Contact us at: sooddram@gmail.com

 

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை!

கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!! ( பகுதி – 9)

(வரதர் பெருமாள்)

இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிகள் தமது எதேச்சாதிகாரக் கற்பனைகளாலும், பாசிச வெறியாலும் தாங்கள் அழிக்கப்படும் நிலைக்கு தங்களை உள்ளாக்கியது மட்டுமல்ல தமிழர்கள் இன்று அந்தரித்து அல்லல்பட்டு நிற்கும் அத்தனை பரிதாப நிலைகளுக்கும் காரணமாகிப் போனார்கள். இந்த வரலாற்றில  ுலிகளின் பாத்திரம் ஆற்றல் மிக்க தமிழ் அரசியற் தலைவர்களையெல்லாம் அழித்தொழித்து விட்டது. தலைவர்களாக வளர்ந்திருக்க வேண்டியவர்களிற் பலரையும் ஒழித்துக் கட்டிவிட்டது. பெருந்தகையானோரை சமூகத்துக்குள்ளேயே இருந்து வளர விடாமற் தேசங்கள் தோறும் ஒழித்து வாழத் துரத்திவிட்டது. அவர்கள் மீண்டும் வந்து தமது சமூகத்தோடு ஒட்ட முடியாத அளவு தூரங்களுக்கு சரீர ரீதியாகவும், உளரீதியாகவும் விலக்கப்பட்டு விட்டார்கள்.

புலிகள் தமிழர் சமூகத்தில் மாற்றுத் தலைமைகளோ, மாற்றுக் கருத்துக்களோ இருக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்து அதற்காக வரைமுறைகள் எதுவுமற்று படுகொலைகளை நிகழ்த்தியமை, மாற்று இயக்கங்களைத் தடை பண்ணியமை, துரோகிப்பட்டங்கள் வழங்கியமை, ஆட்களைக் கடத்தி அடையாளம் தெரியாமற் பண்ணியமை என பற்பலவற்றை எண்ணுக்கணக்கின்றி செய்து முடித்தனர்.  புலிகளின் தலைமை தமக்கு தூக்குத்தூக்கு காவி, கூழைக்கும்பிடு போட்டு புகழ்பாடியவர்களையும் கைகட்டி குனிந்த தலை நிமிராது நின்ற  ேவகம் செய்தவர்களையும் காப்பாற்றி பரிசுகள் கொடுத்தும் பங்குகள் கொடுத்தும் பணக்காரர்களாக்கி பதவிகளிலும் தூக்கி வைத்தார்கள்.

இதனால் அன்று மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு பலரது வாழ்வை நாசம்பண்ணியவர்களும் மற்றும் அன்று சமூகம் பற்றிய எந்தவித அக்கறையுமின்றி தமது சமூகக்கண்களை மூடிக்கொண்டு தமது படிப்பு, பதவிகளைக்காப்பாற்றுதல், பணங்களை சேர்த்தல் என இருந்தவர்களும் இன்று தமிழர்களின் தலைவர்களாகியிருப்பதற்கான அடித்தளத்தை இட்டுக் கொடுத்ததுவும் புலிகளின் அரசியலே! அதுமட்டுமல்ல, இன்று தப்பிப்பிழைத்திருக்கும் அந்தநாள் புலிகள் உட்பட அனைத்து இயக்கப் போராளிகளும் தமது வாழ்க்கையின் எத்தனையோ பகுதிகளை இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக இழந்த போதிலும் இன்று அவர்களுக்கு எந்தவித மரியாதையும் சமூகத்தின் சாதாரண மனிதர்களிடத்தில் இல்லாமற் போனதற்கு பிரதானமான காரணகர்த்தாக்களும் புலிகளே என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இவற்றிற்கு ஒழிந்து போன புலிகளின் தலைமை மட்டுமல்ல் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புலியிசத்தைக் காவி பணமும் புகழும் பதவிகளையும் பண்ண முனையும் புலியிச அரசியல் ஆதரவாளர்களும் இன்றும் காரணமாக உள்ளனர்.

இன்றைக்கு ராஜபக்ஷாக்கள் தமிழர் சமூகத்தில் வெறும் பச்சோந்திகளையும், முடிச்சவிக்கிகளையும், மொள்ளை மாறிகளையும் தலைவர்களாக்கி தாம் திட்டமிட்டுள்ள காரியங்களைச் சாதித்து விடலாம் என முயற்சிப்பதற்கு வேண்டிய உதாரணங்களையும் வழிகாட்டல்களையும் வழங்கியதே புலிகளின் தலைமைதான் என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பல உவமான, உவமேயங்களை கடந்த நான்கு ஆண்டுகளிற் காணலாம். ராஜபக்ஷாக்களின் நடைமுறைகளைப் பார்க்கும் போது அவர்கள் தம்மை சிங்கங்களெனக் காட்டி கர்ச்சித்தாலும் புலிகளிடமிருந்தே அதிகாரத்தை எப்படி தக்கவைப்பது, அதிகாரத்தை எப்படிக் காப்பாற்றுவது, அதிகாரத்தை எப்படி அனுபவிப்பது என்பனவற்றை ஒவ்வொன்றாகககற்று பிரயோகிக்கிறார்கள் எனலாம்.

புலிகள்தான் அப்படிப் போனார்கள், ராஜபக்ஷாக்கள்தான் இப்படிச் செய்கிறார்கள் என்றாலும் இதிலிருந்து தமிழ்க் கூட்டமைப்புக்காரர்கள் வேறுபட்ட, மாறுபட்ட, தமிழ் மக்களின் இன்றைய காலநிலைக்கு அவசியமான, நேர்மையான செயற்திட்டங்களை, செயல்முறைகளைக் கொண்டிருக்கிறார்களா? என்பது பலர் மத்தியிலும் உள்ள கேள்வியாகும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இன்றைய செயன்முறைகள், அணுகுமுறைகள், அரசியல் நடத்தைகள் என்பனவற்றைப் பார்க்கும்போது அவர்கள் சமூகத்தில் இன்னமும் ஆங்கேங்கு தப்பிப்பிழைத்து சிதறிக் கிடக்கும் ஆற்றலுள்ளவர்களை, அறிவார்ந்தவர்களை, அநுபவசாலிகளை, கடந்த காலங்களில் சமூகத்துக்காகப் பெருந் தியாகங்கள் செய்தவர்களை உயிரோட்டமுள்ள வகையில் தமது அரசியல் நீரோட்டத்தில் அங்கங்களாக இணைத்து தமிழர்களின் எதிர்காலத்துக்கு உரிய சிறந்த உண்மையான நேர்மையான செயலாற்றல்மிக்க தலைவர்கள் உருவாகுவதற்கு வழிவகுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுள்ளது.

மிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது அதில் உள்ள எந்தவொரு கட்சியுமோ தமது தேர்தல் வெற்றிக்கான இலக்கைத் தவிர ஒரு பரந்துபட்ட மக்கள் அரசியல் அமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான இலக்கையோ அல்லது ஒரு பரந்துபட்ட மக்கள் இயக்கத்தையோ எழுச்சிபெறச் செய்வதற்கான திட்டங்கள் எதனையும் கொண்டிருப்பதாக இல்லை. மாறாக. த,தே.கூவினர் ஒட்டுமொத்தமாகவும் சரி மற்றும் தனிக்கட்சிகளாகவும் சரி அவர்கள் தமிழ் மக்களை பல்வேறு வகையிலும் அரசுக்கெதிரான ஆத்திர உணர்ச்சி, அரச படைகள் தொடர்பான பய உணர்ச்சி, சிங்கள இனம் மற்றும் பௌத்தம் தொடர்பான எதிர்ப்பு உணர்ச்சி எனப்பாயும்  உணர்ச்சி அரசியல் வெள்ளத்தில் தமது தேர்தற் தோணிகளை ஓட்டுவதில் கொண்டிருக்கும் அக்கறையையே அவர்களது ஒவ்வொரு அரசியல் அறிக்கைகளிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்துகின்றனர்.

த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள்,

  • மாகாண சபைகளுக்கு சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் இன்னமும் முழுமையாக முறையாக வழங்கப்படவில்லை!

  • யுத்தம் முடிந்து நான்கு வருடங்களாகியும் இன்னமும் அரச படைகளின் யுத்தப்பிரசன்னம் கலைக்கப்படவில்லை!

  • இறுதிக்கட்ட யுத்தங்கள் நடந்த இடங்களில் மக்கள் சுமுகமாக தமது பொருளாதார நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை!

  • அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராகவென சந்தேகப்படக் கூடிய வகையில் நிர்வாக எல்லை மாற்றங்களைச் செய்வதில் ஈடுபட்டு வருகின்றமை!

  • இன்னமும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு வலயத்தை வைத்திருக்கின்றமை!

  • வன்னியில் பல்வேறு இடங்களில் பல்லாயிரம் ஏக்கர் வயற்காணிகளை சுவீகாரம் செய்து பாரிய அளவில் இராணுவ நகரங்களை கட்டியெழுப்புகின்றமை!

போன்றவை தொடர்பாக அவ்வப்போது குரலெழுப்புகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்களின் செயற்பாடுகளில் எந்தவித அரசியல் வீரியத்தையும் காணமுடியவில்லை. வெறும் சம்பிரதாயத்துக்கும் தமிழ் மக்கள் தங்களை மறந்து விடாமலும் இருப்பதற்கான நோக்கங்கள் மட்டுமே அவர்களின் அறிக்கைகளிற் தெரிகின்றன.

  • அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் இன்னமும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தவிர வேறெந்த தமிழருக்கும் பேச்சுரிமையோ, கூட்டம் கூடும் உரிமையோ, சுதந்திரமாகக் கலந்துரையாடும் உரிமையோ, தொழிற்சங்க உரிமைகளோ இல்லை என்ற வகையான நிலைமையையே அரசாங்கம் தனது படைகளினூடாக நிலைநாட்டி வருகின்றது!

  • இன்னமும் தமிழர்கள் தாங்கள் அரசியற் காரணங்களுக்காகப் படுகொலை செய்யப்படலாம், என்ற பயத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை. காணாமற்போகும் நிலைக்கு உள்ளாக்கப்படக்கூடும் என்ற அச்சத்திலிருந்து நீக்கப்படவில்லை. முகமூடிபோட்ட மோட்டார் சைக்கிள் காரர்களின் இருட்டடிக்கு உள்ளாக நேரிடலாம் என்ற பீதியிலிருந்து விலக்கப்படவில்லை, பொலிஸ் அதிகாரிகள் மக்களின் குற்றச்சாட்டுகளை ஏற்று பாரபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை சட்டப்படி எடுத்து கட்டாயம் சட்டத்தை நிலைநாட்டுவார்கள், நீதியை நிலைநாட்டும் கடமைகளை தவறாது செய்வார்கள் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை.

  • பிரபாகரனின் புலிகளிடமிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனாலும் இப்போத  அரசபடை வீரர்களைக் கண்டாலே இலங்கைவாழ் தமிழர்களின் தொண்டையில் ஈரம் வற்றிவிடுகிறது. இராணுவ ரகசியப் பிரிவுகளைப் பற்றி யோசித்தாலே பிடரி குளிர்கிறது, அரசாங்கத்தோடு துணைக்கு நிற்கும் கட்சிகாரர்களைக் கண்டாலே மூளை காய்ந்து விடுகிறது. பிரபாகரனி் தமிழ்ப் புலிகள் இல்லாமற் போய்விட்டாலும் இப்போது கோத்தபாயாவின் தமிழ்ப் புலிகள் அரசின் ரகசியப் பிரிவின் கூலிகளாக  நடமாடுகிறார்கள் என்ற பயம் மக்களிடையே உள்ளது என்பது வெளிப்படை.

எனவே இங்கே அரசாங்கத்தை,

  • மக்களின் அடிப்படை உரிமைகள் அத்தனையையும் அங்கீகரித்து பாதுகாத்து உத்தரவாதம் செய்ய வைப்பதற்காகவும்,

  • மாகாண சபைகளுக்கு அரசியல் யாப்பால் வழங்கப்பட்டுள்ள அத்தனை அதிகாரங்களையும் வழங்க வைப்பதற்காகவும்,

  • சட்டத்தின் ஆட்சியை சமத்துவமாக நிலைநாட்ட வைப்பதற்கும்,

  • அத்தனை மத நம்பிக்கைகளுக்கும் பாதுகாப்பு வழங்கும் நிலையை ஏற்படுத்துவதற்காகவும்,

  • நீதித்துறை சுதந்திரமாக செயற்படும் நிலையை ஏற்படுத்துவதற்கும்,

  • நாட்டின் பாதுகாப்பு, இறைமை என்ற பெயரில் பூச்சாண்டிகள் காட்டி வடக்கு, கிழக்கில் இராணுவ குண்டர் ஆட்சியை தொடர்ந்து நிலை நாட்ட முற்படுவதற்கு முடிவு கட்டுவதற்கும்

இங்கே ஒரு விடுதலைப் போராட்டம் அவசியமாக உள்ளது என்பதே தெளிவாகிறது. இது ஒரு தமிழர்களின் போராட்டமாக மட்டும் இருக்க முடியாது. இன்றைக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் அத்தனை பிரச்சினைகளும் சிங்கள மக்களையும் நோக்கி விரிவடைந்து வருகின்றது. எனவே தமிழர்களின் போராட்டம் சிங்கள மக்களோடும் ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அரசியல் விடுதலை இயக்கமாகவும் செயற்பட வேண்டிய புதியதோர் அத்தியாயம் ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது. 

சிறிலங்கா அரசுக்கெதிராகத் தொடங்கிய விடுதலைப் போராட்டம் பலிகளால் திசைமாற்றப்பட்டதால் தமிழர்கள் புலிகளிடமிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை நடத்துவது அவசியமானது. அந்தப் போராட்டம் முடிவடைந்துவிட்டது. ஆனாலும் சிறிலங்கா அரசோடு தமிழ் மக்களுக்கு இருந்த அரசியற் தீர்ுக்கணக்கு இன்னமும் தீர்க்கப்படவில்லை.

புலிகளுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை நிறைவேற்றி வைப்பது மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான அரசியற் தீர்வை மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசு புலிகளுக்கு எதிரான போர்க்காலத்தில் வழங்கியபடி உரியபடி உரிய காலத்துக்குள் வழங்கும் என தமிழ் மத்தியில் இருந்த நம்பிக்கை யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னமும  நடைமுறையாகவில்லை.

மாறாக, யுத்த முடிவுக்கு பிந்திய கால மஹிந்தவின் ஆட்சியைப் பார்க்கையில் அது டி.எஸ்.சேனநாயக்காவின் ஆட்சி, ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சி, பிரேமதாசாவின் ஆட்சி மற்றும் குறுகிய காலமே இருந்த டிங்கிரி பண்டாவின் ஆட்சி ஆகிய நான்கு ஆட்சிகளும் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடையாளங்கள், பாதுகாப்பு, உரிமைகள் பற்றிய விடயங்களில் கடைப்பிடித்த கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை ஒருங்கிணைத்து கடைப்பிடிப்பது போன்ற ஓர் ஆட்சியையே காட்டுகின்றது. 

இவ்வாறானதொரு நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு எதிர்நோக்கப் போகிறது:

  • இராணுவப் படைகளை முகாம்களுக்குள் உள்ளடங்கியதாக்கல்,

  • சட்ட ஒழுங்கு நிர்வாகத்தில் பொலிஸ் மட்டுமே ஈடுபடல்,

  • அனைத்து அரச நிர்வாகங்களும் சிவில் சட்டங்கள் மற்றும் நிர்வாகங்களுக்கு மட்டுமே உரியதாகுதல்,

  • சுதந்திரமான நீதி நிர்வாகம்,

  • வடக்கு கிழக்கில் ஊழல் மோசடிகளற்ற அரச நிர்வாகம் ஏற்படல்,

  • மக்கள் அனைவரும் யாருக்கும் அச்சமற்று அனைத்து அடிப்படை உரிமைகளையும் அனுபவிக்கும் நிலை ஏற்படல்,

  • மாகாண சபைகளுக்கு இப்போது அரசியல் வழங்கப்பட்டுள்ள அத்தனை அதிகாரப் பகிர்வையும் முழுமையாகவும், முறையாகவும் பெறுதல்,

  • இப்போதுள்ள அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ளதற்கும் மேலாக மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வைப் பெறுதல்  

போன்ற பல விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னால் சவால்களாக உள்ளன.

இவற்றைப் பற்றி பேசிப்பேசி தேர்தல்களில் மட்டும் வெற்றிகளை வாங்கிக் குவித்துக் கொண்டு காலத்தைக் கடத்தும் திட்டத்தைத் தவிர வேறேதும் திட்டம், நோக்கம், இலட்சியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காரர்களிடம் உண்டு என்று சொல்வதற்கான சாட்சியங்களைக் காண முடியவில்லை. 

விமர்சனங்களுக்க அப்பால் 1950 கள் 60களில் தமிழரசுக்கட்சி ஒரு பாராளுமன்றவாத அரசியற் கட்சி என்பதற்கு அப்பால் அது ஓர் அரசியல் இயக்கத்துக்கான பண்புகளைக் கொண்டதாக செயற்பட்டு வந்தது. 1972ல் உருவான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் மற்றும் தமிழத் தேசியவாத பிரமுகர்களினதும கூட்டாக இருந்த போதிலும் 1970களிலும் 80களிலும் எழுச்சி பெற்ற தமிழ் இளைஞர் இயக்கங்கள் மொத்தத்தில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஒரு பிரமாண்டமான இயக்கத்தை வழங்கின.

1990 களிலும் 2000 ம் ஆண்ுகளிலும் புலிகள் ஒரு பிரமாண்டமான இராணுவமாக இருந்தார்கள். தமிழரசுக் கட்சியால் பரந்துபட்ட மக்களை அணிதிரட்டிப் போராட்டங்கள  அரசுக்கெதிராக வெளிப்படுத்திக் காட்ட முடிந்தது. தமிழ் இளைஞர் இயக்கங்களின் செயற்பாடுகளைக் காட்டி தமிழர் ஐக்கிய விடுதலை முன்;னணி தனது அரசியற் காலத்தை ஓட்டியது.

இந்தியாவினது வெளிப்படையான நேரடியான செயற்பாடுகளும் தமிழ் இளைஞர் இயக்கங்களின் தியாகங்களும் இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் வடக்கு-கிழக்கு மாகாண சபையையும் தமிழர்களுக்குத் தந்தது:

புலிகள் அரசியற் சூனியங்களாக இருந்ததால் தமிழர்களுக்கு ஒரு பயனுமற்றவர்களாக இருந்தது மட்டுமல்ல இறுதியில் அவர்கள் தோற்று அழிந்து போனார்கள் என்றாலும்; புலிகள் தாக்கங்கள் மிகுந்த ஓர் இராணுவமாக இருந்து இலங்கை அரசை பேச்சுவார்த்தை மேசைகளுக்கு இழுக்க முடிந்தது.

ஆனால் இந்த வரலாற்று ஓட்டத்தில் எதுவுமே இல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் எதைச் சாதிக்க முடியும் என்பதே இன்று பலர் முன்னாலும் உள்ள கேள்வி.

(தொடர் 10 ஐ நோக்கி தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com