Contact us at: sooddram@gmail.com

 

வடமகாணத்தின் முதல்வர் கேபி என்ற குமரன் பத்மநாதன்

(இராஜ்குமார்) (கார்த்திகை 04, 2009)

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கெதிராக குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நிசாந்த ஹப்பு ஆராச்சி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்போது குறித்த நான்கு தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்வதாக அறிவித்தார்.

இச் செய்தி அரசாங்கத்தின் செய்தியாகத்தான் பார்க்க முடியுமே ஒழிய இலங்கையின் நீதிமன்றத்தின் செய்தியாக பார்க்க முடியுமா என்பது கேள்விக்குரியது. இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் 'அரிசியல்வாதி'களுக்கு எதிரான நீதிமன்றங்களின் தீர்ப்பில் பெரிதும் அந்நாட்டை ஆளும் அரசின் கட்சியின் செ(h)ல்வாக்கு இல்லாமல் இருப்பது கடினம். இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்த தீர்ப்;பில் இலங்கை அரசின் செல்வாக்கு எவ்வளவு செலுத்தப்பட்டிருக்கும் என்பதை எம்மால் உணர முடியும்.  

08.10.2002 ஆம் ஆண்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கனகலிங்கம் சிவாஜலிங்கம், சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் பாக்கியசெல்வம், செல்வராஜா கஜேந்திரன் ஆகிய நான்கு எம்.பி.க்களும் அரசியல் அமைப்பு பிரிவு 157 (அ) பிரிவை மீறியதன்மூலம் நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவளித்து வெளிநாடுகளில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளில் உரையாற்றியதன் காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தவறு புரிந்திருப்பதாகவும், அதனை விசாரணை செய்ய வேண்டுமெனவும் குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ் நாலு பேர்கள் மட்டும் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிகள் யாபேரும் வெளிநாடுகளிலும், சிறப்பாக இந்தியாவிலும் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் என்பது வெள்ளிடைமலை. இந்தியாவில், இந்திய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுரேஸ் பிரேமசந்திரன், சிவாஜிலிங்கம், சிறீகாந்தா போன்றோர் பணப்பெட்டியுடன் சென்று பிரச்சாரம் செய்தனர் என்பதை இந்திய உளவுப்பிரிவின் அறிக்கைகளில் இருந்து அறிந்து கொள்ள முடியும். இவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது இலங்கை இந்திய அரசுகளின் கடமை. ஆயுதம் ஏந்திய புலிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் உள்ள நியாயத்தன்னை இவர்கள் விடயத்திலும் உண்டு.

அண்மைக் காலங்களில் இலங்கை அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் காட்டிவரும் 'நெகிழ்வான நட்பு' அணுகு முறை இனிவரும் காலங்களில் புலிகளின் தற்போதைய தலைவர் கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்தமநாதன் வட மாகாண சபையின் அடுத்த முதல்வராக வருவதற்குரிய வாய்ப்புக்களை நிறையவே கட்டியம் காட்டி நிற்கின்றது. கேபி இற்கு சர்வ தேச ரீதியான சட்டங்கள் இடங்கொடுக்காதவிடத்து தயா மாஸ்டர் அல்லது ஜோர்ஜ் மாஸ்டருக்கு இந்த வாய்ப்புக்கள் செல்லலாம் என்பதை மறுப்பதற்கில்லை. 'மகிந்த சொல் மிக்க மந்திரம் இல்லை' என்றிருக்கும் கருணாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார். இவ்விடயங்கள் கேட்பதற்கு 'நகைச்சுவை' போல் தோற்றம் அளித்தாலும், இலங்கை அரசின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான அண்மைக்கால 'நெகிழ்வான நட்பு' அணுகுமுறை கொள்கை(ள) அளவில் மேற் கூறியவற்றையே எடுத்துக்காட்டுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிகளின் குற்றவியலில் இருந்து விடுவிற்புக்கு விளக்கம் கூறிய அவர்களின் சட்டத்தரணி 'இலங்கையில் பலபாகங்களிலும் இடம்பெற்ற பொங்குத் தமிழ் நிகழ்வுகளில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் இருப்பவர்கள் உரையாற்றியிருந்தபோதிலும் குறிப்பிட்ட நான்கு கட்சிக்காரர்கள் மாத்திரமே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை நீதிக்கு புறம்பான விடயமாகும். குறித்த இந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரமானது இந்த நீதிவான் நீதிமன்றத்துக்கு இல்லையென்பதுடன் மேன் முறையீட்டு நீதிமன்றத்துக்கே உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் தனது கட்சிக்காரருக்கெதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு வலிதான எந்தவொரு நேரடிச் சான்றோ, சூழ்நிலைச் சான்றோ இல்லாது தனியாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் ஒலிநாடாவில் மாத்திரம் தங்கி நின்று குற்றச்சாட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் இதுவரை எந்தவிதமான வலிதான சான்றும் முன்வைக்கப்படவில்லை. எனவே, குறித்த இவ்வழக்கை தள்ளுப்படி செய்து விடுதலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.'

தவறு செய்த இன்னொருசாரர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது தவறான வாதம் ஆகும். ஒரு தவறை இன்னொரு தவறால் சமன் செய்யும் தவறான அணுகுமுறை இது. மேலும் இவர்கள் பொங்கு தமிழ் நிகழ்வில் புலிகளுக்கு ஆதரவாக பிரிவினைவாதம் பேசவில்லை என்று வாதிப்பது அப்பட்டமான முழு பூசணிக்காயை சோற்றில் புதைக்கும் வாதம் ஆகும். ஐயா வழக்கறிஞரே! என்ன தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களை காப்பாற்ற 30 வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட விவாதத்தை தற்போதும் முன்வைத்ததாக புளகாங்கிதமா? தவறுகளுக்கு துணைபோகும் சட்டத்தரணிகளும் குற்றவாளிகளே! அந்த வகையில் நீங்களும் குற்றவாளியே.

அண்மையில் யாழ்பாணத்தில் தென் இந்திய கலைஞர்களை வரவளைத்து நடத்தப்பட்ட மாபெரும் கலை நிகழ்சிகளை ஒழுங்கு செய்தவர் வேறுயாரும் இல்லை புலிகளின் ஆட்சிகாலத்தில் புலிகளுக்காக தென்இந்திய கலைஞர்களை ஒழுங்க செய்த அதே நபர்தான். இது அரசுக்கத் தெரியாது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்ற பல விடயங்களை தற்போது இலங்கை அரசு முன்னாள் புலி முகவர்களால் செயல்படுத்தி வருகின்றது.

இவ்விடயங்களை சீர்தூக்கிப் பார்த்துத்தான் கூறுகின்றோம் வடமாகாணத்தின் அடுத்த முதல்வர் கேபி ஆக அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

(இராஜ்குமார்) (கார்த்திகை 04, 2009)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com