Contact us at: sooddram@gmail.com

 

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 6)

(நேசன்)

சுந்தரம் படுகொலை: " புதியபாதை" யின் முடிவல்ல

1982 ஜனவரி 02ம் திகதி யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் "புதியபாதை" பத்திரிகையின் அச்சுவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் "புதியபாதையின்" ஆசிரியர் சுந்தரம்(வலிகாமம் மேற்கு, சுழிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) தமிழீழ விடுதலைப் புலிகளால் கோழைத்தனமாக பின்னாலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டார். சுந்தரத்தின் கொலையின் பின்னரே தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடுவதாக கூறிய தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடும் ஏனைய குழுக்களை "எதிரிகளாக" பகிங்கரமாக பிரகடனப்படுத்தி அரசியல் படுகொலைகளை நடத்திய "புதிய அத்தியாயம்" ஒன்று ஆரம்பித்தது.. சுந்தரத்தின் படுகொலையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தியிருந்தனர்.

(1) தமிழ்மக்களின் போராட்டத்தை முழுமையாக குத்தகைக்கு எடுத்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகள் தான்.

(2) ஒரு மனிதனுடைய எந்தவிதமான அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் (பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம்) தமிழீழ விடுதலைப் புலிகள் மதிக்கப் போவதில்லை.

சுந்தரத்தின் படுகொலையின் பின் "புதியபாதை" யை தொடர்ந்து வெளிக்கொணர்வதில் புளொட் பல்வேறு நெருக்கடிகளையும் முகம் கொடுக்க நேர்ந்தது. சுந்தரத்தினுடைய பணியை யார் தொடர்வது என்பது ஒரு கேள்வியாக எழுந்தது. அரசபடைகளின் அச்சகங்கள் மீதான கண்காணிப்பு, அச்சகங்களை சுற்றிவளைத்து சோதனையிடுதல் ஒருபுறமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல் மறுபுறமுமாக இருந்ததால் அன்றைய நிலையில் "புதியபாதை" யின் தொடர்ச்சியான வருகை தடைப்பட்டிருந்தது. 1983 யூலை இன அழிப்பைத் தொடர்ந்து " புதியபாதை" யின் தேவை உணரப்பட்டதால் மீண்டும் " புதியபாதை" யாழ்ப்பாணத்தில் அச்சேறியது. தமிழீழ விடுதலைப் புலிகள் சுந்தரத்தை கொலை செய்வதன் மூலம் எதைச் சாதிக்க நினைத்தார்களோ அது நடைபெறவில்லை. 1983 யூலைக்கு பின் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து

" புதியபாதை" யை வெளிக்கொண்டு வருவதில் முன்னின்று உழைத்தவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக சத்தியமூர்த்தி, கண்ணாடிச் சந்திரன், திருகோணமலை பார்த்தன், யாழ்ப்பாண பல்கலைக்கழக திருமலை கேதீஸ்வரன், கொக்குவில் கிருபா ஆகியோர் ஆவர். மத்தியகுழு உறுப்பினரான ராமதாஸ், புளொட்டின் நீண்டகால உறுப்பினரான உரும்பராய் ராசா, குரு(கல்லுவம்) போன்றோரும் "புதியபாதை" வெளிவர பல்வேறு உதவிகளைச் செய்தவர்களாவர். இந்தக் காலப்பகுதியில் காந்தன் (ரகுமான் ஜான்) தள அரசியலுக்கு பொறுப்பாகவும் பார்த்தன் (ஜெயச்சந்திரன்) இராணுவத்துக்கு பொறுப்பாகவும் செயல்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் அரசபடைகளின் அச்சகங்கள் மீதான தேடுதல் நடவடிக்கைகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்ததால் பிற்பட்ட காலங்களில் வீடுகளில் வைத்தே "புதியபாதை" அச்சாகிக் கொண்டிருந்தது. 1984 மே வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த "புதியபாதை" நெருக்கடிகள் காரணமாக (முன்னணித் தோழர்களின் கைதுகள், மரணங்கள்) பின்பு சென்னையில் அச்சடிக்கப்பட்டது.

யூலை 1983 இற்குப் பின் இலங்கையின் இனப்பிரச்சனை என்பது வெறுமனவே இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக மட்டுமல்லாது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு கவலைக்குரிய விவகாரமாகவும், இந்திய அரசைப் பொறுத்தவரை அவர்கள் நலன்களின் "அக்கறைக்குரிய" விவகாரமாகவும் காணப்பட்டது. இதனால் இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்தியாவின் தலையீட்டுக்கான சாத்தியப்பாடுகள் உணரப்பட்டது.

வங்கதேச விடுதலைப் போராட்டத்தின் போதும், வங்கதேசப் பிரிவினையின் போதும் இந்திய அரசு செயற்பட்ட விதம் குறித்தும், வங்கதேசப் பிரச்சனையை தனது நலன்களுக்கு பயன்படுத்துமுகமாக வங்கதேசப் போராளிகள் மீது தனது செல்வாக்கைப் பிரயோகித்தது குறித்தும், இறுதியில் வங்கதேசப் பிரிவினையின் பின் உண்மையான தேசபக்தர்களையும் புரட்சியாளர்களையும் சிறைகளில் அடைத்து தூக்கிலிட்டதுமான வங்கதேசத்தின் படிப்பினைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளிக்கொண்டு வருவதென்று அன்றைய புளொட் மத்தியகுழுவின் முடிவின்படி ” வங்கம் தந்த பாடம்” என்ற சிறிய கையடக்கத் தொகுப்பு 1983 புரட்டாதி மாதம் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளியானது. அன்று இதை வெளிக்கொண்டு வந்ததன் நோக்கம் வங்கதேசப் பிரிவினையின் போது ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து பெற்ற படிப்பினைகளை அமைப்பில் உள்ளோருக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்துவதும் எமது போராட்டம் குறித்தும் அதில் இந்தியாவினுடைய தலையீடு குறித்தும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்பதுமேயாகும். ஆனால் "வங்கம் தந்த பாடம்" யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் போதே இந்திய அரசுக்கூடாக புளொட் உறுப்பினர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான முயற்சிகளும் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. "வங்கம் தந்த பாடம்" வெளியிட்ட பின்பு இந்தியாவிற்கு இளைஞர்களை பயிற்சிக்கு அனுப்புவது ஆரம்பமாகியது. வங்கம் தந்த பாடத்தை படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்று சொன்ன நாம் அந்தப் படிப்பினைகள் எல்லாவற்றையும புறந்தள்ளி வைத்துவிட்டு இந்தியாவின் வலைக்குள் மிக இலகுவாக இழுத்துச் செல்லப்படலானோம். நாம் வரலாற்றிலிருந்து படிப்பினையைப் பெறாதது மட்டுமல்லாமல் எமது கருத்துக்களுக்கும் நடைமுறைக்குமிடையேயான முரண்பாடாகவும் இது அமைந்தது எனலாம்.

80 களின் ஆரம்பத்தில் "இந்தியா வரும் தமிழீழம் எடுத்துத் தரும்" என்ற கனவு தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ் தலைமைகள் மத்தியிலும் காணப்பட்டது. வங்கம் தந்த பாட அனுபவங்களுக்குப் பின்பும், இந்திய இராணுவம் இலங்கையில் காலடி பதித்த பின்னான அனுபவங்களுக்குப் பின்பும், 30 வருட கால ஈழவிடுதலைப் போராட்டத்தின் கசப்பான நடைமுறை அனுபவங்களுக்குப் பின்பும் கூட பிற்போக்கு இந்திய அரசியல்வாதிகளும் அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளும் "தமிழீழம்" பெற்றுத்தருவார்கள் என்று இன்னும் நம்பிக்கை கொள்ளும் தமிழ்மக்களும் தமிழ்த் தலைமைகளும் கடந்தகால எமது போராட்ட வரலாற்றிலிருந்து சிறிதளவேனும் பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டி நிற்கின்றது. பிற்போக்கு இந்திய அரசியல்வாதிகளினதும், அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளினதும் நலன்கள் தமிழ்மக்களின் நலன்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் நலன்களுக்கும் நேரெதிரானவை என்பது தான் உண்மை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனுமான ஜக்கியப்பட்ட போராட்டத்தின் மூலமாகத்தான், அவர்களின் துணை கொண்டுதான் வெல்லப்படமுடியும்.

(தொடரும்...)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com