Contact us at: sooddram@gmail.com

 

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 7)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

ராஜினி 1983 இல் தனது சிறப்பு மருத்துவ படிப்பிற்காக இலண்டன் பயணமானார். புலிகளுடனான உறவில் இருந்த ராஜினி இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தினூடாக தனது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து பயணமானார். இதில் தனக்கு இலங்கை அரசால் ஏற்பட வாய்ப்புகள் இருந்த பாதுகாப்பு கெடுபிடிகளை எவ்வாறு சமாளித்தார் என்பது கேள்விகளாக தொக்கு நிற்கின்றது. இங்கிலாந்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் வசித்து வந்தார். எனவே புலிகளின் ஆங்கிலம் பேசும் புத்திஜீவுடனான உறவுகளும் அதனைத் தொடர்ந்த செயற்பாடுகளும் ராஜினி புலிகளின் முக்கியத்துவம் பெற்ற உறுப்பினராக மேலும் தொடர வாய்ப்புக்கள் ஏற்பட்டன. புலிகளின் இலண்டன் கிளையின் முக்கிய உறுப்பினராக செயற்பாடளராக இருந்தார்.

அப்போது புலிகளுடனான இணைந்த செயற்பாட்டால் 1982 இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட புலிகளின் தீவிர செயற்பாட்டாளரான தனது சகோதரியின் விடுதலைக்காக மனித உரிமை அமைப்புக்களுடன் சர்வதேச பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து செயற்பாட்டார். இச் செயற்பாட்டிற்கு புலிகள் வழங்கிய ஒத்துழைப்புகள் புலிகளுடனான உறவை மேலும் இறுக்கமாக்கியிருக்கின்றது. இவ் வலைக்குள் ஒருவரை வீழ்த்தும் செயற்பாட்டை புலிகள் அவர்கள் பாணியில் சரியாகவே செய்வர். ராஜினியின் இது போன்ற செயற்பாடுகளை புலிகள் தனது நிதி திரட்டும் சர்வதேச பிரச்சாரங்களுக்கு நன்கு திட்மிட்ட வகையில் பயன்படுத்தியிருப்பர் என்பது வெள்ளிடைமலை.

புலி உறுப்பினர் ஒருவர் புலிகளுடன் தீவிரமான செயற்பாட்டில் உள்ளார் என்பதை அறிவது மிகவும் சுலபம். மிக நீண்ட கால நட்பில் இருந்த ஒருவர் மாற்று ஈழவிடுதலை அமைப்பில் இருந்தார் என்றால் அவருடனாக உறவை மறுப்பர். மேலும் தவிர்க்க முடியாமல் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு எற்படும் போது முகத்தை வேறுபக்கம் திருப்பி வெறுப்பைக்காட்டும் செயற்பாட்டை கொண்டிருப்பர் புலிகளின் தீவிர செயற்பாட்டாளர். இதனை இலண்டனில் ஈழவிடுதலை அமைப்பு மாற்று இயக்க உறுப்பினரும் இவரின் பல்கலைக் கழக சாகாவிடமே காட்டி இருக்கின்றார் என்றார் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த அளவிற்கு புலிகளுடன் உறவில் ராஜினியின் தீவிரம் காட்டியிருந்தார்.

ஆனால் ராஜினி வெறுமனவே தலைமைக்கு தலையாட்டும் பொம்மையாக இருக்காது கேள்வி கேட்கும் செயற்பாட்டாளராக இருந்தார் என்பது இங்கு முக்கிய விடயம். அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழல் அவருக்கு இதனைக் கற்றுக் கொடுத்திருந்தது. கேள்வி கேட்தல் என்பது புலிகளுக்குள் தவிர்கப்படவேண்டி விடயம் என்பது தலமையின் இறுக்கமான இயக்கக் கட்டுப்பாடு. இது அவர்களின் அடிப்படையான விடயமும் கூட. கேள்விகள் கேட்கும் ஜனநாயக செயற்பாட்டினால் புலிகளின் அடிப்படை விதிகளை ராஜினி மீறினார் என்பதே உண்மை.

புலிகளால் மேற்கொள்ளப்படும் அப்பாவிச் கிராமத்து சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை நிச்சயம் ராஜினி கேள்விகளுக்கு உள்ளாக்கியிருப்பார். புலிகளின் சமூக விரோதிகள் என்று வாழைக்குலை திருடியவருக்கு மரண தண்டனையும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் பதுக்கல் வியாபாரிகளிடம் நிதி அறவிடுதல் என்ற வகையில் நல்ல உறவில் இருத்தல் என்பதையும் கேள்விக்கு உள்ளாக்கி இருப்பார். பிறப்புடன் கூடிய வளர்ப்பால் தைரியமான பெண்ணான ராஜினி தயாபாலவுடனான உறவாலும் போராட்டம் சம்மந்தமாக கேள்விகள் அல்லது விமர்சனம் செய்யும் செயற்பாட்டை வளர்த்திருப்பார் என்பதில் ஐயம் இல்லை.

இதுவே புலிகளுடான முரண்பாட்டிற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. கூடவே ராஜினியின் கணவர் ஒரு சிங்கள சமூகத்தை சேர்ந்தவர் என்ற சந்தேகங்களும் புலிகளின் புலனாய்வு பிரிவை பெரிதும் நம்பியும் தங்கியிருந்த பிரபாகரனுக்கும் ஏற்பட்டிருக்கும். இதனால் ராஜினி என்றும் புலிகளின் புலனாய்வுக் கண்களாலேயே பார்க்கப்பட்டிருப்பார். ஆனால் தனது கணவருடனான முரண்பட்ட அரசியல் கருத்தும் வடக்குகிழக்கு சிறப்பாக வடமாகாணம் அதிலும் சிறப்பாக யாழ்ப்பாணம் தமிழர் மட்டும் வாழும் இடம் என்ற புலிகளின் சுத்த இனசுத்திகரிப்பு செயற்பாட்டினால் தயாபால திரணகம போன்ற சிங்கள சமூகத்தை சேர்ந்தவர் யாழ்பாணத்தில் வாழ முடியாத நிலமையும் ராஜினி தயாபால குடும்பம் இணைந்து வாழ்தல் என்பது சாத்தியப்படாமல் செய்துவிட்டது. இவ் குடும்பம் இணைந்து வாழும் சாத்தியம் இல்லாமல் போனது ராஜினியின் வாழ்வுகாலத்தை கூட்டியுள்ளது என்பது புலிகளைப் பொறுத்தவரை நிஜமானது. தயாபாலாவுடனான
ராஜினியின் உறவு இடைவெளி ராஜினியின் உயிரை பல காலம் காத்து வந்திருக்கின்றது.

(தொடரும்......) (பகுதி 8)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com