Contact us at: sooddram@gmail.com

 

விரோதத்தை விதைத்தால் சோகம்தான் விளையும்

(மாதவன் சஞ்சயன்)

பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமை தாயக அமைப்பு, அமெரிக்க தமிழர் பாதுகாப்பு அமைப்பின் அனுசரணையில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான அலுவக அறையில் ஏற்பாடு செய்த இறுதி யுத்த சாட்சிகளை பதிவு செய்யும் நிகழ்வில் கலந்துகொண்ட புலித்தேவன், நடேசன், மலரவன் உறவுகளின் கண்ணீர் வாக்கு மூலங்கள் நாகரீக மனித சமூகத்தின் மனச்சாட்சியை நிச்சயம் உலுக்கியிருக்கும்.
காட்டுமிராண்டி சமூகத்தில் தான் எதிரியின் தலையை கொய்து வேல்கம்பில் குத்தி பொது இடத்தில் பார்வைக்கு வைப்பார். தம்மை எதிர்ப்பவர்களை மிரட்டும் செயலாக அந்தக்காலத்தில் அது அமைந்தது.

அதன் பின் ஹிட்லரின் மனிதகுல விரோத செயல்களுக்கு பின்தான் ஜெனிவா ஒப்பந்தப்படி பல யுத்த நியதிகள் சட்டபூர்வமாக கடைபிடிக்க வேண்டும் என்ற விதிகள் சர்வதேசத்தால் முன்மொழியப்பட்டன. அதில் முக்கியமானது யுத்தத்தில் சரணடைவோர் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என்பதே. யுத்தம் தலைவர்களின் முடிவின்படி நடந்தாலும் யுத்தம் புரிபவர் தலைவர்களின் ஆணைக்கு கட்டுபட்டு அதன்படி செயல்படவேண்டியவர்கள் என்பதால் எய்தவன் இருக்க அம்பை நோகக்கூடாது என்பதே அதன் நோக்கம். சரணடைபவர் மனிதாபிமான முறையில் நடத்தபடவேண்டிய விதிகள் அதனால் தான் வகுக்கப்பட்டது.
அரசுகளுக்கு மட்டுமல்ல போராட்ட குழுக்களுக்கும் அது பொருந்தும், பொருந்த வேண்டும். இந்த விதி சரணடைபவருக்கு மட்டுமல்ல கைது செய்யப் படுபவருக்கும் பொருந்த வேண்டும் என்பது மனித உரிமை வாதிகளின் நீண்டகால கோரிக்கையாகும்.

மனிதன் ஒரு அரசியல் மிருகம். அரசியல் காரணங்கள், தேவைகளுக்காகவே யுத்தங்கள் நடத்தப்படுகின்றன. இதன் போது கைது செய்யப்படுபவர், சரணடைபவர் சட்டவிதிகளுக்குட்படாது சுட்டுக்கொல்லப்படும் போதுதான் போராட்டம் திசைமாறுகிறது, அரசியல் பிழைக்கின்றது. உலகெங்கும் காணப்படும் இந்த அராஜகங்கள் எம்மண்ணிலும் விடுதலை போராட்டம் காலத்தில் நடந்தேறியது. மாற்று கொள்கையாளரை கொல்லுதல், சமூகவிரோதி என தாமே தீர்மானித்து மின்கம்பத்தில் கட்டி துப்பாக்கியால் காதில் பூ அல்லது நெற்றியில் பொட்டுவைத்தல், துரோகிகள் என தாம் தீர்மானிப்பவரை அவர் எவ்வளவு பெரிய கல்விமானாக, வைத்தியராக, சமூகசேவையாளராக, பெண்ணியல்வாதியாக இருந்தாலும் நிராயுதபாணிகளான அவர்களை வேட்டையாடிய ஒரு கூட்டத்தின் மத்தியில் தான் நாமும் வாழ்ந்தோம் என்ற கசப்பான உண்மையை எவரும் மறுக்க முடியாது.

எம் விடுதலை போராட்டத்தில் ஆயுதங்களே ஆட்சி செய்தன. அதன் விளைவுதான் நீதி நெறியற்ற படுகொலைகள். அதில் படுகேவலமானது சகோதரப் படுகொலைகள்.
சகல கொலைகளும் கண்டிக்க படவேண்டியவை. அதில் சகோதர படுகொலைகள் சிந்திக்கப்படவேண்டியவை. முதலில் தமக்குள் கொலைகளை இயக்க கட்டுப்பட்டை மீறியதாக தொடங்கி அது சென்னை பாண்டி பஜார் வரை தொடர்ந்தது.

83ம் ஆண்டு கலவரத்தால் திடீரென ஊதி பெரிப்பிக்கப்பட்ட ஆயுத போராட்டத்தில் மக்கள் விடுதலைக்காய் உந்தப்பட்டு, இந்தியா புறப்பட்ட வள்ளங்களில் எந்த இயக்கம் என்பதே தெரியாமல் பயிற்சிக்காக சென்ற பலர் பற்றி அறியக்கிடக்கிறது. புலி, டெலோ அண்ணாக்கள் , ஈபி, ஈரோஸ், புளட் தோழர்கள் என சகோதர வாஞ்சையுடன் தோழமை உணர்வுடன் பிரதேச வேறுபாடோ, அல்லது வேறெந்த ஏற்றத்தாள்வோ இன்றி ஒரே முகாமில் தங்கி ஒரே நோக்கில் செயல்பட்டவரின் நெஞ்சில் மெல்ல மெல்ல விரோதம் விதைக்கப்பட்டது. விளைவு சுழிபுரத்தில் புளட் தலைவரை உளவு பாக்க வந்தவர்கள் என கூறி 5 மாணவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர். தமது முன்னணி தோழர்கள் அமீன், றேகன் போன்றவரை புலிகள் கொன்றபோதும் பொறுமை காத்த ஈபி போலல்லாமல் புலிகள் டெலோ மீது பொங்கி எழுந்து கொன்று குவித்தார்கள்.

சரணடைந்தவர் எப்படி நடத்தபடுவர் என்று எம் சமூகத்துக்கு மட்டுமல்ல எதிரிக்கும் பாடம் நடத்தியவர் புலிகளின் யாழ் தளபதி கிட்டு. கோண்டாவில் புகையிலை தோட்டத்தில் மறைந்திருந்து காட்டிக்கொடுக்கப்பட்ட சிறி சபாரத்தினம் சரணடைந்த போதும் அவரை சுட்டுகொன்றது மட்டுமல்ல அவருடலை மக்கள் பார்வைக்காக கேவலமாக காட்சிபடுத்தினார் கிட்டு. அன்று கொன்றொளிக்கப்பட்ட அவரதும் அவரது உறுப்பினர் உடல்கள் கூட அவர்களின் உறவுகளுக்கு கிடைக்க வில்லை.

 கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள முடியாத, விமர்சனங்களை விரும்பாத ஒரு கூட்டம் தான்தோன்றி தனமாக நடந்தகாலம். எம்மில் பலர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அதை எதிர்த்து குரலெழுப்ப முடியவில்லை. குரல் எழுப்பினால் என்ன நடக்கும் என்பதற்கு யாழ் பல்கலை கழக மாணவனான விஜிதரன் என்ற மட்டக்களப்பு ஆஞ்சநேயர் மரக்காலை உரிமையாளரின் மகன் காணாமல் போனபோது ஈ பி ஆர் எல் எப் நடத்திய அக்கினி தின அமைதி பேரணியின் பின் அந்த அமைப்பு போராளிகளே வேட்டையாடப்பட்டதே சான்றாகும்.

அதே காலத்தில் இவ்வாறன செயல்களை சிலர் கொண்டாடியதும் எம் சமூகத்தின் சாபக்கேடுதான். குறிப்பாக டெலோ இயக்கத்தின் உறுப்பினரை நடுவீதியில் வைத்து கொழுத்தியவர்களுக்கு குளிர்பானம் கொடுத்தவரும் எம்மவரே. மரணத்தை கொண்டாடிய சமூகமாக மனிதம் மரணித்துவிட்ட காட்டுமிராண்டிகள் வாழ்ந்த காலமாகவே அதனை வரலாறு பதிவு செய்தது. வேள்விகளில் மிருகபலி நிறுத்த போராடியவர் காலத்திலேயே மனிதபலியை கொண்டாடிய மனித மிருகங்களும் எம் சமூகத்தில் வாழ்ந்த காலம் அது.
சரணடைந்தவரை மட்டுமல்ல தம்மிடம் பிடிபட்டு கந்தன் கருணை இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணிகளான ஈபி உறுப்பினர்களின் உயிர்களை கிட்டுவின் மீது நடந்த தாக்குதலுக்காக சுட்டுக்கொன்றது அருணா என்ற புலி தளபதி. முன்பு கடல்படையிடம் பிடிபட்டு பூசாவில் இருந்த இந்த அருணாவை கிட்டு தாங்கள் பிடித்து வைத்திருந்த ராணுவத்தினரை யாழ் கோட்டை ராணுவ தளபதி கொத்தலாவையுடன் உறவாடி கைதி பரிமாற்றம் என்ற போர்வையில் விடுவித்த சம்பவமும் அன்று நடந்தது.

இன்று சர்வதேசத்தின் கதவுகளை தட்டும் நிலைக்கு எம்மை நாமே ஆளாக்கி கொண்டோம். ஏனென்றால் விதைத்தவர்கள் நம்மவர், விளைவுகளை அனுபவிப்பவரும் நம்மவரே.
தங்கள் பிள்ளைகளின் சாம்பலை கூட தெருப்புளுதியுடன் கலக்கவிட்ட செய்தி கேட்ட டெலோ போராளிகளின் வெளிமாவட்டத்தில் வாழ்ந்த பெற்றோர், தந்தை போன்று நல் மாணாக்கரை உருவாக்கிய சென்ஜோன்ஸ் அதிபர் ஆனந்தராஜா, சைக்கிளில் சென்று வைத்தியர்களை உருவாக்க துடித்த ரஜனி , கவிதை கனவில் மிதந்த செல்வி, மலையகம் தந்த மருத்துவன் பெஞ்சமின், ஈழக்கனவில் எதிரியிடமல்ல எம்மவரிடமே தம் இன்னுயிர் இழந்த போராளிகள் என எண்ணிலடங்காதவரின் உறவுகளின் கண்ணீர் கதறல் அன்று துப்பாக்கி முனையில் மௌனிக்க செய்தது.

இன்று பூமராங் போல அது அவர்களின் உறவுகளிடமே வந்துவிட்டது. வலியை தந்தவனின் பக்கமே வலி செல்லுபோது இனி இவ்வாறான செயலை கொண்டாடும் கூட்டம் தன்னை திருத்திக்கொள்ளும். துரோகிகள், ஒட்டுக்குழுக்கள், காட்டிகொடுப்போர், கைக்கூலிகள் என யாரை முன்பு சொன்னார்களோ அது இன்று அவர்களுக்கே பொருந்துகிறது.  அடுத்தவர் சோகத்தில் சந்தோசமடையும் சமூககமாக நாம் மாற்றப்பட்டோம். தவறுகளை தட்டிகேட்க பயந்தோம். என்வீடு என்பயணம் என பயணித்து இன்று அரைவாசிப்பேர் அகிலமெல்லாம் அகதிகளாகிவிட்டனர். மிஞ்சியவர்களில் வசதிபடைத்தவர் கொழும்பு தொடர்மாடி வீடுகளில் புலம்பெயர் உறவுகளின் பராமரிப்பில் வாழ. மண்ணில் வாழ்பவர் மட்டும் விடியலுக்காக காத்திருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் பாதித்தது முக்கிய தலைவர்களின் குடும்பங்களை மட்டுமல்ல. புலிகள் தோற்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் கிளிநொச்சியில் இருந்து தென்மராட்சி செல்லாமல் அவர்களுடன் வெள்ளை முள்ளிவாய்க்கால் வரை சென்ற அனைவரையும் தான்.
இன்று அவர்கள் பஞ்சபராரிகளாக நிவாரணத்திற்காக ஏங்கி நிக்கின்றனர். நீதிகேட்டு சர்வதேசத்தின் கதவுகளை தட்டுபவர்கள் இவர்களுக்கும் நிதி உதவி செய்து வாழ்வை தொலைத்த விதவைகளை, உறவுகளை தொலைத்த முதியோரை, அனாதைகளான சிறார்களை பராமரிக்கவும் முன்வர வேண்டும். அப்போது தான் உங்களுக்கு நீதியும் இங்கு வாழும் எம் மக்களின் நிர்க்கதியான நிலைக்கு விடிவும் கிடைக்கும்.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com