Contact us at: sooddram@gmail.com

 

இளையோரே சிந்தியுங்கள் ஆகஸ்ட் 17 யாருக்கு ?

(மாதவன் சஞ்சயன்)

உண்மை எது பொய் எது. தேவன் யார் சாத்தான் யார். துறவி யார் சுகபோகி யார். கற்றவன் யார் கல்லாதவன் யார். நண்பன் யார் விரோதி யார். எதிரி யார் துரோகி யார். கொள்கைவாதி யார் சந்தர்ப்பவாதி யார் என பிரித்து அறிய முடியா நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள். பிசாசோடு போவதா பேயோடு போவதா பூதத்தோடு பேசுவதா குட்டி பூதத்தோடு பேசுவதா என பல கேள்விகளுக்கு விடைதெரியாத தேர்தல் கால சூழ்நிலை. அன்று உங்கள் வயதில் இருந்த நான் 1970ல் வாக்களித்த போது எனக்கான தெரிவு தமிழ் அரசா ? தமிழ் காங்கிரசா ? தர்மலிங்கமா ? சிவநேசனா ? என்பதில் அன்றைய உடுவில் தொகுதியின் என் தெரிவு தருமர் ஐயாவே. காரணம் சிவநேசன் தேர்தல் காலத்தில் மட்டும் கொழும்பில் இருந்து வருவார். மாறாக மருதனார் மட சந்தைக்கு தினம் போகும் தருமர், ஹண்டி மாஸ்டரிடம் ஆலோசனை பெற சைக்கிளில் மானிப்பாய் வருவார்.

அவர்களுடன் ஸ்கந்தா அதிபர் ஒறேற்ரர் சுப்பிரமணியம் ஐயாவும் இணைவார். ஆரோக்கிய அரசியலின் குறியீடு அவர்கள். மூத்ததம்பி ஒழுங்கையில் இருந்த "அமிர்தம்" இல்லத்தில் கலந்துரையாடல் முடித்து வரும் ஒறேற்ரர் கார் ரவுக்கை சந்தையடியில் நின்றுவிடும். தேனீர் கடை சக்குன், அரிசிக்கடை மணியம் உட்பட பலருடன் நானும் அதை தள்ளி ஸ்டாட் வந்ததும் வெளிவரும் கரும்புகையில் முகம் கறுப்போம்.

பின்னாளில் சக்குன் புலிகளை ஆதரித்ததாலும் மணியம் எதிர்த்ததாலும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலர் புலம் பெயர்ந்துவிட மிஞ்சி இருப்பது எம்மில் சிலரே. அன்று தருமர் ஆலோசனை கேட்கும் ஹண்டி மாஸ்டர் தான் இளைஞர் காங்கிரசின் ஸ்தாபகர். டொனமூர் அமைப்பை எதிர்த்து யாழில் தேர்தலை பகிஸ்கரித்தவர். பின்னாளில் சமசமாஜ கட்சியில் அதே உடுவில் தொகுதியில் போட்டியிட்டவர். கொக்குவில் இந்து அதிபர்.

மாற்று கட்சியில் இருந்தாலும் அவர் அறிவுரை கேட்க தருமர் ஐயா தேடி சென்றது அரசியல் நாகரீகம். அன்று மக்கள் சேவையில் மாற்று கருத்துகள் தான் மோதின. பொது வாழ்க்கையில் நட்பு தொடர்ந்தது. கொள்கைகள் தான் கோசம். தனிமனித விமர்சனம் கிடையாது. உன் வழி உனது என் வழி எனது, தீர்ப்பு மக்கள் முடிவில் என்ற தெளிவு இருந்ததால் நண்பர்கள் நாமே சிலர் காங்கிரஸ் சிலர் தமிழ் அரசு என எம் வழி சென்று நட்பு நிலைத்த காலம்.

1977 எம்மை சிந்திக்க விடவில்லை. காசி, வண்ணை, மாவை என எம்மை உசுப்பேத்த, அடலேறுகளின் பேச்சால் மந்திரத்தால் மாங்காய் பறிக்கலாம் என்ற தமிழ் ஈழ கோசம் பண்ணாகத்தில் பறை அடிக்க, அணி அணியாய் நாம் அனைவரும் உதயசூரியனை வரவேற்றோம். வருகிறது தமிழ் ஈழம் என்றவர் கொண்டு வந்தது மாவட்ட சபை. குழம்பிய இளைஞர்கள் தொடர்ந்த பாதையில் மிஞ்சியது பாடை மட்டுமே. பண்ணாகத்து பறை எம்மை முள்ளிவாய்க்கால் வரை பாடையில் ஏற்றியது.

பட்டறிவும் படிப்பறிவும் பல அழிவுகளுக்கு பின் இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலைய கவனத்தில் கொள்கிறது. 77ல் உணர்ச்சிகர பேச்சு. 1983 ன் பின் ஆயுதங்களின் ஆட்சி. இந்திய அமைதிப்படை காலத்தில் உயிரச்சம், வன்னி ஆட்சியில் வால்பிடிப்பு. ஆயுதங்கள் மௌனித்தபின் மகிந்தரின் அழுத்தம் என இருந்த நிலை மாறி புதிய சூழல் உருவாகும் நேரத்தில் இருதேசம் ஒரு நாடு கோசம் உங்களையும் 1977 க்கு பின் நோக்கி தள்ளும் நிலை.

எனக்கு 2 போதாது கஜனும் பத்மினியும் என் பக்கம், 4 வேண்டும் என 2010ல் கேட்டு கிடைக்காததால், தேர்தலில் போட்டியிட்டு யாழ் வாக்காளரை குழப்பி வெத்திலைக்கு 3 யானைக்கு 1 கிடைக்க செய்தவர், மாகாண சபை தேர்தலை பகிஸ்கரிக்க சொல்லி வெத்திலையை முதல்வராக்க முயன்றவர், ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க சொல்லி மகிந்தவை வெல்லவைக்க முன்றவர் தான் இந்த 2 தேசம் 1 நாடு எடுக்க போகும் கஜேந்திர குமார் அவர்கள்.

எப்படி எடுப்பார் ? இந்தியாவை திட்டுகிறார், சர்வதேசத்தை வசை பாடுகிறார். ஐநா விடம் முறையிடுவாராம். ஐநா என்ன தனி வல்லரசா ? போட்டுக் குளப்புகிறார் இந்த லண்டன் பரிஸ்டர். இன்றுவரை 1 வழக்கு கூட எம் இளைஞர்களுக்காக வாதாட இந்த சட்டத்தரணி, ஐ நா வில் வாதாடுவதென்பது உள்ளூரில் உளாத மாடு வெளியூரில் என்ன செய்யும் என்ற நிலை தான். 5 வயது பையன் போல் அம்மாவாணை என சத்தியம் செய்கிறார்.

தேர்தல் காலத்தில் அம்மா வாணை, அப்பா வாணை, அண்ணா வாணை, தம்பி வாணை, அக்கா வாணை தங்கச்சி வாணை, அப்பு வாணை, ஆச்சி வாணை என எல்லோரையும் வாக்குச்சாவடி வரச்சொல்லி வாஞ்சயோடு அழைக்கும் இவர் உங்களை பலிக்கடா ஆக்குவார். புலிகளால் தெரிவு செய்யப்பட்ட இவர்கள், இறுதிக் காலத்தில் கஜேந்திரன் நோர்வேயிலும் பத்மினி லண்டனிலும் இவர் பசிலுடனும் இருந்து புலிகளுக்கு முடிவுரை எழுதினர்.

புலிகள் மீதே சவாரி செய்த இவர்களுக்கு நீங்கள் எம்மாத்திரம். உசுப்பேத்தி உங்களை நடுவீதியில் விடுவார்கள். பேரன் ஜி ஜி பொன்னம்பலம் மந்திரி பதவிக்காக மலையாக தமிழர் வாக்குரிமை பறிப்புக்கு துணை போனார். தந்தை குமார் பொன்னம்பலம் 1977 ல் ஒன்றுபட்டிருந்த கூட்டணியில் இருந்து தமிழ் காங்கிரசை தான் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்ற காரணத்தால் தன்வசப்படுத்தி கூட்டணியை எதிர்த்து யாழில் தோற்றார்.

மகன் 2010ல் தான் கேட்ட ஆசனங்கள் கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்தல் கூட்டமைப்பை விட்டு விலகி தோற்கடிக்கப்பட்டதால் இன்று பொய் தேசியம் பேசி வாக்கு கேட்கிறார். பதவிக்கு பின்னால் ஓடுவது தவிர வேறு செயல் ஒன்றும் அறியாத இவர்கள் தெரிவு செய்வது அழிவுப்பாதை. உரிமைக்கு குரல் கொடுப்பது வேறு பதவிக்கு அடுத்தவரை பலிகொடுப்பது வேறு. இவர்கள் பின்னால் போனால் அன்றைய இளைஞர் பட்ட துன்பத்தை நீங்களும் படவேண்டிய நிலை வரும்.

வெற்றிலையை துப்பிவிட்டு வீணை வாசிப்பவரை விட படு மோசமானவர் அங்கஜன். 10 தலைமுறை இருந்து சாப்பிட கூடிய சொத்து தன தந்தை வைத்திருக்கிறாராம். ஏஜன்சி நடத்தி நாமலுக்கு துதிபாடி யாழ் மேயரை பெண் என்று கூட பாராமல் மயிரில் பிடித்து இழுத்து மண்டையில் சுட எத்தனித்த இவர்களின் கதை உங்களுக்கு தெரியாதா ? பதவிக்கு வருமுன்னே இப்படி என்றால் பதவிக்கு வந்தால் 2 டக்ளசுகளை நீங்கள் பார்ப்பீர்கள்.

மணல் முதல் பல்கலைகழகம் வரை டக்களஸ் ஆடிய அதிகார ஆட்டம் உங்களை அடக்கியாண்ட நிலையை மாற்ற, பங்களிப்பு செய்தவர்கள் ஜனவரி 8ல் வெத்திலைக்கு வாக்களிக்காத எம் மக்களே. இன்று வெத்திலை தனியாகவும் வீணை தனியாகவும் வருகிறது. மகிந்த ஆட்சி அமைத்தால் இரண்டும் அவருடன் இணையும். முன்பு நடந்தவை மீண்டும் இரட்டிப்பாக நடக்கும். உரலின் நிலை மாறி மத்தளத்தின் நிலைதான் நீங்கள் முகம் கொடுக்க போகும் நிலை.

என் ஐரோப்பிய நண்பன் கூறினான் அரசியல் தஞ்சம் பெறுவது மிகக் கடினம். 40லட்சம் கொடுத்து அங்கு வந்து நிராகரிக்கப் பட்டால் மீண்டு வந்து தற்கொலை தான் செய்யவேண்டும் என்று. உங்கள் படிப்பறிவால் உலகெங்கும் செல்லுங்கள். சிலர் பாராளுமன்ற கனவுக்கு பலியாகி மீண்டும் குழப்பம் ஏற்பட்டு கைதிகளாக, அகதிகளாக வாழ்க்கையை தொலைக்காதீர்கள்.

என் 1 வருட ஐரோப்பா வாழ்வில் நான் பல போராளிகளை கண்டுள்ளேன். ஹாட்லி, சென்றல், சென்ஜோன்ஸ், மகாஜனா, யாழ் இந்து கல்லூரிகளில் ஏ எல் இடை நடுவில் விட்டவர்கள், பல்கலைகழக படிப்பை துறந்தவர்கள் விடுதலைக்காய் ஆயுதம் ஏந்தி தம் தலைமகள் மோதலால் திசை தெரியாது ஓடி, மொழி தெரியாத நாடுகளில் முகாம்களில் முடங்கி, இன்று அகதி அந்தஸ்து கிடைத்தாலும், எல்லா வசதிகளையும் அனுபவித்தாலும், ஏதே ஒரு வெறுமை, ஏக்கத்தை அவர்கள் பேச்சில் கண்டேன்.

அண்ணை ஊரில கிடைக்காத எல்லாம் எங்களுக்கு இங்க கிடைக்குது. வீடு கார் எண்டு வசதியா இருக்கிறம். பிள்ளையளை டாக்டர் எஞ்சினியர் எண்டு படிப்பிக்கிறம். எண்டாலும் சமாதானம் வந்தா ஊருக்கு வந்து நல்லூர் கோவிலும், கீரிமலை குளியலும், மொக்கன்கடை புட்டும் காக்கைதீவு கூழும் ஒரு பிடி பிடிக்கவேணும். எங்கட கடைசி காலமாவது எங்கட மண்ணில வாழவேணும் என மனம் விட்டு தம் ஆதங்கத்தை கூறுவார். அதற்க்கான சூல்நிலை இப்போது உருவாகி வருகிறது. அதை சரியாக பயன்படுத்தி உங்களை தக்கவையுங்கள்.

மீட்பர் என நினைத்து உங்களை பலியாக்குபவர் பின் போகாதீர்கள். நரிக்கு நாட்டாமை அதிகாரம் கொடுத்தால் கிடைக்கு 2 ஆட்டை பலி கேட்கும். அந்த நிலைக்கு உங்களை ஆளாக்கதீர். அன்று களமாட போனவர்களை வழிநடத்த தவறிய என் போன்ற பலர் நிம்மதி இழந்து இன்றும் அதை நினத்து பெருமூச்சு விடுகின்றனர். என் மூச்சு நிற்கு முன் பிராயசித்தம் தேடத்தான் உங்களை விழிப்பூட்டுகிறேன்.

இன்று வாக்காளராக வாக்களிக்கும் நீங்கள் சரியான முடிவெடுத்தால் இன்று காணப்படும் சூழ்நிலை அடுத்த 5 வருடங்கள் நிச்சயம் தொடரும். இளைஞர்களான நீங்கள் எந்த அடக்குமுறையும் இல்லாத சூழ்நிலையில் உங்கள் படிப்பை, தொழிலை, பயணத்தை தொடரலாம். சமூகத்தில் இரண்டற கலந்து மக்கள் நல செயற்பாடுகள் மூலம் எதிர்வரும் தேர்தலில் நீங்களே வேட்பாளராக மாறலாம். ஆகஸ்ட் 17 தேர்தல் நீங்கள் தெரிவுசெய்வது 5 வருடங்களின் பின் அது உங்களை தெரிவு செய்யும். கனவு காணுங்கள் மர்கூம் (அமரர்) டாக்டர் அப்துல் காலாம் கூறியது போல.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com