புலிகள் காலத்தில் ஒன்று, மடிந்த பின்னர் வேறொன்று

சுயமாகக்கூட சிந்திக்க தெரியாதவர்கள் அரசியலில்! சம்பந்தர் பயந்த கோழை - சந்திரகாந்தன்

2008இல் பிரிக்கப்பட்ட கிழக்கில் போட்டியிடுவது தமிழர்களுக்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம் என்று சொல்லிவிட்டு இன்று புலித் தலைமை மடிந்தபின்னர் என்ன கூறுகிறார்? அதிகாரம் மிக்க முதலமைச்சரையும் கிழக்கு மாகாணசபையையும் உருவாக்க காலத்தின் கட்டாயம் கருதி கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்களாம்...!அப்படி என்றால் 2008 இல் எம் மக்களுக்கு அதிகாரங்களும் தீர்வுகளும் தேவையான விடயங் களாக இருக்கவில்லையா என்று தமிழ் மக்கள் விடுத லைப்புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களுக்குப் பணியாற்றவென்றே நாம் புறப்பட்டோம். நாம் தலைநிமிர்ந்து நிற்கின்றோம் ஆனால் சம்பந்தர் மிகவும் பயந்த ஒரு கோழை. நான் ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால் சந்திரிகா கொண்டு வந்த தீர்வுப் பொதியில் தமிழர்களுக்கு மிகவும் வலுவானதும் நியாயமானதுமான பல்வேறுபட்ட அதிகாரங்கள் மலிந்து காணப்பட்டன என்று சம்பந்தர் மிக அண் மையில் ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார்.

இப்போது கடந்துவிட்ட காலம் பற்றி கருத்துக் கூறும் இவர் எம் மக்களுக்கு உண்மையிலேயே அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்கும் எண்ணம் கொண்ட மனிதராக இருந்திருந்தால் ஏன் அன்று சந்திரிகாவின் தீர்வுப் பொதியினை துணிந்து ஏற்கவில்லை? அது ஒரு நல்ல தீர்வு என்று கூறுபவர் அன்றே இதனைப் பொறுப்பேற்றிருக்கலாம் தானே.

ஆனால் இவர் அன்று என்ன செய்தார்? ஐக்கிய தேசியக் கட்சியும் ஆனந்தசங்கரியும் இணைந்து தீர்வுதிட்ட ஆவணங்களை பாராளுமன்றத்தில் தீயிட்டு எரித்தபோது வாயேதிறக்காமல் அமர்ந்திருந்தார். இன்று விடுதலைப் புலி மடிந்தபின்னர் சந்திரிகாவின் தீர்வுப் பொதி அதிகாரம் மிகுந்ததாக இருந்ததாம்.

விடுதலைப் புலிகள் இருக்கும் போது ஒரு பேச்சு இறந்த பின்னர் ஒரு பேச்சு. நிலையான கொள்கைகள் இல்லை, பற்றுறுதி இல்லை. அதற்குள் விடுதலைப் புலிகள் இருக்கும் போது எம்மை சுயமாக சிந்திக்கவிடவில்லை என்றும் சொல்கிaர்கள். சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் எல்லாம் ஏன் ஐயா மக்களுக்காக அரசியல் செய்ய வருகிaர்கள். நாம். முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் அல்ல கோழைகளும் அல்ல. எம் மக்க ளின் அழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாமலயே சாவினைத் துச்சமென் றெண்ணி தலைமையினை ஏற்றோம்.