Contact us at: sooddram@gmail.com

 

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 9)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

1987ம் ஆண்டு ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்த இலங்கையிற்கான இந்திய அமைதிகாக்கும் படையினரின் வருகையும் வடக்கில் செயற்பட்டு வந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளை பகிரங்கமாக புலிகளை நோக்கியும் செயற்படலாம் என்ற துணிவை ஏற்படுத்திருந்தது. ராஜினியிடமும் உறங்கு நிலையிலிருந்த இந்த செயற்பாடு முறிந்த பனை என்ற நூல் வடிவம் மூலம் ஆர்பரித்து எழுந்தது. இது புலிகளைப் பொறுத்தவரையில் எந்த வகையிலும் ஏற்றுகொள்ளக் கூடிய விடயம் இல்லை. எனவே வழமைபோல் புலிகள் காத்திருந்தனர் கொலை செய்து விட்டு பழியை யாரின் தலையிலும் போட வேண்டும் என்று.

1986 டிசம்பர் மாதம் புலிகளுடன் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த அமைப்புகளும் தனி நபர்கள் ஏனைய பொது அமைப்புக்கள் பெரும்பாலும் வடக்கு கிழக்கிற்கு வெளியே இடம் பெயர்ந்தார்கள். இவர்கள் இலங்கை இந்த ஒப்பந்தந்தை தொடர்ந்து வடக்கு கிழக்கிற்கு மீள் குடியேறி தமது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்தனர். இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னம் போர் நிறுத்தம் என்பவற்றால்; புலிகள் இனிமேல் யாரையும் செயற்படவிடாமல் தடுத்து ஏகபோகம் கொண்டாட முடியாது என்ற கோதாவில் செயற்படத் தொடங்கினர். இதே நிலைப்பாட்டையே ராஜினியும் கொண்டிருந்தார். இவர்களில் பலரும் ஒன்றை மறந்து விட்டனர் 1986 ல் புலிகள் எடுத்த ஏகபோகம் என்பதில் அவர்கள் எந்த மாற்றத்துடனும் எப்போதும் இருக்கவில்லை என்பதை.

புலிகளுடான முரண்பாடுகள் காரணமாக அவ் அமைப்பிலிருந்து வெளியேறிய ராஜினி இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னத்துடன் தனது மனித உரிமை அமைப்புடாக உறங்கு நிலைலிருந்த தனது செயற்பாட்டை முடுகி விட்டிருந்தார், ஏனைய விடுதலை அமைப்புகள்போல். புலிகளால் இச்செயற்பாட்டை எவ்வகையிலும் அனுமதிக்க முடிவில்லை. இதற்கு பலியானவர்களில் ராஜினி, செல்வி, சிவரமணி, தயாவர்சினி இன்னும் பல முகம் தெரியாத சகோதரிகள் ஆவர். கூடவே அதிபர் ஆனந்தராஜ, விமலேஸ்வரன், தோழர் சாமி, பல்கலைக் கழக மாணவன் விஜிதரன் போன்றவர்களும் அடங்குவர்.

ஜேவிபியினால் கொலை செய்யப்பட்ட பல ஆயிரம் சிங்கள் சகோதரர்களின் மத்தியில் சுதந்திர மாணவ அமைப்பு தலைவர் தயாபத்திரனவை இவ்விடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். மலையக மக்களுக்காக தியாகம் செய்த வெள்ளையனை மறக்க முடியுமா…? புலிகளின் அழித்தொழிப்பு முதலில் விடுதலை அமைப்புக்களில் இருந்தவர்களை இல்லாமல் செய்தல், அடுத்து பொது அமைப்புக்களை இல்லாது செய்தல், தொடர்ச்சியாக தனி நபர்கள் என்று விரிந்து சென்றது. இதில் ராஜினியும் செல்வியும் தீப்பொறி குழுவும உள்ளடக்கம்.

புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறியவர்களில் மாறுபட்டு நிற்கின்றார் ராஜினி திரணகம. ஆனால் இவ்வாறு மாறுபட்டு நிற்பவர்களுக்கு புலிகள் என்ன செய்வார்கள் என்பதை மதிப்பீடு செய்வதில் தவறு விட்டுவிட்டார். பல்கலைக் கழக மனிதஉரிமை அமைப்பில் மிகவும் தீவிர தெளிவான செயற்பாட்டை கொண்டிருந்தவர் சிறீதரன் என்ற கணிதப் பேராசியர். இவரை 1970 களின் பிற்பகுதியில் யாழ்பல்கலைகழக கணிதவியல் விரிவுரையாளராக பணியாற்றிய போது கொம்சிறீ என்றே மாணவர்கள் அழைப்பார்கள். நானும் அதில் ஒருவன். காரணம் இவரிடம் நிலவிவந்த இடதுசாரி சிந்தனை செயற்பாடு பார்வைகள். விரிவுரையாளர் சிறீதரனிடம் இருந்த இந்த இடதுசாரிப் போக்கு ராஜினியிடம் இருந்திருக்கவில்லை. சமூக வர்க்க விடுதலையின் ஒரு அங்கமே பெண்விடுதலையாகும். தனித்தே பெண்ணிலைவாதம் பெண்விடுதலை என்பது சாத்தியமற்றது. அதுபோல் பெண் விடுதலையின்றி வர்க்க சமூக விடுதலை சாத்தியம் இல்லை முழுமைபெறவும் மாட்டாது. இதை போன்றதே மனித உரிமை செயற்பாடுகளும் ஆகும்.

ராஜினி மனித உரிமை செயற்பாட்டாளர் பெண்நிலைவாதி என்று பலராலும் விளிக்கப்பட்டாலும்; இவர் எப்போதும் ஒரு இடதுசாரி சிந்தனையாளராக இருக்கவில்லை. தைரியமான பெண் என்ற மத்தியதர வர்க்க செயற்பாட்டாளராகவே இருந்தார் என்பதே உண்மை. இதனால்தான் பேராசிரியர் சிறீதரன் போன்றவர்களிடம் 1970 களின் நடுப்பகுதியிலுருந்து இருந்து வந்த எதிரிகளிடம் ஒருவகை தலைமறைவு வாழ்வு. மக்களிடம் எப்போதும் தலைமறைவற்ற வாழ்வு என்பதை ராஜினி கொண்டிருக்கவில்லை. இப் பாதுகாப்பு விடயம் இடதுசாரிகளுக்கே உரிய சிறப்பு அம்சம் ஆகும். ராஜினி மேற்கூறிய வாழ்வை தன்னத்தே கொண்டிருந்தால் தீப்பொறி அமைப்பில் உள்ள பலரைப்போல் இன்றும் உயிர்வாழ்ந்திருக்க வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம். தனது சகாவான விரிவுரையாளர் சிறீதரனுக்கு இருந்த எச்சரிக்கை ராஜினிக்கு இருக்கவில்லை. மேலும் பல்கலைக் கழகத்தினூடு மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தல் என்ற சிறிய வட்டத்தை தவிர்த்து பரந்துபட்ட (சிறப்பாக அடிமட்ட மக்கள்) மக்களிடையேயும் விரிவுபடுத்தியிருந்தால் ஒரு பலம் மிக்க ஸ்தாபனமாக வளர்த்து வெற்றிகள் இன்னும் பல கண்டிருக்க முடியும். தனது உயிரையும் இது போன்ற பலலாயிரக்கணக்கான உயிர்களையும் காப்பாற்றியிருக்க முடியும். இந்த
எச்சரிகை உணர்வு இருந்திருப்பின் ராஜினியின் இந்த நினைவுரைப் பேச்சுக்கு இன்று தேவை இருந்திருக்க வாய்ப்புக்கள் குறைவு.

(தொடரும்......) (பகுதி 10)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com