Contact us at: sooddram@gmail.com

 

மகிந்தாவின் வீழ்ச்சிக்கு ராஜபக்ஷகளே காரணம்
(சாகரன்)


சற்றே அவசரப்பட்டாலும் நிதானமாக கடந்த காலம் எதிர்காலம் இலங்கை அரசியல் சூழ்நிலை, சர்வதேச அரசியல் சூழ்நிலை என்று எல்லாவற்றையும் அவதானித்து, ஆய்ந்ததின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கின்றேன். நவம்பர் 20, 2014 வரை மூன்றாவது முறையாக மகிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதிக் கனவுகள் நிறைவேறிவிடும் என்றுதான் பலரும் நம்பியிருந்தது என்னமோ உண்மைதான். அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை, சர்வ வல்லமையும் உடைய ஜனாதிபதி அதிகாரம் இவை எல்லாவற்றிற்கும் மேலாக ராஜபக்ஷ குடுப்பத்தின் எங்கும், எதிலும் வியாபித்திருந்த மேலாதிக்கம் எதிர் கட்சிகளின் பலவீனம் தமிழ் தரப்பின் இரட்டை முகம் என்று எல்லாம் சாதாகமாகவே மகிந்த ராஜபக்ஷவிற்கு இருந்தது போல் தோற்றமழித்தது உண்மைதான்.

போர் வெற்றியை முன்னிலைப்படுத்தி எதிர் கட்சிகளின் குறிப்பாக ஐ.தே. கட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தியும் வெளிநாடுகளின் குறிப்பாக மேற்குலக நாடுகளின் சதி வலையை முறியடிக்கின்றேன் என்று தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இலங்கையின் ஒருமைப்பாடு ஏகாதிபத்தியம் எதிர்பு என்பனவற்றிற்கு ஆதரவான சக்திகளையும் வளைத்துப் போட்டதில் மகிந்தர் வெற்றியடைந்தது போலத்தான் தோற்றம் அளித்தார். இலங்கையை அபிவிருத்தி நாடாக்க உள் கட்டுமானங்களை கட்டியமைத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திவிட்டார் என்பது எல்லாம் உண்மைகள் போல் தோற்றம் அளித்தன. தனது கட்சிக்குள் தன்னை யாரும் கேள்விகளுக்கு உள்படுத்த முடியாது என்ற அகங்காரமும் இருந்ததும் உண்மைதான்.

இந்தியா ஒரு புறம் சீனா மறுபுறம் என்று இலங்கையின் அபிவிருத்திக்கு பங்கு போடவைத்து இந்தியாவை தனது விருப்பதிற்கு ஏற்ப இலங்கை விடயத்தில் மேலாண்மை செலுத்த அல்லது கேள்வி எழுப்ப முடியாது என்று கட்டிப் போட்டதாக? இருக்கட்டும் எல்லாம் சுபம்தான். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும் பகுதியினரை முன் கதவாலும், பின் கதவாலும் தனது காலடியில் வீழ வைத்திருந்ததும் உண்மைதான். மறு புறத்தில் கருணா தொடக்கம் டக்ளஸ் வரை தன்னைவிட்டால் உங்களுக்கு மாற்று வழியில்லை என்று இராசமாணிக்கம் வரை எல்லோவையும் தமது கட்டுக்குள் வைத்திருந்தவரை எல்லாம் சுபம் போலத்தான் தோன்றியது. துமிழ் மக்களின் பிரச்சனையை வடக்கு கிழக்கு என்று பிரித்து வடக்கு மட்டும்தான் உரிமைக்காக குரல் கொடுக்கின்றனர் என்று சர்வதேச சமூகத்திற்கு காட்ட முற்பட்டது வரைக்கும் பிரித்தாளும் கொள்கையில் ஐ.தே கட்சியின் மூதாதையர்கள் டி.எஸ், டட்லியை மீறியவராக சிங்கள மக்கள் மத்தியில் தன்னைக் காடடிக் கொண்ட வீரையா போல் மீசை முறுக்கியதும் உண்மைதான்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காததைப்போல் சந்திரிகா அம்மையாரின் ஒன்பது வருட மௌனத்தின் பின்னரான சூட்சகரமான அரசியல் பிரவேசத்துடனான நடவடிக்கைகள் மகிந்தாவின் எல்லாக் கனவுகளையும் கலைத்துப் போட்டுவிட்டது. இரண்டாவது தடவையாக மகிந்தர் தேர்தலுக்கு முகம் கொடுக்கும் போது இதில் அமோக வெற்றியீட்டியதும் இதனைத் தொடர்ந்த பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்று தான் நினைத்தால் எல்லாவற்றையும் (ஜேஆர் கூறியதைப்போல்) மாற்றிப் போடுவேன் என்று மமதை தலைக்கேறி கிடைத்த மூன்றில் இரண்டைப் பயன்படுத்தி ஜனாதிபதியாக இரண்டு தடவைக்கு மேல் தேர்தலில் நிற்கலாம் என்பதை மட்டும் நிறைவேற்றிவிட்டு ஏனைய எதனையும் குறிப்பாக தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணாமல் இழுத்தடிக் முற்பட்டபோதே மகிந்தர் சறுக்கத் தொடங்கிவிட்டார்.

இதன் பின்பு அபிவிருத்தியென்று அதிவேக சாலைகளை நிறுவியது, சர்தேச விமான நிலையம் ஒன்றைக்கட்டியது, தரையிற்குள் நீரை வரவழைத்து அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைத்து என்று புறப்பட்ட மகிந்தர் சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவு கட்டுக்குள் அடங்காமல் எகிறியதை போரில் வெற்றி பெற்ற வீரன் என்பதை மட்டும் காட்டிக் கொண்டு காலத்தை ஓட்டலாம் என்று நினைத்தும் சறுக்க ஆரம்பித்து. கூடவே ‘அபிவிருத்தியிலும்’ இதற்கான கொத்தராத்துக்களில் ஏனைய தனது குடும்ப அங்கத்தவர்களின் எங்கும், எதிலும் என்பதைக் கேட்க முற்பாட்டால் காணமாமல், இல்லாமல் போய்விடுவீர்கள் என்று சரத் பொன்சேகாவில் ஆரம்பித்து ஷிராணி பண்டாரநாயக்கா பத்திரிகையாளர்கள,; குமார் குணரத்தினம் ஈறாக பிரபல்யமாகவும், அரசியல் கட்சிகளின் கருத்துக் கேட்டல் சந்திப்புக்களில் திருநாவுக்கரசு சீறீதரன் வரை தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றம் என்றபோது நெற்றிக் கண்ணைத் திறந்து எச்சரித்தபோது உங்கள் சறுக்கலகள் மேலும் பெருத்தே போனது.

கூடவே உங்களுடன் கூட இருந்த ஜாதிக ஹெல உறுமய, முஸ்லீம் காங்கிரஸ், ஏன் உங்கள் கட்சி உறுப்பினர்கள் யாருடைய பேச்சுக்களையும் நீங்கள் கேட்க தயார் இல்லை என்றபோது நீங்கள் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டீர்கள். கூடவே தமிழ் கட்சிகளான ஈபிடிபி போன்றவையும் ‘மகிந்தர் பிரச்சனையைத் தீர்ப்பார்….. ஆனால் தீர்க்கமாட்டார்…..’ என்று பேசத் தொடங்கிபோது இந்தச் சரிவுகளுக்கு எல்லாம் மேலும் ஊக்க மருந்து அளித்துபோல் ஆகிவிட்டது என்பதுவும் உண்மைதான். உங்களுக்கு நீங்கள் காட்டி வந்த அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பும், ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளுனான உறவுகளில் ஈர்க்கப்பட்ட இடதுசாரிகளும் இலங்கையின் இனப் பிரச்னை ஜனாதிபதி முறமையை ஒழித்தல் என்பவற்றில் நீங்கள் காட்டி வந்த இரண்டை வேடங்களில் அதிருப்த்தி இருந்தாலும் இந்த பிசாசை விட்டால் இதைவிட மோசமான பிசாசு அல்லவா எதிர் முனையில் இருக்கின்றது என்று உங்களை கட்டியணைத்து சமயம் வரும்போது கரைமாறக் காத்திருப்பதுவும் உண்மைதான்.

இன்று இவையெல்லாம் சேர்ந்து ரணில் விக்கரமசிங்காவைத் தவிர்த்து உங்கள் குழாமில் இருந்த உங்களுக்கு அடுத்த நிலையில் செயலாளராக இருந்த மைத்திபால சிறிசேனாவின் உங்களுடான முரண்பாட்டை கவனத்தில் கொண்டு ஜே.வி.பி. யின் ஒருகாலத்து அனுதாபியும் உங்களைப் போல் கொழும்பு, கண்டி தவிர்ந்த இன்னொரு பொலநறுவ என்ற பின்தங்கிய பிரதேசத்து அடிமட்ட உறுப்பினராக அரசியல் வாழ்வைத் தொடங்கி உயர்ந்தவரை யாவரும் ஏற்கும் பொதுவேட்பாளராக இனம் காட்டியதில் சந்திரிகாவின் சாணக்கியம் வென்றே உள்ளது. இதனைத்தான் நின்று கொல்லும் என்பார்களோ?

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் தூபம் போட்ட பெருமை உங்களையே சாரும் எனவே உங்களின் வீழ்ச்சிக்கு நீங்களே காரணம் அது வேறு யாரும் அல்ல. 2015 ஜனவரி 8 இல் வரலாறு உங்களுக்கு இன்னொரு பாடத்தை எழுதியே நிற்கப் போகின்றது. அது ஜே.ஆர். இன் மூன்றில் இரண்டு வெற்றிக்கு அவரின் இறுதி காலத்தில் கிடைத்த அதே தோல்விதான். ஆனால் ஜே.ஆர். இன் தோல்விகளுக்கு பின்னால் மறுபுறத்தில் கிடைத்த வெற்றிகள் இலங்கை மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் வெற்றியை அளித்தா? என்பது தற்போது இல்லை என்பதே பதிலாகி நின்றது. இதுபோலவே வரும் தேர்தலில் உங்களின் தோல்வியும் உங்கள் எதிர் வேட்பாளரின் வெற்றியும் இலங்கை மக்களுக்கும் வெற்றியாக அமையுமா? என்பது 18 வது திருத்தச்சட்டம், 13 வது திருத்தச்சட்டம், 17 வது திருத்தச்சட்டம் என்பவற்றை இவர்கள் எவ்வாறு கையாயளப் போகின்றார்கள் என்பதிலேயே தங்கியிருக்கின்றது.

ஆனால் இதுவரையில் அல்லது இலங்கையின் சுதந்திரத்தின் பின்னரான கால கட்டங்களில் பிரித்தானியரால் விதைத்துச் செல்லப்பட்ட பிரித்தாளும் கொள்ளைகள் பேரினவாத சக்திகளின் வளர்ச்சிக்கும் சிறுபான்மை இனத்தவரின் ஒடுக்குமுறைக்கும் வித்திட்டிருந்தாலும் பேரினவாத சக்திகளின் மேலாண்மையினால் இலங்கையில் உள்ள சகல இன மக்களும் சம உரிமையுடன் சகோதரத்துவத்துடன் இணக்கப்பாட்டுடன் வாழ்வதற்கான தீர்வை எட்ட முடியவில்லை.

பண்டாரநாயக்கா குடும்பத்தின் தகப்பன், மகள் என்ற இருவரும் ஓரளவேனும் இதய சுத்தியுடன் செயற்பட்டு இனங்களுக்கிடையேயான ஏற்றத் தாழ்வுகளை முடித்து வைக்க முற்பட்டபோதும் அது வெற்றியளிக்க முடியாமல் போனது துர்அதிஷ்டமே. ஒருவரின் கொலையும் மற்றையவர் மீதான கொலை முயற்சியும் இவற்றை தள்ளிப்போட வைத்தற்கான பல காரணிகளில் ஒன்றாக அமைந்தது என்பதுவம் இங்கு கவனிக்கப்படத்தக்கது. ஆனால் தற்போது மீண்டும் மகளுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு எவ்வாறு இலங்கைத் தீவில் சகல இன மக்களும் சம உரிமை பெற்று சுபீட்சமாக வாழ வைக்கப்படப் போகின்றனர் என்பது புதிய ஜனாதிபதியின் வெற்றியும் இதனைத் தொடர்ந்த பாராளுமன்ற தேர்தலும் பாராளுமன்றத்திடம் கையளிக்கப்படும் அதிகாரமும் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று இலங்கையின் சிறுபான்மை இன மக்களின் தேசிய இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கான அணுகு முறமையிலேயே தங்கியுள்ளது.

இது இலகுவான காரியமும் இல்லை, மிகவும் கடினமானபாதை என்றாலும் முயன்றால் முடியாது என்று ஏதும் இல்லை. இதில் வெற்றி பெற்றால் மைத்திரி அல்ல............. பண்டாரநாயக்காவே இலங்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவராக மிளிருவார். இதற்கு சிறுபான்மை இனங்களின் தலைவர்களின் சாணக்கியமான, உண்மையான செயற்பாடுகள் மட்டும் அல்ல சிங்கள சமூகத்திலுள்ள நல்லாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானதும் கூட. வரலாறு எப்போதும் முன்னோக்கியே நகரும். இது இந்த ஆட்சிமாற்றத்தில் முனைப்பெடுத்தால் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானம் நிலவி மக்கள் சமாதான, சக வாழ்வை தமதாக்கிக் கொள்வர்.

மகிந்த 2005 இல் முதலாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது புலிகள் இவரோடு இரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆதரவு தெரிவித்தது பகிரங்க இரகசியம். இதற்கு கைமாறாக எழுதப்படாத உடன்படிக்கையாக புலிகளுக்கு பணம் வழங்கி அவர்களை ஊக்கிவித்ததும் இதே மகிந்தாதான். ரணிலின் ஜனாதிபதிப் பிரசன்னைத்தை தவிர்த்து சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் தமது போரை தீவிரமாக நடத்த அது ஊக்கியாக அமையும் என்பதே இதற்கு காரணம் ஆகும் ஆனால் புலிகள் எதிர்பார்த்ததிற்கு மேலாக மகிந்தாவிடம் அடிவாங்கி அழிந்து போனது அந்தோ பரிதாபம்தான். இதே போல் கருணா, பிரபா முரண்பட்ட காலகட்டத்தில் பிரபாகரனின் புலிகள் வெருகலைக் கடக்க தனக்கு பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் சந்திரிகா திறந்து விட்டது கருணாவையும், அவரது போராளிகளையும் சிறப்பாக பெண்களையும் கொலை செய்யக் காரணமாக அமைந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. வழமை போலவே இம்முறையும் புலிகளின் கட்டளைப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்வில்லை என்பது ஒன்றும் எதிர்பார்க்காதது அல்ல.

இதைப் போலவே ஜனவரி 08, 2015 தேர்தலிலும் தமிழ் கூட்டமைப்பு செயற்படப்போகின்றது என்பது வேறு விடயம். தமிழ் பேசும் மக்களின் வாழ்விற்கான அரசியல் தீர்வு என்பதற்கு அப்பால் முழு இலங்கையிலும் சர்வ அதிகாரம் படைத்த ஜனாதிபதி முறமை ஒழிக்கப்படவேண்டும். பாராளுமன்றத்திடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும். இது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும், அது தமிழ் பேசும் மக்கள் உள்ளடங்கலாக உதவிகரமாக இருக்கும். இந்த சர்வ வல்லமை ஜனாதிபதி முறமையே இன்று இலங்கையில் தற்போதைய நிலமை வளர்ந்து வந்ததற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்த நிலையில் இதனை அகற்றும் எதிர் கட்சியின் பொது வேட்பாளரை ஆதரிப்பது சரியானதாக இருக்கும். இதில் ஐ.தே கட்சியின் ரணில் விக்கிரமசிங்க முதன்மைப்பட்டிருந்தால் பொது வேட்பாளருக்கு அப்பால் இதனை நாம் ஆதரித்திருக்க முடியாது. ஆனால் சந்திரிகாவின் ஆளுமையில் ஏற்பட்ட பொது வேட்பாளர் என்ற வகையில் எதிரணி பொது வேட்பாளரை ஆதரித்து நிற்பதே இன்றைய நிலையில் இலங்கையிற்கு சரியானதாகும். மகிந்தாவின் ஆகோர தாண்டவத்திற்கு ஈடுகொடுக்கும் இடதுசாரிகளின் பலம்மிக்க பொது வேட்பாளர் அமையாத இடத்து இதனைத் தவிர வேறு மார்க்கமும் இல்லை.

தமிழ் பேசும் மக்கள் விடயத்தில் இருவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாக செயற்படுவார்கள் என்ற பொதுப்பார்வை இங்கு மட்டும் அல்ல இலங்கையின் பெரும்பான்மை தலமைகள் யாராக இருந்தாலும் சிங்கள பௌத்தம் என்ற கண்ணாடியூடாகவே தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சனையைப் பார்க்கும் துர்பாக்கிய நிலமையே தொன்று தொட்டு இன்றுவரை நிலவி வருகின்ற கசப்பான யதார்த்தத்தை நாம் மென்று விழுங்கித்தான் ஆக வேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் எவ்வளவு தாமதமாக, எவ்வளவு குறைவாக அதிகாரத்தை பரவலாக்கலாம் என்ற அணுகுமுறையைக் கையாளுவர் என்பது வெளிப்படை.

சந்திரிகா முன் வைத்த சமஷ்டிக்கு மேலான தீர்வை அன்றைய பாராளுமன்றத் தமிழ் தரப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே. கட்சியுடன் இணைந்து பாராளுமன்றத்தில் கொழுத்தியதில் தமிழ் தலமை தமிழ் பேசும் மக்களுக்கு செய்த துரோகம் ஒருபுறம் இருக்க, சந்திரிகாவும் இதனை ‘ஒருதலைப்பட்சமாக’அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் அவருடன் இருந்த சிங்கள பேரினவாத சக்திகளும்(அனு ரத்வத்த) இருந்தார்கள் என்பதை இருதரப்பு தவறுகளாக பார்க்க வேண்டியே உள்ளது. இது எதிர்காலத்திலும் சந்திரிகாவின் ஆளுமையை மீறி புதிதாக தெரிவுசெய்யப்படும் எதிரணி பொது வேட்பாளரால் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனாலும் இலங்கையின் பாராளுமன்ற முறமையில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் இதனைத் தவிர வேறு தெரிவு இல்லை என்பதே யதார்த்தம்.
(Saaakaran)( Dec 06, 2014)(இக்கட்டுரை நவம்பர் 20, 2014 இல் எழுதப்பட்டது)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com