Contact us at: sooddram@gmail.com

 

புதிய அத்தியாயம் படைக்க எழுந்து வருவோம்...

(சாகரன்)

யுத்த வெறியர்களால் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடைபெற்று வந்த ஆயுத நடவடிக்கைகள் ஓய்ந்து விட்டது. இலங்கை இராணுவத்தினால் புலிகள் தோற்கடிகப்படும் தறுவாயில், புலிகள் தமது துப்பாக்கிகளையும் மௌனிக்க போவதா அறிவித்தல் செய்யவேண்டிய நிர்பத்தம் ஏற்பட்டது. எனவே மௌனிப்பு அறிவித்தலை விடுத்திருந்தனர். இந்த மௌனம் கால நேரத்திற்கு ஏற்ப ஏற்பட்டிருந்தால் பல ஆயிரம் உயிர் இழப்புக்களை தவிர்த்து இருக்கலாம். உங்கள் கண்களை நீங்களே பெயர்த்து எடுத்து விட்டு பின்பு சூரிய நமஸ்காரம் செய்ய முற்பட்டீர்கள். இக்கால தாமதம் நீங்கள் விரும்பிய உங்கள் உயிர்களையே மனித சமூகத்தைவிட்டு அகற்ற காரணமாகிவிட்டது.

ஏங்களுக்கு எதிர் கருத்துடையவர் என்றாலும், மனித குல விரோதிகள் என்றாலும் ஒரு மனிதனின் இறுதி நிகழ்வுக்கு வழங்கும் மரியாதையை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம். நாம் மனித நேயம் மிக்கவர்கள் என்பதை மீண்டும் நிருபிக்க வேண்டிய தேவைக்காக அல்ல. இயல்பான மனித நாகரிகத்தின் வெளிப்பாடுகளுக்காக இவைகளை நாம் செய்கின்றோம். செய்து கொண்டே இருப்போம்.

யுத்த வெறியர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது பொதுமக்களே. விம்மலும், அழுகையுமாய் கழிந்த நாட்களே பல. இழப்புக்கள் யாரால் ஏற்பட்டாலும் துன்பம் ஒன்றுதான். வலி ஒன்றுதான். துடிப்பு ஒன்றுதான். போரினால் எம்மைவிட்டு நீக்கி சென்ற அனைத்து பொது மக்களுக்கும் எமது அஞ்சலிகள். மௌன வணக்கங்கள். அவர்கள் பாதங்களில் எங்கள் அர்ச்சனைப் பூக்கள். பொதுமக்கள் மனதில் மரண வடுக்கள் ஆற நீண்ட நாட்கள் எடுக்கும். நம்பிக்கையீனமே இவர்களிடம் மேலோங்கி இருக்கும். இது தவிர்க முடியாததும் கூட. இழப்புக்களுடன் வாழ்ந்தால்தான் புரியும் அதன் வலி. இந்த வலியை நாமும் எம்வாழ்வில் சுமந்தவர்கள், சுமக்கின்றவர்கள்.  இவ் மரணத்தின் வலியை உணந்ததினாயே நாம் சமாதானம் வேண்டி நிற்கின்றோம். மரணத்தை தவிர்க்கும் சமாதானத்தை வேண்டி நிற்கின்றோம். சமாதான சக வாழ்வு வேண்டி நிற்கின்றோம். ஜனநாயக்காற்றை சுவாசிக்க துடிக்கின்றோம். இதற்காக எம்மை அர்பணிக்க, ஏன் இழக்கவும் தயாராக இருந்தோம், இருக்கின்றோம், இருப்போம்.

அழிவுகளையும், துயரங்களையும், மரணங்களையும், ஓலங்களையும் பார்த்து பார்த்து வெந்து போன நாங்கள், இனி ஆக்கங்களையும், சந்தோஷங்களையும், ஜனனங்களையும், சந்தோஷங்களையும் நோக்கி நகரும் புதிய அத்தியாயத்தை படைக்க புறப்படுவோம். நம்பிக்கையுடன் புறப்படுவோம்.

அழிவுகளை புனருத்தாரணம் செய்து புதியன செய்வோம். துயரங்களை இதமான அணைப்புடன் வருடிக்கொடுத்து ஆதரவாக இருந்து விரட்டி அடிப்போம். மரணங்களின் இழப்புக்களை இணைந்து செயற்பட்டு இல்லாது செய்வோம். ஓலங்களுக்கான அவலங்களை அகற்றி நம்பிக்கையுடன் செயற்படுவோம். இனியொரு புதிய அத்தியாயத்தை படைக்க நம்பிக்கையுடன் அறிவுடன், இணைந்து செயற்படுவோம். எதிர் கருத்துக்களை பேசியே தீர்க்க முற்படுவோம். எதிரிக் கருத்தாக பார்க்காமல் பேசியே தீர்க முற்படுவோம். இது மிக மிக நீண்ட கடின பயணம்.

சம உரிமை என்பதற்கான புரிதல் எல்லோரும் ஓரே மாதிரியாக இருப்பதும் இல்லை. பார்க்கப்படுவதும் இல்லை. சிலர் பார்க்க விரும்புவதும் இல்லை. இதனால் எற்படும் இடைவெளிகள், சம உரிமையை நிலைநாட்ட நீண்ட பயணத்தை மேற்கொள்ள வைக்கும். ஜனநாயக்காற்றை சுவாசிக்க கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கும். வேறு வழியும் இல்லை நமக்கு இப்போது. நம்பிக்கையீனமாக பார்ப்பதை தவிர்த்து உரிமைகளை பெற முயல்வோம். கடந்த கால கசப்பான அனுபவங்கள் எம்மை நம்பிக்கையீனங்களை நோக்கி நகரவைப்பது இயல்பதான். ஆனால் கடந்த காலங்களில் சர்வதேசங்கள் சமாதான மேசையில் நடுவராக? இருக்கவில்லை பல சந்தர்பங்களில். தற்போது நிலைமை அவ்வாறு இல்லை. சம உரிமையை பார்க்க மறுப்பவர்கள் நிர்பந்திக்கப்படுகின்ற நிலைமைகளே நிறையவே உள்ளன. வாய்பை சரியாக பயன்படுத்தி கொள்வோம். வந்த வாய்பை போட்டு உடைத்த அனுபவம் எமக்கு நிறையவே உள்ளனவே. அவ் அனுபவங்களை நாம் பாடங்களாக கொள்வோம்.

அயலவரை பகைவர் ஆக்கிய துர்ப்பாக்கிய நிகழ்வு எம்மை நிறையவே பாதித்துள்ளது. இது பற்றிய புரிதலில் தொடர்ந்தும் தவறுகள் விடுவோமாகின் மீண்டும் நாம் எம்மை ஓர் துன்பியல் வாழ்விற்குள் தள்ளிவிடுவோம். விஸ்தரிப்பு வாதம் எல்லாம் வெறும் பேச்சிற்கே. சர்வதேச சமூகம் எங்களுக்கு தமது தார்மீக ஆதரவுகளை வழங்க வேண்டிய நாம் அவர்களுக்கு வேண்டிய நம்பிக்கையான செயற்பாடுகளை கொண்டிருத்தல் வேண்டும். இதுவே இன்றை மிக முக்கியமான செயற்பாடு.

பல் இனங்களை தன்னகத்தே கொண்ட பல நாடுகள் சகல இனங்களும் சம உரிமையுடன் வாழும் அரச முறைமைகளை தங்கள் நாடுகளில் கொண்டுள்ளன. எனவே அவர்கள் எங்கள்பால் தார்மீக ஆதரவை கொண்டிருக்கும் நிலமையை நாம் ஏற்படுத்தினால், அவர்களின் ஆதரவுடனும்; எம் நாட்டில் சம உரிமையுடன் வாழும் அரச முறைமையை ஏற்படுத்துவது கடினமானது அல்ல. இவ்வகையான புத்தி சாதுர்சமான செயற்பாடுகளை மேற்கொள்வதே இன்றைய அவசர, அவசிய  வேலைத்திட்டங்களாக இருக்கவேண்டும். இதனை நோக்கிய எமது பயணங்களை நாம் மேற்கொள்வோம். இலங்கையில் சகல மக்களும் சம உரிமையுடன் வாழ வழிவகுக்கும் அரசியல் தீர்வை ஏற்படுத்துவோம். அரசு முறைமைகளை நிஜம் ஆக்குவோம். இதன் மூலம் எமது மக்களின் இவ்வளவு கால இழப்புக்களுக்கான அர்த்தங்களை சற்றேனும் நிஜமாக்குவோம். எமக்கு நம்பிக்கை உண்டு, இன்னும் நம்பிக்கையுண்டு. எமக்கு ஒரு சுபிட்சமான வாழ்வுண்டு என்று. இதனை நிலை நாட்டமுடியும் என்றும்.

(சாகரன்) (வைகாசி 20, 2009)(Saakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com