Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 18)

(அ.ஆனந்தன்)

இலங்கை-இந்திய தமிழரின் ஒரே மாதிரி நிலைகள்

விடுதலை பெற்ற காலத்திலேயே ஓரளவு மூலதன திரட்சி பெற்றவராக தமிழ் முதலாளிகள் இருந்தனர். மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் லேவாதேவி செய்ததன் மூலம் அவர்களுக்கு கிடைத்த வட்டி மூலதனமும் இந்த மூலதனத் திரட்சியின் ஒரு குறிப்பிடதக்க பங்கினை ஆற்றியது. அம்மூலதனத்தைக் கொண்டு விடுதலைபெற்ற இந்தியாவில் அவர்கள் புதிதாக ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ அரசு உருவாக்கிக் கொடுத்த ஆதார வசதிகளையும் சலுகைகளையும் பயன்படுத்தி வளரத்தொடங்கினர். அவ்வாறு வளர்ந்து கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு ஒரு அச்சம் தவிர்க்க முடியாமல் தோன்றியது. அதாவது தங்களைக் காட்டிலும் பெரும் மூலதனக் குவியலைக் கொண்டிருக்கக்கூடிய வடஇந்தியாவைச் சேர்ந்த மார்வாரி முதலாளிகளின் மூலதனப் படைஎடுப்பினால் தங்களது நலன் பாதிக்கப்படுமோ என்று அஞ்சினார்கள்.

மற்ற தேசிய இனங்களோடு ஒருங்கிணைந்து வெள்ளையரை எதிர்த்த போராட்டத்தில் தமிழ்மக்கள் ஈடுபட்டு வெள்ளை ஏகாதிபத்தியத்தை நாட்டைவிட்டு விரட்டும்வரை இந்த மார்வாடி முதலாளிகளின் படை எடுப்பால் தங்களது நலன் பாதிக்கப்படும் என்ற எண்ணம் அவர்களுக்கு பெரிதாக தோன்றவில்லை.

ஏனெனில் அந்நிய அரசாங்கம் தொழில் ரீதியாக அனைத்து சுதேசி முதலாளிகளின் வளர்ச்சிக்கும் கொடுத்திருந்த வாய்ப்புகளே குறைவு. ஆனால் விடுதலைபெற்ற பின் சுதேசி அரசாங்கம் ஏற்பட்ட சூழ்நிலையில் அந்த அரசாங்கம் பெரும்பான்மை ஹிந்தி மொழி பேசும் பகுதிகளை சேர்ந்த முதலாளிகளுக்கு சாதகமானதாக ஆகிவிடும் என்ற அச்சம் அவர்களிடையே தோன்றியது. அதன் விளைவாகவே 1952 வாக்கில் அரசியல் அரங்கில் புதிதாக முளைத்த திராவிடக் கட்சிகளுக்கு விடுதலைப் போராட்டத்தில் அவர்களுக்கு ஒரு இம்மியளவு பங்குகூட இல்லாதிருந்தபோதிலும் தமிழ் முதலாளிகளின் பிரச்சார சாதனங்கள் முக்கியத்துவம் கொடுத்தன. பல்வேறு தியாகங்களை விடுதலைப் போராட்ட காலத்தில் செய்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் அத்தகு பிரச்சார சாதனங்களால் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டன.

பிராந்திய முதலாளிகளின் இயக்கம்

அத்தருணத்திற்கு ஏற்ற விதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது போன்ற முழக்கங்களை முன்வைத்தது. படிப்படியாக அந்த முழக்கங்களை பெரிதாக்கி தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்தனர். அதை அக்கட்சியின் தலைவர்களுக்கே உரித்தான அடுக்குமொழியில் அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்று அறிவித்தனர். இவையனைத்தையும் தங்களுக்கு ஆதரவாக பிராந்திய முதலாளிகளின் ஆதரவு பெருகிவருவதை மனதிற்கொண்டே செய்தனர்.

தமிழ் பிராந்திய முதலாளிகளின் பார்வையோ அவர்களின் குறிக்கோளோ மிகவும் திட்டவட்டமாக இருந்தது. அதாவது அப்போது அகில இந்திய அளவில் பெரிதாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவக் குடும்பங்கள் பதினெட்டு இருந்தன என்றால் அதில் 6 பேர் பார்சி இனத்தைச் சேர்ந்த முதலாளிகளாக இருந்தனர், 6 பேர் மார்வாடி வகுப்பை சேர்ந்த முதலாளிகளாக இருந்தனர். எஞ்சியுள்ள அறுவரில் இருவர் தமிழ் முதலாளிகளாக இருந்தனர். இந்த இரு முதலாளிகளுக்கும் இவர்களின் உற்பததி பொருள்களுக்கு இந்தியா முழுவதும் சந்தை இருந்தது.

எனவே தங்களுக்கு ஆதரவாக முழக்கமிடும் சக்திகள் தீவிர, அதிதீவிர முழுக்கங்களை முன்வைத்த போதெல்லாம் அவற்றை எவ்வாறு தங்களது அகில இந்திய முதலாளிகளுடன் பேரம்பேசுவதற்கான வலுவைக் கூட்டிக்கொள்வதற்காக பயன்படுத்தமுடியும் என்று பார்பதிலேயே கண்ணும்கருத்துமாக இருந்தனர். அவர்களது நிறுவனங்களும் தங்களது வளர்ச்சி குறித்த ஆவல் மற்றும் வேட்கையுடன் இருந்தன. அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் பெருகிவளர்ந்து வந்த பொது மற்றும் தொழில்நுட்ப கல்விகற்றோர் எண்ணிக்கையாகும். தொழில் வளர்ச்சியில் அவர்கள் பெருமுனைப்பு காட்டியதற்கு வேறொரு காரணமும் உண்டு அதாவது இங்கு வடஇந்தியாவில் ஓடுவதைப்போல் வற்றாத ஜீவநதிகள் எவையும் ஓடவில்லை. எனவே குறைந்த கூலிக்குக் தங்கள் ஆலைகளில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பர் என்பதையும் பயன்படுத்த நினைத்தனர்.

இந்த நிலையில் தனிநாடு கோரிக்கை அவர்களுக்கு கூடுதல் வலிமையை அகில இந்திய ஆட்சியாளர்களுடன் பேரத்தில் ஈடுபடுவதற்கு வழங்கினாலும் உண்மையாகவே தனிநாடு என்பது ஏற்பட்டுவிட்டால் தங்களது மூலதனப்பரவல் தளம் சுருங்கிவிடும் என்றும் அவர்கள் எண்ணினர். இந்நிலையில்தான் தனிநாடு கோரும் கட்சிகள் தடைசெயயப்படும் என்று அன்றைய பிரதமர் நேரு அறிவித்தார். அவர் அறிவித்த உடனேயே எந்தவகையான எதிர்ப்பையும் காட்டாமல் தங்களது தனிநாடு கோரிக்கையை தி.மு.க. கைவிட்டது.

தி.மு.க. இவ்வாறு பிராந்திய முதலாளிகளின் ஆதரவையும் பின்பலத்தையும் பெற்று படிப்படியாக வளர்ந்து வந்த போதிலும் அந்த ஆதரவு வெளிப்படையாக தலைகாட்டி உறுதிப்பட்டது இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரின் போதுதான். அது சாதாரண மக்களாலும் மாணவர்களாலும் தமிழ்நாட்டின் மீதான கலாச்சார படைஎடுப்பு என்று கருதப்பட்டது. உண்மையில் ஆங்கிலத்தை இணைப்பு மொழி ஸ்தானத்தில் இருந்து அகற்றி அவ்விடத்தில் இந்தியைக் கொண்டு வருவதற்காகவே மத்திய அரசின் அதுகுறித்த ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அகற்றப்படவிருந்த ஆங்கிலம் பிரதானப்படுத்தப்படாமல் இந்தி திணிப்பு தமிழ் மொழிக்கு எதிரான ஒன்று என்ற சித்திரமே முன்வைக்கப்பட்டது.

அதன் விளைவாக பிராந்திய முதலாளிகளின் முழு ஆதரவுடன் தி.மு.க. 1967ல் ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் பிராந்திய முதலாளிகளின் சுதிக்கு ஏற்ற விதத்தில் தனது தாளத்தை மாற்றி மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று மாறிமாறி வாய்ப்பந்தல் போட்டு தனது நாடாளுமன்ற அரசியலை தி.மு.க. நடத்திக் கொண்டுள்ளது.

அது மட்டுமல்ல தற்போது ஒரு புது பார்முலாவே உருவாக்கப்பட்டு விட்டது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்றால் எந்தக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சியோடு உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறதோ அக்கட்சியே வெற்றிபெறும் என்பதே அந்த பார்முலாவாகும். இந்த அடிப்படையிலேயே லல்லு, முலாயம் போன்றவர்களைப் போல் அல்லாமல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸின் உண்மையான ஸ்தாபன வலிமைக்கு பொருத்தமில்லாத விதத்தில் அதிக இடங்களை தி.மு.க. அக்கட்சிக்கு வழங்கியுள்ளது. இது எதை கோடிட்டு காட்டுகிறது என்றால் பிராந்திய முதலாளிகளின் மூலதனப்பரவல் ஏற்படுவதற்கு ஏற்ற சூழலை நிலவச் செய்வதே பிராந்திய முதலாளிகளின் ஆதரவையும் பின்பலத்தையும் பிராந்திய கட்சிகளுக்குப் பெற்றுத்தரும் என்ற சூழலையே விளக்குகிறது.

ஏறக்குறைய இதைஒத்த நிலைதான் இலங்கையிலும் உள்ளது. தமிழர் விடுதலை முன்னணி (டி.யு.எல்.எப்) நாடு முழுவதும் விரவிக் கிடக்கக்கூடிய தமிழ் மக்களின் நலனை மனதிற்கொண்டும் தமிழ் வியாபாரிகள் மற்றும் கல்விகற்ற அலுவலர்கள் அவர்களது வேலைவாய்ப்பை கருத்திற்கொண்டும் இதைஒத்த அதாவது ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட ஒரு சுயாட்சி அமைப்பை ஏற்படுத்துவதே தமிழ் மக்களின் நலனுக்கு குறிப்பாக தமிழ் முதலாளிகளின் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்ற விதத்திலேயே செயல்பட்டது.

ஆனால் சிங்கள ஆட்சியாளர்களின் பல்வேறு அப்பட்டமான தமிழ் விரோத பிளவுவாத நடவடிக்கைகளால் இளைஞர்களும் மாணவர்களும் வெகுண்டெழும் சூழ்நிலை அங்கு உருவானது. அந்நிலையில் ஆயுதம் தாங்கிப்போராடும் நிலைக்கு வந்துவிட்ட குழுக்களின் கைக்கு தமிழ் மக்களின் அரசியல் ஆதரவு சென்றுவிட்டது. டி.யு.எல்.எப் போன்ற அமைப்புகள் உருவான பல்வேறு நல்லதருணங்களை பயன்படுத்தி தமிழ் இனப்பிரச்னைக்கு ஒரு சரியான தீர்வினை காணத்தவறியதும் அதன் பின்னடைவிற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

மேலும் முதலாளித்துவ அரசியலை ஆட்டிப்படைக்கும் பதவி மோகம், பதவிக்காக சந்தர்ப்பவாத நிலைகள் எடுப்பது, பதவிகளைப் பயன்படுத்தி பொருள் ஈட்டுவது போன்ற காரியங்களில் எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளைப் போலவே தமிழர் விடுதலை முன்னணியும் ஈடுபட்டது. அவற்றில் அவ்வமைப்பு ஈடுபட்டதும் அது விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகளிடம் அரசியல் உத்வேகத்தை இழந்து நின்றதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

(தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com