Contact us at: sooddram@gmail.com

 

சம்பந்தர் ஐயா சாதிப்பாரா?

(விபீஷணன்)

 பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்கள் தமது எதிர்கால சமூக அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் தலைமைத்துவத்தை இப்போது சம்பந்தர் ஐயாவிடம் தமது வாக்குகள் மூலம் அங்கீகரித்து ஒப்படைத்திருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலிலும் சரி ஜனாதிபதித் தேர்தலிலும் சரி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலும் சரி அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலிலும் சரி கடந்த மூன்றாண்டுகளில் நடந்து முடிந்த நான்கு வகையான தேர்தல்களிலும் மிகப் பெரும்பான்மையான தொகையில் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தர் ஐயாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர் சொன்ன சொற்படியே வாக்களித்திருக்கிறார்கள்.

இன்றைய தேசிய மற்றும் சர்வதேச அரசியற் சூழ்நிலையில் சம்பந்தர் ஐயா பெற்றிருக்கும் மதிப்பும் மரியாதையும் அங்கீகாரமும் இலங்கைத் தமிழர்களின் நவீன அரசியல் வரலாற்றில் வேறெந்த தேர்தல் அரசியற் தலைவருக்கும் கிடைத்ததில்லை. தனிப்பெருந் தலைவர் என்று பேரெடுத்த குற்றவியல் வழக்குகளில் மாமேதை ஜி.ஜி. பொன்னம்பலம் ஐயாவுக்கோ, ஈழத்துக் காந்தி மற்றும் ஈழத்து மூதறிஞர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஐயாவுக்கோ, தானைத் தலைவர், அரசியல் நாவலர் அ. அமிர்தலிங்கம் ஐயாவுக்கோ கூட கிடைத்திருக்கவில்லை.

பொன்னம்பலம் ஐயா லண்டனில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அறியப்பட்டிருந்தார், அதைத் தவிர அவரை இலங்கைக்கு அப்பால் யாரும் அறிந்திருக்கவில்லை செல்வநாயகம் ஐயாவையும் இலங்கைக்கு அப்பால் குறிப்பிடத்தக்க அளவுக்கு தொகையானோர் அறிந்திருக்கவில்லை.   தமிழகத்திலும் டெல்லி மட்டத்திலும் ஒரு சில அரசியற் தலைவர்கள் மத்தியில் அவர் அறிமுகமாகி இருந்தார். அமிர்தலிங்கம் ஐயாவை இந்திய இலங்கை வட்டத்துக்கு அப்பால் யாரும் அறிந்நிருக்கவில்லை. அது மட்டுமல்ல. பொன்னம்பலம் ஐயாவையும், செல்வநாயகம் ஐயாவையும் ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர ஏனைய சிங்கள அரசியல் வட்டாரங்கள் பெரும்பாலும் வௌ;வேறு கோணங்களில் தமது எதிரிகளாகவே கருதினார்கள். அமிர்தலிங்கம் ஐயாவை அந்த ஐக்கிய தேசியக் கட்சியும் மூங்கிலில் கட்டி இரண்டாகக் கிழிக்க வேண்டும் என்ற அளவுக்கு எதிரியாகவே பார்த்தது. இந்த மூன்று பேரும் இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் பெரும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தவர்கள். ஆனால் இந்த மூன்று பேரில் எவருக்கும் அவர்களின் இறுதி யாத்திரையின் போது பாராளுமன்றக் கட்டடத்தில் வைத்து தேசிய மரியாதை செலுத்தப்படவில்லை.

ஆனால் சம்பந்தர் ஐயாவின் நிலை அதுவல்ல. அவர் ஐ. நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ முன் மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பெருந்தொகையானோரால் நன்கு அறியப்பட்டவர். சம்பந்தர் ஐயாவை விட பிரபாகரனே உலக அளவில் அதிகமாக அறியப்பட்டவர் என்று சிலர் வாதிடக்கூடும். பிரபாகரன் பெற்றிருந்த உலக அறிமுகம் அவருக்கு தமிழ் மக்களிடம் இருந்து கிடைத்த சட்டப+ர்வமான அங்கீகாரத்தின் காரணமாகவோ அல்லது பிரபாகரனின் அரசியலுக்காக மக்கள் மானசீகமாக அன்பினால் வழங்கப்பட்டதோ அல்ல.

மாறாக பிரபாகரனுக்குக் கிடைத்த உலகப்புகழ் என்பது அவரது கொலைகார வல்லமைக்குக் கிடைத்த ஒன்றே. அவர் ஒவ்வொரு தமிழனையும் கல்முனையில்; இருந்தாலென்ன கட்டுவனில் இருந்தாலென்ன அல்லது கன்னியாகுமரியில் இருந்தாலென்ன கனடாவில்தான் குடியேறி இருந்தாலென்ன எந்த நிமிடத்திலும் வெடி விழும் என்ற அச்சத்தில் பிடரி குளிர வைத்திருந்தவர். பிரபாகரன் எங்கும் எவரையும் எப்படியும் கொல்லுவதில் வல்லவர் என்பதால் அவர் பெருமை உலகம் முழுவதும பரவியிருந்தது. சிங்கள இனத்தவர்களைப்  பழிக்குப்பழி வாங்க வேண்டும் என மனநோய் பீடித்திருக்கும் சிரங்குத் தமிழர்களுக்கு புலிகளின் மீதான பயநோயையும் மீறி அவர்களின் முள்ளுவிராண்டிச் சொறியல் சுகமான திருப்தியைத் தந்ததால் அந்தத் தமிழர்கள் பிரபாகரனின் புகழைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.    

ஆனால் சம்பந்தர் ஐயாவுக்கான முக்கியத்துவம் இலங்கைத் தமிழ் மக்கள் தமது பொன்னான வாக்குகளால் அளித்துள்ள அங்கீகாரத்தினால் ஏற்பட்டிருக்கிறது. அவர் அமிhதலிங்கம் ஐயாவின் அடியொற்றி அரசியல் கற்றவரெனினும் அந்த அமிர்தலிங்கம் ஐயாவையே நம்ப வைத்து படுகொலை செய்த பிரபாகரனுக்கே தண்ணி காட்டிய அரசியல் வித்தகர் அவர். சம்பந்தர் ஐயா அவர்கள் ஒரு சில இனவாத அரசியல் வாதிகளைத் தவிர ஏனைய அனைத்து சிங்கள அரசியற் சக்திகள் மத்தியிலும் பெரும்; மதிப்பைப் பெற்றிருக்கிறார். அவர் எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் மட்டுமல்ல ஆளும் கட்சியின் தலைவர்கள் மத்தியிலும் அவர்களது அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய தலைவராக உள்ளார்.

செல்வநாயகம் ஐயாவின் தமிழரசுக் கட்சியை இலங்கையின் இடதுசாரிகள் ஏகாதிபத்தியத்தின் தரகர் கட்சியாகவே பார்த்தார்கள். ஆனால் சம்பந்தர் ஐயாவின் தமிழரசுக் கட்சியை தமது நட்புக் கட்சியாகவே பார்க்கிறார்கள். சர்வதேச உறவு கொண்ட ஒரு தொண்டு நிறுவனம் கூட அமிர்தலிங்கம் ஐயாவின் தலைமைக் காலத்தில் அவருக்கு ஆதரவாக இருக்கவில்லை. ஆனால் இன்றைக்கு கொழும்பையும் வடக்கு கிழக்கையும்;; மையமாகக்கொண்டு செயற்படும் பெரும்பான்மையான தொண்டு நிறுவனங்கள் சம்பந்தர் ஐயாவுக்குத் தோள்கொடுத்து உதவிக் கொண்டிருக்கின்றன, தொடர்ந்தும்; அவை உதவத் தயாராக இருக்கின்றன. செல்வநாயகம் ஐயாவுக்கோ அமிர்தலிங்கம் ஐயாவுக்கோ எந்தவொரு முற்போக்கு சிங்கள புத்திஜீவியும் ஆதரவாக இருக்கவில்லை. ஆனால் இன்றைக்கு சம்பந்தர் ஐயாவுக்கு ஆதரவாக பல நூற்றுக்கணக்கான புத்திஜீவிகள்  இருக்கிறார்கள். அவர்கள் இனங்களுக்கிடையேயான சமாதானத்துக்காகவும் அதிகாரப் பகிர்வுக்காகவும் வேண்டிய உதவிகளை தொடர்ந்து செய்யவும் தயாராக இருக்கிறார்கள்

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா.வின் செயலாளர் நாயகம் மற்றும் பிரதிநிதிகள் மேலும் வெளிநாடுகளின் அரசியற் தலைவர்கள் மற்றும் அரசியல் நிர்வாகப் பிரமுகர்கள் சம்பந்தர் ஐயாவையும் ஒரு தேசியத்தலைவர் என்னும் வகையாகவே  சந்தித்து அபிப்பிராயம் கேட்டே செல்கின்றனர். இப்போது கொழும்பில் இருக்கும் எந்தவொரு தூதரகமும் சம்பந்தர் ஐயாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தமது சுதந்திர தினத்தையோ அல்லது குடியரசு தினத்தையோ கொண்டாடுவதென்றில்லை.   இந்தியாவின்; மிகப் பிரதானமான தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் மத்தியில் என்ன முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவு முக்கியத்துவம் சம்பந்தர் ஐயாவுக்கும் உள்ளது. இலங்கையின் ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்லுகிற பொழுதோ அல்லது வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு வருகிற பொழுதோ அவர் சம்பந்தர் ஐயாவுடன் சமாதானத் தீர்வுக்காக “பேசினேன்”, “பேசிக் கொண்டிருக்கிறேன்”, “தொடர்ந்து பேசுவேன்”, “பேசத் தயாராக இருக்கிறேன்” என்று ஏதாவது ஒன்றைச் சொல்லித்தான் உலகத் தலைவர்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

1956ம் ஆண்டு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் செய்த போது அமிர்தலிங்கம் ஐயா அவர்களின் மண்டை உடைய அரசாங்க ஆதரவு ஆட்கள் அடித்தார்கள். 1961ம் ஆண்டு சத்தியாக்கிரகத்தின் போது செல்வநாயகம் ஐயா அவர்களும் பொலியாரின் தடியடிக்கு ஆளானார்.; நாகநாதன் ஐயா அவர்களை பொலிசார் தமது தடி உடையும் வரை அடித்தார்கள். தமிழரசுக் கட்சித் தலைவர்கள் பல தடவைகள் அரசினால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தத் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் எவராவது அரசினால் கொல்லப்பட்டிருந்தாலும் கூட அது அன்று ஒரு இலங்கைச் செய்தியாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கு சம்பந்தர் ஐயா மீது அரசு ஒரு தும்பை விட்டெறிந்தால் கூட அது உலகச் செய்தியாகும்: அது ஐரோப்பியப் பாராளுமன்றத்திலும்  அமெரிக்க காங்கிரசிலும் கண்டனத்துக்கு ஒரு விடயமாகப் பேசப்படும் – தீர்மானிக்கப்படும். சம்பந்தர் ஐயாவின் தலைமையில் பத்தாயிரம் பேர் வேண்டாம், ஓராயிரம் பேர் கூடி வன்முறையற்ற ரீதியில் நடத்தும் ஒரு சத்தியாக்கிரகத்தின் போது பொலிசார் சாதாரணமாக தடியடிப் பிரயோகம் செய்தால் கூட அது இந்தியப் பாராளுமன்றத்தையே கொதிக்க வைக்கும்;;;, ஜெனிவாவில் நிச்சயமாக இலங்கை அரசுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் தீர்மானமாக மாறும். சர்வதேச யுத்த தர்மங்களை மீறியதாக உள்ள  குற்றச்சாட்டைச் சமாளிப்பதை விட அப்படியொரு பொலிஸ் தடியடி குற்றச்சாட்டை சமாளிப்பது இலங்கை அரசுக்கு மிகவும் கடினமானதாவே இருக்கும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை சிறுபான்மையினராக்குவதற்கு இலங்கை அரசுக்கு சுமார் எழுபத்தைந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போதுள்ள இலங்கை அரசு வடக்கில் தமிழர்களை சிறுபான்மையினராக்குவதற்கு அவ்வளவு நீண்டகாலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. புலிகளுக்கு எதிராக நடத்திய யுத்தத்தில் பெற்ற வெற்றிக் களிப்பின் சூட்டோடு சூடாக வடக்கின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் வெற்றியையும் சாதிக்க எல்லா முறைகளையும் பாவிக்கிறது.

1987ம்ஆண்டு அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தத்தின் மூலம் இலங்கையில் மாகாணசபை ஆட்சி முறை உருவாக்கப்பட்டது. அரசியல் யாப்பில் மாகாணசபைகளுக்கான அதிகாரப் பகிர்வுகளும் வரையறுக்கப்பட்டன. மத்திய அரசுக்கும் மாகாண அரசுகளுக்குமான அதிகார மற்றும் நிர்வாக உறவுகள் நிர்ணயிக்கப்பட்டன. அந்த மாகாணசபை அமைப்பு முறையை வலுப்படுத்துவதற்கு மாறாக மாறிமாறி வந்த அரசாங்கங்கள் அதனை வலுவிழக்கச் செய்து இறுதியில் அதனை இல்லாது ஆக்குவதிலேயே அக்கறையாக இருந்து வந்துள்ளன. அதிலும் ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் வெகுவிரைவிலேயே அரசியல் யாப்பிலிருந்து 13வது திருத்தத்தை இல்லாது ஆக்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதென்றே தெரிகிறது. கடந்த காலங்களில் 13வது திருத்தத்தை வலுவிழக்கச் செய்யும் வகையாக சட்டங்கள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் கொண்டு வரப்பட்டபோது முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் கட்சிகளும் அரசாங்கங்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளன. எனவே 13வது திருத்தத்தை வலுப்படுத்துவதிலோ அல்லது நியாயதொரு அதிகாரப் பகிர்வு ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியிலோ சிறுபான்மை இனமக்களின் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக –உறுதியாகச் செயற்படும் என எதிர்பார்க்க முடியாது. இந்த அரசாங்கத்துக்கு எதையும் செய்வதற்குத் தேவையான மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பெரும்பான்மை பாராளுமன்றத்தில் இருக்கிறது. இந்த அரசாங்கத்துக்கு குறைந்த பட்சம் இன்னுமொரு பத்தாண்டுகளுக்காயினும் இந்த நிலைமை தொடரும் என்றே தெரிகின்றது.

இப்படியானதொரு நிலையில் சம்பந்தர் ஐயாவிடமிருந்து பெரும் அரசியல் சாதனைகளை அவர் காட்டும் கட்சிச் சின்னத்துக்கு அடுத்தடுத்து  வாக்களிக்கும் தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஒவ்வொரு தேர்தலின் போதும் சம்பந்தர் ஐயா சொல்கிறபடியே தமிழ் மக்கள் நடந்து கொள்கிறார்கள். அப்படியான தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறவற்றை சம்பந்தர் ஐயா சாதித்துக் கொடுப்பாரா என்பதே இன்றைக்கு அரசியல் அக்கறை கொண்ட தமிழர்;கள் முன்னாலுள்ள கேள்வி.    

இலங்கைத் தமிழர்;கள் சம்பந்தர் ஐயாவிடம் அவர் பிரதானமாகச் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இவைதான் -
ஒன்று – வடக்கு கிழக்;கில் இருந்து இராணுவம் வெளியெற்றப்பட வேண்டும்,
இரண்டு – வடக்கு கிழக்கில் எஞ்சி இருக்கும் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்க வேண்டும்,
மூன்று -  வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்கு சுய நிர்;;ணய உரிமைகள் கொண்ட அதிகாரங்களைப் பெறவேண்டும்,
நான்கு – வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து பிரிக்கப்பட்ட தமிழர்களின் தாயகத்தை ஒன்றாக ஆக்கவேண்டும்.

இந்தியாவும் மற்றும் பிரதானமான உலக நாடுகளும் யுத்த வெற்றியால் பெற்ற சமாதானத்தை மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வின் மூலம் அரசியல் ரீதியில் நிரந்தர சமாதானமாக ஆக்கவேண்டும் என்று கோருகின்றன. இந்தியாவும் சரி ஏனைய உலக நாடுகளும் இந்த அக்கறையை எவ்வளவு காலத்துக்கு தொடர்ந்து கொண்டிருப்பார்கள் என்பது கேள்விக்குறி. இந்த நாடுகள் தத்தமது நாடுகளின் தேசிய நலன்கள் தொடர்பான வியாபாரங்களுக்கு இலங்கை அரசு ஒத்துக கொள்கிற போது அந்த நாடுகள் அதிகாரப் பகிர்வு, தமிழர்கள், சர்வதேச யுத்த சட்டங்களை மீறியமை, மனித உரிமைகள் என்ற மற்றவர்களின் விவகாரங்களை தமது குப்பைக் கூடைக்குள் போட்டு மூடிவிடுவார்கள்.

சம்பந்தர் ஐயாவும் வயது எண்பதைத் தாண்டிவிட்டார். அவருக்கு ஒன்றென்றால் பிரபாகரன் கட்டிக்கொடுத்து அவர் அணைத்து வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சில கட்சிகளின் தலைவர்கள் பிய்த்துக் கொண்டு போய் சம்பந்தர் ஐயாவின் தமிழரசுக் கட்சியை ஓரம் கட்டுவதற்கு இப்பொழுதே கங்கணம் கட்டி கொடியும் பிடிக்கத் தொடங்கி விட்டார்கள். இன்றுள்ள தேசிய மற்றும் சர்வதேச யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு அரசியற் தீர்வுகளுக்காக எந்தவொரு விட்டுக் கொடுப்பை சம்பந்தர் ஐயா மேற்கொண்டாலும் அடைந்தால் தமிழீழம் இல்லாவிடில் மீண்டும் மீண்டும் நந்திக்கடல் என்னும் சூழுரையுடன் வெளிநாடு பூராவும் பரந்திருக்கும் புலிப் பிரமுகர்களும் யாழ்ப்பாணத்து தமிழ்த்தேச சுயநிர்ணய உரிமைப் பிரமுகர்களும் சம்பந்தர் ஐயாவுக்கு துரோகிப் பட்டம் கட்ட கிஞ்சிற்றும் தயங்க மாட்டார்கள்.

காடு வா வா எனவும் வீடு போ போ வெனவும் நிலையிருக்கும் சம்பந்தர் ஐயா அவர்கள் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில் அந்த வகையான துரோகிப் பட்டம் கிடைக்கும’; நிலை தனக்கு ஏனென மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டும் அரசியலை மேற்கொள்ளப் போகிறாரா அல்லது தனக்கு என்ன பேர் வந்தாலும் பரவாயில்லை தான் வாழும் காலத்துக்குள் தன்னை நம்பியிருக்கும் சமூகத்துக்கு எது நல்லதோ அதையே செய்வேன் என்னும் உறுதியுடன் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என அவரது மனச்சாட்சிப்படி செயற்பட்டு தனக்கு மக்களால் அளிக்கப்பட்ட கடமையில் முன்னேற்றங்களை நிகழ்த்திக் காட்டுவாரா! ஒன்றையுமே சாதிக்காமல் அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ் மக்கள் முன்னால் வந்து நின்று அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவற்கு ஆணை தாருங்கள் என்று கேட்கும் வரை காலத்தைக் கடத்துவாரா!

இருபது ஆண்டுகள் பொன்னம்பலம் ஐயா ஐம்பதுக்கு ஐம்பதை சாதிப்பார் என்று பொறுத்திருந்தோம். பிறகு ஒரு இருபது ஆண்டுகள் செல்வநாயகம் ஐயா சமஷ்டியைச் சாதிப்பார்; எனக் காத்திருந்தோம். அமிர்தலிங்கம் ஐயாவுக்கு வாக்களித்தால் தமிழீழத்தைச் சாதிப்பார் என ஒரு பத்தாண்டுகள் நம்பியிருந்தோம். பின்னர் பாராளுமன்றத்தால் தமிழீழம் கிடைக்காது எனக் கண்டு பிரபாகரன் அண்ணையைத் தேசியத் தலைவராக்கி பணமாகவும் நகைகளாகவும் அவருக்கு அள்ளிக் கொடுத்து அவர் ஆயுதங்களால் தமிழீழத்தை சாதிப்பார் என இருபந்தைந்து ஆண்டுகள் இழக்கக் கூடாததை யெல்லாம் இழந்து எதிர்பாத்திருந்தோம். எழுபத்தைந்து ஆண்டுகள் இப்படிக் காத்துக் காத்து இழந்தும் அழிந்தும் சிதறியும் சின்னாபின்னப்பட்டும் போயுள்ள இலங்கைத் தமிழ்ச் சமூகம் சில சங்கடமான சூழல்களைக் கொண்டிருந்தாலும் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத வாய்ப்புகளையம் வல்லமைகளையும் கொண்ட சம்பந்தர் ஐயாவின் சாதனையைப் பார்ப்பதற்கு தமிழ்ச் சமூகம் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் எனபதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 நன்றி – கண்ணோட்டம்   (வெளியீடு 64)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com