Contact us at: sooddram@gmail.com

 

தேர்தல் பரப்புரையில் தூற்றலும் போற்றலும் !?

(மாதவன் சஞ்சயன்)

நாணயத்தின் இருபக்கம் போன்றதே அரசியலில் ஒருவரை போற்றுவதும் தூற்றுவதும். அவர் தமது அணியில் இருக்கும்போது போற்றுவது, மாற்று அணிக்கு சென்றால் தூற்றுவது எனும் அரசியல் அநாகரீகம் கருணாநிதிக்கு பின் தமிழ் நாட்டின் வரவு. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அறிஞர் அண்ணா வழி வந்த கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆரின் சினிமா பிரபலம் கட்சிக்கு பலம் சேர்த்தபோது, அவரை நண்பர் என போற்றிவிட்டு எம் ஜி ஆர் தனக்கு சவாலானபோது, அவரை மலையாளி என தூற்றியது முதல் தொடங்கிய கலாச்சாரம். போராட்டகால பயிற்சி முகாம்களை தமிழ் நாட்டில் வைத்திருந்த போராளிகளையும் அந்த நோய் தொற்றிக்கொண்டது.

பூ உடன் சேர்ந்த நார் ஆகாமல் பன்றி உடன் கூடிய சிறு கன்றாக தம்மை மாற்றிக்கொண்டனர். ஏனென்றால் கொள்கைரீதியில் தான் வெறுத்த காங்கிரசின் தலைவர் காமராஜரை பச்சை தமிழன் என அழைத்த பெரியாரின் பெருந்தன்மையை விடுத்து, கலைஞரின் காழ்ப்புணர்ச்சியை தான் இவர்கள் வளர்த்து வந்துள்ளார்கள். ஒரு அணியாக இணையப்போவதாக ஒவ்வொரு தேர்தலிலும் கூடிப்பேசி பின் கூட்டு ஏற்படாத பின் தமது தேர்தல் பரப்புரைகளில் உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லி சேறு பூசலை செய்து, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிகிறார்கள். அவர்கள் எறியும் கற்களை எடுத்து மீண்டும் அவர்கள் பக்கம் எறிந்தால் நிலைமை என்னாகும் என்பதை எண்ணிப்பார்ப்பதில்லை.

தமக்குள்ளான முரண்பாடுகள் தனிநபர் விமர்சனங்களாக மாறுவது சகஜம். அதில் உண்மைக்கு புறம்பான செய்திகளை புகுத்துவது அநாகரிகம். அதே வேளை தம்மைப்பற்றிய உண்மை செய்திகளை அடுத்தவர் வெளிப்படுத்தினால், அவர்கள் மீது தாக்குதல் நடத்த ஒருகூட்டத்தை வைத்திருந்து தம் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல், அல்லது அதில் உண்மை இல்லை என தம்பக்க நியாயத்தை வெளிப்படுத்தாமல், உண்மையை வெளிப்படுத்தியவரை வசைபாடுவது, தங்கள் தலைவன் தங்ககம்பி உத்தமபுத்திரன் என கூக்குரல் போடுவது பிரபாகரனிசம்.

பிரபாகரனிசத்தை ஏற்றவர்கள் இதைத்தான் ரஜனி திராணகம போன்ற பலருக்கு செய்தார்கள். அந்தப் புலிகளின் செயலை இன்று இவர்கள் வரித்துக்கொண்டு, அடுத்தவரை தூற்ரும் செயலை தாம் செய்வர். ஆனால் தம்மைப்பற்றிய உண்மைகள் வெளிவந்தால் கொதித்து எழுவர். உண்மை சுடும் என்பது இதுதான். இதுவும் ஒருவகை தனி நபர் வழிபாடுதான். அதனால் தான் இதற்கு பிரபாகரனிசம் என பெயரிட்டேன்.

தாம் எதோ காரணங்களால் ஒருவரின் கீழ் இணைந்து இயங்கும் போது அவர் விடும் தவறுகளை அவரின் தவறான நடத்தைகளை அறிந்திருந்தும் தமது நலன் பற்றி சிந்திப்பதால் கண்டும் காணாமல் இருப்பவர்கள் அது வெளிஉலகுக்கு வெளிப்படும் போது பொங்கி எழுந்து அவருக்காக வக்காலத்து வாங்குவதும், தமிழ் நாட்டில் இருந்து இவர்கள் அள்ளிவந்த அசிங்கம்தான்.

கருணாநிதி ஏகபத்தினி விரதன் அல்ல என பேசினால் பொங்கி எழுபவர்கள் எம் தலைவருக்கு மனைவி மற்றும் துணைவிகள் உண்டு என வார்த்தை சிலம்பம் ஆடுவார்கள். ஜெயலலிதா சொத்து குவித்தார் என தீர்ப்பு வந்தால் வீதிக்கு வந்து ஒப்பாரி வைப்பார்கள் ஆனால் அவரின் உண்மையான சொத்து நிலைதெரிந்தாலும் அம்மாவுக்கு என்ன பிள்ளையா குட்டியா அனைத்தையும் அவ மக்களுக்குத்தானே கொடுப்பா என சப்பைக்கட்டு கட்டுவார்கள்.
இங்கும் ஏகபத்தினி விரதர்கள் இல்லை. பலர் ஏகப்பட்ட பத்தினிகளின் விரதர். பிரமச்சாரிகளுக்கு கூட பிள்ளைகள் உண்டு. இரகசிய தாலி வழங்கியவரும் உண்டு. அதை அவர்களுடன் இருப்பவர்களும் அறிவர்.

தலைமைத்துவ விசுவாசம் அதை பகிரங்கப்படுத்தது, ஆனால் கசியவிடும். தலைமையோ அடுத்தவரை பார்த்து அவரிடம் ஜீப்பும் கீப்பும் (இரகசிய சிநேகிதி) இருப்பதாக கூறி தன்செயலை சமூகசேவை எனும் போர்வை கொண்டு மூடி மறைத்து விடும். பொதுச்சொத்து என்சொத்து என தம் பெயரில் தம் உறவுகள் பெயரில் வைத்திருப்பார் ஆனால் அவர்கள் கோடீஸ்வரர்கள் அல்ல.

இவர்களின் இந்த செயலுக்கும் இவர்கள் தமிழ் நாட்டில் பொறுக்கிவந்த வக்கற்ற அரசியல் தான் காரணம். இலவசங்களுக்கும், போடுவதை பொறுக்குவதற்கும் எனவே அங்கு ஒரு கூட்டம் வளர்க்கப்பட்டுள்ளது. வேலைவெட்டிக்கு போகாமல் கூடியிருந்து வம்பளந்துவிட்டு, வட்டம் மாவட்டம் என்போருக்கு ஏவல் செய்து வாழ்க்கையை ஓட்டும் பலரை கண்டு பழகிய பழக்கத்தை இங்கும் கொண்டு வந்துள்ளார்கள்.

போராட்டம் பலரின் படிப்பை கெடுத்தது. ஆயுதகலாசாரம் அவர்களுக்கு மமதையை கொடுத்தது. படிப்பில்லாவிட்டாலும் பிழைப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், மமதையால் தாம் அடக்கியாண்ட நிலையில் இருந்து மீண்டுவரும் மனநிலை அவர்களுக்கில்லை. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும் அவர்களின் அதிகார மமதை அடங்க மறுக்கிறது.
அதிகாரம் பறிபோய்விடக்கூடாது என்பதற்காகவே அடுத்தவர் மீதான வீண் பழி சுமத்தல்கள். அடுத்தவரின் நடவடிக்கைகளை திரிவுபடுத்தி அவர்கள் மீது மதவெறியர்கள், சாதி வெறியர்கள் என புனையப்படும் பொய்யான பரப்புரைகள். கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்தான் என்பதுபோல் அவர் கூறினார், இவர் கூறினார் என் குறிப்பிட்டுமுன்பு நடந்ததாக தாம் சோடித்த சம்பவங்களை நடந்தவைபோல் எழுதுவது தான் இவர்களது அரசியல்.

தன் மக்களுக்கு எது தேவை என்பதை கண்டறிபவன் அதை நிறைவேற்ற அதற்கான அதிகாரத்தை பெறவேண்டும். அதனைப் பெற அவனை தெரிவு செய்யும் அந்த மக்கள் அனுமதி கொடுத்தால் அவன் எந்த அணியிலும் இணையலாம். மக்களுக்காகவே அரசியல் அரசியலுக்காக மக்கள் அல்ல. தாம் வரித்துக்கொண்ட தலைவன் பக்கம் வந்தால் புனிதன், மாற்று அணிக்கு சென்றால் பாவி என பழி சுமத்துவதும் தமிழ்நாடு தந்த பாடம்.

தம்மோடு உறவாக இருந்தவர்களை கூட தக்கவைக்க முடியாதவர்கள் கூட்டணி அமைக்க பல முறை கூடி கதைத்து அதில் ஒருதரப்பு தம்மை முன்னிலைப்படுத்தினால் கூட்டணி ஏற்படா து. அதற்காக அவர்களை மக்களின் வாக்குகளால் தோற்கடிக்க முயலாமல் தேர்தல் பரப்புரைகளில் வார்த்தைகளால் வசைபாடி திட்டித் தீர்ப்பதற்கும் இவர்கள் தமிழ் நாட்டில் படித்த தவறான பாடம்தான் காரணம்.

எதிர் தரப்பினரின் தவறுகளை இயலாமையை விமர்சித்து அநாகரிகமாக வெளிப்படுத்தும் இவர்களுக்கு அவர்களின் நாகரிகமான மறுப்புகளை கூட ஏற்கும் மனநிலை இல்லவே இல்லை. குறைகுடங்கள் அப்படித்தான் இருக்கும்.

மமதை கொண்டவர்கள் மாதங்கள், வருடங்கள், பல தசாப்தங்கள் அரசியலில் இருந்தாலும் அவர்தம் செயல்கள் மாறவே மாறாது. அவர்களின் பட்டறிவும் படிப்பறிவும் (இருந்தால்) பயன்பட அவர்களின் மமதை இடம்கொடாது. மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா.
தம் பக்கத்தில் இருப்பவரின் வஞ்ச புகழ்ச்சிக்கு மகிழ்ந்து அவர்களை மக்கள் முன்னாலும் தம்மை புகழச்செய்து புளகாங்கிதம் அடைவார்கள் இந்த 23ம் புலிகேசிகள். இவர்களின் இம்சை தாங்காமல் அவர்களும் தலைவர் ஒரு மடையன் என சிலேடையாக பேசுவார்கள்.
பின் மடையன் என்றால் மாண்புடையவன் என விளக்கம் சொல்வார்கள் இந்த சொற் சிலம்பமாடிகள்.

முன்பு பெரிய கடைகளின் முதலாளிமார் தம் வீட்டு சூல்நிலைகளால் படிப்பை இடையில் நிறுத்தி உழைத்து முன்னேறி முதலாளியானவர்கள். தமது கணக்கு பிள்ளையாக படித்தவரை வேலைக்கு வைத்திருப்பார். முதலாளி வரும்போது அவர் மற்றவரிடம் மூனா வாறார் என்பார். மூனா என்றால் முதலாளி மட்டுமல்ல முட்டாள் என்றும் இரட்டை அர்த்தப்படும். அதேபோல் இப்போது தேர்தல் பரப்புரைக்காக வரிந்து கட்டிவரும் கவிஞர்களும் பாய்ந்து பாய்ந்து பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்கள். ( இடம் விட்டு இடம் பாய்தல் அவர்கள் மூதாதையர் வழக்கம்) கவி என்பதற்க்கு குரங்கு என்றும் அர்த்தம் உண்டு.
(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com