Contact us at: sooddram@gmail.com

 

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 5)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.
 
புலிகள் ஜேவிபி என்ற இரு தீவிரவாத அமைப்புக்களும் பரஸ்பரம் தமிழ் சிங்கள மக்கள் இணைவதை ஒரு வண்டிலில் பூட்டிய மாடுகள் போல் செயற்பட்டனர். இதற்கு குறுக்கே நின்ற யாவரையும் வகை தொகையின்றி கொன்று குவித்தனர். இவ்விருதரப்பினராலும் தமிழ் சிங்கள மக்களுடன் கலந்து வாழ்ந்த முஸ்லீம் மக்கள் பாதிப்பிறகு உள்ளானது பெரும் சோகம். இது இன்றுவரை தொடரந்து கொண்டே இருக்கின்றது.

1970 ஆரம்பமான தமிழ் மக்கள் மத்தியிலான தீவிரவாத செயற்பாடுகள் 1980 களில் ஆயுதம் தாங்கிய தாக்குதல் என்று தீவிரம் அடைந்து இருந்தது. வெறும் இன உணர்வை மையமாக வைத்தும் இடதுசாரி சிந்தனையின் அடிப்படையிலும் விடுதலை அமைப்புக்கள் தோற்றம் பெற்று இருந்தன. இப்படியான
ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் தனது விரிவுரையாளர் தொழிலை ஆரம்பித்தார் ராஜினி திரணகம.

ராஜினியின் மூத்த சகோதரி நிர்மலாவும் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட யாழ் பல்கலைக் கழக கலைப்பீட விரிவுரையாளர் நித்தியானந்தன் என்பவரும் அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர மறைமுக? செயற்பாட்டாளர்களாக இருந்தனர். இலங்கை பொலிஸாரால் காயம் ஏற்பட்டிருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் சீலன். பாதுகாப்பு காரணங்களுக்காக சீலனுக்கு வைத்திய சாலைக்கு வெளியில் இரகசிய முறையில் சிகிச்சை அழித்தல் என்ற நிகழ்வில் வற்புறுத்தலுக்கு இணங்க செயற்பட வைத்ததன் மூலம் புலிகளுடனான ஒரு தொடர்பு வலைக்குள் உள்வாங்கப்பட்டார் ராஜினி. இதன் மூலம் ராஜினி அவரின் சகோதரி நிர்மலா நித்தியானந்தனால் புலிகளிடம் ஒரு சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டார். இந்நிகழ்வுக்காக நிர்மலா ராஜினியின் ஆவணப்படமான No More Tears Sister இல் கண்ணீருடன் வருந்தியதை நாம் யாவரும் பார்க்கமுடியும். ஆனால் ராஜினியின் மரணத்தின் பின்பு வரும் காலம் கடந்த ஞானமாக இது அமைந்தது துர்பாக்கியமாக அமைந்துவிட்டது.

ராஜினியின் கணவர் தயாபால திரணகம ஒருபோதும் தனி நாட்டிற்கான ஈழவிடுதலைப் போராட்டத்தையோ அல்லது அதன்பால் உள்ள அமைப்புக்களையோ ஏற்றுக்கொண்டவர் அல்ல. இதற்கான வாதப் பிரதிவாதங்கள் ராஜினிக்கும் தயாபாலாவிற்கும் இடையில் பல தடவைகள் ஏற்பட்டிருக்கவே வாய்ப்புக்கள் அதிகம். தயாபால உறுப்பினராக இருந்த ஜேவிபி தனது பிரதான 5 தலைப்பிலான அரசியல் வகுப்புக்களில் ஒன்றாகஇந்திய விஸ்தரிப்பு வாதம்என்பதை கொண்டிருந்தது. தமிழ் மக்களின் தேசிய இனப் போராட்டத்தை ஜேவிபி இந்திய விஸ்தரிப்பு வாதக் கண்ணோட்டத்திலேயே பார்த்து வருகின்றது. அதுவும் சிறப்பாக சுத்த இனவாத ஆயுதக் கண்ணோட்டத்தையுடைய புலிகளுடனான ராஜினியின் உறவை எந்த வகையிலும் அவரது கணவர் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். ஒட்டு மொத்த இலங்கையிற்கான வர்க்க புரட்சி தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு என நம்பும் தயாபால ராஜினியின் ஈழவிடுதலை அமைப்புகளுடனான தொடர்பை விரும்பியிருக்கவில்லை. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இலங்கையின் ஒட்டு மொத்தப் புரட்சியின் முதல்வடிவமாக அமையவேண்டிய தவர்க்க முடியாத சூழ்நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படடிருப்பதை சீர்தூக்கிப் பார்கத் தயாராக இருக்கவில்லை.

இவ் நிலமையை பேரினவாத சக்திகள் குறும் தேசியவாதிகள் ஏற்படுத்தியருந்தனர். ராஜினியின் கணவர் தயாபால திரணகமவின் அரசியல் நிலைப்பாட்டால் ராஜினியும் ஈழவிடுதலை அமைப்புகளுடனான உறவுகளில் சற்றே விலகிய நிலையில் 1982 வரை இருந்தார் என்பதே உண்மை.

மருத்துவ சிகிச்சை என்ற செயற்பாட்டின் ஊடாக புலிகளுடன் ஏற்பட்ட தொடர்பால் தங்களை விட்டு விலக முடியாக ஒரு கைவிலங்கை ராஜினிக்கு நிச்சயம் புலிகள் போட்டிருப்பார்கள். தங்களின் இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணம் என்ற கோதாவில் ஒரு வகையான கைதி நிலை உறுப்பினராக்கப்பட்டிருப்பார் என்பதே ராஜினியின் ஆரம்ப புலிகளுடான உறவு ஆரம்பித்து. இந்த கைதி நிலை உறவிற்கு முழுக்காரணம் நிர்மலாநித்தியானந்தன் என்ற இருவரும் என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் இந்த புலிகளுடனான உறவு ராஜினி - தயாபால இடையிலான உறவுகளை பாதித்து இருந்தது.

கைதி நிலை உறுப்பினரில் ஆரம்பித்து மிகத் தீவிர புலிகளின் செயற்பாட்டாளராக மாற்றம் அடைவதற்கு புலிகள் ராஜினி போன்றவர்களுக்கு காட்டிய பகட்டான முக்கியத்துவங்கள் காரணமாக அமைகின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிகச் சில புத்திஜீவிகளைத் தவிர்த்து ஏனையவர்கள் இவ்வாறே புலிகளால் உள்வாங்கப்பட்டு கைவிலங்கு வாய்விலங்கு இடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இது புலிகளின் பொதுவான போக்கே. இதில் ராஜினியும் வீழ்ந்து விட்டார் என்பதே உண்மை. வீழ்ந்தால் மீள முடியாது. விலக முடியாது என்பதே புலிகளைப் பொறுத்தவரை தண்டனை நியதி. இந்த வகை புத்திஜீவிகள் புலிகளின் வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் உதவி உலகின் மிக மோசமான பாசிச சக்தியின் வளர்ச்சிக்கு உதவி செய்திருந்தனர். இதில் ராஜினியும் அடக்கம். இதன் உச்சகட்டமாகசிலரின் மரணம் இயற்கையானதாக அமையமாட்டாதுஎன்ற வக்கிரமானகொலைவெறிக்குள் புகுந்த சிவத்தம்பிகள் பலரையும் இவ் புத்தி ஜீவிகள் கூட்டத்தில் நாம் பார்த்து இருக்கின்றோம். வாய்விலங்கை உடைத்தால் நிரந்தரமாக மௌனிக்கப்படுவோம் என்பதற்காக இன்றுவரை வாய் விலங்கை உடைக்காத புலிகளுக்காக வக்காலத்து பேனாபிடித்த பேட்டிகள் வழங்கி தொலைவாங்கி பிடித்த பலரை எமது சமூகத்தில் இன்றும் பார்க்க முடியும். இதில்
மாறுபட்டு நிற்பவரே ராஜினி.

(தொடரும்......) (பகுதி 6)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com