Contact us at: sooddram@gmail.com

 

நான் இங்கு திரும்பி வர விரும்புகிறேன் ஆனால் ஒரு நிரந்தர குடியிருப்பாளராக அல்ல, அபிவிருத்தி முயற்சிகளில் ஈடுபடும் ஒருவராக - முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள்

ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் சர்ச்சைக்குரிய முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள், அதிகாரப் பகிர்வின் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆராய்வதற்கும் மற்றும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை இலட்சிய ரீதியிலும் மற்றும் எழுத்து வடிவத்திலும் முழுமையாக அமுல்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கும் ஏதுவாக ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவை ஏற்படுத்துவது அவசியம் என்று நம்புகிறார். தற்சமயம் இலங்கைக்கு வருகை தந்துள்ள பெருமாள், அத்தகைய ஓர் அமைப்பு சுயாதீனமாகவும் மற்றும் மாகாணங்களுக்கும் மற்றும் மத்திக்கும் இடையில் கருத்தொருமிப்பினை அணுகுவதற்கு ஏற்ற வகையில் வேலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

* கேள்வி: இந்த குறிப்பிட்ட நேரத்தில் உங்களை இலங்கைக்கு அழைத்து வந்தது எது?

பதில்: தீவின் வரலாற்றிலேயே இப்போதைய காலம் பல வழிகளிலும் ஒரு சுவாரஸ்யமான நேரமாகவே உள்ளது. நான் இங்கே வந்திருப்பது, நாட்டின் அரசியல் சூழ்நிலை மற்றும் அரசியல் அதிகார மாற்றம் போன்றவற்றில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களை முதல் ஆளாக அனுபவிப்பதற்கே. ஏற்கனவே அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் தற்போது நடைபெற்றுவரும் மாற்றங்கள் என்பனவற்றை தூரத்திலிருந்து அவதானிப்பதைக் காட்டிலும் நான் இலங்கைக்கு போக வேண்டும் என்று தீர்மானித்தேன். அரசியல் ரீதியாக இது சுவாரஸ்யமான ஒரு தருணம். அதுதான் நான் இங்கிருப்பதன் பிரதான காரணம். இங்குள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்திப்பது எனது வருகைக்கான மற்றைய காரணங்கள். இங்கு நடக்கும் யதார்த்த மாற்றங்களைக் காண்பது எனது தனிப்பட்ட ஆர்வம். கட்சிகளுடன் மேலும் இடைபழகி வித்தியாசமான கருத்தியல்களில் உடன்பாடுகளை ஏற்படுத்துவதற்காக ஜூனில் நான் திரும்பவும் வருவேன்.

* கேள்வி: கடைசியாக இலங்கைக்கு எப்போது விஜயம் செய்தீர்கள்?

பதில்: யுத்தம் முடிவடைந்த பின்னர், 2010, 2011 மற்றும் 2012ல் நான் இலங்கைக்கு வருகை தந்திருந்தேன். அந்த நேரம் நான் கண்டவைகளினால் நான் ஏமாற்றம் அடைந்திருந்தேன். எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப்பட்டிருந்த போதிலும் எல்.ரீ.ரீ.ஈயின் ஒரு மாதிரி அமைப்பு இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு சமமாக அரசாங்கமும் மக்கள் பயத்தில் வாழ வேண்டிய சூழலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு இறுதியாக மக்கள் வேறுபட்ட அபிப்பிராயங்களை வெளிப்படுத்தவும் மற்றும் பல்வேறு விடயங்களிலும் வித்தியாசமான கலந்துரையாடல்களில் ஈடுபடவும் முன்வந்துள்ளார்கள். ஒருமுறை காணாமற் போயிருந்த ஆர்வம், அதிகாரப் பகிர்வு அதேபோல அபிவிருத்தி போன்ற பல்வேறு உணர்வுகளில் மீண்டும் திரும்பியிருந்தது. எதிர்காலம் சாதகமான ஒன்று என்கிற நம்பிக்கையை அது என்னுள் ஏற்படுத்தியது.

* கேள்வி: வடக்கில் நடைபெறும் அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால் இப்போது அபிவிருத்தியானது இடர்பாடு நிலையில் உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும். இந்த நலன்கள் யாவும் நாட்டின் வட பகுதியில் வேலையற்றிருக்கிற இளைஞர்களை நோக்கிப் பாய வேண்டும். அங்கு கிட்டத்தட்ட 60,000 வரையான விதவைகள் உள்ளனர் ஆனால் அவர்களுக்கு கணிசமானளவு எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. இவைகள்தான் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்.

* கேள்வி: இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள். அது ஒரு தீவிரமான கவலையாக தேங்கியுள்ளது. நம்பிக்கையற்ற உணர்வுகள் வடமாகாண இளைஞர்களை துரத்தியடிக்கிறது, அதேவேளை அவர்கள் அர்த்தமற்ற முறையில் படகுகள் மூலம் பல்வேறு இடங்களுக்கும் புகலிடம் தேடி ஓடும் ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளார்கள். அத்தகைய ஆபத்துகளை எதிர்கொண்டு ஒருவர் தன் சொந்த நாட்டையே விட்டு வெளியேறும் அளவுக்கு அவர்களை கட்டாயப்படுத்தும் காரணிகள் எவை?

பதில்: வடக்கை இன்னமும் சூழ்ந்திருக்கும் பிரச்சினைப் பொதிகளுக்கான காரணிகளை தேட முயலும் கல்விமான்கள் போன்ற பலருடனும் நான் நிறைய தொடர்புகளை மேற்கொண்டிருந்தேன். அங்கு அழிவுகளுக்கு மேலதிகமாக ஏராளமான குழப்பங்கள் உள்ளன. வடக்கு மற்றும் அதேபோல கிழக்கு என்பவற்றுக்கு ஒரு தரவுத்தளம் அமைக்க வேண்டியது அவசியம் என்று நான் உணருகிறேன். எதிர்கால கொள்கைகள் மற்றும் மூலோபாயங்கள் என்பனவற்றுக்கு குறிப்பாக கணிசமானளவு அபிவிருத்தி கண்ணோட்டத்துடன் கூடிய பொருளாதார முன்னணிக்கு உதவக்கூடிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அது ஒரு நிவாரணப் பொதி அல்ல. இப்போது அது ஒரு நீண்ட கால திட்டமாக உள்ளது. இதுவரை அதற்கு வேண்டிய கணிசமானளவு ஆரம்ப முயற்சிகள் எதுவும் அறிமுகப்படுத்தப் படவில்லை.

* கேள்வி: உங்களுடைய கண்ணோட்டத்தில் வடக்கில் தீர்க்கப்பட வேண்டிய எஞ்சியுள்ள முக்கிய தேவை எவை?

பதில்: வடக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு தேவையான முயற்சிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அல்லது அபிவிருத்திக் குழுக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அவர்கள் அனைவரும் தீவிரமான பங்களிப்பையும் மற்றும் பல்வேறு கற்றல் துறை பங்களிப்புகளையும் செய்ய முடியும். ஆனால் முதற்கண் இது அரசாங்கத்தின் பணியாக இருக்க வேண்டும். மற்றும் அது இப்போது சமூகம் எதிர்பார்க்கும் தேவைகளை உருவாக்குவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பரஸ்பர உள்ளக தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டதையோ மற்றும் இந்த சக்திகள் அனைத்தும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்குவதற்காக கூட்டாக ஒன்றிணைவதையோ என்னால் காணமுடியவில்லை.

* கேள்வி: அடிப்படை மட்டத்தில் என்ன நடைபெறுகிறது?

பதில்: விசுவாசம் கொள்வதில் ஏராளமான அவநம்பிக்கையும் முறிவும் ஏற்பட்டுள்ளதை நான் கண்டேன். மத்திய மற்றும் மாகாண நிருவாகங்கள் ஆகிய இரண்டும் தாங்கள் இருக்க வேண்டிய நிலையில் இல்லாமல் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் நிலையில் இல்லை. அதே பிரச்சினைதான் மாகாண நிர்வாகத்துக்கும் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் உள்ளது. ஒவ்வொருவரும் தனித்தனி குழுக்களாக வேலை செய்கிறார்கள் பாரிய நலன்களுக்காக பரஸ்பரம் ஒத்துழைப்பதில்லை. எல்லாவற்றிலும் பிளவுகள் உள்ளன. இந்த துரதிர்ஷ்ட நிலமை நாட்டின் மீள்கட்டமைப்பை தடை செய்கிறது. அத்தகைய நல் முயற்சிகள் இதயத்திலிருந்து வெளிவர வேண்டும். ஆனால் பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் அது எப்படி நடக்கும். நம்பிக்கையை கட்டியெழுப்புவதுதான் இதற்கான முதல் முயற்சியாக இருக்க வேண்டும். உட்கட்டமைப்பை கட்டுவதென்றால் அதன் அர்த்தம் மக்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்புவதை ஒத்தது.

* கேள்வி: வடக்கு மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயம் காணி உரிமையாகும். இந்த உரிமையை நிலை நிறுத்துவதற்கு தேவையானவை போதுமான அளவுக்கு செய்யப்பட்டுள்ளது என்று நீங்கள் நம்புகிaர்களா?

பதில்: காணி விடயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் இந்த விடயம் பலரை குழப்பி வருகிறது. தனிப்பட்டவர்களுக்கு சொந்தமான காணிகள் உள்ளன மற்றும் அது தொடர்பான சட்டங்கள் இப்போது பிரயோகிக்கப்பட வேண்டும். மாகாண சபைகள் அதற்கான தீர்மானங்களை மேற்கொண்டு இந்தக் காணிகளை நிருவகிக்க வேண்டும். இரண்டாவது வகையானவை அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகள், அவை மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகின்றன அவற்றை பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் கட்டுப்படுத்தி வருகின்றன. மூன்றாவது வகையானவை மாகாண நிர்வாகத்தின் கீழ் வரும் காணிகள் அவை அரசாங்கத்துக்குச் சொந்தமானவை. ஆனால் பெருமளவு பயன்படுத்தப்படாமல் உள்ளன.

மீதமாக உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகள் சர்ச்சைக்குரிய வகையாக உள்ளன. என்னைப் பொறுத்த வரை அரசியலமைப்பின் 13வது திருத்தம் வெகு தெளிவானது, குறிப்பாக காணிகள் தொடர்பில் அதில் தீவிரமான தெளிவின்மை இருப்பதாக மக்கள் நினைத்தாலும் கூட அது மிகவும் தெளிவானது. இதில் தவற விடப்பட்டுள்ளவை அரசியலமைப்பை பற்றிய உண்மையான புரிந்துணர்வு மற்றும் மத்தி, மாகாணத்திற்கு இடையே உள்ள கருத்தொருமிப்பு இன்மை என்பனவே. இதனால்தான் காணி உரிமை சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. மொத்தத்தில் அதில் உள்ள தவறான விளக்கம் மற்றும் தவறான புரிந்துணர்வு என்பன.

* கேள்வி: பிரதான எதிர்க்கட்சி தேர்தல் சீர்திருத்தமும் 19ம் திருத்தத்தை நிறைவேற்றுவதுடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூச்சலிட்டார்கள். இந்த விருப்பு முறை நீக்கப்பட்டு முந்தைய முறையான தொகுதி வாரி தேர்ந்தெடுப்பு முறைக்கு வழிவிட வேண்டும் அல்லது இலங்கைக்கு ஒரு கூட்டுமுறை தேர்ந்தெடுப்பு அவசியம் என்று நீங்கள் நினைக்கிaர்களா? கணிசமானளவு சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கு எது மிகவும் பயனுள்ளது?

பதில்: விருப்பு முறை அதற்கான நன்மைகளைக் கொண்டுள்ளது, ஆனால் அதுவும்கூட தீவிரமான பல பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. தேர்தலில் அதிக செலவு தொடர்புபடுவது அத்தகைய பிரச்சினைகளில் ஒன்று. ஒற்றை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் இந்த சிதைவு காரணமாக ஒரு கட்சியிலிருந்து ஒரு அங்கத்துவத்துக்காக கோரிக்கை விடுக்க முடியும். நான் ஒரு கலப்பு தேர்தல் முறைமையை பரிந்துரைக்கிறேன்.

ஒட்டுமொத்தமாக விருப்புமுறையை அவதானிக்க வேண்டும். ஆனால் உண்மையான தொகுதி அடிப்படையிலான முறை ஒரு முழு உற்பத்தி பொதியிடல் முறையாக (எப்.பி.பி) இருக்க வேண்டும். இந்த வழி எமது சமூகத்தின் வேறுபட்ட பிரிவுகளை உள்வாங்கிக் கொள்ள முடியும். தொகுதி வரையறைகள் அவசியம். கடைசியாக இது 40 வருடங்களுக்கு முன்பு 1974ல் நடைபெற்றது. தொகுதி எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது இப்போது நடைபெறலாம். ஆனால் மதம், பூகோளவியல் போன்ற அனைத்தும் உட்பட்ட சகல உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்காக அவசரப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் பகுத்தறிவுள்ள, தத்துவ ரீதியான மற்றும் அர்த்தமுள்ள அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும்.

* கேள்வி: அடையாளப்படுத்தக் கூடிய சில மாற்றங்களை இப்போது உள்ளன. அதற்கான அர்த்தம் சில வழிகளில் இங்கு தொடர்பினை ஏற்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிaர்களா?

பதில்: ஒரு கல்வியாளனாக, ஆராய்ச்சியாளனாக, வழக்கறிஞனாக மற்றும் செயற்பாட்டாளர் என்கிற வகையிலும் விசேடமாக இந்தியாவில் மத்தி மற்றும் மாநிலம் இடையேயான அரசியல் முறைமை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றிய சில புரிந்துணர்வுகளைக் கொண்டவன் என்கிற வகையிலும் என்னால் இங்கு செய்வதற்கு அதிகம் உள்ளது என்று நான் எண்ணுகிறேன். உடனடி கவனிப்பு தேவைப்படும் ஏராளமான துறைகள் இங்கு உள்ளன, விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் என்பன அவற்றில் சில. உண்மையில் ஸ்ரீலங்கா அதில் மிகவும் பின்தங்கி நிற்கிறது. எங்களிடம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கிடையாது. இலங்கை அனைத்தையுமே இறக்குமதி செய்கிறது. தேயிலையை தவிர ஸ்ரீலங்காவில் உற்பத்தி செய்யப்பட்டது என்று சொல்லப்படும் உற்பத்திகள் இங்கு அரிது. ஆங்கிலத்தில் 3டி என அழைக்கப்படும் மூன்று விடயங்களை இங்கு காண நான் விரும்புகிறேன், அவை அபிவிருத்தி, ஜனநாயகம், மற்றும் அதிகாரப் பகிர்வு என்பன. எனது தனிப்பட்ட அபிலாஷைகளில் ஒன்றாக நான் இங்கு திரும்பி வரவேண்டும் என விரும்புகிறேன், ஆனால் ஒரு நிரந்தர குடியிருப்பாளராக இல்லை மாறாக அபிவிருத்தி முயற்சிகளில் ஈடுபடும் ஒருவராக. இந்தக் காலகட்டத்தில் அதுதான் சரியான பொருத்தமாக இருக்கும்.

* கேள்வி: ஜனநாயகத்துக்கு அவசியம் உள்ளது என நீங்கள் குறிப்பிட்டீர்கள். அதில் எங்கே இடைவெளியை நீங்கள் காண்கிaர்கள்?

பதில்: 19வது திருத்தம், அது புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று நானும் நம்புகிறேன். அரசியலமைப்புகள் மாத்திரம் ஜனநாயக நிலமைகளை உருவாக்கிவிடாது என்பதை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவசியமான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் அனைத்து உரிமைகளையும் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை அனுபவிக்க வேண்டும் மற்றும் அரசியல் கட்சிகள் ஒரு ஜனநாயக நடவடிக்கைக்கு உட்பட வேண்டும்.

உட்கட்சி ஜனநாயகம் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தமக்குள்ளேயே ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையகத்துக்கு வழங்கப்பட வேண்டும் என கடுமையாக உணர்கிறேன்.

ஜனநாயகத்தை அனுபவிக்கும் கட்சிகள்தான் மக்களுக்காக ஐக்கிய முன்னணியை உருவாக்க முடியும். அரசியல் கட்சிகள் விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்குமான மேடையை உருவாக்க வேண்டும். அரசாங்கத்துக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ மக்கள் பயப்படக் கூடாது. மக்கள் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும். அது வெறும் வார்த்தைகளில் அல்லாமல் ஆனால் ஒரு யதார்த்தமாக அரசியலமைப்பில் எழுதப்பட வேண்டும்.
* கேள்வி: உட்கட்சி ஜனநாயகம் எங்கு பெருமளவில் குறைந்துள்ளதாக நீங்கள் காண்கிaர்கள்? வடக்கிலா அல்லது தெற்கிலா அல்லது இரண்டிலுமா?

பதில்: ஜனநாயகம் ஒரு உலகளாவிய கலாசாரம். அது அனைவருக்குமானது. ஸ்ரீலங்கா அரசியற் கட்சிகள் இதில் மிகவும் பலவீனமானவைகளாக உள்ளன. தமிழ் கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் இதில் அதிக பலவீனமுள்ளவையாக உள்ளன. அவர்களுக்கும் சில அரசியல் சுதந்திரம் வேண்டும். ஜனநாயகம் தலைவர்களைத்தான் உருவாக்குகிறது. அரசர்களை அல்ல.
* கேள்வி: 13வது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்துவதற்கு இப்போது வாய்ப்புள்ளது என்று நீங்கள் எண்ணுகிaர்களா அல்லது அது இன்னமும் குறைப் பிரசவமாகவே உள்ளதா?

பதில்: ஜனவரி 8ல் இந்த நாட்டு மக்கள் சமூகம் மற்றும் அரசியல் நம்பிக்கைகளுக்கு மாறாக நாங்கள் அதற்கு தயார் என்கிற வகையில் ஏற்படுத்திய அலை அந்த போக்கினை மாற்றியுள்ளது. அது நம்பிக்கையூட்டும் ஒரு அரசியல் தருணம்.

* கேள்வி: அதன் கருத்து 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்வது என்பதா?

பதில்: 13வது திருத்தத்துக்கு அப்பால் என்பது ஒரு புதிய கருத்து. தற்போதைய 13வது திருத்தம் என்பது ஏற்கனவே அரசியல் அமைப்பின் ஓர் அங்கம். அது முற்றாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்த திருத்தத்தின் ஒவ்வொரு வசனமும் முதலில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அது ஒரு அரசியலமைப்பு மீறல். அரசியலமைப்பை மதிப்போம், அதை நிலைநாட்டுவோம் என்கிற அடிப்படையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டவர்கள் அதன்படி அரசியலமைப்பை பின்பற்றி அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

* கேள்வி: வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் அவர்களை நீங்கள் சந்தித்துள்Zர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டபோது, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் காணிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக அவை துரித கதியில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மற்றும் அதிகாரப் பகிர்வுக்கான கடமைகள் பற்றியும் அவர் சில முக்கியமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்த எதிர்ப்பு மற்றும் அதிருப்தி என்பனவற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிaர்கள்?

பதில்: விடயங்களை முன்னோக்கி நகர்த்துவதற்கு அதிருப்தி சாதகமான ஒன்று. இந்த உணர்ச்சிகள் உங்களுக்கு இல்லையென்றால் நீங்கள் ஒரு சந்நியாசி. ஒரு குறிப்பிட்ட அளவு முன்னோக்கி நகர்வதற்கு அது நல்லது. முற்றிலும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுபவைகள் தவிர ஏனைய பலாலி காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதும் மற்றும் மக்கள் அதை நோக்கி நகர்வதும் எனக்குத் தெரியும். இதில் உள்ள வித்தியாசம் காலக்கெடுதான். வட மாகாணசபை அது விரைவாக நடைபெற வேண்டும் என விரும்புகிறது. மத்தியோ காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட வேண்டும் என விரும்புகிறது. இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையில் கணிசமானளவு வித்தியாசம் இல்லை. ஆனால் இரு தரப்பினரும் உட்கார்ந்து பேச வேண்டும்.
* கேள்வி: முதலமைச்சரிடம் இதை நீங்கள் பரிந்துரைத்தீர்களா?

பதில்: நிச்சயமாக இல்லை. அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த மனிதர் மிகவும் மூத்தவர். தானே தீர்மானம் மேற்கொள்ள அவரால் முடியும். அவருடனான எனது சந்திப்பு மிகவும் சுமுகமானதாக மட்டுமே இருந்தது.

* கேள்வி: தற்போதைய சூழ்நிலையில் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு சிங்களவர் மற்றும் தமிழர்கள் ஆகிய இரு பகுதியினரையும் பொறுத்தமட்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என நீங்ள் எண்ணுகிaர்கள்?

பதில்: இலங்கையில் புலம்பெயர்ந்தவர்கள் எனும் சொல் தமிழர்களை மட்டுமே குறிப்பிடுகிறது. ஆனால் பெருமளவு சிங்களவர்கள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வரையான சிங்களவர்களும் உள்ளார்கள் அவர்களை புலம்பெயர்ந்த சிங்களவர்கள் என பார்ப்பதில்லை.

இந்தப் பின்னணியில் புலம்பெயர்ந்தவர்கள், தமிழர்களாக இருப்பதால் அவர்கள் எதிர்மறையாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன். சாதகமான பங்களிப்புகளை மேற்கொள்வதற்காக அவர்களை வரவேற்க வேண்டும். ஒவ்வொரு பிரதி கூலத்தையும் அனுகூலமாக மாற்றிக்கொள்ள வேண்டும், அவர்களும் ஒரு பங்களிப்பை செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இதுவும் ஒரு அணுகுமுறை மற்றும் உத்தி. சகல சமூகத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தும் இந்த நாட்டின் தலைவர்கள் இந்த நாட்டில் வதியாத இலங்கைவாசிகளின் பங்களிப்பை இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டும். பங்களிப்பு செய்வதற்கான வளங்கள் மற்றும் தகுதிகள் அவர்களிடத்தில் உள்ளன.

டில்ருக்ஸி ஹந்துநெத்தி
தமிழில் எஸ்.குமார்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com