென்றிருந்தது. மேற்படி காட்டுப்பகுதியில் புலிகளின்சீறோ வன்பேஸ் என்ற பெயரில் வதை முகாமொன்று செயற்பட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

Expectations of Management

கார்த்திகை 25, 2010

இலங்கை பெண் அகதி தற்கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க மனு: அரசுக்கு நோட்டீஸ்!

இலங்கை பெண் அகதி தற்கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் அருகில் ராயனூரில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் பத்மாவதி என்பவர் தாக்கல் செய்த மனு:அகதிகள் முகாமுக்கு வந்த போலீசார், என்னையும் எனது மகள் பத்மாதேவியையும் வேனில் ஏற்றிச் சென்றனர். கரூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் வேனை நிறுத்தினர். என்னை வேனில் உட்கார வைத்து விட்டு, எனது மகளை மூன்று போலீசார், தொலைவில் உள்ள கட்டடத்துக்கு கூட்டிச் சென்றனர். எனது மகளின் கணவர் ஒரு கொலை வழக்கில் சிறையில் உள்ளார். அவரை பார்ப்பதற்காக மகளை அழைத்துச் செல்வதாக நினைத்தேன். பிறகு வேனில் இருந்து, சில நிமிடங்கள் கழித்து அதிர்ச்சியுடன் காணப்பட்ட, எதுவும்பேச மறுத்த என் பெண்ணிடம் வெற்று தாளில் கையெழுத்தும் பெற்றனர். (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

அபிவிருத்தியையும் ஐக்கியத்தையுமே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்

இரண்டாவது பதவியேற்புக்கு பின்னர்இந்து’வுக்கு ஜனாதிபதி பேட்டி

இலங்கை தற்போது ஒரே நாடு. அது பிளவுபட்டதாக இல்லை. ஆதலால் சகல அனுகூலங்களையும் முழு நாடும் பெற்றுக் கொள்வதைப் பார்ப்பதற்கு நாங்கள் விரும்புகின்றோம். ஒரு பிரதேசம் அல்லது ஒரு சமூகம் மட்டுமல்ல சகல மக்களுமே அனுகூலமடைவதற்காக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.  முதலாவது பதவிக்காலத்தில் இந்த நாட்டிற்கு சமாதானத்தைக் கொண்டு வந்துள்ளேன். பயங்கர வாதத்தை அழித்து சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளளேன். இப்போது நாட்டை அபிவிருத்தி செய்வதே எனது குறிக்கோளாகும். அபிவிருத்தி முக்கியமானதாகும். அபிவிருத்தியும் சமாதானமும் இல்லாவிடில் எம்மிடம் ஜனநாயகம் இருக்க முடியாது. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

மாவீரர் தினம் ஒரு பெரிய பிஸினஸ்

(பரா நவரஞ்சன்)

லண்டனில் புலிகள் 3லட்சம் பவுண்ட்ஸ் செலவழித்து மாவீரர் தினம் செய்யவுள்ளார்கள் மிகவும் ஆடம்பரமாக செய்யவுள்ளார்கள். ஆடம்பரமாக செய்து வருகிற மக்களிடம் அதை இதை வித்து காசு சம்பாதிக்க புலிகள் முயல்கிறார்கள். பூவுக்கு ஒரு விலை, கொடிக்கு ஒரு விலை, புத்தகத்திற்கு ஒரு விலை, கொத்துரொட்டி, குடிவகை என ஒரு மாபெரும் வியாபாரம் ஒன்று மாவீரர் தினமன்று நடைபெறவுள்ளது. இதனால் வரும் வருமானம் மாவீரர் குடும்பத்திற்கு பயன்படுமா என்கிற விசர்க்கேள்வியெல்லாம் கேட்ககூடாது. வந்தமா மாவீரர் தினத்தை பார்த்தோமா, அதை இதை வாங்கினமா எண்டு சத்தம் போடாமால் போயிடணும். கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

நேட்டோ கூட்டுப்படை ஒரு ராணுவ மாஃபியா பிடல் காஸ்ட்ரோ தாக்கு

கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலும், பட்டினியிலும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நேட்டோ நாடுகள் கூட்டுப்படை ஆப்கானிஸ்தானில் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்வதற்குத் திட்டமிட்டுள்ளன. நேட்டோ கூட்டுப்படை ஒரு ராணுவ மாஃபியாவாகச் செயல்படுகிறது என்று கியூப நாட்டின் புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ கடுமையாகச் சாடியுள்ளார்.செவ்வாயன்று அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார். குறிப்பாக ஆப்கனில் இருந்து நேட்டோ கூட்டுப் படைகள் வெளியேறுவதற்கு 2014ம் ஆண்டு வரை காலக்கெடு நிர்ணயித்துக் கொண்டாலும், அதற்கு பிறகும் அங்குத் தொடர விரும்புகின்றன. மேற்கு நாடுகளின் ராணுவ படைகள், ஆக்கிரமிப்பு நிறுவனங்களாகச் செயல்படுகின்றன. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

மொத்த மூலதனச் செலவில் 25 வீதம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு ஒதுக்கீடுநாட்டின் மொத்த மூலதனச் செலவினத்தில் 25% வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக சபை முதல்வர்- அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு- செலவுத் திட்ட இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பாதுகாப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, வடக்கு, கிழக்கை இராணுவ மயப்படுத்த அல்லவென்று தெரிவித்த அமைச்சர் சில்வா, வடக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து எதிர்கால பணிகளை அரசாங்கம் முன்னெடுக்குமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

ஆப்கானில் தோல்வி: அமெரிக்கா ஒப்புதல்

ஆப்கானில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமையிலான கூட்டுப் படைகள் ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தொடங்கி ஒன்பதாண்டுகளுக்குப் பிறகும் அங்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியவில்லை என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு பென்டகன் சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 9 ஆண்டு கால போரில் கடந்த 2007ம் ஆண்டு முதல் வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் 300 சதவிகிதம் அதிகரித்து விட்டன. அதுவும் கடந்த ஆண்டு முதல் 70 சதவிகிதம் அதிகரித்து விட்டது என்றும் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

வெளிநாட்டு பிரமுகர் வருகையால் கூடுதல் நன்மை

பாகிஸ்தான் ஜனாதிபதி, இந்திய அமைச்சர் ஆகியோரின் இலங்கை விஜயத்தால் நாட்டுக்கு பலகோடி பெறுமதியான நன்மைகள் கிடைக்கவுள் ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். இது தவிர இலங்கையில் முதலீடு செய்வதற்காக பெல்ஜியம் மற்றும் மலேசிய நாட்டு உயர் மட்ட வியாபாரிகள் குழுக்களும் இலங்கை வருவதாக அமைச்சர் கூறினார். வரவு - செலவுத்திட்ட இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேலும் கூறியதாவது:- இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இன்று (வியாழன்) இலங்கைக்கு வருகிறார். அவர் வெறும் கையுடனன்றி நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை எடுத்து வருகிறார். யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் செய்வார். 250 அமெரிக்க டொலர் செலவில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தையும் கிருஷ்ணா ஆரம்பித்து வைக்க உள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

தென் கொரியா - அமெரிக்க இராணுவம் கொரியன் குடாவில் கூட்டுப் பயிற்சி

தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து பாரிய இராணுவப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. நேற்று முன்தினம் வட கொரியா நடத்திய எறிகணைத் தாக்குதலையடுத்து உஷாரடைந்த தென் கொரிய ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியுடன் தொலைபேசியில் கொரியன் குடாவில் எழுந்துள்ள நிலைமைகளை ஆராய்ந்தார். நான்கு நாள் இராணுவப் பயிற்சிகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்க அமெரிக்க - தென் கொரிய ஜனாதிபதிகள் இணக்கம் தெரிவித்தனர். கொரியன் குடாவிலுள்ள செம்மஞ்சள் கடற் பிரதேசத்தில் இந்தப் போர்ப் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன. யுத்தக் கப்பல்கள் - விமானங்களும் இதில் பயன்படுத்தப்படவுள்ளதுடன் ஏவுகணைகளை இடையில் வழிமறித்து தாக்கியளிக்கும் பயிற்சிகளும் இடம்பெற வுள்ளன. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

Canada

Rasanjali 2010

The Halton Peel Buddhist Society cordially invites you to Rasanjali 2010, a cultural and musical extravaganza showcasing local talent in aid of the new building complex. The event is scheduled for 6 P.M. on Saturday, November 27 at the Don Bosco Secondary School Auditorium in Etobicoke. As you are aware, the Halton Peel Buddhist Society since its inception in 1992 has been rendering religious, educational and cultural services to the Greater Toronto Area (GTA) under the mission “WEST END BUDDHIST CENTRE IS DEDICATED TO BUILDING A COMMUNITY OF SUPPORT IN THE LARGER CANADIAN COMMUNITY THAT NOURISHES INTELLECTUAL AND SPIRITUAL GROWTH WHILE EMBRACING OUR BUDDHIST TRADITIONS”.

கார்த்திகை 25, 2010

பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்காது

வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை பெற்று தராது என்பது தெளிவாக புலப்படுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று வரவு செலவுத் திட்ட இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய சிவசக்தி, நாட்டில் தற்போது யுத்தம் முடிவடைந்தும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு கடந்த காலங்களையும் விட அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு இலகுவில் கிடைக்கப் பெறாது என்பது புலனாக எமக்கு விளங்குகின்றது. மேலும் வட, கிழக்கில் வாழும் மக்கள் பிரச்சினை தீர்வு தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் எவ்வித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இதன் மூலம் நாட்டில் இனத்துவங்களுக்கு இடையிலான நட்புறவை ஏற்படுத்த முடியாது என மேலும் தெரிவித்தார்.

கார்த்திகை 25, 2010

 

பொலிவியாவின் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாது

பொலிவியா விரும்பும் எந்த நாடுகளுடனும் உறவைப் பேண எமக்கு உரிமையுண்டு இவ்விடயத்தில் வேறு நாடுகள் தலையிட முடியாதென அந்நாட்டின் ஜனாதிபதி ஈவோ மொரல்ஸ் தெரிவித்தார். பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே ஈவோ மொரல்ஸ் இதைத் தெரிவித்தார். அம்மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் பங்கேற்றார். கேட்ஸ் இங்கு உரையாற்றும் போது ஈரானுடன் இணைந்து பொலிவியா அணு ஆயுதத்தை தயாரிக்க முயல்வதாகத் தெரிவித்ததுடன் ஈரான், பொலிவியாவிடையிலான உறவுகளை வரவேற்க முடியாதென்றும் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்துப் பேசிய பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொரல்ஸ் நாங்கள் எந்த நாடுகளுடனும் உறவுகளைத் தொடர்வோம் அல்லது துண்டிப்போம் இது எமது உரிமை. பொலிவியாவின் உள், வெளி நாட்டு விவகாரங்களில் தலையிட வேறு எந்த நாடுகளுக்கும் உரிமை கிடையாது எனத் தெரிவித்தார். ரஷ்யாவின் உதவியுடனே ஈரான் யுரேனியத்தை செறிவூட்டி அணு ஆயுதத்தைத் தயாரிப்பதாக மேற்கு நாடுகள் சந்தேகிக்கின்றன.

கார்த்திகை 25, 2010

 

மதவாச்சி - மன்னார் ரயில் பாதை நிர்மாணப் பணிகள் 27 இல் ஆரம்பம்

மதவாச்சி முதல் மன்னார் வரையிலான ரயில் பாதை நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் 27ஆம் திகதி மதவாச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளது. 7ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், குமாரவெல்கம, பிரதி அமைச்சர் ரோஹன திஸாநாயக்க உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்

கார்த்திகை 25, 2010

 

தாய்லாந்தில் செஞ்சட்டை அணியினர் மீண்டும் ஆர்ப்பாட்டம்

தாய்லாந்தில் செஞ்சட்டை அணியினர் (முன்னாள் பிரதமர் தக்ஷின் ஆதரவாளர்கள்) நேற்று முன்தினம் மீண்டும் ஆர்ப்பாட்ட த்தில் இறங்கியுள்ளனர். 2007ம் ஆண்டின் அரசியலமைப்பை மாற்றச் செய்யும் அரசாங்கத்தின் யோசனைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. பாராளுமன்றத்தைச் சுற்றி சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்கவில்லை. ஒலி பெருக்கிகளையும் பாவிக்கவில்லை மிக அமைதியான முறையில் இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது தொடர்பாக செஞ்சட்டை அணியினர் தெரிவித்ததாவது ரகளை செய்யும் எண்ணமில்லை இரவில் தங்கிநிற்கும் எண்ணமும் இல்லை. அரசியலமைப்பு மாற்றத்துக்கெதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதே எமது நோக்கமெனத் தெரிவித்தனர். நிலைமைகளையறிந்த அரசாங்கம் உடனடியாக பொலிஸாரை அங்கு அனுப்பி வைத்தது.

கார்த்திகை 25, 2010

பனிக்கட்டி மனிதர்

காஷ்மீரைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் செவாங் நார்பல் (74), இந்தாண்டுக்கான ‘ஜம்னாலால் பஜாஜ்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் மக்களால் இவர் ‘பனிக்கட்டி மனிதர்’ என செல்லமாக அழைக்கப்படுகிறார். புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பாதிப்புகள், தற்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கி விட்டன. காஷ்மீரின், லடாக் பகுதியிலும் இதன் பாதிப்புகள் தென்படுகின்றன. உயரமான பனிமலைச் சிகரங்களுக்கு இடையில் உள்ள லடாக பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. பனிமலைகள் அதிகம் இருந்தாலும் கோடை காலங்களில் அவை வேகமாக உருகி விடுவதால், இங்குள்ள மக்கள் விவசாயத்துக்கு போதிய தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

மக்கள் சேவைக்கே முதலிடம்

சாதனை வீரரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னு டைய அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் முன் உரை யாற்றும் போது அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச் சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் அனைவரும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற நல்லெண்ணத்துடன் கடுமையான பங்களிப்பை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அரசாங்க நிர்வாக சேவையின் உயர்மட்டத்திலுள்ள அமைச்சர்கள் தலைமையிலான சகல உத்தியோகத்தர்களும், தங்கள் கடுமையான உழைப்பின் மூலமே மஹிந்த சிந்தனை எண்ணக் கருவை தங்குதடையின்றி நெறியாக செயற்படுத்த முடியும் என்றும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

சிரியாவின் எல்லைகள், இணைக்கப்பட்ட அரபு பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறுமா?

கோலான்குன்றுகளுள்ள பிரதேசம், 1967ம் ஆண்டு இஸ்ரேல் இணைத்துக் கொண்ட பலஸ்தீனர்களின் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வாபஸ் பெற வேண்டுமா இல்லையா என்பதை மக்களின் விருப்பத்துக்கு விட இஸ்ரேல் எண்ணியுள்ளது. இதையொட்டி இஸ்ரேலில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவுள்ளதாகவும் இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் கூடிய இஸ்ரேல் பாராளுமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. நீண்டகாலமாக இழுபறியில் தொடரும் இப்பிரச்சினையின் முடிவை இஸ்ரேல் மக்களிடம் கையளிப்பதே இந்த சர்வஜன வாக்கெடுப்பின் நோக்கமென்றும் இஸ்ரேல் கூறியது. சிரியா, பலஸ்தீன் என்பன இஸ்ரேலின் இந்த விசித்திர எண்ணத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

மோசடி வர்த்தகத்தில்  ஒரு உள் மோசடி!

உள்நாட்டு ஊழல் கதைகள் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டிக்கொண்டிருப்பதால் சில உலகளாவிய திருவிளையாடல்கள் கண் ணுக்குத் தெரியாமல் மறைந்துகொள்கின்றன. உலகப் பங்குச்சந்தை சூதாட்ட அதிபர்களின் தலைமையகமான அமெரிக்க வால் ஸ்ட்ரீட் வட் டாரத்தில் அப்படியொரு விவகாரம் நடந்திருக் கிறது. அந்நாட்டுப் புலனாய்வுத் துறை (எப்.பி.ஐ.) அதைப்பற்றித் துருவ ஆரம்பித்திருக்கிறது. பங்குச் சந்தையின் அடிப்படையிலேயே பலரது கண்களைக் கட்டிவிட்டு பங்குகளைக் கைப்பற்றி ஆதாயங்களைக் குவிப்பது, அதிலே சரிவு ஏற்படலாம் என்கிறபோது அந்த உண் மையை மறைத்துப் பங்குகளை மற்றவர்கள் தலைகளில் கட்டுவது என்கிற மோசடி ஏற்பாடு இருக்கிறது. (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, கருணாநிதி கிருஷ்ணாவிடம் வலியுறுத்து

இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அரசியல் தீர்வொன்றுக்கு வலியுறுத்துமாறு தமிழக முதல்வர் மு.கருணாநிதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை வருகை தரவுள்ளார். "மீளக்குடியமர்த்தப்படாமல் 30 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். இது கவலைக்குரிய விடயமாகும். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டும்" என மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தினை உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்து கொடுக்கும்படி இந்திய அரசிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கார்த்திகை 24, 2010

இனப்பிரச்சினை தீர்வுக்காக குழு ஜனாதிபதி

தமது மனதில் தமிழர் பிரச்சினை தொடர்பான தீர்வு திட்டம் இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். த ஹிந்து நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனும் பொது மக்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகார பரவலாக்கம் தொடர்பில் மக்கள் மனதில் இருக்கும் விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதன்போது தமது மனதில் உள்ள தீர்வு திட்டம் பொது மக்களுக்கு போதுமானதாக இல்லை என்ற நிலை ஏற்படலாம் எனவே அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல பொதுமக்களும் தீர்வு திட்டத்தை ஏற்று கொள்ள வேண்டும். இதனை அறிந்து கொள்வதற்காகவே தாம் குழுவொன்றை அமைத்து இரண்டு தரப்பினரும் கருத்துக்களை பெற்று கொள்ள உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு சரித்திரத்தின் செழுமைமிகு பக்கங்களில் இடம்பெற வேண்டும். - தி. ஸ்ரீதரன்

உலக வரலாற்றில் ஜனநாயகமும், சமூகங்களிடையே சமுத்துவமும் நிலைநாட்டப்பட்ட நாடுகளிலேயே வெற்றிகரமான சமூக பொருளாதார சாதனைகள் நிகழ்ந்துள்ளன. எனவே இலங்கை அனைத்து இன மக்களினதும் நாடு, பல்லினங்களின் நாடு என்பது உறுதிப்படுத்தப்படுவதும் தனி மனித ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதும் நாம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான அடிப்படை நிபந்தனைகளாகும். தேசிய வாழ்வினுள் தமிழ், முஸ்லீம் மக்கள் உள்வாங்கப்படும் விதமாக அரசியல் அதிகாரப் பகிர்வு நிகழ வேண்டும். இதனை ஜனாதிபதி தனது பதவி காலத்தில் உறுதிப்படுத்தி சரித்திரத்தின் செழுமைமிகு பக்கங்களில் தனது பெயரை பொறிக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். அதனை மேற்கொள்வதற்குரிய ஆற்றலும், பலமும் அவருக்கு இருக்கிறது. (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

25.11.2010 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்

இந் நிகழ்ச்சியில். புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி பொதுசெயலாளர் தோழர் சி. கா. செந்திவேல், ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம், ரிபிசியின் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் ஜெகநாதன், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு 00 44 208 9305313,      or 078107063682

V. Ramaraj (Thamil broadcasting corporation-London)

கார்த்திகை 24, 2010

முல்லையில் இராணுவ வீரர்கள் சடலம், விசாரிக்க குழு நியமனம்

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட 26 இராணுவ வீரர்களின் சடலங்கள் தொடர்பாக பரிசீலிக்க, விசேட விசாரணைக் குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய மெதவல வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். இராணுவ வீரர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவல் குறித்துக் கேட்டபோதே இராணுவப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது புலிகளால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட இராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக ஏ.எப்.பி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்வதற்கு மருத்துவ அதிகாரிகளுடன் விசேட புலனாய்வு அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று வடக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் இன்று முதல் அந்தக் குழு விசாரணைகளை ஆரம்பிக்கும் என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கார்த்திகை 24, 2010

எங்களை மிரட்ட வேண்டாம்: அமெரிக்காவுக்கு பொலிவியா பதிலடி

ஈரானுடன் உறவு வைத்துக் கொள்வது குறித்து மிரட்டும் தொனியில் பேசிவரும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அத்தகைய மிரட்டல்களை நிறுத்திக்கொள்வது நல்லது என்று பொலிவியாவின் ஜனாதிபதி இவோ மொரேல்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஈரானுடன் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகள் கையெழுத்திடக்கூடாது என்று அமெரிக்காவின் ராணுவத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கருத்து தெரிவித்திருந்தார். பிராந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட மொரேல்ஸ் இதற்கு பதில் அளித்து கருத்து தெரிவித்திருந்தார். (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

மேஜர் சீலனின் கைங்கரியம்

காணாமல் போனோரின் பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளில் காணாமற் போனதாக கூறப்படும் நபர்கள் தன் பொறுப்பில் இருப்பதாகக் கூறி காணாமற் போனோரின் பெற்றோர் உறவினர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடிக் கும்பலொன்று இயங்குவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தின் “மேஜர் சீலன்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் சில பாடசாலை அதிபர்களையும் நம்ப வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் குறித்து மிகவும் விளிப்பாக இருக்குமாறும் இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

கணனி மென்பொருட்களுக்கு வரிகள் நீக்கம்

கணனி மென் பொருட்களுக்கான பெறுமதி சேர்க்கப் பட்ட வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி என்பன முழுமையாக நீக்கப்படவிருக்கின்றது. இதற் கான திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2011ம் ஆண் டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அறிவித்திருக்கின்றார். இந்த அறிவிப்பு இந்நாட்டில் தகவல், தொழில் நுட்பத் துறை யுடன் தொடர்பு வைத்திருக்கும் சகலருக்கும் மகிழ்ச்சியை யும், சந்தோஷத்தையும் அளித்திருக்கும். அதேநேரம், இந்த அறிவிப்பு இந்நாட்டினர் மத்தியில் பெரும் வரவேற் பையும் பெறும். இவை மறைக்க முடியாத உண்மைகளாகும். (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

THE MORNING INSPECTION

Where does ‘South’ end and ‘North’ begin, Mr. Elmore Perera?

(by Malinda Seneviratne)

Years ago, just after the 13th Amendment to the Constitution first found on-the-ground expression in the form of provincial councils, the EPRLF-led North-Eastern Provincial Council called itself ‘The Government of the North-East of Sri Lanka’.  I cannot remember Dayan Jayatilleke, at the time quite cosy in the lap of Eelamists and Eelamism, objecting to the nomenclature (then as now).  Language, ladies and gentlemen, is not innocent. The other day I was reading an interview given to the Ravaya by Elmore Perera.  The title picked up from the interview implied that somehow the Sinhalese are solely to blame for the so-called ‘ethnic’ conflict; that the onus is on the Sinhalese to reach out and that if this was not done the island would be divided. (more...)

கார்த்திகை 24, 2010

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?

(க.ராஜ்குமார்)

அதிசயம் ஆனால் உண்மை! உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உள்ளதைவிட, கருப்பு பணம் இந்திய நாட்டில்தான் அதிகம் உள்ளது. 2006-ம் ஆண்டு சுவிஸ் நாட்டு வங்கிகள் சங்கத்தின் (ளுக்ஷஹ) அறிக்கையின்படி இந்தியாதான் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள நாடுகளில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.. அந்நாட்டு வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் இருந்து 1,456 பில்லியன் டாலர் அதாவது 72,80,000 கோடி ரூபாய் சுவிஸ் நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசோ, கடந்த ஆகஸ்ட் மாதம் (2010) நாடாளுமன்றத்தில் கருப்புப் பணம் குறித்த அரசு ரீதியான மதிப்பீடு ஏதும் அரசின்; கைவசம் இல்லை என பொறுப்பற்ற முறையில் தெரிவித்துள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

வடக்கை பொருளாதார கேந்திரமாக மாற்றும் வரவு-செலவு திட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டமானது வட மாகாணத்தைப் பொருளாதார கேந்திரமாக மாற்றியமைக்கவும், இப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட பகுதியை முழுமையாக அபிவிருத்தி அடையச் செய்து வட மாகாண மக்கள் மத்தியில் வளமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் பிரதான நோக்கம் என்பதை இந்த வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகள் காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார். (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

இந்திய அமைச்சர் கிருஷ்ணா நாளை இலங்கை வருகை

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நாளை (25) வியாழக்கிழமை இல ங்கை வருகிறார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசியல் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விஜயத்தின் போது அம்பாந் தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் அவர் செல்லவுள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி வட மாகாணத்திற்கு செல்லும் எஸ். எம். கிருஷ்ணா, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வட மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ள பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

புலி

புல்லைக்கூட தின்னும்.

புலி இரண்டு மாவீரர் தினம் கொண்டாடுகிறது. ஜெர்மனி முன்சன் நகரில் புலிகள் இரணடாக இயங்கி வருகின்றனர். ஏதோ கொள்கைகளினால் முரண்பட்டு பிரிந்து இயங்கவில்லை. தேசியத்தலைவர் இனி வரமாட்டார் என்று தெரிந்தவுடன் புலிகளுக்கிடையில் சொத்துப்பிரச்சினைகள் ஏற்பட்டன. உயர்மட்ட புலிகளுக்கிடையில் புலிகளின் பணத்தை யார் யார் அபகரிப்பது என்கிற சண்டையில் ஏற்பட்ட பிளவுகள் ஏற்பட்டு பிரிந்து போயுள்ளனர். மாவீரர் தினம் கொண்டாடுவது இறந்து போன புலிகளுக்காக அல்ல. மாவீரர் தினத்தில் அதை இதை வித்து காசு பார்க்கலாம் என்பதினால் மாவீரர் தினத்தை பெரியளவில் புலிகள் கொண்டாடி வந்தனர். பூ முதல் கொத்துரொட்டி வரை ஓகோ என்றளவில் பிஸினஸ்தான்.(மேலும்.....)

கார்த்திகை 24, 2010

கிழக்கில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக செய்கைப் பண்ணப்படாமல் வேளான்மைச் செய்கை இவ்வருடம் செய்கை பண்ணப்படுகின்றது. சுமார் 30 வருடங்களுக்கு மேல் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படாமலிருந்த பகுதிகளிலும் இம்முறை பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பரவலாக பெரும்போக நெற் செய்கை செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சு மானியத்திட்டத்தின் கீழ் விதைநெல் உரம் ஆகியவற்றை மானியமாக வழங்கியுள்ளதுடன் விவசாயிகளின் நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள வங்கிக் கிளைகள் அனைத்திலும் காரணமாக கடன் உதவிகள் வழங்கிவருகின்றது. இந்நிலை காரணமாக செய்கை பண்ணப்படாமல் இருந்த காணிகளிலும் நெற்செய்கை செய்யப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 57,120 ஹெக்டயரிலும், திருகோணமலை மாவட்டத்தில் 41,050 ஹெக்டயரிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

கார்த்திகை 24, 2010

ஈரானின் யுரேனியம் சர்ச்சை, புருஸெல்ஸில் அடுத்த மாதம் பேச்சு

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் சர்ச்சைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் 05 ஆம் திகதி பெல்ஜியத் தலைநகர் புருஸெல்ஸில் நடைபெறவுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜேர்மன் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன. 2009 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இது தொடர்பான இறுதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. யுரேனியத்தை அளவுக்கதிகமாக செறிவூட்டுவதால் ஈரான் அணுஆயுதத்தை தயாரிப்பதாக சந்தேகம் கொண்ட மேற்கு நாடுகள் செறிவூட்டல் வேலைகளைச் சோதனையிட வேண்டுமென கோரிக்கை விடுத்தன. (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

தன்னலம் பாராது சேவையாற்றிய பெருந்தகை கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ்

அன்னாரின் ஞாபகார்த்த தினம் இன்று

(இராஜின்த்ர சி. இரத்னபுலி) (பட்டயப் பொறியியலாளர்)

1940 ஆம் ஆண்டு காலப் பகுதியில், அவர் கிழக்கு மாகாணக் கல்முனையில், உதவி அரச அதிபராகக் கடமை புரிந்த காலத்தில் பெரியதொரு சவாலை எதிர்கொண்டார். இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த காலம் அது. இதன் காரணமாக, இலங்கையில் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அச்சம் தலைதூக்கியது. கலாநிதி அசீஸ் அவர்களின் அயராத அர்ப்பணிப்புடனான உழைப்பின் பிரதி பலனாக இரண்டே இரண்டு வருடங்களில் அந்தப் பிரதேசம் உணவு உற்பத்தியில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. போற்றிப் புகழத்தகும் வண்ணம், அப்பிரதேசத்தை கிழக்கின் உணவுக் களஞ்சியமாகத் திகழச் செய்தவர் அரச அதிபர் அசீஸ் அவர்களே நாடு முழுவதற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய சேவை இது என அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 1980ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவின் போது, அவர் இறந்த பின்னான, இலக்கியக் கலைக் கலாநிதிப்பட்டம் வழங்கிக் கெளரவித்தது.  (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

முகமது ஹனீப் ஆஸ்திரேலியா திரும்பினார்

தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவரான முகமது ஹனீப்புக்கு நஷ்ட ஈடு வழங்குவது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக ஹனீப் ஆஸ்திரேலியாவிற்கு வருவார் என்று ஆஸ்திரேலியன் இதழ் தெரிவித்துள்ளது. முகமது ஹனீப்பின் சிம் கார்டு மூலமாக குண்டு வெடிப்பு நடந்தது. அதன்காரணமாக, 2007 ஜூலை மாதம் ஆஸ்திரேலிய காவல்துறை மருத்துவர் முகமது ஹனீப்பைக் கைது செய்தது. தீவிரவாத அமைப்புக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டியது. (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அமைச்சர் டக்ளஸும் இணைய வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பார்த்துக் கொள் ளும் என்ற நினைப்பில் ஒரு சாரார் காத்திருக் கின்றனர். கூடவே அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா அரசுடன் இணைந்து ஏதேனும் பெற்றுத் தருவார் என்ற நினைப்பில் இன்னொரு சாரார் பார்த்திருக்கின்றனர். எதுவும் நடப்பதாக இல்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் தங்களால் முடிந்த அளவில் குரல் கொடுக்கின்றனர். அறிக்கை விடு கின்றனர். அவர்களுக்கும் கட்சி ஊக்கம் கொடுப் பதாக இல்லை. ஏனையவர்கள் எம்.பி.பதவி யில் இருந்து கொண்டு பதவியுயர்வு பெறுவது எப்படி என்று திட்டம் போடுகின்றனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டங்களும் முயற்சிகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவிடம் எடுபடுவதாக இல்லை. அரசைப் பொறுத்தவரை தமது நோக்கத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்போது இடைஞ்சலாக இருக்கின்றார் என்ற நினைப்பே உள்ளது.(மேலும்.....)

கார்த்திகை 24, 2010

டென்மார்க், சீனா, கொரியா உதவியுடன் வடபகுதியில் ஆறு மீன்பிடித்துறைமுகங்கள்

வடபகுதியில் ஆறு நவீன மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளன. சர்வதேச தரங்களுக்கு ஏற்ற முறையில் இத்துறைமுகங்களின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பமாகும். டென்மார்க், சீனா, கொரியா ஆகிய நாடுகள் இத்துறைமுகங்களின் நிர்மாணப் பணிகளில் உதவ முன்வந்துள்ளன. மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனம் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் ஒன்றின் பேரில் இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும். டென்மார்க் வடபகுதியில் மூன்று துறைமுகங்களை நிர்மாணிக்கும். கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் ஒரு துறைமுகத்தை மயிலிட்டியில் அமைக்கும். யாழ். தீபகற்பத்தில் சீனா இரு துறைமுகங்களை நிர்மாணிக்கும். இத்தகவல்களை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத் தலைவர் அமல் சேனாலங்காதி காரி தெரிவித்தார்.

கார்த்திகை 24, 2010

இந்தியாவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் மும்பையில்

இந்தியாவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் மும் பையில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசாங்கம் வழங்கியது. இர ண்டு பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த விமான நிலைய கட்டுமானப் பணிகள் பத்து வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப் படவுள்ளன. 18 இலட்சம் மக்கள் வாழும் மும்பை நகரிலிருந்து ஐம்பது கி. மீற்றர் தொலைவில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக இந்தியாவின் சுற்றாடல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரி வித்தார். இது புதிய மும்பை, அல்லது நேவி மும்பை என்ற இடத் தில் கட்டப்படவுள்ளதால் பொது மக்களின் எதிர்ப்பையும் அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது. ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலங்கள் இதற்கென துப்புரவு செய்யப்படவுள்ளன. பயிர் கள் தோட்டங்கள், காய், கனிகனைச் சொரியும் மரங்கள் வெட்டி அகற்றப் படவுள்ளதால் மக்கள் கடும் கண் டனம் வெளியிட்டுள்ளனர். (மேலும்.....)

கார்த்திகை 23, 2010

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

60 அமைச்சர்கள், 31 பிரதி அமைச்சர்கள், ஹக்கீம், வாசு, லக்ஷ்மனுக்கு கபினட் அந்தஸ்து

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடந்த வைபவத்தில் 59 அமைச்சர்களும் 31 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். மற்றுமொரு அமைச்சர் பாராளுமன்றக் கட்டடத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த அமைச்சரவையில் 10 சிரேஷ்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் தி.மு. ஜயரட்னவும் இதில் அடங் குவார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பெரும்பாலானோர் அதே அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 23, 2010

கொழும்பில்

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்தக் கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி காரியாலயத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்குக் கையளிக்கத் தீர்மானித்துள்ள மகஜர் குறித்தும் அதில் உள்ளடக்கப்படக்கூடிய விடயங்கள் குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பது, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வது என்பன குறித்து இக்கூட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கார்த்திகை 23, 2010

ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை இழிவான வார்த்தைகளை பிரயோகித்து கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி என்றழைக்கப்படும் கந்தசாமி நிசாந்தனுக்கு 10வருடங்களுக்கு ஒத்திவைக்கப் பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை கல்முனை மேல்நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது. 2007.06.11ஆம் திகதி திருக்கோவில் பகுதியில் வைத்து தன்னை இனியபாரதி மிரட்டியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கூறியிருந்தார்.(மேலும்....)

கார்த்திகை 23, 2010

ராஜபக்ஷாவிற்கு எதிராக போர்கொடி தூக்கும் ஈ.பி.டி.யின் சர்வதேச ஆலோசகர் தோழர் அழகலிங்கம்.

அண்மையில் இனியொரு இணையதளத்தில் ராஜபக்ஷாவின் பட்டாபிஷேகம் என்கிற தலைப்பில் ஈ.பி.டி.யின் சர்வதேச ஆலோசகர் தோழர் அழகலிங்கத்தின் கட்டுரை ஒன்றை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை ராஜபக்ஷ அரசை புகழந்து கொண்டிருந்த தோழர் அழகலிங்கம் திடீரென்று அந்தர் பல்டியடித்து ராஜபக்ஷ அரசை வசைபாடுவதற்கு என்ன காரணம் என மண்டையைப்போட்டு உடைத்தபோது இரு காரணங்கள் முக்கியமாக தெரிய வந்தன. முதலாவது டக்ளஸ் தேவானந்தாவிற்கு ராஜபக்ஸ மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி இரணடாவது வரதராஜப்பெருமாளின் ஐரோப்பிய விஜயம் இதுபோதாதா தோழர் அழகலிங்கத்திற்கு. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

ஐந்து புதிய கோள்கள்

சூரியக் குடும்பத்திற்கு வெளியே ஐந்து புதிய கோள்களை நாசாவின் கெப்லர் விண்தொலைக்காட்டி கண்டு பிடித்திருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. புதிய கோள்களை அறிவதற்காக சென்ற ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த அவதான நிலையம் தனது விண்வெளி ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து முதல் சில வாரங்களுக்குள் இவற்றைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. நமது சூரியக் குடும்பத்தின் நெப்டியூனைவிட அளவில் பெரிதாக இருக்கும் இந்த வெளிக்கோள்களுக்கு கெப்ளர் 4ஷி, 5ஷி, 6ஷி, 7ஷி, 8ஷி எனப் பெயரிடப்பட்டுள்ளன. வொஷிங்டன் டீசியில் அமெரிக்க வானியல் கழகம் இதனை அறிவித்தது. இவை அனைத்தும் தமது விண்மீன்களை (சூரியனை) 3.2 முதல் 4.9 நாட்கள் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

கே ஏ சுப்பிரமணியத்தின் நினைவு 21 வருடங்கள்

மலர்வு: 05-03-1931                                                   உதிர்வு: 27-11-1989

இடதுசாரிக் கொள்கைகளில் சமத்துவம் கண்டு ஈடுபட விருப்பூ

நடக்கும் பாதையை வழிமறிக்கும் நில ஆதிக்க நீசர்களில் கடுப்பூ

ஊர்வலம்,போராட்டம் நடக்கையில் ஊக்கமான துடிப்பூ

ஊர்வாய்க்கு அடங்கி ஒடுங்கி கூனிக்குறுகுவோர்க்கு மறுப்பூ. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

அடங்க மறுக்கும் இஸ்ரேல்

காஸா மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல்: விமான நிலையமும் சேதம்

இஸ்ரேல் விமானங்கள் நேற்று முன்தினம் காஸா மீது கடும் தாக்குதல்களை நடத்தின. மக்கள் வாழும் பிரதேசங்கள், கட்டடத் தொகுதிகள், சுரங்கப் பாதைகள் மீதும் இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ரேல் விமானங்கள் வான் தாக்குதல் நடத்திய வேளை பீரங்கிகளும் காஸாவை நோக்கி தாக்குதல்களை நடத்தின. இதில் 06 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. காஸாவிலுள்ள யாசிர் அரபாத் விமான நிலையமும் இதன் போது தாக்கப்பட்டது. இதில் விமான நிலையம் பலத்த சேதமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள் ளது. வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் விமானங்கள் காஸா மீது தாக்குதல்களை நடத்திவருவதாகவும் ஞாயிற்றுக்கிழமைவரை மூன்று முறைகள் தாக்குதல் நடந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாசிர் அரபாத் விமான நிலையம் திட்டமிட்டு தாக்கப்படவில்லை எனத் தெரிவித்த இஸ்ரேல் இராணுவம் கடும் பனி மூட்டமாக இருந்ததால் வெளிச்சத்துக்காக தீச் சுவாலையை வீசியதாக தெரிவித்தது. காஸா நிலைமைகள் தொடர்பாக ஆராய இஸ்ரேல் அமைச்சரவை அவசரமாக கூடவுள்ளது.

கார்த்திகை 23, 2010

2011: வரவு-செலவுத் திட்ட உரை

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலும் வட விடுவிக்கப்பட்ட திகதியிலிருந்து நாம் அடைந்து கொண்ட முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாகும். அரசாங்கம் 263,000 பேரை மீள் குடியேற்றுவதற்கு இயலுமாக இருந்தது. 15,000 பேர் மாத்திரமே இன்னும் மீள் குடியேற்றப்படுவதற்குள்ளனர். பெருமளவிலான விவசாய நிலங்கள், பொது இடங்கள், குடியேற்றப் பிரதேசங்கள் என்பவற்றில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. மின்சாரம், நீர் வழங்கல் வசதிகள், பாதைகள் மற்றும் பாலங்கள் நிர்மாணம், பாடசாலைகளைப் புதுப்பித்தல், சுகாதார வசதிகள் மற்றும் பிற பொது இடங்களுக்கான எற்பாடு என்பன வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை வழமையான நிலைமைக்கு மாற்றியமைத்துள்ளது. இந்த முன்னெடுப்புகளினூடாக தாபிக்கப்பட்ட பொருளாதார தொடர்பு எமது பல்லின மற்றும் பல்வகை கலாசார சமூகத்தின் உள்ளங்களையும் எண்ணங்களையும் இணைப்பதனையும் இலக்காகக் கொண்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

மெரபி எரிமலை சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் மெரபி எரிமலையின் சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மெரபி எரிமலை கடந்த இரண்டு மாதமாக குமுறிக் கொண்டிருந்தது. கடந்த மூன்று வாரங்களாக அந்த எரிமலை தீக்குழம்பை கக்கியதோடு, சூடான சாம்பலையும் வாயுவையும் வெளியேற்றி வருகிறது. தீக்குழம்புடன் சாம்பல் வீசியெறியப்பட்டதால், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். எரிமலையைச் சுற்றியுள்ள 18 கி.மீ., பரப்பளவில் சாம்பல் படிந்துள்ளது. காற்றில் சாம்பல் பறப்பதால், மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சமீபத்தில் எரிமலை சரிவில் இருந்து சாம்பலில் புதையுண்ட ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் எரிமலை சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. மெரபி மலையை சுற்றியுள்ள பகுதியிலிருந்து நான்கு லட்சம் பேர், ஜாவாவின் யோக்யகர்த்தா நகருக்கு அருகே குடிபெயர்ந்தனர். தற்போது எரிமலையின் சீற்றம் தணிந்துள்ளதால், இரண்டு லட்சம் பேர் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கார்த்திகை 23, 2010

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, அரச ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு உயர்வு

ஓய்வூதியம் பெறாத அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு சேவை ஊழியர்களது மாதாந்த கொடுப்பனவை 5 வீதமாக உயர்த்தவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது உரையாற்றுகையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், ''ஆயிரத்து 500 பட்டதாரிகள், நிதி நிறுவகங்கள் மற்றும் அரச வங்கிகளுக்கு முகாமைத்துவ பயிற்சியாளர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஆயிரத்து 500 தாதிகள் உள்வாங்கப்படுவர். பொறியியல், விவசாயம் மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது" எனத் தெரிவித்தார்.

கார்த்திகை 23, 2010

அமைப்பு ரீதியாகத் திரண்டுள்ள தொழிலாளர் உரிமைகள் பறிப்பு!  நெருக்கடியைப் பயன்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்

2008 ஆம் ஆண்டு துவங்கிய நெருக்கடியைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் சலுகைகளைப் பறிக்கும் வேலையில் அமெரிக்க நிறுவனங்கள் இறங்கியுள்ளன. நெருக்கடியைக் காரணம் காட்டி நஷ்டத்தில் இருந்த நிறுவனங்கள் இரண்டு மட்ட ஊதியத்தை உருவாக்கின. முதல் மட்டத்தில் உள்ள ஊழியர்கள் வழக்கமான ஊதியங்களைப் பெற்று வருவார்கள். இரண்டாவது மட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் மற்றும் சலுகைகள் இருக்கும். நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஒப்பந்தப்படி குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து இரண்டாம் மட்டத்தில் உள்ளவர்கள், முதல் மட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். இதற்கு ஒப்புக்கொண்ட பல நிறுவனங்களில் நிலைமை மோசமாகத் துவங்கியுள்ளது. இரண்டாம் மட்டம் என்ற அம்சத்தை நிரந்தரமாக்கிவிட சில நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. சில நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்களின் ஊதியத்தை ஏழு ஆண்டுகளுக்கு முடக்கி வைக்கும் ஒப்பந்தங்களில்கூட தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

வேலையில்லாகால சலுகையை இழக்கும் அமெரிக்கர்கள்! லட்சக்கணக்கானோர் பாதிப்பு

அமெரிக்காவில் வழங்கப்படும் வேலையில்லா கால நிவாரணத்திற்கான திட்டத்தை புதுப்பிக்காமல்விட்டதால் லட்சக்கணக் கான அமெரிக்கர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெரும் நிறுவனங்களுக்கான முடுக்கிவிடும் திட்டத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முனைந்து நிற்கும் அமெரிக்க அரசு வேலையிழந்த, வேலைகிடைக்காதவர்களின் சலுகைகள் பற்றி அலட்சியம் காட்டியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத் தின் பிரதிநிதிகள் சபை இந்தத்திட்டத்தை புதுப்பிக்காமல் விட்டுவிட்டது. இதற்கு ஒருவர் மீது மற்றொருவர் என்று ஜனநா யகக்கட்சியும், குடியரசுக் கட்சியும் குற்றம் சாட்டிக் கொள்கின்றன. அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்குப்பிறகு பிரதிநிதிகள் சபையில் குடியரசுக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத் திட்டம்

நாட்டில் வாழும் சகல மட்டத்தினரையும் இவ் வரவு-செலவுத் திட்டம் கருத்தில் கொண்டுள்ளது. அதனால் இந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் இவ் வரவு-செலவுத் திட்டத் தின் நன்மைகளை நிச்சயம் அனுபவிப்பார்கள். முற்று முழுதாக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இவ் வரவு-செலவுத் திட்டம் நாட்டின் துரித அபிவிருத்திக்கும் அடித்தளமாக அமைந்திருக்கின்றது. அரசாங்க ஊழியர்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் ஐந்து சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. தனியார்த் துறையினருக்கென ஓய்வூதியத் திட்டமொன்றும் இவ் வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழி யப்பட்டிருக்கின்றது. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

வேறு வழியில்லாமல்

ஆப்கானிஸ்தானிலிருந்து 2014ற்குள் நேட்டோ படைகள் வாபஸ்பெற முடிவு

ஆப்கானிஸ்தானிலிருந்து 2014ம் ஆண்டுக்குள்நோட்டோ படைகளை வாபஸ் பெறுவதென தீர்மானிக்கப்பட்டு ள்ளது. போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் நடந்த நேட்டோ நாடுகளின் கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 48 நாடுகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 2014ம் ஆண்டுக்குள் நேட்டோ படைகளை ஆப்கானிஸ்தானிலிரு ந்து வாபஸ் பெறுவது என்ற தீர்மானத்துக் கமைய அடுத்த ஆண்டிலிருந்து படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்படவுள்ளன. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் அல் கார்ஸாயியும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை முழுமையாகப் பொறுப் பேற்கும் தகுதியையும் திறமையையும் ஆப்கான் இராணுவம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இடையில் வெளியேறி ஆப்கானை, தலிபான்களின் இரையாக்க நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்காவின் பாதுபாப்பை அக்கறையாக வைத்தே படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இறுதி முடிவெடுப்போம். இவ்வாறு ஜனாதிபதி பராக் ஒபாமா கூறினார்.

கார்த்திகை 23, 2010

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

60 அமைச்சர்கள், 31 பிரதி அமைச்சர்கள், ஹக்கீம், வாசு, லக்ஷ்மனுக்கு கபினட் அந்தஸ்து

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடந்த வைபவத்தில் 59 அமைச்சர்களும் 31 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். மற்றுமொரு அமைச்சர் பாராளுமன்றக் கட்டடத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த அமைச்சரவையில் 10 சிரேஷ்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் தி.மு. ஜயரட்னவும் இதில் அடங் குவார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பெரும்பாலானோர் அதே அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 23, 2010

கொழும்பில்

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்தக் கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி காரியாலயத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்குக் கையளிக்கத் தீர்மானித்துள்ள மகஜர் குறித்தும் அதில் உள்ளடக்கப்படக்கூடிய விடயங்கள் குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பது, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வது என்பன குறித்து இக்கூட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கார்த்திகை 23, 2010

ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை இழிவான வார்த்தைகளை பிரயோகித்து கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி என்றழைக்கப்படும் கந்தசாமி நிசாந்தனுக்கு 10வருடங்களுக்கு ஒத்திவைக்கப் பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை கல்முனை மேல்நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது. 2007.06.11ஆம் திகதி திருக்கோவில் பகுதியில் வைத்து தன்னை இனியபாரதி மிரட்டியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கூறியிருந்தார்.(மேலும்....)

கார்த்திகை 23, 2010

ராஜபக்ஷாவிற்கு எதிராக போர்கொடி தூக்கும் ஈ.பி.டி.யின் சர்வதேச ஆலோசகர் தோழர் அழகலிங்கம்.

அண்மையில் இனியொரு இணையதளத்தில் ராஜபக்ஷாவின் பட்டாபிஷேகம் என்கிற தலைப்பில் ஈ.பி.டி.யின் சர்வதேச ஆலோசகர் தோழர் அழகலிங்கத்தின் கட்டுரை ஒன்றை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை ராஜபக்ஷ அரசை புகழந்து கொண்டிருந்த தோழர் அழகலிங்கம் திடீரென்று அந்தர் பல்டியடித்து ராஜபக்ஷ அரசை வசைபாடுவதற்கு என்ன காரணம் என மண்டையைப்போட்டு உடைத்தபோது இரு காரணங்கள் முக்கியமாக தெரிய வந்தன. முதலாவது டக்ளஸ் தேவானந்தாவிற்கு ராஜபக்ஸ மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி இரணடாவது வரதராஜப்பெருமாளின் ஐரோப்பிய விஜயம் இதுபோதாதா தோழர் அழகலிங்கத்திற்கு. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

ஐந்து புதிய கோள்கள்

சூரியக் குடும்பத்திற்கு வெளியே ஐந்து புதிய கோள்களை நாசாவின் கெப்லர் விண்தொலைக்காட்டி கண்டு பிடித்திருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. புதிய கோள்களை அறிவதற்காக சென்ற ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த அவதான நிலையம் தனது விண்வெளி ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து முதல் சில வாரங்களுக்குள் இவற்றைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. நமது சூரியக் குடும்பத்தின் நெப்டியூனைவிட அளவில் பெரிதாக இருக்கும் இந்த வெளிக்கோள்களுக்கு கெப்ளர் 4ஷி, 5ஷி, 6ஷி, 7ஷி, 8ஷி எனப் பெயரிடப்பட்டுள்ளன. வொஷிங்டன் டீசியில் அமெரிக்க வானியல் கழகம் இதனை அறிவித்தது. இவை அனைத்தும் தமது விண்மீன்களை (சூரியனை) 3.2 முதல் 4.9 நாட்கள் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

கே ஏ சுப்பிரமணியத்தின் நினைவு 21 வருடங்கள்

மலர்வு: 05-03-1931                                                   உதிர்வு: 27-11-1989

இடதுசாரிக் கொள்கைகளில் சமத்துவம் கண்டு ஈடுபட விருப்பூ

நடக்கும் பாதையை வழிமறிக்கும் நில ஆதிக்க நீசர்களில் கடுப்பூ

ஊர்வலம்,போராட்டம் நடக்கையில் ஊக்கமான துடிப்பூ

ஊர்வாய்க்கு அடங்கி ஒடுங்கி கூனிக்குறுகுவோர்க்கு மறுப்பூ. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

அடங்க மறுக்கும் இஸ்ரேல்

காஸா மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல்: விமான நிலையமும் சேதம்

இஸ்ரேல் விமானங்கள் நேற்று முன்தினம் காஸா மீது கடும் தாக்குதல்களை நடத்தின. மக்கள் வாழும் பிரதேசங்கள், கட்டடத் தொகுதிகள், சுரங்கப் பாதைகள் மீதும் இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ரேல் விமானங்கள் வான் தாக்குதல் நடத்திய வேளை பீரங்கிகளும் காஸாவை நோக்கி தாக்குதல்களை நடத்தின. இதில் 06 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. காஸாவிலுள்ள யாசிர் அரபாத் விமான நிலையமும் இதன் போது தாக்கப்பட்டது. இதில் விமான நிலையம் பலத்த சேதமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள் ளது. வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் விமானங்கள் காஸா மீது தாக்குதல்களை நடத்திவருவதாகவும் ஞாயிற்றுக்கிழமைவரை மூன்று முறைகள் தாக்குதல் நடந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாசிர் அரபாத் விமான நிலையம் திட்டமிட்டு தாக்கப்படவில்லை எனத் தெரிவித்த இஸ்ரேல் இராணுவம் கடும் பனி மூட்டமாக இருந்ததால் வெளிச்சத்துக்காக தீச் சுவாலையை வீசியதாக தெரிவித்தது. காஸா நிலைமைகள் தொடர்பாக ஆராய இஸ்ரேல் அமைச்சரவை அவசரமாக கூடவுள்ளது.

கார்த்திகை 23, 2010

2011: வரவு-செலவுத் திட்ட உரை

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலும் வட விடுவிக்கப்பட்ட திகதியிலிருந்து நாம் அடைந்து கொண்ட முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாகும். அரசாங்கம் 263,000 பேரை மீள் குடியேற்றுவதற்கு இயலுமாக இருந்தது. 15,000 பேர் மாத்திரமே இன்னும் மீள் குடியேற்றப்படுவதற்குள்ளனர். பெருமளவிலான விவசாய நிலங்கள், பொது இடங்கள், குடியேற்றப் பிரதேசங்கள் என்பவற்றில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. மின்சாரம், நீர் வழங்கல் வசதிகள், பாதைகள் மற்றும் பாலங்கள் நிர்மாணம், பாடசாலைகளைப் புதுப்பித்தல், சுகாதார வசதிகள் மற்றும் பிற பொது இடங்களுக்கான எற்பாடு என்பன வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை வழமையான நிலைமைக்கு மாற்றியமைத்துள்ளது. இந்த முன்னெடுப்புகளினூடாக தாபிக்கப்பட்ட பொருளாதார தொடர்பு எமது பல்லின மற்றும் பல்வகை கலாசார சமூகத்தின் உள்ளங்களையும் எண்ணங்களையும் இணைப்பதனையும் இலக்காகக் கொண்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

மெரபி எரிமலை சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் மெரபி எரிமலையின் சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மெரபி எரிமலை கடந்த இரண்டு மாதமாக குமுறிக் கொண்டிருந்தது. கடந்த மூன்று வாரங்களாக அந்த எரிமலை தீக்குழம்பை கக்கியதோடு, சூடான சாம்பலையும் வாயுவையும் வெளியேற்றி வருகிறது. தீக்குழம்புடன் சாம்பல் வீசியெறியப்பட்டதால், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். எரிமலையைச் சுற்றியுள்ள 18 கி.மீ., பரப்பளவில் சாம்பல் படிந்துள்ளது. காற்றில் சாம்பல் பறப்பதால், மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சமீபத்தில் எரிமலை சரிவில் இருந்து சாம்பலில் புதையுண்ட ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் எரிமலை சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. மெரபி மலையை சுற்றியுள்ள பகுதியிலிருந்து நான்கு லட்சம் பேர், ஜாவாவின் யோக்யகர்த்தா நகருக்கு அருகே குடிபெயர்ந்தனர். தற்போது எரிமலையின் சீற்றம் தணிந்துள்ளதால், இரண்டு லட்சம் பேர் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கார்த்திகை 23, 2010

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, அரச ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு உயர்வு

ஓய்வூதியம் பெறாத அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு சேவை ஊழியர்களது மாதாந்த கொடுப்பனவை 5 வீதமாக உயர்த்தவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது உரையாற்றுகையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், ''ஆயிரத்து 500 பட்டதாரிகள், நிதி நிறுவகங்கள் மற்றும் அரச வங்கிகளுக்கு முகாமைத்துவ பயிற்சியாளர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஆயிரத்து 500 தாதிகள் உள்வாங்கப்படுவர். பொறியியல், விவசாயம் மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது" எனத் தெரிவித்தார்.

கார்த்திகை 23, 2010

அமைப்பு ரீதியாகத் திரண்டுள்ள தொழிலாளர் உரிமைகள் பறிப்பு!  நெருக்கடியைப் பயன்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்

2008 ஆம் ஆண்டு துவங்கிய நெருக்கடியைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் சலுகைகளைப் பறிக்கும் வேலையில் அமெரிக்க நிறுவனங்கள் இறங்கியுள்ளன. நெருக்கடியைக் காரணம் காட்டி நஷ்டத்தில் இருந்த நிறுவனங்கள் இரண்டு மட்ட ஊதியத்தை உருவாக்கின. முதல் மட்டத்தில் உள்ள ஊழியர்கள் வழக்கமான ஊதியங்களைப் பெற்று வருவார்கள். இரண்டாவது மட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் மற்றும் சலுகைகள் இருக்கும். நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஒப்பந்தப்படி குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து இரண்டாம் மட்டத்தில் உள்ளவர்கள், முதல் மட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். இதற்கு ஒப்புக்கொண்ட பல நிறுவனங்களில் நிலைமை மோசமாகத் துவங்கியுள்ளது. இரண்டாம் மட்டம் என்ற அம்சத்தை நிரந்தரமாக்கிவிட சில நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. சில நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்களின் ஊதியத்தை ஏழு ஆண்டுகளுக்கு முடக்கி வைக்கும் ஒப்பந்தங்களில்கூட தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

வேலையில்லாகால சலுகையை இழக்கும் அமெரிக்கர்கள்! லட்சக்கணக்கானோர் பாதிப்பு

அமெரிக்காவில் வழங்கப்படும் வேலையில்லா கால நிவாரணத்திற்கான திட்டத்தை புதுப்பிக்காமல்விட்டதால் லட்சக்கணக் கான அமெரிக்கர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெரும் நிறுவனங்களுக்கான முடுக்கிவிடும் திட்டத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முனைந்து நிற்கும் அமெரிக்க அரசு வேலையிழந்த, வேலைகிடைக்காதவர்களின் சலுகைகள் பற்றி அலட்சியம் காட்டியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத் தின் பிரதிநிதிகள் சபை இந்தத்திட்டத்தை புதுப்பிக்காமல் விட்டுவிட்டது. இதற்கு ஒருவர் மீது மற்றொருவர் என்று ஜனநா யகக்கட்சியும், குடியரசுக் கட்சியும் குற்றம் சாட்டிக் கொள்கின்றன. அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்குப்பிறகு பிரதிநிதிகள் சபையில் குடியரசுக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத் திட்டம்

நாட்டில் வாழும் சகல மட்டத்தினரையும் இவ் வரவு-செலவுத் திட்டம் கருத்தில் கொண்டுள்ளது. அதனால் இந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் இவ் வரவு-செலவுத் திட்டத் தின் நன்மைகளை நிச்சயம் அனுபவிப்பார்கள். முற்று முழுதாக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இவ் வரவு-செலவுத் திட்டம் நாட்டின் துரித அபிவிருத்திக்கும் அடித்தளமாக அமைந்திருக்கின்றது. அரசாங்க ஊழியர்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் ஐந்து சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. தனியார்த் துறையினருக்கென ஓய்வூதியத் திட்டமொன்றும் இவ் வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழி யப்பட்டிருக்கின்றது. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

வேறு வழியில்லாமல்

ஆப்கானிஸ்தானிலிருந்து 2014ற்குள் நேட்டோ படைகள் வாபஸ்பெற முடிவு

ஆப்கானிஸ்தானிலிருந்து 2014ம் ஆண்டுக்குள்நோட்டோ படைகளை வாபஸ் பெறுவதென தீர்மானிக்கப்பட்டு ள்ளது. போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் நடந்த நேட்டோ நாடுகளின் கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 48 நாடுகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 2014ம் ஆண்டுக்குள் நேட்டோ படைகளை ஆப்கானிஸ்தானிலிரு ந்து வாபஸ் பெறுவது என்ற தீர்மானத்துக் கமைய அடுத்த ஆண்டிலிருந்து படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்படவுள்ளன. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் அல் கார்ஸாயியும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை முழுமையாகப் பொறுப் பேற்கும் தகுதியையும் திறமையையும் ஆப்கான் இராணுவம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இடையில் வெளியேறி ஆப்கானை, தலிபான்களின் இரையாக்க நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்காவின் பாதுபாப்பை அக்கறையாக வைத்தே படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இறுதி முடிவெடுப்போம். இவ்வாறு ஜனாதிபதி பராக் ஒபாமா கூறினார்.

கார்த்திகை 22, 2010

புதிய வரிக் கட்டமைப்பு, சம்பள உயர்வு பொதுமக்களுக்கு உரிய நிவாரணங்கள்

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமான நாடாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படை விடயமாக இம்முறை வரவு செலவுத் திட்டம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்க த்தினால் முன்வைக்கப்படும். புதி ய வரிக்கட்டமைப்பு, அரச ஊழிய ர்களுக்கு சம்பள உயர்வு, மக்களுக்கு நிவாரணங்கள், அபிவிருத்திக்கான தடைகளை நீக்குதல் போன்ற முக்கிய அம்சங்கள் வரவு செலவுத்திட்டத்தில் இடம்பெறும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் வீரவங்ச இந்த விடயத்தை குறிப்பிட்டார். (மேலும்....)

கார்த்திகை 22, 2010

தனியார் துறையினருக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம_

தனியார் துறையினருக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது உரையாற்றுகையில் தெரிவித்தார். ஓய்வூதியம் பெறுவதற்கு தனியார் துறையில் குறைந்தது 10 வருடங்கள் பணியாற்றியிருக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இத்திட்டம் மக்களுக்கு நல்ல பயனைத் தருவதாக அமையும் என்றும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்றும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கார்த்திகை 22, 2010

பிரபாகரன் கூறியது போன்று மக்கள் இன்று நடப்பதை 2 வாரங்களில் மறந்து விடுகின்றனர் ஐதே கட்சி கரு  ஜெயசூரிய_

விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியது போல் எமது மக்கள் இன்று நடப்பதை இன்னும் இரண்டு வாரங்களில் மறந்து விடும் போக்குக் கொண்டவர்களாகவே உள்ளனர். கடந்த பொதுத் தேர்தலின் போது நாம் கூறியவை சிலருக்கு இன்று மறந்து விட்டது. அதன் பிரதிபலனாக இன்றைய அவலத்தை ஒவ்வொருவரும் சந்திக்கவேண்டி வந்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சயின்  பிரதித் தலைவரும் நாடாளுமன்ற அங்கத்தவருமான கரு ஜயசூரிய இன்று கண்டியில் வைத்துத் தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 22, 2010

இலங்கை

புதிய அமைச்சரவை விபரம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். டக்ளஸுக்கு அதே அமைச்சு. முஸ்லீம்காங்கிரஸ் ரவூப் ஹக்கீம் - நீதி அமைச்சர்  பதவி, கருணாவின் பெயர் அமைச்சர் பட்டியலில் இடம் பெறவில்லை. டியூ குணசேகராவிற்கு மனிதவள அமைச்சு. வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ன போன்றோர் தொடர்ந்தும் அமைச்சராக தொடர்கின்றனர். மேர்வின் சில்வா மக்கள் தொடர்பு அமைச்சராக தனது அமைச்சர் பதவியை தொடர்கின்றார். நாமல் ராஜபக்ஷ, அவரின் நண்பன் ரங்கா இருவருக்கும் அமைச்சு பதவி வழங்கப்படவில்லை. தி.மு.ஜயரத்ன தொடர்ந்தும் பிரதம மந்திரியாக தொடர்கின்றார். அமைச்சர்களான ரத்னசிறி விக்ரமநாயக்க, டியூ.குணசேகர,அதாவுட செனவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி, சரத் அமுனுகம, பியசேன கமகே, பி.தயாரத்ன மற்றும் திஸ்ஸ விதாரன ஆகியோர் அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சரவையின் புதிய மாற்றத்திற்கு அமைய சிரேஷ்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(மேலும்....)

கார்த்திகை 22, 2010

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் முக்கிய பிரதநிதி ஒருவர் இலங்கை சென்று உள்ளார்

பிரான்ஸ் நாட்டின் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் முக்கிய முக்கிய பிரதிநிதியாக செயற்பட்டு வரும் வேலுமயிலும் மனேகரன் இலங்கைக்கு சென்று உள்ளார் என தெரியவருகிறது. இவரின் விஜயம் தொடர்பாக நாடுகடந்த அரசின்  வெளியுறவுதுறை அமைச்சர் தயாபரனிடம் ரிபிசி செய்தி பிரிவு கேட்ட பொழுது இவரின் விஜயம் பற்றி தனக்கு தெரியாது எனவும் நாடுகடந்த அரசின் பிரதிநிதியாக செய்யபட்டு கொண்டு விஜயம் செய்வதை தாம் கண்டிப்பதாகவும், ஆனால் தனிபட்ட விஜயம் என்கின்ற போது தாம் ஒன்றும் செய்யமுடியாது எனவும் தெரிவித்தார். இவருக்கான பயண ஒழுங்களை இலங்கை அரசு ஒழுங்களை செய்து உள்ளாதாகவும் தெரிவிக்கபடுகிறது. அரசினால் ஒழுங்கு செய்யபட்டிருக்கும் உல்லாச விடுதியில் தங்கி உள்ளாதாகவும் தெரியவருகிறது. இதேவேளை நாடுகடந்த அரசின் பிரதிநிதிகளை இலங்கை கருப்பு பட்டியலில் இணைத்துள்ளதும் குறிப்பிடதக்கது

கார்த்திகை 22, 2010

ஏழ்மைக்கும் இரங்காத இராக்கதர்கள்!

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் எமது நாட்டுப் பணிப்பெண்கள் பலர் எதிர்நோக்குகின்ற துன்புறுத்தல்கள் தொடர்பாக இங்கு மீண்டும் குறிப்பிட வேண்டிருயிருக்கிறது. அந்நாடுகளில் உள்ள வீட்டு எஜமானர்கள் பலர் புரிகின்ற காட்டுமிராண்டித்தனமான கொடூர காரியங்கள் முடிவின்றித் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இலங்கைப் பணிப்பெண்களும் சித்திரவதைத் தழும்புகளை உடலில் சுமந்தபடி நாட்டுக்குத் திரும்பிக் கொண்டேயிருக்கிறார்கள். எத்தனை காலத்துக்குத்தான் இத்துன்பங்களை நாமெல்லாம் சகித்துக் கொண்டிருப்பதென்பது தெரியாதிருக்கிறது.(மேலும்....)

கார்த்திகை 22, 2010

INFOSYS in Kuwait soon which will be called as " COBRA TOWERS ".
Amazing buildings of Great Infy.

கார்த்திகை 22, 2010

Thanks and good luck Mr. President

 (by Malinda Seneviratne)

 Mahinda Rajapaksa officially began his second term as President yesterday.  I remember the day he was sworn in the first time, five years ago.  There is a marked difference in man, moment and nation.  This is as good a time as any to compare and contrast. In 2005, Mahinda was a man without a party, without funds, without big-name backers, without a team, without experience, without coherence or direction.  He was fresh. Young(er).  He was a politician and as such made of promises. (more...)

கார்த்திகை 22, 2010

ஈழ வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக இலங்கையில் விசேட வலையமைப்பு உருவாக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழ வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக இலங்கையில் விசேட வலையமைப்பொன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் இந்த புதிய வலையமைப்பு செயற்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிவில் மக்களை இணைத்து இந்த வலையமைப்பு உருவாக்கப்படவுள்ளது. குறிப்பாக புலிகளின் பிரச்சார வலையமைப்பை தகர்த்தெறிவதனை இலக்காக வைத்து இந்த புதிய வலையமைப்பை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. அதேவேளை, அரசாங்கப் படையினருக்கு எதிராக சுமத்தப்படும் காழ்ப்புணர்ச்சி மிக்க குற்றச்சாட்டுக்களுக்கு அவ்வப்போது உரிய பதிலளிக்கப்பட வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கார்த்திகை 22, 2010

உலகமே விலகினாலும் உன்னுடன்  இருப்பவனே உண்மையான நண்பன்

இன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினிகளை இயக்கும் சிறந்த மென்பொருளான விண்டோஸ் என்னும் ஒபரேடிங் சிஸ்டம் வடிவமைத்த மைக்ரோசொப்ட(Microsoft)  என்னும் உலகின் முன்னணி நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆன பில்கேட்ஸ் தன்னுடைய நண்பனான பால் ஆலென் ஆரம்ப காலத்தில் செய்த உதவிகளால் தான் உலகின் தலை சிறந்த மென்பொருள் (Software )  நிறுவனத்தை உருவாக்க முடிந்தது. இன்று உலகின் தலை சிறந்த ERP  Software என்னும் அனைத்து விதமான தொழிற்சாலைகளையும் நிர்வகிக்கும் மிக சிறந்த மென்பொருளை வடிமைத்து உலக அளவில் முதன்மையாக விளங்கும் SAP (சேப்) என்னும் ஜெர்மனியை சேர்ந்த மென்பொருள் நிறுவனம் ஐந்து நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான். இன்று உலகின் அனைத்து ரக பெரிய நிறுவனங்களையும் சரியான முறையில் நிர்வகிப்பது இந்த மென்பொருள் தான். இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களையும் இயக்குவது  SAP  என்னும் மென்பொருள் தான். (மேலும்....)

கார்த்திகை 22, 2010

பாகிஸ்தான் மீதான வான் தாக்குதல்களால்  வாஷிங்டன், இஸ்லாமாபாத்திடையே முறுகல்

பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்க விமானங்கள் வான் தாக்குதல் நடத்துவதை இனிமேல் அனுமதிக்கப் போவதில்லையென அந்நாட்டு அரசாங்கம் சென்ற சனிக்கிழமை அறிவித்தது. வஸிரிஸ்தான், பஜலுஸ்தான் மாகாணங்களில் ஆளில்லா விமான தாக்குதல்களை விஸ்தரிக்க வெள்ளை மாளிகை தீர்மானித்துள்ளதென கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இச் செய்தியை பாகிஸ்தான் அரசாங்கம் சென்ற சனிக்கிழமை நிராகரித்தது. இது தொடர்பாக கருத்துவெளியிட்ட பாகிஸ்தான் அரசாங்கம், எங்களுடைய நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம். (மேலும்....)

கார்த்திகை 22, 2010

வறுமை, வேலையில்லா பிரச்சினை ஒழிப்புக்கு முன்னுரிமை

பொதுவசதிகள் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி

நகரமும் கிராமமும் வேறுபாடின்றி அபிவிருத்தி

வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பிப்பு 2011

2011ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 1.35 மணிக்கு வரவு - செலவுத் திட்டத்தைப் பாராளு மன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். நீண்டகால மற்றும் குறுகிய கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதிய மைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டி ருப்பதற்கு அமைவாகக் கிராமங்களை அபிவிருத்தி செய்து ஏழை, பணக்காரன் என்ற வர்க்க ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் சமமாகப் பகிரக்கூடிய வகையிலேயே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 22, 2010

172 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் தீர்மானம்

புகையிலைஉற்பத்தி, சிகரட் விற்பனைக்கு புதிய தடைகள்

 
புகையிலை விற்பனை, பாவனை மற்றும் புகைப்பிடித்தல் தொடர்பான விளம்பரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர 172 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. உருகுவேயில் நடந்த உலக சுகாதார மாநாட்டில் இந்த இணக்கம் காணப் பட்டன. இளைஞர்களை கவரும் வண்ணம் சிகரட்களில் அதிக இரசாயனப் பதார்த்தங்களைச் சேர்ப்பதற்கும் மாநாட்டில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட துடன் பொதுமக்களைக் கவரும் வகையிலான புகைபிடித்தல் விளம்பரங்க ளையும் தவிர்க்க வேண்டியதன் அவசியமும் மாநாட்டில் உணர்த்தப்பட்டது. (மேலும்....)

கார்த்திகை 22, 2010

இந்திய அமைச்சர் கிருஷ்ணா 27ம் திகதி வடக்கு விஜயம்

இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா எதிர்வரும் 27ம் திகதி சனிக் கிழமை வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்க ளுக்கு செல்லும் எஸ். எம். கிருஷ்ணா, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரம்பரிய சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வர்த்தக வாணிப த்துறை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்த் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 22, 2010

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவும் வகையில் நடமாடும் சேவை

தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவான ஆவணங்களை வழங்கும் நோக்கில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரையில் அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ஊடாக இம்மாதம் 20ஆம் 21ஆம் திகதிகளில் இந்நடமாடும் சேவை நடைபெற்றதாகத் துணைத்தூதுவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இதேபோல் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருக்கும் 115 அகதி முகாம்களில் அந்தந்தப் பகுதி மாவட்ட ஆட்சியாளர்கள் ஊடாக நடமாடும் சேவை முன்னெடுக்கப் படும். (மேலும்....)

கார்த்திகை 22, 2010

மத்திய மாகாண சபை ஒதுக்கீடு

யாழ். மிருசுவில் ரயில் நிலையம் ரூ. 20 மில்லியனில் புனரமைப்பு

யாழ்ப்பாணம், மிருசுவில் ரயில் நிலையம் 20 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். மத்திய மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் இந்த புகையிரத நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை மிருசுவில் பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிடவுள்ளனர். ரயில் நிலையத்தை புதிதாக நிர்மாணிப்பதற்கென 20 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை அன்றைய தினம் மத்திய மாகாண முதலமைச்சர் டிக்கிரி கொப்பேகடுவ தன்னிடம் கையளிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். ரயில் நிலைய நிர்மாணப் பணிக்கான கேள்விப்பத்திரம் வடமாகாண சபையினால் வெகுவிரைவில் கோரப் படவுள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், மூன்று மாத காலத்திற்குள் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கார்த்திகை 22, 2010

புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (22ம் திகதி) காலை 10.00 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள விருக்கின்றது. இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்திற்காக கடந்த 19ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். அதற்கு ஏற்ப புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறின. இச்சத்தியப் பிரமாண நிகழ்வின் போது புதுமுகங்களும் அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டமும் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின் போது இன்று நண்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2011ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி புதிய அமைச்சரவைக்கு விபரிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கார்த்திகை 22, 2010

இலங்கை வர முயன்ற மூவர் இந்தியாவில் கைது

தமிழ்நாட்டிலிருந்து ராமேஸ்வரம் படகு மூலம் இலங்கை வர முயன்ற 3 அகதிகளை இந்திய பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த தனுஷன் (26வயது), பிரபாகரன் (25வயது), கமல் (35வயது) ஆகியோர் சென்னையில் தங்கியுள்ளனர். எனினும், தமிழகத்தில் அவர்கள் மூவரும் தங்களை அகதிகளாக இதுவரை பதிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பேரையூரைச் சேர்ந்த ராஜா என்பவரின் உதவியுடன் அவர்கள் இலங்கைக்கு படகு மூலம் சட்டவிரோதமாக வர முயன்றுள்ளனர். இதற்காக ராஜாவுக்கு ஒவ்வொருவரும் தலா 35 ஆயிரம் இந்திய ரூபா பணம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மூவரும் படகு மூலம் இலங்கைக்குச் செல்வது குறித்து தகவல் அறிந்த இந்திய பொலிஸார், அவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கார்த்திகை 21, 2010

வாழ்த்துடன் நின்றுவிடக் கூடாது

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இது பொருத்தமான காலகட்டம். புலிகள் இயக்கம் வடக்கிலும் கிழக்கிலும் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம் அரசியல் தீர்வுக்குச் சாதகமானதாக இருக்கவில்லை. நடைமுறையில் ஒருபோதும் சாத்தியம் இல்லாத தனிநாட்டுக் கொள்கையின் கீழ் செயற்பட்ட புலிகள் அரசியல் தீர்வுக்கான சாத்தியக் கூறுகளைத் திட்டமிட்டு அழித்து வந்தனர். அரசியல் தீர்வுக்குப் பங்களிப்புச் செய்யத் தயாராக இருந்த தமிழ்த் தலைவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கொலை செய்தனர். அவர்களின் இந்த அணுகுமுறை பலனளித்தது. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுகின்ற தலைவர்கள் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்று அவர்களோடு இணைந்து செயற்பட முன்வந்தார்கள். தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எடுத்த இந்த முடிவு தமிழினத்தின் பேரழிவுக்கு அடிகோலுவதாக இருந்தது. அண்மையில் ஏற்பட்ட உயிரிழப்புகள், அழிவுகள், இடம்பெயர்தல்கள் அனைத்துக்கும் இந்த முடிவு பிரதான காரணமாகியது. (மேலும்....)

கார்த்திகை 21, 2010

பாட்டாளி மக்கள் கட்சியின் பின்னோக்கிய நகர்வு

தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வருகின்றது. கூட்டணிகள் இப்போதே பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியிலும் சேராமல் தனிமரமாக நிற்கின்றது. எந்தக் கூட்டணியில் இணைவது என்பது பற்றிப் பொங்கலுக்குப் பின் அறிவிப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறுகின்றார். இவர் கூட்டணியில் இணைவது அரசியல் கொள்கை நிலைப்பாட்டில் அல்லாமல் வாய்ப்புப் பார்க்கும் சந்தர்ப்பவாதத்தில் தங்கியிருக்கின்றது என்பதே இதன் அர்த்தம். போயஸ் கார்டனுக்கும் கோபால புரத்துக்கும் என்னை அலைய விட்டிருக்கின்றார்களே என்று அண்மை யில் இவர் கூறியது இவரது அரசியல் வங்குரோத்து நிலையையே வெளிப்படுத்துகின்றது. (மேலும்....)

கார்த்திகை 21, 2010

மக்களிடம் அதிகாரங்கள்

‘வடக்கில் மக்களிடம் அதிகாரங்களை ஒப்படைப்பதே எமது எதிர்பார்ப்பு’ என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்தை முறைப்படி ஏற்று ஆற்றிய உரையில் கூறினார். மக்களின் நீண்ட காலக் கோரிக்கையும் இதுவே. தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குப் பிரதேச சுயாட்சி என்று இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த கோரிக்கை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கை, பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் என்பன மக்களுக்கு அதிகாரங்களைக் கையளிக்கும் நோக்கத்தைக் கொண்டவை. பண்டா - செல்வா ஒப்பந்தமும் இதே அடிப்படையிலேயே அமைந்தது. ஆனால் இவை நடைமுறைக்கு வரவில்லை. நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற சந்தேகம் மக்களில் ஒரு பிரிவினருக்கு ஏற்படும் விதத்தில் அரசியல் தலைவர்கள் நடந்து கொண்டதாலேயே இவை நடைமுறைக்கு வர முடியவில்லை. (மேலும்....)

கார்த்திகை 21, 2010

இருபது வருடங்களின் பின் மியன்மாரில் தேர்தல்

இருபது வருடங்களுக்குப் பின் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலும் ஆங் சான் சூ கீயின் விடுதலையும் மியன்மாரில் ஜனநாயக ஆட்சி திரும்பிவிட்டது என்ற தோற்றத்தைக் கொடுக்கின்ற போதிலும், அந்த நம்பிக்கை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. நாடு பின்பற்ற வேண்டிய கொள்கை இராணுவ ஆணை மூலமாகவன்றிப் பாராளுமன்றத்தினது தீர்மானத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று இராணுவ ஆட்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது நாடு பின்பற்ற வேண்டிய கொள்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உண்டு. மேலோட்டமான பார்வைக்கு இது பாரிய முன்னேற்றமாகத் தோன்றுகின்ற போதிலும் நடைமுறையில் அவ்வாறாக இல்லை. புதிய அரசியலமைப்பின்படி, பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் கால்வாசி இராணுவத்துக்கு  ஒதுக்கப்பட வேண்டும். (மேலும்....)

கார்த்திகை 21, 2010

உலகின் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள்

இலங்கையிலிருந்து தேசபந்து ஜெசீமா இஸ்மாயில் தெரிவு

அமெரிக்க றோயல் இஸ்லாமிய புள்ளி விபரக் கற்கை நிலையத்தில் இருந்து கலாநிதி ஜோசப் லம்பேட், கலாநிதி ஆரிப் அலி நேயிட் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 2010ம் ஆண்டு அதிக செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் எனும் ஆய்வுத் தொகுதி நூலில் 136ம் பக்கம் இலங்கையைச் சேர்ந்த தேசபந்து ஜெசீமா இஸ்மாயிலின் தகவல் இடம்பெற்றுள்ளது. இத்தகவலின்படி இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண்ணாக இவர் தெரிவாகியுள்ளார் என்பது இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் வாழ்கின்ற எல்லாப் பெண்களுக்குமே பெருமை சேர்க்கின்ற ஒரு விடயம் எனலாம். அது மட்டுமல்ல உலக முஸ்லிம் பெண்கள் அனைவருக்கும் இது பெருமை தரும் ஒரு விடயமுமாகும். இந்த வகையில் தேசபந்து ஜெசீமா இஸ்மாயிலுக்கு நாம் இந்தப் பெருமையை - கெளரத்தைத் தேடித் தந்தமைக்காக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். (மேலும்....)

கார்த்திகை 21, 2010

பெருந்தோட்ட லயன் வாழ்க்கைமுறை மாற்றப்பட வேண்டும்

(இரா. சிவலிங்கம்)

லயன் குடியிருப்புக்களில் வாழ்கின்ற குடும்பங்கள் தினமும் அனுபவிக்கின்ற பிரச்சினைகள் சொல்லிலடங்காதவை யாகும். லயன் அமைப்பு முறையானது ஒற்றை வரிசை லயன், இரட்டை வரிசை லயன் என ஒரு பக்கத்தில் (வரிசையில்) 12 அறைகளையும், இரண்டு வரிசையில் 24 லயன் அறைகளையும் கொண்டுள்ளது. இதில் ஒரு அறையின் நீளம், அகலம் 12 x 10 (120 சதுர அடி) என்ற அளவுத் திட்டத்தில் ஆங்கிலேயர்களினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக வாழ்விடங்களாகும். ஒரு லயன் அறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 முதல் 7 பேர் வரை வாழ்கின்றார்கள். தாய், தந்தை, சிறுவர், குழந்தை, பெரியோர், பெண்பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளர்கள், கல்வி கற்கும் பிள்ளை கள், திருமண வயது இளைஞர், யுவதிகள், வயதுக்கு வரும் நிலையி லுள்ள பெண் பிள்ளைகள் என பல்வேறு வகையான உறப்பினர்கள் இந்தச் சிறிய இடப்பரப்பில் தினமும் தங்களுடைய வாழ்க்கைத் தேவை களை நிறைவேற்றி வருவது வேதனையளிக்கும் விடயமாகும். (மேலும்....)

கார்த்திகை 21, 2010

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் அபிவிருத்தியை நோக்கிய இலக்காகும்'' - அமைச்சர் விநாயகமூர்த்தி

மக்களின் கண்ணீரை துடைக்கப்போவது இல்லை. இப்போது மக்கள் யுத்தம் வேண்டாம் என்ற விடயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். நாம் அவர்களை சந்தித்த போதெல்லாம் அவர்கள் பாடசாலையை கட்டித் தாருங்கள். கடற்றொழில் செய்வதற்கான உதவிகள் செய்யுங்கள். கமத்தொழில் செய்வதற்காக உதவி செய்யுங்கள் என அபிவிருத்தி பற்றித்தான் கேட்கிறார்களே தவிர வேறு சிந்தனை மக்களுக்கு கிடையாது. இனத்துவேசம் பேசிப் பேசியே மீண்டும் மீண்டும் பிரச்சினைகளை உருவாக்குகின்ற அரசியல்வாதிகளை மக்கள் இனங்கண்டுகொள்ள வேண்டும். அப்படியில்லாமல் இவர்களின் பேச்சைக் கேட்டு இவர்களது பின்னால் சென்றால் இன்னுமொரு பாரிய அழிவை நோக்கி செல்வதாகவே அமையும். தூண்டுதல்களை ஏற்படுத்துகின்ற அரசியல்வாதிகளை இனங்கண்டு புறம் தள்ளுவதோடு மட்டுமல்லாமல், தங்களுக்கு நன்மைகளைத் தேடித்தரும் அரசியல்வாதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். (மேலும்....)

கார்த்திகை 21, 2010

தமிழ்மொழியின் பூர்வீக வரலாறு

கோண்ட்வாணா எனும் கண்டத்திலே ஆபிரிக்கா, தென்னமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட இந்தியா, ஆசியா எல்லாமே ஒரு கண்டமாக இருந்ததாகப் புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, சுமாத்ரா, போன்ற இன்றைய நாடுகளும் இந்தக் கோண்ட் வாணாக் கண்டத்துடனேயே இணைந்திருந்தன. இக்காலகட்டத்தில் ஆதமுடைய பிற்சந்ததியினராகிய சுமேரியர்களும், கோண்வாணா, கண்டத்தில் குடியேறி வாழ்ந்துள்ளார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல. இவர்கள் பேசிய சுமேரிய மொழி (இன்றைய தமிழின் மூலமொழி) இக்கண்டமெங்கும் பரவி ஆட்சி செய்தது எனலாம். இதற்கு ஆதாரமாக இன்னுமொரு விடயத்தையும் இங்கு கூற முடியும். பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களின் ஆய்விலே ஜப்பான் மொழியில் 500 க்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதாகக் கூறியதோடு மேலும் இது பற்றி ஆராய்ந்தால் இன்னும் பல தமிழ் சொற்களின் தொகை கூடலாம் எனவும் கூறியுள்ளார். (மேலும்....)

கார்த்திகை 21, 2010 

ஹவானா பல்கலைக்கழகத்தில் காஸ்ட்ரோ

படிப்புக்காக ஹவானா பல்கலைக்கழகத்தில் பிடல் காஸ்ட்ரோ சேர்ந்து 65 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அப்பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டாடியுள்ளனர்.1945 ஆண்டு நவம்பர் 17 அன்று தனது படிப்புக்காக ஹவானா பல்கலைக்கழகத் தில் பிடல் காஸ்ட்ரோ சேர்ந் தார். தற்போது அந்தப் பல் கலைக்கழக மாணவர்கள் இந்த நிகழ்வைக் கொண்டாட முடிவு செய்தனர். அந்த முடிவை மிகச் சிறப்பாக நடைமுறைப் படுத்த பிடல் காஸ்ட்ரோவும் நிகழ்ச்சிக்கு வருவது பொருத் தமாக இருக்கும் என்று கருதினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று பிடல் காஸ்ட்ரோ நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்தார். அவர்கள் மத்தியில் அவர் உரையும் நிகழ்த்தினார்.

கார்த்திகை 21, 2010 

இறுதிகட்ட யுத்தின் போது பொது மக்களை புலிகள் சுட்டனர் - வி. சண்முகராஜா

இறுதிகட்ட யுத்தின் போது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறிய பொது மக்களை புலிகள் சுட்டதாக முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வி. சண்முகராஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்கையிலேயே சண்முகராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர், 2006 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் 2009 ஆம் ஆண்டு வரை நான் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அத்தியசட்சகராக கடமையாற்றினேன். இந்த காலப்பகுதிக்குள்ள நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறி வந்த பொதுமக்களை புலிகள் சுட்டனர். ஆனால் நாங்கள் அங்கிருந்த வந்த மக்களை புலிகள், பொதுமக்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சிகிச்சை அளித்தோம். என தெரிவித்திருந்தார்.

கார்த்திகை 21, 2010

ஈகுவடோரில் தோல்வியில் முடிந்தது சதிப்புரட்சி

அமெரிக்க நாடுகளுக்கான பொலிவிய மாற்று அமைப்பு எனப்படுவது இடதுசாரிக் கருத்துள்ள நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்த நாடுகள் சமத்துவ அடிப்படையில் தங்களுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை வகுத்துக்கொண்டுள்ளன. அரசியலிலும் பொருளாதாரத்திலும் அமெரிக்க நாடுகள் மத்தியில் மேலாண்மை செலுத்தும் ஐக்கிய அமெரிக்க நிலைப்பாட்டுக்கு இந்த அமைப்பு வலுவான சவாலாக உள்ளது. திழிகிதி வில் ஈக்குவடோர் இணைந்ததால் அமெரிக்கா கொண்டிருந்த சினம் மேலும் அதிகரிக்கும் வகையில், ஈக்குவடோரிலுள்ள அமெரிக்கத் தளத்தை மூடிவிடுமாறு ஜனாதிபதி கொரயா கடந்த வருடம் உத்தரவிட்டார். ஈகுவடோர் பொலிஸ் சேவையில் அமெரிக்க தூதரகம் ஊடுருவல் செய்திருக்கின்றது என்று சில காலத்துக்கு முன் ஒரு கனேடிய ஊடகவியலாளர் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஈகுவடோரிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ஹீதர் ஹொட்ஜெஸ் போதைவஸ்துக் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவே ஈகுவடோர் பாதுகாப்புப் படையினருக்கும் அமெரிக்காவுக்குமிடையே ஒத்துழைப்பு நிலவுகின்றது எனக் கூறியிருந்தார். (மேலும்....)

கார்த்திகை 20, 2010

 

வரதராஜப்பெருமாளுக்கு இலங்கை அரசு வீடு வழங்கவில்லை. -பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

கொழும்பில் வரதராஜபெருமாளுக்கு அரசாங்கம் வீடு ஒன்றை வழங்கியிருப்பதாக சிங்கள இணையத் தளம் ஒன்றில் வெளியான செய்தியென குறிப்பிட்டு வலம்புரி பத்திரிகையின் முன்பக்கத்தில் நேற்று (17.11.2010) வெளியிடப்பட்ட செய்தி உண்மையில்லை.  இந்த செய்தியை கோர்த்து வெளியிட்டிருந்த தமிழ் இணையத்தளம் கடந்த காலத்தில் ஏகபிரதிநிதித்துவத்திற்கு ஆதரவாக செயற்பட்டதுடன் அனைத்து ஜனநாயக விரோத செயற்பாடுகளையம் நியாயப்படுத்தியும் வந்தது. ஏகபிரதிநிதித்துவத்திற்கு எதிரானவர்களை துணைப்படைகள் என்றும் துரோகிகள் என்றும் தூற்றியும் வந்த ஒன்றாகும். இவர்களுக்கு தோழர் வரதராஜப்பெருமாள் என்ற பெயரும், அவரது கருத்துக்களும் உவப்பானதாக இருக்க நியாயமில்லை. ஆனால், இவர்களின் சோடிப்புக்களும், திரிப்புக்களும் தமிழ் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த பின்னரும் அவர்கள் இவற்றை கைவிடுவதாக இல்லை என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.  (மேலும்....)

கார்த்திகை 20, 2010

லண்டனில் இருந்து சென்ற தமிழ் ஊடகவியலாளர் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் கைது

லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா சென்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அரச புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு இது தொடர்பாக தகவல் வெளியிடுகையில், “பிரித்தானிய கடவுச்சீட்டை வைத்துள்ள கார்த்திகேசு திருலோகசுந்தர் [வயது 37] என்ற ஊடகவியலாளர் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். (மேலும்....)

கார்த்திகை 20, 2010

இலங்கையிலிருந்து ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்த பூகோள ரீதியான தீர்வுகாணப்பட வேண்டும் - கனடா கோரிக்கை

இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து மேற்கொள்ளப் படுகின்ற ஆட்கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த பூகோள ரீதியான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என கனடா கோரியுள்ளது. கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜப்பானில் இடம்பெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கனடா தற்போது மேற்கொண்டுள்ள அகதி சட்ட மூலம், ஆட்கடத் தல்காரர்களுக்கும், ஆட்கடத்தல் நடவடிக்கை களை மேற்கொள்ளப் பயன்படுத்தும் கப்பல் களின் உரிமை நிறுவனங்களுக்கும் எதி ரா கவே உருவாக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 20, 2010

மக்களை நேசித்த உண்மைப் போராளி பத்மநாபா

(மோகன் சிவராஜா)

தமிழர்களின் ஆயுதந் தாங்கிய போராட்டம் எங்கள் மத்தியில் ஜனநாயக விழுமியங்களை புறந்தள்ளிய போக்கு தலையெடுத்திருந்த போதும் தோழர் பத்மநாபா எப்போதும் ஜனநாயக பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து வந்தவர். கட்சிக்குள் ஜனநாயகத்தையும், தமிழ் இயக்கங்களிடையே ஐக்கியத்தையும் வலியுறுத்தி வந்தவர். கட்சிக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அவர் விமர்சனம் சுயவிமர்சனத்தை கைக்கொண்டார். இயக்கங்களிடையே தோன்றிய பிணக்குகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளவதற்கே முக்கியத்துவமளித்தார். அவர் இறக்கும் வரையும், இறந்த பின்னரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களாலும் மரியாதை செலுத்தும் ஒருவராக தோழர் பத்மநாபா விளங்குவதற்கு அவரது இந்த அணுகுமுறையும் ஒரு காரணம்.  (மேலும்....)

கார்த்திகை 20, 2010

தமிழ் அகதிகள் விவகாரம்

இந்திய கனடிய உளவுத்துறைத் தலைவர்கள் சந்திப்பு

தற்பாது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள கனடிய உளவுத்துறையின் தலைவரான றொபேட். பி. பாடேன் இந்தயி மத்திய உளவுத்துறை றோ உளவு அமைப்பு மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இலங்கை அகதில் கனடாவிற்கு வருகிற விடயம் அதில் எவ்வாறான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதுடன். கனடாவின் தயாரிப்பான பிளாக் பெரி தொலைபேசியில் எவ்வாறு உளவுத்துறை தகவல்களைப் பெற முடியும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ எனப்படும் மத்திய உளவுத்துறையின் தலைவர் ராஜீவ் மாதுர் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை மற்றும் றோ உளவு அமைப்பின் தலைவர் எ.கே. வர்மா ஆகியோரைச் சந்தித்துப் பேசிய கனடிய உளவுத்துறைத் தலைவர்
இலங்கையில் இருந்து தற்போது கனடாவிற்கு அதிகளிவில் வருகை தரும் அகதிகளை சட்டரீதியாகக் கட்டுப்படுத்துவது குறித்தும் பிளாக்பெரி தொலைபேசியில் இருந்து தகவல்களை உளவுத்துறையினர் பெறுவதற்கு இந்தியா குறித்த விண்ணப்பம் குறித்தும் பேசியுள்ளார்.

 

கார்த்திகை 20, 2010

ஐயோ...! உருத்திரா.... உனக்கும் கணக்குத் தெரியாதாப்பா...?

 

'அதை விடடா ராஜா... அண்ணைக்கு நாடு கடந்த தமிழீழ அரசின்ர ரெண்டாவது அமர்விலே மொத்தம் 17 பேர் இருந்தனாங்க... அதிலே அவங்கள் வெளிநடப்பு செய்தபிறகு 12 பேர் இருந்தம்... அப்ப எத்தனை பேர் வெளிநடப்பு செய்தாங்க...?'
'நாலு பேரண்ணே...'

'நல்லா கணக்குப் பாத்துச் சொல்லுடா ராஜா.... முதல் இரண்டு நாளும் அமர்வில கலந்து கொண்ட பிரான்ஸ் உறுப்பினர் ரெண்டு பேர்... ஜெர்மனி உறுப்பினர் ரெண்டு பேர்... இத்தாலி உறுப்பினர் ஒருவர்... எண்டு இவ்வளவு பேரும் வெளிநடப்பு செய்திட்டினம்... அப்ப... வெளிநடப்பு செய்தது எத்தனை பேரடா ராஜா...?'

'அப்பிடிப் பார்த்தாலும் நாலுதாண்ணே...'

(மேலும்....)

கார்த்திகை 20, 2010

நாங்களும் இருக்கிறம். ஈ.என்டி.எல்.எப்

ஈ.என்டி.எல்.எப் மாநாடு நடாத்தியிருக்கிறது. 2நாள் மாநாடு. இந்திய அரசு தமிழ்மக்களைப் பாதுகாக்க வேண்டும் என சொல்லியிருக்கிறது. இதைச் சொல்வதற்கு 2 நாள் மாநாடு. இயக்கங்கள் மாநாடு நடாத்துகிற சீசன் இது. ஈ.பி.ஆர்.எல்.எப். புளொட், மாநாடுகள் நடாத்தி முடித்தபின் ஈ.என்.டி.எல்.எப்பும் மாநாடு நடாத்தியிருக்கிறது. இதன் மூலம் நாங்களும் உயிரோடு இருக்கிறம் என சொல்லப்பட்டிருக்கிறது.பரந்தன் ராஜன் ஈ.என்.டி.எல்.பின் தலைவர். முகம் தெரியாத தலைவர். மாநாடு நடந்த படம் ஒன்று கூட இணையத்தளங்களில் வெளிவரவில்லை. பரந்தன் ராஜனை என்ர உசிர் போவதற்குள் பார்த்து விட ஆசை. ஆனால் முகத்தைக்கூட வெளிக்காட்டாமல் தலைமறைவாக இருக்கிறார். (மேலும்....)

கார்த்திகை 20, 2010

பிரச்சினைகளின் தீர்வுக்கு சாதகமான சூழ்நிலை

 

தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் சகல பிரசைகளுக்கும் பொதுவான பிரச்சினைகள் இருக்கின்ற அதேவேளை தமிழ் பேசும் மக்களுக்குத் தனியான பிரச்சினைகளும் உள்ளன. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதும் அண்மைய இராணுவ நடவடிக்கையின் போதும் அதற்கு முன்னரும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களினதும் வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களினதும் மீள்குடியேற்றமும் தமிழ் பேசும் மக்களுக்கு முன்னாலுள்ள தனித்துவமான பிரதான பிரச்சினைகள், இப்பிரச்சினைகளின் தீர்வுக்கு ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் சாதகமான காலகட்டமாக உள்ளது. (மேலும்....)

கார்த்திகை 20, 2010

ஒபாமாவை தோற்கடிப்பேன் - சாரா பாலின்

கடந்த முறை நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த சாரா பாலின் ஒரு பேட்டியில் அடுத்த முறை நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை தோற்கடிப்பேன் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் 2008ம் ஆண்டு நடந்த போது ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் ஜோன் மெக்கைன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் சாரா பாலின் என்ற பெண் ஆவார். அப்போது இவர் அலாஸ்கா மாநில ஆளுநராக இருந்தார். இந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு தான் தேர்தலில் குதித்தார். அவர் இப்போது ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது, 2012ம் ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் யோசித்து வருகிறேன். இது தொடர்பாக நான் என் குடும்பத்தினருடன் ஆலோசித்து வருகிறேன். 2012ம் ஆண்டு தேர்தலில் ஒபாமா போட்டியிட்டால் அவரை தோற்கடிப்பேன். இவ்வாறு சாராபாலின் கூறினார்.

கார்த்திகை 20, 2010

ஈரானை மிரட்டுவதை உலக நாடுகள் கைவிட வேண்டும்

ஈரான் அணுசக்தி பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் பலன் ஏற்பட வேண்டுமானால், இந்த பிரச்சினையில் ஈரானை மிரட்டுவதை உலக வல்லரசு நாடுகள் கைவிட வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி அஹமதிநெஜாத் கேட்டுக் கொண்டுள்ளார். அசர்பைஜான் நாட்டுக்கு சென்றுள்ள ஈரான் ஜனாதிபதி அங்கு நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது, ஈரானுக்கும் உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஈரான் நடத்த இருக்கும் பேச்சுவார்த்தை அடுத்தமாதம் நடக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. பேச்சுவார்த்தையில் பயன் ஏற்பட வேண்டுமானால் உலக வல்லரசு நாடுகள் ஈரானை மிரட்டுவதை கைவிட வேண்டும். (மேலும்....)

கார்த்திகை 20, 2010

புதுக்குடியிருப்பு, தேராவில் பகுதிகளில் 855 பேரை மீள்குடியேற்ற நடவடிக்கை

முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த 250 குடும்பங்களைச் சேர்ந்த 855 பேர் அடுத்தவாரம் புதுக்குடியிருப்பு, தேரா பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து மெனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்பட உள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு பிரதேசத்திலே கூடுதலான மிதிவெடிகள் புதைக்கப்பட்டன. இதனால் இங்கு மீள்குடியேற்ற நடவடிக்கை தாமதமடைந்தது. ஆனால் இராணுவத்தினர் துரிதமாக மிதிவெகைளை அகற்றி வரும் நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள 19 கிராம சேவகர் பிரிவுகளில் 5 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் நிறைவடைந்துள்ளன. மேற்படி 250 குடும்பங்களும் புதன்கிழமை விசேட பஸ்களில் அழைத்து வரபட்டு சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர். ஏனைய பகுதிகளில் மிதிவெடிகள் அகற்றப்படுவதற்கு ஏற்ப மீள்குடியேற்றம் முன்னெடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது.

கார்த்திகை 20, 2010 

இந்த யுவதியை உங்களுக் தெரியுமா?

வன்னியில் இறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்ட யுவதி ஒருவர் தற்போது பூந்தோட்டம் பொலி ஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். 21 வயதான விஜயகுமாரி அல்லது செந்தில் குமாரி என்ற பெயருடைய இவரின் தந்தையார் ரமேஷ் என்றும் தாயார் ராஜலக்ஷ்மி என்றும் தெரிவித்தார். நுவரெலியா லபுசிகலே பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரிடம் இவர் தெரிவித்துள்ளார். படத்தில் காணப்படும் இவரின் தாய், தந்தையர் அல்லது உறவினர்கள் பூந்தோட்டம் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறும் இவரை அழைத்துச் செல்லுமாறும் பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர். தனது வதிவிடத்தை சரியாக குறிப்பிட்டு கூற முடியாத நிலைமையில் இவர் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கார்த்திகை 20, 2010

வடக்கில் மக்களிடம் அதிகாரங்களை ஒப்படைப்பதே எமது எதிர்பார்ப்பு’ - ஜனாதிபதி

வடக்கு மக்கள் மாகாண சபைக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பம் வழங்குவதோடு அதனூடாக அதிகாரங்களை மக்கள் கைகளிலேயே ஒப்படைப்பதே தமது எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் முன்னொருபோது மில்லாதவாறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அங்கு இடம்பெறும் ஒவ் வொரு அபிவிருத்தியும் பயங்கரவாதத்திற் கான வழிகளை மூடும் எனவும் தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 20, 2010

இன்று உலக சிறுவர்கள் உரிமை தினம்

(அருணா தருமலிங்கம்)( செங்கலடி)

இவ்வுலகின் எதிர்கால சமுதாயச் சிற்பிகளாக மிளிரவிருக்கும் சிறுவர்கள் பற்றிய எண்ணக்கருவானது இன்று சர்வதேச ரீதியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது எனலாம். இதனால் சிறுவர்களது பாதுகாப்பு, அவர்களது உரிமை பற்றிய சட்டங்களும், செயற்றிட்டங்களும் புதிய வடிவம் பெற்றுள்ளன என்பது நிதர்சனமாகும். ஆரோக்கியமான சூழ்நிலையில் வாழுகின்ற சிறுவர்களே எதிர்கால நற்பிரஜைகளாக உருவாகலாம். எனவே அவர்களை வழிநடத்தி பாதுகாத்து சமூகத்தை சிறுவர்களிடம் கையளிப்பதற்கேற்ற பாத்திரங்களாக உருவாக்க வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்களின் பொறுப்பாகும். (மேலும்....)

கார்த்திகை 20, 2010

நிவாரணக் கிராமங்களின் எண்ணிக்கை 2 ஆக குறைப்பு

மீளக்குடியேறுவதற்காக முகாம்களில் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் தற்பொழுது ஐந்தாக செயற்படும் முகாம்களை இரண்டாகக் குறைத்துச் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நேற்று முன்தினம் (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் தெரிவித்தது, இதன்படி வலயம் நான்கிலிருந்த மக்கள் கதிர்காமர் முகாமுடன் இணைக்கப்பட்டுள்ளனர். அதே போன்று வலயம் 2, 3 ஆகிய வற்றில் தங்கியுள்ள மக்கள் வலயம் ஒன்றில் தங்க வைக்கப்படுவார்கள். சுமார் 18 ஆயிரம் பேர் வரை மட்டுமே இன்னமும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர். இதனால் நிர்வாக செயற்பாடுகளின் வசதி கருதி இரண்டு முகாம்களை மட்டும் செயற்படுத்த முடிவு செய்யப்பட்டு ள்ளதாக வவுனியா மாவட்டச் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இதேவேளை, வவுனியா மற்றும் செட்டிக்குளம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 518 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கற்குளம், நேரியகுளம் பகுதிகளில் ஓர் அரச சார்பற்ற நிறுவனம் இந்த வீடுகளை நிர்மாணித்துள்ளதாகவும் விரைவில் பயனாளிகளுக்குப் பொறுப் பளிக்கப்படுமென்றும் அவர் கூறினார். அதேநேரம், கனகராயன்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 50 வீடுகள் இன்று உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படுமென்றும் மாவட்டச் செயலகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

 

கார்த்திகை 19, 2010

கார்த்திகை 19, 2010

கார்த்திகை 19, 2010

ஈழத்து மகாத்மா!!! தோழர் நாபாவை ஈழமண்ணின் மடியில் ஈன்றெடுத்த நாள் இன்று  19.11.1951

நாபாவே நாபாவே உன்

நாமம் உச்சரிக்க உச்சரிக்க

நாவில் நன்னீர் சுரக்குது  தோழா

நன்மனிதன் நீங்கள் என்றும்

நடுநிலை நாயகன் என்றும்

நாங்கள் எடுத்துரைப்போம் தோழா!!

(மேலும்....)

 

 

கார்த்திகை 19, 2010

ஜனாதிபதியின் பதவியேற்பு இன்று கொழும்பில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாண தேசிய நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் இன்று (19) மிகக் கோலாகலமாக நடைபெறுகிறது. ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெறும் இந்தத் தேசிய நிகழ்வில் மகா சங்கத்தினர், மதத் தலைவர்கள், உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரமுகர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொள்கின்றனர். இன்று காலை 10 மணிக்குள்ள சுபவேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் பதவி ஏற்பதை முன்னிட்டு அரசியல் தலைவர்களும் உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை அனுப்பி வைத்துள்ளனர். ஜனாதிபதிக்கு நேரடியாக வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக 40 இராஜதந்திரப் பிரதிநிதிகள் அடங்கலாக 150 பிரமுகர்கள் இலங்கை வந்துள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 19, 2010

கார்த்திகை 19, 2010

காஷ்மீர் பிரஜைகளுக்கு தனித்தாளில் விசா

சீனாவின் முரண்பாடான போக்குக்கு நிருபமா ராவ் நேரில் எதிர்ப்பு

சீனா வின் வூ கான் நகரில் நடந்த ரஷ்யா, இந்தியா, சீனா முத்தரப்புக் கூட்ட த்தின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் யங் ஜெச்சி இருவருக்கும் இடை யில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நிருபமா ராவ் கலந்து கொண்ட இக் கூட்டம் நடை பெற்றது. இதில், காஷ்மீரிகளுக்குத் தனித் தாளில் விசா வழங்கும் சீன நடைமுறை, பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீரில் சீனா மேற் கொண்டு வரும் பல்வேறு திட்டங் கள், பயங்கரவாதிகளின் சொர்க்க மான பாகிஸ்தானுக்கு புதிய அணு உலை நிறுவும் திட்டத்தை பீஜிங் வழங்கத் திட்டமிட்டிருப்பது உள்ளி ட்ட பல்வேறு முக்கிய பிரச்சினை கள் விவாதிக்கப்பட்டன. (மேலும்....)

கார்த்திகை 19, 2010

புலிகள் அதிகளவில் சிவில் உடையுடனேயே போரிட்டனர் - சவேந்திர டி. சில்வா _

புலிகளுக்கு எதிராகப் போரிட்டு வெற்றிகொண்ட நாங்கள் தற்போது சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் மக்களினால் முன்னெடுக்கப்படும் தவறான பிரசாரங்களுக்கு எதிராக இராஜதந்திர ரீதியில் செயற்படவேண்டியுள்ளது. அத்துடன், இறுதி யுத்தத்தின்போது அதிகளவான புலிகள் சிவில் உடையிலேயே எம்முடன் போரிட்டனர். பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்டனி கூட சிவில் உடையில் போரிடுகையிலேயே கொல்லப்பட்டார் என்று அப்போதைய 58 ஆவது படையணியின் தளபதியும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தற்போதைய பிரதி வதிவிட பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர டி. சில்வா தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 19, 2010

கிழக்குப் பல்கலை மாணவர் 14 பேருக்கு இன்று முதல் ஒரு வருட கற்கைத் தடை _

வர்த்தக பீட மாணவி ஒருவரை செவ்வாய்க்கிழமை பகிடி வதைக்குட்படுத்திய ஒரு மாணவி அடங்கலான 5 மாணவர்களுக்கும், கடந்த வாரத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்ட இருவருக்கும். மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விபுலாந்த இசை நடனக் கல்லூரியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மோதல் தொடர்பில் விசாரணைக்கால வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்த 7 மாணவர்களுக்கும் இந்தக் கற்கைத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று, வர்த்தக பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவியைப் பகிடி வதைக்குட்படுத்திய ஒரு மாணவன் மற்றும் 4 மாணவிகளுக்கும் விசாரணைகள் முடியும் வரை வகுப்புத் தடை விதிப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்ததது. (மேலும்....)

கார்த்திகை 19, 2010

அபிவிருத்தி யுகத்தின் இரண்டாவது அத்தியாயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இத்தருணத்தில் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆறு வருட ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய சாத னைகளை நாட்டு மக்கள் ஒரு தடவை மீட்டுப் பார்ப் பது அவசியம். எமது நாடு முப்பது வருட காலமாக இருண்ட யுகத்தில் சிக்கியிருந்தது. யுத்தத்தின் கோரப் பிடிக்குள் அகப் பட்டிருந்த நாட்டையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆறு வருட காலத்துக்கு முன்னர் பொறுப்பேற்றார். நீண்ட கால யுத்தத்தினால் எந்தவித அபிவிருத்தியும் காணாமல் சீரழிந்த நிலையிலிருந்த எமது நாட்டை மீட்டெடுத்து விமோசனப் பாதைக்கு இட்டுச் சென்ற வர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். (மேலும்....)

கார்த்திகை 19, 2010

இரண்டு பாலஸ்தீனர்கள் கொலை! தொடரும் இஸ்ரேலின் அட்டகாசம் 

காசாத்திட்டுப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள். மேலும் மூன்று பேர் கடுமையான காயங்களோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பாலஸ்தீனப்பகுதிகளுக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவது நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த நவம்பர் 17 அன்று காசாத் திட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு காரைக் குறிவைத்து இஸ்ரேலியப் போர் விமானம் தாக்குதல் நடத்தியது. கார் வெடித்துச் சிதறியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். முகமது யாசின் மற்றும் அவரது சகோதரர் இஸ்லாம் என்று அந்த இரண்டு பேரும் அடையாளம் காணப்பட்டனர். மேலும் அப்பகுதியில் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா என்பது உறுதி செய்யப்படவில்லை. (மேலும்....)

கார்த்திகை 19, 2010

இந்தியக் கல்வி ஓர் இமாலய தோல்வி

(ஜோ.ராஜ்மோகன்)

இருபத்தோராம் நூற்றாண்டில் நாம் இதுவரை கண்டிராத அளவுக்கு கல்விக்கான அபரிமிதமான தேவை ஏற்பட்டுள்ளது. இந் திய சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி அனைத்தும் கல்வி பெறும் மாணவர் களோடு பின்னிப்பிணைந்துள்ளது. கல்வியின் தேவையை கருத்தில் கொண்டு நாட்டின் முன்னேற்றத்தை வளர்த்து எடுப்பதற்கு பதில் உலக வங்கியும். சர்வதேச நிதி நிறுவனமும் கொடுக்கும் நிர்ப்பந்தத்தால் தொடர்ந்து ஆட்சியாளர்கள் உலகமய, தனியார் மய, நவ தாராளமயமாக்கல் கொள்கைகளை தீவிரமாக அமலாக்குவதால், கல்வி என்பது நடப்பில் முழுவதும் வியாபார மாக்கப்பட்டுள்ளது, (மேலும்....)

கார்த்திகை 18, 2010

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண விஜயம்

இனப் பிரச்சினையின் தீர்வைப் பொறுத்த வரையில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டைப் பேரினவாத நிலைப்பாடாகவே பெரும்பான்மையான தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள். இனப் பிரச்சினையின் தீர்வை நோக்கி மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளுக்கும் மக் கள் விடுதலை முன்னணி கடுமையான எதிர்ப்புத் தெரி வித்தது. சமஷ்டித் தீர்வையும் எதிர்த்தது. அதிகாரப் பகிர் வையும் எதிர்த்தது. பதின்மூன்றாவது திருத்தம் முழுமை யாக நடைமுறைக்கு வருவதையும் எதிர்த்தது. இவற்றை யெல்லாம் எதிர்த்ததேயொழிய இன்று வரை தீர்வுக்கான மாற்றுத் திட்டம் எதையும் முன்வைக்கவில்லை. தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சி னைக்கான தீர்வில் எதிர்மறை நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு காணாமல் போனவர்கள் பற்றி மாத்திரம் பேசுவது தமிழ் மக்களை வென்றெடுப்பதற்கான அணுகு முறையாகாது. குறைந்த பட்சம் ஒரு தீர்வுத் திட்டத்து டனாவது தமிழ் மக்களை அணுக வேண்டும். (மேலும்....)

கார்த்திகை 18, 2010

ஜனாதிபதியின் பிறந்த தினம், நாடு முழுவதும் வைபவங்கள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளையொட்டியும் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டும் நாடு முழுவதும் மத வழிபாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெறுகின்றன. ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தையொட்டி உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தவிரவும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அதேநேரம், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளையும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். சர்வ மத வழிபாட்டுத் தலங்களிலும் விசேட பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. இதற்கான ஒழுங்குகளை அரசியல், தொழிற்சங்க அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. (மேலும்....)

கார்த்திகை 18, 2010

 

பொலநறுவையில் புனர்வாழ்வு பெற்ற 100 பேர் விடுதலை

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டு புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 100 பேர் விடுவிக்கப்படவுள்ளனர். பொலநறுவை- சேனபுர முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களே இவ்வாறு விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலையில் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு பிரதியமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா தினகரனுக்குத் தெரிவித்தார். எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இதேவேளை, ஜனாதிபதியின் பதவிப் பிரமாணத்தை முன்னிட்டு மேலும் 100 கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பில் நீதி, சட்ட மறுசீரமைப்புக்குச் சிபாரிசு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதியின் பிறந்த நாளையொட்டி யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.

கார்த்திகை 18, 2010

புத்தக அறிமுகம்

பர்மியப் போராளிகள், உலுக்கும் கேள்விகள்

உண்மையில் அவர்கள் ஆயுதக்கடத்தல் காரர்கள் இல்லை. பர்மாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடும் போரா ளிகள். அவர்களை நம்ப வைத்து வஞ்சித்த வர் இந்தியாவின் உயர் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிரேவால் என்பதை எத்தனை பேர் அறிவர்? கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், பத்திரிகைகளில் வந்த செய்திகளும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய். ஆம். இந்த விவகாரம் நமக்கு உணர்த்துவது இதைத்தான். இன்னும் இந்தியச் சிறைகளில் வாடும் அந்த 36 பர் மியப் போராளிகள் கதையைத் துருவிப் பார்த்தால், திகி லூட்டும் திருப்பங்கள் நிறைந்த துப்பறியும் புனை கதை களை விஞ்சும் மர்ம முடிச்சுகள் நிரம்பக்கிடக்கின்றன. (மேலும்....)

கார்த்திகை 18, 2010

தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை மூன்று மாதங்களில் துவங்கும்

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, கொழும்பு துறைமுகத்துக்கு பயணிகள் போக்குவரத்து குறித்து 2002ம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் துவக்கப்படும். இதற்கான இறுதி கட்ட பேச்சு, இரு நாட்டு அதிகாரிகள் மத்தியில் நடந்து வருகிறது. சேது சமுத்திர திட்டம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. தமிழக மக்களின் கனவு திட்டமான, இத்திட்டத்துக்கு சாதகமான முடிவு நீதிமன்றத்தில் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், தமிழகத்துக்கான பல்வேறு முன்னேற்றங்கள் கிடைக்கும். (மேலும்....)

கார்த்திகை 18, 2010

ஐ. நா. பாதுகாப்புச் சபையில்
இந்தியாவுக்கு இடம் கிடைப்பது சந்தேகம்

 “ஐ. நா. பாதுகாப்புச் சபை மறுசீரமைப்புத் திட்டத்தில் எந்நேரம் வேண்டுமானாலும் திருப்பம் நிகழலாம்” என அமெரிக்க வெளி யுறவுத் துறை இணைச் செயலர் ரொபர்ட் ப்ளேக் எச்சரித்துள்ளார். இதனால் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் இந்தியா இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, “ஐ. நா. பாதுகாப்புச் சபை விரைவில் மறுசீரமைக்கப்பட்டு, அதில் இந்தியாவுக்கும் இடம் அளிக்கப்படும்” என வாக்குறுதியளித்தார். அவரது இந்த வாக்குறுதி சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. (மேலும்....)

கார்த்திகை 18, 2010

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் அச்சமின்றி முதலீடு செய்யலாம் - அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டை இந்திய அரசின் உதவியுடனும் இலங்கை அரசின் உதவியுடனும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய அரசின் 176 மில்லியன் இந்தியன் ரூபாய் உதவி மற்றும் இலங்கை அரசின் 25 மில்லியன் ரூபாய் உதவி இதற்காக கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 18, 2010

அமெரிக்காவில் ஏழிலொரு
குடும்பம் பசி, பட்டினியில் தவிப்பு

அமெரிக்காவில் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2009ம் ஆண்டில் 7இல் ஒரு குடும்பத்தினர் பசி, பட்டினியில் வாடியதாக ஆய்வு தெரி விக்கிறது. உலக அளவில் கடந்த 2008ம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அமெரிக்காவை மோசமாக பாதித்தது. அதுவரை வசதியாக வாழ்ந்தவர்களில் பலர், கடும் பண நெருக்கடியில் சிக்கினர். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத சூழல் உருவானது. உணவு கூட கிடைக்காமல் பசியால் வாடுவதும் அதிகரித்தது. இதையடுத்து அமெரிக்க விவசாய துறை உணவு பாது காப்பு குறித்து முதல் முறையாக தேசிய அளவில் ஆய்வு நடத்தியது. அதன் விபரம் : அமெரிக்காவில் 2009ம் ஆண்டில் 7ல் ஒரு குடும்பத்தினர் தங்களுக்கு தேவையான உணவு கிடைக்காமல் தவித்தனர். உணவு கிடைக்காதவர்கள் எண்ணிக்கை 56 லட்சமாக அதிகரித்தது. கடந்த 1995க்கு பிறகு உணவு கிடைக்காமல் பசியால் வாடுவோர் எண்ணிக்கை 2009ல் அதிகமாக இருந்தது.

கார்த்திகை 18, 2010

அம்பாந்தோட்டை

மாகம்புர துறைமுகத்தில் முதலாவது கப்பல் இன்று நங்கூரமிடும் நிகழ்வு

அம்பாந்தோட்டை, மாகம்புர சர்வதேச துறைமுகத்தின் முதலாவது கட்ட நிர்மாணப் பணிகளின் நிறைவும் முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்தடையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வும் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 10 மணிக்கு மாகம்புர துறைமுக வளாகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிதியாகக் கலந்துகொள்வார். துறைமுக விமான சேவைகள் பிரதி அமைச்சர்களான தயாசிரி திசேரா மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருடன் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 18, 2010

திருமலையில் உல்லாசப் பயணிகளுடன் பிரான்ஸ் கப்பல்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லீ. டயமன்ட் உல்லாசப் பயணிகள் கப்பல் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திருகோணமலை அஸ்ரப் துறை முகத்தை சென்றடைந்தது. 77 பயணிகளுடன் இக்கப்பல் 14 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது.15ஆம் திகதி காலி துறைமுகம் சென்ற கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தை அடைந்துள்ளது. பிரெஞ்சு (சி.எம்.ஏ, சி.ஜி.எம்.) நிறுவனம் உலகத்தில் 3ஆவது கண்டெய்னர் சிப்பிங் நிறுவனமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 18, 2010

உலக வல்லரசுகளின் நாணயப் போர்

சீனப் பிரதமர் வென் ஜியாபோ ஆற்றிய உரை ஒன்றில் ஐரோப்பிய அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு சீன நாணயம் முக்கிய மறுமதிப்பீடு செய்யவேண்டும் என்ற ஒபாமா பிரச்சாரத்தில் சேர்க்க வேண்டாம் என்று முறையிட்டார். அத்தகைய நாணய மாற்றம் பல சீன ஏற்றுமதியாளர்களைத் திகைப்பில் ஆழ்த்திவிடும் என்று சுட்டிக்காட்டிய அவர், “சீனா அதனுடைய பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டால், அது உலகிற்குப் பேரழிவைத் தரும்” என்று எச்சரித்தார். (மேலும்....)

கார்த்திகை 18, 2010

உயர்ந்த இலக்கை நிர்ணயித்தது வியட்நாம் நாடாளுமன்றம்

வியட்நாமின் சமூகப் பொருளாதார இலக்குகள் அடுத்தாண்டில் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை வியட்நாம் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதல் வாரம் முழுவதும் நடைபெற்ற இந்த விவாதத்தின் முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 முதல் 7.5 விழுக்காடு வரையில் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பேரியல் பொருளாதார நிலைத்தன்மை, பணவீக்கக்கட்டுப்பாடு, வளர்ச்சிக்கான மாதிரியை புதுப்பிப்பது மற்றும் தேசியப் பொருளாதாரக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவது ஆகிய பணிகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை வியட்நாம் நாடாளுமன்றம் முன்வைத்துள்ளது. (மேலும்....)

கார்த்திகை 18, 2010

இஸ்ரேலை பாதுகாக்கும் அமெரிக்கா

மேற்கு ஆசியாவில் நேட்டோ படைகளின் ஏவுகணைத்தடுப்புத்திட்டத்தைக் கொண்டு வர அமெரிக்கா முயற்சி செய்வது இஸ்ரே லைப் பாதுகாக்கவே என்று ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர் பாளர் ராமின் மெஹ்மன் பராஸ்ட் கருத்து தெரிவித் துள்ளார். இது குறித்து தனது வழக் கமான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்தத்திட்டத்தை மேற்காசி யாவில் அமைப்பது பற்றி ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றன. ஆக்கிரமிப்பு மற்றும் குற்றங்களைத் தொடர்ந்து செய்து கொண் டிருக்கும் இஸ்ரேலைப் பாதுகாக்கவே இது என்பது தான் பிரதானமான சந்தே கமாகும். இப்போதைக்கு இந்தத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு துருக்கி யிடம் அமெரிக்கா கூறி வருகிறது. மேற்காசியாவில் இந்தத்திட்டம் வராமல் தடுக்க இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுக ளும் ஒத்துழைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேட்டோ கூட்டத்தில் தனது முடிவை துருக்கி அறிவிக்கப்போகிறது.

கார்த்திகை 17, 2010

ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள்

இந்நாட்டு முஸ்லிம்களுக்கு இவ்வருட ஹஜ்ஜுப் பெருநாள் முக்கியமான பெருநாளாகும். அதி லும் வட மாகாணத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம் கள் இருபது வருடங்களுக்கு பின்னர் தமது சொந்த மண்ணில் கொண்டாடும் முதலாவது பெருநாளாக இது அமைந்திருக்கிறது. இந்நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக நிலவிய பய ங்கரவாதம் காரணமாக முஸ்லிம்கள் தங்கள் பெருநாட் களையும் அச்சம், பீதியுடனேயே கொண்டாடி வந்தனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடம் பயங்கர வாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டியது. இதன் பய னாக அச்சம், பீதியின்றி நடமாடக் கூடிய சூழல் மாத் திரமல்லாமல் சந்தோஷமாகப் பெருநாட்களைக் கொண் டாடக் கூடிய நிலைமையும் உருவாக்கப்பட்டிருக்கின் றது. இச்சூழலை ஏற்படுத்தி தந்துள்ள ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவுக்கு வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் உட் பட முழு நாட்டு முஸ்லிம்களும் இந்நன்நாளிலும் நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள். (மேலும்....)

கார்த்திகை 17, 2010

Will Mulankavil becomes the next Vanni?

(Lenin Benedict-Toronto)

 

What was the necessity to allow the former Terrorist to control a vast area under his control?

As K.P says, he is trying to do farming with the rehabilitated LTTE cadres, what about out Government ministries and its agencies are doing? If criminals like K.P has the capability, why not our government ministries and agencies? Are we creating a Vanni again? As we already know, the Tamil Diaspora will be always ready to support for a arm struggle to create a Tamil Eelam, what was the reason to bring the rehabilitated LTTE cadres under K.P control and create farms and camps? Are we creating an atmosphere that Terrorist to take control of our vital areas in the North with the help of ruling elites? (more...)

ஜே.வி.பியினரும் புலிகளும் ஒருவரில் ஒருவர் சவாரி செய்யும் வன்முறை அரசியல் பிராணிகள்!

(வி.சின்னத்தம்பி) (யாழ்ப்பாணம்)

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் சம்பந்தமாக, ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்வதற்காக சென்றிருந்த ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியும், வேறு இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ள சம்பவம் பலத்த கண்டனத்துக்குரியது. ஒரு ஜனநாயக நாட்டில் தமது எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவிப்பதற்கு பிரஜைகளுக்கு உள்ள சட்டபூர்வமான உரிமையை இது மீறுவதாகவுள்ளது. ஜே.வி.பி கடந்த காலங்களில் வன்முறைப் பாதையில் பயணித்ததையும், பல்லாயிரக் கணக்கானோரைப் படுகொலை செய்ததையும், ஏனையோரின் மனித உரிமைகளை காலில் போட்டுத் துவம்சம் செய்ததையும் காரணம் காட்டி, அவர்களுக்கு எதிராக தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட வன்முறையை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது. (மேலும்....)

கார்த்திகை 17, 2010

இந்தியாவும் இலங்கையும் காட்டும் புலிப் ‘பூச்சாண்டி’

(கே. சஞ்சயன்)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடிப்படை இராணுவ, அரசியல் கட்டமைப்புகள் எல்லாமே முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம் மே மாதத்துடன் முற்றாக அழிந்து போய் விட்டன. அதை மீளப் புனரமைப்பதற்கு அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதன் புலிகள் இயக்கத்துக்குத் தலைமையேற்று வழிநடத்த முற்பட்டபோது, இலங்கையின் புலனாய்வுப் பிரிவு அவரை மலேஷியாவில் பிடித்துக் கொழும்புக்குக் கொண்டு வந்து சேர்த்தது. அதன் பின்னர் புலிகள் இயக்கத்தை வெளிநாடுகளில்  இயங்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. வன்னியில் புலிகள் அமைப்பு வலுவாக இயங்கிய காலத்தில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட நிதி சேகரிப்புக் கட்டமைப்புத் தான் இப்போதும் இருக்கிறது. அதற்குப் பெரியளவிலான அரசியல் பின்னணியோ தலைமை தாங்கும் ஆற்றலோ இல்லை. அதன் அடிப்படை நோக்கம் நிதி சேகரிப்பு மட்டுமே. (மேலும்....)

கார்த்திகை 17, 2010

How to Tame the LTTE Diaspora?

(Kumar Moses)

The LTTE Diaspora is spread in the developed world in sizable numbers. Given their huge numbers coupled with hard currency earnings which is many times that of a Sri Lankan resident, their financial clout is much higher than what Sri Lanka can utilise in their country. Our diplomatic missions are funded by the government of Sri Lanka and funds are limited. Compared to our diplomatic missions, Tamil Elamist sections are very resourceful. They use it against our interests very effectively. Assuming there are 350,000 Tamils in Canada and 250,000 in the UK as of today, using their average GDP per capita figures, the Tamil Diaspora in these countries alone add up to US$24 billion! Of course not every one of them may be earning the average but it is a reasonable estimation of their financial clout. In addition there is a massive Tamil Diaspora in many western European countries. US$24 billion is more than half the Sri Lanka’s GDP. (more....)

கார்த்திகை 17, 2010

ஜே.வி.பி.யினர், கட்சியினர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்!
 

யுத்த காலங்களில் காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்படோர் குறித்த பெயர் விபரங்களை வெளியிடுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஜனாநாயக ரீதியிலான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக ஜே.வி.பி.யினர் கொண்டிருக்கும் கொள்கையில் எமக்கு உடன்பாடு இல்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 1987ம் ஆண்டு இணைக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களை (வடகிழக்கு மாகாணங்கள்) பிரிப்பதற்கு நீதிமன்றம் சென்றவர்கள் ஜே.வி.பி.யினர். இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, அடிப்படை உரிமையையும் நிராகரித்தவர்கள். ஆகவே அரசியல் ரீதியாக எமது கட்சிக்கும் அவர்களுக்கும் இடையில் அதிக முரண்பாடுகள் உள்ளன. (மேலும்....)

கார்த்திகை 17, 2010

Some of those escaping LTTE came without clothes on: Maj. Gen. Shavendra Silva

‘White Flag’ Trial-at-Bar

(By Shamindra Ferdinando)

Sri Lanka’s Deputy Permanent Representative to the UN Maj. Gen. Shavendra Silva on Monday (Nov. 15) said that some of those who surrendered to the advancing troops on the Vanni east front had come running even without clothes on. The former General Officer Commanding (GOC) of the Task Force I/58 Division said that people had approached troops waiving their hands. Among them had been LTTE cadres, both men and women and the Army had accommodated all of them regardless of whether they carried white or black flags. (more...)

கார்த்திகை 17, 2010

மினுமினுத்துக் கொண்டிருந்த கம்பிகளை கதறக் கதற ஏற்றினர்''

மனைவியின் கையில் மினு மினுத்துக் கொண்டிருந்த சிறு கம்பிகளை நான் கதறக் கதற என் உடலில் ஏற்றினார்கள். எனக்கு எதுவும் விளங்கவில்லை. அவர்களின் சிறு குழந்தை கீழே விழுந்தவுடன் என்னை விட்டுச் சென்றுவிட்டார்கள். என் கைகளிலிருந்தும் கால்களிலிரு ந்தும் இரத்தம் வந்து கொண்டிருந்தது. அங்கே இருந்தவர்களிடம் இவ் விடயத்தைப் போய் சொன்னேன். அவர்கள் இவர்களை கடும்வார்த்தைக ளால் பேசினர். வீட்டுக்காரரின் தாயுடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு அவர்கள் என்னை என் நாட்டுக்கு அனுப்புமாறு கோரினர். அதன்படி இலங்கை நாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்துடன் தொடர்புடைய குவைத் வேலை வாய்ப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டேன். குருநாகல் கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பலங்க தல்கொட பிடியவைச் சேர்ந்த 38 வயதுடைய மீனாட்சி லெட்சுமி தமக்கெனச் சொந்த வீடொன்றைக் கட்டிக் கொள்வதற்காக குவைத் நாடு சென்று தம் கை, கால்களில் கம்பிகளால் குத்தப்பட்டு சித்திர வதைக்குள்ளான நிலையில் நாடு திரும்பி தற்பொழுது குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். (மேலும்....)

கார்த்திகை 17, 2010

இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினை என்ற நெடுநாளைப் பட்டியலில் இருந்து, காஷ்மீர் பெயரை ஐ. நா. நீக்கியுள்ளது.

இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினை என்ற நெடுநாளைப் பட்டியலில் இருந்து, காஷ்மீர் பெயரை ஐ. நா. நீக்கியுள்ளது. இவ்விவகாரம், பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஐ. நா வின் இச்செயலை இந்தியா வரவேற்றுள்ளது. பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் இருந்து ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கான தலைமையைப் பிரிட்டன் ஏற்றுள்ளது. இந்நிலையில், ஐ.நா வின் பொதுக்குழுக் கூட்டம் பிரிட்டன் தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தில் சர்வதேச அரசியலில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைக்குரிய பகுதிகளின் பெயர்ப் பட்டியலில் இருந்து காஷ்மீர் பெயர் நீக்கப்பட்டது. காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்பது பாகிஸ்தானின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் காஷ்மீர் தனது ஒருங்கிணைந்த பகுதி என்பதால், பாகிஸ்தானுடன் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்கள் தலையீடு தேவையில்லை என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. (மேலும்....)

கார்த்திகை 17, 2010

நாவற்குழியிலிருந்து வெளியேறுமாறு அத்துமீறிக் குடியேறியவர்களிடம்  அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை

யாழ்ப்பாணம் நாவற்குழியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (16) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சர் விமல் வீரவன்சவும் தம்மிடம் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த முயற்சியில் ஈடுபடுவதாக அமைச்சர் கூறினார். யாழ்ப்பாணம் நாவற்குழியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள சிங்கள மக்களைச்சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி நல்லதோர் முடிவை ஏற்படுத்த அங்கிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்குமாறு ஜனாதிபதியும் அமைச்சர் விமல் வீரவன்சவும் என்னுடன் காலையில் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 17, 2010

ரிஸானாவின் உயிர் காக்க இராஜதந்திர முயற்சிகள் துரிதம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இராஜதந்திர ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார். உத்தியோகப்பற்றற்ற முறையில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின்றபோதிலும், ரிசானாவைக் காப்பாற்ற அரசாங்கம் தொடர்ச்சியான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜயசேகர தெரிவித்தார். றிசானாவுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னருக்குக் கருணை மனுவொன்றை ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து, குறித்த வீட்டுரிமையா ளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மன்னர் தமது அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சவூதி அரேபிய அரசிடமிருந்து இன்னும் உத்தியோகபூர்வமான பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லையென்று வெளிவிவார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

கார்த்திகை 17, 2010

நஞ்சருந்திய நான்கு மாணவிகள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி  

யாழ்.வலிகாமம் கல்வி வலய பாடசாலையொன்றைச் சேர்ந்த நான்கு மாணவிகள் நச்சுத்தன்மை கொண்ட பதார்த்தத்தை உட்கொண்டதால் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையைச் சேர்ந்த க.பொ.த சாதாரண மாணவிகளை நேற்று முன்தினம் சம்பவம் ஒன்று தொடர்பாக அதிபர் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து நேற்று பாடசாலைக்கு வரும்போது தம்முடன் எடுத்து வந்த மென் பானத்துடன் பாடசாலையில் இருந்த சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட திரவத்தைக் கலந்து உட்கொண்டுள்ளனர். இதனால் மயக்கமடைந்தனர். இதனைக் கண்ட ஏனைய மாணவர்கள் அதிபர், ஆசிரியர் உதவியுடன் சங்கானை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.இச் சம்பவம் குறித்து யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்த்திகை 17, 2010

ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள்

இந்நாட்டு முஸ்லிம்களுக்கு இவ்வருட ஹஜ்ஜுப் பெருநாள் முக்கியமான பெருநாளாகும். அதி லும் வட மாகாணத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம் கள் இருபது வருடங்களுக்கு பின்னர் தமது சொந்த மண்ணில் கொண்டாடும் முதலாவது பெருநாளாக இது அமைந்திருக்கிறது. இந்நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக நிலவிய பய ங்கரவாதம் காரணமாக முஸ்லிம்கள் தங்கள் பெருநாட் களையும் அச்சம், பீதியுடனேயே கொண்டாடி வந்தனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடம் பயங்கர வாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டியது. இதன் பய னாக அச்சம், பீதியின்றி நடமாடக் கூடிய சூழல் மாத் திரமல்லாமல் சந்தோஷமாகப் பெருநாட்களைக் கொண் டாடக் கூடிய நிலைமையும் உருவாக்கப்பட்டிருக்கின் றது. இச்சூழலை ஏற்படுத்தி தந்துள்ள ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவுக்கு வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் உட் பட முழு நாட்டு முஸ்லிம்களும் இந்நன்நாளிலும் நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள். (மேலும்....)

கார்த்திகை 17, 2010

Will Mulankavil becomes the next Vanni?

(Lenin Benedict-Toronto)

 

What was the necessity to allow the former Terrorist to control a vast area under his control?

As K.P says, he is trying to do farming with the rehabilitated LTTE cadres, what about out Government ministries and its agencies are doing? If criminals like K.P has the capability, why not our government ministries and agencies? Are we creating a Vanni again? As we already know, the Tamil Diaspora will be always ready to support for a arm struggle to create a Tamil Eelam, what was the reason to bring the rehabilitated LTTE cadres under K.P control and create farms and camps? Are we creating an atmosphere that Terrorist to take control of our vital areas in the North with the help of ruling elites? (more...)

ஜே.வி.பியினரும் புலிகளும் ஒருவரில் ஒருவர் சவாரி செய்யும் வன்முறை அரசியல் பிராணிகள்!

(வி.சின்னத்தம்பி) (யாழ்ப்பாணம்)

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் சம்பந்தமாக, ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்வதற்காக சென்றிருந்த ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியும், வேறு இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ள சம்பவம் பலத்த கண்டனத்துக்குரியது. ஒரு ஜனநாயக நாட்டில் தமது எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவிப்பதற்கு பிரஜைகளுக்கு உள்ள சட்டபூர்வமான உரிமையை இது மீறுவதாகவுள்ளது. ஜே.வி.பி கடந்த காலங்களில் வன்முறைப் பாதையில் பயணித்ததையும், பல்லாயிரக் கணக்கானோரைப் படுகொலை செய்ததையும், ஏனையோரின் மனித உரிமைகளை காலில் போட்டுத் துவம்சம் செய்ததையும் காரணம் காட்டி, அவர்களுக்கு எதிராக தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட வன்முறையை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது. (மேலும்....)

கார்த்திகை 17, 2010

இந்தியாவும் இலங்கையும் காட்டும் புலிப் ‘பூச்சாண்டி’

(கே. சஞ்சயன்)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடிப்படை இராணுவ, அரசியல் கட்டமைப்புகள் எல்லாமே முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம் மே மாதத்துடன் முற்றாக அழிந்து போய் விட்டன. அதை மீளப் புனரமைப்பதற்கு அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதன் புலிகள் இயக்கத்துக்குத் தலைமையேற்று வழிநடத்த முற்பட்டபோது, இலங்கையின் புலனாய்வுப் பிரிவு அவரை மலேஷியாவில் பிடித்துக் கொழும்புக்குக் கொண்டு வந்து சேர்த்தது. அதன் பின்னர் புலிகள் இயக்கத்தை வெளிநாடுகளில்  இயங்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. வன்னியில் புலிகள் அமைப்பு வலுவாக இயங்கிய காலத்தில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட நிதி சேகரிப்புக் கட்டமைப்புத் தான் இப்போதும் இருக்கிறது. அதற்குப் பெரியளவிலான அரசியல் பின்னணியோ தலைமை தாங்கும் ஆற்றலோ இல்லை. அதன் அடிப்படை நோக்கம் நிதி சேகரிப்பு மட்டுமே. (மேலும்....)

கார்த்திகை 17, 2010

How to Tame the LTTE Diaspora?

(Kumar Moses)

The LTTE Diaspora is spread in the developed world in sizable numbers. Given their huge numbers coupled with hard currency earnings which is many times that of a Sri Lankan resident, their financial clout is much higher than what Sri Lanka can utilise in their country. Our diplomatic missions are funded by the government of Sri Lanka and funds are limited. Compared to our diplomatic missions, Tamil Elamist sections are very resourceful. They use it against our interests very effectively. Assuming there are 350,000 Tamils in Canada and 250,000 in the UK as of today, using their average GDP per capita figures, the Tamil Diaspora in these countries alone add up to US$24 billion! Of course not every one of them may be earning the average but it is a reasonable estimation of their financial clout. In addition there is a massive Tamil Diaspora in many western European countries. US$24 billion is more than half the Sri Lanka’s GDP. (more....)

கார்த்திகை 17, 2010

ஜே.வி.பி.யினர், கட்சியினர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்!
 

யுத்த காலங்களில் காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்படோர் குறித்த பெயர் விபரங்களை வெளியிடுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஜனாநாயக ரீதியிலான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக ஜே.வி.பி.யினர் கொண்டிருக்கும் கொள்கையில் எமக்கு உடன்பாடு இல்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 1987ம் ஆண்டு இணைக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களை (வடகிழக்கு மாகாணங்கள்) பிரிப்பதற்கு நீதிமன்றம் சென்றவர்கள் ஜே.வி.பி.யினர். இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, அடிப்படை உரிமையையும் நிராகரித்தவர்கள். ஆகவே அரசியல் ரீதியாக எமது கட்சிக்கும் அவர்களுக்கும் இடையில் அதிக முரண்பாடுகள் உள்ளன. (மேலும்....)

கார்த்திகை 17, 2010

Some of those escaping LTTE came without clothes on: Maj. Gen. Shavendra Silva

‘White Flag’ Trial-at-Bar

(By Shamindra Ferdinando)

Sri Lanka’s Deputy Permanent Representative to the UN Maj. Gen. Shavendra Silva on Monday (Nov. 15) said that some of those who surrendered to the advancing troops on the Vanni east front had come running even without clothes on. The former General Officer Commanding (GOC) of the Task Force I/58 Division said that people had approached troops waiving their hands. Among them had been LTTE cadres, both men and women and the Army had accommodated all of them regardless of whether they carried white or black flags. (more...)

கார்த்திகை 17, 2010

மினுமினுத்துக் கொண்டிருந்த கம்பிகளை கதறக் கதற ஏற்றினர்''

மனைவியின் கையில் மினு மினுத்துக் கொண்டிருந்த சிறு கம்பிகளை நான் கதறக் கதற என் உடலில் ஏற்றினார்கள். எனக்கு எதுவும் விளங்கவில்லை. அவர்களின் சிறு குழந்தை கீழே விழுந்தவுடன் என்னை விட்டுச் சென்றுவிட்டார்கள். என் கைகளிலிருந்தும் கால்களிலிரு ந்தும் இரத்தம் வந்து கொண்டிருந்தது. அங்கே இருந்தவர்களிடம் இவ் விடயத்தைப் போய் சொன்னேன். அவர்கள் இவர்களை கடும்வார்த்தைக ளால் பேசினர். வீட்டுக்காரரின் தாயுடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு அவர்கள் என்னை என் நாட்டுக்கு அனுப்புமாறு கோரினர். அதன்படி இலங்கை நாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்துடன் தொடர்புடைய குவைத் வேலை வாய்ப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டேன். குருநாகல் கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பலங்க தல்கொட பிடியவைச் சேர்ந்த 38 வயதுடைய மீனாட்சி லெட்சுமி தமக்கெனச் சொந்த வீடொன்றைக் கட்டிக் கொள்வதற்காக குவைத் நாடு சென்று தம் கை, கால்களில் கம்பிகளால் குத்தப்பட்டு சித்திர வதைக்குள்ளான நிலையில் நாடு திரும்பி தற்பொழுது குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். (மேலும்....)

கார்த்திகை 17, 2010

இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினை என்ற நெடுநாளைப் பட்டியலில் இருந்து, காஷ்மீர் பெயரை ஐ. நா. நீக்கியுள்ளது.

இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினை என்ற நெடுநாளைப் பட்டியலில் இருந்து, காஷ்மீர் பெயரை ஐ. நா. நீக்கியுள்ளது. இவ்விவகாரம், பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஐ. நா வின் இச்செயலை இந்தியா வரவேற்றுள்ளது. பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் இருந்து ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கான தலைமையைப் பிரிட்டன் ஏற்றுள்ளது. இந்நிலையில், ஐ.நா வின் பொதுக்குழுக் கூட்டம் பிரிட்டன் தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தில் சர்வதேச அரசியலில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைக்குரிய பகுதிகளின் பெயர்ப் பட்டியலில் இருந்து காஷ்மீர் பெயர் நீக்கப்பட்டது. காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்பது பாகிஸ்தானின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் காஷ்மீர் தனது ஒருங்கிணைந்த பகுதி என்பதால், பாகிஸ்தானுடன் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்கள் தலையீடு தேவையில்லை என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. (மேலும்....)

கார்த்திகை 17, 2010

நாவற்குழியிலிருந்து வெளியேறுமாறு அத்துமீறிக் குடியேறியவர்களிடம்  அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை

யாழ்ப்பாணம் நாவற்குழியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (16) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சர் விமல் வீரவன்சவும் தம்மிடம் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த முயற்சியில் ஈடுபடுவதாக அமைச்சர் கூறினார். யாழ்ப்பாணம் நாவற்குழியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள சிங்கள மக்களைச்சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி நல்லதோர் முடிவை ஏற்படுத்த அங்கிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்குமாறு ஜனாதிபதியும் அமைச்சர் விமல் வீரவன்சவும் என்னுடன் காலையில் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 17, 2010

ரிஸானாவின் உயிர் காக்க இராஜதந்திர முயற்சிகள் துரிதம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இராஜதந்திர ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார். உத்தியோகப்பற்றற்ற முறையில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின்றபோதிலும், ரிசானாவைக் காப்பாற்ற அரசாங்கம் தொடர்ச்சியான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜயசேகர தெரிவித்தார். றிசானாவுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னருக்குக் கருணை மனுவொன்றை ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து, குறித்த வீட்டுரிமையா ளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மன்னர் தமது அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சவூதி அரேபிய அரசிடமிருந்து இன்னும் உத்தியோகபூர்வமான பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லையென்று வெளிவிவார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

கார்த்திகை 17, 2010

நஞ்சருந்திய நான்கு மாணவிகள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி  

யாழ்.வலிகாமம் கல்வி வலய பாடசாலையொன்றைச் சேர்ந்த நான்கு மாணவிகள் நச்சுத்தன்மை கொண்ட பதார்த்தத்தை உட்கொண்டதால் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையைச் சேர்ந்த க.பொ.த சாதாரண மாணவிகளை நேற்று முன்தினம் சம்பவம் ஒன்று தொடர்பாக அதிபர் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து நேற்று பாடசாலைக்கு வரும்போது தம்முடன் எடுத்து வந்த மென் பானத்துடன் பாடசாலையில் இருந்த சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட திரவத்தைக் கலந்து உட்கொண்டுள்ளனர். இதனால் மயக்கமடைந்தனர். இதனைக் கண்ட ஏனைய மாணவர்கள் அதிபர், ஆசிரியர் உதவியுடன் சங்கானை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.இச் சம்பவம் குறித்து யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்த்திகை 16, 2010

படிப்படியான வளர்ச்சிக்கூடாக அரசியல் தீர்வு

புலிகள் பேச்சுவார்த்தையைச் சரியாகப் பயன்படுத்தாத தால் அனர்த்தங்கள் ஏற்பட்டன என்ற கருத்தைச் சற்று ஆழமாகச் சென்று பார்க்க வேண்டும். புலிகள் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தாததற்கான காரணம் அவர்கள் பற்றி நின்ற பிழையான கொள்கை. எவ்விதத்திலும் நடை முறைச் சாத்தியமற்ற தனிநாட்டுக் கொள்கையை அவர்கள் பற்றி நின்றார்கள். தனிநாடு அமைக்க முடியும் என்ற கற்பனையில் வாழ்ந்ததாலேயே பேச்சுவார்த்தையை முறித்தார்கள். இவ்விடயத்தில் புலிகளை மாத்திரம் குறைசொல்வதில் அர்த்தமில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூடத் தனிநாட்டு மாயைக்குள் சிக்கியிருந்தவை என்பதால், தமிழ் மக்க ளுக்கு ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு அக்கட்சிகளும் பொறுப்பாளிகளே. (மேலும்....)

கார்த்திகை 16, 2010

ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம்  - சுனில் அந்துன்னெட்டி _

யாழ்ப்பாணம் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இல்லை; சில ஆயுதக் குழுக்களே கட்டுப்பாட்டைத் தம் கையில் எடுத்துள்ளனர் என்று ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்னெட்டி தெரிவித்துள்ளார். சற்று முன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் சில ஆயுதக் குழுக்கள் செயற்படுகின்றன. சில இடங்களை அவர்கள் தான் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர். இந்த ஆயுதக் குழுக்களால் தமது பாதுகாப்புக்கே உத்தரவாதமற்ற நிலை காணப்படுவதாக பொலிஸார் எம்மிடம் கூறுகின்றனர்" என்றார்.

கார்த்திகை 16, 2010

ஜே.வி.பியின் ஆர்ப்பாட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் பொது மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்னால் நேற்று ஜே. வி. பியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் பொது மக்களால் குழப்பப்பட்டது. ஜே. வி. பி.யின் ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. நேற்றுப் பிற்பகல் 1.30 மணிக்கு யாழ். பஸ் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் பொதுமக்கள் தக்காலி மற்றும் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தைக் குழப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, செயலாளர் ரில்வின் சில்வா, கட்சி முக்கியஸ்தரான சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர். மனிதாபிமான இராணுவ நடவடிக் கையின் போது கைது செய்யப்பட்டு சிறை யில் வைக்கப்பட்டிருப்பவர்கள் எனக் கூறப்படுபவர்களை விடுவிக்கும்படி அரசைக்கோரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஜே. வி. பி யினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கார்த்திகை 16, 2010

சரணடைய வந்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை

வன்னியில் நடைபெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது சரணடைந்த புலிகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது எனப் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இராணுவத்துக்குத் தெளிவான அறிவுறுத்தலை வழங்கியிருந்ததாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் நேற்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் சாட்சியமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 16, 2010

அவுஸ்திரேலியர்களிடையே பிரபலமாகி வரும் யோகா

இந்தியாவில் புகழ்பெற்றுள்ள யோகாக் கலை அவுஸ்திரேலியர்களி டையே நல்ல வரவேற்பினை பெற்றுள் ளது. யோகா கற்றுக் கொள்வதால் ஆஸ்மா குறைவதுடன், புகை, மது பழக்கம் குறைந்து வருவதாக அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சியிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமான கலையான யோகா பல்வேறு ஆசனங்களின் வாயிலாக உடல் உறுப்புகளுக்கு வலு சேர்க்கிறது. இதனால் அவுஸ்திரேலியா உடற்பயிற்சிக்கான கலைகளில் மிகவும் பிரபலமான யோகா கலையினை 13வது உடற்பயிற்சி கலையாக இணைத்துள்ளது. இது குறித்து சிட்னியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கூறுகையில், யோகாவினால் நரம்புத் தளர்ச்சி குறைவு, இரத்த அழுத்தம் சீரடைதல் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் கவனக்குறைவினை கட்டுப்படுத்தப்படுகிறது. இது இளம் பருவத்தினருக்கு மன அமைதியினையும் ஏற்படுத்துகிறது. உடல் எடையைக் குறைப்பதுடன், உடலை நல்ல மனநிலையில் வைத்திருக்க உதவுகிறது என சிடி மோர்னிங் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கார்த்திகை 16, 2010

இராணுவ நடவடிக்கைகளின் தீவிரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்துக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் தீவிரத்தை அமெரிக்கா குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்சாய் கேட்டுக் கொண்டு இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகிறது. அமெரிக்காவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகள் இராணுவத்தை அனுப்பி உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் கூடுதல் இராணுவம் அனுப்பப்பட்டு உள்ளது. அமெரிக்க இராணுவம் இரவு நேரங்களில் சோதனை நடத்தி தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வருகிறது. கடந்த 3 மாதங்களில் நடந்த அதிரடி சோதனைகளில் பிடிபட்டவர்கள் மற்றும் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை 328 தீவிரவாதிகள் ஆவார்கள். (மேலும்....)

கார்த்திகை 16, 2010

உலகில் சூழல் பாதுகாப்பில் நாம் முன்னணியில் இருக்கிறோம் - ஜனாதிபதி

உலகில் இன்று பாரிய சவாலாக உள்ளது புவி வெப்பமயமாகும் பிரச்சினை. இந்த சவாலை உலகத்துக்கு ஏற்படுத்தியவர்கள் மனிதர்களேயாவர். அபிவிருத்தியடைந்த நாடுகள் பெருமளவு காபன் வாயுவை சூழலுக்கு வெளியிடுகின்றன. எமது நாட்டில் மிகவும் சிறிய அளவு காபன் வாயுவே வெளியேற்றப்படுகிறது. இதன்படி, உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளை விட நாம் சூழல் பாதுகாப்பில் முன்னணியில் இருக்கிறோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 16, 2010

ஜேவிபி குழுவினர் மீதான தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவம் - மனோ கணேசன் _

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் வீட்டில் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருந்த ஜேவிபி எம்பி சுனில் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட குழுவினர் மீது நடத்தப்பட்டுள்ள வன்முறை தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவமாகும் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஜேவிபி குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.(மேலும்....)

கார்த்திகை 15, 2010

எல்.ரீ.ரீ.ஈ. விரைவில் வன்முறையுடன் மீண்டும் வருமா?

புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் முன்னர் நாசவேலைகளில் ஈடுபட பாதுகாப்புப் படையை சேர்ந்த பலருக்கு பணங்கொடுத்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான முயற்சிகள் படுதோல்வியிலேயே முடிந்தன. படைவீரர்கள் அல்லது முன்னாள் படைவீரர்களிடம் உள்ள உண்மையான தேசப்பற்று இந்த முயற்சிகளை முறியடிக்கும். சரத்பொன்சேகா நடத்தப்படும் முறைப்பற்றி கோபங்கொண்டுள்ள எவரேனும் ஒரு முன்னாள் இராணுவ வீரர்கூட இந்த வேலையைச் செய்யமாட்டார். இதைவிட முக்கியமானது நாட்டின் பாதுகாப்பு நிலை உறுதியான கட்டுப்பாட்டில் உள்ளது என்பதாகும். பேரளவிலான நாசவேலை சாத்தியமில்லை. இந்த எச்சசொச்ச எல்.ரீ.ரீ.ஈ.யினரால் கற்பனை செய்யப்படும் கடல்வழி ஆக்கிரமிப்பும் சாத்தியமற்றதே. ஒரு சிறு தாக்குதல் படை தரையிரங்கி ஊடுருவினாலும்  இது நீண்டகாலம் தப்பிப் பிழைத்திருக்காது. இதுவே தற்போதைய இராணுவ யதார்த்தம். இந்த பின்னணயில் நோக்கும்போது இலங்கை மீது இராணுவ தாக்குதலை நடத்தவென வெளிநாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ தொழில்படுநர்கள் பணம் சேகரிக்க முயல்வது, புலம் பெயர்ந்த ஏமாளிகளிடமிருந்து பணத்தை தந்திரமாக பெறும் பெரும் ஏமாற்று வேலையின் ஒரு பகுதியேயாகும். புலம் பெயர்ந்தோரில் ஒரு பகுதியினரிடம் இலங்கை அரசாங்கத்தின் மீது காணப்படும் குருட்டுத்தனமான வெறுப்பும் கோபமும் காணப்படும் பின்னணியில் கற்பனை செய்யப்படும் இந்த திட்டத்துக் குறிப்பிட்ட ஒரு தொகையை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், இந்த திட்டம் எழுச்சிபெறவோ அல்லது சாத்தியமாகவோ முடியாது. (மேலும்....)

கார்த்திகை 15, 2010

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்ற வேண்டும்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்னர் பலவந்தமாக விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை உரிய முறையில் அங்கு மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் சார்பில் சாட்சியமளித்தவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு சாட்சியமளித்தவர்களில் ஒருவராகிய சர்மிளா ஹனிபா வடமாகாணத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இல்லை என்பதை அவர் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார். (மேலும்....)

கார்த்திகை 15, 2010

'ஏன் யாழ்ப்பாணம் வந்தீர்கள் எனக் கேட்டு தாக்கினார்கள்'

மோட்டார் சைக்கிளில் வந்த பலர், 'ஏன் யாழ்ப்பாணம் வந்தீர்கள் என சிங்களத்தில் கேட்டுத் தாக்கினார்கள்' என ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ராஜ லலித் குமார் தெரிவித்தார். இன்று மாலை ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ராஜா லலி;த் குமார் மற்றும் லங்கா பத்திரிகை ஊடகவியலாளர் லியனகே ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கூறுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார். நாளை யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள 'நாம் இலங்கையர்' என்ற அமைப்பின் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 10 பேர் இத்தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார். இதேவேளை இத்தாக்குதல் தொடர்பாக யாழ். பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சமன் சிகேராவிடம் கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெட்டியின் யாழ் விஜயம் தொடர்பாக யாழ். பொலிஸாருக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார். நாளைய ஆர்ப்பாட்டம் குறித்தும் தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியின் கருத்தைப் பெறுவதற்கு  மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

கார்த்திகை 15, 2010

அடுத்த முறையும் தி.மு.க. ஆட்சி தான்!

அடுத்த முறையும் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையும் உறுதியும் உள்ளது என ஓசூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஓசூர் காமராஜர் காலனி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மகளிர் சுய உதவி குழுவுக்கு சுழல்நிதி மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. துணை முதல்வர் ஸ்டானின் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் 101 பயனாளிகளுக்கு கொன்கிaட் வீட்டுச் சாவி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது; கடந்த காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் சுமூக நலத்துறையில் இருந்தது. ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டது முதல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயற்பாடு வளர்ச்சியடைந்துள்ளன. (மேலும்....)

கார்த்திகை 15, 2010

ஜனநாயகமும் விடுதலையாகுமா? 

21 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோதிலும் மியான்மர் நாட்டில் ஜனநாயகத்தை மீட்கவேண்டும் என்ற இலட் சியத்தை அவர் விட்டு விடவில்லை. ஜனநாயகத் தின் மீதான அவரது தணியாத தாகம் தொடர்கிறது. அவர் விடுதலை செய்யப்பட்டாலும் அந்நாட்டில் ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம் இன்னும் முற்றுப்பெறவில்லை. ஆங் சான் சூ கி விடுதலையாகி இருப்பதால் மியான்மர் மக்கள் இனி இரட்டை எழுச்சியுடன் போராடுவார்கள். இதனால் மியான்மரில் உள்ள ராணுவ அடக்கு முறை ஆட்சியின் ஆயுட்காலம் அற்ப ஆயுளில் முடிவது நிச்சயம். துப்பாக்கி துணையுடன் எவ் வளவு நாட்கள் ஆட்சி நடத்தமுடியும் என்பதை அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் ஆங் சான் சூ கியை விடுதலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 15, 2010

ஈராக்கில் புதிய கூட்டணி அரசில் விரிசல்

ஈராக்கில் அனைத்து வகுப்பினரையும் உள்ளடக்கி அமைக்கப்பட்ட புதிய கூட்டணி அரசில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத தேர்தலுக்குப் பின்னர் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும் பான்மை கிடைக்காததால் ஈராக் நாட்டில் புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற் பட்டது. இந்நிலையில் 8 மாதங்களுக்குப் பின்னர் ஷியா, சுன்னி ஆகிய இரு பிரிவினரின் கட்சிகளும் கூட்டணி அரசு அறிவிப்பை வெளியிட்டன. ஷியா பிரிவைச் சேர்ந்த நூரி அல் மலீகி தலைமையில் புதிய அரசு ஒன்று அமைவதாக கடந்த வியாழனன்று அறி விக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு அமைந்த அரசு இரண்டாவது நாளே ஆட்டம் கண்டுவிட்டது. (மேலும்....)

கார்த்திகை 15, 2010

உலகில் உயிர்வாழ்க்கை நிலைக்க மரங்களே கவசம்

பூமியில் இயற்கைச் சமநிலை பாதிப்புறாமல் பேணப்படுவதற்கும் உயிர்வாழ்க்கை நிலைத்திருப்பதற்கும் தாவரங்களின் பங்களிப்பே இன்றியமையாத தென்பதை உணர்ந்தோருக்கு மரநடுகையின் முக்கியத்துவம் நன்கு புரியம். எனவே இன்றைய தினத்தில் எளிமையானதொரு வைபவமாக மரநடுகைத் திட்டம் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது சூழலியல் ஆவலர்களுக்கு மகிழ்ச்சி தருவதாகும். புவியின் இயற்கைச் சமநிலையானது வேகமாக மோசமடைந்து சென்று கொண்டிருப்பதை யாவரும் அறிவர். விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவினாலான கைத்தொழில் புரட்சியினால் பூமியின் நீர், நிலம், வளிமண்டலம் ஆகிய சூழல்கள் வேகமாக மாசடைந்து கொண்டு வருவது மட்டுமன்றி மரங்களும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன. (மேலும்....)

கார்த்திகை 15, 2010

யுத்தத்தை தவிர்க்க பிரபாகரனிடம் விண்ணப்பித்தோம் ஆனால் ஏமாற்றமே - தயா மாஸ்டர் _

ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்குமாக விண்ணப்பம் ஒன்றை அனுப்பியிருந்தோம். அந்த கடிதத்தின் ஒரு பிரதியை பாலகுமாரன் என்னிடம் அப்போது காட்டியிருந்தார். ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என்று புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 15, 2010

மக்களின் இயல்பு வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு - டக்ளஸ் தேவானந்தா _

எமது மக்களின் இயல்பான வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஏ9 பாதை அகலமாக்கல் மற்றும் புனரமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்கான தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,புனரமைப்புப் பணிகளின் போது உள்ளுர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பதுடன் அடுத்த நேரம் என்ன நடக்கும் என்ற நிலைமாறி இன்று நம்பிக்கையான வாழ்வைக் கிடைக்கச் செய்த ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளதாகவும், எமது சமூகம் எதிர்காலத்தில் வளமான தேசத்தில் நம்பிக்கையுடன் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்தித் தருவது மட்டுமல்லாமல் மக்களின் இயல்பான வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படுமென்றும் அதற்காக தமது கட்சி தொடர்ந்து பாடுபடும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத் தெரிவித்தார்.

கார்த்திகை 15, 2010

காணமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாக பண மோசடி செய்தவர்கள் கைது

இறுதி யுத்தத்தின் போது காணமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட சிலரை கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு வாரம் காலமாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்களை பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவல் அடிப்படையில் கைது செய்துள்ளனர். எனினும் இது வரைக்கு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கார்த்திகை 15, 2010

ரிஸானாவின் மன்னிப்புக்கு வீட்டு எஜமானருடன் கலந்து பேசுங்கள் - சவூதி மன்னர்

மூதூரைச் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கிற்கு ரியாத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இருந்தபோதும் பல்வேறு காரணங்களால் அவருக்கு மன்னிப்பளிக்குமாறு ஹொங்கொங்கை தளமாக கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஜெனிவாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை என்பனவும் பல்வேறு புத்திஜீவிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். (மேலும்....)

கார்த்திகை 15, 2010

மறைந்த நதி சரஸ்வதியைத் தேடி...

(அரவிந்தன் நீலகண்டன்)

நிலத் தகடுகளின் இயக்கம் குறித்த ஆராய்ச்சியும் செயற்கைகோள் தூரப்புகைப்படத் துறையும் எப்படி இந்த நதியின் இருப்பில் மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தின? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரு தேச பண்பாடு தன் நினைவுகளில் பதிவு செய்து வைத்திருந்த அந்த தொன்ம நதி அறிவியலின் விளிம்பில் இருக்கும் தொழில்நுட்ப உதவியுடன் வரலாற்று உண்மையாக உயிர் கொண்டு எழுந்த தருணங்கள் படிப்போருக்கு மின்னதிர்வுகளாக ஆர்வக் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இத்தேடலின் தொடக்கப் புள்ளியான ஆராய்ச்சிதான் விஞ்ஞானி யஷ்பால் ஆராய்ச்சியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. இஸ்ரோ ஆராய்ச்சியின் ஒட்டுமொத்த முடிவு யாதெனில் பல தொல் நதிப் படுகைகள் இருக்கின்றன என்பதும் அவை பெரும்பாலும் சரஸ்வதி நதியின் படுக்கைகளாகவே இருக்க வேண்டுமென்பதும், அது நாம் பெரும்பாலான எளிய வரைப்படங்களில் காண்பது போல் ஒற்றை வரி ஓட்டம் அல்ல. அதன் சிக்கலான அமைப்பு அந்தப் பிரதேசத்தின் வரலாற்றின் சிக்கலான நீரோட்டத்தை நினைவுப்படுத்துவது. (மேலும்....)

கார்த்திகை 15, 2010

அமெரிக்காவின் முன்னேற்றம் ஆசியாவை சார்ந்து இருக்கிறது - ஒபாமா

இந்தியாவுக்கு நான் சென்று இருந்த போது அந்த நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங், என்னிடம் கூறுகையில், உலக நலனுக்காக அமெரிக்க பொருளாதாரம் வலுவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். பொருளாதார சரிவு மூலம் அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடம் என்ன என்றால், அமெரிக்க நுகவர்வோரை மட்டும் நம்பிக்கொண்டு இருக்கக்கூடாது என்பதுதான். அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்க ஏற்றுமதி 2 மடங்காக உயர்த்தப்படவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் மூலம் இலக்கை நோக்கி அமெரிக்கா முன்னேற்றம் அடைந்து உள்ளது. இந்தியாவில் இருந்த போது ஆயிரம் கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு அமெரிக்க ஏற்றுமதிக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. மருத்துவ சாதனங்கள், ஹெலிகொப்டர்கள், சுரங்க சாதனங்கள் ஆகியவை ஏற்றுமதி மூலம் அமெரிக்காவில் 50 ஆயிரம் வேலைகளுக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது. (மேலும்....)

கார்த்திகை 14, 2010

முதலமைச்சர் குழுவினர் தாக்கியதாக மாநகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு -  முதல்வர் தரப்பு மறுப்பு

"மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டு வரும் பஸ் தரிப்பிட கடைத்தொகுதி தொடர்பான கூட்டமொன்று நேற்று காலை நடைபெறுவதாகவும் அதில் தன்னையும் கலந்து கொள்ளுமாறும் எனக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது. ஆனால் காலையில் வேறு முக்கிய நிகழ்வு இருந்ததால் மாலையில் அக்கூட்டத்தை நடாத்துமாறு கூறினேன். அதன்படி நேற்று மாலை நடைபெற்ற  கூட்டத்திற்கு, எனக்கு விடுக்கப்பட்ட அழபைப்பின் பேரில் நான் சென்றேன். அக்கூட்டத்தில் எனது ஆதரவான மாநகர சபை உறுப்பினாகளுக்கும் இன்னும் சில மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையில் சிறியளவிலான கைகலப்பும் கலவரமும்  ஏற்பட்டது. அப்போது மாநகர சபை உறுப்பினர் பிரபாகரன் என்னைத் தாக்க முற்பட்டார். அதன் போது எனது மெய்ப்பாதுகாவலர்கள் என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்து விட்டனர். (மேலும்....)

கார்த்திகை 14, 2010

தீர்வு முயற்சியில் உடனடி அணுகுமுறை

இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சி சறுக்குமர விளையாட் டுப் போல் ஆகிவிட்டது. அதாவது சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகிவிட்டது. பண்டா - செல்வா ஒப்பந்தம், வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபை, பிராந்திய சபைகள் என்று ஒவ் வொரு தீர்வும் கைதவறிப்போய் இன்று மிகவும் பின்னடைவான நிலைக்கு அரசியல் தீர்வு முயற்சி வந்திருக்கின்றது. இதற்கான காரணம் என்ன என்று தமிழ் மக்கள் நிதானமாகச் சிந்திக்கவேண்டும். சிங்கள அரசியல் தலைவர்கள் ஒருபோதும் தீர்வுக்குச் சம்மதிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தலைவர்கள் வழமையாகக் கூறுவதைக் கேட்டுவந்த நிலையிலிருந்து கொஞ்சம் விடுபட்டு நிதானமாகச் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தலைவர்கள் புத்திசாலித் தனமாகச் செயற்பட்டிருந்தால் மேலே குறிப்பிட்ட தீர்வுகள் கைதவறிப் போகாமல் செய்திருக்கலாம். இன்று அந்தத் தீர்வுகள் எட்டாத தூரத்துக்குப் போய் விட்டன. தலைவர்கள் விட்ட தவறுகளே இதற்குக் காரணம். அதாவது கிடைக்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு இறுதித் தீர்வுக்காகத் தொடர்ந்து முயற்சிக்கும் நடைமுறையைப் பின்பற்றாததே இன்றைய அவல நிலைக்குக் காரணம். (மேலும்....)

கார்த்திகை 14, 2010

Indian worker left to die on Nokia assembly line

(By Arun Kumar)

On October 31, a young female worker was left to die on the assembly line at the Nokia factory in southern India after her head and neck got trapped and crushed inside a robotic loading machine. The horrifying incident exposed conditions that prevail in most of the country’s factories, where human life and limb are subordinated to the drive to reap profits off of cheap labor. Nokia, the world’s largest manufacturer of mobile telephones, employs around 7,000 workers at its Sriperumbudur plant, 40 kilometers from Chennai, the capital of the southern Indian state of Tamil Nadu. Seventy percent of the workers are female. Based in Finland, Nokia has over 123,000 employees in 120 countries, sales in more than 150 countries, global annual revenue of €41 billion and operating profit of €1.2 billion as of 2009. (more.....)

கார்த்திகை 14, 2010

ஜே.ஆரின் "கைவரிசை'

பதினெட்டு வருடங்களுக்குப் பின் ‘பொல்லாத’ மழை. கொழும்பு நகரின் பெரும் பகுதி வெள்ளக்காடாகியது. பல வீதிகள் நீரில் மூழ்கின. இந்த வீதிகளில் போக்குவரத்து அறவே இடம்பெறவில்லை. பாராளுமன்றத்துக்குச் செல்லும் பாதை மாத்திரமன்றி பாராளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கியது. பாராளுமன்றக் கூட்டத்துக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவக் கவச வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை. ஏழு நிமிடங்கள் மாத்திரமே கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்றம் என்பது நாட்டின் உயிர்நாடி. நாட்டை நிர்வகிக்கும் சட்டங்கள் அனைத்தும் அங்கே தான் ஆக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் பாராளுமன்றம் செயற்படக் கூடியதாக இருக்க வேண்டியது அவசியம். (மேலும்....)

கார்த்திகை 14, 2010

கிழக்கு பிரிந்தால் யாழ்ப்பாணத்தானுக்கு கோவணம்தான் மிஞ்சும் என்கிற வரலாற்று உண்மை

யாழ்ப்பாணத்தானுக்கு மற்ற ஊர்க்காரனை இளப்பமாகக் கதைப்பதில் தனிக்குஷி. வன்னியான்,,,, மட்டக்களப்பான், மன்னாரான், வடக்கத்தையான் இப்படி மற்ற ஊர்க்காரர்களை பட்டப்பெயர் கொண்டு அழைத்து தன்னை ஒரு மேன்மையானவனாகக் காட்டிக்கொள்வதில் அவனுக்கு நிகர் இல்லைதான். ஆனால் ஆயுதப்போராட்டம் தொடங்கியபோது யாழ்ப்பாணத்தான் செய்த வேலை ஐரோப்பா நாட்டிற்கு பறந்துபோனதுதான் அதன் பின் போராட்டத்தை நடாத்தியவர்கள் வன்னி இளைஞர்களும் கிழக்கு மாகாண இளைஞர்களும்தான்.  யாழ்ப்பாணத்தான் ஐரோப்பிய நாட்டில் கக்கூசு முதற்கொண்டு அனைத்தையும் கழுவிக்கொண்டு காசு சம்பாதிப்பதில் கவனமாக இருந்தான். அரைவேற்காடு பிரபாகரனை உசுப்பேத்தி புலிஇயக்கத்தை வீங்கச்செய்து பெருமை கொண்டாடிய யாழ்ப்பாணத்தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன் பாணியில் வீர வசனம் பேசிக்கொண்டிருந்தான். (மேலும்....)

கார்த்திகை 14, 2010

பாலியல் வல்லுறவு புரிந்த

கனடாவிலிருந்து வந்த இளைஞனைத் தேடி பொலிஸார் வலைவிரிப்பு

திருமணம் செய்வதாக ஏமாற்றிப் பாலியல் வல்லுறவு புரிந்த இளைஞனின் பெற்றோரை குறித்த இளைஞனை மன்றில் ஆஜர்செய்யும்வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகிழ்மகாதேவா உத்தரவிட்டுள்ளார். வெளிநாடு ஒன்றிலிருந்து வருகை தந்த மந்திகையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் அதே இடத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரைத் திருமணம் செய்வதாக வாக்குறுதி வழங்கியுள்ளார். இதற்கமைய பெற்றோரும் திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்த நிலையில் மணற்காட்டுப் பகுதிக்குக் அந்த யுவதியை அழைத்துச் சென்ற அந்த இளைஞன் பெண்ணின் ஒப்புதல் இன்றி பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார். (மேலும்....)

கார்த்திகை 14, 2010

இராணுவப் பாதுகாப்பில் இருக்கும் புலிகளின் தகவலால் மன்னாரில் 5 பேர் கைது

மன்னார் பேசாலைப்பகுதியில் ஆசிரியர் ஒருவர் உட்பட 05 தமிழர்கள் வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் அவர்களுடைய வீட்டில் வைத்து சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அழைத்தச்செல்லப்பட்டதாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளை வானில் சாதாரண உடையில் வந்த அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செபஸ்ரியன் சீலன் குரூஸ், எஸ்.ஏ. மரியந்தா, எஸ்.ஜெனிபர் குரூஸ், எஸ். பெனோ பெல்ரானோ, எஸ். மசன்ற் குரூஸ் ஆகிய ஐவருமே கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் வவுனியா அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணைகளின் பின் இவர்கள் கொழும்பு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை 14, 2010

Sri Lanka receives $ 39.8 million WFP assistance

The Executive Board of World Food Programme (WFP) on Thursday the November 11th approved the protracted relief and recovery operation (PRRO) for Sri Lanka totaling a US $ 39,755,501 aid with the objective of reducing hunger, support early recovery and rebuild livelihoods among internally displaced persons (IDPs) and recent-returnee households. This one-year protracted relief and recovery operation titled “Supporting Relief and Early Recovery in Former Conflict-Affected Areas” will focus on targeting humanitarian and early recovery needs in the north, while integrating a strong protection element to ensure that remaining internally displaced persons are adequately cared for until resettlement. (more...)

கார்த்திகை 14, 2010

ஓய்வூதியச் சீர்திருத்தம் பிரான்ஸின் அரசியலில் திருப்புமுனையாகலாம்

பொருளாதாரக் கோரிக்கையை முன்வைத்தே போராட்டம் நடைபெறுகின்றது. ஓய்வூதியம் பெறுவதற்கான வயதெல்லையை அதிகரிக்க கூடாது என்பது போராட்டத்தின் பிரதான கோரிக்கை. ஜனாதிபதி நிகோலஸ் சார்கோஸி அரச பலத்தில் முழுக்க நம்பிக்கை வைத்துச் செயற்படுகின்றார். போராட்டக்காரர் கொஞ்ச நாட்கள் கோஷம் போட்டுவிட்டு ஓய்ந்துவிடுவார்கள் எனக் கூறுகின்றார். ஓய்வூதியம் பெறுவதற்கான வயதெல்லையை அதிகரிப்பதற்கு எதிராகவே போராட்டம், இப்போது 60 வயதில் ஓய்வூதியம் பெறவேண்டும். இதை உடனடியான 62 வயதாகவும் 2018 ஆம் ஆண்டு 68 வயதாகவும் அதிகரிப்பதென அரசாங்கம் முடிவு செய்தது. அதேநேரம், அரசாங்க சேவையைச் சேர்ந்த ஒருவர் முழுமையான ஓய்வூதியத்தைப் பெறக் குறைந்த பட்சம் 41 வருடம் 3 மாதம் சேவையாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 14, 2010

கழற்றி வீச அவை செருப்பல்லவே? வடுக்கள் !

முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள், அதனால் புனிதப் புலிகள் அவர்களை விரட்டியடித்தார்கள் என்று உப்பு சப்பில்லாத பிரச்சாரத்தை இன்னொரு தலைமுறையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மிகக் கவனமாக வரலாற்றை புலிகள் எவ்வாறு செதுக்கியெடுத்தார்களோ அவ்வாறே காலம் காலமாக இரவோடு இரவாக புலிகள் பாரம்பரியமிக்க ஒரு சமூகத்தை அவர்களது உரிமைகளைப் பறித்தெடுத்து வெளியேற்றினார்கள் எனும் வரலாறும் சம காலத்தில் ஏந்திச் செல்லப்படும். புலி எனும் ஆயுதம் ஆளும் வர்க்கத்தினரின் ஆசைகளுக்கேற்ப இயங்கிய “மேல் மாடி” இல்லாத வெற்றுப் பை என்பதை இவர்கள் புரிந்து கொள்ளும் வரை இனங்களுக்கிடையிலான முரண்பாடு எப்போதும் நிலைத்திருக்கப் போகின்றது. வடக்கின் பிராந்திய கலாச்சாரமாக இருந்தாலும், கிழக்கின் கலாச்சாரமாக இருந்தாலும், தெற்கின் கலாச்சாரமாக இருந்தாலும் தாம் வாழும் பிரதேசங்களின் கலாச்சாரத்துக்கு உரியவர்களாகவே பரந்து வாழும் முஸ்லிம்கள் இலங்கையில் காணப்பட்டாலும், தொழில் சார் வளத்தில் தனி அடையாளத்தைக் கொண்டவர்களாகவும், தமது மத நம்பிக்கையிலும் அதன் படி நடப்பதிலும் இறுக்கமான முறைகளைக் கடைப்பிடித்து வருபவர்ளாகக் காணப்படும் முஸ்லிம் சமூகத்தை நசுக்கி வெளியேற்றியதில் புலிகளை விட புலிகளை இயக்கிய “மூளைகள்” தான் நன்மையடைந்தன என்பதைப் புரிந்து கொள்வதற்கு கடை நிலை அபிமானிக்கு இன்னும் வெகு காலம் எடுக்கும். (மேலும்....)

கார்த்திகை 14, 2010

அதிகரித்துவரும் சிறைச்சாலை வன்முறைகள்...

சிறைக்கூடங்களே வன்முறைக் கூடங்களாவதா?

(ஷம்ஸ் பாஹிம் )

தவறு செய்பவர்களை சீர்திருத்தி நல் வழிப்படுத்தும் இடங்களாகவே சிறைச்சாலைகள் கருதப்படுகின்றன. இதனால் கைதிகளுக்கு தொழிற் பயிற்சிகள் மட்டுமன்றி ஆன்மீக வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன. சிறை வாழ்க்கையில் பக்குவமடைந்து வெளியில் வந்தவர்களும் இருக்கிறார்கள். மிக மோசமானவர்ளாக மாறியவர்களும் இருக்கவே செய்கிறார்கள். செய்த தவறுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி செய்யாத தவறுக்காக தண்டிக்கப் பட்டவர்கள், அவசர கோபத்தினால் தவறிழைத்தவர்கள் போராட்டம் நடத்தி பிடிபட்டவர்கள் என சிறையில் பல்வேறு விதமான கைதிகள் இருக்கவே செய்கின்றனர். (மேலும்....)

கார்த்திகை 14, 2010

Calgary anti-racism activist beaten, blames neo-Nazis for 'targeted' attack

A married father of four who has become the face of Calgary’s anti-racism movement was attacked inside his home early Monday morning, the fifth and most violent incident where the man has been targeted. Five masked men broke into the duplex belonging to Jason Devine, 30, and his wife Bonnie, 32, around 1 a.m. Mr. Devine and another man were viciously beaten with a bat and a hammer, among other weapons, police say. His guest suffered a broken arm, while Mr. Devine suffered a series of welts and bruises. Ms. Devine and the couple’s four boys, ages five through 12, weren’t harmed. The invaders fled. (more....)

கார்த்திகை 14, 2010

இசையரசி பீ.சுசீலா

இசையில் இலயிக்காத இதயங்களை இவ்வுலகில் காண்பதரிது. இனிய குரல் தரும் இசை இதில் ஒரு தனி ரகம். அந்த ரகத்தில் யுகம் மறக்கச் செய்யும் ஒரு குரல் தான் தென்னிந்தியப் பின்னணிப் பாடகி இசையரசி பீ. சுசீலாவின் குரல். பீ. சுசீலா என்ற பெயரைக் கேட்டதுமே துள்ளாத மனமும் துள்ளும். அவரின் குரலினிமையைக் கேட்டாலோ பசித்த குழந்தை கூட பால் மறக்கும். அவ்வளவு இனியது அவரது குரல். இந்த இன்குரல் இன்று தன் 75வது அகவையைக் கொண்டாடுகிறது. குரல் தான் வயதாகியதே தவிர அதன் இனிமை அதே பசுமையோடு இன்றும் நிலைத்திருக்கிறது. அவரின் குரலினிமையில் எம்மையே மறந்த கணங்கள் ஏராளம் இருக்கலாம். ஆனால் அவரின் வரலாற்றை அறிந்த உள்ளங்கள் அற்பமாகவே இருக்க முடியும். அதற்குப் பரிகாரம் தான் கீழ்வரும் இதிகாசம். (மேலும்....)

கார்த்திகை 14, 2010

பிறேஸிலின் முதலாவது பெண் ஜனாதிபதி

லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரித் திருப்பத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிறேஸில் ஜனாதிபதித் தேர்தலின் முடிவு அமைந்திருக்கின்றது. இரண்டாவது சுற்று வாக்களிப்பில் 56 வீதம் வாக்குகள் பெற்று டில்மா றூஸெஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த லூயிஸ் இனேஷியோ லுலா த சில்வாவும் இடதுசாரிச் சிந்தனையைக் கொண்டவரே. இரண்டு தட வைகளுக்கு மேல் பதவி வகிப்பதற்கு பிறேஸிலின் அரசியலமைப்பு இட மளிக்காததால் அவரது கட்சியின் சார்பில் டில்மா இந்தத் தடவை களமிறங்கினார். மக்கள் மத்தியில் பிரபல்யமானவரான லுலா த சில்வாவின் ஆதரவு இருந்தும் கூட முதலாவது வாக்களிப்பில் டில்மா போதுமான வாக்குகளைப் பெறாததால், இந்தத் தடவை ஆட்சியதிகாரம் கைமாறக் கூடும் என்ற அபிப்பிராயம் சில அரசியல் நோக்கர்கள் மத்தியில் நிலவியது. (மேலும்....)

கார்த்திகை 14, 2010

இந்திய அமைச்சர்

ராஜாவின் ஸ்பெக்ரம் விவகாரம் காங்கிரஸின் நேர்மைக்கு உரைகல்

இந்தியாவின் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் அ. ராஜா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு கோணங்களிலிருந்து வருகின்றபோதிலும் அவர் பதவி விலகுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அரசாங்கமும் அவரைப் பதவி விலக்குவதாக இல்லை. ஸ்பெக்ரம் ஊழல் குற்றச்சாட்டு இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளது. ‘ஸ்பெக்ரம் பக்கேஜ்’ என்ற பெயரில் சில அலைவரிசைகளை ஏலம் விட்டதில் வழமையான நடை முறைகளுக்கு முரணாகத் தன் னிச்சையாகச் செயற்பட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியிருக்கின்றார் என்பது இவருக்கு எதிரான குற்றச்சாட்டு. இக் குற்றச்சாட்டை எதிர்க் கட்சிகளோ ஊடகங்களோ சுமத்தவில்லை. இந்தியாவின் கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவர் தனது வருடாந்த அறிக்கையில் இக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கின்றார். இக் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டே எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் ராஜா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றன.  (மேலும்....)

கார்த்திகை 13, 2010

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் மீது முதலமைச்சர் குழுவினர் தாக்குதல்?

மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் பிரபா மற்றும் அருமைலிங்கம் ஆகியோர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குழுவினரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும், அவருடன் கூடவே எட்டு வாகனங்களில் வந்த குண்டர்கள் ஆகியோர் மாநகர சபை உறுப்பினர்களை தாக்கியதாக மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.(மேலும்....)

கார்த்திகை 13, 2010

சிங்கள மக்கள் நாவற்குழி அரச காணியில் பலாத்காரமாகவே குடியேறியுள்ளனர் - இமெல்டா சுகுமார் _

சிங்கள மக்கள் நாவற்குழி அரச காணியில் பலாத்காரமாகவே குடியேறியுள்ளனர். அவர்களை அரசாங்கம் அங்கு குடியமர்த்தவில்லை என தெரிவித்த யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், மேற்படி குடியமர்வு தொடர்பான பூர்வாங்க அறிக்கையொன்று மீள் குடியேற்ற அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். நேற்று வெள்ளிக்கிழமை சித்தங்கேணி மகளீர் அபிவிருத்தி நிலையத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு இடம் பெற்றது. இதன் போது தெளிவுபடுத்துகையிலேயே யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேற்கண்டவாறு கூறினார். (மேலும்....)

கார்த்திகை 13, 2010

பத்துத் தலை நாகம் பாமரனை ஒன்றும் செய்யாதோ...?

உண்மை உண்மையைத்தவிர ஏதும் சொல்லோம் பாராபரமே. பார்த்ததும் படையே நடுங்கும் ஒரு தலையுடன் காட்சியளித்தால் மட்டும். இது பத்துத்தலையல்லவா. கடற்படை, தரைப்படை, தற்கொலைப்படை, வான்படை, ஈரூடகப்படையெல்லாம் இதனைக் கண்டுதான் பயந்து ஓடினவோ? யாம் அறியோம் பாரபரமே. தலைவர் உயிருடன் வந்து சொன்னால்தான் நாம் நம்புவோம். வெடிகளுக்கும், வேட்டுக்களுக்கும், கண்ணி வெடிகளுக்கும், காட்டிக்கொடுப்புகளுக்கும், பசிக்கும், பட்டினிக்கும், கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் இடையிலும் நீ மட்டும் எப்படி 10 தலையுடன் தப்பி வாழ்ந்தாய் பத்துத் தலை சர்ப்பமே? வன்னியில் அண்மையில் பிடிக்கப்பட்ட புகைப்படம் இது.  சர்பத்தின் ‘படம்’ எடுத்தலைப் பார்த்தால்  எ(அ)ந்த படையும் நடுங்காதோ....?

 

கார்த்திகை 13, 2010

வருமுன் காப்பதே மேலானது

தொடர்ச்சியாக அடைமழை பெய்யும் போது வெள்ளப் பெருக்கு ஏற்படுவது இயல்பு. வடிகால் அமைப்புகள் சீராக இருக்கும் பட்சத்தில் வெள்ளம் உடனடியாக வழிந்தோடிவிடும். கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை போன்ற பகுதிகளில் வெள்ளம் உட னடியாகவே வழிந்தோடியதை அவதானிக்க முடிந் தது. வேறு சில பகுதிகளில் வழிந்தோடாமல் தேங்கி நிற்பதை நேற்று வரை காண முடிந்தது. கொழும்பின் தாழ்ந்த பகுதிகளிலேயே வெள்ளம் தேங்கி நின்றது எனக் கூறுவது எங்களை நாங்களே தேற்றிக் கொள்வதற்கான கூற்றாகவே இருக்கும். இப்போது வெள்ளம் தேங்கி நின்ற பகுதிகள் தாழ்ந்த பிரதேசங் கள் என்பதும் தொடர்ச்சியாக மழை பெய்தால் இப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து உண்டு என் பதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியாமலி ருக்க முடியாது. இப்பிரதேசங்களின் வடிகால் அமை ப்புகளை முன்கூட்டியே சீர் செய்திருக்க வேண்டும். (மேலும்....)

கார்த்திகை 13, 2010

செல்வன் சிலை எங்கே?

சிலை எங்கே?

தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைத்து அதனை பெரிதாக விளம்பரம் செய்து தமக்குள் சுய இன்பம் தேடிய பாரிஸ் புலி வால்கள் இப்போ அடங்கிப்போயிருக்கிறார்கள். சிலை வைத்து ஒரு நாள் திருவிழா நடந்து முடிந்து விட்டது. புலி ஊடகங்கள் எல்லாம் ஏதோ பெரிதாக தாம் சாதித்துவிட்டது போல பிதற்றின. அடுத்தநாள் சிலையைப் பார்க்க போன இடத்தில் சிலையைக் காணோம். சிலையைப்பற்றி விசாரித்தபோது சிலையை உள்ளே எடுத்து வைத்து விட்டதாக சொல்லப்பட்டது. என்னடா இது! அப்படியானால் சிலை நிரந்தரமாக முன்னால் வைக்கப்படதா என நிர்வாகத்திடம் கேட்ட போது அவர் சிரித்தபடி சொன்னார்  சிலையை நிரந்தரமாக முன்னால் வைக்க மாட்டோம். அப்படி வைக்கவும் முடியாது என அவர் சொன்னார்.(மேலும்....)

கார்த்திகை 13, 2010

கடலுக்குள் ஆய்வு நிலையம்

செவ்வாய் கிரகத்துக்கான பயணம் நிலவுப் பயணத்தைவிட சவாலானது. இதை எதிர்கொள்ளும் விதமாக செவ்வாய்க்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் பல்வேறு வித ஆய்வு ஒத்திகை நிகழ்ச்சிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றில் ஒரு சில சோதனைகள் முடிந்துவிட்டன. அடுத்த கட்ட சோதனையாக விண்வெளி வீரர்களை கடலுக்கு அடியில் அழைத்துச் சென்று ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக கடலில் 65 அடி ஆழத்தில் புளோரிடா மாகாணத்தில் ஒரு ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது. நாசாவின் இந்தத் திட்டம் நீமோ (நாசா எக்”டிரிம் என் விரான் மென்ட்மிஷன் ஆபரேஷன்ஸ்) என்று அழைக்கப்படுகிறது. சவால் நிறைந்த சிக்கலான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சிகள் இதன் மூலம் அளிக்கப்படுகிறது. விண்வெளிக்குச் செல்லும் வீரர்களை அஸ்ட்ராநட்ஸ் என்று அழைப்பது போல கடலுக்குள் தங்கி இருந்து ஆய்வு நடத்தும் வீரர்களை அக்வாநட்ஸ் என்று அழைக்கிறார்கள்.

கார்த்திகை 13, 2010

10 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருக்கும் பெண்

சமூக ஆர்வலரான ஐரோம் ஷர்மிளா என்ற இளம்பெண், மணிப்பூர் மாநிலத்தில் அமுலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். ஆனால் அவரை பொலிஸார் தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைந்தனர். ஒரு ஆண்டிற்கும் மேலாக சிறையில் இருந்தபடியே ஷர்மிளா தனது உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்தார். ஆனால் அவருக்கு பொலிஸார் கட்டாயப்படுத்தி திரவ உணவுகளை செலுத்தினர். ஒரு ஆண்டிற்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார். இதனால் மறநாளே அவர் கைது செய்யப்பட்டார். (மேலும்....)

கார்த்திகை 13, 2010

அரசுடன் இணைந்து செயற்பாடு

மு. காவின் தீர்மானத்திற்கு அதியுயர் பீடம் அங்கீகாரம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்து செயற்படவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பiர் சேகு தாவூத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையினையடுத்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு எடுத்த தீர்மானத்தினை கட்சியின் அதியுயர் பீடம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதியுடன் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை இடம் பெற்றது. இதையடுத்து 11 ஆம் திகதி கட்சியின் அதியுயர் பீடம் கூடியது. இதன் போது இவ் விடயம் விரிவாக ஆராயப்பட்டது. எதிர்வரும் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தலைவர் றவூப் ஹக்கீம் தனது உரையின் போது இதனை அறிவிக்கவுள்ளார் என்றார்.

கார்த்திகை 13, 2010

கலக்கத்தில் கலைஞர் கருணாநிதி

மத்திய அரசுக்கு ஆதரவளிக்கத் தயார் - ஜெயலலிதா திடீர் அறிவிப்பு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. விலகினால், ஆட்சி நீடிக்க 16 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. அ.தி.மு.கவுக்கு 9 எம்.பி.க்கள் உள்ளனர். எங்கள் எம்.பி.க்களுடன் மேலும் கருத்து ஒற்றுமை கொண்ட பிற கட்சிகளைச் சேர்ந்த 9 எம்.பி.க்களின் ஆதரவை திரட்டி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை என்னால் காப்பாற்ற முடியும். இதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சு நடத்தி இருக்கிறேன். ஆனால் அந்த கட்சிகள் எவை என்பதை இப்போது என்னால் கூறமுடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீடிக்க அ.தி.மு.க அளிக்கும் ஆதரவுக்கு நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டோம். மந்திரி பதவியும் கேட்க மாட்டோம். (மேலும்....)

கார்த்திகை 13, 2010

மட்டக்களப்புக்கு டி.யு குணசேகர விஜயம்

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியு.குணசேகர இருநாள் விஜயத்தை மேற்கொண்டு மட்;டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் செய்துள்ளார். நேற்று மாலை இடம் மாவட்டதிற்கு விஜயம் செய்த அவர் இலங்கை கம்னிஸ்ட் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகசபை மாநாட்டிலும் பங்கு கொண்டார். இன்று காலை மட்டக்களப்பு நிறைச்சாலையில் கைதிகள் மற்றும் உதிதியோகத்தர்களுடன் கலந்துரையாடினார். மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படுள்ள சமுக சீர்திருத்த திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தையும் திறந்து வைத்தார். மாவட்ட திணைக்களத் தலைவர்களின் மாநாடு டேபா மண்டபத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது அதிலும் அமைச்சர் பங்கு கொண்டார்.

கார்த்திகை 13, 2010

"சிங்கள மக்களை இரவோடு இரவாக குடியமர்த்த முடியுமானால் வலிகாமம் வடக்கு மக்களை ஏன் இதுவரை குடியேற்றவில்லை? ''

யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை இரவோடு இரவாக குடியேற்ற முடியுமானால் வலி வடக்கு பகுதி மக்களை ஏன் இதுவரை மீள்குடியேற்றவில்லை? வலி. வடக்கு மக்களுக்கு இந்த ஆனைக்குழு ஏதாவது நல்லது செய்யுமா? என்று நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பொதுமகனான சா.தங்கராசா கேள்வி எழுப்பினார்.  எம்மை அங்கு மீள் குடியேற்றுமாறு கோரி நாம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தோம். அதேகாலப் பகுதியில் தான் வடக்கு, கிழக்கைப் பிரிக்க வேண்டுமெனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வலி. வடக்கில் மக்களை குடியமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வடக்கு கிழக்கையும் பிரிக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் வடக்கு கிழக்கு பிரிப்புதொடர்பான தீர்ப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் வலிகாமம் வடக்கில் மக்களை மீள்குடியேற்றுமாறு விடுக்கப்பட்ட உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கார்த்திகை 13, 2010

ஆயிரக்கணக்கான புதிய குடியிருப்புகள் நாட்டுடைமை: வெனிசுலாவில் ஊழல்வாதிகளுக்கு பலத்த அடி

பெரும் மோசடிகளை செய்து வந்த தனியார் ரியல் எஸ்டேட்காரர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான குடியி ருப்புகளைப் பறித்து அவற்றை தேசிய மயமாக்கி யதோடு, அவற்றை மக்க ளுக்கு விநியோகிக்க மூன்று கட்டத் திட்டத்தையும் வெனி சுலா அரசு அறிவித்துள்ளது. அரசின் திட்டத்தை வெளியிட்டு செய்தியாளர் களிடம் துணை ஜனாதிபதி பேசினார். அப்போது அவர், இந்தக் குடியிருப்பு களைக் கட்டி வரும் தனி யார் நிறுவனங்கள் பெரும் மோசடியைச் செய்துள் ளன. மீண்டும் ஒருமுறை அவர்கள் ஏமாந்துவிடாத வாறு பார்த்துக் கொள் ளவே நாட்டுடைமையாக் கியுள்ளோம் என்றார். (மேலும்....)

கார்த்திகை 13, 2010

கவிஞர் கண்ணதாசன் அளித்த பதிலொன்றில்

கே: கேரளத்தவரிடையே உள்ள தோழமை உணர்ச்சி தமிழர்களுக்கு இல்லை. தமிழர்கள் அவ்வுணர்வைப் பெற தாங்கள் கூறும் வழி என்ன?

ப: எந்தத் தலைமுறையிலும் தமிழனுக்கு அந்த உணர்ச்சி வராது. இது ஒரு சொரணை கெட்ட ஜாதி, கீழே விழுந்தவனை ஏறி மிதிக்குமே தவிர, கை கொடுக்க மனம் வராது. மேல்நாட்டு ஆசிரியர் ஒருவர் இந்திய இனங்களை வருணித்தார். பஞ்சாபியரை, ‘ஒட்டகம் மாதிரி’ என்றார், அப்படி உழைப்பார்களாம். ராஜஸ்தானியர்களை ‘சிங்கம்’ மாதிரி’ என்றார். வங்காளிகளை ‘பந்தயக் குதிரை’ என்றார். கேரளத்தவரை ‘கலைமான்கள்’ என்றார், தமிழனை மட்டும் ‘நாய் மாதிரி’ என்றார். காரணம் சொல்லும்போது ‘தமிழன் வேலை பார்க்கும் இட்த்துக்கு விசுவாசமாக இருப்பானாம், சக தமிழனைக் கண்டால் குரைப்பானாம். நாய் அப்படித்தானே?

கார்த்திகை 12, 2010

புலம்பெயர் நாடுகளில்

அடையாளப்படுத்தும் அடையாள அட்டை

(சாகரன்)

இன்றும் அன்றும் புலம் பெயர் தேசத்து பல்கலைக் கழகங்களில் எங்கள் குழந்தைகள் சிலரை உசுப்பேத்தி பல்கலைக் கழக படிப்பு முடிக்கும் போது கட்டாயமாக இரண்டாவது பட்டத்தையும் பெறச் செய்த பெருமையும் இவர்களையே சாரும். மே 18, 2009 இற்கு பிறகு இவர்கள் திருந்துவார்கள் என்றால் இல்லை என்பது போலவே தோன்றுகின்றது. அண்மையில் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அடையாள அட்டை விநியோகம் இதனையே எடுத்துக்காட்டுகின்றது. எமது பிள்ளைகள் பல்கலைக் கழகத்தால் வெளியே வருமுன்பே பயங்கரவாதி என்ற பட்டத்தை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கம் போலும். அடையாளப்படுத்தும் அடையாள அட்டை நிகழ்வுகள் இதனையே எடுத்துக்காட்டுகின்றன. (மேலும்....)

கார்த்திகை 12, 2010

அத்துமீறிய குடியேற்றம் ஜனாதிபதியின் கவனத்துக்கு ஈ.பி.டி.பி. கொண்டு வந்தது

நாவற்குழியில் குடியேறியிருக்கும் தென்னிலங்கை மக்களை ஏற்கனவே சந்தித்திருந்த பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர், சிங்கள மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்ந்து தீர்மானம்          எடுப்பதற்குத் தனக்கு 3 மாத கால அவகாசம் தேவை என ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்தப்பட்டது. அந்த மக்கள் யாழ். குடாநாட்டில் சொந்த இருப்பிடங்களில் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்றும் அவர்களில் சிலர் வாடகை வீடுகளில் மட்டுமே முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்திருக்கிறார்கள் என்பதும் அங்கு சுட்டிக் காட்டப்பட்டது. (மேலும்...)

 

கார்த்திகை 12, 2010

Canada celebrates Deepavali

The Sri Lanka High Commission in Ottawa, Canada and the Consul General's Office in Toronto together with the Sri Lankan community celebrated the Deepavali festival on November 7, 2010 at the Korean Cultural Centre in Toronto. Buddhist, Hindu, Muslim and Christian clergy participated in the event. Five Members from the Federal Parliament of Canada including Members of the Municipal Councils and over 300 Sri Lankans participated. A significant feature this year was the participation of the Tamil community in organizing and coordinating the event. At the entrance to the hall, the members of the youth group Sri Lankans Without Border assisted in welcoming the guests according to the Hindu tradition. (more....)

கார்த்திகை 12, 2010

வடக்கு வடக்காயும், கிழக்கு கிழக்காயும் இருக்க வட- கிழக்கு பிரிந்தே இருக்க வேண்டியது காலத்தின் தேவை .

(இரா .வி .விஷ்ணு)

வடக்கும், கிழக்கும் பிரிந்திருப்பதென்பது நிர்வாக ரீதியில் இரு மாகாணங்களுக்கு நன்மையே தவிர,  அதிகாரங்கள் என்பதே இன்றைய பிரச்சனை.  இந்த அதிகாரங்களை எவ்வாறு நாம் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வது என்பதே நாம்  இன்றைய சூழ்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய விடயம். தமிழர்களில் அரசியல், ஆயுதபோராட்டத்தில் நியாயம் இருக்கின்றது இழப்புக்கள் நிறையவே இருக்கிறது.  அதனை வெறுமனே ஆயுத போராட்டம் என்றளவில் வெற்றி தோல்வி என்று கணக்கேடுத்துவிட  முடியாது. தமிழர்களுக்கான பொதுவாக சொல்வதானால் சிறுபான்மையியருக்கான அரசியல் தீர்வு என்பது உடனடியாக பெற்றே ஆகவேண்டிய விடயம் . வட - கிழக்கு தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினரான முஸ்லீம் , மலையக தமிழர்களுடன் சேர்ந்து குரல் கொடுக்கவேண்டிய விடயம். அவற்றை சரியாக செய்தாலே சிறுபான்மையினருக்கான  தீர்வென்பது நிரந்தரமான தீர்வொன்றுக்கு வழிகோலுமே தவிர வட- கிழக்கு இணைப்புதான் நிரந்தர தீர்வில் முக்கியமென சொல்லுவதெல்லாம் வெறுமனே தமிழ் தேசியத்தை மட்டும் கட்டிக்காக்க முயலும் கடும்போக்கு தமிழ் அரசியல் வாதிகள் தொடர்ந்தும் தமது வண்டிகளை உருட்டுவதற்கும் தமிழர்களை உசுப்பேத்தி தம் பதவிகளை பாதுகாத்துகொள்ளவே  இன்றைய சூழ்நிலையில் உதவும் . (மேலும்...)

கார்த்திகை 12, 2010

வடக்கில் திட்டமிட்டு குடியேற்றப்படும் சிங்கள குடியேற்றம்: த.தே.கூ _

ஏற்கனவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 90,000 மக்கள் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் வலிகாமம் வடக்கில் இருந்த விரட்டப்பட்டு இன்னும் அகதி முகாம்களிலும், வாடகை வீடுகளிலும் தங்கியுள்ளனர். இவர்கள் கடந்த 20 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு போக முடியவில்லை. உயர் நீதிமன்றம் மீள் குடியேற அனுமதி அளித்தும் இராணுவம் அதனை இன்னும் அனுமதிக்கவில்லை.  இவர்களில் ஒரு பகுதியினரை குடியேற அனுமதித்தாலும், இராணுவ முகாம் விஸ்தரிப்பு, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அதற்கான பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு தொகுதி மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையே இன்றுள்ளது. இந்நிலையில் 20 வருடம் அப்படி மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு அரசாங்கம் என்ன கொழும்பிலா காணியும் வீடும் கட்டிக் கொடுக்கப் போகின்றது?  (மேலும்...)

 

கார்த்திகை 12, 2010

 

வெள்ளத்தில் மூழ்கும் நகரம்

அடைமழையினால் கொழும்பு நகரமே மோசமான பாதி ப்பை எதிர்கொண்டது. ஒரு சில மணி நேரம் பலத்த மழை பெய்தாலேயே கொழும்பு நகரம் வெள்ளக்காடாகி விடுகிறது. இங்குள்ள சில பிரதேசங்கள் உடனடியாகவே வெள்ளத்தில் மூழ்கி விடுகின்றன. வீடுகளை விட்டு மக்கள் வெளியேறுவதும் வழமையாகி விட்டது. முன்னைய காலத்தில் பலத்த மழையினால் கூட இத்தகைய பாதிப் புகள் ஏற்பட்டதில்லை.  கொழும்பில் திட்டமிடாத முறையில் மேற்கொள்ளப்பட்டு ள்ள கட்டுமானப் பணிகளே இதற்கெல்லாம் காரணமென குற்றம் சாட்டப்பட்டு வருவது வெளிப்படையான விட யம். கொழும்பின் சில பிரதேசங்களில் சட்டவிரோ தமான முறையில் ஏராளமான வீடுகளும் வியாபார நிலை யங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளனஇவற்றை நிர்மாணிப்பதற்கு அங்கீகாரம் பெறப்படவில்லை. சேரிப்புறங்களில் மாத்திரமன்றி நகரின் முக்கிய இடங்களிலும் சட்ட விரோதமான கட்டடங்கள் நிறையவே காணப்படுகின்றன. மழை நீர் வடிந்தோட வேண்டிய வடிகான்களை மறித்தும் சட்டவிரோதமாக கட்டடங்கள் நிர்மாணிக்கப் பட்டுள்ளன. (மேலும்...)

கார்த்திகை 12, 2010

இதுவும் மேட்டுக்குடிதான்

ஏன் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் வருவதையும் தடுத்தவர்கள் தான் அந்தத் தமிழ்த் தேசிய மேட்டுக்குடியினர். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம் வந்தால் தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்துபோகும் என்பதுதான் அவர்களது வியாக்கியானம். தாம் மட்டும் கொழும்பிலிருந்தும், கடல்கடந்து சீமைக்கும் சென்று பல்கலைக்கழக அறிவைப்பெறலாம் அது கலாச்சார சீரழிவு அல்ல. பொருளாதார வழம் அற்றவர்களும், நீண்டகாலமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களும் வசதியாக பல்கலைக்கழகம் செல்லும் சூழல் வந்தபோதுதான் பல்கலைக்கழகப் படிப்பு கலாச்சாரச் சீரழிவாக தோன்றியது. முன்னைய மேட்டுக்குடியினரின் இந்த லொஜிக்கைகைத் தான் அவர்களது விசுவாசிகளான பத்மநாப ஐயரும், விருதுவழங்கும் சபையின் தலைவருமான கனடா செல்வம் அவர்களும் பின்பற்றுகின்றார்கள். தமிழ் மக்கள் பிரச்சனை எதுவும் அற்றவர்களாக வாழ்கின்றாகள் என ராஜபக்ச அரசு சர்வதேசங்களுக்கு காட்டும் ஓரு நாடகம் தான் கொழும்பில் நடக்க இருக்கும் இலக்கியச் சந்திப்பிற்கான பின்னணி. எனவே நாம் அதைத் தடத்தே ஆகவேண்டும் என ஒற்றைக்கால் தவம் புரிகின்றனர். (மேலும்...)
 

கார்த்திகை 12, 2010

இது எப்படி இருக்கு...?

இஸ்ரேலின் யூதக்குடியேற்றத் திட்டம் சமாதானத்தைப் பாதிக்காது - அமெரிக்க வெளிநாட்டமைச்சர்

 

இஸ்ரேலின் புதிய யூதக்குடியேற்றங்களால் பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படுமென்பதை நிராகரித்த அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு தரப்பாரிடமிருந்தும் பேச்சுவார்த்தைக்கான அவசியமான சாத்தியங்கள் வெளியாகுமென நம்புவதாகவும் குறிப்பிட்டார். (மேலும்...)

 

கார்த்திகை 12, 2010

இலங்கை மீனவர் சர்வதேச கடலில் மீன்பிடிக்க சட்டத்தில் திருத்தம்

இலங்கை மீனவர்கள் சர்வதேச கடலில் மீன்பிடிக்கும் வகையிலும் வேறு நாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்பில் மீன்பிடிப்பதை தடுக்கும் வகையிலும் கடற்றொழில் நீரியல்வள சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுதவிர, வேறு நாட்டு கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும்.  இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பு 5 இலட்சத்து 17 ஆயிரம் கடல் மைல்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கைக் கடலில் மட்டுமன்றி சர்வதேச கடலிலும் இலங்கை மீனவர்களுக்கு மீன் பிடிக்க முடியும். புதிய சட்டத்தின் படி, மீன வர்களை பாதுகாக்கும் வகையில் படகுகளில் தொழில் நுட்ப உபகரணங்களைப் பொருத்துவது கட்டாயமாக்கப்படும். படகுகள் பதிவு செய்யப்பட உள்ளதோடு வேறு நாட்டு கடல் எல்லையில் மீன்பிடிப்பவர்களின் அனுமதி ரத்து செய்யப்படும். எமது கடற்பரப்பை பலப் படுத்துவதற்கு புதிய சட்டத் தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
 

கார்த்திகை 12, 2010

அமைச்சரவை முடிவுகள்

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசாரப் பிரிவிற்காக 44.6 மில்லியன் ரூபா செலவில் கேட்போர் கூடமொன்றையும் விரிவுரை மண்டபமொன்றையும் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தவிர 180 மில்லியன் ரூபா செலவில் களனி பல்கலைக்கழகத்தில் வாசிகசாலையொன்றை அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கொழும்பு பல் வைத்திய நிலையத்திற்காக 694 மில்லியன் ரூபா செலவில் 10 மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. 403.7 மில்லியன் ரூபா செலவில் ஹோமாகம, காலி மற்றும் அநுராத புரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் திட் டங்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டது. வடக்கில் தெரிவு செய்யப்பட்ட தேசிய, மாகாண வீதிகளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 173 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியுடன் அபிவிருத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன் கீழ் 142 கிலோ மீட்டர் நீளமான வீதிகள் புனரமைக்கப்படும். 2010ல் ஆரம்பித்த 5 வருடங்களில் இந்தத் திட்டம் பூர்த்தி செய்யப்படும். மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தை ஹோமாகமவுக்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்டது. இங்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புதிய நிறுவனம் அமைக்கப்படும். பதுளை, கந்தகெடியவில் சிறியநீர் மின் நிலையமொன்றை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு உமாஓயா ஊடக நீர் வழங்கப்படும்.

கார்த்திகை 12, 2010

அடைமழை, பெருவெள்ளம்

நகரம் வெள்ளத்தில் மீண்டும் மூழ்கியது

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதுடன் இரண்டரை இலட் சத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெய ர்ந்துள்ளதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரக்காப்பொல என்ற இடத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7.00 மணி தொடக்கம் நேற்றுக்காலை 7.00 மணி வரையான 12 மணி நேரத்திற்குள் பெய்த பெருமழையினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களின் இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதமடைந்தன. (மேலும்...)

கார்த்திகை 12, 2010

ஒபாமாவுக்கு எதிர்ப்பு தொடர்கிறது  சியோலில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

தனது பத்துநாட்கள் பயணத்தில் தொடர் எதிர்ப் புகளைச் சந்தித்த அமெ ரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தென் கொரியாவிலும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வந்திறங்கினார். இந்தியாவிலிருந்து இந்தோனேசியா சென்ற அவர், இராக் மற்றும் ஆப் கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புக்கு எதிரான முழக்கங்களை எதிர்கொண்டார். தற்போது தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெத்திடுமாறு தென் கொரியாவை நிர்ப்பந்தித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக் கணக்கானோர் தென் கொரிய வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார் கள். (மேலும்...)
 

கார்த்திகை 11, 2010

ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா?

வெள்ளையர்கள் இருக்கும் போதே விதைக்கப்பட்ட இன வேற்றுமை , சமூக ஏற்றத்தாழ்வுகளின் விதைகள் அவர்கள் வெளியேறியதன் பின்னர் அவர்களே எதிர்பார்க்காத அறுவடையைத் தந்தது இலங்கையின் கடந்த கால வரலாறு. இந்த வரலாற்றின் ஏக போக விளைச்சலை இனப் பிரச்சினை எனும் பூதம் ஆட்கொண்டதால் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியாமல் நாட்டை விட்டு தூர ஓடியர்வர்கள் பல லட்சக் கணக்கில் இருக்கிறார்கள். இப்போது இனப் பிரச்சினை எனும் பெயரால் இடம்பெற்ற போர் ஓய்ந்துவிட்டது, இனியாவது ஒன்றுபட்ட இலங்கை சாத்தியமாகுமா?ஒன்று பட்ட இலங்கை என்பதன் அடிப்படை ஆளும் வர்க்கத்தின் கொள்கைக் கோட்பாடு சம்பந்தப்பட்ட விடயம். ஆனால் அதை மக்கள் மயப்படுத்தி வேற்றுமைகளை வளர்ப்பதும் அதைப் பரிபாலிப்பதும் அரசியலின் அடிப்படை. இந்த இரண்டையும் தாண்டி மக்கள் என்பது சாத்தியமா என்றால் அது நடைமுறையில் சவாலான விடயமாகக் கருதப்படும், இந்த இரண்டும் இல்லாத மக்கள் ஒற்றுமை சாத்தியமா என்றால்? அது சாத்தியம் என்று அடித்துக் கூறிவிடலாம். (மேலும்....)

கார்த்திகை 11, 2010

செய்திகளை திரிபுபடுத்தும் ஊடகங்களை அம்பலப்படுத்துகின்றார் யாழ் அரசு அதிபர்

யாழ் செயலகத்தில் இடம்பெற்ற புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகளை சமூக வாழ்வில் இணைத்தல் தொடர்பான கருப்பொருளான செயலமர்வின் போது ஊடகங்களின் மீது யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் நேற்று கோபத்தை பொழிந்துள்ளார். உள்ளுர் மற்றும் புலம்பெயர் ஊடகங்களே தன் தொடர்பான செய்திகளை திரிபுபடுத்தி வெளியிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தன்னால் வழங்கப்பட்ட வாக்குமூலம் திரிபுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு திரிபுபடுத்தப்பட்ட தனக்கெதிரான பிரசாரங்களை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் காட்டமாக தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 11, 2010

புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார்! முன்னாள் எம்.பி மனோ கணேசன் திட்டவட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் இறந்து விட்டார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். "புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கடந்த போரின் இறுதி நாட்களில் இறந்து விட்டார் என்றே நான் நினைக்கின்றேன். எனக்கு கிடைத்த தகவல்கள், ஊடக தகவல்கள், சக அரசியல்வாதிகளின் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் உயிருடன் இல்லை என்கிற முடிவுக்கு நான் வந்துள்ளேன். அவரது குடும்பத்தார் கூட உயிருடன் இல்லை. தாய் யாழ். வல்வெட்டித்துறையில் உள்ளார். சகோதரர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள்."

கார்த்திகை 11, 2010

Statement by the Prime Minister of Canada on Remembrance Day

Prime Minister Stephen Harper today issued the following statement on Remembrance Day: “Today, we pay tribute to the many Canadians who have made the ultimate sacrifice so that we may live in a country free from tyranny and governed by freedom, democracy and justice. “We stand in silent reflection for those brave men and women throughout Canada’s history who, when called upon to defend the values we hold dear, did not waver. Instead, they left family and loved ones for far away battlefields from which many would never return.“From the battle of Vimy Ridge, to the beaches of Normandy, to the dusty roads of Afghanistan, these brave men and women put our country’s welfare before their own and we owe them and their families a debt of gratitude that can never be repaid.“As our families, communities and Canadian Forces know all too well the tolls of war have been felt from generation to generation. Our country’s long and proud tradition of standing up for those who couldn’t is forever imbedded in our fabric. “Lest we forget.”

கார்த்திகை 11, 2010

வெலிக்கடைக் கைதிகள் வெளி மாவட்டச் சிறைகளுக்கு!

கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் போதைப்பொருள் நடவடிக்கை தொடர்பாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சுமார் 4,000 சிறைக் கைதிகளை எதிர்வரும் சில வாரங்களில் கொழும்பிலிருந்து மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சிறைக் கைதிகளை வீரவில, பள்ளேகல மற்றும் தல்தென ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்படும் சிறைச்சாலை முகாம்களுக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் டியூ குணசேகர குறிப்பிட்டார். (மேலும்....)

கார்த்திகை 11, 2010

மியான்மர் தேர்தலில்

ஆளுங்கட்சி அபார வெற்றி, ஆங் சான் சூகி 13 ம் தேதி விடுதலை…?

மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி வரும் 13ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அந்நாட்டு ராணுவ அரசு தெரிவித்துள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயகத்துக்காக போராடிய ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.,) தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலிலும், சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இத்தேர்தலில் ராணுவ ஆட்சியாளர்கள், பார்லிமென்டின் இரு சபைகளிலும் 77 சதவீதத்திற்கு மேல் உள்ள இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன. (மேலும்....)

கார்த்திகை 11, 2010

A WHO'S WHO OF SOME LTTE ACTIVISTS, OPPONENTS etc., PAST AND PRESENT.

http://dh-web.org/place.names/posts/post-ltte.html#Manivannan-Castro

A WHO'S WHO OF SOME LTTE ACTIVISTS, OPPONENTS etc., PAST AND PRESENT.We present a brief note under each name. Usually, more details, pictures etc., can be found using the info provided in a Google search. Where possible, a point system is used in deciding if some one should be included in the list. If you feel that the information (gathered by data-mining the Internet) is incorrect, misleading etc., please write to our editors via e-mail:     place.names@yahoo.com    indicating the solicited changes. Please note that having Tamil or other nationalist political opinions is perfectly within the rights of a person. Such people placed in the context of Sri lanka can validly become LTTE sympathizers, or its opponents. The LTTE sympathizers may even contribute funds to the LTTE coffers, willingly or unwillingly. These are political activities which are normal in troubled times. What we condemn is the endorsement of violence, military methods and terrorism. Thus women, children and the oppressed classes (castes) have been exploited for politico-military objectives. Dissent has been suppressed or eliminated by assassinations. Some "intellectuals" even expressed joy at the LTTE-assignations of prominent individuals like the Mayor of Jaffna or Minister Kadirgamaar. They believe that the end justifies the means to further their nationalist-, Marxist-, or Church-activist objectives. Our campaign is against such people. No harm should be directed against them, but they need to be re-educated and brought back to civilized society

கார்த்திகை 11, 2010

உலகின் பெரும் ஆயுத வியாபாரி அமெரிக்காதான்  சர்வதேச அமைதி ஆய்வு மையம் குற்றச்சாட்டு

உலகின் பல மூலைகளில் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் அமெரிக்காதான் ஆயுத விற்பனையிலும் தொடர் ந்து முதலிடம் வகிக்கிறது என்று ஸ்வீடனில் உள்ள ஸ்டாக் ஹோம் அமைதி ஆய்வு மையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் விற்கப்பட்ட ஆயுதங்களின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிபரங்கள் எடுக் கப்பட்டுள்ளன. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தான் அதிக அளவில் அமெரிக்காவிட மிருந்து ஆயுதங்களை வாங்கியுள்ளன. (மேலும்....)

கார்த்திகை 11, 2010

விருப்பு வாக்கு முறைமை அடுத்த தேர்தலில் இருக்குமெனில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவேன்: மில்ரோய்

விருப்பு வாக்கு முறைமை அடுத்த தேர்தலில் இருக்குமெனில் அத்தேர்தலில் புத்தளத்தில் போட்டியிடாது தான் வன்னி மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்திற்கு வந்தபோது அவர்களை வரவேற்று அம்மக்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் புத்தளத்து மக்கள் செய்துள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 11, 2010

எந்த சமூகமும் செய்யாத பெரும் சாதனைகள்: சீனாவுக்கு யுனெஸ்கோ பாராட்டு

நகர்ப்புறத்திற்கும், கிராமப்புறத்திற்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது. எடுத்துக்காட் டாக, பின்தங்கிய மாகாணத்தை விட ஷாங்காய் மாகாணத்தில் 18 மடங்கு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும், மற்ற வளரும் நாடுகளுக்கு சீனாவின் அனுபவத்தை எடுத்துக்கூறி, உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஆலோசனை மற்றும் தொழில்நுட்பங்களைத் தர சீனா தயாராக இருப்பது அவசியம். அரசியல் ரீதியாக விசாலமான பார்வை, அரசின் பல்வேறு மட்டங்கள் காட்டும் உறுதி மற்றும் சரியான முறையில் நிதி ஒதுக்கீடு ஆகியவைதான் அரசின் திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும். (மேலும்....)

கார்த்திகை 10, 2010

வடக்கு-கிழக்கு இணைவதற்கு, அனைவரும் குரல்கொடுக்க வேண்டும்.

 (அ. விஜயன்)

இலங்கையில் ஒரு அரசியல் தீர்வு ஏற்படும் இடத்து அது இணைந்த வடக்கு-கிழக்கினுள்ளே ஏற்பட வேண்டும். தனித் தமிழ் ஈழம்,   கனவாய் போனது.   வடக்கு-கிழக்கு இணைந்த நிலப்பரப்பிலாவது எம் மக்கள் அரசில் தீர்வினை பெற்று வாழவேண்டாமா? தனி நாடு,தமிழர் தாயகம்,என்வபற்றுக்காக நாம் பலவற்றை இழந்து நிற்கிறோம் ஆனால் நம்பிடையே உள்ள குரோத மனப்பான்மையால் நல்ல பல சந்தர்பங்களையும்,நல்ல பல வாய்ப்புகளையும் தட்டிக் கழித்து விட்டோம். இதன் பின்னராவது வடக்கு-கிழக்கு   இணைக்க வேண்டிய சந்தர்பங்கள் ஏற்படும் போது அதற்காக குரல் கொடுப்பதற்கும், இணைப்பின் தேவையால் ஏற்படும் நன்மைகளை உணர்த்த தளங்கள் ஏற்படும் போதெல்லாம் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (மேலும்....)

கார்த்திகை 10, 2010

என்ன சொல்லப் போகிறார்கள் சமூக சேவகியும் சட்டத்தரணியும்?

(ஜானகி)

தமிழ் தேசியத்தை முன்னிறுத்திய  தமிழ் இனவெறி அரசியல் தலைமைகள், தமிழ் மக்களின் ‘தரித்திர’ நிலைமையை தாமும், தம் உற்றார் உறவினரும், உடன்பிறப்புகளும் பயன்பெற பாவித்து வந்ததேயன்றி தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகள் எவற்றுக்கும் எந்தவொரு தீர்வையும் இதுவரையில் எடுத்துத்தந்ததில்லை. இன உரிமைப் பிணக்குகளை ஊதிப் பெருப்பித்து, ஏழை, வறிய தமிழரின் எதிர்காலத்தில் தமக்கு நல்லதொரு வாழ்வையும், தமது சந்ததிக்கு வளமானதொரு எதிர்காலத்தையும் ஏற்படுத்திக்கொண்டதே இந்த இனவெறித் தமிழ்; தலைமைகளின் இதுவரைகால அரசியல் வரலாறு. தமிழ் ஊடகப் போலிகளின் உதவியுடன் தமிழர் பிரச்சினையை எண்ணை ஊற்றி ஊதி எரித்து வளர்த்து தமது வயிற்றை நிரப்பி வந்ததேயன்றி இந்த இனவெறித் தமிழ் பாராளுமன்ற அரசியல் பிரகிருதிகள் எமது மக்களுக்குச் செய்தது எதுவுமேயில்லை. (மேலும்....)

கார்த்திகை 10, 2010

யாழ்ப்பாணத்தில் ரயில் நிலையங்களில் காத்திருந்த சிங்கள குடியேற்றவாசிகளில் ஒரு தொகுதியினர் நேற்றிரவு நாவற்குழியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்!

யாழ்ப்பாணத்தை தமது பூர்வீக இடம் எனக் கூறி ரயில் நிலையங்களில் காத்திருந்த சிங்கள குடியேற்றவாசிகளில் ஒரு தொகுதியினர் நேற்றிரவு நாவற்குழியில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக முதற்கட்டத்தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அங்கு பிரவேசிப்பதற்கு உள்ளுர் ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாவற்குழியிலுள்ள வீடமைப்புத்திட்டப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புக் காணிகள் இவர்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. (மேலும்....)

கார்த்திகை 10, 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி கைது செய்யப்படலாம்...?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணாமல் போனோரின் உறவினர்களிடம் பணம் பறிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிய வருகின்றது. கடந்த கால யுத்தத்தின்போது காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவார்கள் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வட மாகாண தமிழர்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தை மோசடி செய்து வந்த கும்பல் ஒன்றுடன் இவருக்கு தொடர்பு இருக்கின்றது என பொலிஸாரின் ஆரம்ப கட்ட புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. (மேலும்....)

கார்த்திகை 10, 2010

யாழ் அரச அதிபருக்கு கொலை அச்சுறுத்தல் ‐ இன்று முதல் திடீரென ராணுவ பொலிஸ் பாதுகாப்பு!

யாழ் அரச அதிபருக்கு இன்று முதல் திடீரென ராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை அவருக்கு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொலை அச்சுறுத்தலை அடுத்தே இந்த ராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவரது வாசஸ்தலம் அமைந்திருக்கும் பழைய பூங்காவிற்கு படையினரின் பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் இடைவெளியின் பின்னர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திரும்பியுள்ள இமெல்டா சுகுமார் தனது கடமைகளை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யாழ் மாவட்ட தரப்புகள் இதனை உறுதிப்படுத்த மறுத்துள்ளன.

கார்த்திகை 10, 2010

Batticaloa

Mikes Night 2010

Mikes Night 2010 will be held on Saturday, November 20th at Claire port Place Banquet and Convention centre, Etobicoke. ( SHARP 6:30 P:M). This years highlight will be “Honouring the Educators” from  BATTICALOA, St.Michael’s college. There are about 12 of them going to get honoured and one of the oldest teacher, Sivanathapillai who was in charge of the Primary Division of St.Michael’s College in the 50’s and 60’s under Rev.Fr.Crowther SJ. We also will be honouring a Michaelite for his achievements during and after college days. The name of the Michaelite is withheld as it will be a surprise presentation for him. We expect more than 400 in attendance and events will be performed by our own talented Michaelites live in North America. CONTACT

Mr. Michael(Tommy) Ganeshamoorthy  416 - 230 0979

Email:  tommyg@rogers.com

கார்த்திகை 10, 2010

யதார்த்தத்துக்கு அமைவான அரசியல் தீர்வு

முன்னைய பேச்சுவார்த்தைகளும் எட்டப்பட்ட உடன்பாடுகளும் தோல்வி அடைந்ததற்கான பொறுப்பை யார் ஏற்க வேண்டும் என்பது பற்றிய விவாதம் இன்று வரை தொடர்கின்றதேயொழிய அத்தோல்விகளிலிருந்து எந்தத் தரப்பும் பாடம் கற்றுக் கொண்டதாக இல்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலைவர்களுக்கு மாத்திரமன்றி ஆட்சியாளர்க ளுக்கும் உண்டெனினும், இனப்பிரச்சினையினால் பாதி க்கப்பட்டுள்ள தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத் துபவர்கள் என்ற வகையில் தமிழ்த் தவைர்களுக்குக் கூடுதலான பொறுப்பும் கரிசனையும் இருக்க வேண்டி யது அவசியம்.(மேலும்....)

கார்த்திகை 10, 2010

நிலவில் பனிக் கட்டி படிமங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நிலவுக்கு சந்திர யான்-1 என்ற ஆளில்லாத விண் கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலத்துடன் அமெரிக்கா வின் நாசா விண்வெளி மையத்தின் இலகு ரக செயற்கை இழை ரேடார் சாதனமும் அனுப்பப்பட்டது. இந்த ரேடார் சாதனம் அனுப்பிய தகவல்களை நாசா விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்ததில், நிலவின் வடக்குப் பகுதியில் 40க்கும் மேற் பட்ட சிறிய பனிக் கட்டிகள் 2 – 15 கி. மீ. விட்டம் கொண்டவையாக உள்ளன. இந்த பனிக் கட்டி படிமங் கள் மூலம் நிலவில் தண்ணீர் உள் ளது மீண்டும் உறுதிப்படுத்தப்பட் டுள்ளது. நிலவில் உள்ள இந்த பனிக் கட்டி படிமங்களில் 60 கோடி மெட்ரிக் தொன் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாசா ரேடார் சாதனம் அனுப்பிய தகவல்களை பல்வேறு விதமாகப் பகுப்பாய்வு செய்ததில் இந்த பனிக் கட்டி படிமங்கள் இடம்பெயரவும் அல்லது அதே இடத்தில் நிலை கொண்டிருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை 10, 2010

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் சர்ச்சை, துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இம் மாதம் துருக்கியில் நடைபெறுமென ஈரான் வெளிநாட்டமைச்சர் மொனாச்சர் மொட்டாசி தெரிவித்தார். இதில் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன, பிரான்ஸ், ரஷ்யா, சீனா என்பவற்றுடன் ஜேர்மனியும் கலந்து கொள்ளவுள்ளது. இம் மாநாடு நவம்பர் 15, 17 ம் திகதிகளில் வியன்னாவில் நடைபெற முன்னர் தீர்மானிக்கப்பட்டது. இதை துருக்கியில் நடத்த ஈரான் விரும்புகின்றது. இதையடுத்து ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இடத்தையும், திகதியையும் மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்றும் ஈரான் வெளிநாட்டமைச்சர் விளக்கினார். யூரேனியம் செறிவூட்டலைத் தொடரும் ஈரான் அணு ஆயுதங்களை இரகசியமாக உற்பத்தி செய்வதாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இவை பற்றி பேசும் பொருட்டே இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஐ. நா. அதிகாரிகள் சோதனையிட ஈரான் அனுமதிக்க வேண்டுமென அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகின்றது.

கார்த்திகை 10, 2010

ஜனாதிபதி பதவியேற்பு

உலகில் மிகப் பெரிய பாற்சோறு

ஜனாதிபதியின் இரண்டாவது பதவி ஏற்பு நிகழ்வை முன்னிட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி உலகில் மிகப்பெரிய பாற்சோறு தயாரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியது. 65 ஆயிரம் பேர் சாப்பிடக் கூடிய இந்த பாற்சோற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைக்க உள்ளார். 500 சமையற் காரர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்படவுள்ள இந்த பாற்சோற்றுக்கு 7 ஆயிரம் கிலோ மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படவுள்ளன. 1,200 கிலோ பச்சை அரிசி, 300 கிலோ மர முந்திரிகை, 250 கிலோ கருப்பட்டி, 250 கிலோ உலர்ந்த திராட்சை, 150 கிலோ எண்ணெய், 150 கிலோ தேன் பாணி, 24 கிலோ உப்பு, 1,500 தேங்காய்கள், 3,500 லீட்டர் தண்ணீர் என்பன இதற்காகப் பயன்படுத்தப்படும். நவம்பர் 17 முதல் 20 ஆம் திகதி வரை சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள ‘சுதந்திரம்’ கண்காட்சி நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் ஒரு அங்கமாக எமது தேசிய பாற்சோறு சமைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

கார்த்திகை 10, 2010

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 909 மில். ரூபா ஒதுக்கீடு

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 909 மில்லியன் ரூபா கட்டுநிதி கிடைத்திருப் பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சுகுமார் இமெல்டா தெரிவித் துள்ளார். யாழ். செயலகத்தில் இடம்பெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித அபிவிருத்தித் திட்டத்தின் செயல்பாடுகள் மீள் பரிசீலனை செய்யும் மாதாந்த கூட்டத்தில் அவர் இத்தகவலை வெளியிட்டார். இந்நிதியில் குடாநாட்டில் 64 வீதிகளை அபிவிருத்தி செய்ய 379 மில்லியன் ரூபாவும், 11 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை புனரமைக்க 26 மில்லியன் ரூபாவும் 12 பொதுக் கட்டடங்களை புனரமைக்க 203 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளன. (மேலும்....)

கார்த்திகை 10, 2010

புற்றுநோய் செல் அழிக்கும் பப்பாளி இலைச்சாறு

உலர்ந்த பப்பாளி இலை தூளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் அல்லது வடிநீர் பத்து வெவ்வேறு வகையான புற்றுக் கட்டிகளின் செல் களைக் கொன்று அதன் வளர்ச்சி யைக் குறைக்கிறது என புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பப்பாளி இலை வடி நீர் எப்படி புற்றுக் கட்டிகளின் வளர் ச்சியைக் குறைக்கிறது என்பதை அறிய லிம்போமோ வகைப் புற்றுக் கட்டிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. புற்றுக் கட்டிகள் வளரக் காரணமான செல்கள் தாமாகவே அழிய தேவையான தூண்டுதலை பப்பாளி இலை வடிநீர் தருவதாகக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் பப்பாளி இலையிலிருந்து எல்லா வகையான புற்று நோய்களுக்கும் மருந்து தயாரிக்கும் வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கார்த்திகை 10, 2010

இலங்கைத் தமிழர் மீள்குடியேற்றம் இந்திய அரசு உரிய நடவடிக்கை - சோனியா காந்தி

இலங்கைத் தமிழர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து இலங்கை அரசாங்கத்துடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது என்றும் அவர்கூறியுள்ளார். தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு கடந்த அக்டோபர் 8 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் 30 ஆயிரம் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோனியாகாந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் அந்தக் கடித்தில் மேலும் பிரஸ்தாபித்துள்ளார்.

கார்த்திகை 10, 2010

கண்ணாடிக் கொள்கலன்கள் பாவனைக்கு பாதுகாப்பானவை

கண்ணாடி, இயற்கை மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். ஆதலால், கண்ணாடிக் கொள்கலன்களுக்கும் அவற்றினுள் பேணப்படும் பதார்த்தங்களுக்கும் இடையிலான இரசாயனத் தாக்கம் புறக்கணிக்கத்தக்களவிலேயே நடைபெறுகிறது. இவ்வியல்பு காரணமாக, கண்ணாடிக் கொள் கலன்களை மீளப்பாவித்தலானது ஆரோக்கியமானதும் பாதுகாப் பானதுமாகுமெனக் கருதப்படுகிறது. மீள் சுழற்சி செய்யப்படும் கண்ணாடிப் பொருட்கள் கண்ணாடி தயாரிப்பின் மூலப்பொருளாக மட்டும் பயன்படுவதில்லை. அலங்கரிக்கப்பட்ட நில ஓடுகளின் உற்பத்தியிலும் நிலவடிவமைப்பிலும் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட கரையை மீளக் கட்டமைப்பதிலும் துணை புரிகின்றன. (மேலும்....)

கார்த்திகை 10, 2010

ஈராக்கில் பிரிட்டிஷ் படைகளின் சித்திரவதை

ஈராக், பஸ்ராநகருக்கு அருகில் இரகசிய விசாரணை முகாமில், பிரிட்டிஷ் படையினர் கைதிகளை சித்திரவதை செய்து வந்துள்ளனர். கைதிகளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுப்பது, மணித்தியாலக் கணக் காக முட்டுக்காலில் நிற்க வைப் பது, ஒரு மீட்டர் அகலமான அறை ஒன்றினுள் சிறை வைப்பது இவை போன்ற சித்திரவதைகள் மட்டும ல்ல, பெண் சிறைக்காவலர்கள் முன் னிலையில் ஆண் கைதிகள் பாலியல் இம்சைக்குள்ளாவதும் நடந்துள்ளது. சித்திரவதையை தடுக்கும் ஜெனீவா நிபந்தனைகளை பிரிட்டிஷ் படைகள் மீறியுள்ளன. பிரிட்டிஷ் அதிகாரிகள், சித்திரவதை செய்யும் யுக்திகளை கற்றுக் கொடுக்கும் வீடியோவும் சிக்கியுள்ளது.

கார்த்திகை 10, 2010

இந்தியாவிற்கு

ஒபாமா பயணத்தால் யாருக்கு லாபம்?

வர்த்தகத்துறையில் ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அணுமின் சக்தித் துறைக்கான சாதனங்கள், ராணுவ மற்றும் சிவில் விமானங்கள், பாதுகாப்புத்துறை தளவாடங்கள் போன்றவற்றை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொள்வது என்பது இந்த ஒப்பந்தங்களில் குறிப் பிடத்தக்கவையாகும். அமெரிக்காவில் ஏராள மான வேலைவாய்ப்புகளை இந்த ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும் என்று ஒபாமாவே வெளிப்படை யாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் 50 ஆயிரம் என்று அடக்கமாகக் குறிப்பிட்டாலும் சுமார் ஏழு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்....)

கார்த்திகை 10, 2010

செயற்கை நியூரோன்கள் தயாரிப்பு

மூளை செல்லை (நியூரோன்) செயற்கையாக வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். நியூரோன் என்பது மூளைக்கும், உடலுக்கும் தகவலைக் கடத்தும் செல்களாகும். அமெரிக்காவின கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான் போர்டு பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி ஆய்வுக் குழுவினர் இந்த நியூரோன் செல்லை உருவாக்கி உள்ளனர். உடலின் தோற் பரப்பின் அடியில் உள்ள செல்லை குறிப்பிட்ட 3 ஜீன்களைக் கொண்டு முடுக்கிவிட்டு நியூரோன் செல்லாக உருமாற்றி உள்ளனர். இது வழக்கமாக நியூரோன்கள் போல உணர்வுகளை கடத்துவதில் சிறப்பாக செயலாற்றுகிறது. ஒரு வாரத்தில் 20 சதவீத அளவில் வேலைகளை வெற்றிகரமாக செய்யும் வகையில் முன்னேறியது. இதற்கு முன்னோடியாக எலிகளின் செல்களில் குறிப்பிட்ட வைரசை உட்செலுத்தி மாற்றங்களை ஏற்படுத்தி நியூரோன்களைப் போல செயல்பட வைத்தனர். அதில் வெற்றி கிடைத்த பின்னரே மனிதனில் சோதித்துப் பார்க்கப்பட்டது. தற்போது அதிலும் வெற்றி கிடைத்துள்ளது. நியூரோன் உற்பத்தி விஞ்ஞான உலகில் ஒரு அளப்பரிய சாதனையாக கருதப்படுகிறது.

கார்த்திகை 10, 2010

 

இந்திய விஜயத்தை முடித்துக் கொண்ட ஒபாமா நேற்று இந்தோனேஷியா பயணம்

இந்திய விஜயத்தை முடித்துக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று இந்தோனேஷியா சென்றார். ஒபாமா சிறுவராக இருந்த போது இந்தோனேஷியாவில் வாழ்ந்தவர். இதற்கு முன்னர் இந்தோனேஷியா செல்ல ஒபாமா திட்டமிட்டபோதும் அமெரிக்க காங்கிரஸில் ஏற்பட்ட நெருக்கடியால் இப் பயணம் பிற்போடப்பட்டது. உலக பொருளாதாரத்தில் இந்தோனேஷியாவின் பங்கு அளப்பரியது. ஜனநாயகத்தில் சிறப்பிடம் வகிக்கும் இந்தோனேஷியா ஜி20 அமைப்பிலும் அங்கம் வகிக்கின்றது. இங்கு வந்துள்ள ஒபாமா அந்நாட்டின் ஜனாதிபதி சுசிலோ பம்போ யுடோயானாவுடன் முக்கிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளார். (மேலும்....)

கார்த்திகை 09, 2010

ஒரு இனப் பிரச்சினைத் தீர்வை அரசியல் மயமாக்காமலும் அடுத்த பரம்பரைக்கு விட்டு விடாமலும் தீர்வினைக் கண்டுவிட வேண்டும் - புளொட் தலைவர்

விடுதலைப் புலிகள் செயற்பாட்டில் இருந்த காலத்தில் பல இயக்கங்கள் இருந்தன. புலிகள் தாங்களே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை பிரகடனப்படுத்தி பலரை பயத்திலோ அல்லது நயத்தாலோ தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டனர். சிங்கள அரசியல் தரப்புகள்கூட புலிகளின் இந்த நிலைப்பாட்டை விரும்பியிருந்தன என்பது போலவே எனக்கு அன்று தெரிந்தது. இதற்குக் காரணம் இருந்தது. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்ற நிலைப்பாட்டை இத் தரப்புகள் விரும்பியதன் காரணம் மிக இலகுவாக ஒரு தீர்வைக் காண்பதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று அவை கருதியமையாகும். விடுதலைப் புலிகள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கு வரமாட்டார்கள், எனவே நாம் தீர்வைக் காண்பதில் அர்த்தம் இல்லை என்று பல தலைவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். இத் தரப்புகள் இதனை ஒரு சாட்டாக சர்வதேச தரப்புகளுக்கும் இலகுவாக கூறிக் கொண்டன. ஆகவே ஏகப்பிரதிநிதிகள் என்ற விடயம் தமிழ் மக்களுக்கு பாதகமான ஒன்றாகவே அமைந்திருந்தது. புலிகள் இல்லாத தற்போதைய சூழ்நிலையில் முதற் கட்டத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் கருத் தொருமைப்பாட்டுக்கு வருவது மிகவும் முக்கியமானது. முதற் கட்டத்தில் ஒரு ஒற்றுமை முன்னணி ஏற்பட வேண்டும் என்று நான் கூற வரவில்லை. முதலில் தேவை கருத்தொருமைப்பாடேயாகும். இதன் அடிப்படையிலேயே தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற விடயத்துடன் தொடர்புபட்டிருக்கிறோம். (மேலும்.....)

கார்த்திகை 09, 2010

வடக்கு கிழக்கு இணைப்புக்காக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணையவில்லை - கிழக்கு மாகாண முதலமைச்சர்

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்ததே தவிர, மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு சேரவில்லை" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். வடக்கும் கிழக்கும் மீண்டும்  இணைய வேண்டும் என்றால் கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாகெடுப்பு நடத்த வேண்டும். அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் கிழக்கு மாகாண மக்கள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார் என அவர் கூறினார். முன்னாள் தமிழ் தலைவர்கள் விட்ட தவறை விடுவதற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி  தயாரில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். "வடக்கும் கிழக்கும் ஒரு மாகாணமாக இணையும் பட்சத்தில் யாழ்பாணத்தை சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக வருவார். இதனால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர் பதவிகளில் பாதிக்கப்படுவார்கள்" என முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.அதேவேளை, "தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் யாருடனும் பேச்சு நடத்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தயார்" என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பிட்டார்.

கார்த்திகை 09, 2010

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மடத்திலிருந்து வெளியேறுவதற்கு இராணுவத்தினர் மறுப்பு

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான மடத்திலிருந்தும் ஆலயத்திற்கு அருகிலுள்ள கடைகளிலிருந்தும் படையினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையினை கூடிய விரைவில் மேற்கொண்டு, ஆலயத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மீளவும் பெற்றுத்தர வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினர் ஐக்கியதேசியக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடந்த சனிக்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. ஆலயத்திற்கு சென்று நிர்வாகத்தினரை சந்தித்த போதே இந்தக் கோரிக்கையினை அவர்கள் விடுத்துள்ளனர். ஆலயத்தின் மடத்திலும் மற்றும் ஆலயதிற்கு சொந்தமான கடைகளிலும் இராணுவத்தில் 58 ஆவது படையணியினர் நிலைகொண்டுள்ளனர். ஆலயத்தின் மடத்தினை அவர்கள் தங்களது சமையலறையாக பயன்படுத்தி வருகின்றனர். (மேலும்....)

கார்த்திகை 09, 2010

ஒபாமா வர முன் புதுடில்லியில் திடீரென கார் ஒன்று தீப்பிடித்தது!

ஒபாமா புதுடில்லிக்கு வருவதற்கு சற்று முன்னர் மௌரியா ஹோட்டல் பகுதியில் திடீரென கார் ஒன்று திடீரென தீப்பிடித்தது. இந்தியாவுக்குக் கடந்த வெள்ளியன்று விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று முன்தினம் புது டில்லி வந்தார். புதுடில்லி மௌரியா ஹோட்டலில் அவர் தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அவர் வருவதற்கு சற்று முன், ஹோட்டல் பகுதியில் சென்று கொண்டிருந்த டாடா இண்டிகோ கார் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர். இதில் கார் பலத்த சேதமடைந்தது. எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இது பற்றி புதுடில்லி பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கார்த்திகை 09, 2010 ___

சிறைச்சாலைச் சீர்திருத்தத்தின் பிரதான அம்சம்

வெலிக்கடை சிறைச்சாலையில் பொலிசார் கைதிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவே மீண்டும் கூற வேண்டி யுள்ளது. கைதிகள் மேற்கொண்ட தாக்குதலில் நாற் பதுக்கு மேற்பட்ட பொலிசார் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர். கடந்த சில காலமாக இலங்கையின் சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் சம்பவங்களும் சிறைச்சாலை தொடர்பாக வெளியாகும் செய்திகளும் அதிர்ச்சியூட்டு வனவாக மாத்திரமன்றிச் சிறைச்சாலை நிர்வாகம் தொடர்பாகப் பல கேள்விகளை எழுப்புவனவாகவும் உள்ளன. தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைக்குள் அடித்துக் கொல் லப்பட்ட சம்பவத்துக்கு அடுத்தபடியாகப் பாரதூரமான சம்பவமாக நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதல் உள்ளது. இச்சம்பவத்தில் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்பது தான் வித்தியாசம். (மேலும்.....)

கார்த்திகை 09, 2010

நெருங்கிய கூட்டாளிகளாக மாறிவிட்டோம் - ஒபாமா

அணுசக்தி உடன்பாடு கையெழுத்தான தைத் தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்கா வும் முன்னெப்போதையும் விட மிக நெருங் கிய கூட்டாளிகளாக மாறிவிட்டன என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறினார். தனது இந்தியப் பயணத்தின் நிறைவாக ஜனாதிபதி ஒபாமா திங்களன்று மாலை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ஆயி ரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பல் வேறு பெருமைகளை தனது உரையில் எடுத்துரைத்த ஒபாமா, தேசத்தந்தை காந் திக்கும், அமெரிக்க ஜனநாயகப் போராளி களில் ஒருவரான மார்ட்டின் லூதர் கிங்கிற் கும் இடையிலான உறவையும் ஒற்றுமை யையும் சுட்டிக்காட்டினார். (மேலும்....)

கார்த்திகை 09, 2010

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு உலக வங்கி 575 கோடி கடனுதவி

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உள்ளூர் சேவை அபிவிருத்தித் திட்ட த்துக்கு உலக வங்கி 5.75 பில்லியன் (575 கோடி) ரூபா கடனுதவி வழங் கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூ ராட்சி சபைகளின் சேவைகள் அபி விருத்தி செய்யப்படவிருப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறி வித்துள்ளது. இதன் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உட்கட்டுமானங் கள், வீதிகள் என்பன புனரமை க்கப்படவிருப்பதுடன், பொதுக் கட் டடங்கள், பாலங்கள் என்பனவும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள் ளன. அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களி லுள்ள 65 பிரதேச சபைகள், வடக் கிலுள்ள 9 நகர சபைகள், கிழக்கி லுள்ள 3 நகர சபைகள் மற்றும் இரு மாகாணங்களிலுமுள்ள மாநகர சபைகளின் சேவைகள் இந்தத் திட்ட த்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட வுள்ளன. (மேலும்....)

கார்த்திகை 09, 2010

 

அம்பாந்தோட்டையில் மட்டுமல்ல

மன்னார் - சிலாவத்துறையில் ஆயிரம் மில். ரூபா செலவில் துறைமுகம்

மன்னார் சிலாவத்துறையில் ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் துறைமுகமொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்தில் மன்னார் மாவட்டத்திற்கு 6 ஆயிரம் வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதில் முதலாவதாக சிலாவத்துறையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. புத்தளம் மன்னார் பாதை திறந்து மக்கள் போக்குவரத்துகள் இடம்பெறுகின்ற போது இப்பகுதி பல் துறைகளிலும் அபிவிருத்தி அடையும், சிலாவத்துறையானது எதிர்காலத்தில் வர்த்தக மத்திய நிலையமாக பரிணமிக்கும். (மேலும்....)

கார்த்திகை 09, 2010

Toronto Depavali event

I just got back from Our High Commission Deepavali event.What a Great day for Sri Lanka High Commission in Ottawa & Toronto, Canada. It’s a most successful DEEPAVALI event ever. We had hall full of people 90 % Tamils rest Muslim and Sinhalese and Over 5 Member of Parliament’s came for this event. Hindu Priest performed  Puja ritual - Religious Observance conducted by Siva Shri Thiyagarajah Kurukkal of the Sri Durrka Hindu Temple , North York, Toronto. Batticaloa Tamil Rev. father S.J / Akrapathu Muslim Maulana / Buddiest monks  six of them came for this event. (more....)

கார்த்திகை 09, 2010

 

வடபகுதி வைத்தியசாலைகளுக்கு அம்பியுலன்ஸ், கிளினிக் வாகனங்கள் கையளிப்பு

வட பகுதி வைத்தியசாலைகளுக்கென மூன்று அம்பியுலன்ஸ் வண்டிகளும், இரண்டு நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வாகனங்களும் இன்று கையளிக்கப்படவுள்ளன. வவுனியாவிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள வைபவத்தின் போது வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி இந்த வாகனங்களை இன்று கையளிக்கவுள்ளார். அம்பியுலன்ஸ் வண்டிகள் மற்றும் நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வண்டிகளுக்கென வட மாகாண சபை 150 இலட்சம் ரூபாவை செலவு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய வைத்தியசாலைகளுக்கு தலா ஒவ்வொரு அம்பியுலன்ஸ் வண்டிகளும், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு தலா ஒவ்வொரு நடமாடும் பற்சிகிச்சை கிளினிக் வாகனங்க ளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

கார்த்திகை 09, 2010

வேலையற்றோர் தொகை 5.4 வீதமாக குறைவு

இலங்கையின் வேலையற்றோர் தொகை 5.4 வீதமாகக் குறைவடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் மொத்தமாக வேலையற்றவர்களின் எண்ணிக்கை 437,000 என்றும் இதில் 4.1 வீதமானவர்கள் ஆண்கள் என்றும் 8 வீதமானவர்கள் பெண்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 15 முதல் 24 வயதெல்லையுடைய இளைஞர்களில் வேலையற்றோர் தொகை 20.7 வீதம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 09, 2010

 

இந்தோனேஷியாவில் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

இந்தோனேஷியாவில் ஸ்தம்பித்த விமான சேவைகள், இயல்பு வாழ்க்கை என்பன நேற்று திங்கட்கிழமை வழமையான நிலைக்குத் திரும்பின. ரத்துச் செய்யப்பட்ட விமான சேவைகள் மீண்டும் வழமையான சேவையில் ஈடுபட்டதாக ஜகர்த்தா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மொரப் எரிமலை குமுறி பாரிய தீப் பிளம்புகளை வெளியிட்டதால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். பலர் காயமடைந்ததுடன் பல்லாயிரக் கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இதையடுத்து ஜாவா தீவு வழியாகச் செல்லும் விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டன. வான் எங்கும் புகை மண்டலங்கள் சாம்பல் துகழ்கள் காணப்பட்டதால் விமானப் போக்குவரத்துத் தடைப்பட்டது. தற்போது நிலைமைகள் பட்டிப்படியாக சீரடைந்துள்ளதால் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகி யுள்ளன எனினும் மொரப் எரிமலையை அண்மித்துள்ள பிரதேசங்களிலுள்ள உள்ளூர் விமான நிலையங்கள் சில இன்னும் திறக்கப்படவில்லையென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை 09, 2010

உலகத் தரச் சான்றிதழுக்குத் தயாராகும் திருச்செந்தூர்

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஐ. எஸ். ஓ. உலகத் தரச் சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. முருகனின் மற்ற ஐந்து படை வீடுகள் மலை மீதுள்ள நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் மட்டும்தான், அலை வீசும் கடலருகே குடைவரை கோயிலாக (மலையை குடைந்து அமைத்தது) அமைந்துள்ளது. இக்கோயிலின் ஆண்டு வருமானம் தற்போது 22.50 கோடி ரூபாயாக அதிகரித்து தமிழக கோயில்கள் வருமானத்தில் மூன்றாமி டத்தில் உள்ளது. கடந்த காலங்களில் திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்யலாம் என நினைப் போருக்கு கோயிலில் ஆங்காங்கே திரியும் ஆடு, மாடு, நாய்கள் மற்றும் எச்சில் இலைகள், குப்பை கிடங்குகள் தான் கண்ணில்படும். ஆனால் இப்போது தூய்மையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகம் ‘பளிச்’ என காட்சியளிக்கிறது. (மேலும்....)

கார்த்திகை 09, 2010

 

வவுனியா மாவட்டம்

மீள்குடியேற்ற கிராமங்களில் தொல்லைதரும் வனவிலங்குகளை விரட்டியடிக்க வேலைத்திட்டம்

காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் வவுனியா மாவட்ட மீள்குடியேற்றக் கிராம மக்கள் முகம் கொடுத்திருக்கும் தொல்லைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கவென விசேட வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு ள்ளது. இராணுவத்தினரும், வனவளத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை நேற்று ஆரம்பித்ததாக வவுனியா மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். இந்த விசேட வேலைத் திட்டத்தின் கீழ் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப் பகுதிக்குள் விரட்டப்படும். அதனைத் தொடர்ந்து அவை மீள்குடியேற்றக் கிராமங்களுக்குள் பிரவேசிக்க முடியாத படி மின்வேலி அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார். வவுனியா மாவட்ட மீள்குடியேற்ற கிராமங்களில் யானைகள் மற்றும் காட்டு விலங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் இரவை அச்சத்துடன் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 09, 2010

 

வெலிக்கடை சிறை தாக்குதல் சம்பவம்

சிறை அதிகாரிகள், சி.ஐ.டி. தனித்தனியாக விசாரணை

வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொள்ள சென்ற பொலிஸார் மீது கைதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர் பாக பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை திணைக்களமும், பொலிஸ் திணைக்களமும் இந்த சம்பவம் தொடர்பாக தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. மேற்படி தாக்குதல் சம்பவத்தின் பின்னணி, தாக்குதல்களுக்கு பயன்படுத்தப் பட்ட பொருட்கள் எவ்வாறு கைதிகள் உள்ள பிரிவுக்குக் கொண்ட வரப்பட்டன என்பன தொடர்பாக விசேட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 08, 2010

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(இது ஒரு கதை, கட்டுரை, காரியம்)

(சாகரன்)

ஊருக்கு போக முன்பு தங்கியிருக்க எனக்கொரு தனி மரம் வேண்டும். அதுவும் என் கிராமத்தில் நான் பிறந்து தவழ்ந்து, உருண்டு, ஆடிப்பாடி, ஓடியாடி, ஆடு,மாடு மேய்த்து இதற்கிடையே அகரம் கற்று அதன் அரிசுவட்டில் ஆசானாக என்னை மாற்றிய என் கிராமத்தில் எனக்கொரு தனி மரம் வேண்டும். என் தந்தையின் தோள்களில் தொங்கித் திரிந்த என் வீதிகளில் தடம் பதிக்க எனக்கொரு தனிமரம் வேண்டும். என் கிராமத்து தேவதைகளின் ரம்யத்தில் மிதந்த என் கிராமத்தில் எனக்கு ஒரு தனிமரம் வேண்டும். என் அக்காளும், அண்ணையும், மச்சானும், மச்சாளும், மாமாவும், மாமியும், பெரியய்யா, பெரியம்மா, குஞ்சாச்சி, குஞ்சப்பு, ஆச்சி, அப்பு, நண்பன், நண்பி எல்லோரும் வாழ்ந்து மகிழ்ந்த பூமியில் எனக்கு ஒரு தனிமரம் வேண்டும். எந்தையும், தாயும் காதலித்து, இணைந்து, மகிழ்ந்து, வாழ்ந்த பூமியில் எனக்கு ஒரு தனிமரம் வேண்டும். மண்ணர் அப்பா பிறந்த பூமியில் எனக்கு ஒரு தனிமரம் வேண்டும்...... நான் கேட்பது தனிமரம்……. தோப்பு அல்ல……. என்னுடன் கூடவே வீடற்ற யாவருக்கும் தங்கியிருக்க ஒரு தனிமரம் வேண்டும். (மேலும்.....)

கார்த்திகை 08, 2010

புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து வட, கிழக்கு அபிவிருத்தியில் ஈடுப்பட விருப்பம - பீரிஸ் _

புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விருப்புவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜெர்மனிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போதே பீரிஸ் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும். யுத்த காலப்பகுதியில் அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் ஆதரவாக செயற்பட்ட போதிலும், தற்போது நிலைமை மாறியுள்ளது. தற்போது புலம்பெயர் தமிழர்களுக்கு இடையில் வித்தியாசமான நிலைப்பாடுகள் காணப்படுகின்றது" என தெரிவித்துள்ளார். _

கார்த்திகை 08, 2010

ஈழ மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அது அவர்களின் படிப்பாக மட்டும்தான் இருக்கும் - நடிகர் கருணாஸ்

தமிழ்நாட்டில் வாழும் ஈழ மாணவர்களின் படிப்பிற்கு நடிகர் கருணாஸ் உதவி செய்துள்ளார். ஈழத்தில் இருக்கும் மக்கள் பிரச்சனைக்கு உள்ளாவதைப் போல, இங்கு இருக்கும் சில நடிகை நடிகர்களும் இலங்கைக்கு போனதாலும், போக முயன்றதாலும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டார்கள். அதில் கருணாஸும் ஒருவர். அன்மையில் இவர் இலங்கையில் உள்ள முருகன் கோவிலில் தனது குழந்தைக்கு முடி இறக்க செல்ல முயன்றதால் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களிலும் உள்ள நன்றாக படிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களில் உயர் கல்விக்கு உதவி செய்து வருகிறாராம் நடிகரான கருணாஸ். (மேலும்....)

கார்த்திகை 08, 2010

ஒபாமாவின் கொள்கைகளை எதிர்ப்பது ஏன்?

ஒபாமா ஜனாதிபதியாக வந்ததால் கறுப் பின மக்களின் வாழ்க்கை விடிந்துவிட வில்லை. அமெரிக்காவில் வேலையின்மை 9.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதில் கறுப் பின மக்களின் வேலையின்மை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. இனவெறி என்பது பல் வேறு வடிவங்களில் அமெரிக்க சமூக வாழ் வில் தொடரவே செய்கிறது. எந்தவொரு தனிநபரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இடதுசாரிக் கட்சி களோ எதிர்ப்பதில்லை. அவர் பின்பற்றும் கொள்கை என்ன? அவர் எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார் என்பதை பொறுத்தே ஆதரவு அல்லது எதிர்ப்பு என் பதை முடிவு செய்கிறது. அந்த வகையில் ஒபாமா இந்தியாவை ரட்சிக்க வரவில்லை. மாறாக, சுரண்டலை, நிர்ப்பந்தத்தை தீவிரப் படுத்தவே வருகிறார். மரண வியாபாரியாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகவே இங்கு வருகிறார். அவரது வருகையை எதிர்க்க இடதுசாரிக் கட்சிகள் மட்டுமின்றி அனைத்து தேசபக்தர்களும் முன்வர வேண்டும். (மேலும்....)

கார்த்திகை 08, 2010

தமிழ் மக்களின் அபிவிருத்திபற்றிச் சிந்திப்போரும் சர்வதேசத்தில் உளர் : தூதுவர் ரவிநாத்

புலம்பெயர்ந்த தமிழர்களின் உண்மையான தன்மையை சர்வதேசம் இனங்கண்டு கொள்ள வேண்டியதவசியம். பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை நோக்கமாக கொண்டுள்ள புலம்பெயர்ந்தவர்களைப் போன்று, தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பாக சிந்திக்கும் தரப்பினரும் சர்வதேச ரீதியாக உள்ளனர். இதில் சிறந்த சிந்தனையுடையவர்கள் தொடர்பாக தெளிவினை சர்வதேச சமூகத்தினர் பெற்றுக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இலங்கை தனது தோற்றத்தை சர்வதேச ரீதியாக மேம்படுத்திக் கொள்ள முடியும். (மேலும்.....)

கார்த்திகை 08, 2010

வெலிக்கடை சிறைச்சாலை களேபரம்!

சிறைச்சாலைகள் பாதுகாப்பான இடமாக அமைய வேண்டு மென்பது மிக முக்கியம். குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் சிறைவாசமானது தண்டனை மட்டுமல்ல... குற்றவாளிகள் மனம் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியேறுவதற்கான வாய்ப்பினையும் வழங்குவதே சிறைவாசம் ஆகும். அதே சமயம் விளக்கமறியலில் வைக்கப்படும் கைதிகள் குற் றம் நிரூபிக்கப்படாதவர்களாவர். அவர்களில் குற்றம் இழைக் காதோரும் இருக்கக் கூடும். எனவேதான் சிறைச்சாலைகள் பாதுகாப்பு மிகுந்த இடமாக விளங்குவது மிக அவசிய மாகிறது. இத்தகைய நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை யில் கைதிகள் பலர் மேற்கொண்ட தான்தோன்றித்தனமான காட்டுமிராண்டித்தனம் சாதாரணமானதல்ல..... (மேலும்.....)

கார்த்திகை 08, 2010

இருபது வருடங்களின் பின்னர் மியன்மாரில் பொதுத் தேர்தல்

மியன்மாரில் இருபது வருடங்களின் பின்னர் நேற்று பொதுத் தேர்தல் நடந்தது. இதில் இராணுவ ஜுண்டாக்களுக்கு ஆதரவான கட்சிகளும் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவி ஆங்காங்சுயி ஆதரவு கட்சிகளும் போட்டியிட்டன. இராணுவ ஆட்சியாளர்க ளுக்குச் சார்பான கட்சிகளே அதிக ஆச னங்களைப் பெறலாமென எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தலில் வெல்ல வேண்டுமென் பதற்காக ஏற்கனவே இராணுவ ஜுண்டாக் கள் பல உபாயங்களைச் செய்ததாகப் பலர் கூறினர். வாக்காளர் இடாப்பில் மோசடி, வாக்காளர்களைப் பயமுறுத்தல் என்பவற்றுடன் வாக்குகளை எண்ணும் பணிகளிலும் இராணுவ ஜுண்டாக்கள் தங்கள் பலத்தைப் பிரயோகிக்கவுள்ளதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை 08, 2010

விண்வெளிக் கனவுகளை நனவாக்கிய மங்கையர்

(மாலினி அரவிந்தன்)

தொடக்க காலத்தில் பெண்களை விண்வெளிப் பயணத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள யாருமே முன்வரவில்லை. இந்த விண்வெளித் திட்டத்திற்குத் தகுந்தவர்கள், இராணுவப் பயிற்சி பெற்ற விமான ஓட்டிகளாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் காலப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அதாவது 1960ம் ஆண்டுக்குப் பிறகுதான் பெண்களாலும் அவர்களது விடாமுயற்சியால் இத்திட்டத்தில் இணைந்து கொள்ள முடிந்தது. இன்று சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் விண்வெளிப் பயணத் திட்டத்தில் மிகவும் ஆர்வத்தோடு இணைந்திருக்கிறார்கள். 1963ம் ஆண்டு விண்வெளியைத் தொட்ட முதல் பெண்மணி என்ற பெருமை ரஷ்யாவைச் சேர்ந்த வெலன்ரீனா ரெரஸ்கோவா என்ற பெண்மணியையே சேரும். (மேலும்.....)

கார்த்திகை 08, 2010

வடக்கு, கிழக்கு கடல் கொந்தளிப்பு, மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஜல் சூறாவளியின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு வடமேற்கு கடற் பரப்பு இரண் டொரு தினங்களுக்குக் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்று தெரிவித்தார். வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு கடல் பரப்பு கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலில் மீனவர்கள் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஜல் சூறாவளி இலங்கைக்கு அப்பால் சென்று விட்டது. என்றாலும் இச்சூறாவளியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு கடல் கொந்தளிப்பாக உள்ளது. இக் கடற் பரப்பில் தொடராக இடிமின்ன லுடன் மழை பெய்யும் அதேநேரம் இக் கடற் பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும். காற்று வட மேற்காக வீசும். இப்பிரதேசங்களில் மணித்தியால த்திற்கு 30 - 50 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் காற்று 60 - 70 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரிக்க முடியும். இதன் காரணத்தினால் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கார்த்திகை 08, 2010

வெலிக்கடை சிறையில் கைதிகள் பொலிஸ் மீது தாக்குதல்

வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றுக் காலை திடீர் சோதனை மேற்கொள்ள சென்ற விசேட பொலிஸ் குழு மீது கைதிகள் நடத்திய தாக்குதலில் 45 பொலிஸாரும், 5 சிறைக் காவலர்களும் காயமடைந்துள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிவில் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஐம்பது பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்.....)

கார்த்திகை 08, 2010

வடக்கில் 120 பாடசாலைகளை தரமுயர்த்த துரித நடவடிக்கை

வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட் டங்களைச் சேர்ந்த 120 பின்தங்கிய பாட சாலைகளே இந்த திட்டத்தின் கீழ் தர முயர்த்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். இவ்வாறு தரமுயர்த்தப்படவுள்ள பாடசாலைகளின் பெயர்களை பட்டியல் இடுவது தொடர்பாக ஆராயும் இறுதி கலந்துரையாடல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஆளுநரின் தலைமையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, முமாரசுவாமி மண்ட பத்தில் நடைபெறவுள்ள இக்கலந்து ரையாடலில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங் கோவன், மாகாண கல்விப் பணிப்பாளர் பி. விக்ணேஷ்வரன், பாடசாலை அதிபர்கள், உட்பட உயர் அதிகாரிகளும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கார்த்திகை 08, 2010

தமிழக மொட்டை மலை அகதி முகாமில் தீ

தென்னிந்தியாவின் விருதுநகருக்கு அருகில் இலங்கை அகதிகள் தங்கி இருக்கும் மொட்டைமலை அகதி முகாமில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 120 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தமிழ் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தீ விபத்துக்கு மின் ஒழுக்கே காரணமென ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இவ்விபத்தினால் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. ஆனால் அகதிகளின் உடமைகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தமிழ்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். (மேலும்.....)

கார்த்திகை 08, 2010

தமிழ் மக்கள்மீதான பாரபட்சங்கள் அவர்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக அரசு நோக்குவதையே காட்டுகிறதென புளொட் தலைவர் தெரிவிப்பு

அரச தொழில்துறைகளில் தமிழ்பேசும் மக்களுக்கு தற்போது இழைக்கப்படும் அநீதிகள், பாரபட்சத் தன்மைகள் என்பன விரக்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களை இந்நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே அரசாங்கம் நோக்குகிறது என்பதையே காட்டுகின்றன. இதனை அரசாங்கமே உறுதிப்படுத்துவது போன்றே உள்ளது என புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி, இந்நாட்டில் நல்லிணக்கம் உருவாகக் கூடாது என்ற நோக்கில்தான் அரசு செயற்படுகிறதா என்ற கேள்வியையும் இந்த செயற்பாடுகள் எழுப்புகின்றன. அரசாங்கத்தின் இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எமது எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறோம். அதுமட்டுமல்ல, யுத்தத்தை வெற்றி கொண்ட மனோபாவத்தில் மமதையில்தான் அரசாங்கம் இவ்வாறெல்லாம் செயற்படுவதாகத் தமிழ்மக்கள் இன்று நினைக்கத் தொடங்கியுள்ளனர். தமிழ்மக்கள் தாம் இந்நாட்டின் ஒரு பிரிவினர் அல்லர் என்பதனை அரசாங்கமே அந்த மக்களுக்கு இன்று உணர்த்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை 07, 2010

மரண அறிவித்தல்!

ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி அமைப்பின் தியாகி தோழர்சுதாகரன் (சுதா) அவர்களின் வீரத்தாய்

மட்டக்களப்பு பெரியகல்லாறு 3 ஐ சேர்ந்த பாலசிங்கம் கண்மணி அவர்கள் 06.11.2010 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வீரக்குட்டி ராசம்மா தம்பதிகளின் அன்புமகளும்,பாலசிங்கம் அவர்களின் அன்புமனைவியும்,சண்முகராஜா, தேவராஜா, கனகராஜா, மனோன்மணி, ராசமணி, பூரணசகுந்தரி, புஷ்பவதி, காலஞ்சென்ற பாக்கியராஜா, தவமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,விக்னேஷ்வரன், ராஜன், கிருபாகரன், தயாபரன், வாசுகி, மைதிலி, கீதா, காலஞ்சென்ற சுதாகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 07.11.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

மருமகள் பாஸ்கரன் 004141933910

சகோதரன் கனகராசா 00494131303186

பாசமகள் கீதா 00494171601959

மகன் வாசன் 0066814220407

கார்த்திகை 07, 2010

Deepavali Celebration at Toronto

The staff of the Sri Lanka High Commission in Ottawa and the Consulate General’s Office in Toronto are in the process  organizing a program to celebrate Deepavali  on Sunday 7th November 2010 at  5.00pm at the Korean Cultural Centre for Education, 1133 Leslie Street, North York , Ontario , M3C 2J6.

It would be appreciated if you could join us to  celebrate this important religious festival.

Sri Lanka High Commission (Ottawa)

(more.....)

கார்த்திகை 07, 2010

அவசர தேவை

செட்டிகுளம் நிவாரணக்கிராமங்களில் உள்ள 2010 G.C.E (O/L ) மாணவர்களுக்கு

செட்டிகுளம் நலன்புரி முகாமிலுள்ள மாணவர்கள் தமது படிப்பை தொடர அவசர நிதியுதவி கோருகின்றனர். ஒரு பலம் மிக்க சமூகத்தை கட்டியமைப்பதன் மூலமே ஒரு பலவீனமான நிலயில் உள்ள இனத்தை பலம் பெறச் செய்ய முடியும். நீங்கள் நேரடியாக தொடர்புகளை மேற்கொண்டு உங்கள் உதவிகளை வழங்கலாம். சூத்திரம் இணையத் தளம் இதற்கான செய்திப் பரம்பலை மட்டுமே செய்கின்றது. தொடர்பு பற்றிய விடயங்களையும், செலவினம் பற்றிய விபரங்களையும் அறிய இங்கே அழுத்தவும்  (மேலும்....)   

கார்த்திகை 07, 2010

நடைமுறை ரீதியாகவே உரிமைகளை உறுதிப்படுத்தலாம்

எல்லா இனங்களையும் சேர்ந்தவர்களுக்கு இலங்கையே தாயகம் எனக் கூறுவதில் நியாயம் உண்டு. அதேநேரம், ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு தேசிய இனமும் பெரும்பான்மையாகச் செறிந்து வாழும் பிரதேசங்களில் தாயக உரிமை கோருவதிலும் நியாயம் இல்லாமலில்லை. அந்நிய ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்த காலத்தில் தாயக சிந்தனைக்கும் சுதந்திரத்துக்குப் பிந்திய காலத்தில் தாயக சிந்தனைக்குமிடையே உள்ளடக்கத்தில் வேறுபாடு உண்டு. அந்நிய ஆதிக்கத்தின் கீழ் நாடு என்ற உணர்வு மேலோங்குவதும் சுதந்திரத்துக்குப் பிந்திய காலத்தில் தேசிய இனம் என்ற உணர்வு மேலோங்குவதுமே இதற்குக் காரணம். ஒரு பிரதேசத்தில் பெரும்பான்மையாகச் செறிந்து வாழும் தேசிய இனம் அந்தப் பிரதேசத்து டன் தனக்குள்ள தனித்துவமான உறவு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. இந்த அங்கீகாரத்தைப் பொறுத்த வரையில் வார்த்தைப் பிரயோகங்கள் முக்கியமானவை. (மேலும்.....)

கார்த்திகை 07, 2010

Sack Raja for impartial, speedy probe: CPI(M)

The Communist Party of India (Marxist) on Thursday demanded the immediate removal of Union Communications Minister A. Raja, and called for a thorough probe into the 2G spectrum scam in view of the latest findings of the Comptroller and Auditor-General of India, which have put the loss to the exchequer — due to underpricing of radio waves — at Rs.1.76 lakh crore. (more....)

கார்த்திகை 07, 2010

மௌனம் கலைய வேண்டும்

வட மாகாண முஸ்லிம்கள் பற்றி நீண்ட காலத்துக்குப் பின் ஒரு நல்ல செய்தி. ஆறு மாத காலத்துகுள் அவர்களைச் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக விசேட செயலகமொன்று அமைக்கப்படவுள்ளது என்பதே அச்செய்தி. வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இருபது வருடங்கள் கழிந்துவிட்டன. இவ்வளவு காலத்துக்குப் பின் இப்போதுதான் இம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக உருப்படியான ஒரு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனக் கூறுவது தவறாகாது. புலிகளுக்கு எதிரான இறுதி இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் இவர்களையும் மீள் குடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். என்ன காரணத்தினாலோ அது நடக்காதது கவலைக்குரியது. (மேலும்.....)

கார்த்திகை 07, 2010

மொழிகளின் வரலாறு

சில மொழிகள் அழிவடையும் நிலையில் உள்ளன. அவற்றுள் தமிழும் ஒன்று - யூனஸ்கோ

(மருதூர் ஏ. மஜீத்)

சில மொழிகள் அழிவடையும் நிலையில் உள்ளன. அவற்றுள் தமிழும் ஒன்று என்று கூறுகிறது இந்த ஆய்வு. அவற்றுள் முக்கியமானதாக அதிகமக்கள் பேசாமை ஒரு காரணமாகவும், இரண்டாவது அதிகமான மக்கள் இதனைப் படிப்பதற்கு விரும்புவதில்லை என்ற காரணமும், இம்மொழியில் எழுத்துக்கள் அதிகம் என்ற காரணத்தையும் கூற முடியும்.அதாவது, இம்மொழியின் அழிவோடு இம்மொழிகளில் உள்ள கலை, கலாசாரம் என்பனவும் அழிந்து விடும். சீன மொழியில் ஒரு எழுத்து ஒரு சொல். அதனால் மொழி வளமடைகிறது. இந்நிலைமை தமிழுக்கு இல்லை. ஒரு காலத்தில் இவ்வாறான ஒரு நிலைமை தமிழுக்கும் இருந்தது. உதாரணமாக நீ, போ, பை, கை, வைஇ மை, தை, தீ போன்ற சொற்களை கூறலாம். ஆனால் இன்று தமிழுக்கு இந்த நிலைமை இல்லை. அதனால் எழுத்துக்கள் தமிழுக்கு இடைஞ்சலாக இருக்கின்றன. அதனால் எழுத்துக் குறைப்பு அவசியமாகின்றது. இதே வேளை எல்லா மொழிகளிலும் உயிரெழுத்துகள் ஐந்தேதான் உயிர்ச்சத்தம் ஐந்துதான். ஆனால் தமிழில் உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டாக உள்ளன. எனவே உயிரெழுத்திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனலாம். உலகளாவிய மொழிகளோடு சேர்வதற்கும் நீண்டு நிலைத்து உயிர் வாழ்வதற்கும் இவ்வாறு ஏராளமான சீர்திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையில் தமிழ் மொழி உள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 07, 2010

Who is the Real Mahinda?

 (by Malinda Seneviratne)

Mahinda Rajapaksa is a dictator.  The Rajapaksas are running the country as a family business.  They are a clan.  They are into dynasty-building.  They are robbing the treasury.  They are ruining the economy.  They’ve turned Sri Lanka into a ‘failed state’.  The Rajapaksas, led by Mahinda, are the worst news that Sri Lanka has heard post-Independence.  He is a disaster when it comes to foreign relations and has angered the big players in the international community, the USA, Britain and the rest of the European Union. He is vindictive; incarcerating his political opponent and one time Army Commander, Sarath Fonseka while befriending those who are guilty of massacring hundreds of people (Karuna, Pilliyan) or else creating conditions for such blood-letting (KP) as well as known racketeers preying on people’s helplessness (Devananda). He’s a racist, anti-Tamil and is not interested in resettling the IDPs, who by the way he’s treated very shabbily. He stole an election.  There is wide-spread discontent. He will be ousted soon. (more....)

கார்த்திகை 07, 2010

கொள்கைத் தெளிவும் தொடர்ச்சியும் தமிழ்த் தலைமையிடம் இல்லாததால் அரசியல் தீர்வு சாத்தியமாகவில்லை

யுத்த முனையில் புலிகள் இயக்கம் அடைந்த தோல்வி தமிழ் மக்களின் அரசியலில் நம்பிக்கையூட்டும் திருப்புமுனையொன்றுக்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஆயுதக் கலாசாரத்துக்குள் மக்கள் அகப்பட்டிருந்த நிலை முடிவுக்கு வந்தமை மாத்திரமன்றி தனிநாடு நடைமுறைச் சாத்தியமற்றது என்பது நிரூபணமாகியமையும் இத்திருப்புமுனைக்குக் காரணம். ஆனால் இந்தச் சூழ்நிலையை அரசியல்வாதிகள் சரியாகப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. அரசியல் தீர்வு தானாக வந்து கையில் விழுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்ற நகர்வுகளின் மூலமாகவே அரசியல் தீர்வை அடைய முடியும். வெறுமனே கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலமும் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலமும் அரசியல் தீர்வை அடைய முடியாது. (மேலும்.....)

கார்த்திகை 07, 2010

பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஒரு சட்டமே நடைமுறையில் உள்ளது - ஜனாதிபதி

தற்போது பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஒரே நீதி ஒரே சட்டம் என நடைமுறையிலுள்ளது. அதற்கேதுவாக நாடு உருவாக்கப்பட்டு விட்டது. அரசியல் தேவைகளுக்காக எவரும் சட்டத்தில் கைவைக்க முடியாது. சட்டத்தை எவரும் கையிலெடுக்கவும் இடமளிக்க முடியாது. சகல மக்களுக்கும் சட்டம் பொதுவானது. சுயாதீனத்தில் கைவைப்பதற்கான உரிமை எவருக்கும் கிடையாது. சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று எமது நீதிமன்ற சுயாதீனம் தொடர்பாக பேசுகின்றனர். நானும் நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணி அதே நேரம் ஒரு வழக்காளியாக இருந்தவன். எனினும் நான் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தலை வணங்கினேன். மூன்று தடவை சிறையிலிருந்த அனுபவமும் எனக்குண்டு. எனது மனித உரிமை மீறல் தொடர்பாக நான் ஜெனீவாவுக்குச் சென்றேன். எனது ஆவணங்கள் அபகரிக்கப்பட்ட நிலையில் என்னுடன் வந்த பொலிஸ் அதிகாரி எனது நிலைப்பாட்டை அங்கு தெளிவுபடுத்தினார். (மேலும்.....)

கார்த்திகை 06, 2010

யாழ் முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 20வது வருட  நிறைவை நினைவு கூறும் நிகழ்வும், தமது தாயகம் மீளும் நிகழ்வும்

இடம்: ஒஸ்மானியா கல்லூரி, யாழ்ப்பாணம்

காலம்: 6 நவம்பர் 2010 சனி காலை 9.00 மணியிலிருந்து 12.00 மணி வரை (தொடர்ந்து மதிய போசனம்)

பிரதம விருந்தினர்: திருமதி இமெல்டா சுகுமார், யாழ் அரச அதிபர்

விசேட விருந்தினர்: வணக்கத்திற்குரிய திருமதி யோகேஸ்வரி பங்குணராஜா, யாழ் மாநகர முதல்வர்.

(மேலும்....)

கார்த்திகை 06, 2010

கைவிரித்துவிட்டுத்தான்  வருகிறார் ஒபாமா

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் இந்திய வருகை ஊடகங்களால் பெருமளவு பிரமாதப்படுத்தப்படுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசும் அவரது வருகைக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்தியாவுக்கு அவர் ஏராளமான சலுகைகளை வாரி வழங்கப்போவதாக ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் வெள்ளைமாளிகையிலிருந்து புறப்படுவதற்கு முன்பே ஒபாமா இந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிவிட்டுத்தான் புறப்படுகிறார். ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும் என்ற கோரிக் கை நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் ஒப்புக்காவது இந்தக் கோரிக்கையை ஆதரிப்ப தாக கூறிவிட்டு செல்வது வழக்கம். ஆனால் ஒபாமா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந் தியாவை இணைப்பது குறித்து அமெரிக்கா எந்த உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டார். அமெரிக்கா தான் இந்தியாவின் உண்மையான நண்பன் என்று கூறுபவர்கள் மனதில்கொள்ள வேண் டிய விஷயம் இது. (மேலும்....)

கார்த்திகை 06, 2010

கூகுளுக்கு சவால் விடும் பிளக்கோ

கூகுளுக்கு சவால் விட இன்னும் ஒரு தேடு பொறி கிளம்பி வந்துள்ளது. அதன் பெயர் பிளக்கோ. கூகுளுக்கு எதிராக ஏகப்பட்ட சர்ச் என்ஜின்கள் வந்துவிட்டன. இருந்தாலும் கூகுளை இதுவரை யாராலும் அசைக்க முடியவில்லை. இந்த நிலையில் தற்போது புதிதாக பிளக்கோ என்ற புதிய தேடு பொறி வந்துள்ளது. நேற்று தனது பீட்டா தளத்தை பிளக்கோ தொடங்கியுள்ளது. இது குறித்து பிளக்கோ தலைமை செயலதிகாரி ரிச் ஸ்கிரென்டா கூறுகையில், எங்களது நிறுவனத்தை ஆரம்பித்தபோது, எங்குமே தேட முடியாதவற்றையும் கூட இங்கு தேடலாம் என்ற நிலையில் புதிய தேடு பொறி இருக்க வேண்டும் என முடிவு செய்து விட்டோம். அந்த அடிப்படையிலேயே புதிய தேடு பொறியினை வடிவமைத்துள்ளோம் என்றார். (மேலும்....)

கார்த்திகை 06, 2010

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று இந்தியா வருகை

இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று மும்பை வருகிறார். ஒபாமாவின் இந்த சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின்றன. ஒபாமாவின் வருகையையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி ஏற்ற பின், இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். முதன் முதலாக அவர் இந்தியாவுக்கு வரவுள்ளார். இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்வதற்காக ஒபாமா இன்று காலை மும்பை வருகிறார். அவருடன் அவரது மனைவி மெச்செல், மகள்கள் ஷாஷா, மலியா ஆகியோரும் வருகின்றனர். ஒபாமாவுடன் அமெரிக்க புலனாய்வு அதகாரிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என மூவாயிரம் பேர் வருகிறார்கள். (மேலும்....)

கார்த்திகை 06, 2010

‘கருணா, பிள்ளையான், கே.பி. மூலம் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கு அரசாங்கம் குறி' - ஜாதிக ஹெல உறுமய இப்படி கூறுகின்றது

கருணா, பிள்ளையான் மற்றும் கே.பி. ஆகியோரை முறையாக நிர்வகித்து அரசாங்கம் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கு குறிவைத்துள்ளது. குறிப்பாக, கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் குறித்தும் சொத்து விபரங்கள் தொடர்பிலும் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தன் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கும் தற்போது பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள குமரன் பத்மநாதனுக்கும் எல்லாவிதமான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் பதவிகளை கொடுத்து கௌரவித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. (மேலும்....)

கார்த்திகை 06, 2010

தீபாவளியின் வரலாற்றுப் பின்னணி

(எஸ்.ஏ.பெருமாள்)

பொன்னையும் பொருளையும் குவித்து பண்ட மாற்றில் மட்டுமே ஈடுபட்டு, உற்பத்தியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வணிக வர்க்கம் வீழ்ச்சியடைந்தது. வேளாளர் வர்க்கம் வெற்றி பெற்று உற்பத்தியையும் பங்கீட்டையும் தானே செய்தது. பொருளியல் ஆதிக்கம் வேளாளர்கைக்கு வந்தது. சமயப் போர்வையில் வணிகர்கள் கைப்பற்றிய நிலங்களை வேளாளர்கள் பரந்த மக்கள் சக்தியைத் திரட்டி மோதி வெற்றி பெற்று மீட்டுக்கொண்ட னர். ஒரு காலத்தில் கோலோச்சிய சமண, பவுத்த சமயங்கள் அடியோடு வேரறுக்கப்பட்டு சைவமும், வைணவமும் தமிழகத்தில் தழைத்தன. பவுத்த ஆலயங்கள் வைணவக் கோவில்களாய் மாற்றப்பட்டன. புத்தரின் அனந்த சயனச் சிலைகள், பள்ளிகொண்ட பெருமாளாக்கப்பட்டது. அதே போல் சமணக் கோவில்களும் பள்ளிகளும் சிவ, முருகக் கோவில்களாய் மாற்றப்பட்டன. பவுத்த, சமணத் திருவிழாக்கள் வைதீக மதத்தால் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டது. அதில் ஒன்று தான் தீபாவளியாகும்.(மேலும்....)

கார்த்திகை 06, 2010

உலகில் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் ஒபாமாவை பின்தள்ளி சீன ஜனாதிபதி முதலிடம்

உலகிலேயே சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பின் தள்ளி சீன ஜனாதிபதி ஹியூ ஜின்டாவோ முதலிடத்தைப் பிடித்தார். அமெரிக்காவில் உள்ள போர்ப்ஸ் பத்திரிகை உலகிலேயே சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் முதலிடத்தை பிடித்து இருப்பவர் சீன ஜனாதிபதி ஹியூ ஜின்டாவோ, இவர் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்து இருக்கிறார். ஒபாமாவுக்கு 2வது இடம்தான் கிடைத்துள்ளது. (மேலும்....)

கார்த்திகை 06, 2010

திருகோணமலையில் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் துரிதம்

திருகோணமலை மாவட்டத்தின் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் தற் போது துரிதமாக கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே யினால் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக ‘நாரா’ நிறுவனத்தின் அனுசரணை யுடன் 7500 மீன் குஞ்சுகள் விடப் பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தின் கல்மெட்டியாவ குளம், இத்திக் குளம் மற்றும் புளியங்குளம் ஆகிய குளங்களில் இந் நன்னீர் மீன் வளர்ப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கி ன்றது. இலங்கையை கடற்தொழில் துறையை மாத்திரமின்றி நன்னீர் மீன்பிடித் துறையிலும் அதிகளவு வருமானத்தை ஈட்டி ஆசியாவில் ஆச்சரியமிக்க நாடாக மாற்ற நாமும் பங்களிப்பு செய்ய வேண்டும்.

கார்த்திகை 06, 2010

புனர்வாழ்வளிக்கப்பட்ட 158 முன்னாள் புலி உறுப்பினர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் தமிழ் போராளிகள் 158 பேர் நேற்றுக் காலை தீபாவளி தினத்தன்று விடுவிக்கப்பட்டு, பெற்றோர்கள் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பம்பைமடு, பூந்தோட்டம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், நெளுக்குளம் ஆகிய இடங்களில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் வைத்து இவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த இடங்களில் உள்ள புனர் வாழ்வு நிலையங்களுக்கு பொறுப் பாக இருந்த பாதுகாப்புப் படையி னர் இவர்களை உரியவர்களிடம் ஒப் படைத்தனர்.

கார்த்திகை 06, 2010

ஆண்களை விட பெண்கள் நீண்ட நாள் வாழ்வது ஏன்?

மனித உடல் என்பது ஒரு கார் போல. அதில் உள்ள மரபணுக்களை சந்ததிகளுக்குக் கொண்டு சேர்ப்பதுதான் அதன் வேலை. வாழ்நாள் ஓட்டத்தில் உடலில் உள்ள, செல்கள் மற்றும் திசுக்களில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் உடல் ஒரு காலகட்டத்தில் வலுவிழந்து அழிகிறது. இது எல்லா உயிரினங்களிலும் உள்ளதுதான். ஆனால் மனித இனம் உட்பட அனைத்து உயிரினங்களிலும் அவற்றின் பெண்கள் மட்டும் நீண்ட நாள் வாழ்கின்றனர். இதற்கு அவர்களின் மரபணுக்களின் தன்மைதான் காரணம் என பேராசிரியர் டாம் கிரிக்வுட் கூறுகிறார். (மேலும்....)

கார்த்திகை 06, 2010

Palmyrah to 'keep away elephants'

Palmyrah trees have been identified as a way of keeping wild elephants away from human habitats.

House attacked by elephent's

At a presentation convened by Practical Action, a non governmental organization it was revelled that the electrified fence erected to keep away elephants has failed. Elephant corridors have been obstructed by the expansion of human settlements.Farmers from Vanathavilluwa of the Puttalam district said that cultivation of crops such as Manioc has become impossible. Ranasinha Perera said that he was part of a team that observed elephant behaviour in remote areas that found out that elephents don’t cross the Palmyrah fence. “An electrified fence will stand only for ten or twelve years but a Palmyrah tree will survive for more than a hundred years said Ranasinha Perera. Perera further said that farmers in the Trincomalee and Putalam districts have successfully used Palmyrah fencing to keep elephants away.

கார்த்திகை 06, 2010

The most corrupt countries

(by Daniel Fisher)

Upset with the failings of the U.S. government these days? Take a breath. At least we're not Somalia. That beleaguered, warn-torn disaster of a nation tops Transparency International's latest list of the world's most corrupt countries. The former Italian colony of 9.8 million people on the Indian Ocean, long racked by civil war, has become a capital for piracy and terrorism with little capacity for any government at all, let alone an honest one. It ranks 1.1 on Transparency's 10-point scale. And it's hardly alone. Following closely behind are Myanmar and Afghanistan, each ranking 1.4 and each tremendously corrupt in its own way. Myanmar, formerly Burma, is run by a junta of generals who have plundered the nation's timber, minerals and natural gas and led the U.S. Treasury to slap sanctions against more than 100 of its leaders including the wife and son of No. 3 official General Thurs Shew Mann. (more....)

கார்த்திகை 05, 2010

றிசானா நபீக்

மரணத்தை வெல்லுமா....? மனித நேயம்

(சாகரன்)

தவறு விடும் மனிதனை திருத்தி மீண்டும் மனிதனாக மாற்றுவதற்கு உருவாக்கப்பட வேண்டியனவே சட்டங்களும், அதனை ஒட்டிய சம்பிரதாயங்களும், ஒழுங்கு முறைகளும் ஆகும். மாறாக மனிதன் திருந்துவதற்கு வாய்ப்பு அழிகப்பட்டாத சட்டங்களும், சம்பிரதாயங்களும், ஒழுங்கு முறைகளும் மனிதனை வெறும் நரபலியிடுவதைப்போல்தான் ஆகிவிடும். இதுதான் குற்றத்திற்கு இறுக்கமான தண்டனை வழங்கும் சவூதி அரேபியாவில் மரணதண்டனைத் தீர்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் றிசானா நபீக்கிற்கும் அமைந்து விடுமோ என்று சர்வதேச மனித நேயசக்திகள் பயப்படும் நிகழ்வாக இன்று எம்முன்னே உள்ளது. குற்றவாளிகள் விசாரிக்கப்படும் போது வெறுமனவே என்ன குற்றத்ததை செய்தார் என்று மட்டும் பார்க்காமல் குற்றம் சாட்டப்பட்டவரின் சமூகப் பின்னணி, பொருளாதார பின்னணி, வயது எல்லைகள், உடல், மன நிலைகள், என்ன சூழ்நிலையில் அந்த குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்பன நிச்சயமாக கருத்தில் கொள்ளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ் அணுகு முறையே குற்றத்திற்கான சரியான தண்டனை வடிவத்தை தீர்மானிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இதன் அடிப்படையில் வழங்கப்படும் தண்டனைகள் சமூகத்திலுள்ளவர்களுக்கு ஒருபாடமாக அமையணும். தண்டனை பெறுபவர் தனது தவற்றை உணர்ந்து திருந்தி மீண்டும் சமூகத்தின் நற் பிரஜையாக மாறுவதற்கும் வழி சமைக்கும். (மேலும்....)

கார்த்திகை 05, 2010

கார்த்திகை 05, 2010

இருள் அகன்று ஒளி தோன்றும் தீபாவளித் திருநாள்

உலகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்றைய தினம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடு கின்றனர். தீமைகள் இல்லாதொழிந்து மக்கள் வாழ்வில் ஒளிமயமான புதுவாழ்வு ஆரம்பமாக வேண் டுமென்பதே இன்றைய தீபத் திருநாளின் அர்த்தமாகும். தீங்குகள் மாத்திரமன்றி மக்கள் உள்ளங்களில் உள்ள இருளும் அகல வேண்டுமென்பதை தீபாவளியின் பிரார்த்தனையாக நாம் ஒவ்வொருவரும் கொள்ள வேண்டும்.  இத்திருநாளை வெறுமனே களியாட்டக் கொண்டாட்டத் துக்குரிய பண்டிகையாக நோக்குவது தவறு. மனித உள்ளங்களில் குடிகொண்டுள்ள கொடிய குணங்கள், இருள், அகங்காரம், அறியாமை, அஞ்ஞானம் போன்ற வேண்டத்தகாதவை யாவும் அகன்று உள்ளத்தில் ஒளி தோன்ற வேண்டுமென்ற பெரும் தத்துவத்தைக் கூறுவ தாலேயே தீபாவளித் திருநாள் பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. (மேலும்....)

கார்த்திகை 05, 2010

புலிகள் இறுதிநேரம் வரை மக்களை கேடயமாகவே வைத்திருந்தனர் - நல்லிணக்க ஆணைக்குழு முன் யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார்

பொதுமக்களுக்காக அரசாங்கம் பாதுகாப்பு வலயத்தைப் பிரகடனப்படுத்திய போதிலும், அதில் மக்களோடு மக்களாக புலிகள் இயக்கத்தினரும் இரண்டறக் கலந்திருந்தார்களென்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் அரச அதிபருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். புலிகள் மக்களை வெளியேற இடமளிக்கவில்லை என்றும் மீறித் தப்பிச் செல்ல முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்களென்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (04) சாட்சியம் அளித்த போது திருமதி சுகுமார் குறிப்பிட்டார். (மேலும்....)

கார்த்திகை 05, 2010

நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டு செல்ல ஒளி பிறக்கட்டும் - பிரதமர் டி. எம். ஜயரட்ன

உலக வாழ் இந்துக்கள் அனை வரும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் எமது நாட்டிலுள்ள அனைத்து இந்து மக்களும் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் தீபத் திருநாளை கொண்டாட கிடைத்துள்ளமை யையிட்டும் அவர்களோடு அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவும் கிடைத்துள்ளமையை யிட்டும் நான் பெருமைப்படுகிறேன் என பிரதமர் டி. எம். ஜயரட்ன தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட் டுள்ளார். அதர்மத்தை வென்று தருமம் நிலைநாட்டப்பட்டதை குறிப்பதே தீபாவளியின் பிரதான கருத்தாகும். மக்களை துன்புறுத்தி வந்த நரகா சுரனை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வதம்செய்து மக்களுக்கு விமோச னத்தை பெற்றுக் கொடுத்தார். இதனை உலக இந்து மக்கள் அனைவரும் மிகவும் பக்தியோடும், மகிழ்ச்சியோடும் நினைவு கூருவதுடன் கொண்டாடியும் வருகின்றனர். இலங்கையில் இன்று சுதந்திரமாகவும் நிம்மதியாகவும், இத் தீபத் திருநாளை கொண்டாடுகின்ற மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

கார்த்திகை 05, 2010

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் - உருத்திரகுமாரனின் அமைச்சரவை

கே.பி குழுவினரின் உதவியுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகத் தனக்குத் தானே முடிசூடி தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான அனைத்துலகப் பரப்புரைப் பணிகளை கேலிக்கூத்தாக்கியிருக்கும் சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன், தனக்கான அமைச்சர்களை தெரிவு செய்து வெளியிட்ட உள்ளக அறிக்கை பதிவு-சங்கதி வலையமைப்பிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நாடுகடந்த அரசாங்கம் என்ற மாயைக்குள் உலகத் தமிழர்களை இட்டுச் சென்ற கே.பியின் வாரிசான சட்டத்தரணி உருத்திரகுமாரன், தனது நாடகத்தின் உச்சகட்டமாக பிரித்தானியாவிலும், கனடாவிலும், பிரான்சிலும் உள்ள கே.பியின் விசுவாசிகளை அமைச்சர்களாக நியமித்து கேலிக்கூத்தொன்றை அரங்கேற்றியுள்ளார். (மேலும்....)

கார்த்திகை 05, 2010

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் தீபாவளி வாழத்துச் செய்தி

கிருஸ்ண பரமாத்மா நரகாசூரனை வதம் செய்யும்போது அழிக்கப்பட்டது நரகாசூரன் மாத்திரமல்ல மாறாக வஞ்சகம், பொறாமை, தீயநோக்கு, வன்முறை போன்ற மனித குலத்தின் சமாதானத்திற்கும், சமநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பாதகங்களையும் அழித்தார் என்பதே உண்மையாகும். இன்றைய காலகட்டத்தில் எமது நாட்டிற்கும் உலகமெங்கும் இம்மாபெரும் தத்துவம் மிகவும் வேண்டப்பட்ட ஒன்றாகவே உள்ளது. ஒவ்வொரு மனிதனிலும் காணபவ்படுகின்ற துர்குணங்களை நமக்குள் நாமே வதம் செய்யும்போது இத்தீபத்திருநாளின் மகிமையை எமக்குள்ளே உணர முடியும். எமது நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக அச்சுறுத்திக் கொண்டிருந்த கொடும் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபின் இக் கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அல்லுற்ற மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டியது உரியவர்களின் பெரும் கடமையாக உள்ளது. (மேலும்....)

கார்த்திகை 05, 2010

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 6 மாதத்தினுள் மீள்குடியேற்றம்

வட பகுதியில் இருந்த புலிகளினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை 6 மாதகாலத்தி னுள் மீள் குடியேற்றும் வகையில் முஸ்லிம்களுக்கான செயலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள தாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய, நவம்பர் முதலாம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு இந்த செயலகம் மன்னார் முசலி பிரதேசத்தில் இயங்கும். இதனூடாக 1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றப்பட்ட புத்தளம் உட்பட பல்வேறு பகுதிகளில் வாழும் வடபகுதி முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். 30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 90 ஆயிரம் பேர் 48 மணி நேரத்தில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அமைதி நிலை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை 05, 2010

வட பகுதி ரயில் சேவைக்கு இந்தியா 413.39 மில்லியன் டொலர் உதவி

வட பகுதிக்கான ரயில் சேவையை மீளமைப்பதற்காக 416.39 மில்லியன் டொலர் சலுகைக் கடனுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். இந்தத் திட்டத்தை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வட பகுதிக்கான ரயில் சேவைகளை மீளமைப்பதற்கான நடவடிக்கை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப் படவுள்ளது. இதன்படி ஓமந்தையில் இருந்து பளை வரையான ரயில் பாதையை அமைக்க 185.35 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மதவாச்சியில் இருந்து மடு வரையான ரயில் பாதையை அமைக்க 81.03 மில்லியன் டொலர்களும் மடுவில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதைக்காக 149.74 மில்லியன் டொலர்களும் செலவிடப்பட உள்ளன. (மேலும்....)

கார்த்திகை 05, 2010

 

தடுப்புக்காவலில் உள்ளோர் பட்டியல் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் தயாரிப்பு

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளின் பட்டியலொன்றை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தயாரித்து வருவதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார். இந்தப் பட்டியல் விரைவில் தமக்கு வழங்கப்படுமென்றும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார். இறுதி யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் கைது செய்யப்பட்டவர்களும் படையினரிடம் சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓமந்தை தடுப்பு முகாமுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த ஆணைக்குழுவின் தலைவர் சில்வா, அவர்களின் விடுதலை, சட்ட நடவடிக்கை குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேநேரம், தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளின் பெயர்கள் அடங்கிய நீண்டதொரு பட்டியலையும் வழங்கியிருந்தார். அதற்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான பட்டியலொன்றைத் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தயாரித்து வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

கார்த்திகை 05, 2010

ஒவ்வொரு அங்குல நிலமும் சகலருக்கும் சொந்தம்

‘இன விகிதாசாரத்தை செயற்கையாக மாற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை’

அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாண இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வதாக கர்தினல் அதி. வண. மல்கம் ரஞ்சித் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித் திருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: கர்தினல் மெல்கம் ரஞ்சித்திற்கு நல்லிணக்க ஆணைக்குழு முன் கருத்துக் கூற உரிமை உள்ளது. அவரின் கருத்துக்களை மதிக்கிறோம். ஆனால் அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஒரு பகுதியிலுள்ள நிலம் ஒரு இனத்துக்கு சொந்தமானதல்ல ஒரு இன மக்கள் ஒரு பகுதியில் தான் வாழ வேண்டும் என்று கூற முடியாது. ஒரு குழுவுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதி உரிமையானது என்பதை ஏற்க முடியாது. (மேலும்....)

கார்த்திகை 05, 2010

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் ஒபாமாவின் கட்சி பின்னடைவு

பொருளாதார நிதி நெருக்கடியால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சமயம், பல இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்தனர். இந்நிலையில் அதிபராக பதவியேற்ற பாரக் ஒபாமா இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் நினைத்தளவுக்கு அவரால் சாதிக்க முடியாமல் போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. மேலும் வேலைவாய்ப்பு வழங்கலிலும் பெரிய அளவில் மாற்றம் வரவில்லை. இந்த அதிருப்தி காரணமாகவே தங்களது ஹீரோ என கருதிய ஒபாமாவையும் உதறித்தள்ள மக்கள் முடிவெடுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (மேலும்....)

கார்த்திகை 05, 2010

புலிகளின் முக்கிய உறுப்பினர் ஜெர்மன் விமானநிலையத்தில் கைது

ஜெர்மன் குடியுரிமைபெற்ற இலங்கைத்தமிழரான 35வதுடைய அகிலன் என்கிற புலி உறுப்பினர் ஜெர்மன் டுசல்டோவ் நகரில் வைத்து நேற்றையதினம் (புதன்கிழமை 03.11.10) அன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த யூன் மாதம் இவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிமித்தம் கைது செய்வதற்கான பிடியாணை பொலிசாருக்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அவர் ஸ்பெயின் மடஸ்கார் நகரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் தங்கியிருந்ததாக தெரிய வருகிறது. ஜெர்மன் அரசசட்டத்தரணியினரால் மடஸ்கார் நகர அதிகாரிகளுக்கு அகிலனை நாடுகடத்துமாறு கேட்கப்பட்ட நிலையில் அவர் ஜெர்மன் நாட்டிற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் பொலிசாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கார்த்திகை 05, 2010

சீன ஜனாதிபதி பிரான்ஸ் பயணம் ஜி 20 மாநாடு, நிதி நெருக்கடி குறித்துப் பேச்சு

சீன ஜனாதிபதி ஹியு ஜுண்டாவோ மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை பிரான்ஸ் பயணமானார். ஐரோப்பிய யூனியனூடான வியாபார முரண்பாடுகளைக் களைதல், ஜீ 20 நாடுகளின் தலைமையை பிரான்ஸ் வகிப்பது தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸியுடன் சீன ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜி 20 நாடுகளின் மாநாடு அடுத்த வாரம் தென் கொரியாவில் இடம் பெறவுள்ளது. இம் மாநாட்டையடுத்து ஜி 20 நாடுகளின் தலைமையை பிரான்ஸ் பொறுப் பேற்கவுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 05, 2010

தித்திக்கும் தீபாவளி!

நரகாசுரனின் வதைகள், துன்பங்கள் கொடுமைகளிலிருந்து விடுபட்ட நாளை நினைவுகூர்ந்து தீபாவளி கொண்டாடப்படுகின்றது. மனித மனங்களில் தேங்கிக் கிடக்கும் அழுக்குகளையும் தீய எண்ணங்களையும் அகற்றி ஒளியேற்றுவதுடன் இல்லம் இன்பத்தில் ஜொலிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தீபங்கள் ஆவளியாக (வரிசையாக) ஏற்றப்படுகின்றன. இப்படி தீபாவளிக்குப் பல்வேறு தத்துவார்த்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் கூறிக்கொண்டே போகலாம். அது சரி மனதில் குப்பைகளைத் தேக்கி வைத்துக்கொண்டு ஒளியேற்றிவிட்டால் மாத்திரம் ஒளி கிடைத்துவிடுமா? எண்ணம் உயர்வாக இருந்துவிட்டால் உள்ளத்தில் மட்டுமல்ல இல்லத்திலும் ஒளி தானாய் மிளிரும். (மேலும்....)

கார்த்திகை 04, 2010

கனடாவில் பரபரப்பு

போர்க் குற்றங்களுடன் தொடர்பு, தமிழ் அகதி கைது

போர்க் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இலங்கைத் தமிழ் அகதியொருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்திலிருந்து எம். வி. சன் சி கப்பல் மூலம் கனடாவின் வன்கூவர் நகரிற்கு சென்ற 492 இலங்கை அகதிகளில் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார். தடுப்புமுகாமில் தற்போது வாழ்ந்துவரும் இவர் மீதான போர் குற்றங்கள் நீருபிக்கப்படுமாயின் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவார். கனேடிய குடியியல் சட்டங்களுக்கமைய நபரொருவர் தீவிரவாத நடவடிக்கைகள் அல்லது போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவராக இனங்காணப்படின் அவருக்கு கனடாவில் அனுமதியளிக்கப்படுவதில்லை. இது தொடர்பாகக் கருத்துக்கூற கனேடிய எல்லை பாதுகாப்புப் பிரிவு மறுத்துவிட்டது. (மேலும்....)

கார்த்திகை 04, 2010

On Thursday 4th of November, live at TBC Radio there is a exclusive current political Discussion with Varadaraja Perumal the former CM of northeast and Leader of EPRLF

04.11.2010 ரிபிசியின் வியாழக்கிழமை சிறப்பு அரசியல் கலந்துரையாடல்

இந் நிகழ்ச்சியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணி தலைவரும் முன்னாள் வடகிழக்கு மகாணத்தின் முதலமைச்சருமான தோழர் வரதராஐப்பெருமாள்

ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம்;

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் சர்வேதச பொருப்பாளர் தம்பா

ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர்

மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு 00 44 208 9305313 – 078107063682

On Thursday 4th of November, live at TBC Radio there is a exclusive current political Discussion with Varadaraja Perumal the former chief minister of northeast and Leader of EPRLF

TBC Political analyser  V Sivalingam

EPRLF central commitee member -Thamba

TBC Director  V Ramaraj

To participate you can call us on  00 44 208 9305313                           0r 00 44 7817063682  skype: tbcuklive

at 8.00pm to 10.00pmVisit our website : www.tbcuk.com

கார்த்திகை 04, 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சம்பந்தன் எம்.பியுடன் சந்திப்பு

தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இனப்பிரச்சினைத் தீர்வு, தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அதன் சாத்தியப்பாடுகள் குறித்து நேற்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகின்றது. கொழும்பில் உள்ள சம்பந்தன் எம்.பி.யின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் ஈ. பி. ஆர். எல். எப். பத்ம நாபா அணிச்செயலாளர் ஸ்ரீதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். (மேலும்....)

கார்த்திகை 04, 2010

Interview with WikiLeaks spokesman Kristinn Hrafnsson

“The Iraq documents give a picture of the war that has been hidden until now”

(By Jerry White)

On October 22, the web-based whistle-blower organization WikiLeaks released nearly 400,000 internal US military reports that provide damning evidence of war crimes committed by the US government against the people of Iraq.The “Iraq War Logs”—the largest leak of classified military material in history—consist of Significant Action or SIGACT reports filed by US Army soldiers between January 2004 and December 2009, which WikiLeaks notes, “detail events as seen and heard by the US military troops on the ground in Iraq and are the first real glimpse into the secret history of the war that the United States government has been privy to throughout.” (more....)

கார்த்திகை 04, 2010

Dear Friends

Attached friendship Dinner organsied to help the two important projects

1) Eluvaitivu Hospital. This is the smallest Island in north of Sri Lanka without any medical facilities (Building work already happening)

2) Children ward at Maharagama cancer hospital

We are already sold more than 200 tickets and only few tickets are available ($40 and BYO)

Please contact Noel Nadesan   0411606767

In the event you are unable to attend you could help as donating.

You could support through donating in this account.

Otherwise give your blessing

Account Detail

Australasia news pry ltd

NAB

BSB 083 175

AC 86 815 4776

Please circulate among friends

கார்த்திகை 04, 2010

புலியும் சிலையும்

பாரிஸில் தமிழ்ச்செல்வனுக்கு சிலை.  சிரிச்சு சிரிச்சு பிரபாகரன் செய்யிறதெல்லாவற்றையும் நியாயப்படுத்தி அரசியல் அறிக்கை விட்டு கடைசியாக யுத்தத்தில் மாண்டுபோன தமிழ்ச்செல்வனுக்கு சிலை. தமிழ்ச்செல்வனால் தமிழ்ச்சமூகம் என்ன நன்மை அடைந்தது.? தமிழ்மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் தமிழ்ச்செல்வன் என்ன செய்திருக்கிறார். வரலாறு தமிழ்ச்செல்வனை கொண்டாடும் வகையில் அவர் செய்த சாதனை என்ன என யோசித்துப்பார்த்தால் ஒண்டும் மண்டைக்குள் தட்டுப்படவில்லை. பாசிசத்திற்கு எதிராக கருத்தால் வானொலியிலும் இணையத்திலும் போராடி அண்மையில் மரணித்த  வை.சி கிருபானந்தன் செய்ததை விட இவர்கள் பெரிதாக ஒன்றும் வெட்டிக்கிழிக்கவில்லை. (மேலும்....)

கார்த்திகை 04, 2010

அரசாங்கத்துடன் பேசுவதே தீர்வுக்கு வழி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறு ப்பினர்கள் சிலர் இலங்கையிலுள்ள இந்தியத் தூது வரைத் சந்தித்ததாகவும் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகக் கூட்டமைப்புத் தலைவர்கள் அர சாங்கத்துடன் பேச வேண்டும் என்று இந்தியத் தூதுவர் கேட்டுக்கொண்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரி விக்கின்றன. இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா நீண்ட கால மாகவே அக்கறை செலுத்தி வருகின்றது. இதற்கு நியா யமான காரணங்கள் உள்ளன. இலங்கையில் இடம்பெ றும் நிகழ்வுகள் இந்தியாவின் பாதுகாப்புடன் ஓரளவு சம்பந்தப்பட்டவை என்பது ஒரு காரணம். இந்தியாவின் தமிழ்நாட்டு மக்களுக்கும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்குமிடையே உணர்வு ரீதியான ஓருமைப்பாடு இருப்பது இன்னொரு காரணம். (மேலும்....)

கார்த்திகை 04, 2010

ஒபாமாவுக்கான ஒரு நாள் செலவு 900 கோடி இந்திய ரூபாவாகும்

அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வருவதை முன்னிட்டு அவருடைய அதி நவீன ‘சூப்பர்’ காரும் இந்தியா வருகிறது இரசாயன, உயிரி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் அந்த காருக்குள் அணுகுண்டு போட உத்தரவிடும் ‘விசை’ இடம்பெற்றுள்ளது. இந்தியாவுக்கு அதிபர் ஒபாமா வருவதால் இந்த காரும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி நகரத் தெருக்களில் இது வலம் வரும். இது தவிர, ஒபாமா வருகையை முன்னிட்டு அமெரிக்காவில் இருந்து 40 விமானங்கள், 6 ஆயுதம் தாங்கிய கார்கள் ஆகியவையும் வருகின்றன. ஒபாமாவுக்கான ஒரு நாள் செலவு 900 கோடி இந்திய ரூபாவாகும் (மேலும்....)

கார்த்திகை 04, 2010

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் களைகட்டும் தீபாவளி

நீண்டகால பேர்ச்சூழலில் இருந்து விடுதலைபெற்ற வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இம்முறை தீபாவளிப் பண்டிகை வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முக்கிய நகரங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட இடங்களில் தீபாவளிப் பண்டிகை களைகட்டியுள்ளது. பண்டிகைக்கால வியாபாரங்கள் சூடுபிடித்துள்ளன. சிறப்பான கொண் டாட்டங்கள் விழாக்கள் என்பன பிரதேச மட்டங்களிலும் மாவட்ட மட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. (மேலும்....)

கார்த்திகை 04, 2010

அரசியல் தீர்வொன்றின் மூலமே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்று கத்தோலிக்க பேராயர்கள் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசியல் தீர்வொன்றின் மூலமே இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென்று கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் அவர்கள் வலியுறுத்தினர்.வன்முறைகளுக்கான மூல காரணத்தையும் இனங்களுக் கிடையே அமைதியின்மை யையும், சந்தேகத்தையும், நம்பிக் கையீனத்தையும் இல்லாதொழிப்ப தற்கு அரசியல் தீர்வே ஒரே வழியாகுமென்று பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.(மேலும்....)

கார்த்திகை 04, 2010

மன்னார் கட்டுக்கரை குளத்தை பாதுகாக்க ஆலோசனைக் குழு

உள்நாட்டு வெளிநாட்டு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் அதிகமானவர்களது பாராட்டினைப் பெற்றுள்ள மன்னார் கட்டுக்கரைக் குளத்தை எதிர்கால சந்ததியினருக்காக பேணி பாதுகாப்பதற்கும், உலக மரபுரிமைகளின் பட்டியலில் சேர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேசிய மட்டத்திலான பாதுகாப்புச் செயற்திட்டமொன்றினை ஆரம்பிப்பதற்கு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டுக்கரைக்குள பாதுகாப்புச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ பிரதியமைச்சர் எஸ். எம். சந்திரசேன தலைமையில் தேசிய ஆலோசனை மற்றும் தொழிற்பாட்டுச் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு கட்டுக்கரைக் குளக் கால்வாயின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிப்பதற்கு பிரதியமைச்சர் எஸ். எம். சந்திரசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

கார்த்திகை 04, 2010

சோதனை மேல் சோதனை எதிர் நோக்கும் கெயிட்டி

இன்னும் ஒரு வாரத்துக்குள் சூறாவளி தாக்கும் அபாயம் - அமெரிக்கா எச்சரிக்கை

கொலரா நோயில் சிக்கிய ஹெயிட்டி தீவு அதில் இருந்து இன்னும் மீளாத நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் அத்தீவைக் கடுமையான சூறாவளி தாக்கக் கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தாண்டு ஆரம்பத்தில் கரீபியன் நாடான ஹெயிட்டி தீவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்றுவரை 13 இலட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அந்நாட்டை கொலரா நோய் கடுமையாகத் தாக்கியது. இதுவரை கொலரா நோய்க்கு 330 பேர் பலியாகியுள்ளனர். நோய்த் தடுப்பு நிவாரணத்தில் பல நாடுகளும் உதவி வருகின்றன. (மேலும்....)

கார்த்திகை 04, 2010

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன.

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன.’ இந்தப்பழமொழி புலிப்பினாமிகளுக்கு அப்படியே அச்சு அசலாகப்பொருந்துகிறது. வருமானம் நின்றுபோன புலிப்பினாமிகள் செய்து வருகின்ற அடாவடித்தனங்கள் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற சம்பவம்.  ஜெர்மனியில் டுயிஸ்பேர்க் நகரில் அம்மன் கோவில் ஒன்றை அளவெட்டியைச்சேர்ந்த ஒருவர் உருவாக்கி நடாத்தி வந்துள்ளார். நல்ல மனிசன் சனம் கும்பிட ஒரு கோவிலை தொடங்கிய புண்ணியவான். புலிகள் பலமாக இருந்த காலங்களில் புலிகளுக்கு வளமுள்ள இடங்களில் இருந்த பணம் வருவாய் இருந்ததால் இந்த அம்மன் கோவிலை கண்டு கொள்ளவில்லை. (மேலும்....)

கார்த்திகை 04, 2010

தலிபான் தலைவர்களுடன் ஆப்கான் அதிபர் சந்திப்பு

ஆப்கானிஸ்தான் அதிபர் அமீத் கர்சாயை, தலிபான் இயக்கத்தின் மூன்று தலைவர்கள் இரகசியமாக சந்தித்துள்ளனர். ஆப்கானில் நிலையான அரசு அமைவதற்காக அதிபர் கர்சாய், தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார். இதற்காக 70 பேர் கொண்ட குழுவை அவர் அமைத்துள்ளார். இந்நிலையில் தலிபான் ஆட்சியில் நங்கர்ஹர் பகுதியின் ஆளுநராகவும் துணைப் பிரதமராகவும் இருந்த மவுல்வி அப்துல் கபிர் என்பவரும், முல்லா சத்ர் ஆசம் மற்றும் அன்வருல் ஹக் முஜாகித் என்ற இருவரும் ஆப்கான் அதிபரை கடந்த செவ்வாயன்று சந்தித்து இரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 04, 2010

பாலைவனத்து

மணல் குன்றுகளின் பயணம்

பாலைவனங்களில் அலைகளைப்போலக் காணப்படுகின்ற மணல் குன்றுகள் அழகான நிலக்காட்சிகளாகும். மணல் துகள்கள் சேகரிக்கப்படும்போதுதான் மணல் குன்றுகள் உருவாகின்றன. சிறிய ஒரு குவியல் உருவானால் போதும் அது மேலும் மேலும் மணல் துகள்களை ஈர்க்கும். காற்றின் வேகத்தில் வருகிற மாற்றங்கள்தான் இதற்குக் காரணம். தொடக்கத்தில் சிறிய ஒரு செடியோ, கற்களோ இருந்தால் போதும். அங்கே காற்றின் வேகம் குறையும் அப்போது காற்றில் இருந்த மணல் துகள்கள் அங்கே விழும் இந்தச் செயல் தொடர்ந்து நடக்கும் இப்படி மணல் குவியல் வளரும். (மேலும்....)

கார்த்திகை 03, 2010

துப்பாக்கி தூக்காத அரசியல் துறைக்கு சிலை வைப்பாம்

(தானாமூனா)

இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையின் பிரசன்ன கால கட்டத்தில் இந்திய அமைதிகாக்கும் படையுடன் கதைத்ததால் துப்பாக்கியால் பரிசுகளை வழங்கியவர்களில் முதன்மையானவர் இவர். பிரபா -ரணில் 'சமாதான' கால கட்டத்தில் தினமும் புலிகளின் கட்டப்பாட்டில் இருந்த தமிழ் பகுதியில் சராசரியாக தினமொன்றிற்கு 5 பேர்வரை புலிகளால் கொல்லப்பட்டு வந்தனர். புலிகளை கேள்வி கேட்டவர்கள் அல்லது கேள்வி கேட்பார்கள் என்ற கருத்தியல் உடையவர்கள் இவர்களில் பலர். கொலைகள் பற்றி சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது அது மக்கள் இயல்பாக பொங்கியெழுந்து செய்யும் செயற்பாடுகள் என்று கொலைகளில் சந்தோஷம் கண்டு நியாயப்படுத்தியவர் இவர். கருணா அம்மான் நோர்வேயின் அனுசரணையுடன் வெளிநாடுகளில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமஷ்டியுடனான அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொன்னதற்காக முந்திக் கொண்டு வந்து தேசியத் தலைவரிடம் மூட்டிக்கொடுத்த கனவான். கருணாவின் பிரிவின் பின்பு  இதன்  தொடர்சியாக ‘கருணாவின் பிரச்சனை தனி நபரின் பிரச்சனை அதனைத் தலைவர் 'தீர்த்து விடுவார்'’ என்று தீர்வை முன்வைத்தவர். இறுதியாக மரணத்தின் முன்பு பூநகரி பகுதி இராணுவக் கட்டளைத் தளபதியாக தரம் 'உயர்த்தப்பட்டு’ கொல்லப்பட்டவர். இவர்தான் சமாதானத்தை விரும்பிய ஆயுத்தில் நம்பிக்கை இல்லாத சமாதானத் தூதுவர். இவருக்கு சிலையாம்...?

கார்த்திகை 03, 2010

இடதுசாரி இயக்கத்தில் இவ்வளவு காலமும் இருந்தது அத்தனையும் நடிப்பா சொல்லு சுரேஸ் அத்தனையும் நடிப்பா?

எப்படி சுரேஸ் உங்களால் இப்படி பேசமுடிகிறது. உங்களுடைய அண்மையை அறிக்கையைப்படித்தவுட் இப்படித்தான் தோன்றியது. தமிழ்மக்கள் சிங்களமக்கள் ஒற்றுமையை வலியுறுத்த முற்போக்கு சிந்தனைகொண்டவர்கள் ஒருபக்கம் போராடிக்கொண்டிருக்கையில் சிங்கள மக்களுக்கு எதிராக இப்படி ஒரு வன்மத்தை கக்க எப்படி சுரேஸ் மனம் வந்தது.
இடதுசாரித்தத்துவத்தில் இருந்த வளர்க்கப்பட்ட நீங்கள் புலிகளுடன் கூட்டு சேர்ந்தபோது மனம் வருந்தியவர்களில் நானும் ஒருவன். நான் கட்சி சாராதவன் ஆனால் இடதுசாரி முற்போக்கு சிந்தனைகளில் என் சிந்தனைகளைச் செலுத்தி வருபவன். தமிழ்ச்சமூகம் எப்போதும் வலதுசாரிச்சிந்தனைகளில் வலம் வந்தபடி இருக்கிறது. இன்றைய அதன் துன்பங்களுக்கு காரணம் அந்தச்சமூகத்தின் மோசமான இந்த சிந்தனைகளே காரணம்.
(மேலும்....)

கார்த்திகை 03, 2010

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் சர்வதேசிய பிராந்திய மகாநாட்டில் கலந்கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு விஐயம் மேற்கொண்டிருக்கும் முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் தோழர் வரதராஐப்பெருமாள் அவர்கள்...........சுவிஸ் நாட்டிற்கு விஐயம்

மக்கள் மத்தியில் எழுந்த கேள்விகளுக்கு தோழர் வரதராஐப்பெருமாள்  அவர்கள் மிகவும் ஆணித்தரமான பதில்களை  மிகமிக தெளிவான முறையில்  விரிவு படுத்தியிருந்தார் நாங்கள் என்றுமே பழிஉணர்ச்சியுடன அலைபவர்கள் நாம் இல்லை என்றும்  நாங்கள் என்றுமே மக்களின் இன்னல்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாகவே இருந்து  வருகிறது  என்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மக்களின் நலனுக்காக பாடுபடும் கட்சியாகவே என்றும் இருந்து வரும்  என்றும் தெரிவித்திருந்தார்  ஈபிஆர் எல் எவ் கட்சியின் செயநாளர் நாயகம்  க.பத்மநாபாவின் அழியாப் புகழ் பெற்ற வாக்கியம்  ஒன்றையும் மக்கள் முன் தெரிவித்திருந்ததை காணக்கூடியதாவிருந்தது  'நாம்  மக்களுக்காகவே மண்ணை நேசிக்கிறோம்(மேலும்....)

கார்த்திகை 03, 2010

ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டோர் இப்போது ஆட்கடத்தலில் ஈடுபாடு

இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் பற்றி கனேடிய அமைச்சர் கென்னி

இலங்கை மோதல்களின் போது ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்ட வர்கள் தற்பொழுது அவர்களது வர்த்தகத்தை மாற்றி ஆட்கடத்தலில் ஈடுபடுவதாகக் கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார். கனடாவுக்குள் ஒருவரை அழைத்து வருவதற்கு ஆட்கத்தல் காரர்கள் 50,000 டொலர்களை அறவிடுகின்றனர். இது கனடாவின் குடிவரவு முறைமைக்குப் பெரும் சவாலாக உள்ளது. கனேடிய ஊடகமான “தகு ளோபல் மெயில்”க்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே கனேடிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்து ள்ளார். மேலும், கருத்துத் தெரிவித்த அவர், கனடாவுக்குள் வருபவர்கள் பல்வேறு காரணங்களுடன் வருகின்றனர். சிலர் பொருளாதார குடியேற்றவாசிகள், சிலர் நியாயமான புகலிடக் கோரிக் கையாளர்கள் எனினும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களைத் தடுக்க குடிவரவுச் சட்டம் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும். (மேலும்....)

கார்த்திகை 03, 2010

தங்கியிருக்க நிலம் கேட்பார்களா....?

யாழ். மக்கள் அம்பாந்தோட்டை நோக்கி நடைப்பயணம்

ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாந்தோட்டைக்கான நடைப்பயணம் நேற்றுக்காலை யாழ்ப்பாணம் ஸ்ரீநாகவிகாரை முன்பாக பெளத்த இந்து மதத் தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பமாகியது. பாதயாத்திரைக்கு முன்பாக அழகிய முத்துப்பல்லாக்கு பொருத்தப்பட்ட வாகனத்தில் ஜனாதிபதியின் உருவப் படம் சகல இன மக்களுக்கும் வணக்கம் கூறுவதாக கட்டப்பட்டிருந்தது. இரண்டாவது வாகனத்தில் மத நல்லிணக்கத்தை சித்தரிக்கும் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. மற்றுமொரு வாகனமும் அலங்கார ஊர்தியாக நடைபவனியில் சென்றது. (மேலும்....)

கார்த்திகை 03, 2010

தமிழ்ச்செல்வன் சிலை விவகாரம்

இலங்கையின் கோரிக்கையை பரிசீலிக்கின்றது பிரான்ஸ்

தமிழ்ச் செல்வனுக்குச் சிலை அமைக்கும் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை குறித்துப் பரிசீலிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கையிலும், பிரான்ஸிலும் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்தின் உறுப்பினருக்குச் சிலைநிறுவ அனுமதிக்கக் கூடாது என்று பிரான்ஸ் அரசை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளமை குறித்துப் பரிசீலிப்பதாக அறிவிக்கப்பட்டு ள்ளதென்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பிரான்ஸில் உள்ள இலங்கைத் தமிழர்கள் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனுக்குச் சிலை எழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்குச் சிலை அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று அரசாங்கம் பிரான்ஸ் அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும் இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தின் ஊடாகவும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை 03, 2010

இறுதிப் போரில் இடம்பெயர்ந்தோர்

மூன்று மாதங்களுக்குள் மீள்குடியமர்த்தப்படுவர்

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம் பெயர்ந்த மக்களில் 11, 643 பேர் மட்டுமே வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு கூறியது. இவர்களை 2 அல்லது 3 மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.பி. திசாநாயக்க கூறினார். இதேவேளை 5, 773 பேர் தமது உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் இவர்களையும் துரிதமாக சொந்த இடங்களில் மீள்குடியேற்ற உள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார். (மேலும்....)

கார்த்திகை 03, 2010

சீனா, ஜப்பான் உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சியை பீஜிங் நிராகரிப்பு

சீனா, ஜப்பான் உறவுகளை மீண்டும் சேர்த்து வைக்க அமெரிக்கா முன்னெடுக்கும் முயற்சிகளை சீனா நிராகரித்தது. செம்மஞ்சள் கடற் பிரதேசம் சீனாவுக்குரியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஜப்பானும், அமெரிக்காவும் இக் கடல் பிராந்தியத்தில் யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடுவது முற்றாகத் தவறானது என சீன வெளிநாட்டமைச்சர் அமெரிக்க வெளிநாட்டமைச்சரிடம் தெரிவித்தார். வியட்நாமில் இரு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களும் சந்தித்தனர். இதன் போது ஜப்பான், சீனாவிடையே ஏற்பட்டுள்ள செம் மஞ்சள் கடற் பிரதேச முரண்பாடுகளைக் களையவும், மீண்டும் இவ்விருநாடுகளை உறவில் இணைத்து வைக்கவும் அமெரிக்கா விரும்புவதாக ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 03, 2010

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு

மட்டக்களப்பில் மூவின மக்களும் இணைந்து கொண்டாட ஏற்பாடு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்துக்கான பதவியேற்பு வைபவத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவின மக்களும் இணைந்து மாவட்டமெங்கும் பல்வேறுபட்ட விசேட நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்துவருகின்றனர். இது தொடர்பாக ஆராயும் விசேட மாநாடு ஒன்று நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி யின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டு இம்மாவட்டத்தில் 50,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. ஜனாதிபதியின் பதவியேற்பையொட்டி இந்து, இஸ்லாம், பெளத்த, கத்தோலிக்க ஆலயங்களில் மத வைபவங்கள் நடைபெற வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 03, 2010

75 லட்சம் ரூபாவுக்கு காஷ்மீர் விலைபோனது

Gods of Small Thing என்ற நாவலை எழுதி புக்கர் பரிசு பெற்றவரும் இந்தியாவின் மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவருமாகிய அருந்ததி றோய் ‘காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை’ என்று அண்மையில் தெரிவித்த கருத்து இந்திய அரசியல் வட்டாரங்களில் ஒரு புயலைக் கிளப்பியது. அருந்ததிக்கு எதிராகத் தேசத்துரோகக் குற்றச்சாட்டுச் சுமத்தி அவரைக் கைது செய்வது பற்றி அரசாங்கம் ஆலோசிப்பதாகச் செய்திகள் வெளியாகின. பிரித்தானிய ஆட்சியாளர்கள் 1846ம் ஆண்டு காஷ்மீரை இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து பிரித்தெடுத்துக் குலாம் சிங்குக்கு 75 லட்சம் ரூபாவுக்கு விற்றார்கள். அன்று முதல் குலாம் சிங்கின் சந்ததியினரே காஷ்மீரை ஆண்டு வந்தனர். இந்தியா காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்று அருந்ததி றோய் கூறியதற்கு இது காரணமாக இருக்கலாம்.

கார்த்திகை 03, 2010

Diplomatic postings – A new Consul General for Toronto

(By K.T.Rajasingham)

Former Rupavahini Corporation ex-chief executive officer Karunaratne Paranvitharne has been slated as the new Consul General for Toronto.Already Consul General position in Toronto remains vacant after the departure of Bandula Jayasekera. Later Bandula Jayasekera was for some time Sri Lanka’s Deputy Representative in New York. Subsequently, he was recalled and he is appointed as the Director General of Public Communication at the Ministry of External Affairs, Colombo since the first week of September. In the meantime, Sugeeswara Senadhira has been appointed as the Minister Counselor in charge of Media in the Sri Lanka’s High Commission in New Delhi. He has already taken up the position on last Monday in New Delhi. (more...)

கார்த்திகை 03, 2010

யாழ். பொது நூலகத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பான யாழ் மாநகர முதல்வரின் அறிக்கை!

23ம் திகதி நூலகத்தை பார்வையிடுவதற்காக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதற்கமைய யாழ் நூலக முன் வாசலில் சுற்றுலாப்பயணிகள் கூடி நின்றனர். இந்நிலைமையினை கருத்தில் கொண்டு பிரதம நூலகர் மாநாட்டு ஏற்பாட்டாளருடன் ஆலோசித்து மாநாடு பி.ப. 05.30 மணிக்கு முடியவிருப்பதனால் அந்நேரம் தொடக்கம் சுற்றுலாப்பயணிகளை உள்ளே அனுமதிக்கலாம் என்பதனை சுற்றுலாப்பயணிகளுக்கு தெரியப்படுத்துமாறு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறியப்படுத்தினார். இந்நிலையில் ஏமாற்றமடைந்த சுற்றுலாப்பயணிகளுக்கும் நூலக நிர்வாகத்தினருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது உண்மையே. இதன் முடிவில் சுற்றுலாப்பயணிகள் நூலகத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகைச்செய்திகள் குறிப்பிடுவது போன்று நூல் நிலையத்தினுள் அத்துமீறி புகுந்த தென்னிலங்கையிலிருந்து வந்தவர்களால் காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டதுஇ நூல்கள் தூக்கி வீசப்பட்டது என்பதும் இச்செயற்பாடுகள் பொலிஸாரின் முன்னிலையிலும் இராணுவ அதிகாரிகளின் முன்னிலையிலும் நடைபெற்றது என்பதும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். (மேலும்....)

கார்த்திகை 03, 2010

ஊடக அறிக்கை: தமிழீழ மக்கள் விடுதலை கழகம்

கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்த தலைவர் சித்தார்த்தன் அவர்கள் குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில், நீண்டகால இனப்பிரச்சினைக்கு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தின் முழு அதிகாரத்தையும் அமுல்படுத்துவதன் மூலம் ஒர் ஆரம்ப நடவடிக்கையாக கொள்வதுடன், இலங்கை தீவில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் இலங்கை தமிழ் பேசும் மக்கள் தாமும் அனுபவிக்கின்றோம் என்று திருப்திபடும் வகையில் முழுமையான அரசியல் தீர்வை இலங்கை அரசு முன் வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். இந்த இனப்பிரச்சினை தீர்வில்(இலங்கை-இந்தியா ஒப்பந்தம்) 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா தனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 03, 2010

Event Program

Casa Maíz Festival:  “Art for Peace in our Americas”

Friday, November 5th

7:30 – 9:30 pm

Opening Ceremony

(more....)

கார்த்திகை 02, 2010

யாழ். நூலகம் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை - ஜனாதிபதி செயலகம்

யாழ். பொதுநூலகம் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படவில்லையென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. “யாழ். நூலகம் மீண்டும் தாக்குதலுக்குள்ளா னது” என சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தியையும் ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் யாழ். நூலகம் மீண்டும் தாக்குதலுக்குள் ளானது என 31 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகை செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. இச்செய்தியானது அடிப்படையற்றதுடன் எந்தவொரு ஆதாரமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 02, 2010

வடமாகாண சபை

சகல அலுவலகங்களும் யாழ்ப்பாணத்திற்கு மாற்றம்

வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் அலுவலகங்கள் உட்பட அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் ஜனவரி முதல் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன. இதற்கமைய திருகோணமலை வரோதயர் நகரிலிருந்து முன்னெடுக்கப்பட்ட வட மாகாணத்தின் சகல செயற்பாடுகளும் ஜனவரி முதல் வட மாகாணத்திலிருந்து முன்னெடுக்கப்படும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட மாகாண மக்களின் நலனை கருத்திற் கொண்டும் அவர்களுக்கான சேவைகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வட மாகாண ஆளுநர் அலுவலகம், பிரதம செயலாளர் காரியாலயம் மற்றும் அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் மாங்குளத்தில் நிரந்தரமாக அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், தற்காலிகமாகவே யாழ்ப்பாணத்திற்கு அதன் செயற்பாடுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். (மேலும்....)

கார்த்திகை 02, 2010

அவுஸ்திரேலியப் அகதிப் பயணத்தில் கடலில் உயிரிழந்தவர்கள்

அவுஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்காக மேற் கொண்ட சுமார் ஒன்றரை மாத படகு பயணத்தின் போது கடந்த ஒக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் பெயர் விபரங்கள் தெரியவந்துள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான ஜக்ஸன் (வயது 24) மற்றும் டிசான் (வயது 26), கிளிநொச்சி மாவட்டத்தின் உதயபுரம் நகர்ப் பகுதியை சேர்ந்த ரகுமார் செல்வரஞ்சினி ஆகியோரே இறந்தவர்கள் ஆவர். நடுக் கடலில் சிக்கியபோது மீன்பிடிப்படகு ஒன்றை கண்ட ஜக்ஸன் அப் படகில் சென்றுகொண்டிருந்தவர்களிடம் உதவி கோருகின்றமைக்காக உயிரைப் பணயம் வைத்து கடலில் குதித்தார். நீந்திச் சென்று அம் மீன் பிடிப் படகை அடைகின்றமை அவரின் நோக்கமாக இருந்தது. எனினும் அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். படகோட்டியின் உதவியுடன் கட்டுமரம் ஒன்று கட்டப்பட்டது. இக்கட்டு மரத்தில் சென்று அருகிலுள்ள ஏதேனும் ஒரு சிறிய தீவை சென்றடையலாம் என்ற நம்பிக்கையில் படகோட்டியும், டிசானும் பயணித்தனர். இடை யில் கட்டுமரம் கடலில் மூழ்கத் தொடங்கியது. படகோட்டி ஒருவாறு நீச்சல் போட்டு தப்பினார். டிசான் உயிரிழந்துவிட்டார்.

கார்த்திகை 02, 2010

வடக்கு, கிழக்கில் 1177 அபிவிருத்தி திட்டங்கள்; ரூ. 1028 மில். ஒதுக்கீடு

24,641 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு ள்ளதோடு 12,291 திட்டங்கள் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ளன. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட 232 திட்டங்களில் 84 வீதமான திட்டங்கள் நிறைவடைந்துள் ளன. யாழ். மாவட்டத்தில் 94 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதோடு இதற்காக 83.37 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் 19.75 மில்லியன் ரூபா செலவில் 77 திட்டங்களும், முலலைத்தீவு மாவட்டத்தில் 23.23 மில்லியன் ரூபா செலவில் 19 திட்டங்களும், மன்னார் மாவட்டத்தில் 98.13 மில்லியன் ரூபா செலவில் 42 திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் 808 கிராம சேவகர் பிரிவுகளில் 945 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு 821 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 835.63 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 87 வீதமான திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளதோடு எஞ்சிய திட்டங்கள் இந்த வருட முடிவுக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன. (மேலும்....)

கார்த்திகை 02, 2010

 

யதார்த்தபூர்வ கோரிக்கையும் ஐக்கியமும் இன்றைய தேவைகள்

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை என்பதைக் கடந்த காலக் கசப்பான வரலாற்றிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். ஐக் கியமும் வேண்டும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுக் கோரிக்கையும் வேண்டும். இவையே அவ்விரு விடயங்களும். எல்லாக் கட்சிகளும் ஐக்கியப்பட்டாலும் யதார்த்தத்துக்கு முரணான கோரிக்கையை வலியுறுத் தினால் தீர்வு சாத்தியமாகாது. தமிழர் விடுதலைக் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு இதுவே காரணம். இப்போது தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஒருபுறமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னொரு புறமாகவும் நிற்கின்றன. கூட்டாகச் செயற்படுவதற்கு முன்வருமாறு தமிழ்க் கட்சிகளின் அரங்கம் விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஏற்கவில்லை. ஐக்கியமான செயற்பாடு இன்று அவசியம் எனக் கூறும் போது எல்லா கட்சிகளும் ஒரே கொள்கையை ஏற்க வேண்டும் என்று அர்த்தமில்லை. இறுதித் தீர்வு எவ் வாறானதாக அமைய வேண்டும் என்பதையிட்டு மாறு பட்ட நிலைப்பாடுகள் இருக்கலாம். (மேலும்....)

கார்த்திகை 02, 2010

Ex-guerrilla to be Brazil's first female president

A former Marxist guerrilla who was tortured and imprisoned during Brazil's long dictatorship was elected Sunday as president of Latin America's biggest nation, a country in the midst of an economic and political rise. A statement from the Supreme Electoral Court, which oversees elections, said governing party candidate Dilma Rousseff won the election. When she takes office Jan. 1, she will be Brazil's first female leader. With 99 percent of the ballots counted, Rousseff had 55.6 percent compared to 44.4 percent for her centrist rival, Jose Serra, the electoral court said. (more...) (தமிழ் பதிப்பை பார்க்க....)

கார்த்திகை 02, 2010

அன்பு உலகை ஆளும்!

அன்பை இப்படி வரையறுப்பதின் விளைவே நம் வாழ்வில் அன்பை அதிகமாகக் காணாதிருக்கக் காரணம் என்றால் அது மிகையாகாது. நீ என்னை நேசிப்பது உண்மையானால் அப்படிச் செய், இப்படி இரு என்று அடுத்தவரை தம் விருப்பப்படி மாற்ற முனைவது உண்மையான அன்பா? பலனை எதிர்பார்த்து எதைச் செய்தாலும் அது ஒருவித வாணிபமே அல்லவா? நான் இதைச் செய்கிறேன் நீ அதைச் செய் என்பதும், நான் இதைத் தருகிறேன் நீ அதைக் கொடு என்பதும் கொடுக்கல் வாங்கல் என்றால், நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன், பதிலுக்கு இப்படி இரு, அப்படி மாறு என்று கூறுவதும் வியாபார ஒப்பந்த வரிகளாக அல்லவா உள்ளது? (மேலும்....)

கார்த்திகை 02, 2010

செழுமைமிகு நாடுகளின் வரிசையில்

இந்தியாவை மிஞ்சும் இலங்கை... இது தொடருமா...?

உலகில் செழுமை மிகுந்த நாடுகளின் 2010ம் வருட பட்டியலில் பெயரிடப் பட்டுள்ள 110 நாடுகளில் இலங்கை 59வது இடத்தில் உள்ளது. 2009ம் வருட பட்டியலில் இலங்கை 68 ஆவது இடத்தில் இருந்தது. இவ்வருட பட்டிய லில் 9 இடங்கள் முன்னேறி யுள்ளது. தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை இலங்கை முதலாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவை பொறுத்தவரை சீனாவுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது. சீனா பட்டியலில் 58 வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியா 88 வது இடத்திலும் நேபாளம் 91வது இடத்திலும் பங்களாதேஷ் 96 வது இடத்திலும் பாகிஸ்தான் 109 வது இடத்திலும் உள்ளன. (மேலும்....)

கார்த்திகை 02, 2010

ஏன் இந்த பதட்டம்?

நாட்டில் எங்கு பயங்கரவாத செயல்கள் நிகழ்ந்தாலும் இதற்கு காரணம் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள்தான் என்று எந்தவித மான விசாரணையுமின்றி குற்றம்சாட்டுகிற, அவதூறு பரப்புகிற இவர்கள்தான் இப்போது ஒரே ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவுடன் பதறித்துடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அலறுகிறார்கள்.  ஆர்எஸ்எஸ் அமைப்பு அப்பழுக்கற்ற தேச பக்தர்களைக் கொண்டது என்றெல்லாம் கதை யடித்துள்ளனர். ஆனால் விடுதலை போராட்டம் காலம் துவங்கி காந்தி படுகொலை வரை, பாபர் மசூதி இடிப்பு முதல் குஜராத் கலவரம் வரை இவர்களது தேசபக்தி எப்படிப்பட்டது என்பதை நாடறியும். (மேலும்....)

கார்த்திகை 02, 2010

வியட்நாமின் எரிவாயு, அணுஆயுத தேவைகளை நிவர்த்தி செய்ய ரஷ்யா, ஜப்பான் பாரிய பங்களிப்பு

வியட்நாம், ஜப்பான் என்பன இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. ஜப்பான் பிரதமர் நஒட்டோ கான் விசேட விஜயம் மேற்கொண்டு அண்மையில் வியட்நாம் வந்தார். வியட்நாம் பிரதமர் நிகுயான்ரான்டாங் ஜப்பான் பிரதமருடன் இருதரப்பு உறவுகள் வியாபார மேம்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். ஜப்பானின் கைத்தொழிற் துறைக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்கவும் இரும்பு, நிலக்கரி மற்றும் வாகன உதிரிப்பாகங்களை விநியோகம் செய்யவும் வியட்நாம் தயாராகியுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 02, 2010

மேல் கொத்மலை நீர் மின் திட்டம்

பிரதான சுரங்கப் பாதை ஜனாதிபதியால் திறப்பு

மேல் கொத்மலை நீர் மின் நிலையத்திற்கு நீரை எடுத்துவரும் பிரதான சுரங்கப் பாதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் நாளை மறுதினம் (4ஆம் திகதி) திறந்து வைக்கப்பட உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு நேற்று கூறியது. 150 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய மின் உற்பத்தி நிலைய நிர்மாணப்பணிகள் 2011 பிற்பகுதியில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு ஆரம்பமான மேல் கொத்மலை மின் நிலைய பணிகள் 5 கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன. இது வரை 75 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சு கூறியது. 12.9 கிலோ மீட்டர் நீளமான பிரதான சுரங்கப் பாதை நிர்மாணப் பணிகள் கடந்த மாதம் பூர்த்தி செய்யப்பட்டன. சுரங்கப்பாதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டபின் 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி பொதுமக்களுக்கு பார்வையிட அவகாசம் வழங்கப்படும் எனவும் மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கார்த்திகை 02, 2010

யாழ் நூல் நிலைய அசம்பாவிதத்தின் எதிரொலி

யாழ் சிவில் நிர்வாகக் காரியாலயத்திற்குப் பொறுப்பாக இருந்த மேஜர் பண்டார உடனடி இடமாற்றம்!

யாழ் பொதுசன நூலகத்தினுள் அத்துமீறி பிரவேசிக்க முற்பட்ட தென்னிலங்கை சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு ஆலோசனை கூறியதாக தெரிவித்து படையதிகாரி ஒருவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். அண்மையில் யாழ் பொதுசன நூலகத்திற்குள் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் அத்துமீறி உட்பிரவேசிக்க முற்பட்டதும் அதனை மாநகரசபை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சர்ச்சையும் இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர் எனக் சுறப்படும் நபரொருவர் அங்கு படையினருக்கு இந்த விடயங்களில் தலையிடக் கூடாதென அச்சுறுத்தியிருந்தார். எனினும் அதனையும் மீறி யாழ் சிவில் நிர்வாகக் காரியாலயத்திற்குப் பொறுப்பாக இருந்த மேஜர் பண்டார எனும் அதிகாரி அவருக்கு ஆலோசனை வழங்கி நூலகத்தினுள் அத்துமீற உட்பிரவேசிப்பதனை தடுக்க முயன்றார். (மேலும்....)

கார்த்திகை 01, 2010

புலிகள் எமக்கு செய்த கொடுமைகளுக் கு எதிராக பழிவாங்கும் போக்கு கூடாது. - ஜெர்மன் ஸ்ருட்கார்ட் நகரில் வரதராஜப்பெருமாள்

ஒக்ரோபர் 30,  31 ஆகிய இருதினங்களில் ஜெர்மன் ஸ்ருட்காட் நகரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச கிளைகளின் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்றையதினம் இந்நிகழ்வுகளில் ஐரோப்பிய  பத்மநாபா ஈ.பி ஆர்.எல் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்த  வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வரதராஜப்பெருமாள் அவர்களும்  பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். வரதராஜப்பெருமாள் அவர்கள் இலங்கை அரசியலும், தமிழர்களின் போராட்ட வழிமுறைகளும், இனி தமிழ்மக்கள் செய்யவேண்டிய விடயங்கள் என்ன என்பது பற்றி தனது உரையில் பல விடயங்களை தொகுத்து உரையாற்றியிருந்தார். (மேலும்....)

கார்த்திகை 01, 2010

யாழ். நூலகத்துக்கு மீண்டும் ஏற்பட்ட சோதனை வேதனை தருகிறது - ஸ்ரீரங்கா

யாழ். நூலகம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அது இன்னொரு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது வேதனை தரும் விடயம். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேவேளை, இந்த நூலகத்தின் பாதுகாப்புத் தொடர்பிலும் இப்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுப்பொறுப்பையும் யாழ். மாநகர சபையே ஏற்றிருக்க வேண்டும். உரிய பாதுகாப்பினை இந்த நூலகத்துக்கு வழங்கியிருந்தால் இவ்வாறான விரும்பத்தகாத சம்பவம் இடம்பெறாமல் தவிர்த்திருக்க முடியும். (மேலும்....)

கார்த்திகை 01, 2010

கண்டக்காடு பகுதியிலிருந்து மக்கள் வெளியேறி அகதிகளாகத் தஞ்சம்

கிண்ணியா கண்டக்காடு பகுதியில் மீளக்குடியேறிய மக்கள், இன்று காலை பொலிஸாரால் தாக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்து வெளியேறி அல்-அதான் வித்தியாலயத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்த 213 குடும்பங்களுள் 152 முஸ்லிம் குடும்பங்களும், 61 தமிழ் குடும்பங்களும் அடங்குவதாக கூறப்படுகிறது. இன்று காலை நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்த மக்கள் வெளியேறிய பின், சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டது. அரசாங்க அதிபரின் அனுமதியுடன் மீளக்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களே இவ்வாறு பொலிஸாரால் விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 01, 2010

இப்படியும் நடக்கிறது இன்றைய சூழ் நிலையில்

யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவி கண்ணீருடன் கூறிய ஓர் உண்மைச் சம்பவம்

ஊழலா? கொள்ளையா? லஞ்சமா? நன்கொடையா? எனக்கு நாமமிடத் தெரியாத வசூல். எத்தனை இடரிலும் எத்தனை துயரிலும் பங்கேற்று வாழ்வு சலித்த எமக்கு இது அடுத்தது... ஒரு காலத்தில் வசதி படைத்த குடும்பமாக கிளிநோச்சி மாவட்டத்தில் நெற் போகத்தில் வாரி இறைத்து தானம் செய்த பரம்பரை. பதவிக்கும் பணத்திற்கும் வெறிகொண்டு துரோகம் செய்த எம் தோழர்களால் சொத்திழந்து வீடிழந்து 6/7 இடம்பெயர்வுகளின் பின்னர் இன்று கிடைத்தது ஓர் சிறிய ஓய்வுடன் முகவரி இட்டுக் கொள்ள ஓர் பழைய வீடும் தான். (மேலும்....)

கார்த்திகை 01, 2010

என்று தணியும் இந்த கொலை வெறித் தாகம்....?

கனடாவில் இலங்கைத் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் உள்ளடக்கலாக அண்மையில் உள்ளூர் ஆட்சி, கல்விச்சபை போன்றவற்றிற்கான தேர்தல்கள் நடைபெற்றன. புலிகளின் மே 18 'மௌனித்தல்' என்ற நடவடிக்கைக்கு பின்பு நடைபெற்ற தேர்தல் இது. புலிகள் இல்லாவிடத்து புலிகளின் ஏஜன்டுகள் தமக்குள்ளேயே சொத்தை கையடக்கி கொள்வதற்கான யுத்தத்தின் வெளிப்பாடுகள் நாள் ஒரு வண்ணம் பொழுதொரு வண்ணம் என புதுப் புது துரோகக் குழுக்களை சுட்டிக்காட்டி கூத்துக்கள் இத் தேர்தலிலும் அரங்கேறியது. இதன் கடைசி வடிவத்தை கீழே உள்ள துண்டுப்பிரசுரம் எடுத்தியம்பி நிற்கின்றது. (துண்டுப்பிரசுரத்தை பார்க்க....)

கார்த்திகை 01, 2010

இத்துடன் இறுதியாக இருக்கட்டும் இத்தவறு!

வூதியில் மரணதண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ள இலங்கை யுவதி ரிஸானாவுக்கு கருணை காட்டுமாறு உலகெங்கும் இருந்து தொடர்ச்சியாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இப்பெண்ணை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற் கான பிரார்த்தனைகளும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. ரிஸானாவின் சொந்த ஊரான மூதூரிலும் இவ்விதமான பிரார்த்தனையொன்று நடைபெற்றுள்ளது. ரிஸானாவின் விடயமானது சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் அமைப்புகளின் கவனத்தை இன்று பெரிதும் ஈர்த்துள்ளது. அப்பெண் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலை குற்றச்சாட்டை மறுதலிக்கும் விதத்தில் சர்வதேச அளவில் ஒருபுறத்தே குரல் எழுப்பப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால் மனிதாபி மான அடிப்படையில் இப்பெண்ணுக்கு கருணை அளிக்கு மாறு மற்றொரு புறத்தே உருக்கமான வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன. (மேலும்....)

கார்த்திகை 01, 2010

Bill C-49 to determine ‘Irregular Arrivals’ and Penalize Human Smugglers  

We welcome the new laws proposed by the Conservative Government to deal with the violation of our immigration and refugee laws by organized gangs of ‘for-profit human smugglers’ who have chosen to smuggle people to this country with impunity.  We had the examples of the ‘Ocean Lady’ which tramped into the BC waters with 76 men with questionable backgrounds having links to the brutal Tamil Tiger terrorist network, and the more recent arrival of a mixed bag of 492 persons aboard the cargo vessel ‘MV Sun Sea’ which reached the shores of Vancouver on August 13, 2010.  We now have reports of more such human smuggling voyages being orchestrated by the same Tamil Tiger terror network out of Thailand, which have been temporarily put on hold due to the prompt action of the Thai authorities to detain yet other Tamils lacking papers who were gathering to board a cargo ship headed for Canada. The prospective refugee seekers are known to destroy their ID papers and pay or promise to pay $45,000 for the passage. (more...)  

கார்த்திகை 01, 2010

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சமய கடமையாக நோக்கப்பட வேண்டியுள்ளது

1990 ஆம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி இலங்கைத் தாய் நாட்டிற்கும் கறை படிந்த வரலாற்றைத் தோற்றுவித்த ஆண்டாகும். சுமார் 75000 முஸ்லிம்கள் ஆயுதமுனையில் குறிப்பிட்ட சில மணித்தியாலங் களுக்குள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இக்கோர நிகழ்வுக்கு விடுதலைப் புலிகள் காரணம் என்றாலும், அம்மக்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டிய பொறுப்பு தாரிகள், குறிப்பாக அப்பொழுது பதவியிலிருந்த அரசாங்கம் அதை வழங்கத் தவறிவிட்டது என்ற ஒரு கசப்பான உண்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டிலே பல நூறு வருடங்கள் சம அந்தஸ்துடனும் உரிமைகளுடனும் வாழ்ந்த வடபுல முஸ்லிம்கள் ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை உலக வரலாற்றில் எங்கும் இடம்பெற்றிருக்காத ஒரு பெரும் அநியாயமாகும். (மேலும்....)

கார்த்திகை 01, 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தீர்வை முன்வைக்க திட்டம்

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான திட்டவரைவொன்றைத் தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முன்வைக்கவிருப்பதாக அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர், என். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை மறுதினம் 3ஆம் திகதி கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் கூடவுள்ளது. இது தொடர்பாகத் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம்; இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பான திட்டவரைவொன்றை டிசம்பருக்கு முன்னர் தயாரிக்கவுள்ளோம். புத்திஜீவிகள் குழு ஏற்கனவே சில தீர்வுத் திட்டங்களை அரங்கத்திடம் முன்வைத்துள்ளது. இவைபற்றி நாம் ஆராய்வோம். தீர்வுத் திட்டமொன்றை தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்க வுள்ளோம். (மேலும்....)

கார்த்திகை 01, 2010

இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் சீன உதவி

 
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்கை வெற்றிகெள்ள சீனா சகல வித ஒத்துழைப்பினையும் வழங்குமென சீனப் பிரதமர் வென்ஜியாபாவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார். இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையி லான முக்கிய பேச்சுவார்த்தையொன்று சீனாவின் சங்காய் நகரில் நடைபெற்றுள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வீதிபுனரமைப்பு உள்ளிட்ட எதிர்காலத்திட்டங் களுக்கு சீனா பூரண ஒத்துழைப்பினை வழங்குமென இதன்போது அந்நாட்டுத் தலைவர் உறுதியளித்துள்ளார். இலங்கையில் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் துறைமுகம், விமான நிலையம் மற்றும் மின்சாரத்துறை செயற் திட்டங்களுக்கு சீனா உதவிகளை வழங்கி வருகிறது. அதே போன்று எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. (மேலும்....)

கார்த்திகை 01, 2010

றிசானாவுக்கு விடுதலை வேண்டி மூதூரில் கண்ணீர் மல்க பிரார்த்தனை

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் றிசானா நபீக்கிற்கு விடுதலை வேண்டி மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (31) மாபெரும் பிரார்த்தனை, ஸலாதுல் ஹாஜா தொழுகை, பிரசார நிகழ்வும் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்கள் றிசானா நபீக்கின் விடுதலைக்காக ஒன்று கூடிய மைதானத்தில் பாடசாலை மாண வர்கள், மத்ரஸா மாணவர்கள், சமய, சமூக தலைவர்கள், பொது மக்கள் என எல்லோரும் மைதானத்தினுள் அமர்ந்திருந்தனர். ஆரம்பமாக அஷ்ஷேஹ் எம்.எம். முனாஸ் (ரஸாதி)யினால் சொற்பொழிவு நிகழ்த்தப் பட்டது. இதனை அடுத்து தனித்தனியாக ஸலாதுல் ஹாஜா தொழுகையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தொழுதனர். (மேலும்....)

கார்த்திகை 01, 2010

உல்லாசப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான நாடு இலங்கை

உல்லாசப் பயணிகள் செல்வதற்கு மிகவும் பாதுகாப்பான நாடாக இலங்கை மாறியுள்ளதென ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பேர்க்குக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்குச் செல்லும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடம் செப்டம்பரில் 82.8 வீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகலிருந்து செல்லும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தாலும், ஏனைய உலக நாடுகளிலிருந்து இலங்கை சென்ற உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 44 வீதத்தாலும் அதிகரித்துள்ளது என பெல்ஜியத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஆரியசிங்க தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், உல்லாசப் பயணத்றையை மேலும் அபிவிருத்தி செய்ய பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்கு நேரடியான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனக் கூறினார்.

கார்த்திகை 01, 2010

புளொட் சர்வதேச கிளைகளின் மாநாடு

புளொட் அமைப்பின் சர்வதேசக் கிளைகளின் மாநாடு நேற்றும், இன்றையதினமும் ஜெர்மனியின் ஸ்ரூட்காட் நகரில் நடைபெற்றுள்ளது. இதன்போது கழகத்தின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் புளொட்டின் அனைத்து கிளைகளையும் சேர்ந்த அமைப்பாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். நேற்றையதினம் ஆரம்ப நிகழ்வாக மௌன அஞ்சலி, வரவேற்புரை, கிளைப் பொறுப்பாளர்களின் உரை என்பவற்றைத் தொடர்ந்து கழகத்தின் செயற்பாடுகளில் வெளிநாட்டுக் கிளைகளின் பங்களிப்பு, அரசாங்கத்தின் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் கழகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. (மேலும்....)

கார்த்திகை 01, 2010

அமெ. ஜனாதிபதி வருக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பில் வைகோ அதிர்ச்சி

வைகோவின் அமெரிக்க விசுவாசத்திற்கு போபாலையும் மகாத்தமா காந்தியையும், இலங்கைத் தமிழ் மக்களையையும் (புலிகளின் வடிவில்) துணைக்கு அழைக்கும் வைகோ தனது ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பலஸ்தீனத்திலும் ஏன் பாகிஸ்தானிலும் அமெரிக்கா செய்து வரும் 'மனிதாபிமான' செயற்பாடுகளை அமெரிக்க அதிபர் என்ற வகையில் தொடர்ந்தும் மேற்கொள்ள அனுமதித்து வருகின்றார். இதன் மூலம் பல ஆயிரம் அப்பாவி பொது மக்கள் அமெரிக்கா, அதன் நேச படைகளாலும். இஸ்ரேலாலும் கொல்லப்படுவதை 'இவரது' மனிதாபிமான நடவடிக்கையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஒபமா மற்றய அமெரிக்க ஜனாதிபதிகளை விட வித்தியாசமானவர் நிறத்தில் மட்டும்தான். (மேலும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com