Contact us at: sooddram@gmail.com

 

சகடமுனியின் விகடசங்கடம் – 3

காணாமற் போனோர் தொடர்பான ஆணைக்குழு பற்றி..

(முனிதாசபூதன்)

செய்தி: கடந்த யுத்தகாலத்தின் போது வடக்கு கிழக்கில் காணாமற் போனோர் தொடர்பான ஒரு விசாரணை ஆணைக்குழுவை அமைக்கும்படி ஜனாதிபதி அவரது செயலாளர் லலித் வீரதுங்காவுக்கு உத்தரவிட்டுள்ளார். திரு லலித் வீரதுங்கா அவர்கள் கடந்தகால அநுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளல் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கமிட்டிியின் பிரதான உறுப்பினருமாவார். இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் பிரதம பேச்சாளரான திரு சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கருத்துக் கேட்டபோது அவர் இந்த ஆணைக்குழுவை தமிழர்களோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அங்கீகரிக்க மாட்டாது என அறிவித்திருப்பதாக இலங்கையின் பிரதான ஆங்கில வாரப் பத்திரிகைகளில் ஒன்றான சண்டே லீடர் செய்தி வெளியிட்டுள்ளது. திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் இந்த ஆணைக்குழுவில் யார் யார் நியமிக்கப்படப் போகிறார்கள் என தமக்குத் தெரியும் என்றும் அது இராணுவ அதிகாரிகளையோ அல்லது அரசியற் கையாட்;களையோ கொண்டதாகத்தான் இருக்கும் என்றும் ஆரூடம் கூறியுள்ளார். அத்துடன் கடந்த இரண்டு வருடங்களாக இதில் அக்கறை காட்டாத அரசாங்கம் இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வரவிருக்கும் வேளையில் எதற்காக இந்த அரசாங்கம் அக்கறை காட்டுகிறது என கேள்வியும் எழுப்பியுள்ளார். மேலும் அரசாங்கம் வீணான செலவுகள் செய்து இந்த ஆணைக்குழுவை அமைத்து காலத்தை ஏன் விரயம் செய்ய வேண்டும் என்றும் அவர் அக்கறையோடு கேள்வியெழுப்பியுள்ளதையும் அச்செய்தி தெரிவிக்கின்றது

முனியின் சங்கடம்: கடந்தகால அநுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றும்படி சர்வதேசநாடுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டித்தான் இவர்கள் டெல்லி, வாஷிங்டன், லண்டன், ஜெனீவா எனச் சென்று வேண்டிக் கொண்டார்கள். அதை அரசாங்கம் செய்யவில்லை என்று அடிக்கடி குறையும் சொன்னார்கள் குற்றமும் சாட்டினார்கள். இப்போது ஜனாதிபதி காணாமற் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கென ஒரு விசாரணை ஆணைக்;குழுவை அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளதை எதிர்க்கிறார்கள். கற்றுக்கொள்வதற்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு அமைக்கப்பட்ட காலத்திலும் இப்படித்தான் இவர்கள் பயனற்றது முறையற்றது எனக் கூறினார்கள். அந்த ஆணைக்குழுவின் முன்னால் சென்று கடந்த காலங்களில் நடந்தவைகள் தொடர்பாக தமது வாக்குமூலங்களைப் பகிரங்கப்படுத்துவதற்குத் தயாராக இல்லாமல் அதனைப் புறக்கணித்து, தமது புறக்கணிப்புக்கான நியாயங்களையும் கூறினார்கள். பின்னர் அதே ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றும்படி கேட்டு நாடுநாடாகத் திரிந்தார்கள். தாங்கள் சொன்னபடி கேட்டுத்தான் அமெரிக்கா ஜெனீவாவுக்கு திர்மானத்தைக் கொண்டு வந்தது இந்தியா தம்மைக் கேட்டுததான் அதற்கு ஆதரவளித்தது என தமது சர்வதேச முக்கியத்;துவம் வாய்ந்த வல்லமைகளையும் யாழ்ப்பாணப் பத்திரிகைகள் மூலமாக அனைத்து உலக சமூகங்களுக்கும் சொல்லிக் காட்டி தமது தீர்க்கதரிசனம் பற்றி பெருமிதம் கொண்டார்கள்.

ஒரு விடயம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை அமைக்கும் எந்தவொரு அரசாங்கமும் தனக்குச் சரியானவர்கள் எனப்படுபவர்களை நியமிப்பதே வழக்கம். இது பொது அறிவு. நாளை இவர்கள் அமைக்கப் போகும் வடக்கு மாகாணசபை அரசாங்க ஆட்சியில் நடக்கப்போகும் ஊழல்கள் மற்றும் நிதிமோசடிகள் தொடர்பாகவோ அல்லது வேறு பாரதூரமான விடயங்கள் காரணமாகவோ ஒரு விசாரணை ஆணைக்;குழுவை அமைக்கும்படி நெருக்கடி ஏற்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களுக்குச் சரியெனப்பட்டவர்களைத் தானே நியமிக்கப்போகிறார்கள்.

இவர்கள் கூறுவதுபோல இன்றைய சூழலில் சர்வதேச சமூகத்துக்குக் காட்டவே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட உள்ளது என்று பார்த்தாலும் இராணுவ அதிகாரிகளையோ அல்லது அரசியற் கையாட்களையோ நியமிக்கும் அளவுக்கு அரசாங்கம் முட்டாள்த்தனமாக நடந்து கொள்ளப்போவதில்லை என்பதுவும் சாதாரண பொது அறிவுஅதில்; இளைப்பாறிய முன்னாள் நீதிபதிகளையோ அல்லது பொதுவாக பகிரங்கத்தில் நன்மதிப்பைப் பெற்ற பிரமுகர்களையோதான் அரசாங்கம் நியமிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆணைக்குழுவை அரசாங்கம் எதற்காக இந்த நேரத்தில் அமைக்க உள்ளது அதன் மூலம் அரசாங்கம் எதனைச் சாதிக்க உள்ளது என்ற கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட காணாமற் போன தங்களது பிள்ளைகள் பற்றியும் கணவன்மார் பற்றியும் தந்தையர் பற்றியும் கடந்த பல ஆண்டுகளாக எந்தத் தகவலும் தெரியாமல் கண்ணீரில் வாழ்ந்து கொண்டிருக்கும் தாய் தந்தையர்கள் பெண்கள் மற்றும் பிள்ளைகள் தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கேட்டு  இந்த ஆணக்குழுவில் தாமே நேரடியாகக் குரலெழுப்ப முடியும். தாங்கள் அறிந்த கட்டம் வரை தங்கள் உறவுகளைக் கடத்தியவர்கள் யார்? காணாமற் பண்ணியவர்கள் யார்? அவை தொட்ர்பாக தம்மால் சந்தேகிக்கப்படுபவர்கள் யார்? என்பதையெல்லாம் பகிரங்கமாக இந்த ஆணைக்குழு மூலம் உலகற்pய வெளிப்படுத்த முடியும.

அதனால் வெளியிடப்படும் தொகுப்பாவணம் அல்லது இந்த ஆணைக்குழுவின் முன் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்தும் சாட்சிய வாக்குமூலங்களைத் தொகுப்பவர்களால் வெளிக்கொணரப்படும் ஆவணங்கள் ஒரு பெரும் அவலத்தின் உண்மைகளை வெளிக்கொண்டு வருபவையாக அமையும். எனவே அப்படியான ஒரு சந்தர்ப்பத்தை எதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டும்@ தமிழர்கள் ஏன் அதனை அங்கீகரிக்கக் கூடாது@ பாதிக்கப்பட்டவர்கள் அந்த ஆணைக்குழு முன்னால் ஏன் தமது சாட்சியங்களை அளிக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோர வேண்டியதன் அவசியம் என்ன என்று தெரியாமல் தலை சுற்றி நிற்கிறது சகடமுனி.

உண்மையில், காணாமற் போனோர் தொடர்பாக அரசாங்கத்திடமுள்ள விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் எனக் கோருகின்ற அதேவேளை ஏற்கனவே பதின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் கிழக்கு மாகாணத்தில் பதினொரு மாகாணசபை உறுப்பினர்களையும் உள்ளுராட்சி மட்டத்தில் ஐந்நூறு பேருக்கு மேல் உறுப்பினர்கள் வேட்பாளர்கள் எனவும்  கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தம் முடிந்து கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் தன்சொந்த முயற்சிகளின் மூலம் வடக்கு கிழக்கில் கடந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் இடம் காலம் மற்றும் சம்பவங்கள் தெரிந்தவர்கள் தரும் விபரம் என முழுத் தகவல்களையம் திரட்டி ஒரு பேராவணத்தை வெளிக் கொண்டு வந்திருக்க முடியும். தாம் வாக்கு வேண்டிய மக்களுக்காகச் செய்ய வேண்டியதைச் செய்யாதது மட்டுமல்ல இப்போது அப்படியொரு ஆவணம் வெளிவருவதற்கு வாய்ப்பைத்தரக்கூடிய ஒரு ஆணைக்குழுவையும் வேண்டாம் என்கிறார்கள்.

சிலவேளை இந்த ஆணைக்குழு ஊடாக வெளிவரும் பகிரங்க சாட்சியங்களால் புலிகளாற் கடத்தப்பட்டுக் காணாமற் போன விடயங்களும் விபரங்களும் உலக வெளிச்சத்துக்கு வந்து விடுமோ என்று திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் கவலை கொள்கிறாரா? அல்லது காணாமற் போனோர் தொடர்பாக பொத்தாம்பொதுவாக அரசுக்கு எதிராக நாலு சுலோகங்களை பத்து மட்;டைகளில் எழுதி ஏந்தி அவ்வப்போது ஐந்து மணித்தியால உண்ணாவிரதம் நடத்தும் இவர்களுக்கு அந்த சுலோக மட்டைகள் இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கப் பின்னர் பயனற்றுப் போய்விடுமே என்று கவலை கொள்கிறாரா என்று கேள்விக்கு மேல் கேள்விகள் எழும்ப ஒன்றும் புரியாமல் நிற்கிறது சகடமுனி.

(நன்றி: தேனி இணையம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com