Contact us at: sooddram@gmail.com

 

சர்வதேச ஆசிரியர் தினம்

(சாகரன்)

ஒக்ரோபர் 05 சர்வதேச ஆசிரியர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1994 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (United Nations Educational, Scientific and Cultural Organization) சர்வதேச அமைப்பினால் இத்தினம் சர்வதேச ஆசிரியர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கபட்டு வருகின்றது. இதில் தற்போது 193 உறுப்பு உரிமை நாடுகளும். 6 உறுப்புரிமை அற்ற நாடுகளும் அங்கத்தவர்களாக இருக்கின்றன.

பல்வேறு நாடுகள் தங்கள் நாடுகளின்; வசதிக்கேற்ப ஆசிரியர் தினத்தை வௌ;வேறு தினங்களில் அனுஷ்டிச்சு வந்தாலும், ஒக்ரோபர் 06 ம் திகதியே ஒரு சர்வதேச அமைப்பினால் அங்கீகர்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமாக இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.

ஆசிரியர் தொழில் ஒரு புனிதமான தொழில். சேவை மனப்பான்மையுடன் அற்பணிப்புடன் செய்யப்பட வேண்டிய தொழில். எதிர்கால சந்ததியினரை அறிவூட்டல் மூலம் நாட்டின் நல்ல பிரஜைகளாக மாற்றும் பொறுப்பு வாய்ந்த தொழில். மாதா பிதாவிற்கு அடுத்ததாக ஏன் பல வேளைகளில் மாதா பிதாவிற்கு முன்னிலையில் கூட வைத்துப் பார்க்கப்படக்கூடிய தொழில். எனவே ஆசிரியர் தொழிலில் ஈடுபடவபவர்கள் மற்றய எந்த தொழிலில் ஈடுபடுபவர்களையும் விட சமூகக் கடமையுள்ள ஒழுக்க சீலர்களாகவும், நற்சிந்தனை உடையவர்களாகவும் இருத்தல் அவசியமாகின்றது.

ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய முதல் தகமையே அவர் ஒரு மாணவனாக இருக்க தயாராக இருத்தல் ஆகும். அதாவது தெரிந்தவற்றை கற்றுக் கொடுத்தலும், தெரியாதவற்றை தான் கற்றுக் கொள்ளத்தயாரக இருத்தலும் என்ற நடைமுறைக்கு தன்னை ஈடுபடுத்தக்கூடிய மனநிலையில் இருத்தல் வேண்டும். மாறாக எனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் இருத்தல் ஒரு நல் ஆசிரியருக்குரிய தகமையாக இருக்க முடியாது. இதுவே நான் என் முதன்மை விருப்பு ஆசிரியர் தொழிலில் கற்றக் கொண்ட அனுபவ உண்மை. இதனை பல ஆசிரிய பெருந்தகைகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தெரிந்தவற்றை நன்கு புரியும்படி அவர் தம் மாணவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப உதாரணங்களுடன் கற்பிக்க வேண்டும். தெரியாதவற்றை ஆசிரியர், மாணவர் நிலைக்கு மாறி தெளிவுறக் கற்று பின்பு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். ஒரு நல் ஆசிரியனுக்குரிய மண்பு களில் முதன்மையானது இது. இதுவே ஒரு ஆசிரியரின் வெற்றியாகவும் அமைய முடியும். பலதரப்பட்ட அறிவியல் மட்டத்தில் மாணவர்கள் உள்ள வகுப்பறையில் சகல மாணவர்களுக்கும் புரியும்படி தனது கற்பித்தலை மேற்கொள்வது ஒரு சவாலான விடயமாக இருக்கும். ஆனாலும் ஒரு போராட்டமாக எடுத்துக் கொண்டு இதில் வெற்றியீட்டல் என்பதே ஒரு சமத்துவச் செயற்பாடாக இருக்க முடியும். nதில் வெற்றிகண்ட ஆசிரியர்கள் சிலர். பாடசாலை நேரம் தவிர்த ஏனை நேரங்களிலும் மாயவ்களுக்கு கற்பிக்க தயாராக இருத்தல் என்ற நடைமுறையே இச்சமச்சீர் அற்ற தன்மையை இல்லாது ஒழிக்க உதவும். இதற்கு ஆசிரியர்கள் தயாராக இருத்தல் வேண்டும். இது ஒருவகை அற்பணிப்புடனான கடமைதான்.

மாணவர்களிடம் ஆசிரியர்கள் 'வலிந்து வேண்டி' மரியாதையை பெறுதல் சரியான நடைமுறையல்ல. மாறாக மாணவர்களுக்கு கற்பித்தல் மூலம் மாணவர்களிடம் இருந்து 'தானாக தரப்படும்' மரியாதையே சரியானதாக இருக்கும். எனவே தடி எடுத்தவன் தணடல்காரன் எப்பது போல் வெருட்டி மரியாதையை பெறுதல் ஒரு நல் ஆசிரியருக்கு பண்பல்ல. அவர் ஒரு நல் ஆசிரியரும் அல்ல.

ஆசிரியர் மாணவர்களுக்கும் அவர் பெற்றோர்களுக்கும் ஒரு உறவுப்பாலமாகவும் பல சந்தர்பங்களில் செயற்படவேண்டியுள்ளது. எனவே அவர்கள் பல சமயங்களில் பெற்றோர்களாகவும் செயற்பட வேண்டும். ஒரு நல்லாசிரியர் நல்ல பெற்றோராகவும் இருத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். புல சந்தர்பங்களில் தாய்தந்தையரால் நெறிப்படுத்த முடியாத பிள்ளைகள் பலர் ஆசிரியர்களால் சீரிய முறையில் நெறிப்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் சிறந்த நாட்டுப் பிரஜைகளாக மாற்றிய சம்பவங்கள் பலவற்றை நாம் எம்வாழ்வில் சந்தித்து உள்ளோம்.

தற்போது வளர்ந்து வரும் உலக நடைமுறையில் பொருளாதாரத்தை மையமாக வைத்து தொழில் செயல்முறைமைகள் பார்க்கப்படும் நிலையில், ஆசிரியர் தொழிலில் ஈடுபடும் சிலர்; ஆசிரியர் தொழிலுக்கு இருக்கவேண்டிய சேவை மனப்பான்மையில் இருந்து விலகி பணம் மட்டும் ஈட்டுதல் என்ற ஒரு குறிக்கோள் நிலைக்கு தம்மை தள்ளிச் சென்று விட்ட துர்ப்பாக்கிய நிலமை அசிரியர் தொழிலுக்கு ஆரொக்கியமான செயற்பாட்டு வளர்ச்சியல்ல. உழைப்பிற்கு ஒரு ஊதியம் வேண்டும். அதுவும் உழைப்பில் ஈடுபடுபவர் வாழ்வதற்கு ஊதியம் தேவை என்பது நியாயமானது. ஆனாலும் சேவை மனப்பான்மை தவர்த்த ஊதியம் ஆசிரியர் தொழிலுக்கு உகந்தது அல்ல என்பது என் தாழ்மையான கருத்தாகும். இது எதிர்கால மனித குலத்தின் சிற்பிகளை உருவாக்கும் தொழிலுக்கு உகந்தது அல்ல.

ஒரு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப பெரும் பங்காற்றும் ஆசிரியர்களின் தினத்தில் நாமும் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம், வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

(சாகரன்) (ஒக்ரோபர் 05, 2009)(Saakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com