Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

மே 18, 2009 அன்றுடன் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை முடிவுற்று இப்போது தனது ஐந்தாவது மாதத்தில் இலங்கை அரசு பயணிக்க ஆரம்பித்துள்ளது. புலிகளால் சாய்த்துச் செல்லப்பட்ட 3 இலட்சம் மக்களை தமது சொந்த இடங்களில் குடியமர்த்துதல் இதன் தொடர்ச்சியாக அவர்கள் தமது சுயகால்களின் ஆதாரத்தில் நிற்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்தல் என்ற முதன்மைமையான வேலைத்திட்டத்தை அரசு 'முழு வீச்சில்' செய்து வருகின்றது என்று சொல்லப்படுவதை நாம் இங்கு ஆராயவோ அல்லது விமர்சிக்கவோ முற்படவில்லை.

முதல் கட்டமாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருபது ஆண்டுகளாக இருந்த வன்னி நிலப்பரப்பில் எங்கெங்கு என்று கண்டறிய முடியாமல் கண்டபடி மிதிவெடிகள், கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை அகற்றி மக்கள் பாதுகாப்பாக தமது வாழ் நிலங்களில் 'தடம்பதித்து' பயமின்றி நடமாடக் கூடிய நிலைமைகளை ஏற்படுத்துதல் என்பது முதன்மையான தேவையாகும். அதற்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் ஐநா சபையின் நில வெடிகள் அகற்றும் குழு பிரதான பங்கெடுத்து செயல்படுகின்றது. கூடவே இலங்கை இராணுவமும் தம் பங்கிற்கு அகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இந்திய இராணுவத்தின் குண்டுகள் அகற்றும் படைப்பிரிவும் இதில் இணைந்து கொண்டு கணிசமான அளவு தனது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றது.

போர் நடைபெற்ற கால கட்டங்களில் மன்னார் அடம்பன் பகுதி, மற்றும் இரணைமடுக் குளத்தை அண்மித்த கிளிநொச்சியின் பகுதிகளில் 6 மாதகாலம் வரை இலங்கை இராணுவம் தரித்து போர் புரிந்து அவ்விடங்களிலிருந்து புலிகளை வெற்றிகொள்ளவேண்டியிருந்தது. இங்கு இவ்வாறு நீண்ட மாதங்கள் யுத்தம் நடைபெறுவதற்குக் காரணம் புலிகளால் நிலத்தில் விதைக்கப்பட்டிருந்த 'வெடிகளே'. புலம் பெயர்நாடுகளில் தமிழ் மக்களின் உழைப்பை சுரண்டித் திரட்டிய பணத்தாலும், போதைப் பொருள் கடத்தலால் ஈட்டியபணத்தாலும், சில மேற்குலக நாடுகள் பிரபா -  ரணில் ஒப்பந்தக்காலத்தில் வழங்கிய பணத்தாலும் வாங்கிக் குவித்த, ஆக்கிக் குவித்த வெடிகள் இவ்வாறே விதைக்கப்பட்டன, வீணாக்கப்பட்டன.

இதில் இருந்து ஒன்றை துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும் வன்னி நிலம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கால கட்டத்தில் புலிகளால் அங்கு விதைக்கப்பட்டது நெல்லு அல்ல மனிதர்களை கொல்லும் அல்லது முடமாக்கும் வெடிகளே. 1990 க்கு முன்னர் வன்னிப் பிரதேசம் வடக்குக்கு மட்டுமல்ல இலங்கையின் தென்பகுதிகளுக்கும் உணவு கொடுத்த பிரதேசம். புலிகளின் ஆட்சிக்கு முன்னர் வன்னி வரலாற்றின் எந்தக் காலத்திலும் பஞ்சத்தை, பட்டினியைக் கண்டதில்லை. வந்தாரையெல்லாம் வாழவைத்த வன்னியை உணவுக்குக் கையேந்த வைத்தவர்களே புலிகள்தான். சிறிலங்கா அரசின் றேசன் சாப்பாட்டில் தமிழீழ ஆட்சி நடத்தியதுதான் புலிகளின் புல்லரிக்கும் சாதனை. புலிகள் எந்த ஆக்கங்களையம் செய்யவில்லை. செய்ததெல்லாமே அழிவு வேலைகள்தான்.

வன்னியின் நிலங்களின் அடியில் பரவியிருக்கும் வெடிகளில் கணிசமான தொகை இலங்கை இராணுவத்தினாலும் விதைக்கப்பட்டவையே. வன்னியில் புதைக்கப்பட்ட வெடிகள் மட்டும் தோண்டியெடுக்கப்படவில்லை. அதற்கு அப்பால் பொட்டனும், கேபியும் தினமும் இலங்கை புலனாய்வு அதிகாரிகளுக்கு வெளியிட்டு வரும் தகவல்களைக் கொண்டு  வன்னி நிலப்பரப்பு எல்லாம் தோண்ட வேண்டிய நிலைமை இலங்கை இராணுவத்திற்கு எற்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கில் ஆயுதங்கள், டன் கணக்கில் தங்கக் கட்டிகளும் நகைகளும், கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணப் பெட்டகங்கள், பெருந்தொகையான தொலைத் தொடர்பு சாதனங்கள், புலிகளின் பல்வேறு வகையான விபரத் திரட்டுகள் என நிலத்துக்கடியில் இருந்து நாளாந்தம் எடுக்கப்படுகின்றன. கூடவே சயனைற் கடிக்க மறந்த, மறுத்த புலிகள் பலர் அகதிமுகாம்களில் இருக்கும் மூன்று இலட்சம் மக்கள் மத்;தியில் இருந்து மட்டுமல்ல இலங்கையின் சிங்களப்பகுதிகளிலிருந்தும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படி கைது செய்யப்படுவபர்கள் வழங்கும் புதுப் புதுத் தகவல்கள் என சிந்துபாத் சித்திரக் கலை போல,  விசுவின் மக்கள் அரங்கம் போல் நீண்டு கொண்டே செல்கின்றது.

நிலத்தக்கு அடியில் விதைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற வெடிகள், புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களும், சொத்துக்களும் ஆகிய இவ்விரு காரணங்களும் இலங்கை அரசு நியாயம் காட்டி உலகை ஏற்க வைப்பதற்குப் போதியவையாக உள்ளன, முகாங்களில் உள்ள மக்களை அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்துவதை தாமதப்படுத்தவதற்கு. இவற்றை விட வேறு சில அரசியல் காரணங்களும் அரசுக்க இருக்கக் கூடும்;. வெளிநாடுகளில் புலிகளை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு வன்னியின் முகாங்களில் உள்ளவர்களை அடுத்த நிமிடமே திறந்து விடவேண்டும் அப்பாவிகள் கால் பதித்து குண்டு வெடித்து சாகவேண்டும். சிலர் புதைத்தவற்றை தோண்டி வெடிக்க வைக்க வேண்டும். இதன் தொடரச்;சியாக பரிதவித்து விழும் மனிதப் பிணங்களை வைத்து மீண்டும் முழு வீச்சில் உண்டியலைக் குலுக்கி பணத்தை வாரி எடுக்கவேண்டும் என்பதே குறியாக உள்ளனர்.

புலம்பெயர்ந்த புலிப் பினாமிகளுக்கு நாடுகடந்த தமிழீழம் அவ்வளவாக வருவாயை தராதவிடத்து தமது உண்டியல் வியாபாரத்தை உலுப்பி விடுவதற்கு வன்னியில் வெடிகள் வைத்து கொலைகள் நடப்பது அல்லது வெடிகள் வெடித்து அப்பாவித் தமிழர்கள் நாள் தோறும் இறந்து விழுவது தேவையாக உள்ளது. அந்த சந்தர்ப்பங்களை ஆவலோடு எதிர்பார்த்து நிற்கின்றனர். ஊரில் உள்ளவன் அறளை பெயர்ந்து செத்தாலென்ன அகாலமாச் செத்தாலென்ன சுடலைமாடனுக்கு பாடையில் பிணம் வந்தால் பிழைப்பு என்ற நிலையில்த்தான் புலம் பெயர்ந்த புலிப் பினாமிகள் இருக்கிறார்கள். இவர்கள் வன்னி அகதி முகாம்களிலுள்ள மக்களின் மீது அக்கறை உள்ளவர்கள் போல – ஆடு நனைகிறதென ஓநாய் அழுவது போல அந்த மக்களின் பிரச்சினைகளை ஊதிப் பெருக்கி கூவிக்கூவி ஏலம் போட்டு பணம்பண்ணிவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆயுதம் இல்லாத (கவனிக்க ஆயுதம் ஏந்தாத அல்ல) புலிகள். மற்றபடி அவர்களும் புலிகளே. கடந்த காலங்களில் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு மட்டுமே வேலை செய்தவர்கள். இன்றும் அவர்களுக்காக விருப்புடன் வேலை செய்து வருபவர்கள்.

மகிந்தாவிற்கு முந்தைய அரசாங்கங்கள் யாவும் ஆயுதம் ஏந்திய புலிகளுடன் பேச்சவார்த்தை நடத்த வேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்தனர் இதற்காக புலிகளை அடித்து வெருட்டுதல், பதிலுக்கு புலிகளும் அடித்து வெருட்டுதல் என நடைபெறம், பின் பேச்சு வார்த்தைக்குத் தயாரென அறிவித்து, இனப்பிரச்சினைக்குத் தீர்வான பேச்சவாத்தையை விட பேரம் பேசுதல்களே நடைபெற்றன. இதில் புலிகளோ 'நிறைவேற்ற முடியாத' கோரிக்கைகளை பகிரங்கமாகவும், நிறைவேற்றக்கூடிய சலுகைகளை இரகசியமாக இலங்கை அரசிடம் முன் வைத்து தமது குழுவுக்கு தேவையானதைப் பெற்றுக் கொள்வர். அதன்மூலம் தமது பலத்தை வளர்த்;துக் கொள்வர். பின்னர் பேச்சுவார்தையின் நடுவில் யாரும் எதிர்பாராத வகையில் புலிகள் தற்கொலை குண்டுதாக்குதல் உட்பட எதிர்பாராத பல தாக்குதல்களை அரசுக்கு எதிராக  மேற்கொண்டு புலிகள் தனது போர் நிறுத்த தேன்நிலவை இலங்கை அரசுடன் முறித்துக்கொள்வர், முடித்துக்கொள்வர். இந்த நடைமுறையையே கடந்த 20 வருடங்களாக புலிகள் கடைப்பிடித்து வந்தனர்;. இதன் தொடர்சியாக புலிகள் இலங்கை அரசின் போர் நிறுத்த மீறல் என இலங்கை அரசின் மீது பழியைப் போடுவர். அத்துடன் புலம் பெயர் நாடுகளில் உண்டியல்களை தீவிரமாகக் குலுக்கத் தொடங்குவர்.

அத்துலத் முதலியின் கொலை பிரேமதாசாவிற்கு பாடம் புகட்டவில்லை. பிரேமதாசாவின் கொலை ரணிலுக்கு பாடம் புகட்டவில்லை. சந்திரகாவின் கண்பறிப்பு மகிந்தாவிற்கு செய்தி சொல்லவில்லை. இதனால் புலிகள் இவர்களை நம்ப வைத்து கழுத்தறுத்தல் சந்திரிகா அம்மையாரின் ஒரு கண்ணை குருடாக்கும் வரையல்ல சரத்பொன்சேகா, கோத்தபாயா வரை நிகழ்ந்தவைதான். இதன் பின்பு தான் மகிந்த விழித்தெழுந்ததாக மே 18 க்கு பின்னைய தனது இந்து ராம் உடனான பேட்டியில் கூறி இருக்கின்றார். புலிகளிடம் நம்பிக்கை இழந்த மகிந்த மிகச்சரியான முடிவை எடுத்து புலிகளை ஆயுத ரீதியாக ஒடுக்கியவரை சரிதான்.

புலிகளின் ஏஜன்டுகளான கூட்டமைப்புக்காரர்களை பிரிவினைக் கோரிக்கை, தேசத் துரோகப் பிரச்சாரம் இவற்றுக்காக உள்ளே தள்ள வேண்டி வரும் என மிரட்டி, திமிரும் கொழுப்பைக் கரைத்ததுடன் கூட்டமைப்பு எம்பி கனகரத்தினத்தை கைது செய்து இதுவரை உள்ளே வைத்திருப்பது வரை மஹிந்த சரியாகத்தான் கூட்டமைப்பைப் பார்த்ததாக நினைக்க வைத்தது. ஆனால் இன்று......?

இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்து இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரங்களி.ல் ஈடுபட்டு வந்த கூட்டமைப்பினர் இந்திய அரசின் வேண்டுதலுக்கு இணங்க? மகிந்த அரசினால் ஆசீர்வதிக்கப்பட்டனர். மகிந்தாவால் அழைத்து பேசப்பட்டனர். இராணுவத்தின் பாதுகாப்புடன் வவுனியா யாழ் மாநகர தேர்தலில் போட்டியிட ஆசீர்வதிக்கப்பட்டு மறைமுகமாக உதவிகளும் வழங்கப்பட்டனர்;. தமிழ் கூட்டமைப்பு என்னும் பிள்ளையை மஹிந்த அரசு கிள்ளிவிட்டு கீச்சிட்டுக் கத்த வைப்பது மட்டுமல்ல சொக்கிளேற்றப் பால் கொடுத்து தொட்டிலில் போட்டு ஆட்டும் வேலையையும் செய்வதாகத் தெரிகின்றது.

தமிழ் காங்கிரஸ் இல் இருந்து தமிழரசுக் கட்சி பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணி ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வரைக்கும் தமிழ் இனவாத அரசியலையும் ஏகாதிபத்தியத்து காவடி தூக்கும் அரசியலையும் நடத்தி தமிழ் மக்களை நடுத்தெருவிற்கும், முள்ளுக்கம்பியிற்கு பின்னாலும், வெளிநாடுகளுக்கும் துரத்திய வேலையை தொடர்ந்தும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்;. தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற இனவாத தலைமைகளின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தும் செயற்பாட்டில் மகிந்த அரசும் ஈடுபடுகின்றதோ என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. இதன் மூலம் மீண்டும் தமிழ் மக்கள் ஆக்கபூர்வமானதோர் அரசியலை முன்னெடுக்க முடியாத ஒரு நிலைமையை இலங்கை அரசு மறைமுகமாக செய்ய முயல்கின்றது என்று எண்ணுவதை தவிர்க்க முடியவில்லை.

யுத்தம் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில் பணப்பெட்டியுடன் தமிழ் நாட்டில் முகாம் போட்டு புலிகளை காப்பாற்ற சுரேஸ், சிவாஜிலிங்கம், சிறீகாந்தா போன்றவர்கள் ஈடுபட்டனர். மலேசியாவரை சென்று பத்மநாதனை பத்திரமாக இலங்கைக்கு கடத்தி வருவதற்குரிய சர்வ தேச உளவு வலையமைப்பை கொண்டிருந்த இலங்கை அரசிற்கு, தமிழ் நாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்ட பணப் பெட்டி கைமாற்றல்கள் மூலம் பிரபாகரனைக் காப்பாற்ற செய்த கைங்கரியங்கள் தெரியாது அல்லது ஆதாரங்கள் இல்லை என்று கூறினால் அதனை எம்மால் ஏற்கக் கூடியதாக இல்லை. சில பல சுயதேவைகள் கருதியே இலங்கை அரசு இவ்வாறு செய்கின்றது என்றால் அவை என்ன? என்ன? மீண்டும் ஆட்சியைப்பிடிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் இனவெறி இன்னும் தேவைப்படுகின்றதா? பிரபாகரனை கொன்ற 'வீரைய' விற்கு தமிழ் தேசிக் கூட்டமைப்பின் இனவாத பூச்சாண்டி இல்லாமலே வெல்வதற்குரிய வாக்குப்பலத்தை சிங்கள் மக்கள் வழங்கத் தயாராகவே உள்ளனர்.  தமிழ் மக்கள் மத்தியில் இனவாத அரசியல் இருந்தால் தான் தாம் சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் நடத்தி ஆட்சியில் இருக்கலாம் என்ற வகையாக 1994ம் ஆண்டுக்கு முன்னர்வரை இருந்த இலங்கை அரசுகள் கொண்டிருந்த அதே அணுகுமுறையை தற்போதைய இலங்கை அரசும் கொண்டிருக்கக் கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசன்னத்தை ஆசீர்வதித்து அனுமதித்தது மே 18 இற்கு பின் இலங்கை அரசு செய்த முதல் கோணல் ஆகும். இது மிகப் பெரிய அளவில் முற்றையும் கொணலாக்கக் கூடும்......

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள். அவர்களை 'கையாளுவது' சற்று சிக்கலான விடயம் என்று சாக்கு போக்குக் கூற முயற்சிப்பது அவசியம்தானா? தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இலங்கை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவர்கள்தானே, இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள்தானே. புலிகளை இராணுவரீதியாக அணுகிய அரசாங்கம் ஏன் தமிழ்க் கூட்டமைப்பினரின பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை சட்டரீதியாக அணுகவில்லை? ஏன் தயக்கம்? என்ன உள்நோக்கம்?. இலங்கை அரசு இவ்விடயத்தில் பிரிவினையையும், பயங்கரவாதத்தையும் ஏதோ ஒரு அளவில் ஆதரிக்கிறது, போசிக்கிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது. இந்த வினை விதைக்கும் பலனை நிச்சயம் மகிந்த அரசு ஒருநாள் அறுவடை செய்தே தீரவேண்டும். பிரேமதாசாவால் ஏற்கனவே கண் கெட்ட நிலைக்கு இலங்கை கொண்டு போகப்பட்டது. பிரேமதாசா சரியாக நடந்திருந்தால் 20 ஆண்டுகளுக்கு இலங்கை பயங்கரவாதமற்ற நாடாக செழிப்புறத் தொடங்கியிருக்கும்.. மீண்டும் இலங்கையை 50 வருடங்களுக்குப் பின்னால் கொண்டு போகாமல் இருக்க வேண்டுமென்றால் மகிந்த விழிப்போடு பிழையானவர்களை ஒதுக்கி சரியானவர்களை அணைத்துச் செல்ல வேண்டும்.

இலங்கை அரசின் எண்ணக் கருத்தோட்டத்தை மிகச் சரியாக சம்மந்தன் கோஷ்டி பிடித்துக் கொண்டதாகவே தெரிகிறது. அதனால்த்தான் இந்த ஒட்டல் நாடகத்தை அரங்கேற்றுகிறது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்று கூறிக் கொண்டு தமது நாற்காலிக் கனவுகளைம் பாராளுமன்ற சொத்து சுகங்களையும் தொடர்ந்து நிரப்பிக் கொண்டு இருக்க வழி கண்ட பிடித்து விட்டார்கள்.. உலகம் சுற்றி தமது குடும்ப உறவுகளின் நலன்களை மட்டும் முதன்மைப்படுத்தி செயற்படத் தொடங்கி விட்டார்கள். இது தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் இன்னும் ஒரு தலை முறையை படுகுழியில் தள்ளியே விடும். பாவம் தமிழ் மக்கள். அவர்களை யாரும் காப்பாற்ற முடியாது. தமிழர்கள் தாமாக உணர்ந்து 'தமிழ் தேசியம்' பேசும் இனவாதிகளை தடியெடுத்து விரட்டியால் ஒளிய இப்பிரச்சனை இப்படியே இழுத்தக் கொண்டு போவதற்குரிய நிலமைகளே நிறைய உள்ளன.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக, முற்போக்கு சக்திகள் தமக்கிடையே ஐக்கிய முன்னணியை அமைத்து தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளுடனும், தமிழ் முஸ்லீம் சக்திகளுடனும், மலையக மக்களுடன் இணைந்து ஒரு பரந்து பட்ட அரசியல் செயற்பாட்டை பலமாக முன்னெடுக்க வேண்டும். இதற்கான வேலைகளில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும். இதில் ஈடுபடுவதற்கு நிறைய உழைக்க வேண்டும். ஆளணிப்பற்றாக் குறையுடன் வளங்களின் பற்றாக் குறையும் இவர்களை வேகமாக பரந்து பட்ட அளவில் செயற்பட முடியாமல் தடுக்கின்றது. இதில் வளம், வசதி உள்ளவர்கள் தமது மேலாண்மைத் தன்மையைத் தவிர்த்து உண்மையாக செயற்படவேண்டும். இவ்வகையான செயற்பாட்டை முன்னெடுக்கும்போது இலங்கையில் இருக்கும் சிங்கள இனவாத சக்திகளும் இவர்களின் வளர்ச்சியை செயற்பாட்டை பெரிதும் விரும்ப மாட்டார்கள். எனவே இதற்கு தடை போடும் விதமாக தமிழ் இனவாத சக்கிகளுக்கு உரமூட்டும் நேரடியான மறைமுகமான செயற்பாட்டை செய்து கொண்டே இருப்பர். சர்வதேச முதலாளித்துவ சக்கிகளும் இதற்கு எப்போதும் தடைபோடும் தந்திரங்களை மேற்கொண்டு கொண்டே இருப்பர்.

புலம் பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் தேசியம் பேசும் இனவாத சக்திகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பண முதலீடு செய்து தமது பிழைப்பை வெளிநாடுகளில் தொடர்ந்து செய்ய செயற்பட்டுக் கொண்டே இருப்பர். இதனையே மாநகர சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தேர்தல் நிதி உட்பட பல வாய்ப்;பு வசதிகளை செய்ததில் இருந்து நாங்கள் அறிந்து கொண்டோம். கூடவே நாடு கடந்த தனிநாடு என்ற கேபி – உருத்திரகுமாரன் போன்றவர்களின் பிரகடனத்தின் போது தமது பிரதிநிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்ற 'ஒருதலைப்பட்சமான' அறிவித்தல்களும் இதனையே கோடிட்டுக் காட்டுகின்றன.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மூன்று முக்கிய சந்தர்பங்களான பண்டா - வெல்வா ஒப்பந்தம், இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம், சந்திரிகா அம்மையாரின் அதிகாரப் பரவலாக்கல்த்திட்டம் போன்றவற்றை இல்லாமல் செய்ததில் சிங்கள இனவாத சக்திகளுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அவ்வளவு பங்கு அக்காலகட்டங்களில் இருந்த தமிழ் இனவாத தமிழ் தலைமைகளுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் உண்டு. இது இன்றும் தொடருவதற்குரிய வாய்ப்புக்களே நிறைய உள்ளன. மகிந்த அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கி வரும் 'அங்கீகாரம்' இதனையே கட்டடிம் காட்டி நிற்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னால்த்தான் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு என்ற இலங்கை அரசின் மே 18 க்குப் பிந்தைய பின்வாங்கல் அறிவிப்பானது இரண்டாவது முக்கிய கோணல் ஆகும். புலிகளின் ஆயுதப்பிரசன்னம் இருந்த கால கட்டங்களில் மே 18 க்கு முன்பு புலிப் பயங்கரவாதிகள் இருப்பதினால்த்தான் அரசியல் தீர்வுத்திட்டத்தை முடிவு செய்து அமுல்படுத்த முடியாதுள்ளது எனக் கூறியது நியாயமாகப்பட்டது. ஆனால் இன்று புலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப்பட்ட பின்பு குறைந்த பட்சம் மாகாணசபைகளின் செயற்பாடுகளை அமுல்படுத்துவதில்; முன்னுரிமை கொடுத்து செயற்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஊட்டியிருக்கலாம் தானே. சர்வதேச சமூகத்தின் சந்தேகங்களையும், குற்றச்சாட்டையும் தவிர்த்து இருக்கலாம்தானே. மாறாக ஏற்கனவே சட்டமூலமாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை இனிமேல்தான் இனப்பிரச்சனைக்கான தீர்வுத்திட்டமாக முன்வைக்க முற்படுவது போலக் காட்டுவதில் என்ன அhத்தங்கள் உள்ளன.

மாகாணசபை முறைமைக்கான 13 வது திருத்தச்சட்டம் ஏற்கனவே சட்டமூலம் ஆக்கப்பட்டு எட்டு மாகாணங்களில் செயற்பட்டு வருகின்றது. இச் சட்டமூலம் ஆக்கப்பட்டபோது ஜேஆர் தனது குள்ள நரித் தந்திரோபாயம் மூலம் எவ்வளவு அதிகாரங்களை எதிர் காலத்தில் குறைத்துக் கொள்ளலாம், கொடுக்கலாம் என்ற வகையில் சட்ட ஓட்டைகளை ஏற்படுத்தியே உருவாக்கினார். மாகாணசபை முறைமை ஏற்படுத்தி அதன் பின்பு கடந்து வந்த 22 வருடகால வரலாற்றில் இலங்கையை ஆண்டுவந்த அரசுகள் யாவும் 'இருக்கும் மாகாண அதிகாரங்களை' இல்லாமல் செய்தலும், இருப்பவற்றை அமுல்படுத்துவதை தவிர்க்கும் அணுகு முறை மூலமும் இதனை செய்தே வந்திருக்கின்றன என்பது உண்மை. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு 13 வது திருத்தச்சட்டம் என்று ஏதோ இனித்தான் ஒரு புதுச்சட்டத்தை உருவாக்கப் போவதாக காட்டிக் கொள்வதும், பேசுவதும், செயற்படுவதும் நகைப்பிற்கு இடமானது. ஏற்கனவே சட்டமூலம் ஆக்கப்பட்டதைப்பற்றி அமுல் படுத்துவதைப்பற்றியும் என்ன என்ன அதிகார வரம்புகள் மாகாணசபையிற்கு உள்ளன என்பது பற்றியும் நீதிமன்றங்களில் ஆராயலாமே ஒழிய இனிமேல்தான் சட்டம் இயற்றப்போவது என்று தொனிப்பட பேசுவது சுத்த பித்தலாட்டமும் ஏமாற்று வித்தையுமாகவே கருதவேண்டி இருக்கின்றது. 13 வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதில் ஆரம்பித்து அதற்கு மேல் நகர்ந்து செல்வதைப்பற்றிப் பேசுவதே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விற்கான சரியான பயணமாக அமைய முடியும்.

எனவே இலங்கை அரசின் முன்னால் இருக்கும் முதன்மையான பணி வடக்கு கிழக்கு மாகாண சபைகளை சரியாகவும் முறையாகவும் இயங்கவைத்தல் வேண்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற இனவாத சக்திகளை ஊக்கவிப்பதை நிறத்துதல் வேண்டும்: ஆயுதம் ஏந்திய புலிகளை விசேட ஆணைக்குழுவிற்கு முன்னால் விசாரிக்க முற்படுவதைப்போல, ஆயுதம் அற்ற புலிகளாகச் செயற்பட்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் விஷேட ஆணைக்குழுவிற்கு முன்னால் நிறத்துதல் வேண்டும்;. இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இவைகள் அவசியமாகும். இன்றேல் மீண்டும் 'பழைய குறுடி கதவைத் திறவடி'தான்.

(சாகரன்) (ஐப்பசி 12, 2009) (Saakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com