Contact us at: sooddram@gmail.com

 

போராளி, சிந்னையாளர் சபாலிங்கத்திற்கு சமர்பணம்

(சாகரன்)

(ஈழவிடுதலையின் முன்னோடிகளில் ஒருவர் சபாலிங்கம். அவர் 1994 மே 1 அன்று பிரான்ஸ் இல் அவரது வீட்டில் அவர் மனைவி பிள்ளைகள் முன்னிலையில் புலிகளினால் கொல்லப்பட்டார்)

ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றின் உண்மை நிலையை தோண்டிப் புதைக்க நடத்தப்பட்ட கொலை சபாலிங்கத்தின் கொலை. இலங்கை வாழ் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மிதவாதப் போக்கில் இருந்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதப் போராட்டமாக பரிணாமம் பெற்ற கால கட்டங்களில் இப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்ட ஒரு போராளிதான் சபாலிங்கம். வரதராஜப்பெருமாள், புஸ்பராஜா, சத்தியசீலன், சபாலிங்கம், மகாஉத்தமன், குமார் போன்றவர்கள் தமிழ் மாணவர் பேரவை என்ற மாணவர் அமைப்பிற்கூடாக தமிழ் மக்களின் போராட்டங்களை முன்னெடுத்த போது போராட்டங்களில் நேரடியாக கலந்து கொண்டவர்தான் சபாலிங்கம்.

சர்வ தேச விடுதலைப் போராட்டங்களின் அனுபவங்களை உள்வாங்கி அதனை இலங்கையில் நிலவும் அகப் புறச்சூழலுக்கு ஏற்பட இடதுசாரி சிந்தனைகளின் அடித்தளத்தில் இருந்து புறப்பட்டவர்கள் இவர்கள். இன்னொரு புறம் ஆயுத வன்முறையை மட்டும் கருத்தில் கொண்டு தங்கத்துரை, குட்டிமணி, நாகராஜ, செட்டி, கண்ணாடிப்பத்தன், பிரபாகரன் போன்றோர் செயல்படத் தொடங்கினர். ஆரம்ப கால கட்டங்களில் தமிழர் விடுதலை என்ற பொது வேலைத்திட்டத்தில் இவர்களிடையே ஒரு புரிந்துணர்வு, பரஸ்பரம் உதவுதல் என்பன நிறையவே காணப்பட்டன.

ஆனால் இவர்களிடையே இயல்பாக இருந்த வர்க்க முரண்பாடு ஈழவிடுதலை அமைப்புக்களை இரு முகாங்களாக பிரித்தன என்பதுதான் உண்மை நிலை. இந்த வர்க முரண்பாடானது ஒரு புறத்து ஏகபோகம் என்றும் மறுபுறத்து ஜனநாயக மத்தியத்துவம் என்றும் இரு பிரிவுகளாக செயற்படவைத்தன. தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாட்டின் தீவிரத்தை கேள்விக் குறியாக்கி புறப்பட்ட உமாமகேஸ்வரன், இலண்டன் இரத்தினசபாபதியின் இடது சாரிக் கொள்கைகளினால் உருவாக்கப்பட்ட ஈழமாணவர் பொது மன்றத்தின் வழி வந்த பத்மநாபா, சங்கர் ராஜி, சண்முகதாசனுடன் கொள்ளை முரண்பட்டு பின் கார்த்திகேசனின் சீனச்சார்பு இடது சாரி சிந்தனைகளினால் வழி நடத்தப்பட்ட விசுவானந்ததேவன் போன்றோர் தமது வர்க்க குணாம்சங்களுக்கு ஏற்ப பாதைகளை அமைத்து ஈழவிடுதலை அமைப்புக்களை தலைமை கொடுத்து செயற்பட்டனர் என்பது வரலாறு. 

தங்கத்துரை இடம் நிலவிவந்த இடதுசாரப் போக்கும், தங்கத்துரையினால் குட்டிமணி மீது ஏற்பட்ட கொள்கை மாற்றமும் (இது அவர்களின் சிறை வாழ்க்ககையிலேயே பெரிதும் வளர்க்கப்பட்டது) ஜனநாய மத்தியத்துவத்தில் நம்பிக்ககை வைத்து செயற்பட்ட வரதராஜப்பெருமாள் போன்றவர்களுடன் சற்றே நெருகத்தை ஏற்படுத்தியது என்பது வரலாற்று உண்மை.

ஆரம்பத்தில் கருவிகள் இன்றி சிறு குழுக்களாக இயங்கி வந்த இவர்களுக்கு அன்றைய முக்கிய பிரச்சனை பாதுகாப்பு. இவ்விடயத்தில் ஆரம்ப கால கட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் நிறையவே உதவி வந்துள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் தொடர்ச்சியாக இவர்களின் இரகசியங்கள் செயற்பாடுகள் பரஸ்பரம் இரு குழுக்கழுக்கும் தெரிந்தே இருந்தன. இதனால் சரி பிழை என்பவற்றிற்கு இடையே அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டன.

இதனால் ஏற்பட்ட முரண்பாடுகளை வரதராஜப்பெருமாள் உள்ள அணியினர் நட்பு முரண்பாடாகவும் பிரபாகரன் உள்ளிட்ட குழு பகை முரண்பாடாகவும் பார்க்க முற்பட்டனர். இவற்றின் தொடர்சியாகத்தான் தங்கத்துரை, குட்டிமணி பாதுகாப்பின் நிமிர்த்தம் இந்தியா தப்பச் செல்ல முற்படுகையில் இராணுவத்திற்கு காட்டிக் கொடுக்கப்பட்டதும், நீர்வேலி வங்கிக் கொள்ளையில் ஏற்பட்ட ஆகத் துரோகங்களும் ஆகும்.

இவ்விரண்டு விடயங்கள் சம்மந்தமான முழு உண்மை நிலையினை சபாலிங்கம் அறிந்திருந்தார். மேலும் இதற்கு முந்தைய கால கட்டத் துரோகத்தனங்களையும், சரி பிழை செயற்பாடுகளையும் அவ் அவ் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டதன் மூலம் நன்கே அறிந்திருந்தார். இவற்றை ஆவணப்படுத்தியும் வைத்திருந்தார். இவ் வரலாற்று உண்மைகளை வெளிக் கொணரும் வேலைகளில் ஈடுபட்டு இருந்தார். இதனால் 'மேதகு' விலாசம் உடைய பிரபாகரன் பெரிதும் தோல் உரித்துக்காட்டும் நிலைக்கு உள்ளாகப்பட வேண்டி சூழலில் புலிகளுக்கு தெரிந்த பாஷையில் பிரான்ஸ் இல் 1994 மே மாதம் 1ம் நாள் பரிஸ் இல் அவரது இல்லத்தில் அவர் தம் மனைவி குழந்தைகள் முன் வைத்து புலம்பெயர் புலிகளினால் சுட்டுக் கொல்ப்பட்டார்.

 

ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்ட வரலாற்றை பதிவு செய்ய முற்பட்டதுதான் அவரின் கொலைக்கான ஓரேகாரணம். உண்மைகளைச் சந்திக்க எப்போதுமே பிரபாகரன் தயார் இல்லை. எனவேதான் பிரபாகரன் ஆயுதத்ததை கீழேவைக்கவும் தயார் இல்லை. ஆயுதத்தை தூக்கிப்படிக்க கரங்கள் இருக்கும் வரை பிரபாகரன் ஆயுதத்தை கீழே வைக்கப் போவதில்லை. ஆயுதம் இன்றி பிரபாகரன் இல்லை.

அடுத்தவர் புஸ்பராஜா. இவர் தமது ஈழவிடுதலை அனுபவங்களை 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' (முதல் பதிப்பு மார்கழி 2003 வெளியிடப்பட்டது) என்று தனது அனுபவங்களை பதிவு செய்து விட்டு சென்றுள்ளார். இவரின் புத்தகத்தில் சிலருடன் சில சமரசம் செய்யும் போக்குக்கள் காணப்பட்டாலும், ஆரம்ப காலகட்டத்தில் புலிகளுடன் சேர்ந்து இயங்கி தற்போது சற்றே ஒதுங்கி வாழும் இராகவன், நாகராஜா, நித்தியானந்தன்(நிர்மலா), ஐயர் போன்றவர்வர்கள் இதுவரை வரலாற்றைப்பற்றி வாயே திறக்காத நிலையில் புஸ்பராஜாவின் பங்களிப்பு மகத்தானது. இதில் மாற்றுக்குருத்திற்கு இடமில்லை. இவரின் புத்தகம் புலிகள் இயக்கத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது என்பதிலும் மாற்றக்கருத்து இல்லை. ஆரம்ப காலத்தில் இளைஞர் பேரவையின் பாசறையில் வளர்ந்ததினால் அவற்றின் வரலாற்றுத் தாக்கங்களை இவரின் புத்தகத்தில் அங்கங்கே காண முடிகின்றது. கூடவே புத்தகத்தின் மூலப்பிரதிகளை வாசித்து தட்டிக்கொடுத்த நண்பர் சேரனின் 'கருத்துச் செல்வாக்கு' புஷ்பராஜாவின் புத்தகத்தில் உள்ள சமரசங்களுக்கு காரணமா இருக்கலாம்? எவை எப்படி இருப்பினும் இதுவரை வந்த ஈழவிடுதலை வரலாற்றுப் பதிவுகளில் முழுமையானதும், உண்மையானதும், தைரியமானதும் இதுவே. இவரின் இம் முயற்சி வெற்றியளிக்க பக்க பலமாக இருந்தவர் சபாலிங்கம் என்பது யாவரும் அறிந்ததே. இப்புத்தகத்தன் ஊடாக நாம் சபாலிங்கத்தின் சில பக்கங்களை பார்க்கவும் முடிகின்றது என்பது இப்புதகத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றும் ஆகும்.

இன்றைய கால கட்டத்தில் ஈழவிடுதலை வரலாற்றை முழுமையாக அறிந்து இன்றும் அந்நப் போராட்டத்தில் வாழ்ந்து வருபவர் ஒருவர்தான் அவர் வரதராஜப்பெருமாள் மட்டுமே (பிரபாகரனும் உள்ளார் அவர் வரலாற்று உண்மைகளைக் கூறி தனக்கு தானே தூக்கு போட்டுக் கொள்வாரா?) அவர்தான் பிரபாகரனின் hவை டளைவ இல் ழெ 1. நம்புங்கள், அண்மையில் கூட வரதராஜபெருமாளின் மகளின் திருமணத்தில் கார்ச்சாரதியாக கலந்து கொண்டு அவரை கொலை செய்ய புலிகள் முயன்றது ஞாபகம் இருக்கலாம். அவருக்கு பிறகுதான் கருணா, டக்ளஸ்.....நஉவ. பிரபாகரனின் வரலாற்றை மட்டும் அல்ல, அதற்கு முந்தைய தமிழ்மக்களின் விடுதலை வரலாற்றை தெரிந்தவர். பெரும்பான்மையான வரலாற்றில் நேரடித் தொடர்புடையவர். இவற்றிற்கு மேலாக எழுத்தாற்றல் மிக்கவர். அவர் எழுதுவார், சொல்லுவார், செய்வார் நிரூபிப்பார் இதுதான் பிரபாகரனின் hவை டளைவ இல் ழெ 1 ஆக வரதராஜப்பெருமாள் இருப்பதற்கான முதல் காரணம். இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதல் அமைச்சர் என்பது எல்லாம் இதற்கு பிறகுதான். ஒரு சபாலிங்கத்துடன் அவ் வரலாற்றை முடித்துக் கொள்வோம். எனவே விழிப்;பாக இருப்போம். எச்சரிக்கையாக செயற்படுவோம் சரியான வரலாற்றை எழுதி முடிப்போம். இறுதி வெற்றி எம்மக்களுக்கே! முயல்வோம்! வெல்வோம்!! உளம்சோரோம்!!!

சாகரன் (வைகாசி 02, 2009)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com