Contact us at: sooddram@gmail.com

 

நிலைத்த வடு நீங்க வழியேற்படுமா...?

ஆறாத வடுவை ஏற்படுத்திய அந்த நாட்கள் வரலாற்றில் பதியப்படுமா....? (பாகம் 1)

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

இரண்டு தசாப்தம் கடந்து போயாகி விட்டது. பல தசாப்தம்; கூடிக் குலாவி, இணைந்து பிணைந்து வாழ்ந்த மக்களை வலுக் கட்டாயமாக விரட்டியடித்த வடு இன்னும் நீங்கவில்லை. இவ் வடுவை எற்படுத்தியவர்களும் அழிந்து போய்விட்டனர். ஆனால் வடுகள்தான் இன்னமும் நீங்கவில்லை. இந்த மக்களின் வாழ்விற்கு இன்னும் விடையும் கிடைக்கவில்லை, விடிவும் கிடைக்கவில்லை. இந்த மக்களின் வாழ்வு செழுமையடைய எதிர்காலத்தில் வாய்ப்புக்கள் எற்படுமா...?

1990ம் அன்டு ஒக்ரோபர் மாதம் கடைசிக் கிழமை வட புலத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்களின் ஒரு காலைப் பொழுது அபாயச் சங்கு ஊதியது போன்ற அறிவுப்புடன்தான் விடிந்தது. '48 மணி நேர அவகாசம் வழங்குகின்றோம் வட புலத்தை விட்டு வெளியேற வேண்டும். வெறும் 2000 ரூபாய், 1 சவரன் நகை. 5 பெட்டிகளில் உடு துணிமணிகள் மட்டும் குடும்பம் ஒன்றிற்கு எடுத்தச் செல்லாம்,  ெளியேற முன்பு எங்கள் முகாம்களில் நீங்கள் பதிவு செய்தல் வேண்டும்.' இது தான் அந்த அபாயச் சங்கொலி ஊதிய செய்தி. யாழ்பாணத்தில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு அழைக்கப்பட்டு வெறும் 2 மணி நேர அவகாசத்தில் வெறியேறுமாறு கட்டளையிடப்பட்டனர். இச் செய்திகள் வட புலத்தில் வாழ்ந்த முஸ்லீம் சகோதரர்களை மட்டும் அல்ல அவர்களுடன் சகோரத்துவத்துடன் வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கும் பேரிடிச் செய்தியாகவே ஒலித்தது. இந்த துரத்தியடித்தல் செயற்பாட்டில் எந்த தமிழ் பொது மக்களும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.

துரத்திய அடித்தலின் போது வட புலத்தின் இறுதி சோதனைச் சாவடியில் மேலதிகமாக? முஸ்லீம் மக்களால் எடுத்துச் செல்லப்பட்ட தங்களது நகைகள் பெண்களின் கழுத்திலிருந்து கழட்டி எடுக்கப்பட்டன. பொருட்கள் பறித்தெடுகப்பட்டன. கூடவே நீங்கள் சம்பாதித்த சொத்துக்கள் எங்களுடையது என்ற வசை வேறு பாடி அனுப்பப்பட்டனர். பெரும்பாலும் கால் நடையாக உணவு, உறக்கம், ஓய்வின்றி துரத்தபபட்ட வரலாற்றைக் கொண்டதே இந்த வடு நிகழ்வு ஆகும்.

அன்று இலங்கையில் பதவியில் இருந்த அரசும் இச்செயற்பாட்டை கட்டுப்படுத்தும் பொறி முறைகளை அப்போது கொண்டிருக்கவில்லை. இன்னொரு வகையில் இதனை ஒருவகையில் தனக்கு சாதமாக பயன்படுத்தலாம் என்ற கணக்குகளையும் போட்டுக் கொண்டு இருந்தது.

இந்த பல்லாயிரம் மக்களை அன்புக் கரம் நீட்டி அரவணைத்து ஆறுதலாகவும் உறுதுணையாகவும் செயற்பட்டது புத்தளம் வாழ் மக்களே. புத்தளம் வாழ் முஸ்லீம் சமூக மக்களே பாரியளவில் இச் செயற்பாட்டடை செய்தாலும் புத்தளத்தில் வாழும் மூவின மக்களும் ஏதோ ஒரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த அகதி மக்களை 22 வருடங்களாக ஆதரவளித்து வருகின்றனர் என்பதுதான் வரலாற்று உண்மை.

இந்த மக்களில் பலர் அகதி முகாம் வாழ்விற்குள் வாழ்ந்தாலும் இந்த 22 வருடங்களில் தங்களின் பாரம்பரிய வாழ்விடங்களின் வாழ்வுச் சுடர்களை மனத்தில் நிலை நிறுத்திக் கொண்டு புலம் பெயர்ந்து வாழ்ந்த இடத்தில் தமக்கான வாழ்வுகளை உறுத்திப்படுத்துவதற்கான தேடல்களில் ஈடபட்டனர் என்பதே உண்மை நிலை.

இம் மக்களே இலங்கை வரலாற்றில் பாரியளவில் உள்ளுரில் அகதிகளாக அடித்து விரட்டப்பட்ட மக்கள் என்று கூறலாம். ஓரே மொழியை பேசும் இன்னொரு சிறுபான்மை மக்களின் விடிவிற்கான போராடப் புறப்பட்டவர்களினால் துரத்தியடிக்கப்பட்ட இந்த மக்களுக்கு ஆதரவாக வட புலத்து தமிழ் சிவில் சமூகம் வீதியில் இறங்கி போராட முடியவில்லை. தடுத்து நிறுத்த முடியவில்லை. பலர் தங்கள் மனதிற்குள் அழுது கொண்டே இருந்தனர். பரம்பரை பரம்பரையாக சகோதரர்களாக வாழ்ந்த இந்த மக்களை வலுக் கட்டாயமாக பிரித்தெடுத்த பெருமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வரை உள சுத்தியுடன் வருந்தியதாக அறிய முடிவில்லை. கூடவே இது நியாயமானது என்று பிரச்சாரப்படுத்தப்பட்டதினால் ஏற்பட்ட தவறுதலான புரிதலின் அடிப்படையில் இவர்களின் ஆதரவாளர்கள் இன்றுவரை தம்மை உள்ளபடுத்தியிருப்பது இன்று வரை வருந்தத் தக்கது, கண்டிக்க தக்கது.

இவ் வடு நிகழ்வை எற்படுத்திய போது பயத்தின் காரணமாக வாய் மூடி மௌனித்து இருந்தவர்களும் இதற்கான பொறுப்பை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இருதரப்பு பாராளுமன்ற அரசியல்வாதிகளும் இந்த பிரித்தாளும் செயற்பாட்டில் குளிர்காய்ந்து பிளவுகளை மேலும் உறுதிப்படுத்தவே முயன்று தமது வாக்கு வங்கிகளை உறுதிப்படுத்திக் கொண்டனர். இது அண்மைய தேர்தல் உள்பட பல தேர்தல்களிலும் வெளிப்பட்டது. ஆனால் சாதாரண தமிழ், முஸ்லீம் மக்களிடையே என்றும், இன்றும் சகோரத்துவமும், பாசமும், ஐக்கியமும் நிலவியே வருகின்றது. பேரினவாதமும் சிறுபான்மை இனங்களிடையேயான இந்த பிளவை எண்ணை ஊத்தி வளர்த்தனர். புனிதமான மக்களின் மத உணர்வுகளை வெறியாக்கி 'ஜிகாத்' என்றும் 'தூய்மை' என்றும் பாகம் போட்டு மனித உணர்களை பள்ளிவாசலிலும்,; பான்சாலையிலும், ஏன் இந்து மதக் கோவில்களிலும், தேவாலயங்களிலும் பங்கு போட்ட சோக நிகழ்வுகளே அதிகம் நிகழ்ந்தன.

இவற்றை தடுத்து நிறுத்தும் பலமான தலைமைகள் எங்கும் அன்று இருக்கவில்லை. மனித குலத்திற்கு விரோதமான வெட்கித் தலைகுனியும் இச் செயற்பாட்டை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்ட அமைப்புக்கள் இல்லாமல் இல்லை. தனி நபர்களும் இல்லாமல் இல்லை. புத்தி ஜீவிகளும் இல்லாமல் இல்லை. இவர்களின் குரல் எல்லாம் குறும் தேசியவாதத்தின் பெயராலும், தனிநாடு, தனி ஈழம் என்ற பெயராலும் துரோகங்கள் ஆக்கப்பட்டதே வரலாறு. ஆனாலும் இவர்கள் என்றும் ஓய்து விடவில்லை

ஆனால் 22 வருடங்களாக சுமார் முக்கால் இலட்சத்திற்கு மேற்பட்டோர் தமது சொந்த வீடுகளில் இருந்து விரட்டப்பட்ட நிலையில் அகதி வாழ்வில் இரண்டு தசாப்தம் கடந்த நிலையில் இன்னும் பெருகி ஒரு இலட்சத்தை தாண்டியிருக்கின்றது. இதில் அகதி முகாமில் பிறந்து அகதிகளாகவே வாழும் அவலம் பல குழந்தைகளுக்கு. இவர்களுக்கு தமது தந்தையர் பூமியின் பெருமை தெரிய வாய்ப்புக்கள் இல்லாமலே போய்விட்டது. ஆனால் எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த நன் நாடு என்று அல்லாவை நினைந்து 5 வேளை தொழுகையில் ஈடுபடும் அந்த அகதி முதியவர்களின் கனவுகள், இளமைக்கால நினைவுகள் அவர்களைக் கொல்லாமல் கொன்று கொண்டே இருக்கின்றன. 2009 ம் ஆண்டு போர் முடிவிற்குப் பின்னரான இந்த மக்களின் உணர்வலைகள் பல பத்திரிகை செய்திகளாக, கட்டுரைகளாக இதனையே பறைசாற்றி நிற்கின்றன.

புலம் பெயர் தேசங்களில் எங்களில் பலர் எமது இளமைக்கால இனிமைகளை அசை மீட்டவண்ணம் நடைப்பிணங்களாக பஞ்சம் பிழைக்கும் தொழிலில் ஈடுபடுவது போன்ற உணர்வுகளுடன் இதனை நிச்சயம் ஒப்பிட்டு பார்க்க முடியும். வெயிலிலும், பனியிலும் நிமிர முடியாத இயந்திர ஓட்டங்களிடையே நாமும் இயந்திரமாக சாகும் அவலங்களுக்கு புத்தளத்தில் 20 வருடங்களுக்கு மேலாக வாழும் மக்களின் வாழ்வு எந்த வகையிலும் துன்பியல் குறைந்ததது அல்ல. இதை அனுபவித்து பார்த்தால் தெரியும், இது தமிழ் நாட்டு அகதிகள் முகாம்களிலும் தொடர்கின்றன. 'எமக்கு நாடு இல்லை' என்று தனி நாடு கோரிப்புறப்பட்டவர்கள் செய்த வடுக்கள் இவை. 'உனக்கு நாடு இல்லை' என்று கூறியவர்கள் செய்த வடுகள் தமிழ் நாட்டு அகதிகளும், புலம்பெயர் தேசத்து அகதிகள் பலரும். இதில் சிலர் முதல் வகையைச் சேர்ந்தவர்களும் அடக்கம்.

(தொடரும்....)

(இக் கட்டுரை கனடாவிலிருந்து வெளிவரும் பூபாளம் வார செய்திப் பத்திரிகையில் கார்த்திகை 02, 2012 வெளிவந்தது)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com