Contact us at: sooddram@gmail.com

 

கார்த்திகை 2011 மாதப் பதிவுகள்

கார்த்திகை 30, 2011

கொதிநிலையில் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் நீண்டகாலமாக அதிகாரத் தில் இருந்த ராணுவ ஆட்சியாளர்களும் சரி, குறைவான காலமே ஆட்சியில் இருந்துள்ள ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களும் சரி, அமெரிக்காவுக்கு வெண் சாமரம் வீசியதன் விளைவை அந்த நாடு அறு வடை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, தனது “ஆப்-பாக்.” திட்டத் தின் அடுத்த கட்டமாக, பாகிஸ்தானை கேள்வி ஏதும் கேட்காத முழு அடிமையாக்க முயல்கிறது. அதன் அடையாளங்கள் தான், கடந்த பிப்ர வரியில் அமெரிக்கத் தூதர் என்ற பெயரில் இயங் கிய சிஐஏ ஏஜெண்டான ரேமண்ட் டேவிஸ் என்பவர், லாகூர் சந்தையில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் இரண்டு அப்பாவி இளை ஞர்களைச் சுட்டுக்கொன்றார். அடுத்து, மே மாதம் அபோட்டாபாத்தில் அமெரிக்கப் படை கள் அத்துமீறிப் புகுந்து பின்லேடனைக் கொன் றது; இப்போது நேட்டோவின் தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் பலி...! அமெரிக்காவை நம்பி வாழ்ந்த நாடு எதுவும் இல்லை. அந்தப் பட்டியலில் பாகிஸ்தானும் சேருகிறது. இனியும் அமெரிக்காவின் ஏவலாளி களாக பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்தினர் நீடிக்க முடியாது. அந்த நிர்ப்பந்தம் ராணுவத் திற்குள்ளேயே எழுந்துள்ளது. ஏகாதிபத்தியத் தின் தாக்குதல் மட்டுமின்றி வேலையின்மை யும் வறுமையும் விரட்டுவதால் வீதிகளில் மக்கள் திரள்கிறார்கள். இந்த எழுச்சி பரவட்டும். பாகிஸ்தான் மக்கள் வெல்லட்டும்! (மேலும்....)

கார்த்திகை 30, 2011

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் - மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் என இரண்டு மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எந்தவொரு நாடோ அல்லது அரசாங்கமோ தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர். எம்.மனோகரன் மற்றும் எஸ். ராமகிருஸ்ணன் ஆகிய மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே அந்நாட்டு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இனப்பிரச்சினையால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் மட்டுமன்றி யுத்த வலயத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தவும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கார்த்திகை 30, 2011

கொட்டியாரம் வரலாற்று அறிமுகம்

இவ்வரலாற்றுக் குறிப்புக்களில் முஸ்லிம்கள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெறவில்லை அது தனியாக பார்க்கப்படவேண்டிய விடயம். இங்கு நான் குறிப்பிடும் தகவல் என் அறிவுக்கு எட்டிய வரையில் தொகுக்கப்பட்டுள்ளன.இதற்கு மேலதிகமான ஈழத்தில் புராதனமான வரலாற்று சான்றுகள் நிறைந்த இடங்களில் கொட்டியார பிரதேசமும் முக்கியம் பெறுகிறது. இங்கு கிடைக்கபெற்ற கல் வெட்டுக்கள், சாசனங்கள், இலக்கியங்கள், செப்பேடுகள், பழைய கட்டிட இடிபாடுகள், தொல்மரபுக்கதைகளும் பாடல்களும் இப்பிரதேசத்தின் வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தய பழம் தொல் குடி இடப்பெயர்வுகள் இப்பிரதேசத்தில் உள்ள துறைமுகங்களான இளக்கந்தை, இலந்தத்துறை, வெருகல் ஆகியவை பயன்படுத்தப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளன. வெருகல் பிரதேசத்தில் கண்டெடுக்கபட்ட முதுமக்கள் தாழி கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால மனித நாகரிகத்தை சுட்டி நிற்கிறது. அத்தோடு கறுப்பு சிவப்பு மட்பாண்ட அழிபாடுகள் தொல்பழங்கால மரபை சுட்டி நிற்கின்றன. (மேலும்....)

கார்த்திகை 30, 2011

Come comrades of Eelam dear! Let’s celebrate non-existence

(By Karthika Gnanachandran)

The prime minister of this state was totally absent concerned about crossing the world’s longest border in case he becomes a state guest.  The same predicament applied to the speakers, ministers and parliamentarians of all the non-existing governments and thirteen more yet to be, before the Olympic Year Maveerar Day. As for the crowd participation, a pro-TVI spokesperson ‘guestimated’ 40,000, a pro-LTTE enthusiast on the site said 4,000 and the festival tent could seat only 2,000.  This number game is certainly puzzling unless there were 38,000 who had gathered to buy kacchan halva at the nearby Chinese delicatessen. By Saturday all the Tamil shops were ordered to close and most did and did their rare mall shopping with hardly any one going to the Markham Fair Grounds. (more....)

கார்த்திகை 30, 2011

கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, திகார் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வரும்போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியிடமுள்ள தலைமை நிலைய முதன்மை செயலர் பதவியை கனிமொழிக்கு பரிசாக வழங்கி அவரை கட்சியின் பெண் தலைவராக முன்னிலைப்படுத்தவும், தி.மு.க. தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார். இதற்கு மத்திய அமைச்சர் அழகிரி, பொருளாளர் ஸ்டாலினும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திகை 30, 2011

விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினரால் கூட அங்கு செல்ல முடியாத நிலைமை இருந்தது  - அமைச்சர் முரளிதரன்

சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்குக், கிழக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாகக் கூறினார். அவ்வாறு அவர் கூறுவதாக இருந்தால் ஏன் அவர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித் தார்கள்? அன்று ஓர் இராணுவத் தளபதி ஜனாதிபதியாக வரமுற்பட்ட பொழுது அல்லது ஜனாதிபதித் தேர்தலிலே போட்டியிட்ட பொழுது அவர்கள் அந்த இராணுவத் தளபதியை ஆதரித் தார்கள். இன்றும் ஆதரித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆகவே, வடக்குக் கிழக்கிலே இன்று இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்பது உண்மையிலே முற்றுமுழுதாக தவ றான ஒரு விடயம்! ஏனென்றால் கடந்த பிரதேச சபைத் தேர்தல், மாநகர சபைத் தேர்தல் என்பன மிகவும் சுதந் திரமான முறையில் வடக்கு, கிழக்கு மாகா ணங்களிலே இடம்பெற்றதாக உலகக் கண்காணிப்பாளர்கள் அறிக்கை சமர்ப்பித்துள் ளார்கள். அத்தேர்தல்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென் றிருக்கின்றது. அங்கு இராணுவ ஆட்சி நடைபெற்றி ருக்குமாகவிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தேர்தல்களிலே வெற்றி யடைந்திருக்க முடியாது. (மேலும்....)

கார்த்திகை 30, 2011

Arch-anarchist Father Xavier Francis redeems himself as peace pacifist

(A Report from Toronto)
 
Sixteen years ago, he was raising an emergency fund to meet the immediate needs of the LTTE for certain sophisticated small arms inviting a selected group of people to lend a repayable sum of Rs.25,000 each to purchase and dispatch these weapons. He was an ace campaigner for armed struggle and would have succeeded in his efforts. He is a strange kind of parson not quite sure how his moods will dictate his actions. Once he tried to force himself into a Hindu   ritual of initiating the child in learning the first elements of education much to the irritation of the parents. Today four score and for years old, Father Francis Xavier had a Roman Cathoic beginning that took him to the pulpit and the confessorial but celibacy evidently did not appeal to him. (more......)

கார்த்திகை 30, 2011

நயாகரா!

உலகின் மிகப் பெரிய அருவியான நயாகராவுக்கு அப்பெயர் எப்படி ஏற்பட்டது தெரியுமா? நயாகரா பகுதியில் வாழ்ந்த மக்களின் மொழியில் இந்த அருவி “ஒங்கியாஹ்ரா” என்று அழைக்கப்பட்டது. அதற்கான சான்று 1641 இல் காணப்பட்டது. ஆனால் அந்தப் பழங்குடியின மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. ஒங்கியாஹ்ரா என்பது பின் ஒங்கியாரா என்று சுருங்கியது, “ஒங்கியாஹ்ரா” என்பதற்கு “இடி போல விழுகின்ற நீர்” என்று பொருள். ஒங்கியாரா என்ற வார்த்தை வாய் மொழி வழியாகவே பரவியதால் அது நாளடைவில் நயாகரா என்று மருவி விட்டது.

கார்த்திகை 30, 2011

ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் மரணம்

முன்னாள் சோவியத் ரஷ்யாவின் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் ஸ்வெட்லானா ஸ்டாலினா தனது 85 ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவில் வசித்து வந்த ஸ்டாலினா விஸ்கோனில் உள்ள பராமரிப்பு நிலையத்தில் கடந்த 22 ஆம் திகதி காலமானார். மரணமடையும் போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு பின்னர் பல இன்னல்களையும் சர்ச்சைகளையும் சந்தித்த ஸ்வெட்லான ஸ்டாலினா மூன்று திருமணங்கள் முடித்துள்ளதோடு நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். எனினும் அவர் இறுதி காலத்தில் வறுமையில் வாடியதாகத் தெரியவருகிறது. ஸ்வெட்லான கடந்த 2010 ஆம் ஆண்டு அமெரிக்க சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜோசப் ஸ்டாலின் பற்றி கூறும் போது; “அவர் என் வாழ்க்கையை குழப்பிவிட்டார்” என கூறியுள்ளார். “சுவிட்சர்லாந்து, இந்திய, அவுஸ்திரேலியா என எங்கு நான் சென்றாலும் எனது தந்தையின் அரசியல் கைதியாகவே நான் பார்க்கப்படுகிறேன்” என அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவர் இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல நாடுகளிலும் வசித்துள்ளார்.

கார்த்திகை 29, 2011

ஐ.தே.க.வின் ஆர்ப்பாட்டப் பேரணி, பின்னணியிலுள்ள அரசியல்!

மக்களுக்குப் பயன் கிடைக்காத நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு, சரத் பொன்சேகாவின் விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக ஐ.தே.க. அழைப்பு விடுத்திருந்தாலும், இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நிபந்தனையுடனேயே பங்கேற்பதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளமை குறிப்பிட்டு நோக்கத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நீண்டகலாமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த கோரிக்கைகள் இதில் உள்ளடக்க வேண்டும் என்று மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட ஐக்கிய சோஷலிசக் கட்சி, நவ சமாஜக் கட்சி ஆகியன கேட்டுக் கொண்டதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை ஒப்புக்கொண்டமை தமிழ்க் கட்சிகளையும் இணைத்த வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்குக் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாக உள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 29, 2011

புலிகளின் தளபதி நகுலன் இரகசியத் தடுப்பு முகாம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் தெரிவித்துள்ளது?

புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேர்ணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மிகவும் நம்பிக்கைக்குரிய தரப்புத் தகவல் மூலம் தமக்கு தெரியவந்துள்ளதாக லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் தெரிவித்துள்ளது. கேர்ணல் நகுலன் என அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி கணபதிப்பிளை சிவமூர்த்தி, கடந்த 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். மின்னேரியாவில் உள்ள இரகசியத் தடுப்புமுகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 மே 18ம் நாள் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த புலிகளின் இரண்டு அணிகளில் ஒன்றின் தலைவராக கேர்ணல் நகுலன் செயற்பட்டிருந்தார். (மேலும்....)

கார்த்திகை 29, 2011

பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து

தமிழருக்கு விரைவில் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் - திஸ்ஸ விதாரண

இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவை உடனடியாக அமைத்து தமிழ் மக்களுக்கு விரைவாக அதிகாரப் பரவலாக்கலைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த தெரிவுக் குழு உடனடியாக அமைக்கப்பட்டு அத னூடாக தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை விரைவாகப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். வரிச் சுமைகள் அப்பாவி மக்கள் மீது திணிக்கப்படக்கூடாது என்பதே எமது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 29, 2011

கிழக்கு மாகாண அடுத்த முதலமைச்சர் தமிழரா? முஸ்லீமா? - கிழக்கு மாகாண முதல்வர்

கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களின் விகிதாசாரத்தை நோக்கினால் எந்தவொரு இனரீதியான கட்சியினாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. கிழக்கு மாகாணம் பல்வேறு புறக்கணிப்புகளை அனுபவித்தும் அதைப் புரியாதவர்கள் இன்னும் வடக்கு தலைமைகளுக்கு தலை குனிந்தவர்களாக இருப்பது கவலைக்குரியது என கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். (மேலும்....)

கார்த்திகை 29, 2011

அனுராதபுரம் சிறைச்சாலையின் தமிழ்க் கைதிகளை வவுனியாவுக்கு மாற்றுங்கள் -  சிவாஜிலிங்கம்

மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருக்கும் அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ்க் கைதிகளை வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யுமாறு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். "மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதாகக் கூறி சுமார் 65 கைதிகளை திறந்த வெளிக்கு அழைத்துள்ள அதிகாரிகள் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பலரை நிர்வாணமாகவும் தாக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கதாகும். இச்சம்பவத்தினைக் கண்டித்து தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிரகாரம் அமைச்சின் ஆலோசகர் கெனடி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். எனினும் கைதிகள் அவரைச் சந்திப்பதற்கு இணங்கவில்லை.பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு கைதிகளின் உறவினர்கள் ஊடாக தகவல் தெரிவித்திருந்தோம். அத்தோடு அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக இவ்வாறான பிரச்சினைகள் நிலவுவதால் தமிழ்க் கைதிகளை வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யுமாறும் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.

கார்த்திகை 29, 2011

தமிழ் பிரதேசங்களுக்கு தமிழ் பேசும் பொலிஸார்

பொலிஸ் நியமனங்களின் போது தமிழ்ப் பிரதேசங்களுக்கு பெருமளவில் தமிழ் பேசும் பொலிஸாரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது 500 தமிழ் பொலிஸார் பல பதவிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கொத்மலையிலுள்ள பயிற்சி நிலையத்தில் சிங்கள பொலி ஸாருக்குத் தமிழ் மொழிப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பொலிஸாருக்கான புதிய நியமனங்களின் போது தமிழ், சிங்களம் என இரு மொழி தேர்ச்சி கவனத்தில் கொள்ளப்படுகிறது. அதேவேளை தமிழ், சிங்கள பொலிஸாருக்கு ஆங்கில மொழி பயிற்சிகளை வழங்கு வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 430 பொலிஸ் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 83,423 பொலிஸார் கடமையிலுள்ளனர். மொத்த மாக 92,023 பொலிஸார் தேவைப்படுகின்றனர். ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ளும்போது இன ரீதியான ஆட்சேர்ப்பு கொள்கை யொன்றில்லை. இதற்கிணங்க சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் 81,328 பேரும் தமிழ் உத்தியோகத்தர்கள் 1093 பேரும், முஸ்லிம் உத்தியோகத்தர்கள் 952 பேரும், மலே உத்தியோகத்தர்கள் 25 பேரும், பேகர் உத்தியோகத்தர்கள் 09 பேரும் கடமையில் உள்ளனர். எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கார்த்திகை 29, 2011

Reconciliation the Way Forward for Sri Lanka Secretary Defence Gotabaya Rajapaksa

 In areas under LTTE dominance, matters were even worse. The LTTE did not tolerate any opposition. It assassinated democratic leaders and intellectuals in the Tamil community in order to style itself the sole representative of the Tamil people. In this effort, it killed such democratic politicians as former Opposition Leader A. Amirthalingam, Secretary General of the Tamil United Liberation Front, Mr. Y. Yogeshwaran and Dr. Neelan Tiruchelvam of the same party, Mr. Sam Thambimuttu and Mr. K Pathmabanda of the EPRLF. In addition to moderate politicians, the LTTE also assassinated the leaders of other armed groups in these areas, including C. Thanabalasingham of the TNT, K Sundaram of PLOTE and Sri Sabaratnam of TELO. On occasion, the LTTE even wiped out the entire command structure of groups it saw as opponents. By eliminating all rivals, the LTTE was able to keep the people in the areas it dominated under a virtual dictatorship. Though it pretended, at its height, to have a judicial system and a police force, these were shams constructed to disguise a territory ruled at gunpoint. No one in those areas was truly safe; no one was truly free. (more.....)

கார்த்திகை 29, 2011

ரூபாய் மதிப்பு

வீழ்ச்சியும், விளைவுகளும்

(இ.எம். ஜோசப்)

பொதுவாக டாலர் மதிப்பு, தங்கத்தின் விலை, சர்வதேச எண்ணெய் வர்த்தகம் ஆகிய மூன்றிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எண்ணெய் வர்த்தகம் ஆகப் பெருமளவில் டாலர் அடிப்படையில் நடைபெறுவதால் டாலருக்கான சர்வதேசக் கிராக்கியும் அதன் காரணமாக அதன் மதிப்பு உயர்வதும் எண்ணெய் வர்த்தகம் கீழிறங்கும் போது டாலர் மதிப்பு குறைவதும் நாம் தொடர்ந்து கண்டு வரும் காட்சிகள். அதே போன்று டாலர் மதிப்பு குறையும் போதெல்லாம் முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்புக்களை தங்கத்திற்கு மாற்றிக் கொள்வதையும் நாம் பார்த்திருக்கி றோம். அண்மையில் சீனா, இந்தியா உட்பட சில அரசாங்கங்கள் தங்கத்தை விலை கொடுத்து வாங்கின. தங்கத்திற்கும் அதே போன்று மற்றொரு அரிய உலோகமான வெள்ளிக்கும் ஏற்பட்ட அத்தகைய கூடுதல் கிராக்கி அவற்றின் விலைகளை எவ்வாறு உயர்த்தின என்பதும் இன்றைய காட்சி களேயாகும். சில மாதங்களுக்கு முன்பு வரை டாலரின் மதிப்பு சற்றுக் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் அண்மையில் டாலர் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. இது எப்படி? (மேலும்....)

கார்த்திகை 29, 2011

“பெரும் போராட்டங்களின் துவக்கக் கட்டம்”  பிரிட்டன் தொழிற்சங்கம் கருத்து

நவம்பர் 30 ஆம் தேதியன்று நடைபெற விருக்கும் நாடு தழுவிய தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், வரவிருக்கும் பெரும் போராட்டங்களின் துவக்ககட்டம்தான் என்று பிரிட்டனின் பெரிய தொழிற்சங்க மான தொழிற்சங்கக் காங்கிரஸ் கூறியுள்ளது. பிரிட்டன் அரசின் பொருளாதாரக் கொள்கை, தொழிலாளர் விரோதக் கொள்கை மற்றும் கல்வியை வியாபார மாக்கும் அணுகுமுறை ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நவம்பர் 30 அன்று நடைபெறுகிறது. பெரும் பாலான தொழிலாளர்களின் வேலைநிறுத் தம் செய்ய வாக்களித்துள்ளனர். இதில் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற் பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்....)

கார்த்திகை 29, 2011

அநுராதபுரம் சிறைச்சாலை

தாக்குதல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை, தேடுதலில் 19 செல்லிடபேசிகள் கண்டுபிடிப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து சிறைச்சாலை திணைக்களம் விசாரணை நடத்துவதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் திசாநாயக்க தெரிவித்தார். சிறைச்சாலையினுள் ‘மாவீரர் தின’ அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கு இடமளிக்காததாலே தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கைதிகள் பொய்க் குற்றம் தெரிவிப்பதாகவும் கைதிகள் மீது எவ்விதத் தாக்குதலும் நடத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் சிறைச்சாலை யினுள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கப் போவதாக கிடைத்த தகவலையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் இங்கு சோதனை நடத்தியுள்ளனர். இதன் போது கைதிகள் குழப்பம் ஏற்படுத்த முயன்றதாகவும் கைதிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சிறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் போது கைதிகளிடம் இருந்து 19 கையடக்கத் தொலைபேசிகள் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை 29, 2011

சீனா

“அனைவருக்கும் வீடுகள்” 

சீனக்குடிமக்கள் அனைவருக்கும் சொந்தமான வீடு என்ற இலக்கை நோக்கி மக்கள் சீனம் விரைந்து கொண்டிருக்கிறது. இதற்காக வரும் ஐந்து ஆண்டுகளில் 3 கோடியே 60 லட்சம் வீடுகளைக் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர். நடப்பாண்டிற்குள் 1 கோடி வீடுகளைத் தயார் செய்துவிடுவது என்பதும் அவர்களின் முடிவாகும். அந்த இலக்கை அடைவதற்கான பணிகள் முழு மூச்சாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப்பணிகளை கண்காணிப்பதற்காக அந்நாட்டின் துணைப்பிரதமர் லி கெகியாங் தலைமையில் ஒரு குழு இயங்கி வருகிறது. சாதாரண மக்களுக்கு அவர்களின் சக்திக்கேற்ற வகையிலான, அதே வேளையில் மிகவும் தரமான வீடுகளை உருவாக்கி விநியோகம் செய்யவுள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் மக்களுக்கு வாழ்வாதாரம் உருவாவது மட்டுமில்லாமல், பொருளாதாரமும்மேம்பாடுஅடைய வாய்ப்பு ஏற்படும் என்று குறிப்பிடுகிறார் லி கெகியாங். (மேலும்....)

கார்த்திகை 29, 2011

தலைமன்னாரில் மீள்குடியேறிய மக்களுக்கு காணிகளை உடன் வழங்க ஜனாதிபதி பணிப்பு

வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ள தமிழ்-முஸ்லிம் மக்களது காணிப்பிரச்சினைகளை இனிமேல் கையாளுவதற்கு வடக்கு- கிழக்கு பிரதிநிதிகளை உள்ளடக்கிய அமைச்சர்களது குழுவொன்றை நியமிப்பதுடன், காணி மற்றும் சுற்றாடல் அமைச்சர்களையும் அதில் உள்வாங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியின் சாதகமான பதில் கிட்டியுள்ளது. தற்போது நாட் டில் குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகா ணங்களில் தமிழ்,முஸ்லிம் மக்கள் மீள் குடியேறும்போதும், அதேபோன்று அங்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும், மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினையினை தீர்த்துக்கொள்வதற்கு அம்மக்களின் பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்றை ஏற்படுத்தி, அந்த பிரச்சினைக் கான தீர்வை பெற்றுக்கொடுப்பதன் சாதகமான நிலைகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்திருந்த துடன், இவ்விடயத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பிரசன்னம் அவசியமாக இருக்காது என்பதனையும் சுட்டிக்காட்டி யிருந்தார். (மேலும்....)

கார்த்திகை 29, 2011

எகிப்தில் தேர்தல்

மக்கள் எழுச்சியால், அமெரிக்க ஆதரவு ஆட்சியாளரான ஹோஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்ட எகிப்தில், நீண்டகாலத்திற்கு பிறகு முதல்முறையாக நவம்பர் 28 திங்களன்று நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற்றது. தலைநகர் கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா உள்பட முக்கிய நகரங்களிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 8 மணிக்குத் துவங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. மூன்று கட்டமாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் நடவடிக்கைகள் அடுத்த மார்ச் மாதம் முடிவடையும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. அமெரிக்க கைப்பாவையான ராணுவப் படைகளின் சுப்ரீம் கவுன்சில் தலைமையில் கடந்த வாரம் கமால் அல் - கன்சோரி என்பவர் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப் பட்டார். அவரது கண்காணிப்பின் கீழ் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் தனது கைக்கூலிகளை ஆட்சிக்கு கொண்டுவர அமெரிக்க ஏகாதிபத்தியம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மறு புறத்தில் முழு ஜனநாயகத்தை இத்தேர்தல் மூலம் மலரச் செய் வோம் என மக்கள் உறுதிபூண்டுள்ளனர்.

கார்த்திகை 29, 2011

அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்க ஜார்க்கண்ட நீதிமன்றம் உத்தரவு

வாடிக்கையாளரை மோசடி செய்த குற்றத்திற்காக இந்திய தொழிலதிபரான அனில் அம்பானியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிபதி பி.கே. பாண்டே உத்தரவிட்டார். இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் தொடர்பான மோசடி வழக்கில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனில் அம்பானியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பிரதாப்குமார் வர்மா என்பவரின் மனைவி ரிலையன்ஸ் செல்போன் சிம்கார்ட் வாங்கி இருந்தார். அதை ஈசி ரீசார்ஜ் செய்த போது குறிப்பிட்ட திட்டத்துக்கென ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த சலுகைகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம், தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை. வாடிக்கையாளர்களை மோசடி செய்கிறது. எனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு பிரதாப் குமார் வர்மா ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி மீது மோசடி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் கடந்த மே 21 ஆம் திகதி ஜார்கண்ட் நீதிமன்றம் அனில் அம்பானிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. எனினும் அனில் அம்பானி இதுவரை கைது செய்யப்படாத நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாக கருதி அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்யுமாறு நீதிபதி பி.கே. பாண்டே உத்தரவிட்டார்.

கார்த்திகை 29, 2011

நேட்டோ படை தெரிவித்த வருத்ததை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு

தங்கள் நாட்டு வீரர்கள் கொல்லப்பட்ட தற்கு நேட்டோ படை தலைவர் தெரிவித்த வருத்தத்தை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுத்துவிட்டது. கடந்த வார இறுதியில் ஆப்கான் எல்லையையொட்டி அமைந்துள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் மீது ஆப்கானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையின் ஹெலிகொப்டர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 25 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர். இது பாகிஸ்தானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு நேட்டோ படை பொதுச் செயலர் ஆண்டர்ஸ் பாக். பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதினார். ஆனால் நேட்டோ படையின் இந்த வருத்தத்தை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுத்துவிட்டது. பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு வெறும் வருத்தம் போதுமானதல்ல என்று அந்நாட்டு இராணுவ பேச்சாளர் அக்தர் அப்பாஸ் தெரிவித்தார். நேட்டோ நடத்திய தாக்குதல் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர் கூறினார்.

கார்த்திகை 29, 2011

பூமியை ஒத்த கிரகம் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் கலிபோர் னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித் துள்ளனர். அந்த கிரகத்துக்கு ‘கிளைஸ் 58 ஜி’ என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 123 லட்சம் கோடி தொலைவில் உள்ளது. இந்த புதிய கிரகத்தில் தண்ணீர் உள்ளதாக நம்பப்படுகிறது. எனவே அங்கு உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை 28, 2011

2ஜி வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதியிடம் கேட்டதற்கு, 'கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறினார். முன்னதாக, ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமார், பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கரீம் மொ ரானி, ஸ்வான் டெலிகாம் நிர்வாகி சாகித் உஸ்மான் பால்வா, குசேகான் புருட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குனர் ஆசிப் பால்வா, ராஜீவ் அகர்வால், தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அவற்றை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இந்த 6 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதையடுத்து, கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் எம்பி கனிமொழி, சரத்குமார், ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்த்திகை 28, 2011

புலிகளுக்கு ஆதரவான யாழ்.பல்கலைக்கழக மாணவன் வேதாரணியம் லத்தீஸ் கடத்தப்பட்டுள்ளார்!

புலிகளின் மாவீரர் தினகொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த புலி பிரிவினைவாதத்திற்கு துணை போகும் புலிகளுக்கு ஆதரவான யாழ்.பல்கலைக்கழக மாணவன் வேதாரணியம் லத்தீஸ் கடத்தப்பட்டுள்ளார்! நேற்றிரவு யாழ்.திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நணபர்ளை சந்தித்து விட்டு கைதடியிலுள்ள தனது விடுதிக்கு திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இவர் கடத்தப்பட்டிருக்கலாமென குடும்பத்தவர்கள் சந்தேகிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சொந்த இடமாக கொண்ட இவர் வன்னியில் படையினரால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையிலேயே பூஸா தடுப்பு முகாமிலிருந்து இழுபறிகளின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகையால் வழமை போல திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நண்பர்ளை சந்திக்க வந்து திரும்புவது இயல்பானதென நண்பர்கள் கூறுகின்றனர். நேற்று புலிகளின் மாவீரர் தினகொண்டாட்டங்களில் மாணவர்கள் பாலசிங்கம் விடுதியில் ஈடுபட்டிருந்ததையடுத்து விடுதி சூழலில் படையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். புலிகளின் மாவீரர் தினகொண்டாட்ட மாணவர்கள் அச்சம் காரணமாக அனைவரும் ஒன்று கூடி விடுதிகளுள் முடங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

கார்த்திகை 28, 2011

காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காக போராடும் பலஸ்தீனம்

பலஸ்தீன மண்ணில் மேற்கொள்ளப் படும் காலனித்துவ நடவடிக்கை களுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அஹிம்சை வழிப் போராட்டத்தின் நினைவு தினம் இன்றாகும். நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இந்த தினம் அமைந்துள்ளது. புதிய தாய் நாட்டை விடுவித்துக் கொள்வதற்காக ஆக்கிரமிப்புக்கு எதிராக, அந்த பூமியின் சொந்தக்காரர் கொண்டு செல்லும் நியாய மான போராட்டமானது இற்றைக்கு சுமார் ஆறு சகாப்தங்களாக பல மிக்க முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. பலஸ்தீனப் பிரச்சினையில் எமக்கு தெளிவாக இரண்டு தரப்பினரை காணக் கூடியதாக உள்ளது. அந்த இரண்டு தரப்பினர்களாவன. ஒன்று ஆக்கிரமிப்பாளர் கள் மற்றையது பாதிக்கப்பட்ட மக்கள். எனவே ஆக்கிரமிப்புக்கு ஆளான மக்கள் சுதந்திரத்திற்காக கிளர்ந்தெழுவது சட்ட ரீதியானதும், நியாயமானதும் மற்றும் இயற்கையானதுமாகும். (மேலும்....)

கார்த்திகை 28, 2011

ஏன் இந்த கொலைவெறி ?

(ஞாநி)

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்ட செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடாமல் எட்டாம் பக்கம், பத்தாம் பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிற ஓர் ஆங்கில செய்தித்தாள், முதல் பக்கத்தில் ‘கொலைவெறி’ சினிமாப் பாடல் சூப்பர் ஹிட்டான செய்தியை நான்கு காலம் தலைப்பிட்டு வெளியிடுகிறது. ஏன் இந்தக் கொலைவெறி ?

கம்ர்ஷியல் சினிமாகாரர்கள் எப்போதும் மிகையான பப்ளிசிட்டியில் ஈடுபடுவது வழக்கம். அது அவர்களுக்கு ‘தொழில் தர்மம்’. இருபது லட்ச ரூபாயில் ஒரு செட் நிர்மாணித்தால், மூன்று கோடி செலவிட்டதாக சொல்வார்கள். நடிக்கும் பாத்திரத்துக்காக நடிகர் தன்னை என்னென்னவோ விதத்தில் வருத்திக் கொண்டதாக சொல்வார்கள். அசல் வருத்தம் 10 சதவிகிதம் என்றால் பப்ளிசிட்டி வருத்தம் 150 சதவிகிதமாக இருக்கும். அறுபதுகளில் ஒரு முறை ஒரு நடிகர் தான் நடிக்கும் பாத்திரத்துக்காகத் தொடர்ந்து தலையை மொட்டையடித்துக் கொள்வதாக செய்தி வெளியானபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் அப்போது அவருக்கிருந்த அவருக்கே உரிய நையாண்டியில் கேட்டார் : அந்த நடிகர் ஒரு இஸ்லாமியர் வேடத்தில் நடித்தாரே, அதற்காக முறைப்படி சுன்னத் செய்துகொண்டாரா ?! சினிமாகாரர்கள் பப்ளிசிட்டி செய்ய வேறு எதுவும் இல்லாவிட்டால், குறைந்தபட்சம், ஒரு நடிகரோ நடிகையோ அண்ணா சாலையில் நடந்து போகிற காட்சியை படம் பிடித்ததைக் கூட, ‘கொளுத்தும் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் நடித்த ஜிகினாஸ்ரீ மருத்துவமனையில் கொப்புளங்களுடன் அனுமதி ‘ என்று பரபரப்பாக்குவார்கள். (மேலும்....)

கார்த்திகை 28, 2011

மாவீரர் தினம்

இராணுவ அழிப்பிற்குத் துணை போகும் புலம்பெயர் வியாபாரிகள்

(அஜித்)

இன்று (27/11/2011) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த போராளிகள் நினைவாக மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான அப்பாவிமக்கள் இலங்கை அரசால் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னர் மூன்றாவது தடவையாக இப்போது இத்தினம் கொண்டாடப்படுகிறது. இதே வேளை இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் இலங்கை ராஜபக்ச குடும்ப பாசிச அரசு இராணுவ ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஏற்கனவே கோரமான இராணுவ ஒடுக்குமுறைக்குள்ளும், இலங்கை உளவுத்துறையின் கண்காணிப்பினுள்ளும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மீது பெருந்தேசிய வாத ஒடுக்குமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  (மேலும்....)

கார்த்திகை 28, 2011

கொழும்பு - யாழ் அதிவேக நெடுஞ்சாலை அமைப்புக்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி - விந்தையின் நுழைவாயில் திறப்பு விழாவில் ஜனாதிபதி

  • கொழும்பிலிருந்து 3 மணி நேரத்தில் யாழ். செல்ல முடியும்

  • எல்லைகள் சுருங்க பிரிவினைவாதம் இல்லாதொழியும்

  • நவம்பர் 27: இருண்ட யுகத்துக்கு முற்றுப்புள்ளி

  • மனங்கள் இணையும் போது பிரிவினைக்கு தீர்வு கிட்டும்

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் பூர்த்தியடைந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கரந்தெனியவில் தெரிவித்தார். இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதும் மூன்று, நான்கு மணித்தியாலங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்குமென்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார். இந்த நெடுஞ்சாலை வடக்கும், கொழும்பும் ஒன்றிணைவதற்கும் அவற்றுக்கிடையிலான பயணத்தூரம் சுருங்குவதற்கும் வழிவகுக்கும். அப்போது பிரிவினை என்ற சிந்தனையே எழாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். (மேலும்...)

கார்த்திகை 28, 2011

வயதான உயிரணுக்களை நீக்கினால் ஆயுள் நீளும்

மனித உடலின் இயல்பான வளர்ச்சியின் போது உடலின் உயிரணுக்களுக்கு வயதாக வயதாக அவற்றில் ஏற்படும் சில மாற்றங் களால் புற்றுநோய் கூட ஏற்படக்கூடிய வாய்ப்பிருப்பதால், அந்த உயிரணுக்களை நம் உடலானது செயழிக்கச் செய்துவிடும். இவ்வாறு செயலிழந்துபோகும் வயதான செல்களுக்கு இரண்டு விதமான முடிவுகள் உண்டு. ஒன்று இறந்து போவது, மற்றொன்று செயலிழந்த நிலையிலேயே பிற ஆரோக்கியமான உயிரணுக்களுடன் ஒட்டிக்கெண்டு காலம் கழிப்பது. சரி இறந்துபோகாத இந்த வயதான உயிரணுக்கள் சும்மா இருந்துவிட்டாலாவது பரவாயில்லை. ஆனால் அவை சும்மா இருப்பதில்லை என்பதுதான் இங்கு பிரச்சி னையே. இறக்காமல் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரணுக்கள், ‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதைப் போல்’ தங்கள் பங்குக்கு தேவையில்லாத உடலின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடிய ‘தவறான புரதங்களை’ உற்பத்தி செய்கின்றனவாம். இந்த உயிரணுக்களிலிருந்து அனுப்பப்படும் இரசாயன சமிக்ஞைகள், சுற்றியிருக்கும் ஆரோக்கியமான உயிரணுக்களை மோச மாகப் பாதிக்கின்றன. இந்தப் பாதிப்பு மூப்படைதலுடன் தொடர்புடைய பல நோய்களை உண்டாக்குகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். (மேலும்...)

 

கார்த்திகை 28, 2011

 

'நான் வாய் திறந்தால் பலர் உள்ளே செல்ல நேரிடும்' - ஸ்பெக்ட்ரம்  ராஜா

நான் பேசத் துவங்கினால், மேலும் பலர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என முன்னாள் அமைச்சர் ராஜா கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா, பத்து மாதங்களுக்கு மேலாக, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரும், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனாலும், ராஜா, இன்னும் ஜாமின் கோரவில்லை. திகார் சிறை வாழ்க்கை தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும், என்னை பக்குவப்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகள் எம்.பி.யாக பதவி வகித்து வருகிறேன். ஏறக்குறைய 12 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறேன். இந்த இரண்டிலுமே, கற்றுக் கொள்வதற்கு பல விஷயங்கள் உள்ளன. இந்த வழக்கில் நான், நிரபராதி என அறிவிக்கப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன். நான் பேசத் துவங்கினால், மேலும் பலர் சிறைக்குச் செல்ல நேரிடும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிகழ்ந்த ஒவ்வொன்றையும் நான் குறிப்புகளாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

கார்த்திகை 28, 2011

விமான தளத்திலிருந்து வெளியேற அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் காலக்கெடு

நேட்டோ படையின் எல்லை மீறிய தாக்குதலையடுத்து 15 நாள் அவகாசம்

பலுகிஸ்தான் மாகாணத்தில் உள்ள தனது விமானப் படை தளத்தில் இருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. நேட்டோ படை கடந்த வெள்ளிக்கிழமை எல்லை மீறி நடத்திய தாக்குதலில் 25 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே பாக். அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தான், அமெரிக்க உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேட்டோ படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படை பிரதானி களுடன் பிரதமர் யூசுப் ராசா கிலானி வெளியுறவு அமைச்சகத்தில் அவசர கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் நேட்டோ தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  (மேலும்...)

கார்த்திகை 28, 2011

புதிய குறியீட்டுடன் 100 ரூபாய் நோட்டு

மும்பை ரிசர்வ் வங்கி, ரூபாயை குறிக்கும் ‘ஆர்’ என்ற தேவநகரி சின்னத்துடன் 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளது. டாலர், யூரோ போன்ற கரன்சிகளுக்கு உள்ள சின்னம் போன்று, இந்தியாவின் ரூபாய்க்கு ‘ஆர்’ என்ற சின்னம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் உருவாக்கிய இந்த சின்னத்தை, இந்திய ரூபாயின் அதிகாரபூர்வ குறியீடாக, ரிசர்வ் வங்கி அங்கிகரித்தது. கடந்த வாரம், இந்த குறியீட்டுடன் 1000 மற்றும் 10 ரூபாய் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, மகாத்மா காந்தி உருவம் பொறித்த 100 ரூபாய் கரன்சி, புதிய ரூபாய் குறியீட்டுடன் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை 28, 2011

Friendship and hosanna-singing

Mahinda Rajapaksa, when he was sworn in as the fifth President with executive powers in November 2005, made a stirring speech at Galle Face.  He spoke of friends and friendship.  He said ‘I believe my friends are those who offer just criticism and not those who sing hosannas in my praise’. While we don’t know whether the President has assessed friendship-worth of hosanna singers, it is very clear that in the six years that have passes since that significant political moment there has been no lack in the matter of singing hosannas.  Indeed it would seem that those who are in a position to sing praises, metaphorically and literally, have not understood the friendship parameters laid out by the President six years ago.  Two recent incidents come to mind which illustrate what might be called the classic occupational hazard of rulers.  First, there was the assault on placard carrying opposition members while the President was presenting the annual budget in Parliament. (more....)

கார்த்திகை 28, 2011 

பிரிட்டன் தூதுவரை வெளியேற்ற ஈரான் பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

ஈரானுக்கான பிரிட்டன் தூதுவரை வெளியேற்றி அந்நாட்டுடனான இராஜதந்திர, பொருளாதார உறவுகளை குறைத்துக் கொள்ள ஈரான் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. அணு ஆயுத விவகாரம் தொடர்பில் ஈரான் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பில் ஈரான் பாராளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் பிரிட்டனுடனான உறவுகளை குறைத்துக்கொள்வதற்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்ததோடு எதிராக 4 வாக்குகள் மாத்திரமே பதிவானது.

கார்த்திகை 28, 2011 

மீண்டும் வந்திருக்கின்றார் அகாசி

பிரதான அரசியல் கட்சிகளுடன் யசூசி அகாசி பேச்சுவார்த்தை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக் கும் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி வெளிவிவகார அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஆளும், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். யசூசி அகாசிக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்பு நாளை முற்பகல் 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூவ் ஹக்கீமின் கொழும்பு வாசஸ்தலத்தில் இடம்பெற வுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவிருப்பதாக ஜப்பானியத் தூதரக வட்டாரங்கள் தெரி விக்கின்றன. இவருடனான சந்திப்பில் இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட பல் வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரை யாடவிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார். இலங்கையில் அமைக்கப்பட்டி ருக்கும் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை திறப்புவிழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு ஐப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இலங்கை வந்துள்ளார்.

கார்த்திகை 28, 2011 

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட புடினுக்கு அனுமதி

அடுத்த மார்ச்சில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சியின் சார்பில் போட்டியிட பிரதமர் விளாடிமிர் புடின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த புடின் 2008ம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினார். எனினும் மீண்டும் போட்டியிட விருப்பம் உள்ளதாக செப்டம்பரில் அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய ரஷ்ய கட்சியால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கார்த்திகை 28, 2011 

உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகளை வகைப்படுத்தும் பணி இன்று ஆரம்பம்

நாடெங்கிலுமுள்ள சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்களின் உணவு தயாரிக்கும் இடங்களைப் பரிசோதித்து வகைப்படுத்தும் வேலைத் திட்டம் இன்று 28ம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. நாட்டிலுள்ள உணவு தயாரிக்கும் பல இடங்கள் அதற்குரிய தரத்தில் இல்லை என்று மக்கள் சுகாதார அமைச்சுக்குத் தெரிவித்த புகார்களின் அடிப்படையிலேயே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருக்கின்றார். உணவு தயாரிக்கும் இடங்களை பரி சோதித்து வகைப்படுத்தும் வேலைத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு தேவை யான சுற்றறிக்கை மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்க ளுக்கும், மாநகர சபைகளின் பிரதம மருத்துவ அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாடெங்கிலுமுள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூலம் மக்களுக்கு தரமான உணவுவகை களைப் பெற்றுக்கொடுப்பதை நோக்காகக் கொண்டே இவ்வேலைத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்படும் உணவு தயாரிக்கும் இடங்களுக்கு ஏ.பி.சி.டி என வகைப்படும் என்றும் அவ் வதிகாரி குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்ட பரிசோதனை நடவடிக்கை நாவல பிரதேசத்தில் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கார்த்திகை 28, 2011 

எகிப்தில் இன்று தேர்தல்

இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் எகிப்தில் முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்றும் நாளையும் நடைபெற வுள்ள முதல் கட்ட தேர்தலில் எகிப்தின் பிரதான நகரங்களில் வாக்கெடுப்புகள் நடைபெற வுள்ளன. தலைநகர் கெய்ரோ, அலக்சான்ட்ரியா, பயூம், லக்ஷர், போர்ட் சயித், டெமியட்டா, கப்ர் அல் ஷெய்க் மற்றும் செங்கடல் மாகாணம் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. எஞ்சிய பகுதிகளில் டிசம்பர் 14 மற்றும் ஜனவரி 03 ஆம் திகதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனினும் ஆளும் இராணுவ கவுன்ஸிலை பதவி விலகக் கோரி தஹ்ரியார் சதுக்கத்தில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எகிப்தில் ஹொஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின் அந்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான முதலாவது தேர்தலே இன்று ஆரம்பமாகவுள்ளது.

கார்த்திகை 28, 2011 

மட்டக்களப்பு, அம்பாறை பகுதியில் வானம் வெளுத்தது, மழை ஓய்ந்தது

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்க ளில் நேற்று மழை பெய்யாததால் இரு மாவட்டங்களிலும் இயல்பு நிலை வழமைக்குத் திரும்பியிருந்தன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் தமது அன்றாடப் பணிகளில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருந்த வெள்ளம் வடிய ஆரம்பித்துள்ளது. மேற்படி இரு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கி இருந்தன. ஆயினும் நேற்று மழை பெய்யாததனால் வெள்ளம் வடிந்தோடி வருவதாக அங் கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன. பெரும்போக நெற் செய்கை மேற்கொள் ளப்படாத காணிகளில் வெள்ளம் தேங்கி யுள்ளதனால், விதைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையேற்பட் டுள்ளது. இம்முறை பெரும் போகத்தில் 94 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற் செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் இத் தொகையில் குறைவேற்படலாம் என நம்பப்படுகின்றது. சீரற்ற கால நிலை காரணமாக கடற் றொழிலாளர்கள் எவரும் கடலுக்குச் செல்ல வில்லை.

கார்த்திகை 28, 2011 

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றி

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதையடுத்து பிரதமர் ஜோன் கீ 2 வது முறையாக பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 121 உறுப்பினர்களைக் கொண்ட நியூசிலாந்து நாடாளுமன்றத்துக்கு கடந்த சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினமே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில், ஆளும் தேசிய கட்சி 60 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

கார்த்திகை 28, 2011 

மொரோக்கோ பொதுத் தேர்தலில் இஸ்லாமிய கட்சி வெற்றி

மொரோக்கோவில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி வெற்றிபெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 395 ஆசனங்களுக்கான தேர்தலில் 288 இடங்களுக்கான முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 80 ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. மொத்தம் 100 ஆசனங்களை பெற முடியும் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால் கூட்டு ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. இதன்படி மொரோக்கோவில் முதல் முறையாக பாராளுமன்றத்தால் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படவுள்ளார். இதற்கு முன்னர் அந்நாட்டு மன்னர் 6ஆவது முஹம்மத்தே பிரதமரை தேர்வு செய்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

கார்த்திகை 28, 2011

‘யானை வரும் பின்னே!’

துனீஷியாவில் விரட்டியடிக்கப் பட்ட பென் அலி, எகிப்தில் விரட்டி யடிக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக், லிபியாவில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த முகமது கடாபி போன்றவர் களுக்கு சற்றும் குறைவில்லாதவர்தான் சிரியாவின் பஷார் அல் - அசாத். இவரது ஆட்சியில், எண்ணெய் வளம் கொழிக்கும் இந்த பூமியில் கூட 32 சதவீத மக்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். நாள் ஒன் றுக்கு 2 டாலருக்கும் குறைவாகவே வரு மானம் கிடைக்கும் நிலையில் இருக் கிறார்கள். மிக நீண்ட ஆண்டுகளாக மக்கள் இயக்கங்கள் மீதான ஒடுக்கு முறை தொடர்கிறது. அசாத்தின் அரசு வீழ்த்தப்பட வேண்டிய அரசே! ஆனால், அசாத் அரசை வீழ்த்தி விட்டு அங்கு அமரப்போவது யார் என் பதே இப்போதைய மிக முக்கியமான கேள்வி. துருக்கி, சவூதி அரேபியா ஆகிய வற்றின் ஆதரவோடு, அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்டு ஒரு அரசு அமையு மானால், அது சிரிய மக்கள் மீதான முன் னெப்போதும் இல்லாத தாக்குதலாகவே அமையும். லிபியாவில் அமெரிக்க கைப் பாவை அரசு ஆட்சியில் அமர்த்தப்பட் டிருப்பதை உலகம் பார்க்கிறது. அவர்கள் லிபியாவில் கோரத்தாண்ட வம் ஆடி வருகிறார்கள் என்பதையும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக் கிறது. (மேலும்....)


கார்த்திகை 27, 2011

புலம் பெயர் தேசத்து மாடி வீட்டு ஏழைகளான மாவீரர் கொண்டாட்டக்காரர்

பணத்தை மையப்படுத்தி செயற்படும் புலம்பெயர் தேசத்து புலிகள் ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளின் பணத்தின் அடிப்படையில் பிரிந்து நின்று அடிபட்டு 'மாவீரர்' தினத்தை கொண்டாடுகின்றனர். ஆனால் எல்லோருரிடமும் ஒரு விடயத்தில் மட்டும் ஒற்றுமை நிலவுகின்றது. அது 'சூரியத் தேவன்' பற்றி மரணம் பற்றிய மௌனம் சாதித்தல் என்பதே அது. நெடியவன் குழு,, விநாயகம் குழு கேபி(ரெஜி) குழு காங்கிரஸ் குழு, நாடுகடந்த அரசுக் குழு எனப் பிரிந்து நின்றாலும் நாடு கடந்த அரசு, காங்கிரஸ் குழுக்கள் மாடி வீட்டு ஏழைகளாக காணப்படுகின்றனர். புலிகளின் ஊதுகுழல்கள் எல்லோரும் ஓரணியில் நின்று மாவீரர் கொண்டாட்டங்கள் செய்கின்றனர் என்று ஊதினாலும் வெட்டுப்பாடுகள், குத்துப்பாடுகளுக்கு குறைவு இல்லை. இலங்கை அரசை தன் வழியிற்கு கொண்டு வர நேட்டோ நாடுகள் 'முதலாளித்துவ ஜனநாயகப் பண்பு' களின் அடிப்படையில் புலம் பெயர் தேசத்து புலிகளின் இச்செயற்பாடுகளுக்கு மறைமுக ஆதரவை வழங்கி நிற்கின்றனர். மேலும் சனங்களும் கூடவில்லை என்பதுவும் பரிதாபமே.

கார்த்திகை 27, 2011

அடுத்த இலக்கு யாழ்ப்பாணத்திற்கான அதிவேக வீதியே - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

யாழ்ப்பாணம் இடையே அதிவேக வீதியை நிர்மாணிப்பதே அரஙசாங்கத்தின் அடுத்த இலக்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் முதலாவது அதிவேக மார்க்கமான தெற்கு அதிவேக வீதியை திறந்துவைப்பதற்காக இன்று நண்பகல் காலியில் நடைபெற்ற நிகழ்வின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாட்டை உருவாக்குவதற்கான வீதிகள் அபிவிருத்தி எடுத்துக்காட்டுவதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.. கொழும்பையும் காலியையும் இணைக்கும் அதிவேக பெருந்தெருவை மக்கள் போக்குவரத்திற்காக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறந்த வீதிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டால் பிரிவினைவாத உணர்வுகள் களையப்படும் என அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பையும் காலியையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலைக்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

கார்த்திகை 27, 2011

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச எல்லைப்பகதிகளை காணிகளை கைப்பற்றும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டுகோள் - இரா.துரைரெட்ணம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் (பத்மநாபா EPRLF)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைப்புற பிரதேசங்களில் 15000 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை அம்பாரை மாவட்டத்துடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சியினை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (மேலும்....)

கார்த்திகை 27, 2011

மாவீரர் தின மோதல்கள்

விநாயகம், நெடியவனிடையே சொத்துக்கான சண்டைகள்

பிளவுபட்ட புலி ஆதரவு இணையங்களில் வெளியான செய்திகள்

ஜேர்மனியில் மாவீரர் படங்கள், நினைவு கல்லறைகள் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு தீவைப்பு!

பாரிஸ் - லா சப்பலில் மாவீரர் கொடிகள் அறுத்தெறியப்பட்டது !

ஜேர்மனியில் விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலக மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக செய்யப்பட்ட கல்லறைகள், மற்றும் மாவீரர் படங்கள், துயிலும் இல்ல முகப்பு, தமிழீழ வரைபடம், மற்றும் சோடனைகள்  வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு கடந்த இரவு சில விஷமிகள் தீவைத்துள்ளனர் என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜேர்மனி ரெட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. முன்சன்கிளப் பார்க் ( கொமர்சியல் பார்க்) என்ற இடத்திலேயே விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலக மாவீரர்நாள் நிகழ்ச்சிகள் நடைபெற இருந்தன. ஜேர்மன் விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலக மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு உறுப்பினரான குஞ்சன் என்று அழைக்கப்படும் புவனேஸ்வரன் என்பவர் வீட்டில் பின்பக்க கராஜில் மாவீரர் நினைவு கல்லறைகளும், மாவீரர் படங்களும் , சோடனைகளும், மாவீரர்நாள் நடைபெறும் இடத்தில் கொண்டுபோய் வைப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போது அவ்வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த விஷமிகள் மாவீரர் படங்களுக்கும், நினைவு சின்னங்களுக்கும் தீவைத்துள்ளனர் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 27, 2011

கார்த்திகை 27, 2011

சூரியதேவனின் பிறந்தநாள் செய்தி !

 

 ‘‘புலிகளின் சொத்துக்களை இனியாவது பொதுமைப்படுத்தி யுத்தத்தால் பாதிக்ப்பட்டவர்களுக்கு உதவ இவ்வருட மாவீரர் நாளை பயன்படுத்துங்கள்.’’

கார்த்திகை 27, 2011

யாழில் திடீரென முளைக்கும் விடுதிகளால் என்றுமில்லாதவாறு கலாசார சீரழிவு!

(க. சிவராசா)

யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதும் ஏ-9 பாதை திறக்கப்பட்டது. அதனால் யாழ்ப்பாணத் திற்கு எவரும் வந்துபோகும் நிலை ஏற்பட்டது. எவ்விதமான கட்டுப்பாடும் கிடையாது. இவ்வாறு வந்துசெல்லும் நபர்கள் தங்குவதற்குத் தங்குமிட தேவையேற்பட்டபோது பலரும் வருமானத்தை ஈட்டுவதற்காக சிறிய இடங்களைக் கூடத் திருத்தி தங்குமிட விடுதிகளாக்கினர். அவ்வாறு ஆரம்பித்து தங்குபவர்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்க தங்குமிடத்திலேயே மதுபான வகைகள் அனுமதி பெறாமலேயே தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. அதன் பின்னர் தங்க வருபவர்களை மேலும் ஈர்ப்பதற்காக மதுவுடன் சேர்த்து மாதுக்களையும் ஒரு சில விடுதி உரிமையாளர்கள் விநியோகிக்கத் தொடங்கினர். அதன் பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே அண்மையில் அந்த விடுதியில் கைதான இளம் பெண்கள் விவகாரமும் அமைந்துள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொலிஸார் தமது கடமையில் இறுக்கமாக இருந்திருந்தால் இந்நிலை ஒருபோதும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு சம்பம் நடந்த பின்னர் அதனைக் கண்டுபிடித்து விசாரணை நடத்துவது பெரிய கெட்டித்தனமாகக் கொள்ள முடியாது. நடக்கவிடாமல் தடுப்பதே உண்மையான கெட்டித்தனம். (மேலும்....)

கார்த்திகை 27, 2011

தெற்கை நோக்கிய அதிவேக நெடுஞ்சாலை...

அதி நவீன கமராக்கள் பொருத்தப்பட்டு வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்புடன் குறுகிய நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்தை சென்றடையக் கூடிய நெடுஞ்சாலையொன்று முதன் முதலில் இலங்கையில் அங்குரார்ப் பணம் செய்து வைக்கப் படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை 27ம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவிருக்கும் இப்பெ ருஞ்சாலை கொட்டாவையிலிருந்து காலி மாவட்ட பின்னடுவ வரை 96 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்டது. சுமார் 700 கோடி ரூபா செலவில் அமைக்கப் பட்டுள்ள இந்நெடுஞ்சாலைக்கு ஜப்பான் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எட்டு தொடு முனைகளைக் கொண்ட இந்நெடுஞ்சாலையில் விசேடமாக நியமிக்கப்பட்ட போக்குவரத்து பொலிசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத் தப்படவிருக்கின்றனர். ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள நவீன சிசிரிவி கமராக்கள், வாகனங்களின் ஓட்டத்தை கண்காணித்துக் கொண்டிருக்கும். (மேலும்....)

கார்த்திகை 27, 2011

ரிசானாவுக்கு விடுதலை கிடைக்குமா?

(சுஐப் எம். காசிம்)

இன, மத பேதமின்றி எல்லா மக்களினதும் கவனத்தையும் அனுதாபத்தையும் பெற்றுக்கொண்ட சம்பவம் தான் ரிஸானா நபீக் எனும் பணிப் பெண்ணுக்குக் கிடைத்த மரண தண்டனையாகும். வறுமையின் கோரம் தாங்க முடியாத மூதூரைச் சேர்ந்த நபீக் எனும் தந்தை தனது அன்பு மகள் ரிஸானாவை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணிப்பெண்ணாக சவூதியிலுள்ள ரியாத் நகருக்கு அனுப்பி வைத்தார். ரிசானா அனுப்பும் பணத்தால் தமது வறுமை தீரும் என்ற அவரது ஆசைக் கனவுகள் குறுகிய காலத்தில் நிராசையாகின. 2005 மே மாதம் 4ம் திகதி ரிசானா ரியாதுக்குச் சென்று ஒரு கிராமத்து வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார். பால் புகட்டும் போது நய்வ் ஜிஸியான் காலவ் என்ற எஜமான ரின் ஆண் குழந்தை மரணமாக நேர்ந் தது. தனது குழந்தை இறந்த துக்கத்தில் நடவடிக்கை மேற்கொண்ட அந்தக் குடும்பம் பொலிஸில் முறையிட்டது. (மேலும்....)

கார்த்திகை 27, 2011

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை

இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை இன்று திறந்து வைக்கப்படுகிறது. நூறு கிலோ மீற்றர் தொலைவை 100 கிலோ மீற்றர் வேகத்தில் கடந்து செல்ல முடியும். கொட்டாவையில் இருந்து காலி நகரத்திற்கு ஒரு மணித்தியாலத்தில் சென்றுவிட முடியும். நூறு கிலோ மீற்றர் வேகத்தில் செல்ல முடியாத எந்தவொரு வாகனமும் இந்தப் பாதையால் செல்வதற்கு அனுமதியில்லை. பாதசாரிகள் நடந்து செல்ல முடியாது. மீறினால் ஐயாயிரம் ரூபா அபராதம் செலுத்த வேண்டும். வாகனத்தில் பயணிப்பதற்கு நானூறு ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். அதன் விபரங்கள் வேறு பக்கங்களில் வெளியாகியுள்ளன. அதனை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இந்தப் பாதை திறந்து வைக்கப்படும் இன்றைய நாள் இலங்கை வரலாற்றில் முக்கியமான நாள். (மேலும்....)

 

கார்த்திகை 27, 2011

யாழ்.பல்கலைக்கழக வளவில் பொலிஸ் பாதுகாப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் சுற்றுப் புறங்களில் தமிழீழ மாவீரர் நாள் தொடர்பான பிரசுரங்கள் ஒட்டப்பட்டதன் பின்னணியே பொலிஸார் காவற்கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றனர். பல்கலைக்கழகத்தின் விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த மாவீரர் நாள் தொடர்பான பிரசுரங்கள் இனந்தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் கடந்த 24 ஆம் திகதி கிழித்தெறியப்பட்டது. தமிழீழ மாவீரர் நாள் இன்று பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்படும் என்ற அச்சம் காரணமாகவே பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு அரச படைகளினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர் நாள் அனுஷ்டிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் பிரதேசம் எங்கும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள அனைத்து மாவீரர் கல்லறைகளும் அரச படைகளினால் அழிக்கப்பட்டுள்ளன.

 

கார்த்திகை 26, 2011

தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிடம் வழங்கிய அறிக்கையின் பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியது!

தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிடம் வழங்கிய அறிக்கையின் பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியது! அமெரிக்கப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் அமெரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிற்குச் சென்று அங்கு உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர். அத்துடன், இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவை தொடர்பிலான அரசின் செயற்பாடுகள் என்பன பற்றிக் குறிப்பிட்டு விசேட அறிக்கை ஒன்றையும் கூட்டமைப்பினர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர். (மேலும்....)

கார்த்திகை 26, 2011

நாடெங்கும் அடைமழை, வெள்ளம், மினிசூறாவளி

கிழக்கில் கிராமங்கள் நீரில் மூழ்கின தெற்கில் மினி சூறாவளி

நாடளாவிய ரீதியில் நேற்று பெய்த கடும் மழை, மற்றும் மினிச் சூறாவளியினால் வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மினிச் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக மாத்தறை மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்னர். 106 வீடுகள் முழுமையாக சேதமாகியுள்ளதுடன் 955 வீடுகள் பகுதிகளாக பாதிப் படைந்துள்ளன. மாத்தறையில் மினிச் சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் 3 பேரும் கடலுக்குச் சென்றவர்கள் நால்வருமே உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. அநுராதபுரம், மொனராகலை பகுதிகளில் இருவர் காணாமற் போயுள்ளதுடன், மாத்தறை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 26, 2011

‘விந்தையின் நுழைவாயில்’ நாளை திறப்பு

“விந்தையின் நுழைவாயில்” என்றழைக்கப்படும் இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையான கொழும்பு-காலி வீதி நாளை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்படவுள்ளது. கொட்டாவையிலிருந்து காலி வரை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை 95.2 கிலோமீற்றரைக் கொண்டதாக அமைந்துள்ளதுடன் ஒரு மணித்தியாலத்தில் காலியைச் சென்றடைய இப்பாதை வழிவகுக்கிறது. நூறு கிலோ மீற்றர் வேகத்தில் வாகனங்கள் இந்த நெடுஞ்சாலையில் பயணிப்பதுடன், பயணிகள் போக்குவரத்துச் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. சர்வதேச அதிவேக நெடுஞ்சாலைகளின் தரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. கொட்டாவையிலிருந்து காலி செல்லும் வழியில் நான்கு முக்கிய நகரங்களிலிருந்து இந்த நெடுஞ்சாலையில் இணைவதற்கான பிரவேச வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை 26, 2011

மார்க்சிய சிந்தனை மையம் நடத்தும் 'மார்க்சிய படிப்பு வட்டம்'

மார்க்சிய சிந்தனை மையம் ஒவ்வொரு மாதமும் நாகர்கோவிலில் மார்க்சிய படிப்பு வட்டத்தை  சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த படிப்பு வட்டத்தில்  அனைத்து கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர்களும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும்  கலந்து கொள்கிறார்கள். இந்த மாதத்திற்கான வகுப்பு வரும் 27.11.2011 அன்று நாகர்கோவில், தக்கலை, லைசியம் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த படிப்பு வட்டத்தில் கடந்த இரண்டு வகுப்புகளில் நடத்தப்பட்டு வரும்   இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சி தோழர் அ.ஆனந்தன் அவர்களால் எடுக்கப்பட இருக்கிறது. இந்த படிப்பு வட்டத்தில்  அனைத்து மார்க்சிய சிந்தனைவாதிகளும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இடம் : லைசியம் பள்ளி, தக்கலை , நாகர்கோவில்

நாள் : 27 .11 .2011 , ஞாயிற்றுக்கிழமை காலை 10 .00 மணி

பொருள்  : இயக்கவியல் பொருள்முதல்வாதம்

தலைமை : தோழர்.பிரசாத்

சிறப்புரை :தோழர். அ.அனந்தன்

ஒருகிணைப்பாளர் : தோழர்.போஸ்

தொடர்பிற்கு : தோழர் மகிழ்ச்சி செல் : 9443347801

கார்த்திகை 26, 2011

சனல் 4 இன் முகத்திரையை கிழிக்குமா லண்டன் சூட்டுக்குறி?

(பீமன்)

இலங்கையில் புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் புலம்பெயர் தேசத்திலுள்ள புலிகள் தமது பணவசூலிப்பை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆயுதமாக போர்குற்றம், சர்வதேச விசாரணை எனும் கோஷங்களை கையிலெடுத்துள்ளனர். வன்னியிலே புலிகள் தனியானதொரு சட்டவிரோத நிர்வாகக் கட்டமைப்பை வைத்திருந்தபோது, அவர்கள் தமக்கெனத் தனியான தொலைக்காட்சி , வானொலி சேவைகளையும் வைத்திருந்தனர். புலம்பெயர் தேசத்திலே தமக்கு தேவையான நிதி மற்றும் வளங்களை பெற்றுக்கொள்வதற்கான மூளைச்சலவைச் பிரச்சாரங்கள் இவ்வூடகங்களுடாக முன்னெடுக்கப்பட்டது. (மேலும்....)

கார்த்திகை 26, 2011

சாதனையா? வேதனையா?

(எஸ்.நூர்முகம்மது)

தமிழகத்தில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் மாறி மாறி மக்களை ஏமாற்றியே வந்துள்ளன. மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதில் இரண்டும் போட்டியிட்டு வருகின்றன. வாக்களித்தபின் மக்கள் கையறு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களும் வேறு வழி தெரியாமல் மாறி மாறி வாக்களித்தும், கிடைப்பதெல்லாம் மக்கள் விரோத ஆட்சி தான். உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாற்று உருவாக்கப்பட முயற்சி நடந்தபோது மக்கள் பல காரணங்களால் மாற்றை உரிய அளவில் அங்கீகரிக்கவில்லை. விளைவு, கடும் தாக்குதல் மக்கள் மீது உடனடியாகவே. மக்கள் தி.மு.க, அதிமுகவிற்கு உரிய மாற்றை பற்றி யோசிக்க வேண்டும். இடதுசாரி கட்சிகளும், பிற மதச்சார்பற்ற கட்சிகளும் வலுப்படாமல் அது சாத்திய மல்ல. தற்போது தங்கள் மீது தொடுக்கப் பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் தாக்குதல்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிட, இடதுசாரி இயக்கங்களு டன் இணைந்து நின்று தெருவில் இறங்கி போராடுவதே தற்போதுள்ள ஒரே வழி. (மேலும்....)

கார்த்திகை 26, 2011

“எங்களுக்கு வாக்களியுங்கள்” - தயாரானது ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி

ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய பட்டியல் பத்து பேர் தலைமையில் உருவாக் கப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் மற்றும் கட்சியில் இல்லாதவர்கள் ஆகியோருக்கிடை யிலான ஒற்றுமையைக் காட்டும் வகையில் இந்தப்பட்டியல் உள்ளது. மிகவும் அனுபவம் வாய்ந்த கட்சித்தலைவர்கள், கட்சித்தலை மையில் உள்ள இளம் உறுப்பினர்கள் ஆகி யோரும் இந்தப்பட்டியலில் இடம் பெற்றுள் ளார்கள். இவர்கள் கடுமையான சோதனை களைக் கடந்து வந்தவர்களாவர். பல்வேறு கட்சி, பொருளாதார மற்றும் நாடாளுமன்றப் பொறுப்புகளில் பணியாற்றி பெரும் அனுபவம் கொண்டவர்களாவர்.  பட்டியலில் முதல் மூன்று இடங்களில் முக் கியமான தலைவர்கள் இடம் பெற்றிருக் கிறார்கள். கட்சி மத்தியக் குழுவின் தலை வரும், டுமாவில் கட்சியின் தலைவருமான கென்னடி யுகானோவ், டுமாவில் கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் விளாதிமீர் கோமோயெடோவ் மற்றும் கட்சியின் தலை மைக்குழு உறுப்பினரும், ரஷ்ய இளம் கம்யூ னிஸ்ட் லீக்கின் தலைவருமான யூரி அஃ போனின் ஆகியோர்தான் முதல் மூன்று நபர் களாக பட்டியலில் உள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 26, 2011

பரந்து விரியும் “கைப்பற்றுவோம் போராட்டங்கள்”!

செப்டம்பர் 17 ஆம் தேதியன்று வெறும் 150 பேர் திட்டமிட்ட கைப்பற்றுவோம் போராட்டம், ஓரிரு வாரங்கள் நடந்துவிட்டு அப்படியே காணாமல் போய்விடும் என்ற அமெரிக்க ஆட்சியாளர்களின் எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, நூறாவது நாளை நோக்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவான அதிருப்தியாக இருந்த நிலை மாறி, கல்வி, சுகாதாரம், வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சனைகளை முன்வைத்த போராட்டக்களமாக உருவெடுத்துள்ளது. பேராசை, லாபவெறி, சொத்துக்குவிப்பு, சுரண்டல் என்பதன் மொத்த உருவமாக முதலாளித்துவம் உள்ளது என்று முதலாளித்துவ நாடுகளில் உள்ள மக்கள் வீதிகளில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். (மேலும்....)

கார்த்திகை 26, 2011

அவதார் பாணியில் ரஜினியின் கோச்சடையான்

ராணா படம் இப்போதைக்கு இல்லை என்று ஒருவாயாக ரஜினி தரப்பில் அறிவிக்கப்பட்டு விட்டது. ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்துக்கு கோச்சடையான் என பெயரிடப்பட்டுள்ளது. அவதார் பாணியில் 3 டி முறையில் உருவாகும் இந்தப் படத்துக்கு கே.எஸ். ரவிக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். செளந்தர்யா ரஜினி இயக்குகிறார் கே.எஸ். ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். கோச்சடையான் படத்தை அடுத்தாண்டு ஓகஸ்ட் மாதத் தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கோச்சடையான் படம் முடிந்தபின் ராணாவில் ரஜினி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய படத்தையும் ராணா தயாரிப்பாளர் ஈராஸ் மற்றும் மீடியா குளோபல் ஒன் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

கார்த்திகை 26, 2011

சிரியா மீது படையெடுக்க அமெரிக்கா ஆயத்தம்! போர்க்கப்பலை அனுப்பியது

சிரியாவின் கடல் எல் லைக்கு அருகில் போர்க்கப் பலை அனுப்பியதோடு, சிரி யாவில் உள்ள அமெரிக்கர் கள் அனைவரும் உடனடி யாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. தனக்கு எதிராக இருக் கும் அரசுகளை அகற்றி விட்டு, பொம்மை அரசு களை அமைக்கும் அமெ ரிக்காவின் அடுத்த இலக்கு சிரியாவாக இருக்கிறது. அந்த அரசு பற்றி ஏராள மான பொய்ப்பிரச்சாரங் களைக் கட்டவிழ்த்து விட் டுள்ளதோடு, ஐ.நா.சபை, அரபு லீக் ஆகிய அமைப் புகள் மூலமும் தனது ஆக் கிரமிப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. சிரியா விலிருந்து கொண்டே சதி வேலைகளை செய்து கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஃபோர்டு அக்டோபர் மாதத்தில் வெளியேறினார்.  (மேலும்....)

கார்த்திகை 25, 2011

யசூசி அகாசி நாளை இலங்கை விஜயம்

ஜப்பானின் விஷேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி நாளை இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளை மறுதினம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையைத் திறந்து வைப்பதற்காகவே அவர் இலங்கை வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் அரச தலைவர்களை இவர் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் எதிர்வரும் 30 ஆம் திகதி ஜப்பானுக்குத் திரும்பிச் செல்வார் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. ___

கார்த்திகை 25, 2011

2012ம் ஆண்டு மும்மொழி இலங்கையாக பிரகடனம்

2012 ஆம் ஆண்டை மும்மொழி இலங்கையாகப் பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல், ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மும்மொழி இலங்கை அமுலாக்கலுக் காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் அமைச்சரவைக்கு சமர்ப் பிக்கப்பட்ட பத்தாண்டு கால தேசிய திட்டத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் மேலும் விளக்கமளிக்கையில்:- மூன்று தசாப்தங்களாக நாட்டில் தலை விரித்தாடிய பயங்கரவாதம் தோற்கடித்த பின்னர் எடுக்கப்பட வேண்டிய துரதிருஷ்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இலங்கை மக்கள் மும்மொழிகளிலும் சரளமாக தொடர்புகொள்ள கூடிய வழிமுறைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று அரசாங்கம் கருதியதை யடுத்தே இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 25, 2011

போரில் உயிரிழந்த, காணாமல் போனோரின் தகவல் விரைவில் வெளியிடப்படும

போரின்போது உயிரிழந்த மற்றும் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களை திரட்டிவருவதாகவும் விரைவில் அந்த எண்ணிக்கை வெளியிடப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்றுவரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "தொகைமதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரிகள் வடக்கில் குடிசன மதிப்பீட்டை செய்துவருகின்றனர். அத்துடன் யுத்தத்தின்போது உயிரிழந்த மற்றும் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களையும் அவர்கள் திரட்டிவருகின்றனர். அந்த எண்ணிக்கையை நாம் விரைவில் வெளியிடுவோம். அது, சில வெளிநாட்டுச் சக்திகள் கூறுவதுபோல அதிகூடிய எண்ணிக்கையாக அமையாது" என அவர் மேலும் தெரிவித்தார். ___

கார்த்திகை 25, 2011

‘பல்கலைக்கழகங்களைக் கைப்பற்றுவோம்’  அமெ. மாணவர்கள் போராட்டம் தீவிரமடைகிறது

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கைப்பற்றுவோம் போராட் டங்களின் ஒருபகுதியாக அந்நாட்டு மாணவர்களும் தங்கள் போராட் டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை நடத்தும் வன்முறை நடவடிக்கைகள் மற்றும் கல்விக்கான பட்ஜெட்டில் வெட் டுகளுக்கான முயற்சிகள் ஆகியவற் றிற்கு எதிராக மாணவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். நவம்பர் 28 அன்று முழுமையான வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது குறித்து மாணவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரவை நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தனர். (மேலும்....)

கார்த்திகை 25, 2011

மாவட்டத்திற்கு மாவட்ட குறைகாண்பதை விடுத்து, கூட்டமைப்பில் இருக்கும் குறைகள் திருத்தப்படுமா?

கடந்த 2009 ஆம் ஆண்டிருந்து இன்றுவரைக்கும் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தவறு இழைத்துத்தான் வருகின்றது. முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா மேற்கொண்ட இனப்படுகொலைக்கு பின்னர் தமிழ் மக்கள் தலைமையின்றி அனாதைகளாக்கப்பட்டு விட்டனர் என்ற எண்ணத்திலிருந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீளவேண்டும். அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உபதவிசாளர் படைத்துணைக்குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதாகவும், அது தமிழர்க்கு இழைத்த தவறு என்று கூறினால், நேற்று (22-11-2011) நாடாளுமன்றத்தில் மஹிந்தாவும், அவரின் கூட்டங்களுடன் நாடாளுமன்றத் தொகுதியில் தேனீர் அருந்துவதை எவ்வாறு சொல்வது? கொழும்பில் கூட்டமைப்பு தலைமைகள் தேனீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டால் அது அரசியல் ராஜதந்திரம்? (மேலும்....)

கார்த்திகை 25, 2011

சவூதி அரேபியாவில் ஆளும் குடும்பத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

மத்திய கிழக்கில் தீவிர அமரிக்க சார்பு நாடான சவூதி அரேபிய அரசிற்கும் ஆளும் அல் சவூட் குடும்பத்திற்கும் எதிராக மக்கள் எழுச்சிகள் இடம்பெறுகின்றன. கடந்தவாரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் சவூதி அரேபிய பாதுகாப்புப் படைகள் குறைந்தது ஐந்து பொதுமக்களையாவது கொலைசெய்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது. கொலைசெய்த பாதுகாப்புப் படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று இன்று வியாளன் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. சவூதி அரேபியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் அமரிக்க அரசும் அதன் ஊதுகுழல்களான ஊடகங்களும் சவூதி அரேபிய அரசின் படுகொலைகள் குறித்து மௌனம் சாதிக்கின்றன.

கார்த்திகை 25, 2011

2279 குடும்பங்கள் இன்னமும் நிவாரணக் கிராமங்களில்: மீள்குடியேற்ற அமைச்சு

வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களில் கதிர்காமர் மற்றும் ஆனந்த குமாரசாமி நிவாரணக் கிராமங்களில் 2279 குடும்பங்கள் இன்னும் தங்கியுள்ளன. அக்காலப்பகுதியில் இடம்பெற்ற குடும்பங்களில் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 482 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்று மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான சரவணபவன் கேட்டிருந்த கேள்விகளுக்கு சபா பீடத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இக்கேள்விக்கான பதிலை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சபா பீடத்தில் சமர்ப்பித்தார். இந்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களில் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 482 குடும்பங்களைச் சேர்ந்த 455,906 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். வடக்கில் இடைத்தங்கல் முகாம்களில் எவருமே இல்லை.
(மேலும்....)

கார்த்திகை 25, 2011

வடக்கில் இராணுவ ஆட்சி என்பது பொய் - அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கும் குற்றச் சாட்டில் எதுவித உண்மையுமில்லை. அங்கு இராணுவ ஆட்சி நடக்குமா னால், த. தே. கூட்டமைப்புக்கு தேர்தலில் போட்டியிடவோ வெற்றி பெறவோ முடிந்திருக்காது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட மூன்றாம் நாள் விவாதத்தின் போது த. தே. கூட்டமைப்பு எம். பி. தெரிவித்த சில குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது:-சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். பி. சபையில் பல கருத்துக்களை கூறினார். கொக்குசான்குளத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் ஐ. தே. க. ஆட்சியிலே இங்கு குடியேற்றம் நடைபெற்றது. எமது அரசாங்கம் இங்கு குடியேற்றம் மேற் கொள்ளவில்லை. ஏற்கனவே குடியேற்றிய மக்களை இப்பொழுது வெளியேற்ற முடியாது. வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாக த. தே. கூட்டமைப்பு குற்றஞ்சாட்டினாலும் இராணுவமே அங்கு பல சேவைகளை செய்து வருகிறது. சுரேஷ் எம். பி. யின் குற்றச் சாட்டை முழுமையாக நிராகரிக்கிறேன்.

கார்த்திகை 25, 2011

அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்திற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

அமெரிக்கா அதன் ஏவுகணை பாதுகாப்பு திட்டங்களை தொடர்ந்தால் ரஷ்யா தனது ஏவுகணைகளை ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளில் நிறுத்தும் என ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடெவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பாவில் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை அமைத்து வருகிறது. இது தொடர்பில் அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யா வுடன் உடன்பாட்டுக்கு வரத்தவறினால் ரஷ்யாவின் நவீன ஆயுதங்கள் ஐரோப்பாவை இலக்கு வைத்து நிறுத்தப்படும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி மெட்வடெவ் குறிப்பிட்டார். நேற்று வெளியிடப்பட்ட தொலைக்காட்சி அறிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். அத்துடன் அமெரிக்காவின் இந்த செயலால் அதனுடனான புதிய ஆயுத உடன்படிக்கையும் நிராகரிக்கப்படலாம் என ரஷ்யா எச்சரித்துள்ளது. (மேலும்....)

கார்த்திகை 25, 2011

இனி ‘விழி நுனியில்’ தகவல் பெறலாம்

கண்ணின் கருவிழியின் மீது அணியும் கான்டாக்ட் லென்ஸ் வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவரது அறிவுத்திறனைப் பாராட்டும் வகையில், ‘அவர் பெரிய அறிவு ஜீவி. எதைப் பற்றி கேட்டாலும் பதில் சொல்லிவிடுவார். தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பார்’ என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம். இனி இந்தப் பாராட்டு அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரே வித்தியாசம், தகவல் அனைத்தும் உங்கள் விரல் நுனியில் அல்ல, விழி நுனியில் வரப்போகிறது. இதைச் சாதித்திருப்பது, (வழக்கம் போல) அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தான். (மேலும்....)

கார்த்திகை 25, 2011

யாழ் பல்கலைக்கழத்தில் புலி உளவாளிகளின் மாவீரர்தின சுவரொட்டியுடன் கூடிய பெயர்பலகை அடித்து நொருக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழத்தில் புலி உளவாளிகளின் மாவீரர்தின சுவரொட்டியுடன் கூடிய பெயர்பலகை அடித்து நொருக்கப்பட்டது! யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மாவீரர் தினத்தை முன்னிட்டு புலிகளின் எடுபிடிகளினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த பெயர்ப்பலகையை அடித்து நொருக்கியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் யாழ் பல்கலைக்கழக சூழல் பதற்றத்துடன் காணப்படுட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். எதிர்வரும் 27 ஆம் திகதி வரும் புலிகளின் மாவீரர் நினைவு தினத்தை முன்னிட்டும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டும் யாழ் பல்கலைக்கழக மாணவர் பொதுஅறையில் உள்ள பெயர்ப்பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. (மேலும்....)

கார்த்திகை 24, 2011

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே பாட வேண்டும் என்பது சட்ட விரோதமானது - வாசுதேவ நாணயக்கார

தேசிய கீதத்தை தான் விரும்பிய மொழியைப் பாவிக்க அரசியலமைப்பினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை மேற்படி நிலையின் கீழ் மீறப்படவில்லையா? இதன் காரணமாக சிங்கள மக்களுக்கும் ஏனைய இன மக்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுக்கு தாக்கம் ஏற்படுத்துமா? போன்ற கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பதிலளிக்கையில், இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் தான் பாட வேண்டும் என்ற சட்டத்தை இயற்றுவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தேசியக் கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று கூறுவது சட்ட விரோதமானது. இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஒரு குழப்பமான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டினால் தான் குழப்பமான நிலை ஏற்படுத்தப்பட்டது. அந்தக் குழப்பமான நிலைமை தீர்த்து வைக்கப்பட்டது. இலங்கை தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே பாட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேசியக் கீதத்தை தாம் விரும்பிய மொழியில் பாடலாம் என்றார்.

கார்த்திகை 24, 2011 __

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் முதலமைச்சர் சந்திரகாந்தன் இன்று சந்திப்பு 

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றென்கின், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை திருகோணமலை முதலமைச்சர் செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை, அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் மற்றும் அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற விதவைகளின் வாழ்வாதார மேம்பாடு, மற்றும் சிறுவர் கல்வி அபிவிருத்தி என்பன தொடர்பாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு குறித்த சில உதவிகள் வழங்குவது தொடர்பாகவும் உயர் ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை 24, 2011

தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. அவை படைத்தரப்பினரால் அபகரிக்கப்படுகின்றன.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்கள் அனைத்தும் முழுமையான இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு கிராம மட்டங்களில் இராணுவ நிலைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவம் நிலை கொண்டுள்ளது. வட மாகாணத்தில் ஏறத்தாழ ஒரு இலட்சம் படையினர் நிலை கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆயிரக் கணக்கான தமிழ் மக்களின் குடியிருப்பு நிலங்களும், வீடுகளும் இவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். (மேலும்....)

கார்த்திகை 24, 2011

7 இலட்சத்து 50 ஆயிரம் பயணிகளை எட்டிய சுற்றுலாத்துறை

இலங்கை சுற்றுலாத்துறை வரலாற்றில் முதன் முறையாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்து 50 ஆயிரத்தினை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, இன்று மாலை வருகை தந்த பலஸ்தீன நாட்டு சுற்றுலாப் பயணியுடன் மொத்தமாக, 7 இலட்சத்து 50 ஆயிரமாக பதிவாகியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கார்த்திகை 24, 2011

"யாழ்ப்பாணத்தில் இராணுவம், பொலிஸாரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது"

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரையும் பொலிஸாரையும் தவிர எவரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. இராணுவம் தற்போதைய நிலைமையில் சண்டையிடுபவர்கள் என்ற ஸ்தானத்திலிருந்து பாதுகாப்பாளர்கள் என்ற இடத்தை அடைந்துகொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் ஆயுதங்கள் ஒருபோதும் பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படமாட்டாது என யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். "வடக்கில் இராணுவம் என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள். மக்களிடம் இராணுவம் தொடர்பாகக் காணப்பட்ட தோற்றப்பாட்டை மாற்றி வருகிறோம். தற்போதைய நிலைமையில் மக்கள் எம்மை பாதுகாப்பாளர்களாகப் பார்க்கின்றனர். யாழ்ப்பாணத்தில் 99.3 வீதமான பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. பெரும்பாலும் இராணுவமே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தது" என அவர் மேலும் தெரிவித்தார்.

கார்த்திகை 24, 2011

மத்திய அமைச்சரை கன்னத்தில் அறைந்த இளைஞர்

மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் மீது சீக்கிய இளைஞர் ஒருவர், கன்னத்தில் அறைந்த சம்பவம் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் சரத்பவாரே காரணம் என்று அந்த இளைஞர் கோஷமிட்டார். மேலும் சரத்பவாரை கொல்லத்தான் நினைத்தேன் என்று கூறிய அந்த இளைஞர், விளம்பரத்துக்காக அவர் கன்னத்தில் அறையவில்லை என்று கூறித் தனது கையைக் கத்தியால் கிழித்துக் கொண்டார். மேலும், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அந்த இளைஞர் ஆவேசமாக கூறினார். இந்தச் சம்பவம் புதுடில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே இளைஞர் தான், ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மீது தாக்குதல் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 24, 2011

அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு உளவாளிகள் ஈரானில் கைது

அமெரிக்க சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலிய மொஸாட் உளவாளிகள் எனக் கருதப்படும் 12 பேர் ஈரானில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சி.ஐ.ஏ. (அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு) மற்றும் இஸ்ரேலின் மொஸாட் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை புலனாய்வு செய்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா , இஸ்ரேல் ஆகியன ஈரானுக்கெதிராக இத்தகைய பல்வேறு சதித்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினரின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஈரானிய அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளின் மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவாளிகள் பலர் ஈரானில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் பலர் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 24, 2011
மாவீரர் தினம்

வியாபாரிகளை வீட்டுக்கு அனுப்புவோம்

(கோசலன்)

அயோக்கியர்கள் அணிந்துகொள்ளும் இறுதி முகமூடி தேசியம் என்பதை அழிவுகளின் பின்னர் நடைபெறும் மாவீரர் தினம் அழகாகக்ப் படம்போட்டுக் காட்டுகிறது. அரசியலற்ற வெற்றுத் தேசிய முழக்கத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இலங்கை பாசிச அரசின் உளவாளிகள், இந்திய அரசின் கொலைகார்கள், அமரிக்க உளவு வலைப்பின்னர் என்ற எது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் கூட இப்படித்தான் பயன்பாட்டிற்கு உட்பட்டது. இதற்கெல்லாம் புலிகள் மட்டும் காரணமாகிவிட முடியாது. இன்று அரசியல் குறித்துப் பேசுகின்ற நாம் அனைவரும் தான் காரணம். (மேலும்....)

 

 

கார்த்திகை 24, 2011

இன்று புதிதாய் பிறப்போம்..

‘மனித நேயம்’

அவருக்கு வரலாறு தந்த மாற்றுப்பெயர்!

வரலாற்று நாயகர் வரிசையில்

வாழ்ந்துகொண்டிருக்கும் வண்ண ஒளிவிளக்கு!

உலகத் தமிழர்கள் உணரத்தவறிய உன்னத வரலாறு!

முரண்பட்ட மனிதர்களையும்

உடன்படவைக்கும் உயர்ந்த உள்ளம்!

பகைவனையும் பண்படவைக்கும் பகுத்தறிவுப் பெட்டகம்!

(மேலும்....)

 

கார்த்திகை 24, 2011

ஸ்பெக்ட்ரம்

ஐவருக்கு நீதிமன்றம் பிணை, கனிமொழிக்கும் பிணை கிடைக்கும் வாய்ப்பு
 

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 5 தொலைத் தொடர்புத் துறை நிறுவன அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது. ஸ்வான் டெலிகொம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அல்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு நேற்று பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு பிணை வழங்க சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இவர்களை விடுவித்தால், சாட்சிகளை அழித்துவிடுவர் என்று சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டது. ஆனால் அதையும் மீறி இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 24, 2011

மட்டு., அம்பாறையில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இங்கே கல்முனை, கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாயும் காட்சி. போக்குவரத்து இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை 24, 2011

பாரிஸ் மாநகரில்

வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்'

நூல் வெளியீட்டு விழா..!

ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்' கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்கழி மாதம் 11 - ம் திகதி (11 - 12 - 2011) ஞாயிறு பிற்பகல் 3மணியளவில் பாரிஸ் மாநகரில் (50, Place de Torcy, 75018 Paris -  Métro:  Marx Dormoy) நடைபெறவுள்ளது. அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல், மருத்துவம் ஆதியாம் பல்வேறு துறைகளில் ஒப்பரிய பணிகளைச் செய்தவர்களின் சிறப்பை 'மண் மறவா மனிதர்கள்' நூல் அழகுற எடுத்தியம்புகின்றதெனவும், வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அழைந்துள்ளதெனவும் பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 24, 2011

புஷ், பிளேர் போர்க்குற்றவாளிகள்  மலேசியா போர்க்குற்ற நீதிமன்றம் தீர்ப்பு

இராக் போரின்போது போர்க்குற்றங்களை செய் தார்கள் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் முன் னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாட்டு களை மலேசிய போர்க் குற்ற விசாரணை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. 2003 ஆம் ஆண்டு இராக் கிற்குள் படைகளை அனுப்பி மனிதகுலத்திற்கு எதிரான கொடூர நடவடிக் கைகளில் அவர்கள் ஈடுபட் டனர் என்று ஐந்து உறுப் பினர்களைக் கொண்ட நீதிபதிகள் குழு முடிவுக்கு வந்துள்ளது. பேரழிவு ஆயு தங்களை குவித்து வைத்தி ருக்கிறார் என்று சதாம் உசேன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி, சர்வதேச சட்டங்களை மதிக்காமல் படையெடுத் துச் சென்றனர் என்று இந்த இருவரின் மீதும் குற்றச் சாட்டுகள் எழுப்பப்பட்டன. (மேலும்....)

கார்த்திகை 24, 2011

சீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்?

(சமஸ்)

இந்தியாவை சீனாவுடன் ஒப்பிட்டு எழுதுவது இந்தியர்களுக்கு சுவாரஸ்யத்தைத் தரலாம். ஆனால், உண்மை நிலவரம் இந்தியர்களால் சகித்துக்கொள்ள முடியாதது! நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் உற்பத்தி இந்தியாவைக் காட்டிலும் சீனாவில் 4 மடங்கு அதிகம். ஓர் உதாரணம், இந்தியக் குடிமகனின் சராசரி ஆண்டு வருமானம் கடந்த 2009-ல் 3,200 டாலர்கள். சீனா 9 ஆண்டுகளுக்கு முன் எட்டிய அளவு இது. ஒரு சீன விவசாயி சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி செய்யும் தானியத் தின் அளவு 10,500 கிலோ; இந்திய விவசாயி 2,203 கிலோ. கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்துக்காக சீன அரசு செலவிடும் தொகை இந்தியாவைக் காட்டிலும் 4 மடங்கு அதிகம். முத்தடுப்பூசி போடப்படும் குழந்தைகள் எண்ணிக்கை சீனாவில் 97 சதவிகிதம்; இந்தியாவில் 66 சதவிகிதம். சீனாவில் ஒரு குடிமகனின் சராசரி ஆயுள் 73.5 ஆண்டுகள்; இந்தியாவில் 64.4 ஆண்டுகள். சீனாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 94 சதவிகிதம்; இந்தியாவில் 63 சதவிகிதம். உயர்கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கை சீனாவில் 25 சதவிகிதம்; இந்தியாவில் 13 சதவிகிதம். கடந்த 30 ஆண்டுகளில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கையை 64 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது சீனா. இந்தியா அல்ல; உலகின் எந்த ஒரு நாட்டுடனும் இதை ஒப்பிடவே முடியாது. (மேலும்....)

கார்த்திகை 24, 2011

இலங்கை, பாகிஸ்தான், நேபாளத்தைவிட  இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் 

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளத்தை விட பெட்ரோல் விலை இந்தியாவில் அதிகம் என்று நாடாளுமன்ற மாநிலங்கள வையில் தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து உயர்த்தப் பட்ட பெட்ரோல் விலை யில் நவம்பர் 16ம் தேதி லிட் டருக்கு ரூ.2.22 பைசா குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. தில்லியில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.42 பைசாவுக்கு விற்கப்படு கிறது. அதேநேரத்தில் பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.48.64க்குதான் விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.61.38க் கும் நேபாளத்தில் 1 லிட்டர் ரூ.65.26க்கும் விற்கப்படுகி றது. நேபாளத்தில் எண் ணெய் சுத்திகரிப்பு நிறு வனம் எதுவும் இல்லை. இந் தியாவிலிருந்து இறக்குமதி செய்துதான் நேபாளம் தனது தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறது என் பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஏப்ரலுக்குப் பிறகு இந்தியாவில் பெட் ரோல் விலை 39 சதவீதம் அளவுக்கு, அதாவது லிட்ட ருக்கு ரூ.18.49 பைசா அள வுக்கு உயர்த்தப்பட்டுள் ளது. கடந்த ஆண்டு தில்லி யில் ஒரு லிட்டர் பெட் ரோல் விலை ரூ.47.63 ஆக இருந்தது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலின் விலை லிட் டருக்கு ரூ.32.82 மட்டுமே ஆகிறது என்றும் அதில் போக்குவரத்திற்காக ரூ.2.25ம், எக்சைஸ் வரிக்கு ரூ.11.7ம் வசூலிக்கப்படுகிறது. தில்லி அரசாங்கம் லிட்ட ருக்கு விற்பனை வரியாக ரூ.11.7 வசூலிக்கிறது.

கார்த்திகை 24, 2011

ஐ.நா. மேற்பார்வைக் குழுவில் இந்தியா

உலகம் முழுவதும் உள்ள ஐ.நா. அமைப்புகளை மதிப் பிடவும், மேற்பார்வையிடவும், விசாரிக்கவும் அதிகாரம் படைத்துள்ள சுயேச்சையான மேற்பார்வைக் குழு உறுப்பி னர் பதவிக்கு நடந்த தேர்த லில் இந்தியா வென்று, குழு வின் உறுப்பினர் ஆகியுள்ளது. ஆசியா - பசிபிக் மண் டலத்துக்கான தேர்தலில் இந் தியாவும், சீனாவும் போட்டி யிட்டன. ஐ.நா. பொதுக்குழு வில் நடந்த தேர்தலில் 183 நாடுகள் வாக்களித்தன. இந் தியா 106 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. சீனா 77 வாக் குகள் பெற்றது. 1.1.2013 முதல் ஐந்தாண்டுகளுக்கு இந்தியா குழுவில் இடம் பெற்றிருக்கும். இதற்கு முன் 1968 முதல் 1977 வரை இந்தியா ஐ.நா. மேற் பார்வைக் குழுவில் உறுப் பினராக இருந்துள்ளது. இக்குழுவில் 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பதவிக்காலத்தை மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள் ளலாம். ஜெனிவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் இந்தி யாவின் நிரந்தரப் பிரதிநிதியாக உள்ள ஏ.கோபிநாதன் இக் குழுவில் உறுப்பினராக இருப் பார்.

கார்த்திகை 24, 2011

Why we should take down Wall Street

(By Nalliah Thayabharan)

WALL Street is a confidence trick, a dazzling edifice built on paper promises, gambling, bets and rampant speculations. Wall Street doesn't manufacture or produce anything. Wall Street, however attractive it may appear, is built on paper. Wall Street speculation caused a 70 percent increase in the price of wheat from June to December 2010 and severe food crisis in more than 35 countries. However, there was no significant change in the global food supply or in food demand. The total value of Wall Street speculative financial derivatives reached more than US$600 trillion - about 10 times global GDP. Wall Street's speculative derivatives are virtually untaxed and banks often avoid paying tax on profits from selling derivatives. Every consumer is paying more for commodities including food and fuel due to the excessive speculation by Wall Street. (more....)

 

கார்த்திகை 24, 2011

பாலஸ்தீனம்  பதா-ஹமாஸ் தலைவர்கள் சந்திப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஹமாஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக பாலஸ்தீன தேசிய நிர்வாகத்தின் ஜனாதிபதி முகமது அப்பாஸ் வந்துள்ளார். எகிப்தில் மக்கள் எழுச்சி காரணமாக இஸ்ரேலுக்கு நெருக்கமாக இருந்த ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அதன்பிறகு எகிப்திலி ருந்து பாலஸ்தீனத்திற்கு நுழையும் எல்லைப்பகுதியும் திறக்கப்பட்டது. இது இஸ்ரேலின் முற்றுகையை ஓரளவு தகர்க்க உதவியது. இந்நிலையில் பதா மற்றும் ஹமாஸ் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் துவங்கின.
(மேலும்....)

கார்த்திகை 24, 2011

தொடரும் புலிகளின் அவலம் சுவிஸ்வாழ் (உண்டியல் உதயனின்) வெள்ளைசேட்டின் அங்கீகரிக்கமுடியாத காதலால் சிதைந்த எனது குடும்பம் தொடர் பாண்டியாகிய நான் காயத்ரி எழுதுகிறேன்…

புலிகளின் முகவர்களாக வீடுவீடாக பணத்திற்காக கதவுகளை தட்டும் வெளிநாட்டுவாழ் புலிகளின் முகவர்கள் உண்மையில் புலிகள் அல்ல மண்ணுக்குள் அமைதியுடன் உறக்கம் கொள்ளும் எங்கள் வீர வேங்கைகள் தான் உண்மையான புலிகள் என நான் முனமுர்ந்து கூறுகிறேன் வெளிநாடுகளில் மாவீர்களை வைத்து மாவீரர்கள் தினம் என்றபோர்வையில் வியாராம் நடாத்தி கொத்துரொட்டி விற்று அதில் வரும் வருமானத்தில் புலிகளின்  முகவர்கள் தமிழீழம் பெற்று தருதாக மக்களிடம் பொய்யுரைத்து பெற்ற பணங்களை மீளகொடுப்பதற்காக அலைந்து திரியும் ஏமாற்றுபேர்வழிகளை உங்களுக்கு நான் கூறக்கடமைப்பட்டுள்ளேன் புலிகளின் முகவர்களை நினைத்து நாம் கவலை கொள்ள தேவையுமில்லை காரணம் இவர்கள் நாட்டிலிருந்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்த புறப்பட்டவர்கள் இறுதிக்கால யுத்திற்க்கு துணைப்படைகளுக்காக சேகரித்த பணங்கள் அனைத்தும் உதயனும் கருணாநிதியும் நாட்டுக்கு அனுப்பாமல் பகிர்ந்து எடுத்துள்ளனர் அந்த பணங்களை எனது மனைவியின் துணையுடன் என்வீட்டில் குளிர்சாதன பெட்டிக்கு அடியில் தோண்டி பலஇலட்சக்கணக்கான பணங்களை உதயன் மறைத்து வைத்திருந்ததை நான் கண்டிருக்கிறேன் தற்பொழுது அந்த பணங்களை உதயன் என்ன செய்தான் என்று தெரியவில்லை. (மேலும்....)

கார்த்திகை 24, 2011

இராணுவ கவுன்ஸிலின் கோரிக்கை நிராகரிப்பு, 5 ஆவது நாளாகவும் எகிப்தில் ஆர்ப்பாட்டம்

எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக 5 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் நேற்று நீடித்தது. தலைநகர் கெய்ரோவில் தஹ்ரியார் சதுக்கத்தில் தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் நிலைகொண்டுள்ளனர். இதன் போது எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் தலைநகரின் பல பகுதிகளிலும் மோதல் ஏற்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள் மற்றும் உபகரணங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதோடு கலவரக்காரர்களை அடக்க இராணுவம் மற்றும் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் ரப்பல் குண்டு தாக்குதல்களை நடத்தினர். (மேலும்....)

கார்த்திகை 24, 2011

ஆரோக்கியம் காக்கும் கைப்பட்டை

ருவர் கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறார் என்றால், அவர் எப்போது சாப்பிட வேண்டும். எப்போது உறங்க வேண்டும், உடலை எவ்வாறு பேண வேண்டும் என்று பெரியவர்கள் அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள். இன்று மனிதர்கள் தனித்தனித் தீவுக ளாகி விட்ட நிலையில், அதற்கான வாய்ப்புக் குறைவு. இந்நிலையில் பெரியவர்களின் பொறுப்பை ஒரு 'கைப்பட்டை' எடுத்துக் கொண்டுவிட்டது. சுமார் 6 ஆயிரம் ரூபாய் விலையுள்ள இந்தக் கைப்பட்டையை மணிக்கட்டில் அணிந்துகொண்டால், அது அவரது சாப்பாடு. தூக்க முறைகள், உடற்பயிற்சி முறை போன்றவற்றைக் கண்காணிக் கும். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி மென்பொருள் வாயிலாக, குறிப்பிட்ட நபர் எப்படி ஆரோக்கிய மாக இருப்பது என்று தனிப்பட்ட ஆலோசனையை வழங்கும். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

 

தலைக்கனம் இல்லாத தலைவர் மண்டேலா மட்டும்தான்!

(எழுத்துப் போராளி ரான் ரைடனவர்)

'இன்று சேகுவேரா இருந்​திருந்தால், இதை அனு​மதித்து இருக்க மாட்டான்’ என்று இலங்கைப் படுகொலைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் ரான் ரைடனவர் ஒரு பத்திரிகை​யாளர். இனப்படுகொலைக்கு எதிரான போராளி. அமெரிக்காவில் பிறந்து டென் மார்க்கில் வசிக்கும் இந்த இடதுசாரி எழுத்தாளர் எழுதிய 'வெனிசுலாவின் ஓசைகள்’, 'தமிழ் நேஷன் இன் ஸ்ரீலங்கா’ ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, ரான் ரைடனடவரிடம் பேசிய தில் இருந்து... (மேலும்....)

கார்த்திகை 23, 2011

அரசின் கொள்கைத்தீர்மானத்துக்கு அமையவே ரூபா பெறுமதி மதிப்பிறக்கம்

அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்தின் பிரகாரமே இலங்கை நாணயத்தின் பெறுமதி மூன்று வீதத்தினால் மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதியாளர்கள் நீண்ட நாட்களாக விடுத்துவந்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதி நிதியமைச்சரும் சர்வதேச நாணய கூட்டுறவுக்கான சிரேஷ்ட அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத் தயாரிப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்கள் எதுவுமில்லை. அவ்வாறு நாணய நிதியம் எமக்கு அழுத்தங்களை முன்வைக்கவில்லை. எவ்வாறெனினும் நாங்கள் தொடர்ந்து நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கார்த்திகை 23, 2011 ___

மட்டக்களப்பில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பெரும்போக வேளாண்மைச் செய்கை நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால், தங்களது வேளாண்மைச் செய்கை அழிந்துவிடக்கூடிய அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த வருட பிற்பகுதியிலும் இவ்வருட முற்பகுதியிலும் தொடர்ந்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த வருட பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஏற்பட்ட இழப்பு மற்றும் நட்டங்களிலிருந்து இதுவரை தாம் இன்னும் மீளமுடியாத நிலையில், தற்போது பெய்துவரும் பருவமழை காரணமாக தாம் தொடர்ந்தும் பாதிப்புகளை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவமழை காரணமாக கட்டடம், தச்சு, நடைபாதை வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான, நாளாந்த உழைப்பாளிகள் தொழில் இழந்த நிலையில் தமது வீடுகளில் முடங்கிக் கிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கார்த்திகை 23, 2011

பாராளுமன்ற சம்பிரதாயங்களை எதிர்க்கட்சித் தலைவர் மறந்துவிட்டாரா?

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும், மக்களின் நல்வாழ்வை யும் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் இலங்கையை பொருளாதார ரீதியிலும், மற்றெல்லாத் துறைகளிலும் வளம்மிக்க நாடாக உருவாக் குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட யோசனைகள் ஒரு வலுவான அடித்தள மாக அமைந்துள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகமாக நன்மையடைபவர்கள் சாதாரண பொதுமக்களும் நாட்டுக்காக தங்கள் உழைப்பை பெற்றுக் கொடுக்கும் அரசாங்க ஊழியர்களுமாகும். இலங்கைக்கு வருமானத்தை பெற்றுக் கொடு க்கும் உல்லாசப் பிரயாணத்துறையை வளப்படுத்தி, அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் பெற்றுக் கொடுப்பதற்கும், ஜனாதிபதி அவர்கள் உல்லாசப் பிரயாணத்துறைக்கு வரிச் சலுகைகளை யும் ஏனைய உற்சாகமூட்டும் செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியி ருப்பது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

பயங்கரவாத தடைச்சட்டம்

கைதிகள் மீது வழக்கு விசாரணையா? விடுதலையா?

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தற்போது 893 பேர் உள்ளனர். இவர்களில் தற்போது 64 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இதுவரை 259 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போதும் பிணை வழங்கப்படாமல் 33 பேர் உள்ளனர். வழக்கு தாக்கல் செய்யப்படாமல் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 100 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய வழக்கு தாக்கல் செய்வது தொடர்பாக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. வழக்குத் தாக்கல் செய்வதா? வழக்குத் தாக்கல் செய்யாமல் விடுதலை செய்வதா? என்பது பற்றி சட்டமா அதிபர் திணைக்களமே தீர்மானிக்கும். அதன் பதிந்துரைக்கு அமையவே அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கார்த்திகை 23, 2011

உண்டியல் வியாபாரிகளே உசாரு....?

களுபோவில பிரதேசத்தில் சட்ட விரோதமாக நடாத் தப்பட்டு வந்த நாணய மாற்று (உண்டியல்) விற்பனை நிலையம் ஒன்றை கொழும்பு மோசடி புலனாய்வு துறை பொலிஸார் முற்றுகையிட்டுள் ளனர். மேற்படி நிலையத்திலிருந்த இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். மோசடி புலனாய்வு பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து களுபோவில வைத்தியசாலை வீதி பகுதியில் சுமார் 2 மணித்தியாலம் மேற்கொண்ட சோதனையடுத்தே மேற்படி நிலையத்தை பொலிஸார் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்கிஸ்சை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கார்த்திகை 23, 2011

உத்வேகமூட்டும்  எகிப்தியர்கள்!

நாகரிகங்கள் தோன்றிய பூமிகளில் ஒன்றாம் எகிப்தில் மீண்டும் ஒரு மகத்தான மக்கள் எழுச்சி துவங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக தலைநகர் கெய் ரோவிலும், அலெக்சாண்ட்ரியா முதல் சூயஸ் வரையிலும், கீழ்த்திசை நகரங்கள் முதல் நைல் டெல்டா வரையிலும் மக்கள் போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள். இந்தாண்டு துவக்கத்தில், அமெரிக்க கைக் கூலியான எதேச்சதிகாரி ஹோஸ்னி முபா ரக்கை எதிர்த்துக் களம் கண்ட இம்மக்கள், தற் போது, அவரது இடத்தில் அமர்ந்துகொண்டு ஜனநாயக மறுமலர்ச்சியை அமெரிக்க ஆயுத உதவியோடு நசுக்க முனையும் ராணுவ ஆட்சி யாளர்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி யுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

மாயாவதி அரசின் முடிவால் டில்லியில் அரசியல் பதற்றம்

லோக்சபா எம். பி.க்கள் 81 பேரை வைத்துக் கொண்டு இந்திய அரசியலை ஆட்டிய படைக்கும் உத்தரப் பிரதேசத்தை, நான்கு சிறிய மாநிலங்களாகப் பிரிக்க, அம்மாநில சட்டசபை நிறைவேற்றியுள்ள தீர்மானம், டில்லியில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. உ.பி.யை பிரிக்கும் மாயாவதியின் நடவடிக்கையை, தேசியக் கட்சிகள் ஆதரிக்கவில்லை. பொதுவாக, சிறிய மாநிலங்களை உருவாக்குவதற்கு ஆதரவு தரும் பா.ஜ. மாயாவதியின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்துள்ளது."கூர்காலேண்ட்டை மேற்கு வங்கத்திலிருந்து பிரிக்கக் கூடாதென கூறிவரும், மார்க்சிஸ்ட் கம்யூ., தெலுங்கானா போன்ற தனி மாநிலங்கள் அமைவதை, வன்மையாக எதிர்த்து வருகிறது. நேற்று முன்தினம் உ.பி.யை பிரிக்கும் தீர்மானம் குறித்து, அக்கட்சி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மாயாவதியின் மாநில பிரிப்பு நட வடிக்கைக்கு, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

உன்னிச்சை மலைக்குகையினுள் இருந்து ரீ. 81 ரக துப்பாக்கிகள் மீட்பு

மட்டக்களப்பு - உன்னிச்சைப் பிரதேச மலைக் குகையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-81 ரக 14 தன்னியக்கத் துப்பாக்கிகளை ஆயித்தியமலை பொலிஸார் நேற்று கண்டெடுத்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அம்பாறை அரந்தலாவ விஹாரையில் பெளத்த பிக்குகளைப் படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களாக இவை இருக்கலாமெனச் சந்தேகிப்பதாக ஆயித்தியமலை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எஸ். பண்டார தெரிவித்தார். உன்னிச்சை குளத்தருகிலுள்ள மலைக்குகையில் இத்துப்பாக்கிகள் பொதிசெய்யப்பட்ட நிலையில் மறைத்து வைத்து மணல் இட்டு மூடப்பட்டிருந்தன. இவை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இங்கு வைக்கப்பட்டிருக்கலாமென பொலிஸார் கூறுகின்றனர். இந்த துப்பாக்கிகள் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் துருப்பிடித்து காணப்பட்டதாக தெரிவிக்கப் படுகிறது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து உன்னிச்சைக் காட்டுப்பகுதிக்கு வள்ளத்தில் குளத்தைக் கடந்து சென்ற பொலிஸ் குழுவினர் இவற்றைக் கண்டெடுத்துள்ளனர்.

கார்த்திகை 23, 2011

போர் முரசு கொட்டத் தயாராகும் நேட்டோ நாடுகள்

அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஈரான் மீது புதிய தடைகள் விதிப்பு

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள் ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக ஐ. நா. வின் கண்காணிப்பகம் வெளியிட்ட புதிய அறிக்கையைத் தொடர்ந்தே மேற்படி மூன்று நாடுகளும் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன்படி பிரிட்டினில் உள்ள அனைத்து நிதி நிறுவனங்களும் ஈரானுடன் வியாபார தொடர்புகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதற்கமைய ஈரான் வங்கிகளுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும் என பிரிட்டன் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. அதேபோன்று ஈரானின் நிதி மற்றும் அணுசக்தி துறைகளின் மீது கனடா அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஈரானின் மத்திய வங்கி உட்பட வேறு பல வங்கிகளோடும் எந்த வித நிதிப் பரிவர்த்தனைகளை செய்யக் கூடாது என்று கனடா தடை விதித்துள்ளது. (மேலும்....)

கார்த்திகை 23, 2011

இது சமூகத்தின் கட்டுப்பாட்டில்...!! 

கைப்பற்றுவோம் போராட்டங்களின் ஒரு பகுதியாக வீடில்லாதவர்கள் இணைந்து கலிபோர்னியாவில் உள்ள ஃபிராங்கிளின் பள்ளிக்கூடத்தை கைப்பற்றினர். இப்பள்ளிக்கூடம் நீண்டநாட்களாக இயங்காமல் இருந்து வந்தது. நான்கு மாடிகளைக் கொண்டுள்ள இந்தப் பள்ளிக்கூடக் கட்டிடத்தில் ஏறிய போராட்டக்காரர்கள் இந்தப் பொதுச்சொத்து சமூகத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்ற முழக்கத்துடன் கூடிய பதாகையைத் தொங்க விட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டவிரோதமாக பள்ளிக்கூடத்தில் நுழைந்ததாகக் கூறி 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கட்டிடத்தை அவர்களிடமிருந்து விடுவிக்கும் வகையில் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

புன்னாலைக்கட்டுவனில் 66 பவுண் நகைகள் கூரை பிரித்து கொள்ளை

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக் கட்டுவன் பகுதியில் வீடொன்றினுள் நள்ளிரவு வேளையில் வீடு புகுந்த கொள்ளையர்கள் சுமார் 66 பவுண் நிறையுடைய 35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்களை அறை களினுள் பூட்டியும் கட்டியும் அச்சு றுத்தியே கொள்ளையர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: யாழ் – பலாலி வீதியில் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (22.11.2011) நள்ளிரவு 12.30 மணியளவில் கூரை ஓடுகள் வழியாக உள் நுளைந்த கொள்ளையர்கள் வீட்டு மின் இணைப்பை பியூஸ்ப் பகுதியை அகற்றி துண்டித்துள்ளனர். இதன் பின்னர் வீட்டில் இருந்தவர்களை அறையினுள் பூட்டி வைத்துவிட்டும் சிலரை கட்டி வைத்துவிட்டும் கொள்ளையர்கள் வீட்டை சல்லடைபோட்டுத் தேடியுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

பஹ்ரைன்  அம்பலமானது அல் கலிபா அரசின் கொடூரத் தாக்குதல்

ஜனநாயக உரிமைகள் கோரி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மீது பஹ்ரைனின் சர்வாதிகார அரசு கொடூரமான வகை யில் தாக்குதல்களை நடத் தியதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகி யுள்ளன. பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் மக்கள் பெருந் திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோது, அவர்க ளைக் கலைக்க பெரும் அளவில் அடக்குமுறை கை யாளப்பட்டது. ஆர்ப்பாட் டம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை காவல் துறையைச் சேர்ந்தவர் இரும்புக்கம்பியால் தாக்கு வது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. பெரும் அடக்குமுறை எதையும் மக்கள் மீது பிரயோகிக் கவில்லை என்று சொல்லி வந்த அரசு, தற்போது அத் தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொள்கிறது. (மேலும்....)

கார்த்திகை 23, 2011

பாக். அரசு மன்னிப்பு கேட்க பங்களாதேஷ் அழுத்தம்

பங்களாதேஷ் விடுதலை போரில் ஈடு பட்ட போது அதற்கு எதிரான அட்டூ ழியங் களில் ஈடுபட்டதற்காக எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் பங்களாதேஷ் கேட்டுக் கொண்டுள்ளது. பங்களாதேஷ¤க்கான பாகிஸ்தான் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள வரை பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டிபு மோனி சந்தித்துப் பேசினார். அப்போது 1971 ஆம் ஆண்டு விடுதலை போர் 9 மாத காலம் நடந்தது. அப்போது பாகிஸ்தான் உள்ளூர் குண்டர்கள் உதவியுடன் சேர்ந்து 30 இலட்சம் பேரை கொன்று குவித்தது. 2 இலட்சம் பெண்களை கற்பழித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த அட்டூழியங்களுக்காக பாகிஸ்தான் அரசு பங்களாதேஷிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு சொத்துக்களை பிரித்து கொள்வதற்கான பிரச்சினை இன்னும் தீர்வு காணாமல் இருக்கிறது. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கார்த்திகை 23, 2011

காஷ்மீர் குறித்த தவறான வரைபடம்

அமெரிக்க அரசுக்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானுடன் இணைந்த பகுதியாக குறிப்பிட்டு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட தவறான வரைபடம் இந்தியாவின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து அதிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் www.state.gov என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், தான் தூதரக உறவு வைத்துள்ள நாடுகளின் பட்டியலையும், அதன் தேசியக் கொடி, வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது. அந்த இணைப்புகள் வெளியுறவுத்துறையின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. அதில் இந்தியா குறித்த பகுதியில், தவறான இந்திய வரைபடத்தை அமெரிக்க அரசு வெளியிட்டிருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை முழுமையாக பாகிஸ்தானுடன் இணைத்துள்ளனர். அதேசமயம், சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியான அக்ஷய சீன பகுதியை இந்தியா சொந்தம் கொண்டாடும் பகுதி என்று அம்புக்குறியிட்டு குறிப்பிட்டுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

பொலிஸ் பதிவானது தமிழ் மக்களுக்கு மாத்திரமானதல்ல, இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்குமானது

நாடுமுழுவதிலும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் பொலிஸ் பதிவு தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. இந்த பொலிஸ் பதிவானது தமிழ் மக்களுக்கு மாத்திரமானதல்ல, இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்குமானது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமையவே இந்தப் பதிவு மேற் கொள்ளப்படுவதாக தெரிவித்த அவர், மக்களின் நலன் கருதியே இந்த பதிவு மேற்கொள்ளப் படுகிறது என்றார். ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் வாழும் மக்களை இலகுவாக தெரிந்து கொள் வதுடன், குற்றச் செயல்கள், அசம்பாவிதங்கள் புரிபவர்களை இலகுவில் அடையாளங்காணும் நோக்குடன் இந்த பதிவு இடம்பெறுகிறது. (மேலும்....)

கார்த்திகை 23, 2011

லெபனான்

சிஐஏ நடவடிக்கைகளைத் தகர்த்தது ஹிஸ்புல்லா

லெபனானில் இருந்த அமெரிக்க ஆதரவு ஆட்சி யாளர்கள் உதவியுடன் பல் வேறு சதி வேலைகளைச் செய்து வந்த சி.ஐ.ஏ. (அமெ ரிக்க மத்தியப் புலனாய்வுக் குழு)வுக்கு பெரும் பின்ன டைவை ஹிஸ்புல்லா அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க எதிர்ப்பு மற்றும் தேசிய விடுதலை யை முன்னிறுத்தும் அமைப் புகளை வளரவிடாமல் தடுக்க, அமெரிக்க உளவுத் துறை சி.ஐ.ஏ. பல்வேறு சதி வேலைகளை மேற்கு ஆசி யாவில் செய்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் லெப னானிலும் நடந்து வந்தது. ஆனால், நடப்பாண்டில் மட்டும் ஏராளமான அமெ ரிக்க உளவாளிகள் ஹிஸ் புல்லா அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். சதி வேலைகளில் ஈடுபட்டவர் களை அடையாளங்கண்டு, கைப்பற்றும் வேலையில் ஹிஸ்புல்லா அமைப்பு தீவிரமாக இயங்கி வந்தது.
(மேலும்....)

கார்த்திகை 23, 2011

சபரிமலை யாத்திரிகையின் போது இரு முடி எடுத்து செல்ல

விமானத்தில் கெடுபிடி, கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு

விமானத்தில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், இரு முடியை எடுத்துச் செல்ல தனியார் விமான நிறுவனம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இதுவரை கைப் பையில் வைத்து எடுத்துச் சென்ற இரு முடிகள், பொதிகள் மூலம் கொண்டு செல்லப் பட்டன. கேரளாவிலுள்ள சபரிமலைக்கு ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து சென்று வருகின்றனர். சபரிமலை யாத்திரிகையின் போது இரு முடி எடுத்துச் செல்வது ஐதீகம், கனடா, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்போரும் இரு முடி தாங்கி விமானம் மூலம் கேரளாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து சபரிமலை செல்கின்றனர். இவர்கள் விமான பயணத்தின் போது தங்களுடனேயே இரு முடியை கைப் பையில் வைத்துக் கொள்ள இதுவரை எந்த தடையும் இருத்ததில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சென்னையிலிருந்து கொச்சி புறப்பட்ட தனியார் விமானம் மூலம் கொச்சி சென்ற ஐயப்ப பக்தர்களின் இரு முடிவுள் கைப் பையில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் இரு முடியை பொதிகளில் இட்டு எடுத்துச் சென்றனர்.

கார்த்திகை 22, 2011

நோய்க்கு வித்திடும் மருந்துகள்!

(சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,)

“2008 நிதி நெருக்கடியைச் சமாளிக்க முதலாளித்துவம் தேர்ந்தெடுத்த வழிமுறை கள், மேலும் ஆழமான நெருக்கடிக்கு இட்டுச் செல்லும்; அத்தகைய மீட்சி முழுமை பெறும் முன்னரே புதிய நெருக்கடியில் சிக்கி இரட்டைத் தாழ்வு மந்தத்தில் போய் முடியும் என நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். நான் கணித்தது போலவே நடந்துவிட்டது என்பது குறித்து நான் ஒன்றும் மகிழ்ச்சி அடையவில்லை. கார்ப்பரேட் கடன்களை அரசாங்கக் கடன்களாக மாற்றுகிற இந்த உத்திகளுக்கு உலகெங்கிலும் லட்சக்கணக் கான மக்கள் பலியாகியுள்ளனர். மீட்புத் திட் டம் என்ற பெயரில் எந்தக் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு கொள்ளை கொள்ளையாய் அள்ளிக்கொடுக்கப்பட்டதோ, அந்தக் கம் பெனிகள் உருவாக்கிய நெருக்கடிதான் அர சுக் கடன்கள் பெருமளவு பெருகியதற்கு அடிப் படைக் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.
(மேலும்....)

கார்த்திகை 22, 2011

புலிகள்-சீக்கிய பயங்கரவாதிகள் மூலம் சதிதிட்டம் லஷ்கர் பயங்கரவாதிகள் ஒப்பந்தம்-போலீஸ் உஷார்

இலங்கையில் தங்களுடைய படை பலத்தை முற்றிலுமாக இழந்து நிற்கும் புலிகள் தற்போது வெளிநாடுகளில் வசித்து வரும் இவர்களை இந்தியாவில் நுழைய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பணித்துள்ளதாகவும், இதன் மூலம் மும்பையில் பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் மத்திய உளவுத்துறையினர் மும்பை அரசுக்கு தெரிவித்து முழு எச்சரிக்கையாக இருக்குமாறு அலர்ட் செய்துள்ளனர். இலங்கையில் பெரும் போரை நடத்தி தலைவர் முதல் அனைவரும் உயிரிழந்து விட்டாலும், இவர்களில் இருந்து தப்பிய சிலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தும், பணம் வசூலித்து மீண்டும் தங்கள் இயக்கத்தை உயிர்ப்பிக்க வைக்கவும் மறைமுக வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை இலங்கை அதிபர் ராஜபக்சே சமீபத்தில் மாலத்தீவில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்றபோது ஒரு நிருபரிடம் ஒத்துக்கொண்டார்.  (மேலும்....)

கார்த்திகை 22, 2011

வெற்றி அடைவதற்கு அப்போ என்னதான் மேலும் வேண்டும்

உங்களுடன் ஒரு நிமிடம்...

  • சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது

  • வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது

  • வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது

  • அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது

  • அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது

  • வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது

  • உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது

  • தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது

  • அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது

  • தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது

  • தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது

  • சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது

  • விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது

  • அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது

  • குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது

  • கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது

  • நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது

  • அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது

(நன்றி: தனபாலசிங்கம்)

கார்த்திகை 22, 2011

நியாயப்படுத்துவது நியாயமல்ல!

பேருந்து, பால் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி, மக்களை வதைத்துள்ள அதிமுக அர சுக்கு கண்டனம் அதிகரித்து வருகிறது. பேருந் தில் ஏறுபவர்களும், பால் வாங்கச் செல்பவர் களும் அதிர்ச்சியில் உறைவதோடு, அரசு மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக முதல்வர் ஜெயலலிதா பஸ் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை நியாயப்படுத்தி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விலை உயர்வை அறிவித்த அறிக்கையைப் போன்றே, இந்த அறிக்கையிலும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அரசுப் போக்குவரத்து கழகங்கள், ஆவின் பால் நிலையம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக் கும் ஆட்சேபணை இருக்கப்போவதில்லை. (மேலும்....)

கார்த்திகை 22, 2011

ஈரான் அணுசக்தி விவகாரம்  அமெரிக்க குடியரசுக்கட்சிக்குள் குழப்பம்

ஈரான் மீது ராணுவ ரீதி யான நடவடிக்கை மேற் கொள்வதற்கான தயாரிப்பு களை ஒபாமா நிர்வாகம் செய்து வருகையில், குடியர சுக்கட்சிக்குள் இது குறித்து பெரும் குழப்பம் ஏற்பட் டுள்ளதாகத் தெரிகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்குவதற் காக, அணு ஆயுதம் தயாரிக் கிறார்கள் என்கிற ஆதார மற்ற குற்றச்சாட்டை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் முன்வைக் கிறார்கள். ஒபாமாவின் ஜன நாயகக்கட்சி ஈரான் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவு தெரிவித்துப் பேசி வருகிறது. நவம்பர் 12 ஆம் தேதியன்று இந்தப்பிரச்சனை பற்றிப் பேசிய குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கும் நியூட் கிங்ரிச், வெறியேற் றும் வகையில் பேசினார். ஈரானின் அணு விஞ்ஞானி கள் அனைவரையும் கொன்று குவிக்க வேண்டும் என்றும், ஈரானின் அணுசக்தி உலை களைத் தகர்க்க பயங்கரவாத நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். (மேலும்....)

கார்த்திகை 22, 2011

விவாதம் முடியும் வரை த.தே.கூ., ஜே.வி.பி. சபையில்

பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உரையாற்றியபோது, ஐ. தே. க. யினர் வெளிநடப்பு செய்த போதும் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களும் ஜனநாயக ஐக்கிய முன்னணி (ஜே.வி.பி.) உறுப்பினர்கள் சபையில் அமர்ந்திருந்தனர். ஐ. தே. க. உறுப்பினர்களின் ஆசனங்கள் வெறுமனே காணப்பட்டன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரும் வரவு-செலவுத் திட்ட உரையை மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டி ருந்தனர். வரவு-செலவுத் திட்ட உரை நிறை வுற்ற பின்னரும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விருந்துபசாரத் திலும் ஐ.தே.க.வினர் கலந்துகொள்ளவில்லை.

கார்த்திகை 22, 2011

தபால் ஊழியர் போராட்டம் முடிவு

அமைச்சருடனான பேச்சில் இணக்கம்

ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்த தபால் ஊழியர்களின் தொழிற் சங்கப் போராட்டம் நேற்று நண்பகலுடன் முடிவடைந்தது. தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுக்கும் தொழிற் சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டதாக தபால் சேவை அமைச்சு கூறியது. தபால் மா அதிபரை உடனடியாக பதவி விலக்கக் கோரி கடந்த வாரம் முதல் 16 தொழிற் சங்கங் கள் மேலதிக நேர பகிஷ்கரிப்பில் ஈடு பட்டு வந்ததோடு உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் தபால் சேவைகள் பெரிதும் பாதிக் கப்பட்டதோடு 10 இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் பொதிகள் தபால் பரிவர்த்தனை நிலையத்தில் தேங்கிக்கிடந்தன. இந்த நிலையில், தபால் சேவைகள் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நேற்று தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுநடத்தினர். தபால்மா அதிபருக்கு எதிராக முறையான ஒழுக்காற்று விசா ரணை நடத்துவது தொடர்பான குற்றப் பத்திரத்தை பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு இன்று (22) அனுப்புவதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தொழிற் சங்கங்கள் இணக்கம் தெரிவித்தன.

கார்த்திகை 22, 2011

இராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம்

எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் நீடித்தது. இதன் போது பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் கொல்லப் பட்டோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 1,750 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு வாரமாக நடைபெறும் இப்போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரம் அடைந்தது. தலைநகர் கெய்ரோவில் உள்ள தஹ்ரீர் சதுக்கத்தில் கூடிய சுமார் 50 ஆயிரம் பேர் அங்கு கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். அவர்களை கலைத்து கூடாரங் களை பொலிஸார் அகற்றினர். இதைத் தொடர்ந்து பொலிஸாருடன் பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டனர். பொலிஸார் நடத்திய ரப்பர் குண்டு, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை வீச்சு மற்றும் தடியடியில் 2 பேர் உயிரிழந்தனர். 750 பேர் காயம் அடைந்தனர். (மேலும்....)

கார்த்திகை 22, 2011

ஸ்பெயின் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வெற்றி

ஸ்பெயின் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான பொப்பியுலர் கட்சி வெற்றிபெற்றுள்ளது. ஸ்பெயினில் பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம், நாட்டின் வளர்ச்சியின்மை, வறுமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தேர்தலின்போது பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. அதில் எதிர்க்கட்சியான பொப்பியுலர் கட்சி 44 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியான சோசலிஸ கட்சிக்கு 29 சதவீத வாக்குகளே கிடைத்தன. இதை தொடர்ந்து 350 ஆசனங்கள் உள்ள பாராளுமன்றத்தில் பொப்பியுலர் கட்சிக்கு 186 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொப்பியுலர் கட்சி தலைவர் மரியானோ ராஜோய் பிரதமர் ஆகிறார். பொப்பியுலர்கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து மெட்ரிட் உள்ளிட்ட பல நகரங்களில் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கொடிகளை அசைத்தபடி தங்கள் கட்சி தலைவர்களுக்கு வாழ்த்து கூறினர். சோசலிஸ கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோஸ் பிளாங்கோவும் வெற்றி பெற்ற பொப்பியுலர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். அடுத்த மாதம் (டிசம்பர்) பாராளுமன்றம் கூடும்போது புதிய பிரதமராக ராஜோய் பதவி ஏற்கிறார்.

கார்த்திகை 22, 2011

எயிட்ஸ் நோயாளர்களின் மரண எண்ணிக்கை குறைவு - ஐ. நா. அறிக்கை

மருத்துவ சிகிச்சை காரணமாக வரலாற்றில் இல்லாத அளவில் உலகில் அதிகப்படியானோர் எயிட்ஸ் நோயுடன் வாழ்வதாக ஐ. நா.வின் எயிட்ஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. உலகில் 34 மில்லியன் பேர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மருத்துவ சிகிச்சை காரணமாக அதிகமானோருக்கு எயிட்ஸ் நோயுடன் உயிர் வாழ முடிந்துள்ளதாக ஐ. நா. கூறியுள்ளது. ஐ. நா.வின் எயிட்ஸ் அமைப்பின் ஆண்டு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 2010ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சை காரணமாக எயிட்ஸ் நோயாளர்களின் மரண எண்ணிக்கை 1.8 மில்லியனாக குறைந்துள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

கார்த்திகை 22, 2011

கடாபி உளவுப் பிரிவு தலைவர் சனூசியும் பிடிபட்டார்

சைப் அல் இஸ்லாமை தொடர்ந்து லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி அரசின் உளவுப் பிரிவுத் தலைவர் அப்துல்லா அல் சனூசி இடைக்கால அரசினால் கைது செய்யப்பட்டுள்ளார். லிபியாவின் தென் பகுதியில் உள்ள அல் குயிரா பிராந்தியத்தில் வைத்து சனூசி கைது செய்யப்பட்டதாக இடைக்கால அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இது குறித்து மேலதிக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டு ஒரு நாளுக்குள் சனூசியும் பிடிபட்டுள்ளார். இதன்படி கடாபி அரசின் முக்கிய பிரமுகர்களில் கடைசி நபராக சனூசி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 62 வயதான அப்துல்லா பின் சனூசி முஅம்மர் கடாபியின் மைத்துனராவார்.

கார்த்திகை 22, 2011

பாதுகாப்பாக இருப்பதாக சைப் அல் இஸ்லாம் பேட்டி

லிபிய இடைக்கால அரசினால் கைது செய்யப்பட்ட முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம், தான் பிரச்சினை இன்றி இருப்பதாக தெரிவித்துள்ளார். மறைமுகமான இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சைப் அல் இஸ்லாம் ஊடக மொன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் எனது சகோதரர்கள் உறவினருடன் பிரச்சினையில்லாமல் இருக்கிறேன். எனினும் காயத்திற்கு மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்து பேச்சு நடத்தி வருகிறேன். சைப் அல் இஸ்லாமின் கைவிரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. நேட்டோ படையின் தாக்குதலாலேயே இந்த காயம் ஏற்பட்டதாக சைப் அல் இஸ்லாம் கூறியுள்ளார். “நாம் பானி வலீதை விடடுச் செல்லும் போது சிலுவை படை வான் தாக்குதல் நடத்தியது. அப்போது எமது வீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டதோடு பலருக்கு காயம் ஏற்பட்டது. எனக்கும் காயம் ஏற்பட்டது. வாடி சம்சம் பகுதியில் பல மாதங்களாக நான் காயத்துடன் இருந்தேன். நல்வேளை லிபியர்கள் எவரும் எம்மை தாக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

கார்த்திகை 22, 2011

உடல் நலத்தை மேம்படுத்தும் சைக்கிள் சவாரி

இன்று உலகில் எல்லா நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக சவால் விடும் வகையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக் கும் சீனாவுக்கு சென்றவர்களுக்கு நன்றாகத் தெரியும், அங்கு பெட்ரோல் வாகனங்களுக்குப் பதிலாக எந்த வகையில் சைக்கிள் களைப் பயன்படுத்துகிறார்கள் என்று. எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் சைக்கிளில் செல்வதை மிக பெருமையாக கெளரவமாகவே கருதுகிறார்கள். வீதிகளிலும் சைக்கிள்கள் செல்வதற்கு தனியாக பாதை ஒதுக்கிக்கொடுத்து இருக்கிறார்கள். ரயில் நிலையங் கள் பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஒவ்வொரு அலுவலகங்கள் முன்பும் சைக்கிள் களை நிறுத்த அமைக்கப்பட்டுள்ள சைக்கிள் ஸ்டாண்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விடலாம்.  பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்க சீனா இப்போது புதிதாக நடவடிக்கையைத் தொடங்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. 1990 இல் சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்தது. அப்போது தமிழ் நாட்டிலிருந்து பத்திரிகை களின் சார்பில் செய்தியாளர்கள் சென்றிருந்தனர். அங்குள்ள மீடியா சென்டரில் அவர்களுக்கு மொழி பெயர்ப்பு மற்றும் உதவிகள் வழங்குவதற்காக ‘தவுகான்’ என்ற கல்லூரி மாணவி நியமிக்கப்பட்டு இருந்தார். அந்த பெண்ணின் தகப்பனார் பொதுப்பணித்துறை தலைமை பொறியியலாளர், தாய் ஒரு பெரிய பால் பண்ணையின் முகாமையாளர். இவர் ஒரே பெண். உங்கள் வீட்டில் என்ன வாகனம் இருக்கிறது? என்று தமிழக செய்தியாளர் கேட்டவுடன் ‘திரி பைசைக்கிள்ஸ்’ அதாவது 3 சைக்கிள்கள் என்று அந்த பெண் பெருமையோடு சொன்னார். (மேலும்....)

கார்த்திகை 21, 2011

வாழ்க்கையை கொண்டாடுவோம்

நவம்பர் 19 தோழர் பத்மநாபா பிறந்தநாள்

தியாகிகள் . ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் பெருமைக்குரிய செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் பிறந்ததினம இன்றாகும். தோழர் பத்மநாபாவும் பன்னிரண்டு தோழர்களும் தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்த ராஜீவ்காந்தி அவர்கள் தனது தாயார் இந்திரா காந்தி அவர்களும் தோழர் பத்மநாபா அவர்களும் ஒரே தினத்தில்தான் பிறந்தவர்கள். ஒரே விதமான இலட்சியங்களுக்காக போராடி மரணித்தவர்கள் என தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரம், சர்வதேச

சகோதரத்துவம் நவ காலனித்துவத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை வரிந்து கொண்டவர் அவர். இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் சமூகங்களிடையே சகோதரத்துவத்துக்காகவும், சமூக மாற்றத்துக்காகவும் உழைத்தவர் அவர். சகல விதமான அடிமைத்தனங்களையும் அவர் எதிர்த்தவர். நீதியான சமூக அமைப்பை, பாரபட்சமற்ற சமூக அமைப்பை அவர் வேண்டி நின்றவர். (மேலும்....)

 

கார்த்திகை 21, 2011

2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை வரவு – செலவுத் திட்டம் தொடர்பான சாரம்சம்!

நடமாடும் மொழி ஆய்வுக்கூடங்களை உருவாக்க 100 மில்லியன் ரூபா மேலதிக ஒதுக்கீடு.
பாதுகாப்புப் படையினரின் ஒவ்வொரு பெற்றோருக்கும் 750 ரூபா கொடுப்பனவு.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மாதாந்த கொடுப்பனவு 700 ரூபாவால் அதிகரிப்பு
சமுர்தி கொடுப்பனவு 210 ரூபா முதல் 615 ரூபா வரை பெறுவோருக்கு 750 ஆக அதிகரிப்பு – 900 ரூபா பெறுவோருக்கு 1200 ஆக அதிகரிப்பு
ஆரம்ப பாடசாலைகள், தர்ம பாடசாலைகளுக்கு உதவுவதற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
புராதன சமய தலங்களைச் சூழ்ந்து காணப்படும் பாடசாலைகள், மகப்பேற்று நிலையங்கள், குடிநீர் பாதைகளுக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
25 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும் சிரேஷ்ட கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மோட்டார் கார் கொள்வனவுக்கு வட்டியில்லாக் கடன்
குறைந்த வருமானம் பெறுவோருக்கு சட்ட ரீதியில் உதவ 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
புதிய கலை கேந்திர நிலையத்தை உருவாக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
ஆராய்ச்சி, விதை அபிவிருத்தி மற்றும் விரிவாக்கலை உருவாக்க 200 மில்லியன் ரூபா மூலதனம்
மரக்கன்று மற்றும் சமயல் எண்ணெய் மீதான செஸ் வரி அதிகரிப்பு
தெங்கு,பனை மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீதான வரி நீக்கம்
கால் நடை உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள் மீதான செஸ் வரி விலக்களிப்பு
திவி நெகும ஊக்குவிக்கக் கடன் திட்டம்
கரையோரப் பாதுகாப்புக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு
கிராம நகரங்களை இணைக்கும் பாதை வலையமைப்பினை நிர்மாணிப்பதற்கு 170 மில்லியன் ரூபா 5 வருடங்களில் செலவிட எதிர்பார்ப்பு
48 சதவீத குடிநீரைச் சேமிப்பதோடு 680 மில்லியன் ரூபா முதலீடு
5 மில்லியன் குடும்பங்கள் மின்சாரத்தை நுகர்வதற்கு 34 ஆயிரத்து 187 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
பஸ்,லொறி டயர்கள் மீதான இறக்குமதித் தீர்வை 50 சதவீதம் குறைப்பு

கார்த்திகை 21, 2011

இலங்கை பாராளுமன்றத்தில் இன்று அமைதியின்மை!

2012 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 1.52 க்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். ஜனாதிபதி உரை நிகழ்த்த ஆரம்பித்து சில நிமிடங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் பல்வேறு எதிர்ப்புகளை முன்வைத்து, பதாகைகளை ஏந்திய வண்ணம் எதிர்ப்பில் ஈடுபட்டமையே இதற்குக் காரணமாகும். இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சியின் சில உறுப்பினர்கள் சபையின் நடுவே பிரவேசித்து, எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். இந்த அமைதியின்மைக்கு மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரவு - செலவுத் திட்டம் தொடர்பாக தனது உரையை தொடர்ந்தும் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 21, 2011

விட்டுக் கொடுக்க முடியாத விடயங்களை நாங்கள் விட்டுக் கொடுக்கப் போவதில்ல - சம்பந்தன் எம்.பி

"போரின் இறுதிக்காலப்பகுதியில் என்ன நடைபெற்றது என்பது பற்றிய உண்மை முழுமையாக அறியப்பட வேண்டும் என்பதை மேற்குல நாடுகளின் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது நாம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வீரகேசரி இணையத் தளத்திற்கு வழங்கியுள்ள பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார். இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதைப் பொறுத்தவரையில் ஒரு நியாயமான, நிதானமான நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு தீர்வை ஏற்படுத்துவதில் அரசாங்கத்தினுடைய அசமந்தப்போக்கின் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற தாமதம் உட்பட பல விடயங்கள் பற்றியும் நாங்கள் அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம் எனவும் அவர் இந்தப் பேட்டியின் போது குறிப்பிட்டார். (மேலும்....)

கார்த்திகை 21, 2011

ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம் (இரண்டாம் பகுதி)

(சபா நாவலன்)

சரிந்து விழுந்து கொண்டிருந்த பொருளாதாரத்தைத் தற்காலிகமாகத் தூக்கி நிறுத்த கீன்ஸ் முன்வைத்த ஒடுக்குமுறைக் கோட்பாட்டை ஐரோப்பிய, அமரிக்க அரசுகள் பயன்படுத்த ஆரம்பித்திருந்தன. அதாவது வீழ்ச்சி ஏற்படும் வேளைகளில் பொருளாதாரத்தில் அரசு தலையிட்டு அதனை ஊக்குவிக்கும் வழிமுறையைக் கையாள்வதற்கான அனைத்துப் பொறிமுறைகளையும் ஏற்படுத்திக்கொண்டன. சமூகதின் இயக்கத்தை முற்றாகப் புறக்கணித்த முட்டாள் தனமான இவரின் கோட்பாடு பெரு முதலாளிகளின் பணப்பசிக்குத் தீனி போட்டது. தொந்தரவின்றி சுதந்திரமாக உலவ விடப்பட்ட பெரு முதலாளிகள் தமக்குச் சேவை செய்வதற்கான அரசுகளையும் அவற்றின் அதிகாரக் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளப் போகிறவர்களையும் கூடத் தீர்மானித்தனர். பொதுவாக பொருளாதர நெருக்கடிக்கையை சுதாகரித்துக் கொள்வதற்காக அரசுகள் பணத்தை முதலீடு செய்கின்ற காலப்பகுதிகளில் ஐரோப்பாவில் “இடதுசாரிகள்” என அழைக்கப்படுவோர் ஆட்சிக்கு அமர்த்தப்பட்டனர். நெருக்கடி சீர் செய்யப்படும் நிலையை அடைந்ததும் “வலது சாரிகள்” என்று அழைக்கப்பட்டோர் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர். விரல் விட்டு எண்ணத்தக்க பெரு முதலாளிகளுக்குச் சேவை செய்வதற்காகவே ஊடகங்களிலிருந்து கருத்தை உருவாக்கும் அனைத்துச் சாதனங்களும் செயற்பட்டன. உலகின் ஒவ்வொர் அங்கமும் ஒரு குறித்த பொறிமுறைக்குக் கீழ் வலிந்து இயக்கப்பட்டது. கீன்ஸ் இன் கோட்பாடு தற்காலிகமாக அழிவிலிருந்து தக்கவைப்பதற்கான வலுவை வழங்கிய அதே வேளை 1970 ஆம் ஆண்டு மேற்கின் முதலாளித்துவ அமைப்பில் மற்றொரு நெருக்கடி உருவாகின்றது. (மேலும்....)

கார்த்திகை 21, 2011

கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நாடுகடந்த அரசின் அனுசரணையுடன் இம்முறை மாவீரர் நாள்(2011) முன்னெடுப்பு.

இம்முறை என்றுமில்லாதவாறு  மாவீரர் நாள்(2011)கார்த்திகைத் திங்கள் 27ந் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடியத் தமிழர் பேரவைத் தலைவர் திரு. டேவிட்  பூபாலபிள்ளை அவர்களின் தலைமையில் மிகவும் பிரமாண்டமானமுறையில் டவுண்ஸ்  வியூ மைதானத்தில் நடைபெறும் என்பதை கனடியத்தமிழர் அனைவருக்கும் அறிவிப்பதில் பெருமையடைகின்றோம்.திரு. பூபாலபிள்ளை அவர்கள் மாவீரர் பணிமனையொன்றை அமைப்பதிலும், கனடிய அரசாங்கத்தின் (RCMP, CIS) உதவியுடன் வளமைக்குமாறாக முன்கூட்டியே மாவீரர் விழாவுக்குரிய மண்டபத்தையும் ஒழுங்குசெய்வதிலும் முன்னின்று உழைத்ததை யாராலும் மறக்கமுடியாது. உலகத்தமிழர்களின் தலைவரும் நாடுகடந்த அரசின் பிரதமருமான மேன்மைதங்கிய உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் உரையானது நேரடியாக உலகெங்கும் ஒலிபரப்பப்படும்.இவரின் கொள்கை விளக்க உரையைக் கேட்பதற்கு தமிழ்மக்கள் அனைவரும் ஆவலாக உள்ளார்கள்.40,000 மேற்பட்ட‌ மாவீரர்களின் தியாகங்களை மதித்து அனைத்துக் கனடியத் தமிழ்மக்களும் டவுண்ஸ் வியூ மண்டபம்நோக்கி அணிதிரளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்.

எதற்கும் கீழே இருக்கும் செய்தியையும் படிக்கவும்.

கார்த்திகை 21, 2011

இலண்டனில் புலிகளின் ஆதரவாளர்கள் மாவீரர் நாள் கொண்டாட்டத்திற்காக மேற்கொண்டு வந்த ஏற்பாடுகளை இறுதி நேரத்தில் ரத்து

இலண்டனில் புலிகளின் ஆதரவாளர்கள் மாவீரர் நாள் கொண்டாட்டத்திற்காக மேற்கொண்டு வந்த ஏற்பாடுகளை இறுதி நேரத்தில் ரத்துச்செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. ஏதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினத்திற்கெனப் பதவு செய்யப்பட்டிருந்த இரண்டு மண்டபங்கள் இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. பிரிட்டனில் விநாயகம் குழுவினருக்கும் நெடியவன் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியின் காரணமாக மாவீரர் நாள் கொண்டாட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. முன்பு மாவீரர் தினத்தைக் கொணடாடுவதற்காகப் புலிகள் பயன்படுத்தி வந்த எக்சல் மண்டபத்தை இம்முறை விநாயகம் பிரிவினர் பதிவு செய்திருந்தனர். அதேநேரத்தில் நெடியவன் குழுவினர் ஐந்து இடங்களில் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இறுதி நேரத்தில் விநாயகம் பிரிவினரின் பதவினை ரத்துச் செய்த எக்சல் நிர்வாகம் அவர்கள் செலுத்தியிருந்த 50 ஆயிரம் பவுண்ஸ் முன்பணத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளது. (மேலும்....)

கார்த்திகை 21, 2011

தென்னிந்தியாவிலிருந்து 4 ஆயிரம் இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்

தென்னிந்தியாவிலிருந்து சுமார் 4 ஆயிரம் இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கையில் சுமார் 30 வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களே தற்போது நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ஐ.நா அகதிகள் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த இலங்கையர்கள் பலர் தற்போது புனர்வாழ்வுக்காக மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.  (மேலும்....)

கார்த்திகை 21, 2011

மாவோவின் குரு...

புகழ்பெற்ற, அறி வொளிமிக்க, கூர்நுட்பமிக்க, லி டா சௌ தான் 1917ஆம் ஆண் டின் அக்டோ பர் ரசியப் புரட்சி யைப் புகழ்ந்த முதலாவது சீன அறிவு ஜீவி ஆவார்; சீன அறிவுஜீவிகளிடத்தில் முதன் முதலாக மார்க்சிய சிந்தனையை அறிமுகப்படுத்தியவராகவும் அவர் விவரிக்கப்படுகிறார். 30 வயது இளைஞராக இருந்தாலும் முற் போக்கு கருத்துக்களுக்கும் தனிப் பட்ட துணிச்சலுக்கும் மாபெரும் புகழ்பெற்றவராக இருந்தார். மூச்சைத் திணறடிக்கும் கடந்த காலத்தின் ஒழுக்கவிதிகளையும் மதிப்பீடுகளையும் நிராகரிப்பதன் மூலம்தான் ஒரு மறுமலர்ச்சியை ஏற் படுத்த முடியும் என்று அவர் நம்பி னார்; மாணவர்களின் மனதில் செவ் வியல்கள் திணித்த சிந்தனை முடக் கத்தை “பாதங்கள் கட்டப்பட்ட பெண்களுடன்” அவர் ஒப்பிட்டார். (மேலும்....)

கார்த்திகை 21, 2011

அலுத்து வருது

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கூட்டமே இல்லை. முதல் நாள் ஆட்டத்தைக் காண சுமார் 10 ஆயிரம் பேர் வந்தனர். அவர்களும் சச்சி னின் 100 வது சதத்தைக் காண வந்தவர்கள். சச்சி னின் ஆட்டம் இழந்தவுடன் அவர்களும் சென்று விட்டனர். லட்சுமணும், தோனியும் சதம் அடித்த போது கைதட்டுவதற்கு ஆட்களைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி தோற்கும் போது எல் லாம் வீரர்கள் ஆடி ஆடி அலுத்தும் களைத்தும் போய் விட்டனர் என்ற காரணத்தை அனைவரும் மறக்கா மல் கூறுவார்கள். ஆனால் வீரர்கள் அப்படியெல் லாம் ஒன்றுமில்லை என்றென்றும் வெற்றி காண முடியுமா என்று மழுப்புவார்கள். இல்லாவிட்டால் முதலில் ஆம் அலுத்துவிட்டது என்று கூறிவிட்டு பின்னர் என்னைத் தப்பாகப் புரிந்து கொண்டார்கள் என்று பல்டியும் அடிப்பார்கள். (மேலும்....)

கார்த்திகை 21, 2011

எல்.ரீ.ரீ.ஈ யை தோற்கடிக்க முடியுமென கோத்தாபய நம்பிக்கை கொண்டிருந்தார் - எரிக்சொல்கெய்ம்

சமாதானத்திற்கான காய் நகர்த்தல் என்ற தொனிப் பொருளில் நோர்வேயில் மேற்கொண்ட ஆய்வறிக்கையில்  கூறப்பட்டிருக்கும் முக்கிய இரகசியத் தகவல்கள் வருமாறு, ‘2008ம் ஆண்டு வரையில் இந்திய புல னாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூட எல்.ரீ.ரீ.ஈயை இராணுவ ரீதியில் தோற்கடிக்கமுடியுமென்று நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. என்றாலும் எம்.கே. நாராயணன் போன்ற ஏனைய உயர் அதிகாரிகள் தங்களது பழைய நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, இலங்கை பாதுகாப்பு படை யினருக்கு எல்.ரீ.ரீ.ஈயை பயங்கரவாதிகளை துவம்சம் செய்ய முடியுமென்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றும் எரிக்சொல்கெய்ம் கூறியிருக்கிறார். அமெரிக்கா கூட எல்.ரீ.ரீ.ஈ.யை இரா ணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது என்றே நம்பிக்கை கொண்டிருந்ததாக சொல்கெய்ம் கூறியிருக்கிறார். (மேலும்....)

கார்த்திகை 21, 2011

இலங்கையை பாதிக்கும் விடயங்களை நீக்க கூகிள் இணக்கம்

இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இணைய உள்ளடக்கத்தை இலங்கையின் வேண்டுதலின் பேரில் கூகிள் நீக்கியுள்ளது. இப்படியான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டதாகவும், அதற்கு தாம் இணங்கியதாகவும் கூகிள் அறிவித்துள்ளது. வேறு தொழில்நுட்ப தொடர்பாடல் நிறுவனங்களைப் போல், சிரமமாக இலங்கை அரசு காரியாலயங்களிலிருந்தும் உலகிலுள்ள நீதிமன்றங்களிலிருந்தும் தமது இணையத்திலிருந்து உள்ளடக்கங்களை நீக்குமாறு கோரிக்கைகள் விடப்படுகின்றன. சில அவதூறு ஏற்படுத்துவதாகவும், சில உள்நாட்டு சட்டங்களை மீறுவதாக வும், சில பாலியல் மற்றும் வெறுப் புணர்ச்சியை வெளிப்படுத்து வதாகவும் உள்ள உள்ளடக்கங்கள் நீக்கப் படுகின்றன. நாட்டுக்கு நாடு இச்சட்ட விதிகள் வேறுபட்டு காணப்படுகின்றன.

கார்த்திகை 21, 2011

இன்று பட்ஜட்

ஜனாதிபதியால் சபையில் சமர்ப்பிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடும். சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற இரண்டாவது வரவு-செலவுத் திட்டமாக இவ் வரவு-செலவுத் திட்டம் அமைந்திருக்கின்றது. (மேலும்....)

கார்த்திகை 21, 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கில் திருப்பம்

பா.ஜனதா ஆட்சியில் உரிமம் வழங்கப்பட்ட செல்போன் நிறுவனங்களில் சி.பி.ஐ சோதனை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் காரணமாக மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை கண்டுபிடித்து அறிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. வழக்கப் பதிவு செய்து முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா, கனிமொழி எம்.பி, கலைஞர் ரி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உட்பட 14 பேரை கைது செய்து டில்லி திகார் ஜெயிலில் அடைத்துள்ளனர். ஸ்வான், யூனிடெக், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை டில்லி சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இதுவரை சி.பி.ஐ. இந்த வழக்கில் இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. சதி கூட்டு வசதி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக நம்பிக்கை துரோகம் செய்தல் என பல பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 21, 2011

ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கும் சாத்தியம்

மரண தண்டனைக் கைதியாக இருக்கும் ரிஸானா நபீக்குக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஊடாக நாம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று அந்நாட்டின் அல் - உத்தைபி கோத்திரத் தலைவர் முஹம்மத் பைஹான் சுரைம் அல் உத்தைபி உறுதியளித்துள்ளார். மரண தண்டனைக் கைதியாக இருக்கும் ரிஸானா நபீக்குக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் உயர் மட்டக் குழுவொன்றை அந்நாட்டுக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்தது. இக் குழுவினருடன் ரிஸானா நபீக்கின் பெற்றோரும் அழைத்துச் செல்லப்பட்டி ருந்தனர். இக் குழுவினர் ரிஸானா நபீக் வேலை செய்த வீட்டு உரிமையாளரையும், அவர்கள் கட்டுப்பட்டு இருக்கின்ற கோத்திர தலைவர் உள்ளிட்ட முக்கியஸ் தர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் அஹமத் ஜவாத் மேற்கொண்டார். (மேலும்....)

கார்த்திகை 20, 2011

சென்னை புழல் அகதிகள் முகாமில் பத்மநாபா,அன்னை இந்திரா காந்தி

பிறந்த நாள் நிகழ்வு

19.11.2011 அன்று அன்னை இந்திரா காந்தி,தோழர்பத்மநாபா ஆகியோரின் பிறந்தநாள் தினமாகும். இந்த தினத்தை புழல், அகதிகள் முகாமில் உள்ள தோழர்கள், வருடா வருடம் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த அடிப்படையில் இவ்வருடமும் இந்த நிகழ்வு நடைபெற்றது. முகாமில் உள்ளவர்கள் முகாம் முன்னாள் உள்ள தோழர்பத்மநாபா வாசிகசாலை முன் சரியாக காலை 8.00 மணிக்கு ஒன்று கூடினர். அங்கு வைக்கப்பட்டிருந்த இருவரது புகைப்டத்துக்கும் முகாம் மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இரு பெண்கள் அவர்களது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்தனர். முகாமில் உள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. எமது நாட்டை சீரழித்த புயங்கரவாதத்துக்கு எதிராக முகாமில் உள்ளவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.பத்மநாபா போன்ற தலைவர்கள் இன்று இருந்திருந்தால் இலங்கை தமிழ் மக்கள் படும் இன்னல்களுக்கு ஒரு நல்ல வழிழையைக் காட்டிருப்பார் என்ற ஆதங்கம்  இந்த நிகழ்வுக்குக்கு வந்தவர்களின் குசு,குசு பேச்சுக்களில் தென்பட்டது. குசு,குசு பேச்சுக்களில் மட்டுமல்ல உண்மையும் அதுவாகத்தான் தெரிகிறது. அவரால் ஏற்படுத்தப்பட்ட மாகாண அரசு என்பது, எமக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் அதை வைத்து நாம் தமிழ் மக்களின் உரிமைகளை படிப்படியாக பெற்றிருக்க முடியும், பழையதை நினைத்தும்,எழுதியும் இன்று நாம் ஆதங்கப்படுகிறோம்.

கார்த்திகை 20, 2011

தோழர் பத்மநாபா 

உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன், 

ஒடுக்கப்பட்டவர்களின் விடிவுக்கான அயராத உழைப்பாளி, 

எதிரிகளையும் மதித்த உயரிய மனிதாபிமானி,

இன மொழி மதங்களைக் கடந்த சர்வதேசப் புரட்சியாளன்

தோழர் நாபா அவர்களின் சிந்தனை வழியில் தமிழர்களின் தலைவர்கள் நடந்திருந்தால், அவரின்  செயன்முறை வழிகாட்டல்களை தமிழர் சமூகம் உரிய காலகட்டத்தில் புரிந்து ஏற்றிருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு இன்றைக்கு உலகில் எங்குமே உண்மையான நண்பர்கள் இல்லை என்று ஏற்பட்டிருக்கும் நிலை எற்பட்டிருக்கமாட்டாது. இன்னமும்; காலம் முற்றாகக் கடந்து விடவில்லை. தோழர் நாபா அவர்களின் அரசியற் சிந்தனைகளும் செயற்பாட்டு வழிமுறைகளும் இன்றைக்கும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விடிவுக்கு அவசியமானவைகளாகும். புலியிசத்தின் போலித்தனமான எச்சங்களால் இன்னமும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு செயற்திறன் கெட்டு சீரழிந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ்ச் சமதாயத்தில் முற்போக்கான சிந்தனைகளும் புரட்சிகரமான

அரசியலும் முன்னணிக்கு வரவேண்டுமானால், மக்களின்; உரிமைகள் நிலைநாட்டப்படவும் சீரான வாழ்வை நோக்கி முன்னேற்றங்கள் ஏற்படவும் வேண்டுமானால் அந்த அடிப்படைகளில் புதிய தலைமுறையினர் அணிதிரட்டப்பட்டு வழிநடத்தப்பட வேண்டுமானால் பிரபாகரன்களல்ல மீண்டும் பத்மநாபாக்களே உயிர்த்தெழ வேண்டும் என்பதே இந்த நாளில் எமது சத்தியமாகட்டும்.  (மேலும்....)

 

 

 

கார்த்திகை 20, 2011

A Sri Lankan Tamil who could have made a difference (Comment)

(By M.R. Narayan Swamy )

If the Tamil Tigers had not assassinated him, K. Pathmanabha would have turned 60 Saturday. A Sri Lankan Tamil who embraced militancy in the 1970s, Nabha - as he was known - did not have the glamour of Velupillai Prabhakaran. He did not kill at will. True, the man did later head a "People's Liberation Army". But it was a rag tag force more suited for a photo opportunity than to wage war against Sri Lanka. A humble man, he embraced Marxism like so many of his era. Nabha strongly believed that salvation for the Tamils lay in forging bonds with like-minded Sinhalese and building a new non-racist Sri Lanka. He did not advocate ethnic hatred. In the process, he lost the race among militants to the Liberation Tigers of Tamil Eelam (LTTE) that ballooned with tit-for-tat killings after the 1983 anti-Tamil violence. The Tamil community then sought revenge. Prabhakaran delivered them what they wanted. The likes of Pathmanabha took a backseat. To the LTTE, men like Pathmanabha were a hindrance to the fight for Tamil Eelam. One day, Prabhakaran sent hit men who shot dead Nabha and his close associates in Chennai in June 1990. (more.....)

கார்த்திகை 20, 2011

எல்லோருக்கு​ம் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை)

(வித்யாசாகர்​)

தேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயிர்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்று. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம். அதே குழந்தை மீண்டும் உயிர்பெற்று வந்தால் அந்த தாயின் நன்றியுணர்வு எப்படி கண்ணீரின் வழியே’ தான் விட்டுப்பெற்ற உயிரென பூக்குமென்பதை ஒரு புதிய கட்டத்திற்குள் காட்டுகிறார் ஏ.ஆர். முருகதாஸ். (மேலும்....)

கார்த்திகை 20, 2011

தமிழ் மக்களின் அரசியலுடன் இரண்டறக் கலந்த அமரர் சிவதாஸன்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவருமான எஸ். சிவதாசன் தனது 77 வது வயதில் இயற்கை எய்தினார். அவர் 50 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்டவர் என்பதுடன் மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற சிறந்த மொழி பெயர்ப்பாளருமாவார். தனது மாணவப் பருவத்திலேயே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பதுடன் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் போராட்டங்களில் பங்குபற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைக்கும் சென்றவர். (மேலும்....)

கார்த்திகை 20, 2011

தனது இருப்பை வலுப்படுத்துவதற்காகவே வெளிநாடுகளுக்கு கூட்டமைப்பு விஜயம் - பிரபா கணேசன்)

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையிலே அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம் முதலிய நாடுகளுக்கு விஜயம் செய்தது பற்றி என்ன கூற விரும்புகின்aர்கள்?

பதில்:- அவர்களது விஜயத்தின் முக்கிய நோக்கம் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்களைத் திருப்திப்படுத்துவதுதான். புலம்பெயர் மக்கள் வடபுலத்தின் வாக்குகள் யாருக்குக் கிடைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறார்கள். வட புலத்தில் தற்போது வாழும் மக்களின் உறவினர்களே வெளிநாட்டில் வாழ்கின்றார்கள். வடபுலத்தின் தேர்தல்களில் அளிக்கப்படும் வாக்குகள் வெளியில் வாழ்பவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. எனவே தான் புலம்பெயர் மக்களைத் திருப்திப்படுத்தித் தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்தவே அவர்கள் விஜயம் செய்திருக்கலாம். அவர்களது விஜயத்தின் போது செயலாளர் நாயகத்தையோ உதவிச் செயலாளர் நாயகத்தையோ அவர்களால் சந்திக்க முடியவில்லை. இந்த விஜயம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லை என்பதனையே இது காட்டுகின்றது. (மேலும்....)

கார்த்திகை 20, 2011

TNA யையும் தன்னையும் மோத விடுவதாக மனோ பாய்ச்சல்

சிங்கள ஊடகத்தில் கடுமையான விமர்சனம் ; தமிழில் கசிந்ததும் மூடி மறைத்து ஆட்சேபனை?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது புலம்பெயர் தமிழர்களிடம் ஈழத் தமிழர்களை விற்றுப் பிழைப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை புலம் பெயர் மக்களிடம் எடுத்துக் கூறப்போவதாக கூறிக்கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு டிக்கட் விற்பனை செய்து அதன் மூலம் கூட்டமைப்பு பணம் கறப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு என புலம்பெயர் தமிழர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினால் இவ்வாறு பெற்றுக் கொள் ளும் பணத்தை அவர்கள் தங்களின் பக்கற்களிலேயே போட்டுக் கொள்கின்றனர். அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் வெளிநாடு சென்றிருந்த போது அங்கு வாழும் தமிழர்கள் ஒவ் வொருவரிடமிருந்தும் 75 அமெரிக்க டாலர்களை அறவிட்டுக் கொண்டனர் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் என இணையமொன்று செய்தி வெளி யிட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 20, 2011

உழைப்புக்குச் சன்மானமாய் உதயமாகுமா மலையகத்தில் தனித்துவ பல்கலைக்கழகம்

மலையக மக்கள் மத்தியில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் மலையகத்திற்கென தனியான பல் கலைக்கழகம் அவசியமா? எனக் கேள்வி கேட்டு எதிர்க்கிறார்கள்! தனிப் பல்கலைக்கழகம் இப்போதைக்கு அவ சியம் இல்லை என்கிறார்கள். அப்படி அமைத்தால் எல்லோரையும் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி விடுவார்கள் என்றும் தனிப் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரும் பேராசிரியர்கள் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் பல்கலைக்கழகம் அமைத்துத் தொழில் தேட முயற்சிக்கிறார்கள் என்றும் அரசியல் வாதிகள் சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். (மேலும்....)

கார்த்திகை 20, 2011

பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறைக்கு சாத்தியமான உறுதியான தீர்வு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சட்ட, நிறைவேற்று, நீதி அதிகாரங்கள் கையளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிகாரங்கள் கையளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்ற விடயங்கள் பற்றி விரிவாக ஆராய்வதற்காக அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம், 6ம், 14ம், 15ம் திகதிகளில் கூடிப் பேசவுள்ளன. அடுத்த மாதம் அரசாங்கத்துடன் நடைபெறவுள்ள இப் பேச்சுவார்த்தையின் போது பொலிஸ் மற்றும் நில அதிகாரங்கள், அதிகாரத்தை கையளிப்பதற்கான அலகு, ஆளுநர்களின் அதிகாரங்கள், அரசாங்கத்திடம் பாரப்படுத்தப்படவுள்ள அதிகாரங்கள் என்பவை உட்பட பல விடயங்கள் பேசப்படவுள்ளதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

கார்த்திகை 20, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக் கமும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று 20ம் திகதி ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள் ளதாக ஆணைக்குழுவின் ஊடக அதிகாரி லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக நிறைவுக்கு வரும் நிலையில் 20ம் திகதி அது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு 2010 மே மாதம் 15ம் திகதி நியமிக்கப்பட்டது. சுமார் 11 மாதங்களாகச் செயற்பட்ட இவ்வாணைக்குழு 27 பொது சந்திப் புக்களையும் சமார் 40 இடங்களில் 12 வெளிக்கள விஜயத்திலும் ஈடுபட்டதோடு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதி மக்களிடமும் சாட்சியங்களைப் பெற்றிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் நேரடி சாட்சியம் அளித்ததோடு 5400 கடிதங்கள் மூலமான சாட்சியங்களும் ஆணைக்குழு வுக்குக் கிடைக்கப்பெற்றன.

கார்த்திகை 20, 2011

சேவை ஆரம்பித்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டன

ஆறு மாதங்கள் கப்பல் ஓடினால் தூக்கில் தொங்குவேன் எனச் சவால் விட்ட சீமான்?

கொழும்பிற்கும் தூத்துக்குடிக்குமிடையில் ஆரம்பிக்கப்படும் கப்பல் சேவை ஆறு மாதங்கள் தொடருமானால் தான் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்குமரம் கட்டி அதில் தொங்கித் தற்கொலை செய்வேன் என நாம் தமிழர் அமைப்பின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமான் இந்திய ஊடகங்களில் சவால் விட்டிருந்தார். இன்று அக்கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு சரியாக ஆறு மாதங்கள் கடந்து விட்டது. இந்நிலையில் சீமான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவாரா என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சவால்கள் விடுவதில் வீரரான சீமான் இதுபோன்று பல வாய்ச்சவடாக்களை முன்ன ரும் விட்டுள்ளார். எனினும் எதனையும் அவர் நிறைவேற்றியதில்லை. அதனாலேயே அவருக்கு இவ்விடயத்தை குறும்புக்காக ஞாபகப்படுத்தினோம் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறந்தேனும் ஒரு உயிரைக் காவு கொள்ள ஒருபோதும் நாம் உடந்தையாக இருக்கமாட்டோம் என்றும் இனிமேலாவது சவால் விடும்போது சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமானின் ஆறு மாதத்திற்கு முன்னரான இச் சவால் விட்ட செய்தியை இலங்கையில் தாமே முன்னணிப் பத்திரிகைகள் எனத் தமக்குத் தாமே மகுடம் சூடிக்கொள்ளும் பத்திரிகைகள் சிலவும் வீரவசனத் தலைப்பிட்டுப் பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 19, 2011

மனிதநேயத்தின் மறுபிறவி தோழர் க.பத்மநாபாஅவனியில் அவதரித்து அறுபது ஆண்டுகள்

(19.11.1951--19.11.2011)

மக்களின் அவலம் கண்டு-தன்

மடியிலிருந்து தந்தாள்-மக்களுக்காக

மாசற்ற மாணிக்கம் தனை-அவர்தான்

மரணத்தை வென்ற மகாத்மா

மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

(மேலும்....)

கார்த்திகை 19, 2011

மக்களை மட்டும் நேசித்த மக்கள் போராளி தோழர் பத்மநாபா

(சாந்தன்)

இன்று தோழர் பத்மநாபாவின் அறுபதாவது பிறந்த தினம். தோழர் பத்மநாபா 1951  ம்  ஆண்டு நவம்பர் மாதம் 19  ம் திகதி பிறந்தார், அவர் பாசிச்டுக்களினால் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு வயது 39 மாத்திரமே. அவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் அவர் சந்தித்த மனிதர்களிடம் அவர் ஏற்படுத்திய தாக்கம், எமது மக்களின் நியாயமான, உரிமைகளுக்காக தீர்க்கதரிசனத்துடன் அவர் வகுத்துக்கொண்ட அணுகுமுறைகள், வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது படிப்படியாக வெளிச்சத்துக்குவந்து கொண்டிருக்கின்றது. 1950 களில் பிறந்தவர்களுக்கு தெரியும் அன்றைய சூழ்நிலை எவ்வாறு இருந்ததென்பது.  தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் குறிப்பாக 60 களில் சத்தியாகிரகப்போராட்டம் பலனற்றுப்போயிருந்தமையும் 70  பதுகளில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு  மரணங்கள்    ஏற்படுத்திய தாக்கம்,  கல்வியில் தரப்படுத்தும் முறை ஏட்படுத்தப்பட்டமை, இவ்வாறான தொடர் சம்பவங்களும் ஒரு விதமான எழுச்சியை அன்றைய இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. (மேலும்....)

கார்த்திகை 19, 2011

கடாபியின் மகன் சயிப் கைது

லிபிய ஜனாதிபதி கடாபியின் மகன் சயிப் அப் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தகவலை அந்நாட்டு இடைக்கால அரசின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். லிபியாவின் தெற்கு பகுதியில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடாபியின் மகன்களில் அதிக அதிகாரம் கொண்ட ஒருவராகக் கருதப்பட்ட சயிப் லிபியாவை விட்டுத் தப்பிச் சென்றிருந்ததாக ஆரம்பத்தில் நம்பப்பட்டது. இவர் சர்வதேச நீதிமன்றத்தில் சரணடையலாம் எனவும் ஆரம்பத்தில் எதிர்ப்பார்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 19, 2011

ஆறு புதிய ரயில் பாதைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை

புதிய ரயில் பாதைகள் அமைக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதற்கு வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலும், பாணந்துறையிலிருந்து ஹொரணை வரையிலும், மாகோவிலிருந்து திருகோணமலை வரையிலும், மதவாச்சியிலிருந்து திருகோணமலை வரையிலும் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரி வீ. ஆரியரத்ன தெரிவித்தார். குருநாகலிலிருந்து ஹபரண ஊடாக தம்புள்ளவரைக்கும், வெல்லவாயவிலிருந்து பிபிலை ஊடாக பதுளை வரைக்கும் மேலும் இரு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த ரயில்வே அதிகாரி, போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம, பிரதியமைச்சர் றோஹண குமார திசாநாயக்க ஆகியோரின் ஆலோசனைகளின் பேரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கார்த்திகை 19, 2011

முருகன் நிரபராதியா?

கேள்விகள் எழுப்பும் காங்கிரஸ் பிரமுகர்

ஜூ.வி.யில் வெளிவந்த முருகனின் தொடருக்கு எதிர்வினையாக வந்த கடிதங்களில் ஒன்று இது! 

அன்னை இந்திரா, ஐயா மூப்பனார் மக்கள் நல்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.குப்பு சாமி (செய்யார்) நமக்கு எழுதி இருக்கிறார்...''உலகத்தை உலுக்கும் வகையில் இந்திய மண்ணில் நிகழ்ந்த படுகொலைகள் மூன்று. முறையே மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி. முதன்மை மரணங்கள் இரண்டும் தனி மனிதனைச் சார்ந்தவை. ராஜீவ் காந்தியின் படுகொலை மட்டும் மிகவும் பயங்கரமானது. அதில் இறந்தவர் களின் எண்ணிக்கை மட்டும் 18. அதில் 10-க்கும் மேற்பட்டோர் இந்தியப் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள்! (மேலும்....)

கார்த்திகை 19, 2011

ஒரு புதிய வரலாற்றின் துவக்கம்! 

(பேரா. பிரபாத் பட்நாயக்)

“வால்ஸ்டிரீட்டை ஆக்கிரமிப்போம்” எனும் மாபெரும் போராட்டம், அமெரிக்காவின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கி னருடைய ஆதரவோடு நடந்துவருகிறது. சர்வதேச அளவில் இந்த இயக்கம் ஏற்படுத்தி யுள்ள தாக்கம் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா விலேயே ஏறத்தாழ 100 நகரங்களிலும், உல கின் பிற பகுதிகளில் உள்ள எண்ணற்ற நகரங்களிலும், இந்த இயக்கம் அந்தந்த நகரங் களின் பொருளாதார மற்றும் வாழ்க்கைத் தரத் திற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு பரவியுள்ளது. தனக்கென ஒரு சொந்த வடிவினைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த இயக்கத்தின் முக்கியத் துவம் என்பது, வெறுமனே எத்தனை பேர் இந்த இயக்கத்தின் கீழ் அணி திரண்டு வரு கின்றனர் என்பதிலோ அல்லது எந்தச் சூழ லில் இருந்து அல்லது பின்னணியில் இருந்து வந்துள்ளனர் என்பதிலோ இல்லை. மாறாக, சமீபத்திய மக்கள் எழுச்சிகளில் இருந்து இது மாறுபட்டு நிற்பதற்கு மூன்று முக்கியமான, தெளிவான காரணங்கள் உள் ளன. இந்த காரணங்களினாலேயே இந்த இயக்கம், வரலாற்று ரீதியாக முற்றிலும் ஒரு புதிய எதிர்ப்பியக்கமாக, அறவழி எதிர்ப்பின் ஒரு புதிய துவக்கமாக உள்ளது. (மேலும்....)

கார்த்திகை 19, 2011

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிவரும் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஹக்கீம் ஆராய்வு

இருபது ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி வரும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், யாழ் மாவட்ட செயலாளர் (அரசாங்க அதிபர்) திருமதி. இமெல்டா சுகுமாருடன் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் அவரது அலுவலகத்தில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். சுமுகநிலை ஏற்பட்டுள்ளதையடுத்து முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்த முஸ்லிம்கள் கட்டம் கட்டமாக அங்கு திரும்பி மீள்குடியேறி வருவதாகவும், அவர்கள் அநேக பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும், அவற்றை நிவர்த்தி செய்ய அரசாங்க மட்டத்தில் தேவையான வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் ஹக்கீம் மாவட்ட செயலாளரிடம் கேட்டுக் கொண்டார். (மேலும்....)
 

கார்த்திகை 19, 2011

Desperate LTTE diehards go for the young ones

(By Jacinta Cruz in Ottawa)

Toronto’s Tamil media organizations largely controlled by the diehards of the LTTE are going all out to give the impression that there is widespread support for them among the Tamil Diaspora.Those who have followed the news and announcements of the LTTE-controlled CMR (Canadian Multicultural Radio) and TVI would have gathered that for the next ten days or so there will be continuous meetings and celebrations marking the LTTE Maveerar Day (Heroes Day) in almost all of the universities in and around Ottawa and Toronto; also Waterloo and Windsor too. (more....)

கார்த்திகை 19, 2011

மரணத்தை வென்ற மனிதநேயம்

தோழர் பத்மநாபா நினைவு மலரிலிருந்து...

பத்மநாபா பற்றி தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள்...

தா. பாண்டியன், மாநில செயலாளர். இந்திய ஐக்கிய பொதுவுடமைக் கட்சி

இந்தியாவை நம்பிய அந்த நம்பிக்கைக்குரிய நண்பனை, இந்திய மண்ணிலேயே இந்திய எதிரிகள் கொன்றனர். அவர் சிந்திய இரத்தம் காலப்போக்கில் பலரது கண்களைத் திறக்கும். நட்புக்காக, நீதிக்காக, நிரபராதியாக நின்று உயிர்நீத்த தோழர் பத்மநாபாவின் நினைவு எங்கள் நெஞ்சில் என்றும் நின்று நிலைக்கும். மரணத்திற்குப் பின் வெற்றியைப் பெற இருக்கிறார் பத்மநாபா. இது நடந்தேறும். அவருக்கு அன்றைக்கு நான் மீண்டும் மலர் அஞ்சலி செய்வேன்.

சோ. இராமசாமி, ஆசிரியர், துக்ளக்.

விடுதலைப் புலிகளால் கொல்லப்படுகிறவர்கள் பத்மநாபா ஆனாலும் சரி, அமிர்தலிங்கம் ஆனாலும் சரி, அப்பாவித் தமிழன் ஆனாலும் சரி, அவர்களெல்லாம் தமிழர்களே அல்ல. விடுதலைப் புலிகள் மட்டும் தான் அசல் தமிழர்கள். அவர்களை ஆதரிப்பவர்கள் அப்போதைக்கப்போது தமிழர்கள். இப்படி ஒரு சூழ்நிலை தமிழக அரசின் ஆதரவோடு இங்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. (மேலும்....)

கார்த்திகை 19, 2011

நிதி சீர்திருத்தம் கோரி நியூயோர்க்கில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

நிதி சீர்திருத்தம் கோரி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 300க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதோடு 5 பொலிஸாருக்கு காயம் ஏற்பட்டது. நியூயோர்க் நகரில் நேற்று முன்தினம் கூடிய ஆயிரக்கணக்கான வோல்தெரு ஆக்கிரமிப்பு போராட்டக்காரர்கள் நகர் முழுவதும் ஊர்வலமாக சென்றனர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிளொயிட் சதுக்கத்தில் இருந்து ஆரம்பித்து லோவ மன்ஹட்டன் ஊடாக பிரூக்லி பாலம் வரை சென்றனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 300க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப் பட்டனர். 5 பொலிஸார் காயமடைந்ததாக நகர மேயர் மைக்கல் பிளும்பேர் குறிப்பிட்டார். அமெரிக்காவில் நிதி சீர்திருத்தம் கோரி வோல் தெரு ஆக்கிரமிப்பு போராட்டம் கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 19, 2011

பெண் உரிமைக்கு ஆண் வர்க்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்

சர்வதேச ஆண்கள் தினம் இன்று உலகெங்கிலும் உள்ள நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஆண் கள் அளித்து வரும் பங்களிப்பு, அவர்கள் செய்யும் தியாகங் களை பெரும்பாலும் எவரும் சரியாக புரிந்து கொள்வதில்லை. ஆணு க்கு ஒரு பெண் துணை என்பதற்கு அமைய, ஆண்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு சேவையிலும் பெண்களுக்கு சம அந்தஸ்தை கொடுத்து கல்வித்துறை, பொருளாதாரம், சமூகப் பணி மற்றும் தொழி ல்நுட்ப முன்னேற்றங்களுக்காக கடுமையாக உழைத்து அவர்கள் வாழும் சமூகத்தை முதலிலும் பின்னர் தேசத்தையும் அடுத்து அந் நாடு அமைந்துள்ள பிராந்தியத்தையும் இறுதியில் உலகத்தையும் மேம் படுத்தக்கூடிய வகையில் தனது பணிகளை ஒரு ஆண் மகன் செய் கின்றான். (மேலும்....)

கார்த்திகை 19, 2011

இந்தியா, சீனா எங்கள் மீது தாக்குதல் நடத்தலாம்  - அமெரிக்கா

இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லீயான் பென்னடா கருத்து தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனம் நடத்திய பொது நிகழ்ச்சியில் பேசிய அவர் அமெரிக்காவிற்கு வளரும் நாடுகளிலிருந்து போர் அபாயம் ஏற்பட்டு ள்ளதாக கூறினார். மேலும், அமரிக்காவிடம் பசுபிக் பகுதியில் போதுமான அளவுக்கு பாதுகாப்புகளும், ஏவுகணைகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுரைப் படுத்தப் பட்டுள்ளதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சீனாவின் இராணுவப் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக கூறினார். மேலும் சீனாவிடம் தொலைவிலுள்ள இலக்குகளை விரைவில் தாக்க கூடிய ஏவுகணைகள் உள்ளதாக கூறினார்.

கார்த்திகை 19, 2011

பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மையை உய்த்தறிய நடைமுறை உலகம் சிறந்த புத்தகம்

நாம் வாழும் இப்பூமி திடீரென 2012 டிசம்பர் 21ல் முடிவுக்கு வரப்போகின்றதா? ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விழிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. மாயன், இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம். அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது. ஆதி எகிப்திய மக்களால் கூட 2012 ஓர் பாரிய மாற்றத்திற்கான ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. புவியின் துருவப்பகுதிகள் இடம்மாறுவதனால் புவியில் உலகளாவிய பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டும், வெளிக்கிழம்பும் எரிமலை புகை மற்றும் புழுதிகளால் ஏறக்குறைய 40 வருடங்களுக்கு சூரியனை பார்ப்பதே இயலாது போகும் என்கின்றனர் மாயன் நாட்காட்டியை நம் புகின்ற இன்னோர் குழுவினர். (மேலும்....)

கார்த்திகை 19, 2011

அழிந்து வரும் மூலிகையினங்கள்

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் அரிய வகை மூலிகையினங்கள் வளர்ந்து வருகின்றன. அவை முறையற்ற வகையில் கையாளப்படுவதால் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள் ளது என்று நிபுணர்கள் அச் சம் தெரிவித்தனர். வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டு நிதிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத் தரங்கில் இப்பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட் டது. அரிய வகை மூலிகைக ளிலிருந்து மருந்துப் பொருட் களைத் தயாரிக்கும் பல மருந்து நிறுவனங்கள் மூலி கைகளைச் சேகரிப்பதற் காக உடலுழைப்புத் தொழி லாளிகளைப் பயன்படுத்தி வருகின்றன. அவர்கள் அதி கக் கூலியைப் பெறும் எண் ணத்தில் அதிகமான மூலி கைகளைப் பறித்து விடுவ தால் இவ்வகை மூலிகை யினங்கள் அழிவின் விளிம் பில் உள்ளன. மக்களின் அறியாமை காரணமாகவும் செயல் திட்டமற்ற வகையில் அவற்றைப் பயன்படுத்து வதாலும் பலவித முக்கிய மான மூலிகைகள் அழிந்து விட்டன. (மேலும்....)

கார்த்திகை 19, 2011

முதலாளித்துவ தீய சக்திகள் உலாவும் இடம்-பங்குச்சந்தை குறித்து அமெரிக்க மக்கள் விமர்சனம்

ஜூக்கோட்டி பூங்காவிலிருந்து வலுக்கட்டாயமாக போராட்டக்கா ரர்களை வெளியேற்றிய சம்பவம், அமெரிக்க மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் மூன்றாவது மாதம் துவங்கியதை அமெரிக்கா முழுவதும் போராட்டக்காரர்கள் அனுசரித்துள்ளனர். ஜூக்கோட்டி பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அதற்கு அருகில்தான் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த போராட்டக்குழுவினர் திரண்டனர். வால் ஸ்டிரீட்டை நோக்கி ஊர்வலமாகச் சென்ற மக்கள், வால் ஸ்டிரீட்டை இழுத்து மூடு மற்றும் நாங்கள்தான் 99 விழுக்காட்டினர் என்ற முழக்கங்களை எழுப்பினர். முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்வதைச் சகித்துக் கொள்ள முடியாத அமெரிக்கக் காவல்துறை, ஆயிரக்கணக்கான காவல்துறையினரைக் குவித்திருந்தது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் இரும்புத் தடுப்புகள் போன்றவற்றைக் கொண்டு சாலைகளை மறித்து, ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்தவும் காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது. (மேலும்....)

கார்த்திகை 19, 2011

வெனிசுலாவில் அனைவருக்கும் வீடு திட்டம்: ஏழு மாதங்களில் லட்சம் வீடுகள்

நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியிருக்க வீடு என்ற பெரும் திட்டத்தை வெனிசுலாவின் ஹியூகோ சாவேஸ் தலைமையிலான இடதுசாரி அரசு உருவாக்கியது. அதை நடைமுறைப்படுத்தும் வகையில் கடந்த ஏழு மாதங்களில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டுவிட்டது. இவற்றில் 62 விழுக்காடு வீடுகள் பொதுத்துறை மூலமாகவும், 38 விழுக்காடு தனியார் துறை மூலமாகவும் கட்டப்பட்டுள்ளன. வெனிசுலா வரலாற்றில் இத்தகைய பணி இவ்வளவு விரைவில் நடைபெற்றதில்லை. ஒரே ஆண்டில் ஏராளமான மக்கள் சொந்த வீடுகளைப் பெறவிருக்கிறார்கள். வெனிசுலாவில் குடியிருக்க வீடின்மை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண 2011 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளனர். 2012ல் இரண்டு லட்சம், 2013ல் மூன்று லட்சம் என்று இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பது அரசின் திட்டமாகும். ஏழு ஆண்டுகளில் இருபது லட்சம் வீடுகளைக் கட்டுவது என்று அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது.

கார்த்திகை 18, 2011

சாதனையாளரான ஜனாதிபதி அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்

சாதனை வீரரும் மக்கள் தலைவருமான மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஓரா ண்டு நிறைவு விழாவும் ஜனாதிபதி அவர்களின் பிறந்த தின மும் இன்று நாட்டு மக்களால் நன்றி உணர்வுடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதி அவர்கள் 2005ம் ஆண்டில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட போது அவரை இரண்டு பாரிய பிரச்சினைகள் எதிர்நோக் கியிருந்தன. ஒன்று சுனாமியினால் ஏற்பட்ட மனித மற்றும் கட்டிடங் களுக்கும், தேசிய பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட அழிவு. இரண்டா வதாக எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதம். இனப்பிரச்சினைக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துவதற்கான சகல அரசியல் கட்சிகளும் அங்கத்துவம் வகிக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் இதற்கான எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் முடிவை தான் நன்கு பரிசீலனை க்கு எடுத்துக் கொண்ட பின்னர் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந் தரத் தீர்வை ஏற்படுத்துவேன் என்று ஜனாதிபதி அவர்கள் உறுதிய ளித்துள்ளார். (மேலும்....)

கார்த்திகை 18, 2011

வெள்ளைக்கொடி விவகாரம்

சரத் பொன்சேகாவிற்கு மூன்று வருட சிறை

வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதிகள் குழு அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தீபாலி விஜயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை வாசித்தார். வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகை தந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்றது. மேற்படி வெள்ளைக்கொடி வழக்கினால் நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 18, 2011

இலங்கை - இந்திய உடன்படிக்கை

காங்கேசன்துறை - பளை ரயில் பாதை புனரமைப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

காங்கேசன்துறையிலிருந்து பளை வரையான சுமார் 56 கிலோமீற்றர் தூரம் ரயில் பாதை புனரமைப்பு செய்வதற்கான இலங்கை - இந்திய உடன்படிக்கையொன்று சைச்சாத் திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையை இலங்கை ரயில்வே பொதுமுகாமையாளர் பி.ஏ.பி. ஆரியரத்ன இந்தியாவின் ஐ.ஆர்.சி.ஓ.என். நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மோகன் திவாரி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். இதன்போது அமைச்சர் குமார் வெல்கம, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தம்மிக்க பெரேரா இந்தியாவின் ரயில்வே அமைச்சின் சார்பில் ஏ.பி. மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர். 149.30 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள இப்பாதை புனரமைப்புப் பணிகள் இரண்டு வருடத்திற்குள் பூர்த்தியடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்த்திகை 18, 2011

ஆசியாவில் தொடர்ந்து படைகளை நிறுத்திவைக்க அமெரிக்கா திட்டம்

அமெரிக்க படைகள் தொடர்ந்து ஆசிய பசிபிக் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா சென்றுள்ள ஒபாமா அங்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அமெரிக்கா பசிபிக் பகுதிகளில் பலம் வாய்ந்த நாடாக உள்ளது. ஆசிய பசிபிக் பகுதிகளில் அமெரிக்க படைகளின் இருப்பும், செயல்பாடும் தமது நாட்டின் முன்னுரிமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆஸி பிரதமர் ஜூலியா கில்லார்டை நேற்று முன்தினம் சந்தித்த ஒபாமா அவருடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதன்படி அவுஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 2500 வீரர்கள், 250 போர்க்கப்பல்களில் 6 மாதங்களுக்கு முகாமிட்டிருப்பார்கள் இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து அமெரிக்க படைகள் இருக்கும் என்ற அறிவிப்பு சீனாவுக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கப்படுகிறது.

கார்த்திகை 18, 2011

A Letter from Canada

(Richards Karunairajan)

The Wanni in particular has been utterly devastated and the people there are badly in need of help. LTTE funds have bought mansions in Markham, built malls and markets, enabled holidays in splendour, oceanic cruises, pleasure trips to Caribbean hot spots and showy family functions at which thousands of dollars are excessively expended but the people of the Wanni still have to contend with tarpaulins. Yet this very Diaspora, not even a generation ago, were mere refugees. No one should be allowed to get away with these funds that belong to the people and no one should be allowed to appropriate them for their personal benefit. Why are the Canadian Tamils not raising this question? Are these people who hold these funds not rogues? They used the excuse of a political issue in Sri Lankan to amass wealth for themselves. (more...)

கார்த்திகை 18, 2011

பிரிட்டனில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும், ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர், வேலையில்லாத் திண்டாட்டப் பட்டியலில் சேர்ந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக பிரிட்டனில் வேலையின்மை 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் கடந்த செப்டெம்பர் மாதத்தோடு முடிந்த மூன்றாவது காலாண்டில் வேலையில்லாத திண்டாட்டம் 26 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 19 ஆண்டுகளைப் பார்க்கும்போது மிக அதிகம். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் (செப்டம்பரோடு முடிந்த காலாண்டில்) வேலை யில்லாதோர் பட்டியலில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். வேலை தேடுவோருக்கான உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கையில் 5,300 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து தற்போது 16 லட்சம் பேர் உதவித் தொகை பெறுகின்றனர். வேலையில்லாதோரில் 16 முதல் 24 வயது வரையில் உள்ளவர்கள் மட்டும் 10 இலட்சத்து 20 ஆயிரம் பேர், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வேலையில் இருந்து வெளியேறியவர்கள் 67 ஆயிரம் பேர்.

கார்த்திகை 18, 2011

கடல்சார் விவசாயமும் விரிவாக்க முயற்சிகளும்

(முனைவர் தி.ராஜ்பிரவீன்)

“இரண்டாம் பசுமைப் புரட்சிக்கான” தளமாக கடல்சார் வேளாண் தொழில் நுட்பங்களை புதிய வேளாண் ஆராய்ச்சி கள் மற்றும் விரிவாக்க முயற்சிகள் வாயி லாக நாம் மேற்கொள்ளும் போது முந் தைய பசுமைப் புரட்சியின் பொருளா தாரப் பயன்களை பெறாத ஏழை, எளிய சிறு மற்றும் குறு விவசாயிகள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படச் செய்ய முடியும். தற்போதைய வேளாண் வல்லுனர்களின் சிந்தனை மாற்றம் மற்றும் கடலோரத் தமிழகத்தை வேகமாக விலைக்கு வாங்கி வரும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் இந்திய பெரு முதலாளிக ளின் நிலவேட்கையை அடங்கச் செய்யும் உறுதியான வாழ்வுரி மைப் போராட்டங்கள் ஆகியவையே இரண்டாம் பசு மைப் புரட்சியின் தளமாக கடல்சார் விவசாயத்தை உருவாக்கி நீடித்த தமிழக வளர்ச்சிக்கு, வேளாண் உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகை செய்யும். இதற்கு வேண்டிய விரிவாக்கப் பணிகளை திறம்பட மேற்க்கொள்ள வேண்டியது அவசியம் என்பதில் சந் தேகம் இல்லை. (மேலும்....)

கார்த்திகை 18, 2011

West is not Sri Lanka’s enemy Prof. Rohan Gunaratna

Addressing a distinguish crowd at the British Scholars Association on Wednesday(16) renown international terrorism Prof. Rohan Gunaratna expert told that Sri Lanka needs to address western world and the west is not an innate enemy of Sri Lanka. He also told that LTTE remnants in West are engaged in criminal activities such as credit card fraud while another section is heading a misinformation campaign against Sri Lankan state. Prof. Gunaratna warned that several LTTE front organizations masquerading as human rights group are trying to influence and mislead prestige human rights groups as well.  He stressed the importance of a systematic government information campaign to engage with human rights and NGO community and to give the true picture of Sri lankan situation at the present.

கார்த்திகை 18, 2011

சிரியா

அடுத்த சதிவேலையைத் துவக்கியது அமெரிக்கா?

சிரிய அரசு எதிர்ப்பாளர்கள் நடத் தியுள்ள தாக்குதல்களில் ராணுவத் தைச் சேர்ந்த எட்டு பேர் கொல்லப் பட்டுள்ளதால் லிபியாவுக்கு அடுத்த படியாக சிரியாவில் தனது சதிவேலை யை அமெரிக்கா துவங்கிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஆதரவு பொம்மை அர சுகள் அதிகமாக இடம் பெற்றுள்ள அரபு லீக்கிலிருந்து சிரியாவைத் தற்கா லிக நீக்கம் செய்து வைத்த நிகழ்வைத் தொடர்ந்து, ஆயுதந்தாங்கிய சிரிய அரசு எதிர்ப்பாளர்கள் தங்கள் தாக்கு தல்களைத் துவக்கியுள்ளனர். ராணுவத் தளங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த எட்டுபேர் இதில் கொல்லப் பட்டுள்ளனர்.  (மேலும்....)

கார்த்திகை 18, 2011

THINK RATIONALLY; ACT WISELY…………………….

(By a Sri Lankan Doctor)

About Tamils

........... Royal college has Tamil medium branch under an asst. principal, DS has Tamil medium branch under an asst. principal. So many other leading Sinhala government schools in the country have Tamil medium and they share equal opportunities. Private schools like St. Thomas ‘, Trinity etc have quite a large number of Tamil students. How many Tamil major schools have Sinhala medium? None !!!.........

About Sinhalese

How many Sinhala medium schools are there in Northern Sri Lanka ? (None). How many Sinhala employees are in Northern Sri Lankan offices and industries? (None). How many temples are there in Northern Sri Lanka? One, at Nagadeepa (left over out of thousands which were in the past). How many Sinhala students are studying in Northern, Eastern and South- East universities? None!!! (Source: University statistics 2009) (more....)

கார்த்திகை 18, 2011

ஆசியன் மாநாடு துவங்கியது

ஆசியன் என்றழைக்கப் படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் 19வது மாநாடு இந்தோனேசிய நகர் பாலியில் வியாழனன்று துவங்கியது. புருனெய், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் வியட் நாம் ஆகிய பத்து நாடுகள் இந்த ஆசியன் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளின் தலைவர் கள் பங்கேற்கும் ஆசியன் மாநாட்டில் சர்வதேச சமூ கத்தில் ஆசியன் சமூகம் என் பது கருப்பொருளாகக் கொண்டு விவாதிக்கப்பட வுள்ளது. இந்தோனேசியா வின் ஜனாதிபதி சுசிலோ பாம்பங் யுதோயோனோ மாநாட்டிற்குத் தலைமை வகிக்கிறார்.மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றிய அவர், 2015 ஆம் ஆண்டுக்குள் ஆசியன் அமைப்பு நாடுக ளுக்கு மத்தியில் முழுமை யான ஒத்துழைப்பை உரு வாக்க வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும். உலகம் பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பொருளாதார நெருக்கடி என்பது புதிய ஆபத்தாக உருவாகியிருக் கிறது. உலகப் பொருளாதா ரம் ஒரு நிலையற்ற தன்மை யைச் சந்தித்து வருகிறது. அதோடு, உணவுப்பாது காப்பு, தண்ணீர்ப் பாது காப்பு, எரிசக்தி விவகாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய வற்றிலும் நிலையில்லாத தன்மைதான் உள்ளது.  (மேலும்....)

கார்த்திகை 18, 2011

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்தைக் கண்டுபிடித்துள் ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள் ளனர். இந்த மருந்து இன்னும் சில கொடிய வியாதிகளைக் குணப்படுத்த வல்லதாம். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் அடங்கிய குழு புற்றுநோய் கலங்களை அழிக்க மருந்து கண்டுபிடித்துள்ளனர். கேஜி 5 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்து புற்றுநோய் கலங்களை முற்றிலும் அழித்துவிடும் திறன் கொண்டது. மேலும் கட்டி ஏற்படுத்தும் கலங்களை பெருக விடாமல் அழிக்கும் என்று ‘நேச்சு ரல் மெடிசின்’ என்ற பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மாத்திரை வடிவில் வரவிருக்கும் இந்த மருந்து இன்னும் 5 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த மருந்தால் மிகக் குறைந்த பின் விளைவுகள் தான் ஏற்படுமாம். இதுகுறித்து மூத்த விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் சிரேஷ் கூறியதாவது, இந்த மருந்து புற்றுநோய் கலங்களை பெருக விடாது. அதனால் அந்த கலங்கள் தற்கொலை செய்துகொள்ளும். கணையம், மார்பகம் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய்களை குணப்படுத்தும். இந்த மருந்து சில கொடிய கட்டிகளையும் அழிக்கும் திறன் கொண்டது என்றார்.

கார்த்திகை 18, 2011

குவைட் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்த அரச எதிர்ப்பாளர்கள்

அரச எதிர்ப்பாளர்கள் குவைட் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். குவைட் நாட்டின் எதிர்க் கட்சி உறுப்பினர்கள், அரச எதிர்ப்பாளர்கள் என நூற்றுக் கணக்கானோர் நேற்று முன்தினம் குவைட் பாராளுமன்றத்திற்குள், பலவந்தமாக நுழைந்து பிரதமர் ஷெய்க் நாஸ்ஸர் அல் முஹம்மத் அல் சபாவை பதவி விலகுமாறு கோரி கோஷ மெழுப்பினர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு குவைட் தேசிய கீதத்தை இசைத்த ஆர்ப்பாட்டக்காரர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கு முன்னர் பிரதமர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி பிரயோகம் மேற்கொண்டதில் 5 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்தனர். குவைட்டின் ஆட்சி மாற்றம் கோரி எதிர்ப்பாளர்கள் கடந்த மூன்று மாதங்களு க்கும் மேலாக ஆர்ப் பாட்டம் நடத்தி வருகின்றனர். எனி னும் அங்கு பொது மக்களுக்கு அரசு பல் வேறு நலத்திட்டங் களை அறிமுகப்படு த்தியுள்ள நிலையில் எகிப்து, துனீஷியா போல் மக்கள் ஆர்ப்பாட்டம் சூடுபிடிக்க வில்லை.

கார்த்திகை 18, 2011

இந்திய விஞ்ஞானிகள் முயற்சி

பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல்

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பெட்ரோலிய பொருட்களை தயாரிக்க இந்திய விஞ்ஞானிகள் கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர். டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலியம் இன்ஸ்டிடியூட் இயக்குநர் மதுக்கர் ஓம்காரநாத் கார்க்- தலைமையில் விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது. பிளாஸ்டிக்கை இரசாயன ஊக்கிகள் மூலம் பெட்ரோல், காஸ் என மாற்ற முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீணாகும் பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் மற்றும் காஸ் அல்லது டீசல் மற்றும் காஸ் என தயாரிக்கலாம். இந்த தயாரிப்பு பணி, சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். இதுபற்றி ஆய்வு குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானி எஸ்.கே. சர்மா கூறுகையில், ‘நமது விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு மிகப் பெரிய சாதனை’ என்றார். இந்த திட்டத்துக்கு இந்திய இயற்கை எரிவாயு கழகம் உதவ உள்ளது. உலகம் முழுவதும் இப்போது ஆண்டுக்கு 300 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரிக்கிறது. பிளாஸ்டிக்கில் உள்ள பாலியோலெபினிக், பொலி எத்திலின் ஆகியவற்றின் மூலம் பெட்ரோல், டீசல், காஸ் தயாரிக்கப்படும். ஒரு கிலோ மூலப் பொருளில் 700 மி.லி. பெட்ரோல் மற்றும் காஸ் தயாரிக்க முடியும் அல்லது 850 மி.லி. டீசல் மற்றும் காஸ் தயாரிக்க முடியும்.

கார்த்திகை 18, 2011

பல்லவர் கால இரகசிய அறை உடைப்பு

கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்

பல்லவர் கால கோயிலிலுள்ள இரகசிய அறையை இடித்ததில் கல், மண் குவியல் மட்டுமே இருந்தன. அவற்றை அகற்றி பார்த்ததில், இரகசிய அறை வெற்றிடமாக காட்சியளித்ததால், கூடி இருந்தவர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும் மிடிப்பூண்டி கிராமத்தில், ஆயிரம் ஆண்டு களுக்கு முன், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட தெய்வநாயகி உடனுறை சந்திர சேகரேஸ்வரர் கோவில் உள்ளது. அக்கோயி லில், வள்ளி சுப்பிரமணிய தெய்வானை சன்னிதிக்கும், அதை அடுத்துள்ள தெய்வநாயகி அம்மன் சன்னிதிக்கும் இடையே, 5 அடி அகலம், 12 அடி நீளத்தில் இரகசிய அறை இருப்பதை, இந்து அறநிலையத் துறையினர் கண்டறிந்தனர். இந்த இரகசிய அறை, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பத்மநாதபன், தொல்லியல் துறை காப்பாட்சியர் சம்பத், கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராமபிரான் முன்னிலையில் இடிக்கப்பட்டது. இதற்காக, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி, குமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் வெளிப்புற பிரகாரத்திலுள்ள இரகசிய அறையின் சுவரை இடித்தனர். இரகசிய அறையில் இருந்த கல், மண் குவியல் அகற்றப்பட்டது. வெற்றிடமாக காட்சியளித்த இரகசிய அறையில், ஏதுமில்லை என்பதை உறுதி செய்தனர். காலை முதல் கோயிலை சுற்றி ஆர்வத்துடன் காத்திருந்த அனைவரும், பெருத்த ஏமாற்றமடைந்தனர்.

கார்த்திகை 18, 2011

கெளரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை; 19 பேருக்கு ஆயுள்காலச்சிறை

உத்தரபிரதேசத்தில் காதலர்களை கெளரவக் கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனையும், 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. உ.பி, மதுரா மாவட்டம் பர்சானா பகுதியை சேர்ந்த ரோஷினியும், பிஜேந்தரும் காதலித்தனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள உதவ முயன்றவர் ராம்கிஷன், வேறு ஜாதி வாலிபனை திருமணம் செய்து கொள்ள முயன்ற இந்த ஜோடியையும், இதற்கு உதவிய ராம் கிஷனையும் கெளரவ கொலை செய்யும்படி, பஞ்சாயத்தார் உத்தரவிட்டன. இதையடுத்து, கடந்த 91ம் ஆண்டு இந்த மூவரும், மரத்தில் தொங்கவிடப்பட்டு தீ வைத்து கெளுத்தப்பட்டனர். கெளரவ கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக பொலிஸார் 55 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். 16 பேர் வழக்கு நடக்கும் காலத்திலேயே இறந்து விட்டனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். மூன்று பேர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் மீதான வழக்கு, சிறார் நீதிமன்றத்தில் நடக்கிறது. இதற்கிடையியே, இந்த வழக்கை விசாரித்த மதுரா மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஏ.கே. உபாத்யாய, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 34 பேரில்,15 பேருக்கு மரண தண்டனையும், 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். ஒருவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அப்போ நாட்டின் தலைவரைக் கொன்றவர்களுக்கு என்ன தண்டனை...?

கார்த்திகை 17, 2011

நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக சிங்களம் அறிவிக்கப்பட்டமை பாரிய முரண்பாடுகள் ஏற்பட வழிகோலியது - சந்திரிக்கா பண்டாரநாயக்க!

தனிச் சிங்கள சட்ட மூலம் மாபெரும் தவறாக கருதப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக சிங்களம் அறிவிக்கப்பட்டமை பாரிய முரண்பாடுகள் ஏற்பட வழிகோலியது என அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில் வாய்ப்பு மற்றும் கல்வி போன்றவற்றில் சம உரிமை கோரிய தமிழ் மற்றும் ஏனைய இன சமூகங்களுக்கு இந்த சட்டம் பெரும் தடையாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சட்டத்தினால் தமிழர்கள் பாடசாலைகளுக்கு அனுமதி பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் தலைமைத்துவமொன்று இலங்கையில் உருவாக வேண்டியதன் அவசியத்தை சந்திரிக்கா வலியுறுத்தியுள்ளார். 2000 ஆண்டு செலுமையான வரலாற்றைக் கொண்ட இலங்கையில் 500 ஆண்டுகள் மேற்கதைய நாடுகள் ஆட்சி நடத்தியதாகவும் அந்தக் கால கட்டம் மிகவும் மோசமான காலகட்டமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடையாள அரசியல் கலாச்சாரமொன்று நாட்டில் நிலவி வருவதாகவும் இதனாலேயே நாட்டில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தவறுகள் குறித்தும் சந்திரிக்கா விளக்கியுள்ளார். அமெரிக்க ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரத்தில் அமெரிக்க மாணவர்கள் எதனைக் கற்றுக் கொள்ள முடியும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சந்திரிக்கா, சொர்க்கபூமி எவ்வாறு தொலைந்து போனது என்பதனை கற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று

இலங்கையின் இரண்டாவது சிறுவர் நீதிமன்றம் இன்று யாழ்ப்பாணத்தின் குருநகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் நீதி அமைச்சர ரவூப் ஹக்கீம் உட்பட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது விஷேட பூஜைகளும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன

முக்கிய ராணுவ ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ஆஸி., கையெழுத்து

அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், சீனாவின் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது. "தெற்காசிய மண்டலத்திற்கு இது நல்லதல்ல' என அந்நாடு எச்சரித்துள்ளது. ஆனால், சீனாவைக் கண்டு அமெரிக்கா பயப்படப் போவதில்லை என ஒபாமா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். ஆஸி.,யில் ஒபாமா : ஹவாய் தீவில், சமீபத்தில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டை முடித்த கையோடு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நேற்று ஆஸ்திரேலியா சென்றார். கடந்த 60 ஆண்டுகளாக இருதரப்பு ராணுவங்கள் இணைந்து முக்கிய போர்களில் பணியாற்றியதை நினைவு கூரும் வகையில் ஒபாமா ஆஸி., சென்றுள்ளார்.(மேலும்....)

கார்த்திகை 17, 2011

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் ஆராய்வதற்கு அரசு - கூட்டமைப்பு இணக்கம்

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதில் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் அடுத்த மாதம் முதல் விரிவான முறையில் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற இரு தரப்பினருக்கும் இடையிலான 13 வது சுற்றுப்பேச்சுக்கள் சுமூகமானதாக இடம்பெற்றதாகவும், பேச்சுக்களைத் துரிதப்படுத்துவதற்காக அடுத்த மாதத்திலிருந்து மாதத்துக்கு 4 தடவைகளாவது பேச்சுக்களை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. (மேலும்.....)

கார்த்திகை 17, 2011

பெரிய பதவியை நோக்கி

சிறிய பதவியை ராஜினாமா செய்யும் மனோ கணேசன்?

கட்சிப் பணிகள் காரணமாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலக உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் குமரகுருபரன் தெரிவித்தார். நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எமது ஜனநாயக மக்கள் முன்னணி சுமார் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படவில்லை. தனித்தே செயற்படுகின்றோம். எனினும் ஐக்கிய தேசிய கட்சிக்கு கொழும்பு மாநகர சபையில் வழங்கப்படும் ஆதரவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. மேற்படி பதவி விலகல் தொடர்பில் அடுத்த வாரமளவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ___

கார்த்திகை 17, 2011

வாழைச்சேனை மக்கள் வங்கி கிளையில் கொள்ளை முயற்சி

மட்டக்களப்பு வாழைச்சேனை மக்கள் வங்கி கிளையானது செவ்வாய்க்கிழமை (16ம் திகதி) நள்ளிரவு வேளை கொள்ளையர்களினால் உடைக்கப்பட்ட போதும் அவர்களது முயற்சி பயனளிக்கவில்லை. இம்முயற்சியின் போது வங்கியின் பின்பகுதி ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளது. எனினும் பணமோ, தங்க நகைகளுக்கோ எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை என வங்கி நிர்வாகம் தெரிவிக்கின்றது. எனினும் நேற்று காலை 10.00 மணிக்கு பின் வழமைபோன்று வங்கி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மேற்படி சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே மட்டக்களப்பு புதூர் திமிலத்தீவு மக்கள் வங்கி கிளையானது கொள்ளைய டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 17, 2011

விரைவில் புரட்சிகர தொழிலாளர் சட்டங்கள்  வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் உறுதி

உற்பத்தி இடங்களில் தொழிலாளர்களின் பங் கேற்பை அதிகப்படுத்தும் மற்றும் அவர்களின் பணி யிட நிலைமைகளை மேம் படுத்தும் வகையிலான தொழிலாளர் சட்டங்கள் விரைவில் கொண்டு வரப் படும் என்று வெனிசு லாவின் ஜனாதிபதி ஹியூ கோ சாவேஸ் அறிவித் துள்ளார். தொழிலாளர்கள் பேரணியை வாழ்த்திப் பேசு கையில்தான் அவர் இவ் வாறு குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், அடுத்த ஆண்டு மே 1 ஆம் தேதிக்குள்ளாக உண்மை யில் புரட்சிகரமான மற்றும் சோசலிசத் தன்மையுட னான தொழிலாளர் சட்டங் களைக் கொண்டு வரு வோம். இத்தகைய பணியை மக்களுக்காகச் செய்ய வேண்டிய கடமை புரட் சிக்கு உள்ளது. தொழிலா ளர் சட்டங்களை உருவாக் கும்போது மக்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து கருத்துகள் வரவேற்கப் படும். அவற்றை அடிப் படையாகக் கொண்டே சட்டங்கள் உருவாக்கப் படும் என்று குறிப்பிட்டார். (மேலும்.....)

கார்த்திகை 17, 2011

27 இல் ஜனாதிபதியால் திறப்பு

6 சுவடுகளுடன் கொழும்பு - காலி அதிவேக நெடுஞ்சாலை அமைப்பு

கொழும்பு- காலி அதிவேக நெடுஞ்சாலை ஆறு சுவடுகளைக் கொண்டதாக அமைக்கப்படவிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பி. வி. கே. பண்டார தெரிவித்தார். கட்டுநாயக்காவிலிருந்து காலிக்கு ஒன்றே கால் மணி நேரத்தில் சென்றடையக் கூடியவகையிலான அதிவேக நெடுஞ்சாலை 2014 ஆம் ஆண்டில் திறக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நெடுஞ்சாலைக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்ப தாகச் சுட்டிக்காட்டிய அவர், கொழும்பு காலி வீதி அமைப்பு களான காணி சுவீகரிக்கப்பட்டிருப்பதுடன், காணி, உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கும் பணிகள் நிறைவடைந்திருப்பதாகவும் கூறினார். இந்த நெடுஞ்சாலை 700 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. அதேநேரம் இலங்கையில் அமைக்கப்பட்டிருக்கும் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையான கொழும்பு- காலி வீதி 27 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்படவுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 17, 2011

வீறுகொண்டு எழுகிறது வால் ஸ்டிரீட் போராட்டம்-ஒபாமா அரசு அடக்குமுறை

முதலாளித்துவத்திற்கு எதிரான தங் கள் போராட்டம் மூன்றாவது மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பங்குச்சந்தை இருக்கும் வால் ஸ்டிரீட் டை இழுத்து மூடும் போராட்டத்தை எதிர் வரும் வியாழனன்று நடத் துவோம் என்று அமெரிக்க மக்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்போராட்டத்தை ஒடுக்க ஆயிரக்கணக்கான போலீசாரை ஏவி, அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது ஒபாமா அரசு. நியூயார்க் நகரின் சுதந்திரச் சதுக்கம் அமைந்துள்ள ஜூக்கோட்டி பூங்காவில் முகாம் அமைத்துள்ள பல்லாயிரம் இளை ஞர்களையும் பெண்களையும் ஒபாமா அரசின் போலீசார் கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளனர். (மேலும்.....)

கார்த்திகை 17, 2011

அஷ்ரப் நகர் காணிப்பிரச்சினை

உரிய ஆவணங்கள் வைத்திருப்போர் வெளியேற்றப்படமாட்டார்கள்

அம்பாறை மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அஷ்ரப் நகரின் காணிப் பிரச்சி னையை பொறுத் தவரை அங்கு சட்ட பூர்வமாக வசிப்பவர்களும், சட்ட ரீதியான உறுதிப் பத்திரங்களை யும், உரிய ஆவணங்களையும் தம் வசம் வைத்திருப்போரும் அங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அம்மாவட்டத்திற்கு பொறுப்பான வனப் பாதுகாப்பு அதிகாரி லலித் கமகே. நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவ ருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 17, 2011

ஐரோப்பிய நெருக்கடிக்கு எதிர்ப்பு  நோயாளிகளை இணைத்து மருத்துவர்கள் போராட்டம்!

பொருளாதார நெருக் கடியைக் காரணம் காட்டி சாமான்ய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மீது சுமை யை ஏற்றிக் கொண்டிருக் கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஐரோப்பிய நாடுக ளில் மீண்டும் கடுமையான எதிர்ப்பலைகள் தோன்றி யுள்ளன. செலவுகளை வெட்டும் திட்டத்தின் அடிப்படை யில் மக்களுக்கு கிடைத்து வந்த பல்வேறு சலுகைகள் வெட்டப்பட்டுள்ளன. பணக் காரர்களுக்கு ஏற்கெனவே இருந்த சலுகைகளோடு கூடுதலாக புதிய சலுகைகள் அளிக்கப்பட்ட வேளை யில்தான் இந்தப்பணிகள் நடக்கின்றன. இதற்கு எதி ராக ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கிரீஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் அனைத்துப் பகு தியினரும் போராடி வரு கிறார்கள். (மேலும்.....)

கார்த்திகை 17, 2011

தூக்குத் தண்டனை கைதிகள்

கருணை மனுக்களின் விபரம் கோருகிறது இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியா முழுவதும் இதுவரை முடிவு எடுக்கப்படாத தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்களின் விவரங்களை, டிசெம்பர் 16ந் திகதிக்குள் தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலைக் கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக் கோரி, சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. (மேலும்.....)

கார்த்திகை 17, 2011

2 மணி நேரத்தில் அடையாள அட்டை, தாயகம் திரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்
 

'ஒரே நாள்' சேவையின் கீழ் இரண்டு மணி நேரத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை 2012 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார். தினமும் சுமார் 1000 பேர் ஒரே நாள் சேவையின் கீழ் அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்துக்கு வருகை தருகின்றனர். திணைக்களத்தின் ஏனைய கருமங்களுடன் ஒரே நாள் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காலதாமதம் ஏற்படுவதுடன் விண்ணப்பதாரிகளும் அசெளகரியங்களுக்குள்ளாகின்றனர். இதன் காரணமாக திணைக்கள பிரதேச கட்டடத்துடன் கூடிய புதிய கட்டடத்தினுள் ஒரே நாள் சேவை மையம் அமையவுள்ளது. உரிய விண்ணப்பதாரி கால் கடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய தேவை ஏற்படமாட்டாது. தினமும் பிற்பகல் 2.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஆட்பதிவு ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார். இதேவேளை புலம்பெயர்ந்துள்ள இலங்கையர் தாம் இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றிருந்தால் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜகத் பி. விஜேவீர தெரிவித்தார். அத்துடன் தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் தமிழர்களும் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார். (மேலும்.....)

கார்த்திகை 17, 2011

ரிசானாவும் பெற்றோரும் உணர்ச்சிபூர்வ சந்திப்பு

சவூதியில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய நிலையில் அங்கு கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை பெற்றுள்ள ரிசானா நபீக்கை அவரின் பெற்றோர் சந்தித்துள்ளனர். இந்த உணர்ச்சிபூர்வ சந்திப்பு ரியாத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. ரிசானா நபீக்கை தண்டனையில் இருந்து காப்பாற்றும் முயற்சியின் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. 2007ம் ஆண்டு ஜூன் 16ம் திகதியன்று ரிசானா நபீக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பை வழங்கியதை அடுத்து முதல் தடவையாக அவரை அவரது பெற்றோர் சந்தித்துள்ளனர். இதன் போது தமது தந்தையான மொஹமட் மற்றும் தாயான ரிபானா ஆகியோரிடம் தம்மை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கோரினார் என்று அரப் நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமது பிள்ளையை வீட்டுக்கு அழைத்து செல்ல அல்லாஹ் உதவி செய்வார் என்று ரிசானாவின் தந்தையார் கூறியுள்ளதாகவும் அரப் நியூஸ் குறிப்பிட்டுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 17, 2011

தபால் ஊழியர் போராட்டத்தினால் 8 இலட்சம் பொதிகள் தேக்கம்

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் பொதிகளை விரைவில் குறித்த இடங்களுக்கு விநியோகிக்க துரித நடவடிக்கை எடுப்பதாக தபால் மா அதிபர் எம். கே. பி. திஸாநாயக்க தெரிவித்தார். தபால் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் சில உறுப்பினர்கள் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தினால் சுமார் 8 இலட்சம் வரையிலான பொதிகள் தேங்கி கிடங்கிறதெனக் குறிப்பிட்ட தபால்மாஅதிபர் தொழிற்சங்கத்தின் ஏனைய உறுப்பினர்களின் உதவியுடன் அவைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். (மேலும்.....)

கார்த்திகை 17, 2011

அமேசன் காடு உலகின் அதிசயமாகிறது

இயற்கையாக உருவான அதிசயங்கள் பற்றிய பட்டியலை சுவிற்சர்லாந்தில் உள்ள புதிய 7 அதிசயங்கள் அறக்கட்டளை வெளியிட்டு வருகிறது. அதன்படி உலக அளவில் 7 அதிசயங்களின் தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தை அமேசன் காடு பிடித்துள்ளது. இரண்டா வது இடத்தை வியட்நாம் ஹலாங் வளைகுடா, மூன்றாவது இடத்தை ஆஜென்டீனா இகுசு நீர்வீழ்ச்சி ஆகியவை பெற்றுள்ளன. இது தவிர, தென் கொரியாவின் ஜேஜூ தீவு, இந்தோனேசியாவின் கொமாடோ, பிலிப்பைன்சின் தரைக்கு கீழ் ஓடும் புயர்டோ பிரின்சிசா ஆறு, தென் ஆபிரிக்காவின் டேபிள் மலை ஆகியவையும் அதிசய பட்டியலில் உள்ளன. உலக அதிசயங்கள் குறித்த அதிகாரப்பூர்வ இறுதி பட்டியல் அடுத்த ஆண்டு (2012) தொடக்கத்தில் வெளியாகிறது.

கார்த்திகை 17, 2011

இணையத்தில் கவிழும் ஆண்கள்

ன்றைய தலைமுறையினர் சமூக இணைய தளங்களில் அதிக நேரம் செலவழிப்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் அதில் பெண்கள் மிகக் கவனமாக இருக்கின்றனர். ஆண்கள்தான் எளிதில் ஏமாந்துவிடுகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. அதாவது சமூக இணைய தளங்களில் ஆண்கள் தங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களை உடனடியாக தங்கள் நண்பர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்கிறார்கள். அதே சமயம் பெரும்பாலான பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களை நண்பர்கள் பட்டியலில் சேர்ப்பதில்லை. மேலும் ஆண்கள் தங்கள் இருப்பிடம் கையடக்க தொலைபேசி எண் போன்ற சொந்த விடயங்களையும் அனைவருக்கும் பொதுவாக்குகின்றனர். இந்த விடயத்திலும் பெண்கள் கவனமாக உள்ளனர் என்கிறது ஆய்வு. அதனால் எளிதில் பிரச்சினைகளில் ஆண்கள் சிக்கிக் கொள்கிறார்கள். மேலும் தங்கள் இணையத் தளக் கணக்குகளிலிருந்து முறையாக வெளியேறுவதில்லை. அலுவல கங்களில் சமூக இணைய தளங்களை உபயோகிப்போர் அதனை அப்படியே விட்டுவிட்டு வேறு எங்காவது போய்விடுகின்றனர்.

கார்த்திகை 17, 2011

சித்த வைத்தியத்தில் சிறப்புறும் வலிகாமம் வடக்கு பிரதேசம்
(
எஸ். ரி. குமரன் )

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்போர் ஆன்றோர்கள். தமிழர்க்கென மரபு வழி வைத்தியம் ஆனது சிறப்புற்று வளர்ந்துவந்துள்ளது. இவ் வைத்தியக் கலையானது சித்தர்களால் வளர்க்கப்பட்டு வந்தமையினால் சித்த வைத்தியம் என்று பெயர் வழங்கி வரலாயிற்று. இத்தகு சித்த வைத்தியத் துறையில் சிறப்புற்ற விளங்கிய சீர்மையாளனாக சித்த வைத்திய கலாநிதி கோ.சின்னத்தம்பி விளங்குகிறார். (மேலும்....)

கார்த்திகை 16, 2011

பல தலைமுறை தலைவர்களுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர் தோழர் சிவதாசன் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்.

அங்கிள் என எங்கள் எல்லோராலும் அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்ட தோழர் சிவதாசன் தனது 77 வது வயதில் காலமாகிவிட்ட துயரச்சம்பவம் நேற்று (13.11.2011) நிகழ்ந்திருக்கிறது. இலங்கை கம்யூனிஸ இயக்க வரலாற்றில் தனக்கொன ஒரு தனியிடத்தை வகித்தவரும், தொழிற்சங்க போராட்டங்களில் முனநின்றவரும் வடபகுதியில் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் பங்கேற்றவரும் வர்க்க விடுதலை மூலமே இலங்கையில் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை படைக்க முடியும், தமிழ் மக்கள் விடிவை எய்த முடியும் என்று கருதி செயற்பட்ட தோழர் சிவதாசன் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்று ஆயுதந் தாங்கிய போராட்டமாக மாறியபோது அதிலும் பங்கேற்ற ஒருவர். பாராளுமன்ற உறுப்பினராகவும், பனை அபிவிருத்தி சபை தலைவராகவும் பதவிவகித்தவர். அவர் இறக்கும் வரை தனது அரசியல் பயணத்தை இடைவிடாது தொடர்ந்தவர்.  (மேலும்....)

கார்த்திகை 16, 2011

ஊடகவியளார்கள் கைது, மக்கள் மீது தாக்குதல், நீதிமன்ற ஆள் மாறாட்டம் அமரிக்க ஜனநாயகம்!!!

நியூயோர்க் ஸூகோட்டி பார்க்கில் முகாமிட்டு வோல் ஸ்ரீட்டை நிரப்புவதற்கான போராட்டங்களை நடத்தியவர்களை நியோர்க் போலிஸ் காடைத் தனமாக வெளியெற்றியது. 15ம் திகதி அதிகாலை தமது நாட்டில் ஜனநாயகம் குறித்தும் கருத்துச் சுந்ததிரம் குறித்தும் பேசும் நியோர்க் நகர மேயரின் உத்தரவின் பேரில் போலீஸ் வெளியேற்றியது. உலகம் செத்துப் போயிருந்த அதிகாலை ஒரு மணியளவில் நியூயோர்க் போலீஸ் கமிசனர் களத்தில் இறங்க அமைத்தியாக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களுக்கு எதிரான தாக்குதல் ஆரம்பமானது. அமரிக்க ஜனநாயகம் உள் நாட்டிலும் தனது கோரத்தைக் காட்டியுள்ளது. அடிப்படை வாழ்வுரிமைக்காக மட்டுமே இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நாம் தான் இந்த உலகின் 99 வீதமானவர்கள் என்று ஆரம்பித்த இந்தப் போராட்டம் நியூசிலாந்து வரை பரவியது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

கார்த்திகை 16, 2011

தமிழ் புலம்பெயர் மக்களுடன் இணைந்து செயற்படத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது!

தமிழ் புலம்பெயர் மக்களுடன் இணைந்து செயற்படத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவோ அல்லது ஒதுக்கி வைக்கவோ அரசாங்கம் விரும்பவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரியுள்ளார். எனினும், புலிகளின் ஈழக் கனவுக்காக தொடர்ந்தும் செயற்படுவோருக்கு எதிராக சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். வன்முறைகளையும் பிரிவினைவாதத்தையும் பிரச்சாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 32 நாடுகளில் புலிகள் தடை செய்யப்பட்ட போதிலும் சில நாடுகளில் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 2009ம் ஆண்டில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் நிதி சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பெயர் விபரங்களை அமைச்சர் வெளியிடவில்லை. புலிகள் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் புலிக் கொடிகளை ஏந்தி போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கார்த்திகை 16, 2011

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!.

பாலிவுட் முன்னணி நடிகை ஐஸ்வர்யா பச்சனுக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த செய்தியை தந்தை அபிஷேக் பச்சன் மற்றும் தாத்தா அமிதாப்பச்சன் ஆகியோர் மகிழ்ச்சியோடு வெளியிட்டனர். இதனை ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சன் டிவிட்டர் மூலம் அறிவித்தார். அதேபோல தான் தாத்தாவாகிவிட்டதை அமிதாப் பச்சன் மகிழ்ச்சியோடு டிவிட்டரில் அறிவித்துள்ளார். முன்னதாக அமிதாப்பச்சன் குழந்தை பிறப்பிற்கான எதிர்பார்ப்பு தொடர்பான டிவிட்டரில் தனது எண்ணத்தை பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ம் ஆண்டு பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

கார்த்திகை 16, 2011

இறக்குமதி செய்யப்படும் யோசனைகள் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது - ஜனாதிபதி

எமக்கே உரித்தான வழிமுறைகளைப் பின்பற்றியதால் தான் தாயகம் எதிர்கொண்ட ஒவ்வொரு சவாலையும் என்னால் வெற்றி கொள்ள முடிந்தது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற தீர்வுகளால் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. மாறாக எமது கலாசார பாரம்பரியங்க ளுக்கு அமைவான வேலைத்திட்ட ங்களின் ஊடாகவே எமது சவால்களை வெற்றி கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார். பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தோற்கடித்தது மாத்திரமல்லாமல் சூழலைப் பாதுகாப்பதற்கான சவால்களையும் எமக்கே உரித்தான முறைகளால் தான் எம்மால் வெற்றி கொள்ள முடிந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கார்த்திகை 16, 2011

அக்னி-4 சோதனை வெற்றி, இந்தியா   புதிய சாதனை

3 ஆயிரம் கி.மீ. தொலை வில் உள்ள இலக்கை பாய்ந்துத் தாக்கும் அக்னி-4 ஏவுகணை சோதனை செவ் வாய்க்கிழமை வெற்றிகர மாக நடந்தது. ஒடிசா கடற் கரையில் தீவுப்பகுதியிலி ருந்து இந்த ஏவுகணை பாய்ந்து சென்று இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது. இந்த ஏவுகணை உலகத் தரம் வாய்ந்த ஏவுகணை களில் ஒன்றாகும். இது, 3500 கி.மீ. தூரம் வரை பாய்ந்து செல்ல திறன் மேம்படுத்தப் படும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) செய் தித்தொடர்பாளர் ரவிக் குமார் குப்தா கூறினார். நீண்ட தூர ஏவுகணை வகைப்பிரிவில் அக்னி-4 ஏவுகணை புதிய சரித்திரத் தை உருவாக்கியுள்ளது. போர் ஆயுதங்களை நீண்ட தூரம் ஏந்திச் செல்லும் திறன் பெற்றதுடன், நாட் டிற்கு மிகச்சிறந்த உறுதி யளிப்பதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 16, 2011

உலகம் ஒரு பண்டம் அல்ல! ஜெர்மனி மக்கள் போர்க்கொடி

அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் முதலாளித்துவத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் ஜெர்மனியில் ஆயிரக்கணக்கான மக்களை போராட்டக்களத்திற்கு அழைத்து வந்துள்ளன. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் தங்கள் பொருளாதார நெருக்கடியை, ஜெர்மனியால் தீர்த்து வைக்க முடியும் என்று கூறி வந்தன. ஆனால் அந்த நெருக்கடி ஜெர்மனியையும் வளைக்கிறது என்ற செய்தி ஐரோப்பிய யூனியனில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளில் உள்ள நெருக்கடியை சாதகமாக்கிக் கொண்டு, கொள்ளை லாபத்தை சம்பாதிக்கலாம் என்கிற ஜெர்மனி வங்கிகளின் திட்டமும் அம்பலமாகி வருகிறது. இந்தச் சுரண்டலை நாங்கள் எதிர்க்கிறோம் என்று ஜெர்மனி மக்களே முழக்கமிட்டுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 16, 2011

You want your computer to be fast and responsive

Nobody enjoys using a slow computer. You want your computer to be fast and responsive, whether it's brand spanking new or four years old. Follow our tips to keep you zooming along the information superhighway, regardless of your PC's age! (more...)

கார்த்திகை 16, 2011

யாழ். விபச்சார விடுதியில் கைதான மூன்று பிள்ளைகளின் தாயின் சோகக் கதை

வன்னிப் பெருநிலப்பரப்பில் நடைபெற்ற இறுதி யுத்தம் தமிழ் மக்களுக்கு பல துன்ப துயரங்களைப் பரிசளித்திருந்தாலும் அதனைச் சமாளித்தது, சகித்துக் கொண்டது தமிழினம். ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றப்பட்டு வரும் கலாசாரப் பிறழ்வுகளும், சீரழிவுகளும் இந்த இறுதி யுத்தத்தினால்தான் அன்பளிப்புச் செய்யப்பட்டது. ஏனெனில் நேற்று பொலிஸாரின் முற்றுகைக்குட்பட்ட விபச்சார விடுதியில் கைது செய்யப்பட்டவர்களில் கணவனையிழந்த, மூன்று பிள்ளைகளின் தாயின் உள்ளடங்கப்படுகின்றார். (மேலும்....)

கார்த்திகை 16, 2011

BEWARE OF FRAUD!  Rathika Sitsabaiesan, MP

Here is the scoop Rathika.  These Tamils, or should I call them Canadian-Tamils, that Canada adopted have been identified as Jeyaparan Shanmugalinga 27, of Markham; Sabesan Mathiabaranam 39, of Toronto; Jegatheeswaran Velautham 49, of Markham; Stanley Rajadurai 34, of Toronto and Gunaratnam Selvakumar 37 of Brock Township.  May be that you knew at least one of them if not all, or may be none of them.  After all you are a politician who would go about like other politicians kissing babies with a broad Cheshire cat grin and shaking hands. Their crime is that they are a GTA wide ATM fraud -ring, facing a total of 52 charges.  The police say that the five of the above were arrested out of seven, and the investigators had seized $35,000 in cash along with four vehicles, including a Porsche Cayenne and BMW X5. (more....)

கார்த்திகை 16, 2011

வீறுகொண்டு எழுகிறது வால் ஸ்டிரீட் போராட்டம் - ஒபாமா அரசு அடக்குமுறை

முதலாளித்துவத்திற்கு எதிரான தங் கள் போராட்டம் மூன்றாவது மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பங்குச்சந்தை இருக்கும் வால் ஸ்டிரீட் டை இழுத்து மூடும் போராட்டத்தை எதிர் வரும் வியாழனன்று நடத் துவோம் என்று அமெரிக்க மக்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்போராட்டத்தை ஒடுக்க ஆயிரக்கணக்கான போலீசாரை ஏவி, அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது ஒபாமா அரசு. நியூயார்க் நகரின் சுதந்திரச் சதுக்கம் அமைந்துள்ள ஜூக்கோட்டி பூங்காவில் முகாம் அமைத்துள்ள பல்லாயிரம் இளை ஞர்களையும் பெண்களையும் ஒபாமா அரசின் போலீசார் கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 16, 2011

ஸ்பெக்ட்ரம்

ரூ.1.76 இலட்சம் கோடி நஷ்டக் கணக்கு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ரூ. 1.76 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறிய மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் பா.ஜ.க. தலைவர் முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் தரவுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசா தவறான முறையை கையாண்டதால் அரசுக்கு ரூ. 1.76 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அறிக்கையை வெளியிட்டவர் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய். ஆனால் ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தை முழு அளவில் ஆய்வு செய்து கணக்கு வழக்குகளை சரிபார்த்து அறிக்கை தயாரித்து வினோத் ராயிடம் தந்த மூத்த அதிகாரியான ஆர்.பி. சிங், உண்மையான நஷ்டம் ரூ. 2,645 கோடி தான் என்று கூறியுள்ளார். மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நஷ்டம் தொடர்பாக வினோத் ராய் தயாரித்த இறுதி அறிக்கையில் என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர் என்றும் ஆர்.பி. சிங் கூறியுள்ளார். மத்திய அரசின் கொள்கை முடிவின்படி முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்கப்பட்டிருப்பதால், நிர்ணய நுழைவு கட்டண விலைப்படி ரூ. 2,645 கோடிதான் இழப்பு ஏற்பட்டது.

கார்த்திகை 16, 2011

Which Healthy Foods Are Best for Flat Abs?

We've heard the saying "abs are made in the kitchen," but what does that mean? When it feels like you're working out and not seeing the result you want, could it have something to do with your diet? We went to SHAPE diet doctor Mike Roussell to figure if there are certain foods that can help you on your route to firm, toned abs. Here's what he had to say: The problem is simple: It's very easy to eat a lot of calories, but it's very hard to burn a lot of calories. The popular slogan "abs are made in the kitchen" refers to the fact that what you eat has a far greater impact on weight loss than any form of exercise you do. But despite the popularity of this saying, many people still attempt to uncover their abs with endless crunches and laps around the track. (more....)

கார்த்திகை 15, 2011

தோழர் சிவதாசன் அவர்களின் மறைவிற்கு கனடியத் தோழர்களின் அஞ்சலி!

நீண்டகால இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளரும், தொழிற்சங்கத் தலைவருமான தோழர் எஸ்.சிவதாசன் அவர்கள், 2011 நவம்பர் 13ம் திகதி தமது 77வது வயதில் காலமான செய்தி கேட்டு, கனடாவில் வாழ்கின்ற இலங்கையைத் தாயகமாகக் கொண்ட அனைத்து முற்போக்கு சக்திகளும் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளோம். தோழர் சிவதாசன் தனது மாணவப் பருவத்திலேயே இலங்கையின் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் அந்த இயக்கத்தின் கொள்கைகளில் நிலை தழும்பாது நின்று வந்துள்ளார். தேசிய இனப்பிரச்சினை தீவிரமடைந்து, அது ஆயுதப்போராட்டமாகப் பரிணமித்த காலகட்டத்தில், அவர் சில முற்போக்குத் தமிழ் தேசியவாத இயக்கங்களுடன் தன்னை இணைத்து வேலை செய்தாராயினும், அங்கும் தமது இடதுசாரிக் கொள்கைகளின் அடிப்படையிலேயே செயற்பட்டார். (மேலும்....)

கார்த்திகை 15, 2011

சகித்துக்கொள்ள முடியாது

இந்திய தலைவர்களுக்கு அமெரிக்கா இழைக்கும் அவமதிப்பை சுயமரியாதையுள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் சகித்துக் கொள்ள மாட்டான். அமெரிக்கா, இந்தியா உள் ளிட்ட நாடுகளை தனது காலனி நாடுகள் போல வும், அந்த நாட்டு மக்களை தனது கொத்தடிமை கள் போலவும், ஏகாதிபத்திய திமிர்த்தனத்துடன் நடத்துகிறது. இதற்கு உரிய முறையில் பதிலடி கொடுக்காவிட்டால், அமெரிக்க ஏகாதிபத்தியத் தில் அத்துமீறலும் அடாவடியும் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும். நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தில் ஏர்இந்தியா விமானத்தில் ஏறு வதற்கு முன்பு அமெரிக்க அதிகாரிகளால் அப்துல்கலாம் பாது காப்புச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்தச் சோதனை முடிந்து அவர், விமானத் தில் உரிய இருக்கையில் ஏறி அமர்ந்த பிறகு அப்துல்கலாமின் மேல் சட்டை மற்றும் ஷூவில் வெடிகுண்டு உள்ளதா என சோதனையிட வேண்டும் என்று கூறி அவற்றை கழற்றித் தருமாறு கூறியுள்ளனர். அவ்வாறு சோதனை யிட்ட பிறகே, அவரை பயணம் செய்ய அனுமதித் துள்ளனர். (மேலும்....)


கார்த்திகை 15, 2011

பிரிட்டன்  இழுத்து மூடப்படுகின்றன குழந்தைகள் நல மையங்கள்!

வறுமையில் வாடும் குழந்தைகளைப் பாதுகாக்க நடத்தப்படும் குழந்தைகள் நல மையங்களை இழுத்து மூட வேண்டிய நிலை பிரிட்டனில் ஏற்பட்டிருக் கிறது. தற்போது சுமார் 3 ஆயிரத்து 500 மையங்கள் இந்த சேவையை செய்து வருகின்றன. பல்வேறு துறைகளுக்கு நிதி வெட்டும் வேலை பிரிட்டன் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் நலன் மற்றும் வறுமை ஒழிப்பும் சேர்த்தே பாதிக் கப்பட்டுள்ளன. நடப்பாண் டில் மட்டும் 47 மையங்கள் ஏற்கெனவே இழுத்து மூடப்பட்டுவிட்டன அல் லது மூடப்படும் நிலையில் உள்ளன. இத்தகைய அவல நிலை பற்றி பிரிட்டன் அரசு எந்தவித நடவடிக் கையும் மேற்கொள்ள வில்லை.
(மேலும்....)

கார்த்திகை 15, 2011

US apologises India over Abdul Kalam’s frisk

(By Jitender Singh )

The US authorities apologized to New Dehli over misbehave ith former Indian president Abdul Kalam at New York airport on September 29. The US government ordered an inquiry after India protested over the matter.Kalam was frisked by the US authorities at New York airport for explosives on September 29 before boarding an Air India flight, Indian media reported.Indian External Affairs Minister SM Krishna spoke to Indian Ambassador to US Nirupama Rao and directed her to take up the matter in writing at the “highest level” with Washington.A report in Hindustan Times said: “Even after Kalam was seated, the US security personnel forced the crew to open the door and took away the jacket and boots of the former president to check for explosives since they had forgotten to do so before his boarding”. (more....)

கார்த்திகை 15, 2011

சகலரும் ஏற்கும் தீர்வே இலங்கைக்குப் பொருத்தமானது

13வது திருத்தச் சட்டமூலம் இந்தியாவினுடையதல்ல, இலங்கை அரசாங்கத்தாலேயே இது தயாரிக்கப்பட்டது என இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரண் தெரிவித்தார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வானது இலங்கைக்குள்ளேயே அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியதுமானதாக அமையவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை - இந்திய நட்புறவு மன்றம் நேற்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த செயலமர்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரும், நாடுகளின் அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தின் தலைவரான சிஷாம் சரண் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 15, 2011

அதிவேக நெடுஞ்சாலை

திறக்கப்பட்ட பின் மக்களுக்கு அனுமதி

இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையை இம் மாதம் 27 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெலிபென்னவில் நடைபெறும் பிரதான நிகழ்விலும் கரந்தெனியாவில் நடைபெறும் மக்கள் பேரணிக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார். அன்றைய தினம் அதிவேக நெடுஞ்சாலை யைத் திறந்து வைத்து அந்த சாலையில் பயணிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் “வெலிப்பென்ன ரெஸ்ட்” டில் நடைபெறும் பிரதான விழாவில் கலந்து கொண்டு அதன் பின்னர் தொடங் கொட வழியாக கரந்தெனியவைச் சென்ற டைந்து அங்கு நடைபெறும் மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வுள்ளார். (மேலும்....)

கார்த்திகை 15, 2011

சோதனை நடத்துவதில் இருந்து கலாமுக்கு விலக்கு கிடையாது

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பாதுகாப்பு சோதனை நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருப்பதாக இந்தியா கூறி வருகிறது. ஆனால் தற்போதைய அமெரிக்க விதிமுறைகளின்படி அப்துல் கலாம், சோதனை நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டில்லியில் தெரிவித்தார். இருப்பினும் விமான நிலையத்தில் அப்துல் கலாமுக்கு அமெரிக்க அதிகாரிகள் வழக்கமான மரியாதையை அளித்ததாக அவர் கூறினார். கலாமுக்கு பாதுகாப்பு அளித்ததாகவும், தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டதாகவும் அவர் கூறினார். விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களை சோதனையிடுவது தொடர்பாக உரிய நடைமுறைகளை வகுப்பது பற்றி இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கார்த்திகை 14, 2011

மன்னாரில் இரண்டாவது கேஸ் குதம் கண்டுபிடிப்பு

மன்னார் கடற்பரப்பில் இரண்டாவது கேஸ் குதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. முதலாவது இயற்கை வாயு குதம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒக்டோபர் மாதம் கண்டியில் நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.  கண்டு பிடிக்கப்படும் பெறுமதிமிக்க இயற்கை வழங்கள் இலங்கை அரசை மேலும் வடக்கும் கிழக்கும் இலங்கையின் பகுதிகளே என்ற நிலைப்பாட்டை வலுப் பெறச் செய்யப் போகின்றது. அதேவேளை குறும் தமிழ் தேசியவாதிகள் தமது 'தாயகம்' கோஷத்தை இறுக்கிப் பிடிக்க  இது வழி கோலும். நேட்டோ உலகம் தனது கழுகுக் பார்வையை இலங்கையின் மேல் நிறையவே திருப்பும்.  இந்த பெறுமதி மிக்க வழங்கள் இலங்கையின் தேசிய உடமையாக அரசு கையாளுமாயின் இலங்கை மக்களின் வாழ்வு வழம் பெறும். நாம் பொறுத்திருந்து பார்பது மட்டும் அல்ல, இதற்கு ஆவனவும் செய்வோம்.

கார்த்திகை 14, 2011

முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவதாசன் அவர்கள் மறைவு!

பழம் பெரும் தொழில் சங்கவாதியும், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், இடதுசாரி சிந்தனை போக்காளரும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி,(EPRLF) ஆகியவற்றில் அங்கத்தவராக இருந்தவருமான சிவதாசன் அவர்கள் இன்று மறைவுற்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம். முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவருமான தோழர் எஸ்.சிவதாசன் அவர்கள் இன்று மாலை தனது 77வது வயதில் இயற்கை எய்தினார். அவர் 50 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்டவர் என்பதுடன் மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற சிறந்த மொழி பெயர்ப்பாளருமாவார். தனது மாணவப் பருவத்திலேயே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பதுடன் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் போராட்டங்களில் பங்குபற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைக்கும் சென்றவர். (மேலும்....)

கார்த்திகை 14, 2011

இத்தாலிப் பிரதமர் பெர்லுஸ்கோனி ராஜிநாமா

இத்தாலியின் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பதவியை ராஜிநாமா செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக் கணக்கு மீதான வாக்கெடுப்பில் அவரது கட்சி வெற்றி பெற்றாலும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், அதிபர் ஜியார்ஜியோ நபோலிட்டனோவிடம் தமது பதவி விலகல் கடிதத்தை அவர் சனிக்கிழமை கொடுத்தார். பெர்லுஸ்கோனியின் ராஜிநாமாவை வரவேற்ற இத்தாலியர்கள் அதிபர் மாளிகை முன் குவிந்தனர். பெர்லுஸ்கோனிக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். புதிய பிரதமராக பொருளாதார நிபுணரான மரியோ மோன்டி பதவியேற்பார் எனத் தெரிகிறது. இத்தாலி சந்தித்து வரும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண இவரே சிறந்தவர் என கருதப்படுகிறது. ஆனால், இவருக்கு பெர்லுஸ்கோனியின் ஆதரவாளர்களில் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இடைக்கால அரசு அமைப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் அதிபர் ஆலோசனை நடத்தினார். இத்தாலியில் தேர்தலை நடத்துவதை விட இடைக்கால அரசு உடனடியாக அமைய முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் சர்கோஸி, சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டைன் லகார்டு ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கார்த்திகை 14, 2011

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன் இந்திய - எல்.ரி.ரி.ஈ. இரகசிய சந்திப்பு நடந்தது - எரிக்  சொல்ஹெய்ம்

2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்தியாவும்  இரகசியமாக சந்தித்ததாக நோர்வேயின் சுற்றாடல் மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். நோர்வேயில் இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியிலேயே சொல்ஹெய்ம் இவ்வாறு கூறியுள்ளார். எனினும் இச்சந்திப்பு எங்கு நடைபெற்றது என்பது குறித்தோ இதில் இரு தரப்பிலும் யார் யார் பங்குபற்றினார்கள் என்ற விபரத்தையோ வெளியிடுவதற்கு சொல்ஹெய்ம் மறுத்துள்ளார். இத்தகவல் உண்மையானால், ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தையடுத்து 1992 ஆம் ஆண்டு  தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியா தடை செய்தபின் அவ்வமைப்புடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திய முதல் சந்தர்ப்பமாக இது இருக்கும். பலர் எண்ணுவதற்கு முரணாக, போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்குவதிலும்  பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான அப்போதைய இந்திய அரசாங்கம் திரைமறைவில்  முக்கிய பாத்திரம் வகித்ததாக சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார். (மேலும்....)

கார்த்திகை 14, 2011

பிரபாகரன் இன்னமும் மாவீரர் இல்லை

புலிகளின் பலமான பகுதிகளுக்குள் இலங்கை இராணுவம் ஊடுருவி பிரபாகரனைக் கொன்றது நோர்வே

அரச படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான பகுதிகளுக்குள் ஊடுருவி அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஏனைய தலைவர்களான சூசை, பொட்டு அம்மான் ஆகியோரையும் கொலைசெய்ததாக நோர்வே அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க துருப்புக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான இடங்களுக்கு சென்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கடற்புலி தலைவர் சூசை, புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோரை கொன்றதாகவும் நோர்வேயின் அறிக்கை கூறுகிறது. எனினும் இறுதிக்கட்ட போரின் போது இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல்கள் தெரியவில்லை என்று நோர்வேயின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 14, 2011

யாழ்ப்பாணத்தில் உருவாகும் போதைப்பொருள் பயங்கரவாதம்

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பினால் சீர்குலைந்து போயிருந்த யாழ்ப்பாணம் இப்போது அதே போன்ற இன்னுமொரு படுபயங்கரமான ஆபத்தை எதிர்நோக்கி வருவதாகவும், யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இன்று போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவது குறித்து அரசாங்க அதிகாரிகள் கவலை அடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணப் பொலிஸார் இரண்டு மணித்தியாலங்களில் 45ஆயிரம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை மாணவர்களிடம் விற்பனை செய்து வந்த மாணவர் குழுவொன்றை சமீபத்தில் கைது செய்துள்ளனர். இந்த மாணவர்க ளுக்கு போதைப் பொருளை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  (மேலும்....)

கார்த்திகை 14, 2011

ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம் (பகுதி - 1)

(சபா நாவலன்)

இதுவரைக்கும் உலகின் சந்துபொந்துக்களில் எல்லாம் நுளைந்து தமது தனது ஆதகார சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்திக்கொண்ட ஏகாதிபத்திய நாடுகள் இப்போது என்றுமில்லாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. கிரேக்கம், போத்துக்கல், ஸ்பேயின், இத்தாலி என்ற ஐரோப்பிர அரசின் தூண்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகச் சரிந்து கொண்டிருக்கின்றன. ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் அழிவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மக்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துவிட்டன. அமரிக்கப் பொருளாதாரத்தின் இதயத்தில் காலூன்றி அதன் பயங்கரவாதத்தால் பாதிப்படைந்த மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஐரோபிய நாகரீகம், மேற்கின் ஜனநாயகம் என்ற வார்த்தைகளுக்குள் கட்டுண்டு கிடந்த ஐரோப்பிய மக்கள் கூட்டம் இவை எல்லாம் வெற்றுச் சுலோகங்களே என்று உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டது. ஐரோப்பாவின் ஒவ்வோர் அரச

தலைவருக்கும் தெளிவாகத் தெரியும் அதன் பொருளாதாரம் சேடமிழித்துக் கொண்டிருக்கிறது என்று. அமரிக்க அதிபர் ஒபாமாவிற்கு ஏகாதிபத்தியப் பொருளாதாரம் செத்துக்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகங்கள் இருக்கமுடியாது. அழிந்து போவதிலிருந்து தம்மைத் தற்காலிகமாகப் பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளே இன்று மேற்கொள்ளப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இன்று வரைக்கும் உலகின் பல தலைவர்களும் பொருளாதார வல்லுனர்களும் பல தடவைகள் ஒன்றை மறுபடி மறுபடி கூறிவிட்டார்கள். “கார்ல் மார்க்ஸ் சொன்னது சரியானதே” எனபது தான் அது. (மேலும்....)

கார்த்திகை 14, 2011

OPEN LETTER TO ROY G. WIGNARAJAH, Media Coordinator  for TGTE, Canada

You may recall how on May 19, 1982, a shootout occurred at about 9:45 in the evening at Pondy Bazaar, Mambalam, in Madras between the LTTE’s Sun God, Prabhakaran and PLOTE’s Uma Maheswaran.  When Prabhakaran and Ragavan (alias Sivakumar) of the LTTE armed with revolvers opened fire on Jotheeswaran and Mukundan (alias Uma Maheswaran) of the PLOTE. Remember!  These guys took over the streets of their Motherland, Tamil Nadu.  During this shootout Jotheeswaran sustained bullet injuries in his right and left thighs. Maheswaran was also shot at but escaped unhurt.  Remember! (more...)

கார்த்திகை 14, 2011

அரசு - கூட்டமைப்பு அடுத்த சுற்று பேச்சு 16ம் திகதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், அரசாங்கப் பிரதிநிதிகளுக்கிமிடையிலான 13வது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இப்பேச்சுவார்த்தையில் கலந்துரையாடத் தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் பிரதிநிதிகள் குழு அமெரிக்கா, கனடா மற்றும் லண்டன் ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்த நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு நாடு திரும்பியிருக்கும் நிலையில் அரசாங்கத் தரப்பினருடன் நடைபெறவிருக்கும் இப்பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப் படுமாயின் அதனை அரசாங்கத்தின் சிபாரிசாகப் பாராளுமன்றத் தெரிவுக்குழு விடம் சமர்ப்பிக்கவிருப்பதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.(மேலும்....)

கார்த்திகை 14, 2011

Beyond Prejudice

Sri Lankas Unique Rehabilitation Effort

(Oct. 31, 2011 photo, Marry Anita, left, and Malarvili Paramalingam, former Tamil Tiger rebel combatants, train with other members of Sri Lanka's disabled volleyball team in Colombo, Sri Lanka. Three former Tamil Tiger rebel women combatants are set to represent Sri Lanka at the Asian Sitting Volleyball Open Championship scheduled to be held in Beijing later this month.) (AP Photo/Eranga Jayawardena)

 

Imagine a situation a hardcore Al Qaeda terrorist allowed to live a normal life in the U.S. after a quick rehabilitation. Even Jim McDonald, the head of Amnesty in the U.S. would rebuke such move, calling it a grave threat to the society. How about a rehabilitated Hamas suicide bomber allowed play for an Israeli national football team? One would say “not in this world”. Existing prejudices do not permit such imaginations. In Sri Lanka such imaginations are not only possible but also made a reality. Sri Lanka has become the first country in the world to rehabilitate terrorists. (more....)

கார்த்திகை 14, 2011

தொடரும் வன்முறை

அரபு லீக்கில் இருந்து சிரியா இடைநீக்கம்,  தூதரக உறவுகள் நிறுத்தம்

சிரியாவில் தொடர்ந்தும் வன்முறை நீடித்துவரும் நிலையில் அரபு லீக் அமைப்பில் இருந்து சிரிய அரசு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் அரபு லீக்கில் உள்ள பெரும்பான்மை நாடுகள் சிரியாவுக்கு எதிராக வாக்களித்தன. சிரியாவில் தொடரும் வன்முறைகளை கட்டுப்படுத்த அரபு லீக் முன்வைத்த தீர்வுத் திட்டத்தை சிரிய அரசு புறக்கணித்ததைத் தொடர்ந்தே அரபு லீக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி தமது அங்கத்துவ நாடுகள் சிரியா மீதான தூதரக உறவை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அரபு லீக் சிரியா உடனடியாக வன்முறைய முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளது. எனினும் அரபு லீக் எடுத்துள்ள இந்த முடிவுக்கு சிரிய அரசு கடும் கண்டத்தை வெளியிட்டுள்ளது. மேற்கத்தேய அமெரிக்க திட்டத்திற்கமைய அரபு லீக் செயற்படுவதாக சிரியாவுக்கான அரபு லீக் தூதுவர் யூசுப் அஹமட் அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் குறிப்பிட்டார். இந்நிலையில் சிரியாவுக்கு எதிரான அரபு லீக் தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. மற்றும் பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹக் வரவேற்றுள்ளனர்.

கார்த்திகை 14, 2011

லிபியாவில் தொடர்ந்து மோதல், இருவர் பலி

லிபியாவின் சாவியா நாகரில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகிறது. இந்த மோதல்களில் இருவர் கொல்லப்பட் டுள்ளனர். லிபியாவில் மறைந்திருக்கும் கடாபி ஆதரவாளர்களுடன் மோதல் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது. எனினும் இது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. சாவியா நகரில் தொடர்ச்சி யான துப்பாக்கிச் சத்தம் கேட்டு வருவதாக அங்கி ருப்போர் அல்ஜுராவுக்கு தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை 14, 2011

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை 8.10 மணி அளவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி வெடிச் சத்ததம் கேட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளவுத் துறை அதிகாரிகள், ஏ.கே 47 ரக துப்பாக்கிகளுடன் அநாதையாக நின்றிருந்த காரை பறிமுதல் செய்தனர். ஆனால், அதில் வந்ததாக சந்தேகப்படும் நபர்கள் தப்பிவிட்டனர். இதனால் அங்கே பரபரப்பு எழுந் துள்ளது. சந்தேகப்படும் மர்ம நபர்கள் அதிக அளவில் வந்திருக்கலாம் என்றும் அவர்கள் உடனே தப்பி விட்டதாகவும் கூறப்பட்டது. அமெரிக்காவின் ஏபிஈசி மாநாட்டுக்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலிபோனியா வழியாக ஹவாய் தீவுகளுக்குச் சென்று கொண்டிருப்பதால் இது வெள்ளை மாளிகையை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என கூறப்படுகிறது.

கார்த்திகை 14, 2011

சாதி கடாபிக்கு நைகர் அரசு அடைக்கலம்

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சாதி கடாபிக்கு நைகர் அரசு அடைக்கலம் அளித்துள்ளது. இந்த தகவலை நைகர் ஜனாதிபதி முஹமட் இசோபோ தெரிவித் துள்ளார். தென்னாபிரிக்காவின் பிரெடோ ரிய நகருக்கு வருகை தந்த நைகர் ஜனாதிபதி அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:- மனிதாபிமான அடிப்படையில் சாதி கடாபிக்கு அடைக்கலம் அளிக்கப்பட்ட தாகவும், அகதி போன்று அவர் நடத்தப்படுவார் என்றும் தெரிவித்தார். 38 வயதான சாதி கடாபிக்கு சர்வதேச பொலிஸான இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 14, 2011

ராஜீவ் கொலை வழக்கு

தூக்குத் தண்டனை கைதிகள் மூவரும் நிரபராதிகள்

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள மூவரும் நிரபராதிகள் என மூத்த வழக்குரைஞர் ராம் ஜேட்மலானி தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரையும், மூத்த வழக்குரைஞரான ராம் ஜேட்மலானி சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது அவருடன் ம.தி.மு. க பொதுச் செயலாளர் வைகோவும் இருந்தார். கைதிகள் மூவருடனும் சுமார் 10 நிமிடம் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் ராம் ஜேட்மலானி கூறியது; தண்டனைக் கைதிகள் மூவருக்கும் என்னைத் தெரியாது. அவர்கள் யாருக்காவது நன்றி சொல்ல வேண்டுமெனில் அதை வைகோவுக்குத் தான் சொல்ல வேண்டும். அவர்களிடம் உரையாடும்போது, மூவரும் நிரபராதிகள் என்பதை அவர்களின் வாயால் சொல்ல வேண்டும் என எதிர்பார்த்தேன். அவர்களின் பேச்சில் இருந்து மூவரும் நிரபராதிகள் என்பதை எனது அனுபவத்தின் மூலம் உணர்ந்தேன்.

 

கார்த்திகை 14, 2011

பிரபஞ்சத்தின் கதை

1920ம் ஆண்டு எட்வின் ஹப்பின் என்பவர் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டு போகிறது என்று கண்டுபிடித்தார். பின்னர் பெல்ஜிய நாட்டு விஞ்ஞானி ஜார்ஜஸ் லெமைட்டர் என்பவர், பிரபஞ்சம் என்பது வெடித்துச் சிதறியதால் ஏற்பட்டது என்றார். ஆயிரத்து 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் பால் மண்டலங்களும் இல்லை. நட்சத்திர மண்டலங்களும் இல்லை. கோள்களின் கூட்டமும் கிடையாது. எல்லாப் பொருட்களும் ஓரிடத்தில் இறுக்கமாக அழுத்தப்பட்ட நிலையில் இருந்தன. அதிக அழுத்தமும் மிகுந்த எடையும் தாங்காமல் அவை வெடித்துச் சிதறின. அந்தச் சிதறல்கள் விண்வெளி எங்கும் பரவின. நாளடைவில் அந்த வாயுக்களும் துகள்களும் ஒன்றிணைந்து குளிர்ந்து பல்லாயிரக்கணக்கான பால் மண்டலங்களைக் கொண்ட பிரபஞ்சமானது என்கிறது இக்கொள்கை. (மேலும்....)

கார்த்திகை 14, 2011  

சவுதி அரேபியாவில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கை சந்திப்பதற்காக அவரின் பெற்றோர் இன்றைய தினம் சவூதி பயணம்!

சவுதி அரேபியாவில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கை சந்திப்பதற்காக அவரின் பெற்றோர் இன்றைய தினம் அங்கு பயணமாகவுள்ளனர். ரிஸானாவின் பெற்றோருடன், அரசாங்க பிரதிநிதிகள் சிலரும் சவுதி நோக்கிச் செல்லவுள்ளதாக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் குறிப்பிடுகின்றது. இலங்கை பிரதிநிதிகள் குழுவில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சின் செயலாளர் நிஸ்ஸங்க விஜேரத்ன ஆகியோரும் அடங்குகின்றனர். இவர்கள் நாளைய தினம் ரிஸானாவை சந்திப்பதற்காக, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு செல்லவிருப்பதாக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது. மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் இன்னும் சில பிரதிநிதிகளும் எதிர்வரும் 16 ஆம் திகதி சவுதி அரேபியா வரவுள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகத்தின் உயரதிகாரி ஒருவர் நியுஸ்பெர்ஸ்ட்டுக்கு கூறினார்.

கார்த்திகை 13, 2011

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

இலங்கையை ஆளும் பேரினவாத அரசுகள் பௌத்த சிங்கள் பேரினவாதம் என்ற மாயக் கண்ணாடி ஊடாகவே தமிழர் பிரச்சனையைப் நோக்குவதும்; நிதர்சனமான உண்மை. கூடவே தமிழர் பிரகடனப் படுத்தும் தொப்புள் கொடி உறவு இலங்கை அரசால் தமிழருக்கு கொடுக்கும் உரிமைகள் அவர்கள் பிரிந்து சென்று இந்தியா(தமிழ்நாடு) உடன் இணைந்து விடுவார்கள் என்ற பயப்பிராந்தியை சாதாரண சிங்கள மக்களுக்கும் ஏற்பட ஏதுவாக இருந்தது. இந்த யதார்த்த நிலமைகளை சிங்களப் பேரினவாதம் தனக்கு சாதகமாக பாவிக்கின்றது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காமல் காற்று புகமுடியாத இடத்தில் கூட நாம் புகுந்து எவரையும் எந்நேரமும் என்னவும் செய்வோம் என்ற வீர சாகச் சிந்தனை இறுதியில் 'அவுஸ்திரேலியா புகழ்' அருணாசலம் ஜெகதீஸ்வரன் கட்டிய நிலவறைகளையும் இலங்கை படைகள் ஊடறுத்து தலைவர் நீராடி மகிழந்த நீச்சல் தடாகம் வரை சென்றது அந்தோ பரிதாபம் என்பதைவிட தூர நோக்கற்ற மக்கள் நலன் சாராத செயற்பாடுகளின் விளைவே ஆகும். புலிகளை அழித்த போருக்குப் பின்னர், போருக்கு முன்னரான இலங்கை அரசுகள் போலன்றி வடக்கு கிழக்கும் இலங்கையுடன் இணைந்த பகுதிகள் தான் என்று இலங்கை அரசை செயற்பட வைத்திருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக வேப்பமரம் காணும் இடமெல்லாம் சூலம் குத்தி வைரவப் பெருமானை தமிழர்கள் நிலைநிறுத்தியது போல், அரச மரம் காணும் இடமெல்லாம் புத்தர் சிலையை நிறுவும் செயற்பாட்டை வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் எங்கும் ஏற்படுத்தியிருக்கின்றது. இதைத் தடுத்தி நிறுத்த கருணா அம்மானாலும் முடியவில்லை. ஏன் தேவானந்தாவினாலும் முடியாதபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்ணாவிரதத்தினால் முடியுமா...? (மேலும்....)

கார்த்திகை 13, 2011

சுரேஷ் பிரேமசந்திரனின் புதிய? கண்டுபிடிப்பு

புலிகளை அழிக்க இந்தியா உதவியமை அம்பலம்

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் வகையிலான இலங்கையின் இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவிலான உதவி ஒத்துழைப்புக்களை வழங்கியமை அம்பலமாகியுள்ளதாக சுரேஷ் எம்.பி. தெரிவித்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வினை இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும் இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசு எந்தளவு உண்மைத்தன்மையுடன் இல்லாவிட்டால் இதய சுத்தியுடன் செயற்பட்டு வருகின்றது என்பது தெரியாது. புலிகளுக்கு எதிரான இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவிலான ஒத்துழைப்பினை வழங்கியது குறித்து தற்போது நோர்வே பகிரங்கப்படுத்தியிருந்தாலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத் தளபதிகள் மற்றும் அமைச்சர்கள் இவ்விடயத்தை யுத்தம் நிறைவடைந்த 2009 காலப்பகுதியிலேயே கூறிவிட்டனர். எனினும் இராணுவத்துக்கு உதவியது தொடர்பிலான இலங்கையின் வெளிப்பாட்டை இந்தியா இதுவரையில் மறுக்கவில்லை எனவும் சுரேஷ் எம்.பி. தெரிவித்தார். ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பிறகு புலிகளை இந்தியா தொடர்ந்தும் வளர்த்தெடுக்கும் என்று யாரும் நம்பினால் அது படு முட்டாள்தனம். மேலும் புலிகளின் பிரச்சனை வேறு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனை வேறு, புலிகளின் பிரச்சனை பயங்கரவாதப் பிரச்சனை, தமிழ் மக்களின் பிரச்சனை அரசியல் உரிமை சம்மந்தமான பிரச்சனை.

கார்த்திகை 13, 2011

சமாதான உடன்படிக்கை முன் புலிகளும் றோவும் சந்தித்தனர - எரிக் சொல்ஹெய்ம்!

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக இந்திய அதிகாரிகளை புலிகள் சந்தித்ததாக நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டில் இந்திய ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்ட போதிலும் முதல் தடவையாக எரிக் சொல்ஹெய்ம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் புலிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். எந்த இடத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது என்பதனை எரிக் சொல்ஹெய்ம் வெளியிடவில்லை. புலிகளின் சார்பிலும் இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் யார் சந்திப்பில் கலந்து கொண்டார்கள் என்பது குறித்த தகவல்களையும் அவர் வெளியிட மறுத்துள்ளார். நோர்வே தலைமையிலான சமாதான உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதில் மிகவும் முக்கியமான பங்கினை திரை மறைவில் இருந்து அப்போது இந்தியாவை ஆட்சி செய்த பாரதீய ஜனதா கட்சி மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய உளவுப் பிரிவான றோவும் புலிகளும் சந்தித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திகை 13, 2011

பிரபாகரன் இராணுத்துறையில் விற்பன்னர் என்ற போதிலும் சர்வதேச விவகாரத்தில் பயிலுனர் - எரிக் சொல்ஹேய்ம்!

பிரபாகரன் இராணுத்துறையில் விற்பன்னர் என்ற போதிலும் சர்வதேச விவகாரத்தில் பயிலுனர் அளவிலான அறிவினை கொண்டிருந்ததாக சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்துடன் தொடர்பில்லை என முதலில் பிரபாகரனும், பொட்டு அம்மானும் பாலசிங்கத்திடம் தெரிவித்தாகக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அதனை அவர்கள் ஒப்புக் கொண்டதாக பாலசிங்கம் தன்னிடம் குறிப்பிட்டதாக சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை 13, 2011

இலங்கையின் சமாதானத்தில் பலமான நாடு தலையிடுவதனை இந்தியா விரும்பவில்ல - எரிக் சொல்ஹேய்ம்!

இலங்கை சமாதான முனைப்புக்களில் பலம்பொருந்திய சர்வதேச நாடொன்று தலையீடு செய்வதனை இந்தியா விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இலங்கை பிளவு படுவதனை அனுமதிக்க முடியாது எனவும் இந்திய அதிகாரிகள் திட்ட வட்டமாக குறிப்பிட்டதாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் இந்தியாவின் முக்கியத்துவத்தை மிகவும் தெளிவாக புரிந்து வைத்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக செயற்படுவது எவ்வளவு ஆபத்தானது என்பதனை அன்ரன் பாலசிங்கம் அறிந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 2001ம் ஆண்டு முதல் பத்து தடவைகள் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தாம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை 13, 2011

கலாமுக்கு அவமரியாதை

அமெரிக்க அதிகாரிகளிடம் சோதனை நடத்துவோம் எஸ்.எம்.கிருஷ்ணா எச்சரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அமெரிக்க பாதுகாப்பு படையினரால் சோதனை செய்யப்பட்டு மீண்டும் அவமரியாதை செய்யப்பட்டார். நியூயார்க் விமான நிலையத்தில் அவரது கோட், ஷீவை கழற்றி வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது. வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா இந்த சம்பவம் தொடர்பாக கூறியதாவது:- அப்துல்கலாமிடம் சோதனை செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நிறுத்தப்படா விட்டால் அமெரிக்க உயர் அதிகாரிகளையும் நாங்கள் சோதனைக்கு உட்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபாமாவை எஸ்.எம்.கிருஷ்ணா தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையை அமெரிக்க அரசின் உயர்மட்ட நிலைக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி உள்ளார்.

கார்த்திகை 13, 2011

ஜனவரி முதல் விசா கட்டணங்களில் மாற்றம்

2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் வகையில் விசா கட்டணங்களில் மாற்றம் கொண்டு வரப்படவுளள்ளது. இணையத்தின் மூலம் இலங்கை விசா பெறுவதற்கான கட்டணங்களிலேயே மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சார்க் நாடுகளின் பிரஜைகளுக்காக விசா கட்டணம் 10 அமெரிக்க டொலர்களாகவும் ஏனைய நாடுகளுக்கான கட்டணத் தொகை 20 அமெரிக்க டொலர்களாகவும் மாற்றப்பட வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை 13, 2011

இலங்கையில் சமாதான முயற்சி பயங்கரவாதத்திற்கு எதிரான போர்

நோர்வே வெளியிட்டுள்ள 202 பக்க அறிக்கையில் பல விடயங்கள் கசிவு!

இந்தியாவை அதிகம் சாடல், தான் சமாதான தூதராக சரியாக செயற்பட்டதாக வலியுறுத்தல்

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இந்திய அமைச்சர் பி. சிதம்பரம் பிரபாகரனுடன் தொடர்புகொண்டு, ஆயுதங்களை கீழே வைப்பார்கள் என்ற முன்னதாகவே தயா ரிக்கப்பட்ட அறிக்கையொன்றை புலிகள் ஏற்றுக் கொள்ளுமாறு யோசனை கூறிய தாகவும் நோர்வேயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ஆனால் அவர் எவ்வாறு பிரபாகரனை தொடர்புகொண்டார் என்று கூறப்படவில்லை.)  எனினும் இந்த நடவடிக்கை விடயம் புலிகள் சார்பு தமிழக அரசியல்வாதியான வைகோவுக்கு கசிந்தது. அவர் இதை காங்கிரஸின் ஒரு தந்திரம் எனக்கூறி நிராகரித்ததுடன் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று புலிகளை மீட்கும் என புலிகளுக்கு உறுதியளித்தார் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடைபெறவில்லை. இந்தி யாவில் லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட வேளையில் பிரபாகரன் கொல்லப்பட்டார். (மேலும்....)

கார்த்திகை 13, 2011

பிரதேசவாதத்திற்கே இந்நிலை எனில் இனவாதம் எம்மாத்திரம்?

பிரதேசவாத ரீதியான கருத்துக்கள் மீண்டும் தளிர்விட ஆரம்பித்துள்ளதோ எனும் சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன் அது ஒருவித பய உணர்வையும் தோற்றுவித்துள்ளதை கடந்த வாரம் ஊடகங்களில் வெளியாகிய சில செய்திகள் தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளன. இத்தனை அழிவுகளையும் சந்தித்த பின்னரும் தமிழ் மக்களுக்குள்ளேயே பிரதேசவாதம் பிரித்தாள முயலுமானால் இனவாதம் தமிழினத்தை எவ்வளவு தூரம் நசுக்க முயலும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். முப்பது வருடகால யுத்தம் தமிழ் மக்களை அழித்த போது வடக்கு, கிழக்கு, மலையகம் என்று பார்க்கவில்லை. ஒருவேளை விடுதலைப் புலிகள் பிரதேச ரீதியில் தமது உறுப்பினர்களை பிரித்தாண்டிருக்கலாம். அதனால்தான் அவர்களில் இன்று பெயர் சொல்லக்கூட ஒருவர் கூட இல்லாது முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்களோ தெரியாது. (மேலும்.....)

கார்த்திகை 13, 2011

மனோ கணேசனுக்கு எனது ஆசனம் தேவைப்படுகிறதா? - சுவாமிநாதன் MP

ஜனநாயக மக்கள் முன்னணி யின் தலைவர் மனோ கணேசனுக்காக ஆசனத்தை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் மனோ கணேசனுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட தாக வெளியான தகவல்களில் உண்மை யில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரணில் விக்ரமசிங்க லண்டன் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதன் பின்னர் மனோ கணேசனுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான எந்தவொரு உடன்படிக்கை யும் கைச்சாத்திடப்படவில்லை என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுவாமி நாதன் குறிப்பிட்டுள்ளார். தமது பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை எவருக்காகவும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கார்த்திகை 13, 2011

யாழ். அதிபர் வெட்டிக் கொலை சம்பவம்

வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் மீது சந்தேகம்?

யாழ்ப்பாணம் கந்தர்மடப் பகுதியில் சிவசுப்பிரமணியம் தயாபரன் என்ற அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புலன் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலி ஸார் முயன்று வருவதாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப் பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார். பாடசாலை அதிபரின் கொலை தொடர் பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த வையாவது, இந்தப் பாடசாலை அதிபர் சிவசுப் பிரமணியம் தயாபரன் மீசாலை மேற்கு மீசாலையைச் சேர்ந்தவர், திருமணம் முடித்துள்ளார். ஆனால் பிள்ளைகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அதிபருக்கு இரு வீடுகள் இருக்கின்றன. ஒன்று மீசாலையில் மற்றையது, கந்தர் மடத்தில். கந்தர்மடத்திலுள்ள வீட்டில் நான்கு யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்களும் மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவரும் வாடகைக்கு இருப் பதாகவும் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 13, 2011

கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை

தமிழ்த் தலைவர்களின் ஒத்துழைப்பை கோரி ஒன்றுபட அமீர் அலி கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சி னையை தீர்த்து வைப்பதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தற்போதைய தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம். எஸ். எஸ். அமீர்அலி தெரிவித்தார். முஸ்லிம் மக்களுக்கு காணிப் பிரச்சினை உண்டு என்பதை நியாய பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க மாவட்டத்திலுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும். மட்டக் களப்பு மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சி னையை தமிழ் முஸ்லிம் மக்கள் சேர்ந்து தீர்த்து கொள்ளாவிட்டால் பெரும்பான்மை சமூகத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தை துண்டாடும் அபாயம் இருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இதற்கு மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஆளாகிவிடக் கூடாது. காணிப்பிரச்சினையை வைத்து தமிழ், முஸ்லிம் சமூகங்களை கூறுபோட்டு சமூகங்களை பிரித்து சமூகங்களுக்கிடையில் விரிசலையும் குரோத மனப்பாங்கையும் வளர்க்க கூடாது. இந்த விடயத்தில் அரசியல் தலைமைகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

கார்த்திகை 13, 2011

மகளுக்கு பிணை கிடைக்காததால் துவண்டு போயுள்ள கருணாநிதி

கடந்த ஐந்து மாதங்களாக தில்லி திஹார் சிறையில் இருக்கும் கனி மொழிக்கு பிணை கிடைக்கும் அவரை அழைத்து வரலாம் என்று டில்லி சென்றிருந்த தி.மு.கவின் மூத்த தலைவர்களும் கலைஞரின் உறவினர்களும் கடும் அதிர்ச் சியோடு சென்னை திரும்பியிருக்கின்றனர். அன்றாடம் அறிவாலயத்திற்கு வந்து பணிகளை கவனிக்கும் கலைஞர் வீட்டை விட்டு அவரின் கோபாலபுர வீட்டின் அறை யைவிட்டே சில நாட்களாக வெளியில் வரவில்லை. இனி கனிமொழிக்கு பிணை கிடைக்குமா? அவர் சிறை மீண்டு சென்னை வருவாரா? என்ற கவலை எல்லோரையும் பீடித்துள்ளது. கனிமொழி மீது சுமத்தப்பட்டுள்ள கலைஞர் டிவிக்கு லஞ்சமாக 200 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டது தொடர்பான குற்றச்சாட்டை விட நம்பிக்கை மோசடி வழக்கே பெரிய விஸ்வரூபம் எடுத்திருப் பதாகத் தெரிகிறது.

கார்த்திகை 13, 2011

2011 டிசம்பருக்குள் தீர்வை முன்வைக்குமாறு அரசை வலியுறுத்தவுள்ள தமிழ் கூட்டமைப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அரச தரப்பிடம் கடந்த சந்திப்புக்களின் போது முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளுக்கு இணக்கம் காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக மாவைசேனாதிராசா எம்.பி. தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் அமெரிக்கா, கனடா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று இலங்கையின் இனப்பிரச்சினை, தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடிவிட்டு வந்துள்ள நிலையில் அரச தரப்புடனான அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தை முக்கியம் வாய்ந்ததாக அமையுமென கருதப்படுகிறது. அன்றைய தினம் மிக உறுதியாக ஒரு விடயத்தை அரசாங்கத்திற்கு கூற இருக்கிறோம். பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத் தடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக் குள் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக அரசாங்கம் திட்டத்தை முன்வைத்து அதற் குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் தெரிவிக்க இருக் கிறோம் என்று மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

கார்த்திகை 13, 2011

ஈரானுக்கு அஞ்சும் இரண்டு வகை சக்திகள்
மத்திய கிழக்கு நிலைமைகள் சாதகமாகும் வரை காத்திருக்கும் நேட்டோ விமானங்கள்

ஈரானை எண்ணி இரண்டு வகையினர் பயப்படுவது போலுள்ளது. மேற்கு லகமும் அமெரிக்காவும் முதலாவது வகை யினர். ஈரானை நேசிப்போர் அதன் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அக்கறை கொண்டுள்ளோர் இரண்டாம் வகையினர். மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்காவுக்கு பிடிக்காத நாடுகளில் எஞ்சியுள்ளது ஈரான் மாத்திரமே. இதற்கு முன்னர் ஈராக்கும் இந்தப் பட்டியலில் இருந்தது. 2003 ஆம் ஆண்டு படையோடும் போர் முரசோடும் ஈராக்கிற்குள் நுழைந்த அமெரிக்கா தனக்குப் பிடிக்காத சதாம் ஹ¤ஸைனை சிம்மாசனத்திலிருந்து தூக்கி வீசும்வரை குண்டுகளைக் கொட்டியும் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தும் துவம்சம் செய்தது. இந்தப் பெரும் போரில் கல்லறைகளுக்குப்போனோர் ஏராளம் ஊனமுற்று கட்டில்களில் கிடப்போர் எம்மாத்திரம் இவைகளைக் கணக்கிடவோ கருத்திலெடுக் கவோ இப்போது நேரமில்லை. 2007 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹஸைன் தூக்கிலிடப்பட்ட பின்னர்தான் அமெரிக்காவின் கோபாவேஷம் குறைந்தது. (மேலும்.....)

கார்த்திகை 13, 2011

Tigers get Rs. 4 Mil. In Canada – Kerala arrest Tiger leader   

The Canada secret police has discovered that the 490 Sri Lankan Tamils who were in the “Sun Sea” ship arrested while entering Canada, has promised to pay US $ 40,000/= each to the Canadian Tiger network. The Canadian secret police has also arrested Sea Tiger chief Vinothan, who acted as the captain of this ship. During questioning of these people, the Canadian police has found out that all Tamil refugees brought in to Canada by Tiger ships must pay US $ 40,000/= within a year to the Canadian Tiger network. It was also found out that this ship has come to Canada on 17th of October 2009 as well. In separate incident Kerala police has arrested Sunder Raj Sivakumar alias Siva, who is known to be the main transport coordinator of the Tigers responsible for sending ship loads of former LTTE cadres to four countries, with the intention to revive the LTTE. He has already admitted to sending 35 trawlers of former cadres that managed to run off to India, to various countries and also admitted that he did so with the intention of reviving the LTTE again. He also confessed to sending more than 1,500 ex cadres abroad in this manner.

கார்த்திகை 13, 2011

கனடாவில் நடைபெற்ற தீபாவளி விழாவில் கலந்து கொண்டமை பற்றி இந்து சமயக் குருக்கள்

கடந்த வாரம் தீபாவளி பூஜையில் நான் கல்ந்து கொண்டமை பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரஸ்தாபித்ததாக பக்தர் ஒருவர் இன்று காலை என்னிடம் குறிப்பிட்டார். நிகழ்ச்சியை நான் பார்க்காத படியால் அவர் குறிப்பிட்டது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியாது. இந்துக்களின் வழிபாடாகிய தீபாவளி நிகழ்ச்சியில் பூஜை செய்வதற்கு மதகுவாக என்னை அழைத்திருந்தார்கள். ஆலயத்தின் நெடுங்கால பக்தர் சிலர் தூதராலயத்துடன் இணைந்து என்னிடம் கேட்டிருந்தார்கள். மதகுரு என்ற வகையில் பக்தர்களின் இந்த வேண்டுகோளை ஏற்று எமது சமயத்துக்குரிய பூஜையை நிகழ்த்த அங்கு சென்றிருந்தேன். மற்றும்படி எனக்கு எந்தவிதமான நோக்கமும் இருக்கவில்லை. ஆண்டாண்டு காலமாக நாம் கொண்டாடும் தீபாவளி தமிழர்களின் வழிபாடு அல்ல என்பதும் தமிழர்கள் கொண்டாடக்கூடாது என்பதும் எனது அறிவுக்கு உட்பட்டவரையில் இந்துசமயமக்களுக்கு மிக மனவருத்தத்தை தரும் என்பது எனது அபிப்பிராயம். எம் அனைவரின் நல்லெண்ணங்களும் ஈடேற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றியுடன் தியாகராஜாக்குருக்கள் கணஸ்சுவாமிகள்"

கார்த்திகை 12, 2011

1997–2009ம் ஆண்டு வரையில் நோர்வே (நேட்டோ உலகம்)

366 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு

18000 மில்லியன் புலிகளுக்கு வழங்கியது

1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நோர்வே 366 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சமாதான முனைப்புக்கள் குறித்து நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், நோர்வே மற்றும் இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் புலிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி உதவி வழங்கப்பட்ட பெரும்பான்மையான இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உரிய முறையில் பணத்தைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவின் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு 60 மில்லியன் நோர்வே நோக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மிலிந்த மொரகொட, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் நோர்வே சமாதான முனைப்புக்களில் முக்கிய வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட மொரகொட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை வெளி வளத் திணைக்களத்திற்கு 300000 மில்லியன் நோக்குகளும், இலங்கை அரசாங்கத்திற்கு 70000 மில்லியன் நோக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. புலிகளின் சமாதான செயலகத்திற்கு 18000 மில்லியன் நோக்குகள் வழங்கப்பட்டுள்ளன. சர்வோதய மற்றும் சேவாலங்கா ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இவ்வாறு பணம் வழங்கப்பட்டுள்ளது.

கார்த்திகை 12, 2011

இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததாக நோர்வே அறிவித்துள்ளது

இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததாக நோர்வே அறிவித்துள்ளது. இலங்கை சமாதான முனைப்புக்கள் தொடர்பில் நோர்வே நேற்று விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் சமாதான முனைப்புக்கள் எதனால் தோல்வியடைந்த என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டுமென இந்தியா பெரிதும் விரும்பியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தின் மீது அனுதாபம் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோர்வே மத்தியஸ்தத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முனைப்புக்கள் தோல்வியில் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 12, 2011

ஜெயலலிதா அழைப்பை எற்பாரா....?

உண்மை அறிய இலங்கை வருமாறு ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி அழைப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம். அவரை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் தமிழர் பகுதிகளில் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படு கின்றேன். ஜெயலலிதாவும் இதை நேரில் வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். மாலைதீவில் நடைபெறும் 17வது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கு ‘டைம்ஸ் நெளவ்’ டிவிக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை இலங்கைக்கு வரவேற்பதாகவும் அவர் சொல்லியுள்ளார். (மேலும்....)

கார்த்திகை 12, 2011

2018ம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இலங்கையின் ஹம்பாந்தோட்டை இழந்துள்ளது!

2018ம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இலங்கையின் ஹம்பாந்தோட்டை இழந்துள்ளது. மேற்கிந்திய தீவு - சென் கீட்ஸ் மெரியட்டில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் தகுதிபெற்றுள்ளது. பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை 2018ம் ஆண்டு நடத்த இலங்கையின் ஹம்பாந்தோட்டை மற்றும் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் ஆகியன போட்டியிட்டன. 71 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொண்ட நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு 43 வாக்குகளும் இலங்கைக்கு 27 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 2018ம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை அவுஸ்திரேலியா பெற்றது.

கார்த்திகை 12, 2011

உல்லாசப் பிரயாணத்துறை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வலுவுடையது

தெற்காசிய நாடுகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இலங்கை, இன்று பொருளாதாரத்துறையில் மறுமலர்ச்சியை அடைந்து கொண் டிருக்கிறது. நாட்டின் தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் உல்லா சப் பிரயாணத்துறையை மென்மேலும் அபிவிருத்தி செய்வதன் மூலம் இல ங்கையை தெற்காசிய நாடுகளின் உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்க பூமியாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளும் உல்லாசப் பிரயாணத்துறையை மேம் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும், பங்க ளாதேஷில் இருந்துவரும் அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாகவும், பாகி ஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவும் இம்மூன்று நாடுகளுக்கும் வெளிநாட்டு உல் லாசப் பயணிகள் செல்வது குறைவாக இருந்து வருகின்றது. இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுடன் இலங்கை மற்றும் மாலைதீவு குடி யரசிற்கே அதிகமாக உல்லாசப் பிரயாணிகள் வருகை தருகிறார்கள்.(மேலும்....)

கார்த்திகை 12, 2011

மீனவர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வுகாண இலங்கை-இந்தியத் தலைவர்கள் இணக்கம்

இலங்கை இந்தியத் தலைவர்கள் மீனவர் தொடர்பான பிரச்சினைக்கு சமாதானமான தீர்வை ஏற்படுத்திக் கொள்வதென்ற இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளார்கள். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற் றும் செயற்பாடுகளில் நல்ல முன்னேற் றங்கள் ஏற்பட்டுள்ளது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கையின் வடபகுதியின் கடற்பிரதேசத்தில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிப்பதனால் எழுந்துள்ள முரண்பாடுகளை சமாதானமாகத் தீர்த்து வைப்பது குறித்து இருதேசத் தலைவர்களும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. (மேலும்....)

கார்த்திகை 12, 2011

தென் கிழக்கு ஆசியநாட்டுத் தலைவர்கள் சாதனை படைப்பார்களா...?

கார்த்திகை 12, 2011

தனி மாநிலம் இல்லை

தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் விரைவில் அறிவிப்பு

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி மாநிலம் உருவாக்குவதற்கு பதிலாக, தெலுங்கானா தன்னாட்சி கவுன்சிலை அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஹைதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களை ஒன்றிணைத்து தனி மாநிலம் உருவாக்கக்கோரி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில், கடலோர ஆந்திரா மற்றும் ராயல்சீமா பகுதி மக்கள், ஆந்திராவை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினை குறித்து ஆராய மத்திய அரசு, ஸ்ரீகிருஷ்ணா கமிஷனை அமைத்தது. இந்த கமிஷன், ஆந்திராவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நிலைமையை ஆராய்ந்து அறிக்கை அளித்தது. ஆந்திராவை பிரிப்பதால், சாதகத்தை விட பாதகங்கள் தான் அதிகம் என, இந்த கமிஷன் தன் அறிக்கையில் தெரிவித்தது. இதனால், தெலுங்காகாவை உருவாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கிடப்பில் போட்டது. (மேலும்....)

கார்த்திகை 12, 2011

கிரிஸ் புதிய பிரதமராக லூகாஸ் பாப்படீமோஸ்

நீண்ட நாள் குழப்பத்திற்கு பின்னர் கிரீஸ் நாட்டில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த கிரீஸ் நாடு கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதனையடுத்து ஐரோப்பிய யூனியனை சேர்ந்த மற்ற நாடுகள் நிதியுதவி அளிக்க முன்வந்தது. தொடர்ந்து உலக வங்கியும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க நிதியுதவி அளிக்க தயாரானது. இருப்பினும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேலை வாய்ப்புகளை குறைக்க முன்வந்ததால் உள்ளநாட்டில் வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டது. இதனால் உள்நாட்டிலும் பிரதமரின் போக்கை கண்டித்து கலவரம் மூண்டது. இந்நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதற்கு முன்னோடியாக பிரதமர் பதவி வகித்த ஜோர்ஜ் பாப்பன்டிரியோ தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பல்வேறு குழப்ப நிலையில் ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் லூகாஸ் பாப்படீமோஸ் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தெரிவு செய்யப்பட்ட புதிய தற்காலிக பிரதமர் ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் துணைத் தலைவராக இருப்பதினால் கீரிஸ் இல் சாதாரண மக்கள் மீதான பொருளாதாரச் சுமைகள் அதிகரிக்கலாம் என் பொருளாதார அரசியல் நிபுணர்கள் கருத்த தெரிவிக்கின்றனர். இதனால் கிரீஸ் மேலும் குழப்பகரமான நிலமைகள் தோன்றும் என் எதிர்பார்க்கப்படுகின்றது.

கார்த்திகை 12, 2011

காலம்கடந்த தீர்ப்பானாலும் வரவேற்கத்தக்கத் தீர்ப்பு

குஜராத் மாநிலத்தில் சர்தார்புரா பகுதியில் முஸ்லிம்கள் 33 பேர் உயிரோடு எரித்துக் கொல் லப்பட்ட வழக்கில் நீதிக்கு வெற்றி கிடைத்துள் ளது. 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் அம் மாநிலத்தில் பாஜக அரசு துணையுடன் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 அன்று இரவு மெஹாசானா மாவட்டம் சர்தார்புரா நகரில் சிறுபான்மையினர் வசித்து வந்த வீட்டை சுற்றி வளைத்த சுமார் 500க்கும் மேற்பட்ட இந்துத்துவா குண்டர்கள் அந்த வீட் டுக்கு தீவைத்தனர். அது குடிசை வீடு அல்ல. செங்கற்களால் கட்டப்பட்ட பக்கா வீடு. அப் படிப்பட்ட வீடே தீயிற்கு இரையாக்கப்பட்ட தென்றால், வன்முறையாளர்கள் எந்த அளவிற்கு வெறியாட்டம் நடத்தியிருப்பார்கள் என்று விளக்கத் தேவையில்லை. (மேலும்....)

கார்த்திகை 12, 2011

ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை - அன்னா ஹசாரே

ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என அன்னா ஹசாரே திட்டவட்டமாக மறுத்துள்ளார். சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் அடிக்கடி கூறி வருகிறார். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், நாங்கள் அன்னாவுக்கு ஆதரவு அளிக்கிறோம். அவரது இயக்கத்தில் எங்களின் பெரும்பாலான தொண்டர்கள் இணைந்துள்ளனர். அன்னா இயக்கத்தை ஆதரிக்க வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு நாங்கள் எதுவும் கூறவில்லை. ஊழலற்ற சிறந்த நிர்வாகிகளை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. அன்னா கேட்டுக்கொண்டால், அவரது இயக்கத்தில் நாங்கள் கலந்துகொள்வோம். ஆனால், அன்னாவிடம் இருந்து இதுவரை எந்த வேண்டுகோளும் வரவில்லை என்றார். இது குறித்து நேற்று முன்தினம் பேட்டியளித்த அன்னா, 'எனக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை. அன்னா யாரென்று எல்லோருக்கும் தெரியும் எனக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை' என்றார்.

கார்த்திகை 12, 2011

“தேவதைக் கதையை உண்மையாக்கும் கம்யூனிஸ்டுகள்”- ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு அதிகரிப்பு 

உலகின் முதல் புரட்சி நடைபெற்று 94 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். தலைநகர் மாஸ்கோவில் உள்ள வெர்ஸ்க்யா சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். பெரும்பாலானவர்கள் கைகளில் செங்கொடிகளை ஏந்தியிருந்ததால் சாலை முழுவதும் செம்மயமாகக் காட்சியளித்தது. இந்த ஊர்வலத்திற்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கென்னடி ஜூகானோவ் தலைமை வகித்தார். நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்றும், ஒவ்வொரு ரஷ்யருக்கும் அந்த வெற்றியால் பலன் கிடைக்கும் என்றும் அவர் ஊர்வலத்தில் பேசும்போது குறிப்பிட்டார். சிவப்பு அமைச்சரவையில் பங்கேற்கப்போகும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர்களையும் அவர் பட்டியலிட்டார். (மேலும்....)

கார்த்திகை 12, 2011

புலிப்பினாமி ஊடகத்தினரின் பொய்யான செய்திகளை கொஞ்சம் பாரீர்!!

(கி.பாஸ்கரன்)

கனடாவில் வாழும்   புலம்பெயர்  தமிழர்களில்  முக்கால்வாசிப்பேர் ஜரோப்பிய நாடுகளிலிருந்து போனவர்கள் தான்.   ஆனால்  அங்குபோய்  அகதியந்தஸ்து கோரியபோது   தாங்கள்   சிறிலங்காவிலிருந்து   நேரவருகிறோம் என்று சொல்லியிருப்பார்கள்.  அதைவிட,   சிறிலங்கா   இராணுவத்தால்  துன்பப்பட்டு ,    இலங்கையில்  வாழ  முடியாததால்   தாங்கள்  கனடாவுக்கு  வந்ததாக   இல்லாதபொல்லாத பொய்   சொல்லி   அகதியந்தஸ்த்து   கோரியிருப்பான். அப்படியானால்  ஜரோப்பாவில் சிறிலங்கா  இராணுவம் இருந்ததா?  தமிழர்கள் பொதுவாக பொய்யர்கள்.   அது  இரத்தத்துடன்  கலந்த விடயம். அதைவிட  நான் சொல்ல வந்தவிடயம்  மிகவும் முக்கியமானது . வெளிநாடுகளில்  உள்ள   புலிப்பினாமி    ஊடகங்களை   நடத்தும்  தமிழர்கள்  பொய்யிலயே  பெரிய  பொய்யனுகள்.  அவங்கள்  தாங்கள்  நடத்தும்  ஊடகங்கங்கள்  மூலம்  கடந்த   மூன்று  சாகாப்த  காலமாக  நஞ்சை  (பொய், இனவாதம் ) கக்கி கக்கி  ‘புலன்  மங்கிய  புலம்பெயர் தமிழர்களை’ மூளை  சலவை  செய்துவைத்திருக்கிறார்கள்.    மாடுகளுக்கு  புண்ணாக்கு  போட்டு   வளர்த்த   மாதிரி   நஞ்சை  ஊட்டி   ‘புலன்  மங்கிய  புலம்பெயர் தமிழர்களை’ வளர்த்து   வைத்திருக்கிறார்கள். (மேலும்....)

கார்த்திகை 12, 2011

‘உடலை மும்பையில் புதைக்க வேண்டும்’ - நிழல் உலக தாதா தாவூத்

இறந்த பிறகு தன் உடலை மும்பையில் புதைக்க வேண்டும் என்று நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளான். கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்தவன் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். குண்டு வெடிப்புக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டான். அங்கு, கராச்சியில் ஒளிந்திருக்கும் அவன், பாகிஸ்தான் உளவுத் துறையின் பாதுகாப்புடன் தனது சட்டவிரோத தொழிலை தொடர்ந்து செய்து வருகிறான். இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத்தை அமெரிக்க அரசு சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து இருக்கிறது. தாவூத்தை ஒப்படைக்கும்படி பாகிஸ்தான் அரசிடம் இந்தியா பலமுறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், தாவூத் பாகிஸ்தானிலேயே இல்லை என்று அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், தாவூத் தற்போது கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்றாஹீமுக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 11, 2011

உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வே நீடித்து நிற்கும்- மாலைதீவில் மஹிந்த

உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வே நீடித்து நிற்கும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது நாடுகள் முரண்பட்டுக்கொண்டிருக்கும் விவகாரங்களுக்கான தீர்வுகள் இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்கக்கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 17 ஆவது உச்சிமாநாடு மாலைதீவு அட்டு நகரில் நேற்றுப் பிற்பகல் ஆரம்பமானது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒருவரின் மன அமைதி அவருள்ளேயே இருக்கின்றது என்று கூறிய அவர் கௌதம புத்தரின் வார்த்தைகளை தமது உரையின் போது நினைவுகூர்ந்தார். சார்க் பிராந்தியத்திலுள்ள எமது தனித்துவமான மனித வளங்களின் ஆற்றலில் எப்போதும் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். எமது மக்களின் சிறப்புத்தேர்ச்சியை வளமூட்டுவதும் அபிவிருத்தி செய்வதும் சார்க் நாடுகளின் தலைவர்களான எமது கடமையாகும். இதனாலேயே நாங்கள் சமூக செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களில் உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கிறோம். தலைமுறை தலைமுறையாகக் கையளிக்கப்பட்ட எமது சொந்த கலாசார பாரம்பரியங்கள் அபிலாஷைகள் நம்பிக்கைகள் என்பவற்றின் அடிப்படையிலேயே எமது தேசங்கள் முரண்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதற்குத் தீர்வு காண்பது மிகவும் அவசியமாகும். தீர்வுகளை எமது சமூகங்களுக்கு இறக்குமதி செய்யக்கூடாது. உள்மட்டத்திலேயே இது உருவாக்கப்படவேண்டும். எமது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் கருவியாக நாம் இந்த சார்க்கை பயன்படுத்த வேண்டும்.

கார்த்திகை 11, 2011

யாழில் அதிபர் ஒருவர் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம், வரணி கரப்பன்குறிச்சி அரசினர் பாடசாலையின் அதிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மெக்சி புரொக்டர் வீரகேசரிக்குத் தெரிவித்தார். 40 வயதான சிவசுப்பிரமணியம் தயாபரனே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.இரு தினங்களாக மீசாலையிலுள்ள தனது வீட்டுக்கு இவர் வராமை காரணமாக அவரைத் தேடிச் சென்ற அவரது உறவினர்கள் யாழ். கந்தர்மடம் புகையிரத வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையொன்றில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததையடுத்து குறித்த அதிபரின் சகோதரன் நித்தியானந்தனால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டின் அறையிலிருந்து சடலத்தை மீட்டுள்ளனர். இவரது உடலின் பல பாகங்களிலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டுள்ளதோடு யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்த்திகை 11, 2011 ___

ஐரோப்பிய ஒன்றியம் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்

கடந்த வாரம் கிரேக்கம் இந்தவாரம் இத்தாலி. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் இத்தாலி திவாலாகும் நிலைக்கு வந்துள்ளது. இத்தாலியில் பல் தேசிய வியாபாரியும் தற்போது வெளியேறும் பிரதமருமான சில்வியோ பொலஸ்கோனி உட்பட பெரு நிறுவன முதலாளிகள் சொத்துக்க்ளைக் குவித்து வைத்திருக்கும் நிலையில் இத்தாலியின் கடன் தொகை மட்டும் 110 பில்லியன் யூரோக்கள். இந்தப் பணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த ஜீ.டிபி தொகையை விட 1.2 மடங்கு அதிகமானதாகும். இத்தாலியின் முன்னைய கம்யூனிஸ்ட் கட்சியான தற்போதைய ஜனநாயகக் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளது. இத்தாலியின் இன்னொரு வலது சாரிக் கட்சியான ஜனநாயக் கட்சி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஐரோப்பிய ஒன்றியம் கேள்விக் குறியாகியுள்ளது. எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாள் கடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளே இப்போது மேற்கொள்ளப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடர்ந்து ஏனைய மேற்கு நாடுகள் அழிவையும் போராட்டங்களையும் எதிர் நோக்குகின்றன. தோல்வியை சீரமைப்பதற்கு இந்த நாடுகள் மேலும் யுத்தங்களைக் கட்டவிழ்த்து விடலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

கார்த்திகை 11, 2011

ஏகாதிபத்தியத்தின் ஏஜண்டுகள், பணத்திற்காக மக்களை பலியிடும் பரதேசிகள் கூட்டமைப்பினருக்கு சொந்த புத்தி பற்றி பேச அருகதையில்லை

கருணாவும் பிள்ளையானும் சொந்த புத்தியற்றவர்கள் என்று கண்டு பிடிப்புகள் வேறு. யாருக்கப்பா சொந்த புத்தியில்லை? பிரபாகரன் இருக்கும் வரை கூட்டமைப்பினர் சொந்தபுத்தியிலா செயல்பட்டீர்கள் பணம் சம்பாதிப்பதனையே குறிக்கோளாகக்கொண்டு பயங்கரவாதிக்கு பாத நமஸ்காரம் பண்ணியதை மறந்துவிட்டீர்களா? அப்போது பொட்டம்மானின் புத்தி, பின்னர் பொன்சேகாவின் புத்தி, இப்போது ராபட் பிளேக்கின் புத்தி. ஏகாதிபத்தியத்தின் ஏஜண்டுகளான கூட்டமைப்பினருக்கு சொந்த புத்தி பற்றி பேச அருகதையில்லை. ஆனால் முதலமைச்சர் சந்திரகாந்தன் உங்களைப்போல் இல்லை எலிவளை ஆனாலும் தனிவளை என்று தனிக்கட்சியை உருவாக்கி உங்களையெல்லாம் மூக்கில் விரலை வைக்கச்செயதவர். (மேலும்...)

கார்த்திகை 1012011

ஜனாதிபதி தலைமையிலான ஒரு தேசியக் கட்சியில் பயணிப்பதுதான் சிறந்த விடயம்!- அமைச்சர் வி.முரளிதரன்

ஒரு தேசிய கட்சியில் நாங்கள் பயணிப்பது தான் சிறந்த விடயம். இனங்களையோ மதங்களையோ பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சியிலே நாங்கள் இருந்தோமானால் மீண்டும் குரோதங்களும் பிரச்சனைகளும் உருவாக்கப்பட்டு எங்களுக்குள் பிளவுகள் ஏற்படத்தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஒரு தேசியக் கட்சியில் போகும்பொழுது எமது உரிமைகளும் பாதுகாக்கப்படும் வளமும் வந்துகொண்டிருக்கும் மக்களிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்படும். நாம் போராடியிருக்கிறோம். இதற்கும் காரணம் அரசியல்வாதிகள் தான். அன்றிருந்த அரசியல்வாதிகள் இரண்டு பக்கமும் துவே~ங்கள் பேசினார்கள். தமிழ் அரசியல்வாதிகளும் பேசினார்கள் சிங்கள அரசியல்வாதிகளும் பேசினார்கள். அதனால் பாரிய விரிசலும் குரோதமும் வந்தது. பேசிய அரசயல்வாதிகளெல்லாம் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்கள். நாங்கள் ஆளுக்காள் அடிபட்டு கிட்டத்தட்ட 90ஆயிரம் பேர் இறந்தோம். ஓடிய அரசயல்வாதிகளெல்லாம் இப்போது வந்துவிட்டார்கள். (மேலும்...)

கார்த்திகை 11, 2011

Deepavali Celebrated in Canada amidst attempts to disrupt the event

The Sri Lanka High Commission in Ottawa, Canada and the Consul General’s Office in Toronto in collaboration with the Sri Lankan Tamil Community, for the second time, organised a colourful event to celebrate the Deepavali festival 2011 on Sunday 6th November at the Korean Cultural Centre in Toronto. The significance of this year’s event was the participation of large numbers from the Tamil community despite the repeated requests by pro-LTTE elements to boycott the event. There were also attempts to disrupt and sabotage the programme by infiltrating their supporters to the event, but the programme went on successfully as planned. Prior to the event there were repeated announcements on a Tamil radio channel requesting the People to join a demonstration against the government of Sri Lanka ,which was staged outside the premises with around 100 people. (more....)

கார்த்திகை 11, 2011

ஊட்டியில் உறை பனி

ஊட்டியில் இந்த ஆண்டு, சற்று முன்னதாகவே பனிக்கலாம் தொடங்கியுள்ளதால், குறைந்தபட்ச வெப்பநிலை 8 பாகை செல்சியசாக மாறியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உட்பட பல்வேறு பகுதிகளில், சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த செவ்வாய்க்கிழமை முதல், வெயில் தலைகாட்ட தொடங்கியதால், மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால், மழையால் ஏற்பட்ட குளிரின் கடுமையை விட, கூடுதலான குளிர் நிலவும் வகையில், ஊட்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் உறை பனிக்கலாம் தொடங்கியது. நேற்றுமுன்தினம் அதிகாலையில் ஊட்டியில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள புல்வெளிகள், “வெள்ளை கம்பளம்” போர்த்தியதைப் போல காணப்பட்டன. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால், குறைந்தபட்ச வெப்பநிலை, 8 பாகை செல்சியசாக குறைந்துள்ளது. மழை பெய்யாமல் இருந்தால், உறை பனி பொழிவு அதிகரித்து, வெப்பநிலை பூச்சியம் பாகை செல்சியசாக மாறவும் வாய்ப்புள்ளது. ஜனவரி வரை பனி பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திகை 11 2011

ஐஸ்வர்யாராய்க்கு இன்று பிரசவம்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று பிரசவம் நடக்கிறது. நடிகை ஐஸ் வர்யா ராய் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த ஆண்டின் விசேஷ தினமாக கருதப்படும் இன்று (11.11.11) அவருக்கு பிரசவம் நடக்கிறது. இதற்காக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவ ருடன் கணவர் அபிஷேக், அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சனும் தங்கியுள்ளனர். இவர்களுக்காக மருத்துவமனையின் 5வது மாடியில் விசேட அறை ஒதுக் கப்பட்டுள்ளது. அமிதாப் குடும்பத்தினர் இங்கு தங்கியிருக்கும் வரை மருத் துவமனைக்கு பாதுகாப்பை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய் துள்ளது. மருத்துவமனை பாதுகாவலர்கள் 6 மணி நேரத்துக்கு பதிலாக 12 மணி நேரம் பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. தவிர தனியார் பாதுகாப்பு நிறுவன காவலர்களும், பொலிஸாரும் மருத்துவ மனை வளாகத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர். ஐஸ்வர்யா ராய், அவருடைய குடும்பத்தினரையோ யாரும் படம் எடுத் துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் கைத்தொலை பேசி எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கார்த்திகை 11, 2011

இலங்கை

தீர்வின் திசை வேண்டி

(மதுக்கூர் இராமலிங்கம்)

மதுக்கூர் இராமலிங்கம் இன்னும் தெரிய வேண்டும் தெளியவேண்டும் என்பதை அவரின் கட்டுரை எடுத்தியம்பி நிற்கின்றது.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்ட, சுயேட்சையான விசாரணை நடத் தப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கையுடனான பொருளாதார, வர்த்தக உறவுகள் குறித்து இந்தியா கவலைப்படு கிறது. ஆனால் இந்தியாவின் சார்பில் வழங் கப்படும் உதவி தமிழ் மக்களுக்கு உரிய முறையில் சென்று சேருகிறதா என்பது குறித்து கவலைகொள்வதில்லை. இந்தக் குற்றச்சாட்டை அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயே முன்i வத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதில் சார்க் அமைப் பின் அங்கம் என்ற முறையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கை தமிழர் பிரச்சனை தமிழ்நாட்டில் உணர்வுப்பூர்வ மான பிரச்சனையாக நீடிக்கிறது, அது நியா யமானது என்ற அடிப்படையிலும் இந்தியா உண்மையான அக்கறையுடன் தலையிட வேண்டும். (மேலும்...)

கார்த்திகை 11, 2011

கதிகலங்கி நிற்கும் யூரோ மண்டலம்  தூக்கி நிறுத்துமா புதிய விதிகள்?

நிதி மேலாண்மை ஒழுங் குமுறை மற்றும் பொருளா தார ஒருங்கிணைப்பு ஆகி யவை பற்றிய புதிய விதி களை முறையாகக் கடைப் பிடிப்பதன் மூலம் யூரோ மண்டலத்தில் நம்பிக்கை யை ஏற்படுத்த முடியும் என்று ஐரோப்பிய யூனியன் கருத்துத் தெரிவித்துள்ளது. பிரஸ்ஸல்ஸ் நகரில் நடை பெற்ற கூட்டத்தில் ஆறு வழிகாட்டுதல்கள் தரப்பட் டுள்ளன. இவற்றை டிசம்பர் மாதம் நிறைவு பெறுவதற் குள் நடைமுறைப்படுத்த வேண்டும். முதல் நாளிலி ருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது எண்ணம் என்கிறார் ஐரோப்பிய யூனியனின் பொருளாதார ஆணையர் ஒல்லி ரென். (மேலும்...)

கார்த்திகை 11, 2011

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் -முடங்கியது இஸ்ரேல்

பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இஸ்ரேல் தொழிலாளி வர்க்கம் நடத் திய பொது வேலை நிறுத் தம் வங்கிகள், துறைமுகங் கள், பல்கலைக்கழகங்கள், பொதுப் போக்குவரத்து, மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்கள் உள் ளிட்ட அனைத்துத் துறை களிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இஸ்ரேலின் பெரிய தொழிற்சங்கமான ஹிஸ் டாடிரட்(தொழிலாளர் பொது சம்மேளனம்) பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கெதிராக தேசிய தொழி லாளர் நீதிமன்றத்தைப் பயன்படுத்தவும் இஸ்ரே லிய அரசு முனைந்தது. வேலை நிறுத்தத்தைத் தடை செய்ய முடியாத நிலையில், வெறும் நான்கு மணிநேரங் கள்தான் வேலை நிறுத்தம் செய்யலாம் என்று நீதிமன் றம் முரண்டு பிடித்தது. வேலை நிறுத்தம் துவங்கு வதற்கு முந்தைய நாள் இர வில் நீண்ட நேரம் விவாதம் நீதிமன்றத்தில் நடைபெற் றது. (மேலும்...)

கார்த்திகை 11, 2011

ஏற்க முடியாத கருத்து

எஸ். தஸ்நீம், வெள்ளாடிச்சி விளை

கே : ‘விடுதலைப் புலிகள் இயக்கம், தீவிரவாத இயக்கம் அல்ல. கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் உள்நாட்டுப் போரில்தான் ஈடுபட்டு வந்தனரே தவிர, சர்வதேச ரீதியான போரில் ஈடுபட்டதில்லை. அவர்கள் மீது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளைச் சுமத்தலாமே தவிர, அவர்களைப் பயங்கரவாதிகள் என்று கருத முடியாது’ – என்று நெதர்லாந்து கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது பற்றி?

ப : ‘சர்வதேச ரீதியாகப் போரில் ஈடுபட்டவர்கள்தான் பயங்கரவாதிகள்’ என்று எந்த அமைப்பிலும் தீர்மானமாகி விடவில்லை. இந்த வியாக்கியானத்தின்படி பார்த்தால், நக்ஸலைட்டுகள் கூட பயங்கரவாதிகள் இல்லை. விடுதலை என்கிற பெயரில் தமிழர்களையே கொன்று குவித்த இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம். தங்கள் சொல்லைக் கேட்காதவர்களைக் கொல்வதுதான் அவர்களுடைய பணியாக இருந்து வந்தது. அவர்கள் சர்வதேச அளவில், இந்தியாவில் நடத்திய பயங்கரக் கொலைகளை விட்டு விட்டுப் பார்த்தால் கூட, இலங்கையில் அவர்கள் தீவிரவாதிகள்தான். அவர்கள் புரிந்த நாசவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. அவர்களுடைய நாசவேலைகளுக்கும், கொலைகளுக்கும் பெயர் விடுதலைப் போர் அல்ல. நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கிற நெதர்லாந்து நீதிமன்றத்தின் கருத்து ஏற்கப்பட முடியாதது.

துக்ளக் கேள்வி பதில் - 11.11.11

கார்த்திகை 10, 2011

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எங்கு விஜயம் மேற்கொண்டு யாருடன் பேச்சு நடத்தினாலும் இறுதியில் தீர்வு விடயத்தில் தமது நாட்டு அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்தவேண்டும் - அரசாங்கம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு விஜயமானது இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அந்த விஜயமானது பேச்சுக்களுக்கு தடையாக அமையாது. கூட்டமைப்பினர் நாடு திரும்பியதும் அவர்களுடன் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எங்கு விஜயம் மேற்கொண்டு யாருடன் பேச்சு நடத்தினாலும் இறுதியில் தீர்வு விடயத்தில் தமது நாட்டு அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்தவேண்டும் என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதாவது வடக்கு கிழக்கு மாகாண மக்களும் இலங்கை மக்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு எவ்விதமான அநீதியும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது எனவும் அமைச்சர் கூறினார். கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டமையானது அரசாங்கத்துடனான பேச்சுக்களில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் எந்த நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு வந்தாலும் இறுதியில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கைக்கே வரவேண்டும். இலங்கை அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்தவேண்டும் என்பதனைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.

வன்னி மக்களுக்குக் குழப்பம் என்கிறது கூட்டமைப்பு

வன்னி மாவட்ட அரசாங்க அதிபர்களின் திடீர் இடமாற்றங்கள், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்குள் வருவதால் வன்னி மாவட்ட மக்களிடையே பெரும் குழப்பமான நிலை தோன்றியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக நியமிக் கப்பட்ட பத்திநாதன் தென்னிலங்கையில் உள்ள மொனராகலை மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக கடந்த சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக தற்போது இருக்கும் நா.வேதநாயகன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தின் அரசாங்க அதிபராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக இருந்த ஹேரத் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தகைய செயற்பாடுகளினால் பொது மக்களிடையே பெரும் குழப்பமான நிலை காணப்படுகின்றது. சுமார் முப்பது வருட கால இடைவெளியின் பின், வட பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். 1970 களின் கடைசிப் பகுதி முற்பகுதியில் யாழ்பாணத்தின் அரசாங்க அதிபராக இருந்தவர் லயனல் பெர்னாண்டோ என்ற சிங்களவர். தமிழ் மக்கள் முழுமையாக வாழ்ந்த யாழ்பாணத்தில் இந்த சிங்களவர் வேறு எந்த தமிழ் அரசாங்க அதிபர்களையும் விடச் சிறப்பாக செயற்பட்டவர். இவரின் இடமாற்றத்தை ஜேஆர் ஜெயவர்த்தன் தான் ஆடசிக்கு வந்த சில காத்தில் மாற்றினார் காரணம் தனது இராணுவக் கலவரங்களை யாழில் நடாத்த இவர் இடைஞ்சலாக இருக்கின்றார் என்பதற்காக. தமிழர் சிங்களவர் என்பதைவிட் அவர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படையான பிரச்சனை திருகோணமலை லிங்கபுரத்தில் தமிழ் மக்கள் வாழும் காணிகளிலிருந்து பணத்திற்காக குடியெழுப்பும் செயற்பாட்டை செய்பவர் சிங்களவரோ முஸ்லீமோ அல்ல மாறாக தமிழர். அதுவும் தமிழர் தலைவர் சம்மந்தர்.

கார்த்திகை 10, 2011

மக்கள் நலன்களுக்காக

தனியார் நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்படுகின்றன

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் தனியாருக்கு விற்கப்பட்ட அரச நிறுவனங்களையே தற்போது அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது. அரசாங்கத்தின் காணிகள் கட்டிடங்கள் தனியாருக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இவற்றை அரசு மீண்டும் தேசிய மயமாக்கத் தீர்மானித்துள்ளது. இதன் பலன்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதனாலேயே அரசு அவற்றை மீளப்பெற்று சரி செய்ய தீர்மானித்துள்ளது. (மேலும்....)

கார்த்திகை 10, 2011

கைப்பற்றுவோம் போராட்டம்  நியூயார்க்கில் 18 கி.மீ. நீள ஊர்வலம்

இந்தப் பேரணி நியூ யார்க் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக் கிறது. மக்கள் தரும் வர வேற்பு, மக்கள் பிரதிநிதி களுக்கும் நிர்ப்பந்தத்தை அளித்துள்ளது. நியூயார்க் மாகாணத்தின் உறுப்பி னர்கள் அட்ரியானோ எஸ் பைலட் மற்றும் டானிஸ் ரோட்ரிக்ஸ் ஆகிய இருவ ரும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். இவ் வளவு பெரிய நெருக்கடி யை எங்கள் மக்கள் இது வரை சந்தித்ததில்லை. விலை வாசி உயர்ந்திருக்கிறது. மருத்துவ வசதிக்கான சட் டமும் நிறைவேற்றப்பட வில்லை. பல ஆண்டுகளாக தேவைகளுக்காக எங்கள் மக்கள் ஏங்கி வந்துள்ளனர். அதனால்தான் ஆயிரக்க ணக்கில் மக்கள் பேரணி யில் பங்கேற்றிருக்கிறார்கள் என்றார் எஸ்பைலட். (மேலும்....)

கார்த்திகை 10, 2011

கண்டி - கொழும்பு, கொழும்பு - யாழ்ப்பாண அதிவேக பாதைகளும் விரைவில் திறந்து வைக்கப்படும்.

128 கிலோமீற்றர் நீளமான கொழும்பை அடுத்துள்ள கொட்டாவையில் இருந்து காலி வரையிலான நெடுஞ்சாலை எதிர்வரும் 27ம் திகதியன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படும். விந்தையின் நுழைவாயில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டக்கூடியதாக விளங்கும். தற்போது அரசாங்கம் நெடுஞ்சாலைகளில் 320 பாலங்களை அமைத்துள்ளது. அதே நேரத்தில் 16 பாலங்களை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வரு கின்றன. மேலும் ஆறாண்டுகளில் இன்னும் 200 பாலங்கள் அமைக்கப்படும். கண்டி - கொழும்பு, கொழும்பு - யாழ்ப்பாண அதிவேக பாதைகளும் விரைவில் திறந்து வைக்கப்படும். (மேலும்....)

கார்த்திகை 10, 2011

முன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவருடனான சந்திப்பும்,

கார்த்திகை 10, 2011

Deepavali Celebration in Toronto

It is with utmost humility that I say “Thank You” and doff my hat to you for attending the Deepavali Celebration in Toronto, organized by the Sri Lanka High Commission in Ottawa and Sri Lanka Consular General’s Office in Toronto. What was significant in your attendance was that you showed your honesty in wanting the reconciliation process between the two communities that have been polarized by their Tamil Tiger separatist conflict that lasted 27 bloody years and witnessing over 100,000 innocent lives snuffed out by suicide bombers, claymore mines and bullets shot from Kalashnikovs, all by the Tamil Tigers. (more....)

கார்த்திகை 10, 2011

வெனிசுலா

வெறும் பொருள் உற்பத்தி அல்ல... புதிய சமூக உருவாக்கமே..!!!

'இது வெறும் வீடுகளைக் கட்டுவதல்ல, அல்லது தானியத்தையோ, ஆடைகளையோ உற்பத்தி செய்வதல்ல. அனைத்தையும் தாண்டி, புதிய ஆணை, புதிய பெண்ணை, புதிய சமூகத்தை உருவாக்குவதாகும்'

தொடரும் தேசிய மயம் குறைவான தொழிலாளர்களை வைத்துக் கொண்டு சுரண்டும் பெரும் நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் நாட்டுடைமையாக்கும் வேலையை வெனிசுலா அரசு மேற்கொள்கிறது. தொலைத்தொடர்பு, கனிமம், பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான துறைகள் இப்படித்தான் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. அதேவகையில்தான் பிரிட்டனின் வெஸ்டே குழுமத்தைச் சேர்ந்த துணை நிறுவனமும், விவசாயப் பணிகளைச் செய்து கொண்டிருந்த நிறுவனமுமான அக்ரோ புளோராவை தேச உடைமையாக்கும் உத்தர வில் சாவேஸ் கையெழுத்திட்டுள்ளார். நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைச் சட்டத்தின் கீழ் இந்த நடவ டிக்கை எடுக்கப்படுவதாக வைவ் தொலைக்காட்சி மூலம் மக்க ளுக்கு ஆற்றிய உரையில் தெரி வித்தார்.(மேலும்....)

கார்த்திகை 10, 2011

உலக சுற்றுலா விருது இந்தியாவுக்கு கிடைத்தது

உலகின் முன்னணி பயணப் பகுதி விருது, இந்தியா வுக்கு கிடைத்துள்ளது. 2011ம் ஆண்டு உலக சுற்றுலாச் சந்தையில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்த இடம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலகின் முன்னணி சுற்றுலா அமைப்பு விருதும் இந்தியாவுக்கு கிடைத்தது. இந்த ஆண்டில் இதுவரை 50 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர். இன்னும் 2-3 ஆண்டு களில் மேலும் 50லட்சம் வெளி நாட்டு சுற்றுலாப் பயணி களை ஈர்க்க இலக்கு உள்ளது. இதன் மூலம் 250 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சுற்றுலாத் துறை வளர்ச்சி இந்தியாவில் தாமதமாக இருந்தபோதும் வெற்றியை எட்ட உறுதியான நிலையில் இருந்தது. சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மேலும் 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியா வுக்கு வர நமக்கு 20 லட்சம் ஹோட்டல் அறைகள் தேவை. இதற்கான உள்கட்டமைப்பை மத்திய -மாநில அரசுகள், அரசு - தனியார் பங்களிப்பு திட்டத்தில் உருவாக்கும். இந்த ஆண்டு ஜம்மு -காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு 16 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்த சீசன் முடிவில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்.

கார்த்திகை 10, 2011

மீண்டும் வான் அலைகளில் சனிக்கிழைமை முதல் உங்கள் வானொலி !!!

உலகெங்கணும் பொருளாதார நெருக்கடிகள் ஒரு புறம் தொடர மறுபுறத்தில் மாற்றத்திற்கான குரல்களும், போராட்டங்களும் அதிகரித்து சுதந்திரம், ஜனநாயகம், பன்மைத்துவம், மனித உரிமை, சம உரிமை போன்ற சர்வதேச விழுமியங்களுக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சர்வாதிகார சக்திகள் படிப்படியாக ஒடுக்கப்படுவதையும் நாம் இன்று காண்கிறோம். மனித சமூகத்தினை நிறம், மதம், மொழி, சாதி போன்ற பாகுபாடுகளைக் காட்டி கூறுபோடும் அநாகரீக அரசியலுக்கு எதிராக ஊடகங்கள் மக்களுடன் இணைந்து செயற்படும் காலமாக இன்றைய காலம் உள்ளது. இவ் வரலாற்றுக் கடமையை செய்யும் பணியில் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மீண்டும் இணைகிறது. ஊடகங்களின் தொகை அதிகரித்துள்ள நிலையில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் முற்றிலும் புதிய வேகத்தோடு, தனித் தன்மையுடன் செயற்படும் வானொலியாக உங்கள் இல்லங்களை நோக்கி வருகிறது. (மேலும்....)

கார்த்திகை 10, 2011

Classic !!! Irony of Life !

Most 'First Class' students get technical seats, some become Doctors
and some Engineers.

 

 

 

 

 

 

 

The 'Second Class' pass, and then get MBA, become Administrators and control the 'First Class'

The 'Third Class' pass, enter politics and Become Ministers and control both

Last, but not the least, The 'Failures' join the underworld and control all the above

And those who do not attend any school, become Swamis and Gurus and Everyone follows them.

(Thank you: Mohana)

கார்த்திகை 10, 2011

புலிகளின் 7 கப்பல்களை கைப்பற்ற தொடர்ந்தும் முயற்சி

வெளிநாடுகளில் உள்ள புலிகளுக் குச் சொந்தமான 7 கப்பல்களை கைப்பற்ற அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். வாய்மூல விடைக்காக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:- புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் புலிகளுக்கு சொந்தமான 8 கப்பல்கள் வெளிநாடுகளில் இருப்பது தெரியவந்துள் ளது. அவற்றில் பாரிய கப்பலொன்றை அரசாங்கம் கைப்பற்றியுள்ளது. எஞ்சியுள்ள கப்பல்களில் சில வெளிநாடு களில் எஞ்சியுள்ள புலி செயற்பாட்டாளர் களினால் சட்ட விரோத ஆட் கடத்தல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதோடு சில கப்பல்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் தென் கிழக்காசிய நாடொன்றில் நங்கூரமிடப்பட்டுள்ளது. கப்பல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு ஏற்க அவற்றை பொறுப்பேற்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சட்ட ரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான தடைகள் உள்ள போதும் தொடர்ந்து இது தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. இந்தக் கப்பல்கள் எங்குள்ளன என்பதை கண்டு பிடிக்க முடிந் தது எமக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.

கார்த்திகை 10, 2011

நெடுஞ்சாலைகள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் சின்னமாக விளங்குகின்றன

இலங்கையின் பண்டைய வரலாற்றில் ஒற்றையடிப்பாதையில் ஆரம்பமாகிய பாதைகள் நிர்மாணம் பின்னர் வண்டிப்பதையின் மண் பாதையாகவும், பின்னர் கிராமியப் பாதைகளாகவும், அதைய டுத்து தார் போட்ட பாதைகளாகவும், அதற்கு பின்னர் கொங்கிaட் போட்ட அல்லது காபட் பாதைகளாகவும் வளர்ச்சி பெற்று இன்று நெடுஞ்சாலைகளாக வியாபித்திருக்கின்றன. அது போன்றே பல்லக்கில் ஆரம்பித்த மனிதர்களின் பிரயாணம் படிப்படியாக குதிரைச் சவாரியாகவும், யானைகள் மீது ஏறி பய ணிப்பதாகவும் பின்னர் வண்டி அல்லது மாட்டு வண்டிகளில் செல்வதாகவும் தொடர்ந்து கொண்டு போய் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் போது வாகனங்கள், புகையிரத வண்டிகள், விமானங்களாக மாற்றமடைந்தன. இன்று இந்த பிரயாணங்களை தரைவழிப் பாதையில் வேகமாக மேற்கொள்வதற்கு இந்த நெடுஞ்சாலைகள் சிறந்த சாதனமாக அமைந்துள்ளன. (மேலும்....)

கார்த்திகை 10, 2011

ஆயிரம் இருந்தும் NO PEACE OF MIND is the irrefutable fact.

A typical day's life of today 's younger generation.

காலை எழுந்தவுடன் Mail Box

வாலைக் குமரியுடன் Gtalk

சாலை முழுவதும் Cell Talk

மாலை முடியும் வரை Chit Chat

மாலை முடிந்ததும் Work Hour Start

பொய்யுரை எழுத Status Reports

மெய்யுரை சொல்ல Company Reports

பொய்யை மெய்யாக்க Status Call

மெய்யை உறுதியாக்க Conference

Call பொய்யும் மெய்யும் கலந்த Live Call

டாகுமென்ட் எழுத Copy & Paste

ப்ரோக்ராம் எழுத Cut & Paste

(மேலும்....)

கார்த்திகை 10, 2011

சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர்

சீனாவில் நூறு வயது கடந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரம் என சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சீனாவில் ஒரு குழந்தை திட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதனால் பிறப்பு எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இருப்பினும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிபரங்கள் அவ்வப்போது தெரிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் முதலாம் திகதி நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி நூறு வயது கடந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 921 என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இதன் எண்ணிக்கை 5 ஆயிரத்து 228 பேர் அதிகமாகும். குவாங்சிஜுவாங் மாகாணத்தில் வசித்து வரும் 126 வயதுடைய பெண் மணிதான் மிக வயதானவராக கண்டறியப்பட்டுள்ளார். இதே மாகாணத்தை சேர்ந்த 213 தம்பதிகள் நூறு வயதை கடந்தவர்களாக உள்ளனர். சீனர்களின் சராசரி ஆயுள்காலம் 73.5 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 10, 2011

அமெரிக்காவில் வறுமையில் வாடுவோர் அதிகரிப்பு

அமெரிக்காவில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை நான்கு கோடியே 91 இலட்சமாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்க மக்கள் தொகைப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, 2010ல் அமெரிக்காவில், நான்கு கோடியே 91 இலட்சம் பேர் வறுமையில் வாடியுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, நான்கு கோடியே 62 இலட்சம் பேர் தான் வறுமையில் இருந்தனர். ஆனால், வறுமைக்கோடு நிர்ணயம் தொடர்பான அரசின் சீர்த்திருத்தப்பட்ட கொள்கைகள் காரணமாக, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில், 16 சதவீதம் மேலும் சீர்த்திருத்தப்பட்ட கொள்கைகள் மூலம், நாட்டின் மூத்த குடிமக்களிடையே வறுமை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்கு முந்தைய கணக்கீட்டின்படி, 9 சதவீதம் மூத்த குடிமக்கள் வறுமையில் வாடினர். ஆனால் தற்போதைய கணக்கீட்டின்படி, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 15.9 சதவீதம் பேர் வறுமையில் வாடுகின்றனர்.

கார்த்திகை 10, 2011

ஒசாமாவை சவாஹிரி காட்டிக் கொடுத்ததாக தகவல்

ஒசாமா பின் லேடனைக் காட்டிக் கொடுத்தவர் அந்த அமைப்பின் துணைத் தலைவரான அய்மன் அல் சவாஹிரி என்று புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. ஒசாமா பின்லேடன் கடந்த மே 2ம் திகதி பாகிஸ்தானில் உள்ள அபோத்தாபாத் நகரில் இருந்த வீட்டில் அமெரிக்க கமாண்டோக்களால் கொல்லப்பட்டார். ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பதுங்கியிருந்த இவரது மறைவிடத்தைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்தது சவாஹிரி அனுப்பிய பொதி அஞ்சல்தான் என்று முன்னாள் அமெரிக்க கடற்படை கமாண்டோ சுக் பாரர் தெரிவித்துள்ளார். ஒசாமா பின் லேடனைக் கொலை செய்வதற்கு வீட்டிற்குள் நுழைந்த 6 கமாண்டோக்களில் பாரரும் ஒருவர். இவர் எழுதிய புத்தகத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது புத்தகத்தில் சுக் பாரர் எழுதியிருப்பது, பின்லேடனை ரஷியர்கள் கொன்று விடுவார்கள் என் சவாஹிரி எதிர்பார்த்தார் ஆனால் அது நடக்கவில்லை. அவருக்கு இருந்த அடிசன்ஸ் நோய் காரணமாக பின்லேடன் இறந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது. கடைசியாக பொதி அஞ்சல்களை அதிகம் அனுப்பி சி.ஐ.ஏ. கவனத்தை ஈர்த்து அதன் மூலம் பின் லேடனுக்கு முடிவு கட்டி, தலைமைப் பதவியை பிடித்துள்ளார் சவாஹிரி என்று அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். 60 வயதான பாரர் எழுதிய 225 பக்க புத்தகத்தில் ஒசாமா பின்லேடன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கார்த்திகை 10, 2011

இத்தாலி பிரதமர் பதவி விலக திட்டம்

வரவு-செலவுத் திட்டத்திற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின் பதவி விலகுவதாக இத்தாலி பிரதமர் சில்வியே பெர்லுஸ்கோனி குறிப்பிட் டுள்ளார். இது குறித்து அவர் அந்நாட்டு ஜனாதிபதி ஜொர்ஜியோ நெலாலிடா னோவிடம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இத்தாலி புதிய வரவு-செலவுத் திட்டத்திற்கான சட்டமூலத்தை முன்வைத்துள்ளது. இந்த சட்ட மூலத்திற்கான வாக்கெடுப்பு இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

கார்த்திகை 10, 2011

ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாவதற்கு அமெரிக்கர்கள் பாதிப்பேர் எதிர்ப்பு

வேலையில்லாத் திண்டாட் டம், பொருளா தார நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால், ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாவதற்கு அமெரிக்க மக்களின் பாதிப் பேர் விரும்பவில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவில், அடுத்தாண்டு நவம்பரில், ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக ஜனாதிபதி பராக் ஒபாமா, கடந்த சில மாதங்களுக்கு முன்பே, பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், “கிறிஸ்டியன் சயின்ஸ் மொனிட்டர்” பத்திரிகை நடத்திய ஆய்வில், அமெரிக்கர்களில் பாதிப் பேர், அவர் மீண்டும் ஜனாதிபதியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. தனிப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 35 சதவீதம் பேர் மட்டுமே, ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாவதற்கு தகுதி உடையவர் எனத் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை 10, 2011

எழுபது ஆண்டுகளாக கடலுக்குள் புதைந்திருந்த வெள்ளிக் கட்டிகள்

ற்போது உலகின் விழிகளை வியப்பில் திகைக்க வைத்திருக் கும் ஒரு பொக்கிஷ பெயர், கடலில் மூழ்கி இருக்கும் புதையல். கடலுக்குள் கப்பல்கள் மூழ்கிப்போவது சாதாரண நிகழ்வு தான். ஆனால் அதையும் சரித்திரமாக மாற்றும் தன்மை சில கப்பல்கள் மூழ்கிப்போன தில் நடந்ததுண்டு. இதற்கு சரியான உதாரணம் டைட்டானிக். டைட்டானிக் மிகப் பிரமாண்டமான பயணிகள் கப்பல். எதனாலும் அதை மூழ்க வைக்க முடியாது என்ற இறுமாப்பு அதை வடிவமைத்த அனைவருக்கும் இருந்தது. அந்த இறுமாப்பை தகர்த்தது இயற்கை. தனது முதல் கன்னிப் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி மூழ்கிப் போனது. சரித்திரம் படைத்தது. ஆனால் கெயர் சோப்பா என்ற கப்பலின் கதையோ வேறு. கிட்டத் தட்ட 70 ஆண்டுகளாக கடலுக்குள் புதைந்திருந்த இந்த கப்பலுக்கு மூழ்கிய காலத்தைவிட கண்டுபிடிக்கப் பட்ட காலமே சரித்திர புகழைத் தேடித்தந்திருக்கிறது. அதற்கு காரணம் அந்த கப்பலில் மறைந்திருக்கும் ரூ. 1,000 கோடிக்கு மேல் மதிப்பு உள்ள வெள்ளிக் கட்டிகள். (மேலும்....)

கார்த்திகை 09, 2011

இத்தாலி  பெர்லுஸ்கோனியின்  அரசியல் வாழ்க்கைக்கு முடிவு?

நாடாளுமன்ற வாக் கெடுப்பில் ஏற்பட்ட பின் னடைவையொட்டி, நாட்டு மக்களின் கடுமையான அதி ருப்திக்கு உள்ளாகியுள்ள இத்தாலியின் பிரதமர் பெர் லுஸ்கோனி தனது பதவி யிலிருந்து வெளியேற முடி வெடுத்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க புதிய திட்டமொன்றை நாடாளு மன்றம் முன்பாக அவர் வைத்தார். அந்தத் திட் டத்தை நாடாளுமன்றம் ஏற்றாலும், ஏற்காவிட் டாலும் தனது பதவியிலி ருந்து வெளியேறி விடுவேன் என்று கூறியிருந்தார். நாடா ளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை என்பது 316 வாக்குகளாகும். ஆனால் அவர் முன்வைத்த திட்டம் வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. அதற்குக் காரணம், எதிர்ப்பு தெரி வித்த 320 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெ டுப்பில் கலந்து கொள்ளா மல் புறக்கணித்ததாகும். (மேலும்....)

கார்த்திகை 09, 2011

தனிமனிதனை அவமானப்படுத்தும் போலியான இணையத்தளங்களுக்கு அரசாங்கம் தடைவிதிப்பு

மொட்டைக்கடிதம் எழுதுபவர்கள் கோழைகள் என்று ஒரு பேரறிஞர் விளக்கமளித்துள்ளார். நேருக்கு நேர் வந்து ஒருவருடைய தவறுகளை எடுத்துக்காட்டி, பேசுவதற்கு தைரியமற்றவர்களே மொட்டைக் கடிதங்களை எழுதுவார்கள். மொட்டைக் கடிதத்தை எழுதுபவர்கள் அதனால் பாதிக்கப்படும் ஒருவர் அநாவசியமாக பலரை சந்தேகிப்பார். இப்படியான விசமத்தனங்களை செய்யும் இந்த மொட்டைக்கடித கலா சாரம் இப்போது இணையத்தளங்களுக்கும் தொற்றியிருக்கிறது. இவ் விதம் பல இணையத்தளங்கள் மற்றவர்களை சமூகத்தில் அவமா னச் சின்னங்களாக இழிவுபடுத்துவதற்காக கீழ்த்தரமான, பொய் யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. (மேலும்....)

கார்த்திகை 09, 2011

ஏழு இரகசிய முகாம்கள் என்று ஒன்றும் இல்ல - சித்தார்த்தன்

ஏழு இரகசிய முகாம்கள் என்று ஒன்றும் இல்லை. முன்பும் இருந்ததும் இல்லை என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக்குழுவின் ஜெனீவா அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து நேற்று ஆராயப்பட்டபோது, இந்தக்குழுவின் துணைத் தலைவரான பெலிஸ் கியர் இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தமக்கு பல புகார்கள் வந்ததாக கூறியதுடன் இலங்கையில் ஏழு இரகசிய முகாம்கள் இருப்பதாகவும் அங்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் 700பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியா 211வது பிரிகேட்டின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளொட் அமைப்பின் வவுனியா தடுப்புமையம், தர்மபுரத்திற்கு பகுதியில் கைவிடப்பட்ட ஐந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள், முல்லைத்தீவில் இரு முகாம்கள் என்பன இரகசிய தடுப்பு முகாம்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (மேலும்....)

கார்த்திகை 09, 2011

நிகரகுவா

ஓர்டேகா மீண்டும் அபார வெற்றி

நிகரகுவாவின் தற்போதைய ஜனாதிபதியும், ஆளும் சான்டி னிஸ்டா தேசிய விடுதலை முன் னணியின் வேட்பாளருமான டேனியல் ஓர்டேகா மீண்டும் மக்கள் ஆதர வுடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற் றுள்ளார். ஞாயிறன்று(நவ.6) ஜனாதிபதி மற்றும் தேசிய சபைக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகளில் கிட்டத் தட்ட 85 விழுக் காடு வாக்குகள் எண்ணப் பட்ட நிலையில், 62.65 விழுக்காடு வாக்கு களைப் பெற்றிருந்த டேனியல் ஓர்டே காவின் வெற்றி சந்தேகத்திற்கு இடமில்லா ததாக மாறிவிட்டது. அவர் வெற்றி பெற்று விட்டார் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராபர்டோ ரிவாஸ் கூறினார். (மேலும்....)

கார்த்திகை 09, 2011

யாழ்.பல்கலைக் கழகம் – நண்பர்களும் எதிரிகளும்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இதுவரையில் உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேச்சாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் இரண்டு மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதுடன் சில மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இன்னமும் விசாரணை நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் மௌனம் காத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களை பாதுகாப்பதற்கும், அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிமையற்ற நிலைமை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இதே வேளை கடந்த சனி 06.11.2011 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களின் பழைய மாணவர் ஒன்றியம் என்ற பெயரில் சில முன்னை நாள் மாணவர்கள் லண்டனில் ஒன்று கூடல் ஒன்றை நடத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் எதிர் நோக்கும் பாதுகாப்பற்ற சூழல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும், இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் “அரசியல் பேச வேண்டாம்” என அதனை மறுத்துள்ளனர். இக்கருத்தை முன்வைத்தமையால் அவர்களுக்கு அரசியல் உள் நோக்கம் இருக்கலாம் என பரவலாகக் கருத்து நிலவுகிறது.

கார்த்திகை 09, 2011

Past Pupils’ Association Of St.Michael’s College, Batticaloa

North American Chapter

Presents

MIKES NIGHT 2011

Saturday, December 17th at 6.30pm

Scarborough Convention Centre

20 Torham Place, Scarborough – ON-M1X OB3

Enjoy an evening with an exotic feast of Sri Lankan & Western foods, excellent entertainment and incredible music to dance the night away, while supporting a wonderful cause.

Contact 416 627 6564 or 905 471 8677 for more details and tickets.

Thank you for your continuous support

கார்த்திகை 09, 2011

நட்டத்தில் இயங்கும் தொழில் முயற்சிகளையும் நிறுவனங்களையும் சுவீகரித்து புத்துயிரளிக்கும் சட்டமூலம்' அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல

செயற்பாடு குறைவாகவுள்ள, நட்டத்தில் இயங்குகின்ற தொழிற்முயற்சிகளுக்கும் மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிர் அளிப்பது தொடர்பாக சட்டமூலம் நேற்று பிரதமர் டி. எம். ஜயரட்னவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலத்தின்படி இனங்காணப்பட்ட செயற்பாடு குறைவாக உள்ள அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்கள் தேசிய நலன் கருதி அரசுடமையாக்கப்படும். மேலும் இவை தொடர் பில் தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரை நியமித்தல், நஷ்ட ஈடு செலுத்துதல் மூலமும் முகாமைத்துவம் புத்துயிர் அளிக்கப்படுவதன் ஊடாகவும் இவற்றை மேம்படுத்த உள்ளதாக பிரதமர் சபையில் தெரிவித்தார். செயற்பாடு குறைவாக உள்ள தொழில் முயற்சிகளுக்கும், குறைவாகப் பயன்படுத்தப்படும் சொத்துக்களுக்கும் புத்துயிர் அளித்தல் தொடர்பான சட்ட மூலத்தை தேசிய நலன்கருதி உடனடியாக ஆராய்ந்து அறிவிக்குமாறு கோரி ஜனாதிபதியினால் உச்ச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. (மேலும்....)

கார்த்திகை 09, 2011

கண்ணோட்டம் இதழ் 63 சஞ்சிகை வெளிந்துவிட்டது

எங்கள் நேசத்திற்குரிய பொதுமக்களே தோழர்களே நண்பர்களே நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கண்ணோட்டம் இதழ் 63 சஞ்சிகை வெளிந்துவிட்டது நமது தாய்நாட்டு செய்திகளை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கென தாங்கிவரும் ஒரே ஒரு சஞ்சிகை கண்ணோட்டம் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியினரால் வெளியிடப்படும்சஞ்சிகை என்பதும் இங்கு முக்கியமாக குறிப்பிடத்தக்கது நீங்கள் வசிக்கும்நாடுகளில் உங்கள் தொடர்புகளில் இருக்கும் கட்சித்தோழர்களிடம் நீங்கள் கேட்டுவாங்கி வாசித்து பயன்பெறுங்கள்.

கார்த்திகை 09, 2011

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை 27இல் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

தென் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘தெற்கு அதிவேக நெடுஞ்சாலை’ இம்மாதம் 27 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர். டபிள்யூ. ஆர். பேமசிறி தெரிவித்தார். முதற்கட்டமாக கொட்டாவயிலிரு ந்து காலி வரையான நெடுஞ்சாலையின் பகுதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த அதிவேக நெடுஞ்சாலை உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பதற்கு முன்னர் பெருந்தொகையான சைக்கிள்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரி வித்தார். (மேலும்....)

கார்த்திகை 09, 2011

கட்சிகளை அரசு பொறுப்பேற்காது

செயற்திறனற்ற தொழில் முயற்சிகளை அரசுடமையாக்குவது போன்று செயற்திறனற்ற கட்சிகளை அரசாங்கம் பொறுப்பேற்காது என அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் ஐ.தே.க. பிரதி தலைவர்கள் இருவர் இருக்கையில் எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்கவையே ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதில் எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளார். அடுத்த தடவையை ரவி கருணாநாயக்க நியமிக்கப்படலாம் என்றார். இதேவேளை பதில் எதிர்க்கட்சித் தலைவராக ஜோன் அமரதுங்க நியமிக் கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் டி. எம். ஜெயரத்ன சபையில் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பதில் எதிர்க்கட்சித் தலைவர் குறித்து ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. சபையில் ஒழுங்குப் பிரச்சினையொன்றையும் எழுப்பினார்.

கார்த்திகை 09, 2011

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது (ஆர்டர் ஆஃப் ஃபிரன்ட் ஷிப்) வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். இதற்கு முன்னதாக பிரபல திரைப்பட இயக்குநர் மிர்ணாள் சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் பிறப்பித்த உத்தரவின் நகலை இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் நிகோலாய ஏ லிஸ்தபதோவ், ஜெயகாந்தனிடம் சென்னையில் வழங்கினார். இந்த நட்புறவு விருது வழங்கும் விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரஷ்ய அதிபரின் தூதுக் குழுவினர் விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்தோ - ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தின் தலைவராக ஜெயகாந்தன் உள்ளார். இவர் தனது எழுத்துப் பணியோடு இந்திய - ரஷ்ய நாடுகளிடையே உறவை வளர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘உன்னைப் போல ஒருவன்’ (1965) திரைப்படம் ரஷ்ய அதிபர் விருதைப் பெற்றது. இந்தோ - ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தை அவர் 2006 இல் தொடங்கினார்.

கார்த்திகை 09, 2011

இஸ்ரேல் பிரதமர் ஒரு “பொய்யர்”

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு ஒரு ‘பொய்யர்’ என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சர்கொசி விமர்சித்துள்ளார். பிரான்ஸில் நடைபெற்ற ‘ஜீ 20’ மாநாட்டில் பங்கேற்கச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கேன்சில் நேற்று தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே சர்கோசி இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான் ஒருபோதும் அவரை பார்க்க விரும்பவில்லை. அவர் ஒரு பொய்யர்” என்று சார்கோசி, இஸ்ரேல் பிரதமர் பற்றி ஒபாமாவிடம் கூறியுள்ளார். இதற்கு ஒபாமா, “அவர் பற்றி நீங்கள் அருவருப்படைந்துள்Zர். ஆனால் நான் ஒவ்வொரு நாளும் அவருடன் தொடர்பு வைத்திருக்கிறேன்” என பதிலளித்துள்ளார். அண்மையில் நடந்த யுனெல்கோ அங்கத்ததுவத்திற்கான வாக்கெடுப்பில் பிரான்ஸ், பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. அது பற்றி பராக் ஒபாமா, சர்கோசியிடம் கேட்டபோது அவர் இந்த பதிலை அளித்துள்ளார். இந்த உரையாடல் பற்றிய செய்தி பிரான்ஸ் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கார்த்திகை 09, 2011

கடன் நெருக்கடியால் இத்தாலி பிரதமர் பதவிக்கு ஆபத்து

யூரோ மண்டலத்தில் அடுத்ததாக கடன் நெருக்கடியில் சிக்கும் நாடாக இத்தாலி உருவாகியுள்ளது. அந்நாட்டின் கடன் பத்திரங்களுக்கான மதிப்பு முற்றிலும் குறைந்து விட்டது. இதனால், இத்தாலியின் கடன் வாங்கும் திறன் குறைந்துள்ளது. வளர்ச்சி மற்றும் பொருளாதாரத் திட்டங்களுக்கு நிதி இன்றி அவதிப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யூரோ மண்டலத்தில் அயர்லாந்து, போர்த்துக்கல், கிaச் அடுத்து தற்போது இத்தாலியும் கடன் நெருக்கடி விளம்பில் நிற்கிறது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாட்டின் பொதுக்கடன் 120 சதவீதமாக உள்ளது. கிரீசில் இது 150 சதவீதத்தையும் தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நிதிப் பற்றாக்குறையை கணிசமான அளவில் குறைப்பதற்கான இத்தாலியின் நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் (ஐ. எம். எப்) கண்காணிக்க வேண்டும் என சமீபத்தில் நடந்து முடிந்த ஜி-20 நாடுகளின் கூட்டத்தில் பேசிய இத்தாலி பிரதமர் சில்வியோ பொலுஸ்கோனி கேட்டுக் கொண்டார். அதற்கு யாரும்செவிசாய்த்த அறிகுறி காணோம். இதற்கிடையில் இத்தாலி பிரதமர் பொலுஸ்கோனி பதவி விலகப் போவதாகத் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கார்த்திகை 09, 2011

வறுமையின் பிடியில்  5 கோடி அமெரிக்கர்கள்

புதிய அளவுகோல்களின்படி பார்த்தால் அமெரிக்கா வில் சுமார் 5 கோடிபேர் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கிறார்கள் என்று அரசே வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே உள்ள புள்ளிவிபரப்படி, நாட்டில் 15.2 விழுக்காடு அமெரிக்கர்கள் வறுமையில் வாடுவதாக கணக்கிடப்பட்டிருந்தது. தற்போது புதிய அளவுகோல் மூலம் ஆய்வு நடந்திருக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் மற்றும் முக்கியத் தேவைகள் ஆகியவற்றிற்கான செலவின் அடிப்படையில் புதிய ஆய்வு நடந்துள்ளது. இதன்படி பார்த்தால், 16 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக, மூத்த குடிமக்கள் பெரும் அளவில் பாதிக் கப்பட்டிருக்கிறார்கள். பழைய கணக்கீட்டின்படி ஒன்பது விழுக்காட்டினர்தான் வறுமையால் வாடுபவர்களாக இருந்தனர். தற்போது அவர்களில் 15.9 விழுக்காட்டினர் பாதிப்படைந்துள்ளனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது. 2008 ஆம் ஆண்டில் துவங்கிய பொருளாதார நெருக்கடி யின் தாக்கம்தான் இத்தகைய அவலங்கள் அதிகரித்த தற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கார்த்திகை 09, 2011

‘ஜாக்சன் மரணத்துக்கு அவரது டாக்டரே காரணம்’

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் பாட கர் மைக்கேல் ஜாக்சனின் மரணத்துக்கு அவரது டாக்டர் கான்ராட் முர்ரேதான் காரணம் என லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மைக்கேல் ஜாக்சன் தூங்குவதற்காக டாக்டர் கொடுத்த சக்திவாய்ந்த மயக்க மருந்தே அவரது மர ணத்துக்கு காரணம் என நீதிபதி தெரி வித்தார். டாக்டருக்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்த விவரம் நவம்பர் 29-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுவரை அவரை சிறையில் அடைக்குமாறும் உத்தரவிடப் பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சன் மரணம் குறித்த தீர்ப்பைக் கேட்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் முன்பு அவரது ரசிகர்கள் ஏரா ளமானோர் காத்திருந்தனர். அவர்கள் இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் நீதி வென்றது எனக் கோஷமிட்டனர். எனினும் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவிருப்பதாக முர்ரேவின் வழக் கறிஞர் தெரிவித்தார்.

கார்த்திகை 09, 2011

ஈரான் அணு ஆயுத விவகாரம் சூடுபிடிக்கிறது

விரைவில் ஐ.நா. அறிக்கை; ரஷ்யா, சீனா எதிர்ப்பு, தாக்குதல் நடத்த இஸ்ரேல் கங்கணம்

ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி முகாமை (ஐ.ஏ.இ.ஏ.,), இன்னும் ஓரிரு நாட்களில், ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதற்கான ஆதாரபூர்வ அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. அவர்கள் அறிக்கையை வெளியிடட்டும், அதன் பின் என்ன நடக்கும் என்பதை நாம் பார்ப்போம்’ என, ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைக்கு பெரும்பான்மை சாத்தியம் இருப்பதாக இஸ்ரேல் ஜனாதிபதி மிரட்டியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் மிக முக்கியமான நாடான ஈரான், அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக, அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன ஈரானும் அதை மறுத்து வருகிறது. (மேலும்....)

கார்த்திகை 09, 2011

கடைசி நாட்களில் உணவுகூட இல்லாமல் கஷ்டப்பட்ட கடாபி

கொல்லப்பட்ட முன்னாள் லிபிய தலைவர் கடாபி யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருந்த நாட்களில் உணவு கூட இல்லாமல் கஷ்டப்பட்டார் என்று அவரது பாதுகாப்பு படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கடாபியின் உயர் பாதுகாப்பு அதிகாரி மசூர் தாவ் சி. என். என். இடம் கூறியதாவது, சிர்த் நகரில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்தபோது கடாபி உணவுக்கு கூட கஷ்டப்பட்டார். ஏதோ கிடைத்ததை வைத்து வாழ்ந்தார். அங்கு தன் பெட்டியில் வைத்திருந்த புத்தகங்களை வாசித்து பொழுதைப் போக்கினார். (மேலும்....)

கார்த்திகை 09, 2011

உடைந்த எலும்புகளை இணைக்கும் ஒலி அலைகள்

ஒரு காலத்தில், குடும்பத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் இருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிய குடும்பத்திலுள்ள அனைவருமே ஆவலாய் இருப்பார்கள். ஆனால் அதைக் கண்டறியும் வழிதான் இருக்காது. ஆனால் ஆசை யாரை விட்டது? விளைவு, ஆசைகள் எல்லாம் அவரவர் குலதெய்வங்களிடம் வேண்டு தல்களாகிவிடும். இப்படி வேண்டுதல் களால் நிர்ணயிக்கப்பட்ட குழந்தையின் பாலினம் காலப் போக்கில் விஞ்ஞானத் தின் வளர்ச்சியால் அலட்ரா சவுண்ட் ஸ்கேன் என்னும் தொழில்நுட்பத்தின் மூலம் கர்ப்பம் தரித்த சில பல மாதங்களிலேயே கண்டறியப்பட்டது. அல்ட்ரா சவுண்ட் ஒலியினை (செவி யுணரா ஒலி) க்ளாஸ்கோ வெஸ்டர்ன் இன்பர்மரி (Glasgow’s Western Infirmary)  நிறுவனத்தின் சோனார் தொழில்நுட்ப உதவியுடன் கடந்த 1950 களில் ஸ்கொட்லாந்து நாட்டு மருத்து வர்கள்தான் ஒரு நோய் கண்டறியும் மருத்துவக் கருவியாகப் பயன்படுத்தி னார்கள். (மேலும்....)

கார்த்திகை 09, 2011

சந்தேகங்களை அகலச் செய்த சந்திப்பு  சீன-ரஷ்ய தலைவர்களிடையே பேச்சுவார்த்தை

இருதரப்பு உறவுகள், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை கள் பற்றி இரு நாடுகளுக் குமிடையே இருந்த பல் வேறு கருத்து வேறுபாடு களைத் தீர்க்கும் வகையில் இருந்ததாக சீனாவின் பிரத மர் வென் ஜியாபவ் மற்றும் ரஷ்யாவின் பிரதமர் விளா டிமிர் புடின் ஆகிய இருவ ரின் சந்திப்பு இருந்ததாக இரு நாடுகளும் கூறியுள்ளன.சிக்கலான சர்வதேச அர சியல் மற்றும் பொருளா தார நிலைமை நிலவும் தற் போதைய சூழலில், அண்டை நாடுகளாகவும், வலுவுள்ள நாடுகளாகவும் இருக்கும் சீனாவும், ரஷ்யாவும் தங்கள் நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இந்த நெருக்கம் இரண்டு நாடுகள் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல, உலக அமைதி மற்றும் மேம் பாட்டிற்கும் உதவுவதாகும். சீனாவும், ரஷ்யாவும் பன் முகத்தன்மை கொண்ட நாடுகளாகும். எந்தவொரு தனிநாடும் உலகில் செல் வாக்கு செலுத்துவதற்கு இரண்டு நாடுகளுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றன. (மேலும்....)

கார்த்திகை 08, 2011

தோழர் வி.ஏ. கந்தசாமி -19 வது நினைவு தினம் இன்று !

(கே.சுப்பையா)

இலங்கை வட பிரதேச கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக விளங்கியிருந்த, “வீ.ஏ.” என தோழர்களால் அன்பாக அழைக்கப்படும் தோழர் வீ.ஏ கந்தசாமி அவர்கள் மறைந்து இன்றுடன் (07.11.2011) 19 வருடங்கள் பூர்த்தியாகின்றது. தலைசிறந்த இடதுசாரி பேச்சாளர்களுள் ஒருவராக திகழ்ந்திருந்த தோழர் கந்தசாமி அவர்கள் வட-கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் சேவையாற்றியிருந்தமை பலரிற்குத் தெரிந்திராதது. 1980 ம் ஆண்டு நாட்டின் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்ததின் காரணமாக பல்வேறு ஆயுதக்குழுக்கள் தோன்றின. அவற்றில் பல பாசிச தன்மைகொண்டதாகவும், ஜனநாயக மறுப்பையும், மாற்றுக் கருத்துக்களை அடக்கி ஒடுக்குவதாக மட்டுமல்லாமல் இடதுசாரி கருத்துக் கொண்டவர்களை ஆயுதங்களை கொண்டு படுகொலை செய்யும் கலாச்சாரமும் உருவெடுத்திருந்தது. குறிப்பாக புலிகள் இயக்கம், இடதுசாரி பிரமுகர்களையும் தொழிற்சங்க தலைவர்களையும் படுகொலை செய்வதில் முன்னின்று செயற்பட்டது. இக்காலகட்டத்தில் ஈழ மக்கள் புரட்சி கர விடுதலை முன்னணி மட்டும் பொதுவுடமைக் கருத்துக்களை முன்னெடுக்கும் அமைப்பாகவும், இடதுசாரிகளின் கொள்கைகளை அடியொற்றியதாக இருந்தது மட்டுமல்லாமல் சாதாரண கீழ்தட்டு மக்கள் மத்தியில் செயற்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

கார்த்திகை 08, 2011

show-me-the-money : சம்பந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று லண்டனில் ஊடகவியலாளர் ஒன்று கூடல் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. அமரிக்கா சென்று திரும்பியுள்ள தேசியக் கூட்டமைப்பு கனடாவில் ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ஒன்றில் வட-கிழக்கு தமிழர்களுக்குச் சொந்தமானதில்லை அதன் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். இதே வேளை கொழும்பு ரெலிகிராப் என்ற இணையச் செய்தித் தளம் சம்பந்தன் குறித்த தகவல் ஒன்றை விக்கிலீக்ஸ் தகவல்களிலிருந்து பெற்று வெளியிட்டுள்ளது. அமரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய இரகசியத் தகவல் ஒன்றில் சம்பந்தனை “எனக்கு பணத்தை காட்டு” மனிதனாகக் -“show-me-the-money” man- குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் கேபிள் தெரிவித்துள்ளது. தவிர, இனப்படுகொலையை ராஜபக்சவுடன் இணைந்து நடத்திய சரத் பொன்சேகா உடனான தேர்தல் ஒப்பந்ததின் முன்னதாக, மகிந்த ராஜபக்சவிடமிருந்தும் சரத் பொன்சேகாவிடமிருந்தும் ஆகக் கூடுதலான சலுகைகளைப் பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. சம்பந்தன் என்ற அரசியல் வியாபாரி மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அரசியல் வியாபாரிகளை முப்பது வருடகாலப் போராட்டம் உருவாக்கியுள்ளது. ஆனால் தமிழ் மக்களின் தற்போதைய தலைவன் இந்த வியாபாரி சம்மந்தர்தானாம்.

கார்த்திகை 08, 2011

படை முகாம் விஸ்தரிப்பை எதிர்த்து

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது!

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது! தமது குடியிருப்பு மற்றும் பயிர்ச் செய்கை நிலங்களுக்குள் கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் பலாத்காரமாக நுழைந்து படை முகாம்களை அமைத்து வருவதாகவும் தங்களுக்குச் சொந்தமான காணிகளுக்குள் தாங்கள் நுழைவதற்கே அனுமதி மறுப்பதாகவும் கூறியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது வரை அந்தப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்த இரண்டு இடங்களில் படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குற்றஞ் சாட்டினர். உடனடியாக தமது காணிகளிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் கோஷமெழுப்பினர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அம்பாறை மாவட்ட படை அதிகாரி ஒருவர், அம்பாறை மாவட்டத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டியது அவசியம். அத்துடன் தாம் படை முகாம்களை அமைத்துள்ள காணிகள் அரசுக்குச் சொந்தமானவை என மாவட்ட செயலாளர் எமக்குத் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே நாம் முகாம்களை அமைத்துள்ளோம் இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

கார்த்திகை 08, 2011

இலங்கையில் கடந்த சனிக்கிழமை முதல் ஐந்து செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது!

இலங்கையில் கடந்த சனிக்கிழமை முதல் ஐந்து செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தனிப்பட்டவர்களின் கீர்த்திக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டமையை அடுத்தே இந்த இணையத்தளங்கள் முடக்கப்பட்டதாக ஊடக அமைச்சின் செயலாளர் டபிள்யூ பி கனேகல தெரிவித்துள்ளார். எனினும் ஊடக அமைப்புகள் இந்த செயலை கண்டித்துள்ளன. இலங்கையின் சட்டப்படி, அரசியல்வாதிகளை விமர்சிக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது. எனினும் ஊடகம் ஒன்றுக்கு எதிராக அபகீர்த்தி குற்றச்சாட்டை முன்வைக்கலாம் என்று ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. லங்கா இ நியூஸ்.கொம், ஸ்ரீலங்காமிரர்.கொம், ஸ்ரீலங்கா காடியன்.கொம், பப்பராசிகொசிப்9.கொம்,லங்காவேநியுஸ்.கொம் ஆகிய ஐந்து இணையத்தளங்களுமே முடக்கப்பட்டுள்ளன. குறித்த செய்தி இணையத்தளங்கள், குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மற்றும் அமைச்சர்களை தனிப்பட்ட ரீதியில் விமர்ச்சித்து வந்தவை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் இலங்கையின் ஊடக அமைச்சில் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 08, 2011

திருமலையில்

ஆயுதமுனையில் 4 இலட்சம் ரூபா கொள்ளை

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை உட்பட பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று திருகோணமலையில் இன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலைப் பகுதியில் கடையொன்றி;ல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கடை உரிமையாளர் மீது மிளகாய்த்தூளை வீசிவிட்டே, பணம் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது. கடையினுள் நுழைந்த கொள்ளையர் ஆயுதமுனையில் அச்சுறுத்திய பின்னர் மிளகாய்த் தூளை முகத்தில் வீசியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ___

கார்த்திகை 08, 2011

வெகுஜன ஊடக நன்நெறிக்கு அமைய நடவடிக்கை

இணையத்தளங்கள் யாவும் பதிவு செய்யப்பட வேண்டும்

பல இணையத்தளங்கள் மற்றவர்களை அவமானப்படுத்தக்கூடிய வகையில் கீழ்த்தரமான பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சுக்கு பலதரப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சில இணையத்தளங்கள் சமூகத்திலுள்ள சில முக்கியஸ்தர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இத்தகைய இணைய தளங்களில் வரும் சில தகவல்கள் ஒரு தனி நபருடைய இரகசியத் தன்மையை சீர்குலைக்கக்கூடிய வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக வெகுஜன ஊடக தகவல்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. (மேலும்....)

கார்த்திகை 08, 2011

அனாதை இல்லத்தில் வளர்ந்த வெனிசுவெலா அழகி உலக அழகுராணியாக தெரிவு

2011ஆம் ஆண்டின் உலக அழகு ராணியாக வெனிசுவெலா தேசத்தின் அழகுராணி இவ்யன் சார்கோஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவுசெய்யப்பட்டார். அனாதை சிறுமியாகவிருந்த தனக்கு வாழ்க்கையில் முன்னிலைக்கு வரவேண்டுமென்று தோன்றிய தைரியமே இந்த உயர் நிலைக்கு தன்னை உயர்த்தியிருக்கிறது என்று அவர் கூறினார். சந்தர்ப்ப சூழ்நிலையே மக்களின் வாழ்க் கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். இந்த அனுபவத்தின் மூலமே நான் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டேன் என்று தெரிவித்த அவர், மக்களுக்குப் பணியாற்றப்போகும் நாம் எனது கரங் களில் அழுக்குப் படப்போவதைப் பற்றி கவலைப்படவில்லையென்று கூறினார். 5 அடி 10 அங்குலம் உயரமான இவர் அடுத்த ஓராண்டு காலத்துக்கு உலக அழகு ராணியாக இருப்பதனால் பல அறக்கட்டளை நிதியங்களுக்கு 580 மில் லியன் யூரோவை திரட்டுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடப்போவதாக அறிவித்தார். இவர் கரப்பந்தாட்டம் விளையாடுவதிலும், மலை ஏறுவதிலும் தனது ஓய்வுநோரத்தை செலவிடுகிறார்.

கார்த்திகை 08, 2011

தனது கண்டுபிடிப்புகளை திருடியதாக ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்க விஞ்ஞானி வழக்கு

தனது கண்டுபிடிப்புகளை கணனி, ஐபொட், ஐபோன்களில் திருடி பயன்படுத்தியதாக பிரபல அப்பிள் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் மீது அமெரிக்க விஞ்ஞானியொருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். மிரர் வேர்ல்ட்ஸ் என்ற தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்திவரும் அமெரிக்காவின் உட் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த டேவிட் ஜெலர்ட்னர் என்பவரே இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளார். தனது கண்டுபிடிப்புகளை திருடி கணனி, ஐபோன், ஐபொட்களில் சமீபத்தில் மறைந்த ஸ்டீவ் ஜொப்சின் அப்பிள் நிறுவனம் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவதாக வழக்குத் தொடர்ந்துள்ளார். இதற்கு முன் அதே குற்றச்சாட்டில் வழக்கு தொடர்ந்தார். டேவிட் அதில் அவரது பக்கம் ஆதாரம் இருப்ப தாக கூறிய விசாரணை நீதிமன்றம் ரூ. 62.5 கோடி டொலர் இழப்பீடு வழங்குமாறு அப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரலில் தீர்ப்பு வெளியானது. (மேலும்....)

கார்த்திகை 08, 2011

டான் தொலைக்காட்சி நேருக்கு நேர் நிகழ்ச்சி- புளொட் தலைவர் பங்கேற்பு

கடந்தகாலங்களில் தமிழ்க் கட்சிகள் மாத்திரமல்ல, பெரும்பான்மைக் கட்சிகள் என்று சொல்லக்கூடிய ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலென்ன, சிறீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலென்ன, இவர்கள்கூட கடந்தகாலங்களிலே இங்கு பிரச்சினைகள் எழுகின்றபோது வெளிநாடுகளிலே சென்று தார்மீக ஆதரவைக் கேட்டிருக்கின்றார்கள். இன்றைய ஜனாதிபதி அவர்கள்கூட ஜெனீவாவுக்கு சென்று மிக கடுமையான பிரசாரங்களிலே ஈடுபட்டிருந்தார். அப்போது மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக அவர் மிகவும் தீவிரமான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார். பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு ஆதரவாக மிகத் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். முக்கியமாக இந்த நாட்டிலே அந்த நேரத்திலே ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களின் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு எதிராக அல்லது ஜனநாயக மீறல்களுக்கு எதிராக வெளிநாடுகளில், ஐக்கிய நாடுகள் சபையில் அவர் பேசியிருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இன்றுகூட பல நாடுகளுக்குச் சென்று பிரச்சினைகளைப்பற்றி பேசுகின்றார். இதிலே எந்தத் தவறும் இல்லை என்றுதான் நான் கருதுகின்றேன். எங்களைப் பொறுத்தமட்டில் இன்று தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கக் கூடாது, நிச்சயமாக தீர்க்கப்பட வேண்டுமென்ற ஒரு பேரார்வத்தால் நாங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கதைக்கின்றோம். இதிலே எந்தத் தவறும் இல்லையென்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். (மேலும்....)

கார்த்திகை 08, 2011

பிரிட்டனின் பொருளாதாரத்தை அதிகரிக்க துரித நடவடிக்கை எடுப்பது அவசியம்

உலகத்துக்கு முன்னுதாரணமாக தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றம் அடைந்த பிரித்தானியா தற்போது ஆபிரிக்க நாட்டின் தரத்தில் உள்ளது என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். 16 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் பிரித்தானியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வந்துள்ளது. சிறிய துறைகளில் தமது கவனத்தைச் செலுத்தாமல் பாரிய அபிவிருத்தித் துறையில் நமது நாட்டின் பொருளாதாரத்தைத் திசை திருப்பினால் மாத்திரமே, பொருளாதார த்தில் முன்னர் இருந்தது போல மேலோங்கி இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று பல மில்லியன் மக்கள் வேலையின்றி கஷ்டப்படுகின்றனர். பிரான்ஸ் இத்தகை பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கை களை முன்னெடுத்துச் செல்லுகிறது. இது எமக்கு உதாரணமாக அமையவேண்டும் எனவும், சீனா இன்றைய பொளாதார உலகில் முன்னிலையில் இருக்கிறது என்றார். சீனாவில் அதிவேக புகையிரதங்கள் இருக்கின்றன. சீனாவில் தொழில்நுட்பம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் கற்பவர்களின் எண்ணிக்கை வீதம் எம்மைவிட அதிகமாக இருக்கிறது.

கார்த்திகை 08, 2011

கலாநிதிமாறன் குடும்பத்துடன் பின்லாந்து பயணம் பின் தொடருகின்றது சி.பி.ஐ?

எயர்செல்- மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் சி.பி.ஐ யின் விசாரணை வளையத்தில் உள்ள சன் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை பின்லாந்து புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணம் டில்லி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எயர்செல் நிறுவனத்தை விற்பனை செய்ய அப்போதைய மத்திய தொலைக் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நிர்பந்தித்தார். இதற்கு கைமாறாக மலேசியாவின் அஸ்ட்ரோ நிறுவனம் மாறன் குடும்பத்தினரின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ. 629 கோடி முதலீடு செய்தது என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கடந்த செப்டெம்பர் மாதம் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. (மேலும்....)

கார்த்திகை 08, 2011

நான்கு குவளை தண்ணீர் நோய்களை விரட்டும்

மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் செல்களுக்கு ஒட்சிசனை கடத்தும் ஆக்ஸிகரணியாக செயல் படுகிறது நுரையீரலுக்கு சுத்தமான காற்றை அனுப்ப உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக தக்க வைக் கிறது. மூட்டுக்களின் வழுவழுப்புத் தன்மையை பாதுகாக்கிறது. தலை முதல் கால் வரை ஒவ்வொரு செல் தண்ணீரின் தேவையை உணர்ந்துள்ளன. மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைய குறைய மூளையின் செயல்பாடு குறையும். இதனையடுத்து தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும் எனவே தண்ணீரை நாம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். காலையில் கண் விழித்ததும் பல் துலக்கும் முன்பே 4 குவளை தண்ணீர் அருந்த வேண்டும். பின்னர் பல் துலக்கி வாய் சுத்தம் செய்த பின்னர் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவுமே உட்கொள்ளக்கூடாது 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம். (மேலும்....)

கார்த்திகை 08, 2011

சுரண்டலற்ற உன்னத சமூகத்தை நோக்கி...

(ஏ.கே.பத்மநாபன்)

94 ஆண்டுகளுக்கு முன்பு, 1917 நவம்பர் 7ம் தேதி (அப்போதைய காலண் டரின்படி அக்டோபர் 17ம் தேதி) நடை பெற்ற மகத்தான அக்டோபர் புரட்சி, உல கம் முழுவதிலும் உழைக்கும் வர்க்க மக் களுக்கு ஒரு புதிய பாதையைத் திறந்தது. இதனால் ஏற்பட்ட மாற்றங்கள் உண்மை யிலேயே இந்த உலகினை உலுக்கியது. நமது இயக்கத்தின் நிறுவனத் தலை வரான தோழர் பி.டி.ரணதிவே கூறினார்: “நவம்பர் 7ம் தேதி என்பது, முதலாளித் துவ அமைப்பு முறைக்கு எதிராக தொழி லாளி வர்க்கம் பெற்ற முதல் வெற்றியை குறிக்கிறது; தொழிலாளி வர்க்கத்தையும், துன்ப துயரத்தில் உழன்று கொண்டிருக் கிற மக்களையும் சுரண்டுகிற கொடுமை யை உடைத்தெறிய உறுதி பூணுகிறது”.1917ம் ஆண்டு இந்த நாளில், தொழி லாளி வர்க்கத்தால் தலைமை தாங்கப் பட்ட ஒரு புதிய அரசு பிறந்தது. மனித னை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவுகட்டுவோம் எனப் பிரகடனம் செய்தது. (மேலும்....)

கார்த்திகை 08, 2011

தொழில்நுட்பத்துறையில் உலகின் அதி சக்திவாய்ந்த நபர்?

உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலை போர்ப்ஸ் சஞ்சிகை அண்மையில் வெளியிட்டது. இப்பட்டியலில் முதல் 10 பேரில் தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான்கள் இருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.  அதில் ஒருவர் பில்கேட்ஸ் மற்றையவர் ஷூக்கர் பேர்க். இவர்கள் இருவரும் யார் என்பது தொடர்பில் மேலதிக விளக்கம் தேவையில்லை .காரணம் தங்களது துறையில் இருவரும் சாதனையாளர்களே.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்பட்டியலில் பில்கேட்ஸ் 4 ஆவது இடத்தினையும், ஷூக்கர் பேர்க் 9 ஆவது இடத்தினையும் பெற்றிருந்தனர்.பத்து இடங்களுக்குள் வந்துள்ள ஏனையோர் மற்றைய துறைகளைச் சார்ந்தவர்களேயாவர். இதன்படி பில்கேட்ஸ் தொழில்நுட்ப உலகில் அதி சக்தி வாய்ந்த நபராகத் தன்னை நிரூபித்துள்ளார்.  (மேலும்....)

கார்த்திகை 08, 2011

கொழும்பைத் தட்டிக் கேட்குமா கோடம்பாக்கம்?

வெடிக்கிறார் சசிகுமார்

(இரா.சரவணன்)

''நீங்க அழுதால் ஆறுதல் சொல்லி உங்கக் கண்ணீரைத் துடைப்பேன். தேற்ற முடியாத துயரம் என்றால், உங்களோடு சேர்ந்து நானும் அழுவேன். இதுதான் என்  குணம், இயல்பு. மத்தபடி ஒருத்தனோட கண்ணீரை விற்கவோ, வெகுஜனப் பார்வைக்கு வைக்கவோ என்னால முடியாது. 'போராளி’ங்கிற தலைப்பை வெச்சுக் கிளம்புற பரபரப்பை நான் பயன்படுத்திக்க விரும் பலை. எந்த எதிர்பார்ப்பும் ஏற்படுத்தாமல், துடைச்சுப்போட்ட மனசோடுதான் ரசிகர் களை நான் எதிர்கொள்ள விரும்புறேன். 'ஈழத்து சோகங்களை நாசூக்காச் சொல்லி இருக்கேன்’, 'இலைமறை காயா விளக்கி இருக்கேன்’னு சொல்லி, தூண்டில் வீச நான் விரும்பலை. மழைக்கான அறிகுறி தெரிஞ்ச தும் பாதுகாப்பான இடத்துக்கு உணவைத் தூக்கிட்டு ஓடுற எறும்புகூட ஒரு போராளிதான். அந்த மாதிரி, எங்கோ ஒரு மூலையில இருந்தபடி அனுதினப் போராட்டங்களை எதிர்கொள்கிற ஒருத்தன்தான் 'போராளி’!'' (மேலும்....)

கார்த்திகை 07, 2011

சபாஷ் சரியான போட்டி! சீமானுக்கு ஒரு வில்லன்!!
(எஸ்.எஸ்.குகநாதன்)

தனது படங்களை இலங்கைக்கு இனி விற்கமாட்டேன் என்று இயக்குநரும் நடிகருமான சசிகுமார் அறிவித்திருக்கிறார்.இலங்கையில் தமிழ்ப்படங்களை வெளியிடுகின்றபோது அவற்றை இலங்கை அரசு தணிக்கை செய்வதாகவும், தமக்கு ஒப்பில்லாத விடயங்களை குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான வசனங்களை வெட்டி எடுத்துவிட்டே வெளியிடுவதாகவும் குற்றம்சாட்டும் சசிகுமார். அதனால் இனி தனது படங்களை இலங்கையில் வெளியிட அனுமதிக்கமாட்டேன் என்றும் அறிவித்திருக்கிறார். ஒரு சுயாதீனமுள்ள நாடு தனது சட்டதிட்டங்களுக்கு அமைய திரைப்படங்களை வெளியிடவேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறை அவர் கண்டிருப்பாரோ தெரியவில்லை.சிங்கப்பூரில் வெளியிடப்படும் தமிழ்ப்படங்களில் மிக கோரமான வன்முறைக்காட்சிகள் வெட்டி எடுக்கப்படுகின்றனவே, அதற்காக அவர் இனி சிங்கப்பூருக்கும் தனது படத்தை விற்காமல் விட்டுவிடப்போகிறார்.
(மேலும்....)

கார்த்திகை 07, 2011

மேற்குலக - ஐரோப்பிய நாடுகள் விழித்துக் கொள்ளுமா...?

புலம் பெயர் தேசங்களில் மீண்டும் துளிர்விடும் புலிகளின் வன்முறை

(சாகரன்)

1980 களின் நடுப்பகுதியில் ஆரம்பித்து 1989 மே மாதம் வரை புலம் பெயர் தேசங்கள் எங்கும் மிரட்டல், கப்பம் வாங்குதல், கொலை செய்தல், வீடு, வியாபார ஸ்தலம் போன்ற இடங்களின் கண்டாடிகளை உடைத்தல் புலிகளின் கருத்து செயற்பாடுகளுடன் உடன்படாத தனி நபர்கள் அமைப்புகள், பத்திரிகைகள், வானொலிகள் போன்றவற்றை அடித்து உடைத்து நொருக்குதல் போன்ற வன்முறைகளில் புலிகள் அல்லது அவர்களின் துணை அமைப்புக்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்கு நமக்கு ஏன் ஜோலி என்று புலம் பெயர் தேசங்களில் பல தமிழ் மக்கள் ஒதுங்கி பயந்து இருந்தனர். 1989ம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப் பட்டதும் பொது மக்களிடம் சேகரித்த பணத்துடன் பலரும் வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்து விட்டனர். தற்போது அந்தப் பணமும் தேய்ந்து போன நிலையில் உழைத்து சாப்பிட முடியாமல் சோம்பல் வருத்தத்தில் உள்ள இவர்கள் மீண்டும் புலம் பெயர் தேசத்து தமிழ்மக்களிடம் பணம் வசூலிக்கும் விடயங்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். (மேலும்....)

கார்த்திகை 07, 2011

முஸ்லிம்களின் 'தியாகத் திருநாள்' இன்று

முஸ்லிம்களது புனித பெரு நாட்களில் ஒன்றான ஹஜ்ஜூப் பெருநாளை 'ஈதுல் அல்ஹா' என்றும் 'தியாகத் திருநாள்' என்றும் கூறுவர். இது முஸ்லிம்களது பிறைக்கலண்டரின்படி துல்ஹஜ் மாதம் 10ஆம் நாள் வருவதனால் இதற்கு 'ஹஜ்'பெருநாள் என்றும் இம்மாதத்தில் நிறைவேற்றும். முக்கிய மார்க்கக் கடமைக்கு 'ஹஜ்' என்றும் அதனை மேற்கொள்பவர்கள் 'ஹாஜிகள்' என்றும் அழைக்கப்படுகின்றது. இத்தினத்தில் வழமை போல் முஸ்லிமகள்; அதிகாலையிலே குளித்து புத்தாடை அணிந்து வாசைன பூசி பள்ளிவாசல் சென்று வழிபாட்டில் ஈடுபடுவர். இதுவே முக்கிய பெருநாள் கடமையாகும். அதன் பின் வசதி படைத்தவர்கள் ஆடு, மாடு அல்லது ஒட்டகம் (இலங்கையில் இது இல்லை) முதலியவற்றில் ஏதாவது ஒன்றை அறுத்து அல்லாஹ்வுக்காக அதனைஅர்பணித்து அதன் மாமிசத்தைப் பகிர்ந்து உண்பர். இதனை குர்பான் அல்லது உல்ஹிய்யா என்பர். இங்கு குறிப்பிட்ட ஒரு தியாகம் இடம் பெறுகிறது. (மேலும்....)

கார்த்திகை 07, 2011

வீதி விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்தி விபத்து மரணங்களை குறைக்க வேண்டும்

வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் நாடெங்கிலும் மனித அழிவை ஏற்படுத்தி வந்த பயங்கரவாதம் இரண்டு ஆண்டு களுக்கு முன்னர் மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் சிறந்த ஆளுமைத் திறன் மூலம் ஒழித்துக் கட் டப்பட்டு, நாட்டில் இன்று நிரந்தர சமாதானமும், அமைதியும், பொரு ளாதார வளர்ச்சியும் நிலைகொண்டுள்ளன. பிரபாகரனின் பயங்கர வாதத்தை பின்னடையச் செய்யும் அளவுக்கு இன்று நாட்டில் வாகன ஓட்டிகளின் அகங்காரப் போக்கினால் இன்னுமொரு படுமோசமான பயங்கரவாதம் நம்நாட்டு மக்களின் உயிர்களைப் பறிக்கும் நாச வேலை தீவிரமாக பரவி வருவது மக்களை வேதனைப் படுத்தும் ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும். (மேலும்....)

கார்த்திகை 07, 2011

லிபியாவில் நேட்டோ படைகளின் இனப்படுகொலை – கடாபி கொல்லப்பட்டது எப்போது ? (பகுதி 3)

சபா நாவலன்

அய்ரோப்பியப் பெருமுதலாளிகளின் அகண்ட சாம்ராஜ்யக் கனவுகளோடும் திமிரோரும் பல நீண்ட திட்டங்களின் அடிப்படையில் கட்டியமைகப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பு கேள்விக்குரியதாகியுள்ளது. ஜேர்மனியும் பிரான்சும் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தைக் காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் மக்கள் போராட்டங்களின் முன்பு துகள்களாகிப் போயின. கிரேக்க மக்கள் பல போராட்டங்களூடாக வென்றெடுத்த அனைத்துச் சமூக நல உரிமைகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு அந்த நாட்டின் அரசாங்கத்தையே ஐ.எம்.எப் உம் அதன் பின்புலத்தில் தொழிற்படும் பெரு நிறுவனங்களின் பல் தேசிய முதலாளிகளும் விலைக்கு வாங்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக கிரேக்க மக்கள் மட்டுமல்ல ஐரோப்பா எங்கும் மக்கள் போராடத் துணிந்துவிட்டார்கள். (மேலும்....)

கார்த்திகை 07, 2011

நவம்பர் 7ம்  நவம்பர் 8ம்

நவம்பர் 7- உழைக்கும் வர்க்கத்தின் பெரு மையை, வலிமையை இந்த பூவுலகம் உணர்ந்த நாள். அன்றுதான் ரஷ்ய தேசத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஒரு புதிய அரசு முறை அமைந்தது. “ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று மகாகவி பாரதி ரஷ்யப்புரட்சியை வரவேற்றுப்பாடினார். காண்பதெல்லாம் தொழி லாளி செய்தான் என்ற பாவேந்தர் பாரதிதாசன் வரிக்கேற்ப, இந்த உலகின் மேன்மை அனைத் தையும் தங்களது உழைப்பால் உருவாக்கிய தொழிலாளர்கள் கால்நடைகளிலும் கேவலமாக நடத்தப்பட்டனர். அவர்களது உழைப்பை முத லாளிகளும் நிலப்பிரபுக்களும் ஒட்டச்சுரண்டினர். (மேலும்....)

கார்த்திகை 07, 2011

அணு ஆயுதங்கள்  திருடு போகுமா? பாகிஸ்தான் மறுப்பு

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் திருடு போகும் அபாயம் அதி கரித்துள்ளதாக அமெரிக்கப் பத்திரிகை வெளியிட்ட செய்தி, ஒரு முழு கட்டுக்கதை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்தச் செய்தி அடிப்படை ஆதாரமற் றது. பாகிஸ்தானுக்கு எதிராக வேண்டு மென்றே திட்டமிடப்பட்டு வெளியிடப் பட்ட செய்தி என்று அந்நாட்டு வெளி யுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெஹ்மினா ஜான்ஜூவா தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மை, ஒருமைப் பாடு, நலன் ஆகியவற்றை பாதுகாக்கும் வல்லமை பாகிஸ்தானுக்கு உண்டு. பாகிஸ்தானின் வலிமை குறித்து யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் குறிப்பிட்டார். பாகிஸ்தானுக்கு எதிராக இதுபோன்ற அவதூறுகளை பரப்புவது புதிதல்ல. இது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

கார்த்திகை 07, 2011

மக்கள் சீனத்தின் உயர்வேக கம்ப்யூட்டர்  அமெரிக்க பொறியாளர்களின் பிரமிப்பு

தி சன்வே ப்ளு லைட் எம்.பி.பி. என்னும் உயர்வேக அற்புத கணினி ஒன்றினை சீன அறிவியலாளர் உருவாக்கி செப்டம்பர் 2011-ல் யன்டாங் மாகா ணத்தின் தலைநகரான ஜினன் நகரில் உள்ள தேசிய கணினி அறிவியல் மையத்தில் நிறுவி யுள்ளார்.இக்கணினியின் மின் னணு மற்றும் நுண்ணணு உள் கட்டமைப்பு மற்றும் அதன் வேகச்செயல்கள் அமெரிக்க கணினி பொறியியல் துறையி னரை திகைக்க வைத்துள் ளது. ஆனால் கடந்த வாரம் தான் சீன அரசின் தொழில் துறை, ஜினனில் நடந்த ஒரு கூட்டத்தின் வாயிலாக இந்த அறிவிப்பினை வெளியிட்டது. இக்கணினி தொகுப்பு ஒரு விநாடிக்கு 1000 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் = நூறாயிரம் கோடி) கணிதப் புதிர்களுக்கு விடையளிக்குமாம். உலகின் மாபெரும் 500 கணினி வளர்ச் சித் திட்டங்களுக்கு தலைமை அறிவியல் வல்லுநராக கருதப் படும் அமெரிக்க பேராசிரியர் ஜாக் டோங்கர்ரா, இது ஒரு அதிசயம்தான் என்று கூறினார். (மேலும்....)

கார்த்திகை 07, 2011

ஏழாம் அறிவு சர்ச்சை தொடர்கிறது

பெரும் பரபரப்புடன் வெளியாகி படுசுமாராகப் போய்க் கொண்டிருக்கும் சூர்யா, ஸ்ருதி நடித்த ஏழாம் அறிவு படம் தொடர்பான சர்ச்சைகள் மட்டும் குறையவில்லை. உலகத்தமிழர்களைக் கொண்டாடும் படம் என்று அதற்கான விளம்பரம் வந்து கொண்டிருந்தது. உணர்வுபூர்வமான விஷயம் இது என்று பலரும் படத்திற்கு ஆதரவாக(படத்தைப் பார்க்காமலேயே?) கருத்து தெரி விக்கத் துவங்கினர். ஆனால், இந்தப் படம் தமிழில் மட்டும் வெளியாகவில்லை. இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அந்தப்படங்களில் வரும் போதி தர்மரும் தமிழ்நாட்டில்தானே பிறந்திருக்க வேண்டும்? உணர்வுபூர்வமாக படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றால் அப்படித்தானே காட்சிகள் இருந்திருக்கும்? அதுதான் இல்லை. தெலுங்கில் வரும் போதி தர்மர் குண்டூரிலும், இந்தியில் தாராவியிலும் பிறந்திருக்கிறார்கள். அவர் தமிழர் என்றும் காட்சிப்படுத்தப்படவில்லை. போதி தர்மர் தமிழரே இல்லை. வரலாற்றை மாற்ற வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் சென்னை மாநகரில் ஒட்டப்பட்டுள்ளன. பொதுவாக, சர்ச்சைகள் படம் ஓடுவதற்கும் உதவும். ஏழாம் அறிவுக்கு அப்படியும் இல்லையாம்.

கார்த்திகை 07, 2011

2002 குஜராத் வன்முறையின் முக்கிய சாட்சி குத்திக் கொலை

குஜராத் மதவெறி வன் முறையின் போது நரோட் டம் பாட்டியா இனப் படு கொலை சாட்சிகளில் ஒரு வரான சமூக ஆர்வலர் மற் றும் காங்கிரஸ் தொண்டர் நதீம் அகமது சயீத் சனிக் கிழமையன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டார். அவர் காலை 7.35 மணிக்கு ஜுகாபுராவில் வீட்டை விட்டு வெளியே வந்த போது கொல்லப்பட்டார் என காவல்துறையினர் தெரி வித்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த சயீத்தை அவரது குடும்பத்தினர் பெருநகரம் வி.எஸ்.மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித் தனர். (மேலும்....)

கார்த்திகை 07, 2011

ஆரோக்கியத்துடன் 150 வயது வரை வாழ ஒரு மாத்திரை போதுமாம்!

மருத்துவ துறை வளர்ச்சியின் காரணமாக மனிதனின் சராசரி வயது ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்தியர்களின் சராசரி வயது 69 ஆக உள்ளது. இந்நிலையில், ஆரோக்கியமான உடல் நலத்துடன் 150 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற் கான மாத்திரையை கண்டுபிடிப்பதற் கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது அடுத்த 5 ஆண்டு களில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பீட்டர் ஸ்மித் கூறுகையில், மனிதனுக்கு வயதாவதை ஒத்திப்போடும் மாத்திரையை கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 150 ஆண்டுகளைத் தாண்டி வாழ முடியும். அதாவது, வயதாவதைத் தடுக்கும். இது மட்டுமல் லாமல், நோய் நொடியின்றி ஆரோக் கியமாக வாழவும் இந்த மாத்திரை உதவும். இந்த மாத்திரை உடலில் உள்ள செல்களை புதுப்பித்து உற்சாக முடன் இருக்க வகை செய்யும் என்றார். (மேலும்....)

கார்த்திகை 07, 2011

செயற்கை சுவாசத்தில் தொடரும் “ஆச்சி” மனோரமா

குளியலறையில் வழுக்கி விழுந்து ஏற்பட்ட ரத்தக்கசிவு, ரத்தக்கட்டியாக மாறிய நிலையில், அதற் கான அறுவை சிகிச்சை நடிகை மனோரமாவுக்கு மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கிறது. ரத்தக்கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளதால் அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகைகள் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்துள்ளனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளதால் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்புள்ளது என்று அவரது மகன் பூபதி கூறியுள்ளார்.

கார்த்திகை 06, 2011

தமிழ் கனடியர்களுக்கான ஐக்கிய ஜனநாயக கலாச்சார அமைப்பு

(பத்திரிகை அறிக்கை)

(இந்த பத்திரிகை அறிக்கை நவம்பர் 05, 2011 அன்று கனடாவில் நடைபெற்ற இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பங்கு பற்றி பொதுக் கூட்டத்தில் துண்டுப்பிரசுர வடிவில் விநியோகிகப்பட்டது.)

தாயகத்தில் தேவைகளை நாடுகின்ற மக்களுக்காக புதிய அமைப்பாக உருவெடுத்த நாம் எமது சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை ஒருங்கிணைத்து பல்வேறு கலாச்சார வடிவங்களை ஒருங்கிணைத்து கருத்து ஒருமித்தவர்களுக்கு எமது தாயகத்தின் எதிர்காலத்தை அழைத்துச் செல்ல விளைகின்கின்றோம். புலிகளின் எச்சசொச்சங்கள் குறிப்பாக பருத்த கடல் கடந்த தமிழ் குறும் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு கனடியத் தமிழ் தீவிரவாதிகளின் துணையோடு மேற்குலகின் 'ஜனநாயகம்' இன் போர்வையில் கனடாவில் உலா வருகின்றது. இதே போலவே 'வெற்றி' கொண்ட சிங்களப் பேரனவாதமும் இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளை தொடர்ந்தும் மறுதலித்து வருகின்றது. கூடவே அவர்களின் அரசியல் அபிலாஷைகளை மறுதலிப்பதோடு தொடந்தார்போல் வீறுகொண்டு சிங்கள் குடியேற்றவாதக் கொள்கையை இலங்கைத் தீவு முழவதும் பிரச்சாரமாக செயற்படுத்துகின்றது. (மேலும்....)

கார்த்திகை 06, 2011

 

கார்த்திகை 06, 2011

வெற்றி தோல்வியில்லாத TNA யின் அமெரிக்க பயணம் உள்நாட்டில் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குமா?

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்காவிற்குச் சென்று தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு கலந்துரையாடியு ள்ளனர். இவர்களது இவ்விஜயம் தொடர்பாக உள்நாட்டில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், சில முக்கியமான பிரமுகர்களின் கருத்துக்களை வாசகர்களுக்காகத் தருகின்றோம். (மேலும்....)

கார்த்திகை 06, 2011

‘ABC 7:30′ leads to expose Australian Based LTTE Terrorist Network

The three decade long conflict had claimed more than 75,000 human lives and destroyed the key infrastructure facilities thus bringing far reaching consequences to the political, economic and social stability of the nation. It would not have been possible for the LTTE to survive as a terrorist organization for such a long period, if not for the un-hindered support received by its Front Organisations and radicalized segments of the Diaspora both in the terms of procurement, propaganda and fundraising. Unfortunately, today the same Front Organisations together with LTTE activists / sympathizers such as Fr. Emmanuel (GTF), V Rudrakumaran (TGTE), Sivaparan @ Nediyawan (TEPA), Vinayagam (Ex LTTE Intelligence Group) with less than 10% of the radicalized segments of Diaspora population who were largely responsible for destabilising the island nation and helped to sustain the LTTE terrorist campaign over many years, are still engaged in carrying out same activities as they did in the past in the pretext of “safeguarding the rights of Tamils” and using the human rights banner.In a major breakthrough giving impetus into tracing and neutralizing of the LTTE’s international network, defence intelligence sources claimed to have figured out vital information of following individuals who are directly linked to LTTE in the past and continue to work in promoting terrorist ideology.

கார்த்திகை 06, 2011

புலிகளின் ஆலேசகர்களாக முன்னாள் இலங்கை அரச அதிகாரிகள்: மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவை நிறுத்துவது குறித்து இலங்கை அரசு கவனம்!

இலங்கை அரச சேவையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களில் புலிகளுக்கு உதவிகளை வழங்கி வருவோரின் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவை நிறுத்துவது குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிய வருகிறது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் இலங்கை அரச சேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வருடாந்தம் ஐந்து மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஓய்வூதியமாக வழங்கி வருகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை நீதித்துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஓர் உயரதிகாரியும் நிதியமைச்சைச் சேர்ந்த முன்னாள் ஓய்வு பெற்ற ஓர் அதிகாரியும் தற்போது புலிகளின் ஆலோசகர்களாக வெளிநாடுகளிலிருந்து செயற்பட்டு வருகின்றனர் எனவும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கார்த்திகை 06, 2011

90 நொடிகளில் கொல்லப்பட்டார் பின்லேடன்

பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில் அமெரிக்க கமாண்டோக்கள் இறங்கிய 90 நொடிகளுக்குள் அவர் கொல்லப்பட்டார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.  முன்னதாக 45 நிமிட துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர்தான் அல் கொய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் வீடு ஒன்றில் பதுக்கியிருந்த பின்லேடன் கடந்த மே 2-ம் தேதி அமெரிக்க கடற்படை கமாண்டோக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் கடற்படை கமாண்டர் சுக் ஃபாரர் புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். இவர் பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 6 பேர் அடங்கிய கடற்படைக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.  தனது புத்தகத்தில் அவர் கூறியிருப்பது: எங்கள் குழுவினர் தரைவழியாக பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் நுழையவில்லை. ஹெலிகாப்டரில் இருந்து வீட்டின் மேல் பகுதி வழியாக உள்ளே சென்றோம். அடுத்த 90 நொடிகளில் பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார். மொத்தம் 4 சுற்றுகளாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினோம்.  நாங்கள் சென்ற ஹெலிகாப்டரில் ஒன்று வீட்டை சுற்றிக் கட்டப்பட்டிருந்த உயரமான சுவரில் இடித்து கீழே விழுந்து விட்டது.  பின்லேடனின் மனைவி அமால் பின்லேடன் முதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார்.  பின்னர் நாங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியபோது அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.  பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தை எளிதில் கண்டுபிடிக்க உதவியாக இருந்தது அவருக்கு வந்த கொரியர்கள்தான். அல் -கொய்தாவின் துணைத் தலைவராக இருந்து ஜவாஹிரிதான் தொடர்ந்து பின்லேடனுக்கு தபால்களை அனுப்பி வந்தார். அதனை வைத்து பின்லேடன் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் ஃபாரர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

கார்த்திகை 06, 2011

சஹாரா பாலைவனத்தில் கடாஃபியின் மகன்

ஜோகன்னஸ்பர்க், நவ.3: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும், லிபிய முன்னாள் அதிபர் மம்மர் கடாஃபியின் மகன் சஹாரா பாலைவனத்தில் ஒளிந்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கடாஃபியின் மகன்களில் ஒருவர் சீஃப் அல் இஸ்லாம் கடாஃபி. லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்தபோது சில முக்கிய ராணுவத் தலைவர்களுடன் லிபிய எல்லையிலிருந்து அவர் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. டுயெரக் பழங்குடி இன மக்கள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். இந்த இன மக்கள் வட ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனத்தில் வாழ்கின்றனர்.  தப்பியோடியுள்ள கடாஃபியின் மகனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தேடி வருகிறது. உள்நாட்டுப் போரின்போது, சில ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பொது மக்களை கொன்று குவித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனினும் ஆப்பிரிக்காவில் சில நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  பரந்து விரிந்த பாலைவனப் பகுதியில் நீண்ட நாள்கள் உயிர் வாழ முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் ஆதம் தியாம் தெரிவித்துள்ளார். எனினும் மாலி நாட்டுப் பாலைவனப் பகுதிகளில் சில இடங்களில் நீரும், விலங்குகளும் உள்ளன. ஆனால் அப்பகுதி அல் காய்தா பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லிபிய நாட்டில் இஸ்லாமிய இயக்கங்களை அடக்கி ஒடுக்கிய கடாஃபி குடும்பத்தவரை அவர்களுக்குப் பிடிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை 06, 2011

பிள்ளைகளுடன் சேர பெற்றோர்கள் இனிமேல் கனடா செல்ல முடியாது

 கனடாவில் வாழும் பிள்ளைகளுடனோ பேரப்பிள்ளைகளுடனோ சேர்ந்து வாழ்வதற்காக இனிமேல் எவரும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கனேடிய குடியேறல்துறை அமைச்சர் ஜேசன் கென்னி நேற்று அறிவித்தார். அதற்குப் பதிலாக புதிய விஸா நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். அதனடிப்படையில், கனடாவில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகக் கூடிய வீஸா வழங்கப்படும். அந்த வீஸாவைக் கொண்டு ஒரு தடவையில் அவர்கள் 2 வருடங்கள் வரை கனடாவில் தங்கியிருக்க முடியும்.  வருடாந்தம் 17 ஆயிரம் கனேடிய டொலர்கள் வருமானம் ஈட்டுவதுடன் தனியார் மருத்துவ காப்புறுதியையும் கொண்டிருப்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிக்கு மட்டுமே இந்த புதிய விஸா வழங்கப்படும் என்றும் கனேடிய அதிகாரிகள் கூறுகின்றனர். வருடாந்தம் கனடாவுக்கு வரும் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியின் எண்ணிக்கையை புதிய நடவடிக்கையின் கீழ் அதிகரிக்கவும் தமது அரசு முடிவு செய்துள்ளதாக ஜேசன் கென்னி தெரிவித்தார். கடந்த வருடம் 15,300ஆக இருந்த இந்த எண்ணிக்கை 25,000 வரை உயர்த்தப்படும் என்று அவர் கூறினார். கனடாவில் உள்ள தமது பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளுடன் இணைவதற்காக என தற்போது 180,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று கூறும் கனேடிய அதிகாரிகள், அதனைக் குறைப்பதற்காகவே புதிய முறை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள். இது தற்காலிகமாக இரண்டு வருடங்களுக்கு நடைமுறைப்படுதப்படும் செயல் முறை எனவும் அறிய முடிகின்றது. ஏற்கனவே உள்ள குடும்ப இணைவு கோரிக்கைகளை செய்து முடிப்பதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடு இது எனவும் அறிய முடிகின்றது.

கார்த்திகை 06, 2011

 

தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற் காரணம்

மொழி என்பது மனித வளர்ச்சியின் விரிவில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆதி மனிதன் தன்மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றைய மனிதர்களுடன் சைகையால் பரிமாறிக்கொண்டான். அதனால் சைகைமொழி பிறந்தது. சைகை மொழியும் புரியாதவர்களுக்கு தனது எண்ணக் கருத்துக்களை விளக்குவதற்கு உருவங்களைக் கீறியே புரிய வைத்தான். அதனால் உலகிலுள்ள பண்டைய மொழிகளின் எழுத்துக்கள் யாவையுமே உருவங்களால் கீறிய படங்களிலிருந்தே முகிழ்ந்த வையாகும். பண்டைய தமிழரும் தமது எண்ணங்களை உருவங்களாகவே எழுதினர். தமிழ் இலக்கண நூலான 'யாப்பெருங்கல் விருத்தியம்' படவெழுத்தை அதாவது உருவெழுத்தைப் பற்றிக் கூறுகின்றது. (மேலும்....)

கார்த்திகை 06, 2011

மார்பக புற்றுநோய் ஆண்களுக்கும் வரலாம்

ஓமோன் ஏற்றத்தாழ்வு காரணமாக ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். கான்பூரில் உள்ள ஜே. கே. புற்றுநோய் மருத்துவமனையில் நடந்த கூட்டத்தில் மார்பக புற்றுநோய்க்கான சிறப்பு நிபுணர் ரோஷினி ராவ் பேசுகையில் மார்பக புற்றுநோய் என்பது பெண்களை மட்டுமே தாக்கும் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால், அது ஆண்களையும் தாக்கும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் உள்ளனர். இதனால் பலர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். (மேலும்....)

கார்த்திகை 06, 2011

வேலை நிறுத்தம் செய்யத்தயார்  வாக்குப்பதிவில் பிரிட்டன் தொழிலாளர்கள் ஒப்புதல்

பிரிட்டனின் மிகப்பெரிய பொதுத்துறை ஊழியர்கள் சங் கமான யுனிசன், நவம்பர் 30 ஆம் தேதியன்று வேலை நிறுத் தம் செய்ய முடிவெடுத்துள்ளது. அரசின் தனியார் மய மற் றும் செலவு வெட்டு நடவடிக் கைகளைக் கண்டித்து பிரிட் டன் நாட்டின் தொழிலாளர்கள் போர்க்கோலம் பூண்டிருக் கிறார்கள். ஏற்கெனவே தொழி லாளர் காங்கிரஸ் என்ற தொழிற் சங்கம் நவம்பர் 30 அன்று வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. 11 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட யுனிசன் என்ற பெரிய தொழிற் சங்கம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. (மேலும்....)

கார்த்திகை 06, 2011

அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல்  இரண்டே நாட்களில் 127 பேர் படுகொலை

பாகிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய இரு நாடு களின் பகுதிகளுக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து அமெரிக்க ஆளில்லா விமா னங்கள் நடத்திய தாக்கு தல்களில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 127 பேர் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். வியாழனன்று, சோமா லியாவின் தென் பகுதியில் உள்ள ஹும்பாய் நகருக்குள் புகுந்து அமெரிக்கா ராணு வத்தின் ஆளில்லா விமா னங்கள் குண்டுமழை பொழிந் தன. இதில் 41 சோமாலிய மக்கள் பலியாகினர். மேலும் 33 பேர் காயமடைந்தனர். இதேபோல் ஜமாமே நகரில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 28 பேர் கொல் லப்பட்டார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். (மேலும்....)

கார்த்திகை 06, 2011

அமெரிக்காவில் பேச்சு நடத்திய தமிழ்த் தேசியத் தலைவர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அமெரிக்காவிற் குச் சென்ற தூதுக் குழுவினர் அங்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தைச் சேர்ந்த பல உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்துரையாடியுள்ளனர். அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் ரொபட் பிளேக்கின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அங்கு இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்துப் பேச்சு நடத்த சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தொடர்ந்து மூன்று தினங்களாக இவர்களுடன் பல உயர்மட்ட இராஜதந்திரிகள் பலரும் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். பல கோடி தமிழர்கள் வாழும் எமது அண்டை நாடான இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்குக்கூட அழைத்து முக்கியத்துவம் கொடுத்துப் பேச்சு நடத்தாத நிலையில் அமெரிக்காவில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு இவ்வளவு பெரிய சந்தர்ப்பம் கிடைத்தது குறித்துப் பலரும் முதலில் அதிர்ச் சியே அடைந்தனர். (மேலும்....)

கார்த்திகை 06, 2011

பரகசியமாகிய சரத் பொன்சேகா - சம்பந்தன் இரகசிய ஒப்பந்தம்

விக்கிலீக்ஸ் கசியவிட்ட செய்தியால் தர்மசங்கடத்திற்குள் தள்ளப்பட்டுள்ள TNA

சரத் பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருந்ததாக விக்கிலீக்ஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டு ள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட சரத் பொன்சேகா, ‘தமிழ் மக்களுக்கு அனைத்தையும் கொடுப்பதற்கு சரத் பொன்சேகா இணங்கிவிட்டார். அதற்கான உடன்படிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் கைச்சாத்திட்டும் விட்டார்” என்பது ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரமாக இருந்தது. இதனை எதிர்க்கட்சிகள் மறுத்து வந்த போதிலும், “விக்கிலீக்ஸ்” தற்போது வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் இது உண்மை என்பதை உறுதிப்படுத்தி யிருக்கின்றது. (மேலும்....)

கார்த்திகை 06, 2011

யாழில் பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு! தமிழ்க் கட்சிகள் மௌனம்?

வடக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. நாளாந்தம் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் இதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. ஏன் இந்த நிலைமை என்பது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம், மற்றும் அவசரத் தேவையாக உள்ளது. யாழிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இது தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றது. அத்துடன் அச்சம் அவப்பெயர் காரணமாக பல பெண்கள் இந்த எல்லை மீறும் வன்முறை தொடர்பாக வெளியே சொல்வதில்லை. அவை பதியப்படாத முறைப்பாடுகளாக உள்ளன. யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஏ-9 பாதையூடாக பயணப் போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இந்தக் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்தன. (மேலும்....)

கார்த்திகை 06, 2011

0 வாகுமா யுரோ ?

(ஏ.ஜி.எம். தெளபீக் )

ஐரோப்பிய நாடுகளில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடிகள் கடன் தொல்லைகள் நாணயப் பெறுமதியிறக்கம் என்பன அந்நாடுகளின் அரசாங்கங்களை பெரும்யோசனைக்குள் மூழ்கடித்துள்ளன. இன்று ஐரோப்பிய நாடுகளிலுள்ள எல்லா ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுக்கும் செய்தியாக இந்த பொருளாதார நெருக்கடி அந்நாடுகளில் விஸ்வரூபமெடுத்துள்ளது. பெருந்தொகையானோர் தொழில்களை யிழந்துள்ளனர். இன்னும் சிலர் கட் டாயத்தின் பேரில் வேலை யிழப்புச் செய்யப்படுகின்றனர். கணிசமான ஐரோப்பிய வங்கிகளின் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. ஓய்வூதியம் காப்புறுதி நஷ்டஈடுகள் தொடர்பாக ஐரோப்பிய தொழிலாளர்கள் நம்பிக்கையிழக்குமளவிற்கு எல்லாச் சலுகைகளும் ஐரோப்பிய அரசுகளினால் ரத்துச் செய்யப்பட்டுக்கொண்டு வருகின்றன. (மேலும்....)

கார்த்திகை 06, 2011

இன்று யாழ்.பல்கலைகழ பழைமாணவர்களின் ஒன்றுகூடல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கக் குழு ஒன்றின் ஒன்று கூடல் இன்று லண்டனில் நடைபெறுகிறது. யாழ்.பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்க ஒன்று கூடல் என்ற அடிப்படையில் கூட்ட ஒருங்கிணைப்பாளர்களின் முன் முயற்சியை பலரும் வரவேற்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைகழகம் தனது உயர்கல்வி என்ற வரையறைக்கு அப்பால் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களில் காத்திரமான பங்களிப்பு வகித்திருக்கின்றது. இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் உட்பட பல ஜனநாயகத்திற்கான போராட்டங்களை முன்நின்று நடத்திய வரலாற்றைக் கொண்டது. இவ்வாறான போராட்டங்கள் கூட வன்னிப் படுகொலையின் பின்னான காலத்தில் பல அரசியல் வியாபாரிகளின் சொந்த நலனுக்காகப் பயன்பட்டுத்தப்பட்டுள்ளமை துயர்தரும் நிகழ்வுகள்.(மேலும்....)

கார்த்திகை 05, 2011

சீரோக்களாகும் ஹீரோக்கள்

1970 களில்

 'ஆம்புளப்புள்ள பொறந்திக்கே...என்ன பேர் வெய்க்கப்போறிங்க'

'வேறென்ன........கடாபி தான்'

1980களில்

பொம்புளப் புள்ளயெண்டா என்ன பேர் வெச்சாலுஞ் சரிதான். ஆம்புளப் புள்ள பொறந்தா.....யாசிர் அரபாத் தான்'

1990 களில்

ஆம்புளப் புள்ளயோளு பொறக்குமென்டா.....சதாம் ஹூஸைன் தான்'

(மேலும்....)

கார்த்திகை 05, 2011

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு, தடுக்கும் வகையில் பேரினவாதிகள - சித்தார்த்தன

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதைத் தடுப்பதற்காகவே பேரினவாதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயத்திற்கு இனவாத சாயம் பூசுகின்றனர். இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளமை வரலாறாகும் என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கனடாவில் நடைபெற்ற தமிழ் தேசியக கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய மூவரும் சற்று அவதானமாக பேசினாலும், மாவை சேனாதிராஜ தமிழ் இளைஞர் பேரவைக் காலத்தில் கையை கிழித்து இரத்தத் திலகம் இட்ட காலத்து பேச்சுகளைப் நிறையவே பேசினார் என்பதே உண்மை நிலை. இலங்கையில் உள்ள பேரினவாத சக்திகளுக்கு எந்த வகையிலும் சளைக்காமல் சம்மந்தர் பேசாவிட்டாலும் மாவை பேசினார் என்பதே அக் சூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேட்டறிந்த உண்மைகள். கூடவே உள்ளுரில் கிளிநொச்சி சிறீதரனும், அரியநேந்திரனும் பேசும் பேச்சுக்கள் பழம் பழுத்தால் வவ்வால் தானாக வரும் என்பது போல் இன்று வரை இருப்பது தமிழ் மக்களை மீண்டும் பிழையான திசை வழியல் கொண்டு செல்ல உதவும் உசுப்பேத்தும் பேச்சுக்கள். (மேலும்....)

சீமான் அமரிக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்

அமரிக்காவில் ஒழுன்ங் செய்யப்பட்டுள்ள உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் கலந்துகொள்ள சீமானுக்கு அனுமதிவழங்க அமரிக்க அரசு அனுமதி மறுத்துள்ளது. அவரை விமான நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். அமரிக்க ஆதரவளார்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமரிக்க அரச அதிகாரிகளைச் சந்தித்துத் திரும்பியுள்ள வேளையில் சீமான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தவிர,நாடுகடந்த தமிழீழத்தின் தலைமையகமும் அமரிக்காவிலேயே செயற்பட்டு வருகிறது. (மேலும்....)

கார்த்திகை 05, 2011

வல்லினம் மெல்லினம் இடையினம் சேர்த்து இசைதந்த எங்கள் புரட்சித் தோழன் தங்கபாஸ்கரன் அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி

இன்முகத்துடன் அன்று

இன விடுதலைக்காக-உனது

இன்பங்களை துறந்தாய் தோழா

இன்னலுற்ற மக்களை நிலை கண்டு

இளமை கனவுகளை புதைத்தாய் தோழா-கண்

இமைக்கும் பொழுதெல்லாம்-எங்கள்

இலட்சியகனவு காண்பாய் தோழா

இலக்கியம் மரபு உன் சிந்தiயிலே-என்றும்

இதயத்திலே சுமந்தாய் தோழா

இயல்புடனே உன்னுள்ளே அன்று

இயல் இசைநாடகம் என்று-உனக்குள்ளே

இயற்கையாகவே கொண்டாய் தோழா

இயலாமை என்றில்லாமல்-உன் கடமையில்என்றும்

இமயம் போல் உயர்ந்தாய் தோழா-உன்

இதயத்துடிப்பில் விடியற்கனவுடன் வாழ்ந்தாய்தோழா

இளிவு கொட்ட பாசிசபுலிகளால் நாட்டை விட்டு

இந்தியாவுக்கு அடைக்கலமாய் அன்று

இடம்பெயர்ந்தாய் தோழா

இறுதிவரை உறுதியாய் நம்முடன் நின்றாய் தோழா-உன்

இருதயம் நின்றுவிட்டதை எண்ணி-உன்தோழர்களின்

இதயம் ஒருநிமிடம் வேகமாய் துடித்தது தோழா-நீ

இட்டுச்சென்ற பணிகள் நாம் தொடர்வோம் தோழா

இன்முகத்துடன் சென்றுவா... மீண்டும் பிறந்துவா.....தோழா

இலட்சனை என்றும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழா

 

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தோழர்கள்

சுவிஸ் கிளை

கார்த்திகை 05, 2011

அமெரிக்கா என்ன செய்யப் போகிறது ?

(கே.சஞ்சயன்)

இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?  இந்தக் கேள்வியும் இதற்குத் தேடவேண்டிய பதிலும் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானவை. ஏனென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக - ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்ற சூழல் இது. இந்தப் பத்தி எழுதப்பட்ட போது, வோஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தொடர்ச்சியான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தெரியாத ஒரு பின்னணியில், அதைச் சார்ந்து இந்தப் பத்தி எழுதப்படுகிறது. (மேலும்...)

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பீர்

இன்னும் எத்தனை பிள்ளைகள் வாகன விபத்திற்க்கு பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள்....வீதிகளில் நடைபாதை கடந்து செல்லும் போது நீங்கள் கூடவே அழைத்துச்செல்லுங்கள் அவதானம் தேவை....அவதானம்..அவதானம்...பிள்ளைதனை இழந்து பரிதவிக்கும் பெற்றோரை பாருங்கள்.

(நன்றி: சாந்தன்)

நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிப்பு நிறைவு

2002ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய் ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்களிடமிருந்து சாட்சி யங்களைப் பதிவுசெய்து தனது இறுதி அறிக்கையைத் தயாரித்துள்ளது. (மேலும்....)

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை புறக்கணித்தே வந்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்தை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இதற்கு நல்ல உதாரணம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஐரோப்பிய விஜயத்தின் போது கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளாமை என குறிப்பிட்ட பிரதியமைச்சர் முரளிதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பனர்கள் மட்ட்களப்பு மாவட்டத்தில் உள்ளனர். இவர்களில் ஒருவரையாவது இவர்கள் அழைத்துச் சென்றிருக்கலாம். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாதா? பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அண்ணன் தாரளமாக ஆங்கிலம் பேசுவார். அவரையாவது அழைத்துச் சென்றிருக்கலாம். (மேலும்....)

திருமலையில் இருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை

திருகோணமலை செல்வநாயகம்புர பகுதியில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குப்படுத்திய இருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் இவர்களுக்கு தலா 5 ஆயி ரம் ரூபா தண்டப் பணமும், தண்டப் பணம் கட்டத் தவறின் மேலதிகமாக 6 மாத சிறைத் தண்டனையும், இச்சம்ப வத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்கு மாறும் நஷ்ட ஈட்டை கட்டத்தவறும் பட்சத்தில் 1 வருட மேலதிக சிறைத் தண்டனை வழங்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 08 ஆம் திகதி திருகோணமலை செல்வநாயகம் புரப் பகுதியில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூவர் மீது தண்டனை கட்டளை சட்ட 364 பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்டு வந்த திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். தியாகேந் திரன் முதலாம், இரண்டாம் எதிரிகள் இருவருக்கு மேற்படி தீர்ப்பினை வழங்கினார். இவ்வழக்கின் மூன்றாவது எதிரியான செல்லத்துரை சாந்தலிங்கம் போதிய சாட்சிகளின்றி நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நிதி நிலை கவலை அளிக்கிறது - பிரதமர் மன்மோகன்

“யூரோ மண்டல பொருளாதார பிரச்சினை மிகவும் கவலை அளிக்கிறது. இப்பிரச்சினையில் இருந்து வெளிவர, உலக அளவில், சீரான, வேகமான, பொருளாதார வளர்ச்சி காண்பதே ஒரே தீர்வு” என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். ஜீ 20 மாநாடு பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் நேற்று முன்தினம் துவங்கியது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். மாநாடு துவங்கும் முன், பிரதமர் மன்மோகன் சிங்கை, பிரிக்ஸ் நாடுகளின் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா- பி.ஆர்.ஐ.சி.எஸ்.) தலைவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், “யூரோ மண்டல பொருளாதார பிரச்சினைக்கு, யூரோ மண்டலத்திற்கு உட்பட்ட நாடுகளே தீர்வு காண வேண்டும்,’ என வலியுறுத்தினர். மேலும், சர்வதேச நிதியத்தின் உதவி கிடைக்கும் பட்சத்தில், அதற்கும் ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினர். “ஜி 20 மாநாடு நடக்கும் இந்த நேரத்தில், இப்பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட நாடுகளின் நிதி வல்லுநர்கள் கலந்தா லோசித்து, தீர்க்கும் முயற்சியில் முனைப்பு காட்ட வேண்டும்’ எனவும் அவர்கள் வலியுறுத்தினர். பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், “யூரோ மண்டல பொருளாதார பிரச்சினை மிகவும் கவலை அளிக்கிறது. இப்பிரச்சினையில் இருந்து வெளிவர, உலக அளவில் சீரான, வேகமான பொருளாதார வளர்ச்சி காண்பதே ஒரே தீர்வு,’ என அவர்களிடம் வலியுறுத்தினார்.

ஜெயலலிதாவுக்கு தலைவர்கள் கண்டனம்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற அரசு எடுத்துள்ள முடிவை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசின் இந்த தவறான முடிவுக்கு கல்வியாளர்கள், தமிழ் சான்றோர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தி.மு.க. ஆட்சியில் எழுப்பப்பட்ட நூலகம் என்ற காரணத்துக்காகவே, அ.தி.மு.க. அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. சமர்சீர் கல்வியை அ.தி.மு.க. அரசு முடக்க முனைந்த போது தமிழகமே எதிர்த்தது. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகே அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியது. ஆனாலும், அ.தி.மு.க. அரசு எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. நூலகத்தை மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும். (மேலும்....)

விண்வெளி நிலையத்தில் இணைந்தது சீன விண்கலம்

பூமிக்கு மேலே 343 கி.மீ. தொலைவில் சீனா உரு வாக்கி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் அந்நாட்டின் ‘ஷென்ஷாவூ-8’ என்ற ஆளில்லா விண் கலம், நேற்று முன் தினம் வெற்றிகரமாக இணைந் தது. அமெரிக்கா, ரஷ்யா இணைந்து செயல்படுத்தி வரும் ‘மிர்’ சர்வதேச விண் வெளி நிலையத்திற்கு போட்டி யாக சீனா தனக்கான ஒரு விண்வெளி நிலை யத்தை 2020க்குள் உருவாக்கத் திட்ட மிட்டுள்ளது. இதன் முதல் கட்ட மாக கடந்த செப் டம்பர் 29ம் திகதி ‘தியான் காங்-1’ என்ற விண் வெளி ஆய்வுக் கூடம் வெற்றிகர மாக விண்ணில் நிறுவப் பட்டது. சீனாவின் கோபி பாலை வனத்தில் உள்ள ஜியூக்குவான் செயற் கைக்கோள் ஏவுதளத் திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன் ‘ஷென்ஷாவூ-8’ என்ற ஆளில்லா விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஷென்ஷாவூ-8 விண்கலம் நேற்று தியான் காங்குடன் அமைதியான முறை யில் இணைந்தது.

 கார்த்திகை 04, 2011

சம்பந்தனுக்கும் பொன்சேகாவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை விக்கிலீக்ஸ்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பான ஆவணம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாட்டு தூதுவராலயங்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆவணத்தின் பிரதியொன்றை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமக்கு வழங்கியதாக அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் தெரிவித்துள்ளார்.தேர்தலுக்கு முன்னைய காலத்தில் சம்பந்தனுக்கும் அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் பல தடவை சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளன. இடம்பெயர் மக்களை விடுவிப்பதனை தவிர ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையும் செய்யவில்லை என சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகா வெற்றியீட்டக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாக தெரிவித்திருந்தார். (மேலும்....)

கார்த்திகை 04, 2011

பொதுநலவாய மாநாடு இலங்கைக்கு வெற்றியா?

'கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்ற கதையாகத்தான் இன்றைய இலங்கை அரசாங்கத்தின் நிலை இருக்கின்றது. ஆம், போர்க்குற்றச்சாட்டுக்கள் அல்ல எந்தவொரு குற்றச்சாட்டுக்கள் எம்மீது சுமத்தப்பட்டாலும் கூட நாம் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடிபணியப் போவதில்லை என்பதனையே ஆளுந்தலைமை உட்பட அரசாங்க அமைச்சர்கள் அனைவரினதும் கருத்தாக இருக்கின்றது.கனடா போன்ற நாடுகள் இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றுள்ளதாகவும், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளதாகவும் கூறியதுடன், இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், அவ்வாறு தமது எதிர்ப்பையும் மீறி இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுமாயின் அதில் தாம் பங்குகொள்ளப் போவதில்லையெனவும் அறிவித்திருந்தது. இதனால், இம்முறை அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் அடுத்த மாநாட்டை இலங் கையில் நடத்த அனுமதியளிக்கப்படுமா? என்ற கேள்வியும் பரவலாக எழுந்திருந்தது. இருப்பினும் சில மேற்குலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில், இந்தியாவின் பலமான ஆதரவின் துணையுடன் 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. (மேலும்...)

கார்த்திகை 04, 2011

 

'ABC 7:30' leads to expose Australian Based LTTE Terrorist Network

 

The three decade long conflict had claimed more than 75,000 human lives and destroyed the key infrastructure facilities thus bringing far reaching consequences to the political, economic and social stability of the nation. It would not have been possible for the LTTE to survive as a terrorist organization for such a long period, if not for the un-hindered support received by its Front Organisations and radicalized segments of the Diaspora both in the terms of procurement, propaganda and fundraising. Unfortunately, today the same Front Organisations together with LTTE activists / sympathizers such as Fr. Emmanuel (GTF), V Rudrakumaran (TGTE), Sivaparan @ Nediyawan (TEPA), Vinayagam (Ex LTTE Intelligence Group) with less than 10% of the radicalized segments of Diaspora population who were largely responsible for destabilising the island nation and helped to sustain the LTTE terrorist campaign over many years, are still engaged in carrying out same activities as they did in the past in the pretext of "safeguarding the rights of Tamils" and using the human rights banner.  In a major breakthrough giving impetus into tracing and neutralizing of the LTTE's international network, defence intelligence sources claimed to have figured out vital information of following individuals who are directly linked to LTTE in the past and continue to work in promoting terrorist ideology. (more....)

கார்த்திகை 04, 2011

மீனா கிருஷ்ணமூர்த்தி யார்..???

பிரபாகரனுக்கும் இவருக்கும் இருந்த நெருக்கம் என்ன...???

இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மீது அவுஸ்திரேலியாவில் போர்குற்ற வழக்கு ஒன்றினை தாக்கல் செய்ய முயன்று தோல்வியைச் சந்தித்துள்ள மீனா கிருஷ்ணமூர்த்தி எனும் பெண், முன்னணி தமிழீழ விடுதலைப் புலி  உறுப்பினர் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. மீனா கிருஷ்ணமூர்த்தி, தமிழீழ விடுதலைப் புலியினரின் மகளிர் அணியின் மாலதி பிரிவின் இரண்டாம் நிலை உறுப்பினராக செயற்பட்டுள்ளதாக, இராணுவ புலனாய்வு பிரிவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின்  சர்வதேச செயற்பாடுகள் வலையமைப்பில் இணைந்து கொண்ட இவர், பல நாடுகளுக்கு சென்று, தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பிரசாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 04, 2011

கைப்பற்றுவோம் போராட்டங்கள்  ஓக்லாந்து துறைமுகம் ஸ்தம்பித்தது

முதலாளித்துவத்தை எதிர்த்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் கைப் பற்றுவோம் போராட்டங் களின் ஒருபகுதியாக, அமெ ரிக்காவின் மேற்குப்பகுதி யில் இருக்கும் துறைமுக மான ஓக்லாந்து மக்களின் முழுமையான முற்றுகைக்கு உள்ளானது. கிட்டத்தட்ட அமெரிக் காவின் அனைத்து நகரங் களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசின் அடக்குமுறை முயற்சிகள் பலனளிக்கவில்லை. கூடுத லான மக்கள் பங்கேற்பு போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென் றுள்ளது. ஓக்லாந்து நகரில் முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் பெரு முதலாளி களின் பேராசை ஆகியவற் றிற்கு எதிராகவும், இதற்கு எதிரான போராட்டங்க ளைத் தடுக்க அரசு கையா ளும் அடக்குமுறையைக் கண்டித்தும் இந்த வேலை நிறுத்தம் நடந்தது. (மேலும்.....)


கார்த்திகை 04, 2011

தலித் நீதிபதி என்பதால் பாகுபாடு – இந்திய ஜனநாயகம்

தலித் நீதிபதி என்பதால் தன்னிடம் மற்ற நீதிபதிகள் பாகுபாடு காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிஎஸ்.கர்ணன் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் தலித் நீதிபதி என்பதால் 2009-ம் ஆண்டுமுதல் பணியில் உள்ள மற்ற நீதிபதிகள் என்னை ஜாதிரீதியாக அவமானப்படுத்துகின்றனர். ஒரு நீதிபதி பொது நிகழ்ச்சி ஒன்றில் என்னை ஷூ காலால் வேண்டுமென்றே மிதித்துவிட்டு பின்னர் வருத்தம் தெரிவித்தார். மற்றொரு நீதிபதி இதேபோல பொது நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் என்பெயர் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை கிழித்து கீழே எறிந்து காலால் போட்டு மிதித்தார். அங்கிருந்த நீதிபதிகள் சிலர் அதைக் கண்டு ரசித்தனர். இப்படி தலித் நீதிபதி என்பதால் தொடர்ந்து அவமானப்பட்டு வருகிறேன். இது குறித்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் தேசியத் தலைவரிடம் புகார் செய்தேன். அவர் அந்த புகாரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் எனது புகார் தொடர்பாக விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். எனது புகார் தொடர்பாக எப்போது என்னிடம் கேட்டாலும் உரிய ஆதாரங்களை அளிப்பேன். இந்த விவகாரத்தில் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு சிஎஸ்.கர்ணன் தெரிவித்தார்.

கார்த்திகை 04, 2011

கிரிக்கெட் ஆட்ட சூதாட்டம்

3 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறை

ஸ்பாட் பிக்சிங் என்கிற முறைகேட்டை சூதாட்டக்காரர்கள் நலனுக்காக மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான்பட் மற்றும் அவரது அணியின் 2 வீரர்களான வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப் மற்றும் முகமது ஆமீர் ஆகியோருக்கு பல்வேறு கால நிலையிலான சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சல்மான் பட்டிற்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனையும் ஆசிப்புக்கு ஒரு ஆண்டும் 19 வயது ஆமீருக்கு 6 மாத சிறைத்தண்டனையையும் சவுத்வார்க்கிரவுன் நீதிமன்றம் விதித்தது. வீரர்கள் முறைகேடு செய்ய காரணமாக இருந்த ஏஜெண்ட் முசார் மஜீத்துக்கு கடும் தண்டனையாக 2 ஆண்டு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை விவரத்தை நீதிபதி ஜெர்மி குக்கி அறிவித்தார். (மேலும்.....)

கார்த்திகை 04, 2011

‘பொறுப்பு வாய்ந்த கட்சியாக தமிழ்க் கூட்டமைப்பு செயற்படவில்லை’

தமிழ் மக்களுக்கோ இலங்கைக்கோ பொறுப்பு வாய்ந்த கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படவில்லை. அதனை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் கூறியதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஐ.நா. செய லாளரை சந்திக்க முடியவில்லை என அறிகிறோம். அந்தக் கட்சி தமிழ் மக்க ளின் ஏக பிரதிநிதிகளல்ல என்ற நிலைப் பாட்டிலே நாம் தொடர்ந்தும் உள்ளோம். அவர்கள் பொறுப்புள்ளவர்களல்ல.

கார்த்திகை 04, 2011

பிரான்ஸ் அதிபர் தேர்தல்  நிகோலஸ் சர்கோசி தோல்விமுகம்!

அடுத்த ஆண்டு நடை பெறவிருக்கும் பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வலதுசாரிக் கொள்கை களைத் தீவிரமாக நடை முறைப்படுத்தி வரும் தற் போதைய அதிபர் நிகோ லஸ் சர்கோசி தோல்வி யைத் தழுவுவார் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன. வட ஆப்பிரிக்கா மற் றும் மேற்கு ஆசியாவில் உள்ள நாடுகள் மீது நடத் திய தாக்குதல் மற்றும் கடு மையான பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் மக்கள் அரசின் மீது கடு மையான அதிருப்தியுடன் உள்ளனர். 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறும். (மேலும்.....)

கார்த்திகை 04, 2011

சுவீடனுக்கு நாடு கடத்தப்படும் விக்கிலீக்ஸ் ஆசிரியர் அஸாஞ்சே

விக்கலீக்ஸ் இணைய ஏட்டின் ஆசிரியர் ஜூலி யன் அஸாஞ்சே தன்னை இங்கிலாந்து போலீசார் சுவீடனுக்கு நாடு கடத்தா மல் இருக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 40 வயது ஆஸ்திரேலிய ரான அஸாஞ்சேவின் விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்ட அதிரடித் தக வல்களால் அமெரிக்க ஏகா திபத்தியத்தின் சதித்திட்டங் களும் அராஜகங்களும் அம்பலமாகின என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்.....)

கார்த்திகை 04, 2011

நேபாளத்தில் 6500 மாவோயிஸ்ட் வீரர்களை இராணுவத்தில் சேர்க்க ஒப்பந்தம்

நேபாளத்தில் முன்னாள் மாவோயிஸ்ட் வீரர்களை இராணுவத்தில் சேர்க்க புதிய அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. கடந்த 2006 இல் நேபாளத்தில், மாவோயிஸ்ட் புரட்சிக்குப் பின், நாடு ஜனநாயக பாதைக்குத் திரும்பியது. இதையடுத்து, 20 ஆயிரம் முன்னாள் மாவோயிஸ்ட் வீரர்கள் ஏழு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் பலரை இராணுவத்தில் சேர்க்க வேண்டும், மீதமுள்ளோரை சமுதாயத்தில் இணைக்க வேண்டும் என பிரசண்டா தலைமையிலான மாவோயிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால், இது குறித்து அந்நாட்டின் பிரதான கட்சிகளிடையே பல ஆண்டுகளாக கருத்தொருமை ஏற்படவில்லை. இந் நிலையில், தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைந்து விட்டு அந்நாட்டின் கட்சிகள் ஏழு அம்ச அமைதி ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. ஒப்பந்தத்தின்படி, 6500 முன்னாள் மாவோயிஸ்ட் வீரர்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுவர். உள்நாட்டுப் போரின் போது மாவோயிஸ்ட்களால் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள், அவற்றின் உரிமையாளர்களுக்குத் திருப்பி அளிக்கப்படும்.

கார்த்திகை 04, 2011

இஸ்ரேல் ஏவுகணை சோதனை

ஈரான் - இஸ்ரேல் முறுகல் உக்கிரம்

இஸ்ரேலின் பல்மச்சிம் தளத்தில் இருந்து ஏவுகணை மூலம் ஈரான் இலக்குகளை தாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக் ஆகியோர் அமைச்சரவை அனுமதி இன்றி ஈரானின் அணு ஆலைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் ஈரான் மீதான தாக்குதலுக்கு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நேற்று அமைச்சரவை அனுமதியை கோரியதாக இஸ்ரேலில் இருந்து வெளியாகும். ஹாரெட்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 04, 2011

மக்களின் பணத்தை சூறையாடியவர்களுக்கு பிணை தர முடியாது - சி.பி.ஐ. நீதிமன்றம்

மக்கள் பணத்தை தங்களது சொந்த காரியங்களுக்காக பயன்படுத்திய வர்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களுக்கு பிணை வழங்க முடியாது என்று டில்லி சி. பி. ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி கடுமையாக கூறியுள்ளார். கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் பிணை மனுக்களை டில்லி சிறப்பு சி. பி. ஐ. நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து விட்டது. பிணை கோரிக்கை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை நீதிபதி ஷைனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவின் போது, குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டு மிகப்பெரியது. நாட்டின் பொருளாதாரத்தை இவர்கள் சூறையாடியுள்ளனர். அழித்துள்ளனர். இவர்களுக்கு பிணை வழங்க முடியாது. மேலும் பொதுமக்களின் பணத்தை எடுத்து இவர்கள் தங்களது சொந்த நலன்களுக்காக பயன்படுத்தியுள்ளனர். மக்கள் பணத்தை இப்படி சூறையாடு வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இப்படிப்பட்டவர்களை பிணையில் விடுவிக்க முடியாது என்றார் நீதிபதி ஷைனி. (மேலும்.....)

கார்த்திகை 04, 2011

புற்றுநோய்க்கு “நனோ' மருத்துவம்

புற்று நோயாளிகளுக்கு புதுவாழ்வு அளிக்க வருகிறது நனோ தொழில்நுட்பம். முதலில் ‘நனோ’ பற்றிய சிறிய விளக்கத்தை அறிந்து கொள்வது நல்லது.‘நனோ’ என்பது மிகமிகச் சிறிய ஒரு அளவு. அதாவது சாதாரணமாக கண்களால் பார்க்க முடியாத ஒரு அளவு. அதிக சக்தி வாய்ந்த நுண்ணோக்கி மூலமே இதை காணமுடியும். ஒரு மீற்றர் அளவில் ஆயிரத்தில் ஒரு பகுதி தான் மில்லி மீற்றர். அந்த மில்லி மீற்றரை ஆயிரம் பகுதிகளாக பிரித்தால் அதில் ஒரு பகுதிதான் நனோ மீற்றர். இப்போது உங்களுக்கு நனோ மீற்றர் அளவு எவ்வளவு சிறியது என்பது புரிந்து இருக்கும். இத்தனை மிகச் சிறிய அளவுகளில் உள்ள மருந்து அணுக்களை உடலில் செலுத்தி புற்றுநோய் அணுக்களை அழிப்பது பற்றிய ஆய்வுகளில் உலக மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். (மேலும்.....)

கார்த்திகை 03, 2011

மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்

(சானக ரூபசிங்க)

வடக்குக்கும் தெற்குக்கும் பொதுவானதொரு விடயத்தை நான் கண்டேன். அதாவது வளர்ச்சி இருப்பது நீங்கள் போகும் வரும் பிரதான வீதிகளில் மட்டும்தான். அனேகமான பகுதிகளில் மக்களது வாழ்க்கை முன்புபோலவேதான். இல்லாதது குண்டுகளின் ஓசை மட்டுமே. காணும் இடங்களிலெல்லாம் இராணுவப் படை. யுத்தம் முடிவுற்றதென்றால் அப் பிரதேசங்களில் பாரிய அளவில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பது ஏனென்று கேட்க வேண்டியிருக்கிறது. யுத்தம் உண்மையிலேயே நிறைவு பெற்று விட்டதென்றால் இருபத்தோராயிரம் கோடி ரூபாய் பாதுகாப்புச் செலவு எதற்காக? இன்னுமின்னும் நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது எதற்காக? மக்களுக்கு தெற்கில் நடப்பதென்ன என்பது குறித்து எதுவும் தெரியாது. இவர்களுக்கு ராஜபக்ஷவோ, விக்கிரமசிங்கவோ, பொன்சேகாவோ, சம்பந்தனோ வீரனோ துரோகியோ அல்ல. இவர்களைப் பொருத்தவரையில் இவர்கள் எல்லோருமே சம்பிரதாயபூர்வமான பொய்காரர்கள். அரசாங்கம் குறித்த நிலைப்பாடும் அதுவேதான். (மேலும்....)

கார்த்திகை 03, 2011

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள நெடியவன் அலுவலகம் மீது தாக்குதல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள புலிகளின் சர்வதேச வலையமைப்பின் முக்கியஸ்தரான நெடியவனின் அலுவலகம் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. நெடியவன் அணியினருக்கும் புலிகளின் விநாயகம் அணியினருக்குமிடையிலான மோதலையடுத்தே இந்த அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது என்றும் அது தெரிவித்துள்ளது.அத்துடன் இந்த இரு அணியின் ஆதரவாளர்களுக்குமிடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்......

http://colombotelegraph.com/2011/10/31/parithy-head-of-lttes-nediyavan-unit-in-france-was-attacked/

கார்த்திகை 03, 2011

வடக்கில் மிதிவெடிகளை அகற்ற ரஷ்யா 2.7 மில். அமெரிக்க டொலர் உதவி

வடக்கில் எஞ்சியுள்ள மிதிவெடிகளை அகற்ற ரஷ்யா 2.7 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உபகரணங்களை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியுள்ளது. இந்த உபகரணங்களை இன்று வியாழக்கிழமை பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் ரஷ்ய தூதுவர் விலாடிமிர் பி. மிகேலோ கையளித்தார். வடக்கில் 133 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் மிகவும் ஆபத்தான மிதிவெடிகள் காணப்படுவதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

கார்த்திகை 03, 2011

கனடாவில் தீபாவளிக் கொண்டாட்டத்தை குழப்ப முனையும் புலிப் பினாமிகள்!

கனடிய அரசு இதனை அனுமதிக்குமா?

(இந்திரஜித்)

2009ல் வன்னியில் புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பின்னர் சோர்ந்து துவண்டு போயிருந்த கனடியப் புலிகள், மீண்டும் தமது அராஜக நடவடிக்கைகளை கனடிய மண்ணில் ஆரம்பித்துள்ளனர். அதற்கக் காரணம், அண்மைக்காலமாக கனடிய அரசாங்கம் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்ற தவறான கணிப்பில் எடுத்து வரும் நிலைப்பாடும், விடுத்து வரும் அறிக்கைகளுமே. கனடாவின் இந்த தவறான செயற்பாடுகளை, கனடிய புலிகள் கனடிய அரசின் தமக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு, பழையபடி தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். இதனால் புலிகளின் அழிவுக்குப் பின்னர் கடந்த இரு வருடங்களாக சற்று நிம்மதியாக இருந்த கனடியத் தமிழ் மக்கள் மீண்டும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். எனவே கனடிய அரசுதான் தனது தவறான நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்து, கனடியப் புலிகளின் செயற்பாடுகளைக் கண்காணித்து, கனடிய தமிழ் மக்கின் அச்சத்தைப் போக்க வேண்டும். (மேலும்....)

கார்த்திகை 03, 2011

ஓயாத அலைகள் என்றும் ஓய்வதில்லை! 

நாடுகடந்தாலும் நாம் தமிழர்!

புலிகளிற்குள் மீண்டும் மோதல்!

புலிகளின் இளையோர்அமைப்பு, மீனா கிருஸ்ணமூர்த்தி, ஜெகன், பாதிரியார் இமானுவேல் ஆகியோரது தொடர்புகள் குறித்து புலிகளின் கஸ்ரோ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த நவரட்ணம் பிரபாகரன் கொடுத்த வாக்குமூலங்கள்  தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளன.   இலங்கையில் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற கால கட்டத்தில் ரிவைஓ எனப்படும் தமிழ் இளையோர் அமைப்புகளுடாக புலம்பெயர் நாடுகளிலிருந்து வன்னிவந்த அவ்வமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் புலிகளிடம் ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டுள்ளதாக, புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பொறுப்பாளாராகவிருந்த கஸ்ரோவின் உதவியாளர் நவரத்தினம் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

http://www.youtube.com/watch?v=Pyx9n1U91JA

கார்த்திகை 03, 2011

ஐரோப்பாவில் வரலாறு காணாத கொந்தளிப்பு

கேன்ஸ் நகரில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறும் சூழலில், ஐரோப் பிய கண்டத்தில் கொந்தளிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது. கிரீஸ் நாடு வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகிக் கொண்டிருப்பதே, ஐரோப்பா முழுவதும் நெருக்கடி தீவிர மடைய அடிப்படைக் காரணமாக மாறி யது. இந்நிலையில், அந்நாட்டின் பொரு ளாதாரத்தைக் காப்பாற்ற கடந்த வாரம் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கூடி, கிரீசுக்கு மீட்பு நிதிஅளிக்க முடிவு செய்தனர். இதன்மூலம் யூரோ நாணயத்தை பாதுகாக்க வேண்டு மென்று அவர்கள் முடிவு செய்தனர். ஆனால் கிரீஸில் மக்கள் போராட்டம் மிகப்பெருமளவிற்கு வெடித்திருப்ப தால் இந்த மீட்பு நிதியை ஏற்பதா, இல்லையா என்பது குறித்து மக்களி டமே பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்படுமென்று கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பாப்பன்ட்ரூ அதிரடியாக அறிவித்துள் ளார். ஏற்கெனவே யூரோ நாணயத் தையும், ஐரோப்பிய யூனியன் என்ற கட்டமைப்புமே தங்களது நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம் என்று எதிர்த்து வரும் கிரீஸ் மக்கள் தங்களது சொந்த காலில் நிற்பது என்று தீர்மானித்து மேற்படி மீட்பு நிதியை ஏற்க முடியாது என்று பொதுவாக்கெடுப்பில் மறுத்து விட்டால், யூரோ நாணயத்தின் அடிப்ப டையிலான ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொருளாதாரம் மளமளவென சரிவதை எவராலும் தடுக்க முடியாது. (மேலும்....)

கார்த்திகை 03, 2011

புதிய வீச்சு..! புதிய முழக்கங்கள்...!!

ஓயவில்லை அமெரிக்க மக்களின் போராட்டம்

அடக்குமுறை, கைது கள் போன்ற நடவடிக்கை களால் மக்கள் போராட்டத் திலிருந்து ஒதுங்கி விடுவார் கள் என்கிற அமெரிக்க நிர் வாகத்தின் எண்ணத்தில் மண் விழுந்த கதையாக, புதிய வீச்சுடன் நாடு முழு வதும் போராட்டங்கள் நடக்கின்றன. கலிபோர்னியா, அட் லாண்டா, டென்வெர் மற் றும் ஓரேகான் ஆகிய மாகா ணங்களில் ஆயிரக்கணக்கா னோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் மீண்டும் பெருந்திர ளாக மக்கள் ஆர்ப்பாட்டங் களில் பங்கேற்கத் துவங்கி யுள்ளனர். இரவு நேரங்களி லும் தடைகளை மீறி ஆர்ப் பாட்டங்கள் நடந்து வரு கின்றன. 2003 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ‘தி கார்ப்ப ரேசன்’ என்ற ஆவணப் படத்தைப் பார்த்துவிட்டு இத்தகைய போராட்டங் களில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். ஏராள மான மக்கள் முதலாளித் துவத்திற்கு எதிராகக் கிளம் பியிருக்கிறார்கள். இதனால் போராட்டம் மீது நம்பிக் கையும் ஏற்பட்டுள்ளது என்கிறார் 20 வயதுப் பெண் எலிசபெத் ஷார்ப். (மேலும்....)

கார்த்திகை 03, 2011

லிபியா  ஆட்டி விட்டு கிள்ளியும் விட்ட பிரான்ஸ்!

முகமது கடாபிக்கு எதி ராகக் கடுமையான தாக்கு தலை நடத்தியதில் மேற்கத் திய நாடுகளில் பிரான்ஸ் நாடுதான், கோடிக்கணக் கான ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கடந்த ஆண்டு இறுதியில் அவ ருக்கு வழங்கியதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. லிபியாவில் கடாபிக்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருந்தபோது, அந்நாட்டின் மீது தாக்கு தல்கள் நடத்த வேண்டும் என்று அமெரிக்காவை விட அதிக முனைப்பை பிரான்ஸ் காட்டியது. இது பற்றி ஐக்கிய நாடுகள் சபை யின் பாதுகாப்புக் கவுன்சி லிலும் வலுவான கருத்தை முன்வைத்தது. தாக்குதல்கள் நடந்தபோது அதிக அளவி லான போர் விமானங்களை ஈடுபடுத்தியதும் பிரான்ஸ் தான் என்பது குறிப்பிடத் தக்கது. (மேலும்....)

கார்த்திகை 03, 2011
 

ஆஸியில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடுத்தவரும் மனைவியும் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் புரிந்ததாக அவுஸ்திரேலியாவில் வழக்குத் தாக்கல் செய்த இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அருணாசலம் ஜெகதீஸ்வரன் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் சார்பில் இலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் புலிகளின் புலனாய்வுப் பிரிவிலும் நீண்ட காலம் பணியாற்றியிருக்கிறார் என்று இப்போது இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஜெகதீஸ்வரனின் மனைவி மீனா கிருஷ்ணகுமாரி, மகன் 2002ம் ஆண்டு முதல் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார். இந்தப் பெண் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் ஈழநாடு, தங்கணி என்ற புனைப்பெயருடன் செயற்பட்டதாக புலனாய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இந்தப் பெண் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் ஐக்கிய விடுதலை இளைஞர் சங்கத்தின் தலைவியாக இருந்து வருகிறார். (மேலும்....)

கார்த்திகை 03, 2011

மன்னாரில் எண்ணெய் அகழ்வு

ரஷ்ய விசேட நிபுணர் குழு இலங்கை வருகை

மன்னார் கடல் பரப்பில் எண்ணெய் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடவென ரஷ்யாவிலிருந்து விசேட நிபுணர்கள் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு தெரிவிக்கிறது. ரஷ்யாவின் ‘சர்வதேச காஸ்போர்ம் நிறுவனத்துடன் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இன்னும் மூன்று வாரங்களில் குறித்த நிறுவனத்தின் விசேட தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை வரவுள்ளனர். இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையே எரிபொருள் மற்றும் எரிவாயு தொடர்பான ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவது தொடர்பான பல இருதரப்பு உடன்படிக்கைகள் குறித்து உலக பிரசித்தி வாய்ந்த ரஷ்யாவின் காஸ்போர்ம் நிறுவனத்துடன் பேச்சுக்கள் நடைபெற்றன. எண்ணெய் அகழ்வாராய்ச்சி மற்றும் எண்ணெய்வள உற்பத்திகள் தொடர்பாக இலங்கையில் பட்டதாரிகளையும் இணைத்துக்கொள்வதற்கும், க. பொ. த. உயர்தரத்தில் சித்திபெற்றவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கவும் ரஷ்ய காஸ்போர்ம் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிக்கிறது.

கார்த்திகை 03, 2011

ஒரே கட்சிக்கு எதிராக மட்டும் இனி பிரசாரம் இல்லை

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் லோக்பால் சட்டமூலம் தாக்கல் செய்யப்படாவிட்டால் கூட்டத் தொடரின் கடைசி நாளன்று மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்குவேன் என, அன்னா ஹசாரே, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அதே சமயம், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மட்டும் தேர்தல் பிரசாரம் இனி செய்யப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஒரே கட்சிக்கு எதிரான தேர்தல் பிரசாரம் சரியா என்ற கேள்விக்கு இம்மாதிரி முடிவு எடுத்திருக்கிறார். ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே ஜன் லோக்பால் சட்ட மூலம் கோரி உண்ணாவிரதம் இருந்ததால் பாராளுமன்றத்தில் லோக்பால் சட்டமூலம் நிறைவேற்றப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார். ஜன் லோக்பால் சட்ட மூலத்தினால் ஊழலை ஓழிக்க முடியும். அதுமட்டுமல்லாது வளர்ச்சிப் பணிகளுக்கு கூடுதல் நிதியையும் ஒதுக்க முடியும்’ என ஹசாரே பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டும் அல்ல. ‘எங்கள் அமைப்பு இனி தனி ஒரு கட்சிக்கு எதிராக மட்டும் தேர்தல் பிரசாரம் செய்யாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கார்த்திகை 03, 2011

230 பயணிகளுடன் விமானம் போலாந்தில் அவசர தரையிறக்கம்

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகருக்கு 230 பயணிகளை ஏற்றிச் சென்ற 767 போயிங் விமானம் போலாந்தின் வார்சோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப் பட்டது. விமானத்தின் சக்கரங்கள் இயங்காததன் காரணமாகவே அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் வார்சோ விமான நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. அவசர தரையிறக்கத்துக்காக ஏனைய விமானங்களின் போக்குவரத்து ரத்துச் செய்யப்பட்டதோடு ஒடுதளத்தில் ஆபத்தை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று காலை விமானியின் சமயோசித செயற்பாட்டின் மூலம் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறக்கிய போது நெருப்பு மூட்டம் ஏற்பட்டாலும் 230 பயணிகளும் எந்த காயமுமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர்.

கார்த்திகை 03, 2011

கிர்கிஸ்தானில் அமெரிக்கா இராணுவ தளத்திற்கு பூட்டு

கிர்கிஸ்தானில் அமெரிக்க இராணு வத்தளம் மூடப்படும் என புதிய ஜனாதிபதி அறிவித்துள்ளார். சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பிரதமர் அல்மாஷ்பெக் அதாம்யேவ் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து அவர் பிஷ்கெக் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கிர்கிஸ்தானில், மனாஸ் விமான நிலையத்தில் இருக்கும் அமெரிக்க இராணுவ தளம் மூடப்படும். ஏனெனில் தற்போது ஈராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் உள்ளது. அதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. அதே போன்று அமெரிக்காவினால் அண்டை நாடான ஈரானிலும் பதற்றம் ஏற்பட்டு ள்ளது. அதுபோன்ற சூழ்நிலை ஒருநாள் கிர்கிஸ்தானிலும் ஏற்படும். அதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். ஆகவே தான் அமெரிக்க இராணுவ தளத்தை மூட திட்டமிட்டுள்ளோம். மனாஸ் நகரில் அமெரிக்க இராணுவ தளம் செயல்பட 2014ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார். சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தான் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு மனாஸ் விமான நிலையத்தில் இராணுவ தளம் அமைக்க அப்போதைய ஜனாதிபதி குர்மான் பெக் எஸ் பாகியேவ் அனுமதி அளித்தார். அதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ. 600 கோடி வாடகையாக பெறப்பட்டது.

கார்த்திகை 02, 2011

தமிழ் தேசிய கூட்டமைப்பு

வெளிநாடுகளுடன் பேசி உள்நாட்டு பிரச்சினையை தீர்க்க முடியாது

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேறு நாட்டு அரசாங்கங்களுடன் பேச்சு நடத்துவதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்க மற்றும் கனடா விஜயம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்; அமைச்சர் விஜயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தியிருக்கவில்லை. தேசிய பிரச்சினை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி வருகிறது. தேசிய பிரச்சினைக்கான தீர்வு நாட்டுக்குள்ளே உள்ளது. இங்கிருந்தே அதற்கு தீர்வு எட்டப்பட முடியும். வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பேசுவதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. பாராளுமன்றத்தின் மூலமோ யாப்பு திருத்தத்தின் மூலமோ தான் இதற்கு தீர்வு எட்ட முடியும் என தெரிவித்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியல்ல என்றும் குறிப்பிட்டார்.

கார்த்திகை 02, 2011

நீடூழி வாழ்க பாலஸ்தீனம்!

‘யுனெஸ்கோ’ எனப்படும் பெருமைக்குரிய அமைப்பு, பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்து, உலகோரின் நன்மதிப்பை மேலும் ஒருமுறை பெற்றுக்கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பே யுனெஸ்கோ. ‘எங்களைத் தனி நாடாக அங்கீகரியுங்கள்’ என்று பெருங்குரலெடுத்து பாலஸ்தீனம் விடுத்த கோரிக்கையை, ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பதைத் தான் அளித்த அங்கீகாரத்தின் மூலம் பளிச்சென உணர்த்தி யிருக்கிறது யுனெஸ்கோ. இதற்காக இவ்வமைப்பு அமெரிக்காவின் ஆத்திரத்திற்கும் ஆளாகியிருக்கிறது. யுனெஸ் கோவின் செயல்பாடுகளுக்கு 22 சதவீத நிதியை, அதாவது சுமார் 80 மில்லியன் டாலர் நிதியை வழங்கிவரும் அமெரிக்கா, பாலஸ் தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்தால் இந்த நிதியைத் தராமல் யுனெஸ்கோவையே முடக்கு வோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. ஆனால் அந்த மிரட்டலை நிராகரித்து, பாலஸ் தீனத்தை அங்கீகரித்து வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது யுனெஸ்கோ.
(மேலும்.....)

கார்த்திகை 02, 2011

அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் பலர் கைது

உலகம் முழுவதிலும் ஆக்கிரமிப்பு போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்காவின் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். வோல்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டத்தின் உத்வேகத்தால் அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நியூயோர்க், பிராங்பர்ட், லண்டன் உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டக் காரர்கள் முகாமிட்டு தங்கள் போராட்டங்களைத் தொடர் கின்றனர். அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் கடந்த இரு நாட்களாக எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான பனிப்புயல் வீசத் துவங்கியுள்ள நிலையில் ஆக்கிரமிப்பு போராட்டத்தின் வேகம் சற்று குறைந்திருக்கிறது.  ஓரிகான் மாகாணத்தில் போர்ட்லேண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு பூங்காவில் தங்கியுள்ளனர். அதற்கு மேல் வேறு பூங்காக்களை ஆக்கிரமிக்கக்கூடாது என பொலிஸார் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பொலிஸார் விடுத்த ஊரடங்கு உத்தரவையும் மீறி ஜேமிசன் பூங்காவில் நூற்றுக்கணக்கானோர் குவியத் துவங்கினர். தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் 39 பேரும் டென்னிசி மாகாணத்தில் நாஷ்வில்லேயில் பலரும் கைது செய்யப்பட்டனர்.

கார்த்திகை 02, 2011

தோழர் தங்கபாஸ்கரனுக்கு எங்கள் இதய அஞ்சலி

சென்னை முகப்பேரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த எங்கள் தோழன் பாச்சா என்று அனைவராலும் அழைக்கப்டும் தங்கமணி தங்கபாஸ்கரன் இன்று (1.11.2011) தனது சிறுநீரக கோளறு காரணமாக காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை சென்னை முகப்பேரில் எதிர்வரும் திங்கட்கிழமை(7.11.11) அன்று நடைபெறும். யாழ்ப்பாணம் நெல்லியடியை பிறப்பிடமாக் கொண்ட தோழர் தங்கபாஸ்கரன் நெல்லியடியில் ஈ.பிஆர்.எப் இன் அரசியல் பிரிவில் செயல்பட்டு கட்சிக்காகவும், மக்களின் நலனுக்காவும்  பெரிதும் உழைத்தவர். ஏல்லோருடனும் இன் முகத்துடனும், அவரது இயல்பான நகைச்சுவை உணர்வாலும் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றிருந்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை இறைவன் கொடுத்திருப்பார் அந்த வகையில் நகைச்சுவை உணர்வை தங்கபாஸ்கரன் பெற்றிருந்தார்.(மேலும்.....)

கார்த்திகை 02, 2011

தந்தை செல்வாவின் சிலையை மீண்டும் அதேயிடத்தி​ல் நிறுவுவோம் ​- புளொட்

திருமலையில் தந்தை செல்வாவின் சிலை விசமிகளால் சிதைக்கப்பட்டமை தொடர்பில் புளொட் அமைப்பு அறிக்கையொன்றினை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில், தந்தை செல்வாவின் சிலை திருமலையில் சிதைக்கப்பட்ட செய்தி தமிழ்மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாத்வீகத்தின் தந்தையென்றும், ஈழத்துக் காந்தியென்றும் அழைக்கப்பட்ட தந்தை செல்வா அவர்கள், உண்மையிலேயே தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டவென சாத்வீக முறையிலே நேர்மையாக போராட்டங்களை முன்னெடுத்தவர்.(மேலும்.....)

கார்த்திகை 02, 2011

நேட்டோவின் மனிதகுல படுகொலை

(நேட்டோவின் லிபிய ஆக்கிரமிப்பு சதிகள் குறித்து 21.02.2011 அன்று ஆற்றிய கருத்தரங்க உரை வாசகங்களை சுட்டிக்காட்டி கிரான்மா (25.10.2011) இதழில் பிடல் காஸ்ட்ரோ எழுதிய கட்டுரை.)

“இன்று மனிதகுலம் அனுபவிக்கும் மிகப்பெரிய சோகங்களில் ஒன்றான உலகம் வெப்பமாதல், பெட்ரோல் மற்றும் எரிவாயு வை வீணாக அழிவுப்பாதையில் பயன்படுத் துவதுதான்”. “ இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மன், பிரிட்டனின் துருப்புகளுக் கிடையிலான குறிப்பிடத்தக்க யுத்தக்கள மாக இருந்த லிபியா, 1951 ஆம் ஆண்டு முதல் ஆப்பிரிக்கா சுதந்திர நாடாக மலர்ந் தது”. “கியூபாவின் பரப்பளவில் மூன்று மடங்கு ஏரியாக நிலத்தடியில் தேங்கிக் கிடக்கும் நீர்வளமும் அதன்மேற்பரப்பில் கடுமையான 95 சதவீதமான பாலைப் பகுதியும்தான் லிபியா. எனவேதான் நாடு முழுவதும் புதிய நிலத்தடி நீரை விநியோ கிக்கும் குழாய் இணைப்புகளை லிபியா அமைக்கமுடிந்தது. நவீன தொழில்நுட்பம் உயர்வகை எண்ணெய் வயல்களையும், ஏராளமான நிலத்தடி எரிவாயு இருப்பையும் கண்டுபிடிக்க உதவியது”.
(மேலும்.....)

கார்த்திகை 02, 2011

பிரிட்டனின் கருத்தை அரசு நிராகரித்தது

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது

2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு முன்னர் மனித உரிமை செயற்பாடுகளில் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் கருத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரித்தது. வெளிநாடுகளை திருப்திப்படுத்தும் வகையில் எமக்கு செயற்பட முடியாது. எந்த நாடும் எமக்கு உத்தரவிட முடியாது. நாட்டு மக்களின் தேவைக்கேற்பவே சட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். (மேலும்.....)

கார்த்திகை 02, 2011

 

தாய்நாட்டுக்கெதிராக வெளிநாடுகளில் தமிழ் கூட்டமைப்பினர் சதி, உடன் கைது செய்க

நாட்டுக்கும் அரசியலமைப்புக்கும் எதிராக செயற்படும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழுவை நாடு திரும்புகையில் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசாங்கத்தைக் கோருகிறது. இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் தூதுக்குழு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் என பல சர்வதேச நாடுகளுக்குச் சென்று மேற்குலகப் பிரதிநிதிகளுடனும் புலிகளின் ஆதரவாளர்களுடனும் தனிநாடு அமைப்பது குறித்து பேச்சு நடத்தி வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு மேற்கொண்ட சத்தியப் பிரமாணத்தை மீறி செயற்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த இயக்கம் தெரிவித்தது.

கார்த்திகை 02, 2011

ஈரான்

இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

சவூதி அரேபிய தூதர் கொலை சதித்திட்டத்தில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டை எதிர்த்து ஈரான் முறைப்படி அறிக்கை யொன்றை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கான சவூதி அரேபிய தூதரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் மன்சூர் அர்பாப்சியார் (56) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.  அவரின் பின்னணியில் ஈரானின் புரட்சிப் படை இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இக்குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்துள்ள ஈரான் நேற்று முறைப்படி இது குறித்து அமெரிக்காவுக்கு அறிக்கையொன்றை அனுப்பியு ள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக உறவை மேற்கொள் ளாததால், ஈரானில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் மூலம் இந்த அறிக்கை அமெரிக்காவுக்கு அனுப்பப்பட் டுள்ளது. அந்த அறிக்கையில் ஈரான் கூறியிருப்பதாவது: இதுபோன்று ஒரு நாட்டின் மீது குற்றச்சாட்டுகள் கூறுவது அமெரிக்காவின் அரசியலில் ஒரு உத்தியாக பேணப்பட்டு வருகிறது. பொய்க் காரணங்களைச் சொல்லித்தான் ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது. அங்கு நடத்திய போரினால் தனது பணப் பையை நிரப்பிய அமெரிக்கா, அங்கிருந்து கிளம்பும் வழியைக் காணோம். சர்வதேச சட்டங்களை மீறி ஈரானின் தார்மீக நிலைப்பாட்டை புண்படுத்தும் விதத்தில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறியதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசிடமும், புரட்சிப் படையிடமும் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கார்த்திகை 02, 2011

கொழும்பு - யாழ்ப்பாணம் இ.போ.ச. பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்

இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம் - கொழும்பு புதிய பஸ் சேவையொன்றை இன்று ஆரம்பித்துள்ளது. காலை 6.45 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் அதே நேரம் யாழ்ப்பாணத்திலிருந்தும் பஸ் வண்டியொன்று கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது. வரக்காபொல, குருநாகல், அனுராதபுரம், மதவாச்சி, வவுனியா ஊடாக இச்சேவை இடம்பெறும். இதுகால வரை இ.போ.ச. இரவு நேர சேவைகள் மூன்றை மட்டும் நடத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. _

கார்த்திகை 02, 2011

பாரிஸில் புலிகளுக்கிடையில் மோதல்! தமிழர் ஒருங்கிணைப்புக்கு தலைவருக்கு வாள்வெட்டு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய  வாள்வீச்சுத் தாக்குதலில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்  (TCC) தலைவரான பரிதி – றீகன் என்றழைக்கப்படும் நடராஜா மதீந்திரன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுது, வெளியில் காத்திருந்த இனந்தெரியாத நபர்களால் சரமாரியான ஆயுதங்களால் இவர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாக  முதற் கட்ட செய்திகள் தெரிவித்தன. தற்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (மேலும்.....)

கார்த்திகை 01, 2011

ட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புற தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை அரசு முறைகேடாக பெரும்பான்மையினருக்கு வழங்கப்படுகின்றன - கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புற தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை அரசு முறைகேடாக பெரும்பான்மையினருக்கு மட்டுமே வழங்குவதாக குற்றஞ்சாட்டியுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இது மறைமுகமான திட்டமிட்ட குடியேற்றம் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;சிறுபான்மையினராகிய தமிழ் பேசும் மக்களுக்கு அரச காணியை கிழக்கு மாகாண சபை வழங்குவதற்கு பல காணி வழங்கல் நிர்வாக முறைமையையும் சட்ட திட்டங்களையும் மத்திய அரசும் கிழக்கு மாகாண சபையும் கையாளும் நிலையில் கீழ் குறிப்பிடப்படும் அரசகாணியை சகோதர இனத்திற்கு எவ்வாறு மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளது? (மேலும்...)

கார்த்திகை 01, 2011

TNAஉடன் தற்போது எழுந்துள்ள முரண்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக டெலோ இயக்கம் எதிர்வரும் 06 ஆம் திகதி திருமலையில் கூடுகிறது:ஞாயிறன்று முடிவு வெளியேறுமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தற்போது எழுந்துள்ள முரண்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக டெலோ இயக்கம் (தமிழ் ஈழ விடுதலை இயக்கம்) எதிர்வரும் 06 ஆம் திகதி திருமலையில் கூடுகிறது. இதன்போது சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுமென இந்த இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளரான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சி,(சுரேஷ் அணி) டெலோ ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் தங்களைப் புறந்தள்ளும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இலங்கை அரசாங்கத்துடன் நடைபெற்ற வரும் 12 கட்டப் பேச்சுவார்த்தைகளின்போது தங்களுக்கும் இடமளிக்காமை, அமெரிக்க விஜயத்தில் தமது கட்சிப் பிரதிநிதிகளைச் சோத்துக் கொள்ளாமை தொடர்பில் ஆறாம் திகதி நடைபெறும் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் கூறினார். எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படும்போது அதனை எவ்வாறு கையாள்வது? எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவது என்பது தொடர்பில் திருமலைக் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் எமக்குத் தெரிவித்தார். ரெலோ வெளியேறாது தொங்கிக் கொண்டு இருக்கவே வாய்ப்புகள் நிறைய உண்டு. தமிழ் கட்சிகளின் அரங்கம் போன்ற வலுவான ஜனநாயக் கூட்டணி அமையாதவரை பலரும் இவ்வாறு தொங்கிக் கொண்டே இருப்பர். இது அவர்களுக்கு ஒன்று இரண்டு பதவி நாற்காலிகளை பெற்றுத் தரலாம் என்பதற்காக.

கார்த்திகை 01, 2011

தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் அல்ல

தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கைத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டாமென்று மனித உரிமைகள் பற்றிய இலங்கையின் விசேட தூதுவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்களின் சார்பில் குரல் கொடுப்பதற்கு பல அரசியல் கட்சிகள் இருப்பதாகவும் அவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மாறான கொள்கையை கடைப்பிடிப்பதாக வும் ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஐ. நா. உரையாடும் போது அவதானமாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். (மேலும்....)

கார்த்திகை 01, 2011

700-வது கோடி குழந்தை நர்கீஸ்

உலக மக்கள் தொகை திங்களன்று 700 கோடியை எட்டியுள்ளதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. ஒவ்வொரு நிமிடத்துக் கும் 11 குழந்தைகள் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள உத்தரப் பிரதேசத்தில், மால் கிராமத்தில் பிறந்த குழந்தை 700-வது கோடி குழந்தை என அறிவிக்கப்பட்டது. அஜய், வினீதா தம்பதியின ருக்கு பிறந்த அந்த குழந் தைக்கு நர்கீஸ் என பெயரி டப்பட்டுள்ளது. இதனிடையே உலகின் 700-வது கோடி குழந்தை தங்கள் நாட்டில் பிறந்துள்ளது என்றும் அக்குழந்தை யை வரவேற்பதாகவும் பிலிப்பைன்ஸூம் அறிவித் துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு சற்றுமுன் பாகப் பிறந்த டேனிகா மே காமக்கோ என்று பெயரி டப்பட்டுள்ள குழந்தை உலகின் 700வது கோடி குழந்தை என பிலிப் பைன்ஸ் அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் அந்த குழந்தையை ஐநா உயர் அதிகாரிகள் நேரில் பார்த்த னர். அவர்கள் அந்த குழந் தைக்கு சிறிய கேக் ஒன்றைப் பரிசாக அளித்தனர்.

கார்த்திகை 01, 2011

Wall Street's 'Disaster Capitalism for Dummies'

(By PAUL B. FARRELL)

Yes, we're dummies. You. Me. All 300 million of us. Clueless. We should be ashamed. We're obsessed about the slogans and rituals of "democracy," distracted by the campaign, polls, debates, rhetoric, half-truths and outright lies. McCain? Obama? Sorry to pop your bubble folks, but it no longer matters who's president. Why? The real "game changer" already happened. Democracy has been replaced by Wall Street's new "disaster capitalism." That's the big game-changer historians will remember about 2008, masterminded by Wall Street's ultimate "Trojan Horse," Hank Paulson. Imagine: Greed, arrogance and incompetence create a massive bubble, cost trillions, and still Wall Street comes out smelling like roses, richer and more powerful! (more....)

கார்த்திகை 01, 2011

லிபியா வானில் பன்னாட்டு வல்லூறுகள்! 

லிபியாவில் கடாபி கொலை செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை. புதிய ஊடுருவல் படை திரிபோலியின் கரைகளில் இறங்க திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. இராக், ஆப்கன் பிரதேசங்களில் வேலை முடிந்த பன்னாட்டு கட்டுமான நிறுவனங்கள் லிபியா பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. லிபியாவின் புனரமைப்பு வேலைத் தேவைகளையும், அதற்கு மாற்றாக அமெரிக்க-நேட்டோ படைகளின் செயல்நன்றியோடு பெறப்போகும் எண்ணெய் வளத்தையும் கணக்கிட்டு பன்னாட்டு கம்பெனித் தரகர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர். கடாபியின் படுகொலைக்கு முன்பாக 20.10.2011 அன்று 80 பிரெஞ்சு கம்பெனிகள் லிபியாவின் தேசிய இடைநிலை அரசின் தலைவர்களை திரிபோலியில் சந்தித்துள்ளன. சென்ற வாரம் பிரிட்டனின் ராணுவ அமைச்சர்பிலிப்ஹம்மண்ட், பிரிட்டன் கம்பெனிகளை சூட்கேசுகளுடன் திரிபோ லிக்குச்செல்லதயார் செய் யும்படி சொல்லிவிட்டாராம். கடாபியின் உடல் அடக்கம் செய்வதற்கு முன்பே பிரிட்டிஷ் கம்பெனியான ட்ராங்கோ ப்ராஜக்ட்ஸ் தனது இணையதளத்தில் லிபியாவில் தொழில் துவங்குவதற்கான விளம்பரம் செய்யத் துவங்கிவிட்டது. (மேலும்.....)

கார்த்திகை 01, 2011

Trained TYO members operating globally - Canada, Europe, Australia, USA.
Upload onto FB's and Websites, and Blogs, etc.

கார்த்திகை 01, 2011

வெள்ளை மாளிகை முன்பாக படம் பிடிப்பதால் பலனில்லை - கிழக்கு முதல்வர்

அடைய முடியாத இலக்கினையும் சாத்தியமற்ற விடயங்களையும் பேசிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுப்பதில் இலங்கையில் ஒன்றும் நிகழ்ந்து விடப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்ட பிச்சைதான் முதலமைச்சர் சந்திரகாந்தனின் வருகை என்று. நான் இந்த சந்தர்ப்பத்தில் பகிரங்கமாகக் கேட்கிறேன் எதிர்வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியுமா? ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் ஒன்று சேர்ந்து வாக்களித்தால் கூட அவர்கள் ஆட்சியமைக்க முடியாது. வேண்டுமானால் எதிர்க்கட்சியில் அமர்ந்து தமிழ் சமூகத்திற்கு எந்தவிதமான நன்மைகளையும் பெற்றுக் கொடுக்க முடியாது இருப்பர். (மேலும்....)

கார்த்திகை 01, 2011

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய விண்கலத்தை ஏவியது ரஷ்யா

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லும் ஆளில்லா விண்கலத்தை, ரஷ்யா நேற்று முன்தினம் முதன் முதலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா சார்பில் சரக்குகள் கொண்டு செல்லும் விண்கலம் ஒன்று, கடந்த ஆகஸ்ட் 24ம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. எனினும், அந்த விண்கலம் பாதியில் விழுந்து, பரிசோதனை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, விண்கலம் விழுந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, புதிய விண்கலத்தில் அந்த குறைகள் களையப்பட்டன. இதையடுத்து, எம்- 13 எம் என்ற புதிய விண்கலம் நேற்று முன்தினம் கசகஸ்தான் நாட்டில் உள்ள பைக்கனுர் என்ற இடத்தில் இருந்து ஏவப்பட்டது. இதில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தேவையான சரக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலம் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சேரவுள்ளது.

கார்த்திகை 01, 2011

சிவாஜி, கமல் அளவு எனக்கு நடிப்பாற்றல் இல்லை

சிவாஜி, கமல்ஹாசன் அளவுக்கெல் லாம் எனக்கு நடிப்பாற்றல் இல்லை என்று நடிகர் ரஜினி காந்த், விருது வழங்கும் நிகழ்ச்சி யொன்றில் பரபரப்பாக பேசினார். சினிமா துறையில் 75 திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய இயக்குனர் எஸ்.பி. முத்துராமனுக்கு, சங்கர நேத்ராலயா சார்பில் ‘சங்கர ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். என்னை உருவாக்கி யவர்கள் என்னிடம் பேசும்போது, நீ தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் சிவாஜியோ, கமல்ஹாசனோ கிடையாது அவர்களை போல் நடிப்பாற்றல் எனக்கு கிடையாது. சினிமா துறையில் என் மூலதனம் என் உடலின் வேகம்தான். எனவே, என் உடலில் வேகம் இருக்கும் வரை நடிப் பேன் என்றார். மேலும் எனது உடல் நிலை சரியாக பிரார்த்தனை செய்த ரசி கர்கள் அனைவருக் கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள் கிறேன் என்று கூறினார்.

கார்த்திகை 01, 2011

எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கு இன்று முதல் திட்டமிட்டு செயற்படுவோமாக

உலகின் சனத்தொகை நேற்று ஏழு பில்லியன் இலக்கை எட்டி யது. ஏழாவது பில்லியன் இலக்கை எட்டுவதற்கு உலகின் முதலாவதாக பிறந்த குழந்தை இந்தியாவின் உத்திரபிரதேசத் தைச் சேர்ந்த இப்போது கிoo என்று அழைக்கப்படும் பெண் குழந் தையாகும். இது போன்று அடுத்தடுத்து உலகின் நாலா பக்கங் களிலும் பிறந்த பிள்ளைகளினால் உலக சனத்தொகை 7 பில்லிய னைத் தாண்டி அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் சனத்தொகை 300 மில் லியனாக இருந்தது. 1800ம் ஆண்டில் அது ஒரு பில்லியனாகவும், 1927ல் இரண்டு பில்லியனாகவும், 1960ல் மூன்று பில்லியனாகவும், 1974ல் நான்கு பில்லியனாகவும் 1987ல் ஐந்து பில்லியனாகவும், 1999ல் ஆறு பில்லியனாகவும், 2011 ஒக்டோபர் 31ம் திகதி ஏழு பில்லியன் இலக்கை தாண்டியிருக்கிறது. (மேலும்.....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com