Contact us at: sooddram@gmail.com

 

அனுராதபுரத்தில் மீண்டும் பிரபாகரன் அலை !

(மாதவன் சஞ்சயன்)

செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதுபோல் மரணத்தின் பின்பும் மகிந்தரின் வாக்கு வங்கியாக பிரபாகரன் அவருக்கு பயன்படுகிறார். தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை அனுராதபுரத்தில் ஆரம்பித்த மகிந்த பல தடவைகள் பிரபாகரனை நினைவு கூர்ந்தார். எனது தகவல் சரி எனின் புலிகள் நடத்திய எல்லாளன் தாக்குதல் நடவடிக்கைக்கு பின் பிரபாகரன் அனுராதபுரத்தில் நினைவு கூரப்பட்டது அந்த மேடையில் தான்.

புலிகளுக்கும் அனுராதபுரத்துக்கும் அவர்களின் நடவடிக்கை மூலம் தொடர்பு உண்டு. அவர்களின் பிரச்சாரங்களில் பிரபாகரனை அனுராதாபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்ட எல்லாளனின் ஆசீர்வாதம் பெற்றவராக குறிப்பிடுவர். அதை நிரூபிக்க பிரபாகரின் தந்தை வேலுப்பிள்ளை அனுராதபுரத்தில் அரச கடமை புரிந்தபோது மாலை வேளைகளில் கருவுற்றிருந்த தன் மனைவியுடன் காலாற நடந்தது விட்டு, எல்லாளன் நினைவு மண்டபத்தில் சிறிது நேரம் அமர்வார்களாம். அப்போது கருவாக இருந்தவர் பிரபாகரன். இலங்கையை பல தசாப்தங்கள் ஆண்ட வீர தமிழ் மன்னன் எல்லாளனின் நினைவுமண்டப காற்றை சுவாசித்ததால் தன் வயிற்றில் இருந்த கருவுள்ளும் வீரம் விதைக்கப்பட்டிருக்கலாம் என பின்னாளில் பார்வதியம்மாள் கூறியதாக அவர்களின் தலைவனை போற்றும் பதிவுகளில் பார்க்கலாம்.

ஜே ஆர் முரண்டு பிடிக்க அவரை பேச்சுவார்த்தைக்கு உடன்பட செய்ய இந்திய றோ உளவு அமைப்பு தாக்குதல் நடத்த கொடுத்த திட்டத்தை ஏனைய இயக்கங்கள் பலகாரணங்களால் செயல்படுத்த மறுக்க, புலிகளின் மன்னார் தளபதி விக்டர் ஒஸ்கார் தலைமையில் புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மர கிளை விருட்சம் பூஜிக்கப்படும் புனித நகரும், மக்கள் அதிகம் கூடும் பேரூந்து நிலையமும் போகும் வழிகளில் காணப்பட்ட பாதசாரிகளும், துப்பாக்கி ரவைகளால் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான அப்பாவிகள் அழிக்கப்பட்டதும் அனுராதபுரத்தில் தான்.

வன்னி மீது அரச வான்படை தாக்குதல்கள் தீவிரமாக நடத்தப்பட்ட வேளை அதன் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர புலிகள் வகுத்த திட்டம் வான்படைத்தளத்தை தாக்கி, தாக்குதல் விமானங்களை அழித்தல். அதற்காக சிறப்பு ஊடுருவி தாக்கும் படையணி தயாரானது. எல்லாளனின் பெயலில் நடத்தப்பட்ட அந்த தற்கொலை தாகுதலில் 14 க்கு மேற்பட்ட தாக்குதல் விமானங்கள், ஹெலிகளை அழித்து விட்டு இருபதுக்கு மேற்பட்ட புலிப் போராளிகள் வீர மரணம் அடைந்தனர். அதுவும் நடந்தது அனுராதபுரத்தில் தான்.

பிரபாகரனுக்கு மட்டுமல்ல மகிந்தவுக்கும் அனுராதபுரம் ஒருவகையில் மூதாதையர் வெற்றிகண்ட பூமிதான். எல்லாளனை தோற்கடிக்க படைதிரட்டி வந்து வென்ற துட்டகைமுனு பிறந்த றுகுணை தான் மகிந்த பிறந்த இடமும். தன்னை றுகுணுவின் மைந்தன் என பெருமைப்படுபவர் மகிந்த. தன்னை துட்டகைமுனுவின் மறு அவதாரம் என புகழ்வதை விரும்புபவர். வரலாற்றில் துட்டகைமுனுவின் தளபதி பெயர் கோட்டாபய. ஜனவரி 8 வரை மகிந்தவின் பாதுகாப்பு செயலாளராக இருந்தவரின் பெயரும் கோதடாபய. என்னே ஒற்றுமை.

துட்டகைமுனு அன்று எல்லாளனை வென்ற பூமியில் நின்று, எல்லாளனின் வாரிசு என புலிகளால் போற்றப்படும் பிரபாகரனை தான் வென்றதாக இன்று முழக்கமிடுவதும் அனுராதபுரத்தில் தான். அமைதிப்புயலில் அரசுரிமையை இழந்தவர் தன் மீள் அரசியல் பிரவேசத்தை அனுராதபுரத்தில் ஆரம்பிக்கிறார். அதற்கு அவர் அழைப்பது, நினைப்பது, மக்களுக்கு நினைவூட்டுவது பிரபாகரனை.

இனித்தொடரும் அவரின் தேர்தல் பிரசார கூட்டங்களில் எல்லாம், தெற்கின் மூலை முடுக்கெல்லாம் பிரபாகரன் நினைவு கூரப்படுவார். புலிவருது புலிவருது என கூச்சலிட்டே இந்த ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முயல்வர். பிரபாகரனை கொன்று கருமாதி பண்ணியதை கூட காட்டாமல் மூடி மறைத்தவர்கள், இப்போது தேர்தலில் வாக்குப்பெற புதைத்திருந்தால் தோண்டியும் எரித்திருந்தால் சாம்பலை அள்ளிக்கொண்டும் மேடைதோறும் அகோரிகளாக (காசியில் பிணங்களோடு வாழ்பவர்) ஆட்டம் போடப்போகிறார்கள். இனவாதம் தான் இவர்களின் அரசியல் பிழைப்பு. பிரபாகரன் தான் பேசுபொருள். தமிழர் தரப்பிலும் இதுவே பிழைப்பிற்கான கதை. இங்கும் பிரபாகரன்தான் பேசுபொருள். ஹிட்லரை வைத்து நாஜிகள் பிழைப்பு நடத்துவது போல்.......?
(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com