Contact us at: sooddram@gmail.com

 

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!! (பகுதி – 8)

(வரதர் பெருமாள்)

ஆடத் தெரியாதன் மேடை கோணலாக இருக்கிறது என்றானாம்

கடந்த வருடம் யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்காக ஒதுக்கிய பணத்தை உரிய திட்டங்களை உரிய கால எல்லைக்குள் நிறைவேற்றுவதில் அந்தச் சபைகள் செலவளிக்கத் தவறியதால் அரச திறைச்சேறிக்கு மீளச் சென்றிருக்கும் பணத்தின் தொகை சுமார் அறுபது கோடி ரூபாய்கள். இது பகிரங்கத்துக்கு வெளிவந்து விட்ட ஒரு விடயம். த.தே.கூக்காரர்கள் தாங்கள் ஆளும் உள்ளுராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை அரசாங்கம் பாரபட்சமாக மீளப் பறித்து எடுத்துக் கொண்டது என ஒப்பாரி வைக்கிறார்கள். ஓர் அரச நிர்வாகத்தின் செயற்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பணம் அத்திட்டத்துக்காக உரிய காலத்துக்குள் செலவளிக்கப்பட்டு அத்திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் திறைசேரிக்குத் தானே போகும். இதில் ஆச்சரியப்படுவதற்கும் அழுவதற்கும் என்ன வேண்டிக் கிடக்கிறது.

தங்களால் தலைவர்கள் ஆக்கப்பட்டவர்களின் ஆற்றலின்மையைக் கண்டு த.தே.கூக்காரங்கள்தான் நாணித் தலைகுனிய வேண்டும். ஒதுக்கிக் கொடுத்த பணத்தை உரிய காலத்துக்குள் செலவளித்து உரிய திட்டங்களை நிறைவேற்றி முடிக்கும் வகையாக ஒரு குட்டி அரச நிர்வாகத்தைச் செய்யத் தெரியாத இவர்களுக்கு யார்தான் எவ்வளவுதான் பொதுத் தேவைகளுக்காக பணத்தைக் கொடுத்தாலும் என்னத்தைத்தான் செய்துவிடுவர் என்ற உணர்வையே இவர்கள் மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள்.

இவ்வாறு பணம் திரும்பிப் போவதற்குக்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து எவ்வகையிலும் தாம் சிம்மாசனம் ஏற்றி விட்டவர்கள் தான் காரணமென்றால் அந்த உள்ளுராட்சி சபைத் தலைவர்களை உடனடியாக நீக்கியிருக்க வேண்டியது த.தே.கூத் தலைமையின்; கடமையல்லவா? அப்பொழுதுதானே அடுத்த வருடம் விடயங்கள் சரியாகவும் உரிய காலத்துக்குள்ளும் நிறைவேற்றப்படும்!

அரசாங்கம் பணத்தை அதிக அளவில் பணத்தை ஒதுக்கிக் கொடுத்தாலும் அதிற் பெரும் தொகை மீண்டும் அரச திறைசேரிக்கே திரும்பி வந்து விடும் என்ற எண்ணம்தானே அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டடிருக்கின்றது. இவ்வாறான சபைகளுக்குப் பணத்தை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதற்காகவும் அஞ்ச வேண்டியதில்லை என்ற நிலையே இங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

உள்ளுராட்சி சபையாயிருந்தாலென்ன மத்திய அமைச்சாக இருந்தாலென்ன எதுவும் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடனேயே ஒதுக்கப்படும் பணம்  கட்டுக்கட்டாக அந்த நிர்வாகங்களுக்குப் பெட்டிகளில் அனுப்பப்படுவதில்லை. மாறாக, எப்போதும அது புத்தகங்களிலேயே ஒதுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருக்கும். அரச நிர்வாகங்கள் அவை எவையாக இருந்தாலும் அவை அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதைப் பொறுத்தே திறைசேரியிலிருந்து அதற்கான உண்மையான பணத் தொகை வங்கிகளினூடாகப் போய்ச் சேரும்.  எந்த உள்ளுராட்சி சபைத் தலைவராக இருந்தாலென்ன ஏன் மத்திய மந்திரியாகத் தான் இருந்தாலும் சட்டப்படி அரச பணத்தை நேரடியாகத் தொட்டுப்பார்க்கக் கூட முடியாது.

பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் செலவளிக்கப்படுவதற்கென வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட அவ்வளவுக்குமான பணமும் கட்டுக்கட்டாக திறைசேறியிலும் இருப்பதில்லை. அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டபடி வரி மற்றும் வருமானங்களைத் திரட்டுவதைப் பொறுத்தே திறைசேறிக்கும் பணம் வரும். அதிலிருந்தே திறைசேறி சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு பணங்களை வழங்கும்.

ஒரு நிர்வாகம் உரியபடி செலவளிக்கவில்லை என்றால், திறைசேரி நிர்வாகத்துக்கு அந்த ஆண்டின் ஆறு அல்லது ஏழு மாதகால கட்டத்துக்கு முதலிலேயே அந்த நிர்வாகம் செயற்படும் லட்சணம் தெரிந்து விடும் இந்த நிலையில் சிறப்பாகச் செயற்படும் மற்றைய நிர்வாகத்தின் திட்ட நிறைவேற்றல்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணம் வழங்கப்படும். ஆற்றலுடன் செயற்படும் நிர்வாகங்களுக்கு சிலவேளைகளில் அவற்றுக்கு முதலில் ஒதுக்கப்பட்ட அளவுக்கும் மேலதிகமாகக் கூட அவற்றின் திட்டங்களுக்கு அந்த ஆண்டின் இறுதிக்குள் பணம் வழங்கப்படுவதுவும் உண்டு. தனக்கு ஒதுக்கப்பட்ட பணங்களைக் கொண்டு உரியகாலத்துக்குள் திட்டங்களை நிறைவேற்றுவதுடன் மேலும் திட்டங்களுக்கு மத்திய மற்றும் மாகாண அரசுகளிடம் போதிய நிதியைக் கோரி நிற்பதே ஓர் உள்ளுர் ஆட்சியின் சிறந்த நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டு. இது உள்ளுராட்சி சபைகளுக்கு மட்டுமல்ல, மாகாண சபை நிர்வாகத்துக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மேற்கொள்ளப்படும் விசேட ஒதுக்கீடுகளுக்கும் இதுவே விதி. 

திறைசேரித் தலைமை மத்திய ஆட்சித் தலைமைக்குச் சாதகமாகச் செயற்படாது என்றோ அல்லது அது சட்டவரைபுகளுக்கு அமைவாக எப்போதும் நேர்மையாகவே செயற்படும் என்றோ சொல்வதற்கில்லை. அதேவேளை மேல் மட்டத்தில் ஆளும் கட்சியானது கீழ் மட்டத்தில் ஆளும் மாற்றுக்கட்சிகளின் திட்டங்களுக்கு,  நிர்வாகங்களுக்கு போதிய அளவு பணம் ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உலகம் முழுவதுவும் பல கட்சி ஜனநாயகத்தின் ஒரு பாகமாக உள்ளது. அதற்காக கீழ் மட்டத்தில் ஆளுகின்ற கட்சிகள் தமக்கு ஏற்படும் உண்மையான பாரபட்சங்களை நேர்மையாக வெளிப்படுத்தி போராட்டங்களை நடாத்துதல் என்பது வேறு விடயம்.

ஆனால் இங்கு தனது கட்சி ஆட்சி செய்யும் ஒரு நிர்வாக அமைப்புக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை செலவளிக்காததற்காக அந்த நிர்வாகத்தின் அரசியற் தலைமை வெட்கப்பட்டு தன்னை உடனடியாகத் திருத்திக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு தமது ஆற்றாமையை மறைப்பதற்காக கொடுத்த பணத்தை  அரசாங்கம் மீள எடுத்துக் கொண்டது என்று முழுப் பூசணிக்காயை ஒரு இலைச் சோற்றில் மறைக்க முற்படுவது தன்னைத் தானே ஏமாற்றும் வேலையாவும் தன்னை நம்பிய மக்களை ஏமாற்றும் வேலையாகவுமே அமையும். 

உள்ளுராட்சிச்சபை ஆட்சியில் உழாத மாடுகள் 

மாகாணசபை ஆட்சியில் எப்படி உழப் போகின்றன?

தங்களது மாகாணசபைகள் தங்களுக்கும் நாட்டுக்கும் தேவையான சேவைகளைச் செய்கின்றனவா? அல்லது வெறுமனே பதவிக்கான படிக் கட்டுகளாக மட்டுமே தம்மை தம்மால் ஆதரிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்களா? என மக்கள் கேள்வி எழுப்புவதுவும் அதையொட்டியே அடுத்த தேர்தலில் மக்கள் தமது வாக்குகளை யாருக்கு அளிப்பது என்பதைத் தீர்மானிப்பதுவும் எதிர்காலத்தில் நடைபெறும். ஒரு நெருக்கடியான போராட்டக் காலத்தில் மக்கள் கண்ணை மூடிக் கொண்டு போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பது போல ஒரு ஜனநாயகச் சூழ்நிலையில் அதிகார ஆட்சிகளுக்கான தேர்தல்களில் மக்கள் காரணகாரியப் பார்வையின்றி வாக்களிக்க மாட்டார்கள்.  

வடக்கு மாகாண சபைத் தேர்தலை இதுவரை அரசாங்கம் நடத்தவில்லை என அவ்வப்போது அரசு மீது குற்றம்சாட்டினாலும் அந்தத் தேர்தலை உடனடியாக நடத்தும்படி அரசை நோக்கி த.தே.கூக்காரர்கள் பெரிதாகத் தமது  குரல்களை எழுப்பவில்லை. அதற்கான கோரிக்கை எதையும் வலுவாக முன்வைக்கவில்லை என்கிற உண்மையையும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நெருங்கினால் அதற்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதிலேயே தமக்குள் பெரும் குடும்பிப்பிடி சண்டை நடக்கத் தொடங்கிவிடும் என்பதை த.தே.கூத் தலைவர்கள் தெரிந்து கொண்டுதான் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தும்படி அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பதில் பெரிதும் அக்கறை காட்டாமல் இருக்கிறார்கள் என்றே பொதுவாக நம்பப்படுகிறது.

அதனிலும் மேலாக உள்ளுராட்சி நிர்வாகத்தை நடத்துவதிலேயே இவ்வளவு கோணங்கித்தனங்களைக் கண்டுகொண்டிருக்கும் த.தே.கூத் தலைவர்கள் வடக்கு மாகாண ஆட்சியை நடத்துவதில் தம்மவர்கள் நிச்சயம் சொதப்பி விடுவார்கள் என்பதையும் புரிந்து கொண்டுதான் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் விடயம் காலம் தள்ளிப் போனாலும் பரவாயில்லை என  கமுக்கமாக இருக்கிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. எனினும், பல்வேறு வெளிப்புறக் காரணிகளால் ஜனாதிபதி இந்த ஆண்டு முடிவுக்குள் அதற்கான தேர்தல் நடத்தப்படும் எனக் கூறியிருக்கிறார். அவ்வாறு தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் தமிழ் மக்களிற் பெரும்பான்மை யினர் தமக்கே வாக்களிக்க வேண்டுமென த.தே.கூக்காரர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை.

வடக்கு மாகாணசபை தெரிவு செய்யப்பட்டு த.தே.கூக்காரர்கள் அதன் ஆட்சியைக் கைப்பற்றினாலும் அரசாங்கம் பல்வேறு சங்கடங்களையும் நெருக்கடிகளையும் அவர்களது ஆட்சி நிர்வாகத்துக்குக்  கொடுக்கும் என்பதுவும் புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்றே. ராஜபக்ஷாக்களின் எதிர்ப்புகள், புறக்கணிப்புகளின் மத்தியில் த.தே.கூக்காரர்கள் வடக்கு மாகாண மக்களுக்கான ஆட்சியை எப்படி ஆற்றலுடன் நடத்தப்போகிறார்கள் என்பதுவும் அது தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய நம்பிக்கையீனங்களை மற்றும் விரக்திகளை நீக்கும் வகையாக எப்படி த.தே.கூக்காரர்கள் செயற்படப் போகிறார்கள் என்பதுவும் இப்போதைக்கு வெறுமனே விடைதெரியாத கேள்விகளாக உள்ளன.

மாகாண சபைகளுக்கு என்னென்ன விடயங்களில் எந்தெந்த அளவு அதிகாரங்கள் உள்ளன என்பதற்கான ஆய்வும் விவாதங்களும் வேறு விடயம். எல்லாவற்றிற்கும் அப்பால் இன்னமும் மாகாண சபைகள் கணிசமான அளவு சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்களோடு உள்ளன. தெற்கிலுள்ள மாகாண சபைகளில் அவை வெளிப்படவில்லை. காரணம் அவை எல்லா வேளைகளிலும் மத்திய ஆட்சியை வைத்திருக்கும் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே இருந்துள்ளன, இன்னமும் அப்படித்தான் இருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் திரு. பிள்ளையான அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அவரால் மாகாண சபைக்கான அதிகாரங்களைப் பிரயோகிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல அவை பற்றிப் பேசக் கூடிய நிலையிலும் அவர் இருக்கவில்லை. காரணம் அவர் அரசின் கிடுக்குப் பிடியிலேதான் முதலமைச்சராக இருந்தார். ஆனால் வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடந்தால் அங்கு ஆட்சியைக் கைப்பற்றும் கட்சிக்கே மக்கள் மத்தியில் சோதனைகள் வரும்.

வடக்கு மாகாண சபை

  1. சட்டப்படி இருக்கும் அதிகாரங்களை மக்களுக்கும் மாகாணத்தின் முன்னேற்றகரமான வளர்ச்சிகளுக்கும் முழுமையாகப் பிரயோகிக்க வேண்டும்!

  2. வடக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல அனைத்து இன மக்களுக்கும் சமநீதி கிடைக்கும் வகையாகவும், சமத்துவமான சமூக  பொருளாதார நியாயங்களை நிலைநாட்டும் வகையாகவும், அவர்களிடையே சமரசமான மற்றும் சகோதரத்துவமான உறவுகளை வளர்க்கும் வகையாகவும் மாகாண ஆட்சியை செயற்படுத்த வேண்டும்!

  3. மாகாண சபைகளுக்கு அரசியல் யாப்புரீதியாக இருக்கும் அதிகாரங்களை முழுமையாகப் பிரயோகிக்க விடாது மத்திய அரசு சட்ட வழிகளாலும் நிதி வழியாலும் தனது அதிகார வழிகளாலும் தடைக் கட்டைகளைப் போடுமிடத்து அவற்றை விலக்குவதற்காகப் போராட வேண்டும்!

  4. மத்திய ஆட்சியினால் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாது மக்களின் நன்மைகளுக்காகப் பிரயோகித்து ஆட்சியைச் சிறப்பாக  நடத்துகின்ற அதேவேளை இதுகாலவரையும் மத்திய ஆட்சியாளர்கள் மாகாணங்களுக்கு வழங்காமல் முடக்கி வைத்திருக்கும் அதிகாரங்களைப் பெறுவதற்காகப் போராடவும் வேண்டும்!

  5. 13வது அரசியல் யாப்புத் திருத்தத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் மாகாண சபைகளுக்குச் சார்பான அர்த்தம் கிடைப்பதற்கு எல்லா வழிகளிலும் போராட வேண்டும்!

  6. புதிய அரசியல் யாப்புத் திருத்தம் என்ற பெயரில் 13வது அரசியல் யாப்புத் திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் எதையும் குறைப்பதற்கோ அல்லது இல்லாது ஆக்குவதற்கோ மத்திய ஆட்சி முயலும் எந்த நடவடிக்கைகளுக்கும் உடன்படாது செயற்பட வேண்டும்!

மேலே குறிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான போராட்டங்களை,

  • உச்சநீதிமன்றம் வழியாக நடாத்த வேண்டும்!

  • ஏனைய மாகாணசபை உறுப்பினர்களின் ஆதரவுகளை அணிதிரட்டிப் போராட வேண்டும்!

  • அந்தப் போராட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவுகளையும் ஆட்சிக்குள்ளேயே அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான கருத்துக் கொண்டவர்களின் ஆதரவுகளையும் திரட்டிக் கொள்ள வேண்டும்!

  • அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான அனைத்து சமூக நிறுவனங்களினதும் அரவணைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும்! 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபை இருந்திருந்தால் தெவிநெகும சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாது. அஃதெப்படி என்ற விடயத்தை இங்கு நீட்டி விபரிக்க நான் விரும்பவில்லை.

எவ்வாறாயினும், எந்தவொரு மாகாண சபையையும் ஆளுகின்ற கட்சியானது தாம் ஆளுகின்ற மாகாண சபையை மத்திய அரசாங்கத்துக்கு எதிராகத் தனது குறுகிய கட்சி அரசியல் நடத்தும் களமாக ஆக்கிவிடக் கூடாது. மாகாண சபைகள் மத்திய ஆட்சியாளருக்கு எதிரான கூச்சல் மேடையல்ல. அது ஒரு பொறுப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்தும் மையம்.

மாகாணத்துக்கென அரசியல் யாப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளுக்கு உரியவகையில் மத்திய அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை எனில் அல்லது மேலதிகமான நியாயமான அதிகாரங்களை அரசியல் யாப்புத் திருத்தத்தின் ஊடாகத் தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் மாகாண சபையில் தீர்மானங்கள் முறைப்படி நிறைவேற்றப்படலாம்.

மாகாண சபை அவற்றை மத்திய ஆட்சியின் கவனத்துக்குக் கொண்டு வரலாம். ஆனால் மாறாக மக்களை உசுப்பேற்றுவற்காக அதிதீவிரமான தீர்மானங்களை நிறைவேற்றும் கடைச்சபையாக மாகாணசபையை ஆக்கிவிடக் கூடாது. மாகாண சபையை மக்கள் போராட்டங்களை அறிவிக்கும் தளமாகவோ, மக்கள் போராட்டங்களுக்கான களமாகவோ ஆக்கிவிடக் கூடாது. 

மாகாணசபைகள் மக்களின் நலன்களை கிடைக்கும் வளங்களைக் கொண்டு முன்னேற்ற வேண்டும். தனக்கு வளைந்து குனியாத மாகாண சபையை முடக்கிவிடவே பொதுவாக மத்திய அரசு முனையும். ஆனாலும் அதற்கு அநாவசியமாக சந்தர்ப்பம் கொடுக்காது மக்கள் அளித்த அதிகார சந்தர்ப்பத்தை மக்களுக்குப் பயனுடையதாக தொடர்ந்து செயற்படுத்திக் கொண்டிருக்கும் வகையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

எதிர்க்கட்சி அரசியல் நடத்துகையில் மக்களுக்கும், சட்டங்களுக்கும் பதிலளிக்கும் வகையாகச் செயற்பட வேண்டிய கட்டாய பொறுப்பு ஒரு கட்சிக்குக் கிடையாது. ஆனால் ஓர் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதென்பது அவ்வாறானதல்ல.  அதேவேளை ஒரு மாகாண சபையின் ஆட்சியை நடத்துதல் என்பது மத்திய அரசாங்கம் கொடுக்கும் பணத்தைப் பெற்று அதனை அரசாங்க ஊழியர்களுக்குச் சம்பளமாகப் பிரித்துக் கொடுக்கும் ஏஜண்டு நிர்வாகமும் அல்ல.

மாகாணசபைகள் பல்வேறு அடிப்படையான விடயங்களில் அதற்கான சட்டங்களை இயற்றினாற்தான் அதன் அபிவிருத்தித் திட்டங்களை ஆக்க முடியும், அவற்றுக்காக அரச பணத்தைச் செலவளிக்க முடியும்,  அடிப்படையான அதனது நிர்வாகத்தை முறையாகச் செயற்படுத்த முடியும்! அவைகள் தமக்கான பல வரி வருமானங்களைத் தீர்மானிக்க வேண்டியவை! உரிய சட்டங்களின்றி வரிவருமானங்களைத் திரட்ட முடியாது.

மாகாண சபைகள் மாகாண அபிவிருத்தித் திட்டங்களைச் சாதித்துக் காட்ட வேண்டியவை. தமது மாகாணத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியவை. மாகாண உற்பத்தியாளர்களுக்கு வேண்டிய பொருளாதாரக் கட்டுமானங்களை வழங்க வேண்டியவை. மாகாணத்தில் உற்பத்தி வளர்ச்சிகளை உறுதிப்படுத்த வேண்டியவை. சமூக நீதி, நியாயங்களை நிலைநாட்ட வேண்டியவை. இவற்றுக்கான சட்டங்களை ஓட்டைகளின்றி ஆக்குவதுவும் மாகாண சபைகளின் கடமை.

அரசியல் யாப்பு மற்றும் ஏற்கனவே இயற்றப்பட்டிருக்கும் சட்டங்களின் எல்லைகள் மீறாது ஆட்சி நிர்வாகங்களை நடத்த வேண்டும். அதற்கு இருக்கும் சட்டங்களையும் புதிதாக ஆக்கப்படும் சட்டங்களையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தம்மால் ஆக்கப்படும் சட்டங்களின் ஒவ்வொரு பந்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளவை சமூகத்தில் எதிர்காலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் முன்கூட்டியே அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அந்த ஆற்றல்மிக்கவர்கள் பலர் மாகாணசபையில் பிரதிநிதிகளாக இருக்கும் வகை செய்ய வேண்டும். அதேபோல ஆட்சியை நடத்துபவர்கள் நிர்வாக ஆற்றல் மிக்க சிறந்த மற்றும் ஊழல்பேர்வழிகள் அல்லாத அரசாங்க உத்தியோகத்தர்ளைத் தேடியெடுத்து உரிய பதவிகளில் அமர்த்தி அவர்களுக்குத் தலைமை தாங்கி வழிகாட்டும் ஆட்சித் திறமை கொண்டவர்கள் மாகாண ஆட்சியில் போதிய அளவு பிரதிநிதிகளாக இருக்கும் வகை செய்யவேண்டும்.

அன்றைய வடக்கு-கிழக்கு மாகாணசபை சட்டநிபுணர்களையும், நிர்வாக நிபுணர்களையும் பிரதிநிதிகளாகக் கொண்டா இருந்தது என ஒரு வாதத்துக்காக கேள்வி எழுப்பலாம். போராளிகளாக இருந்த பொடியன்களைக் கொண்டுதானே அந்த ஆட்சி நடந்தது என வாதிக்கலாம். ஆனால் அந்த வாதம் இங்கு பொருத்தமானதல்ல. 

அப்போது இலங்கைக்கே மாகாணசபை ஆட்சிமுறை புதியது. அந்த வடக்கு கிழக்கு மாகாணசபை குறுகிய காலமே உயிர்வாழ்ந்தது. அது தொடர்ந்து செயற்பட்டிருந்தால், பல சட்டவல்லுனர்களைப் படிப்படியாக உள்வாங்கி கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆற்றல்களை உள்வாங்குவதில் அந்த மாகாணசபை அஞ்சாது செயற்பட்டது என்பது  பலருக்கும் தெரியும்.

அந்த மாகாணசபை இலங்கையிலேயே அதிசிறந்த அரசாங்க நிர்வாகிகளைக் கொண்டதாக இருந்தமை இன்னமும் பலராலும் பேசப்படுகிற ஒரு விடயம். அந்த மாகாண ஆட்சியானது கட்சி, கொள்கை என்பவற்றுக்கு  அப்பால் நிர்வாகத் திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நிர்வாகிகளைத் தேடியெடுத்தது, அவர்களைக் கௌரவம் தவறாது வழிகாட்டி, அவர்களின் ஆற்றல்களை மக்களுக்காகப் பயன்படுத்தியது என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். அந்த வடக்கு-கிழக்கு மாகாண சபை இலங்கையின் அனைத்து மாகாண சபைகளுக்கும் உந்து சக்தியைக் கொடுத்தது.

ஒரு  ஆட்சியை நடத்துவதற்கு சட்டத்துறைத் தொழில் செய்பவர்களாலும்,  அரச நிர்வாக அநுபவம் மிக்கவர்களாலும் மட்டும்தான் முடியுமா என்றால் அப்படி  இல்லை என்று நிச்சமாகச் சொல்லலாம். அரசியற் போராட்டங்கள் மற்றும் ஆழ்ந்த அரசியல் ஈடுபாடுகளினூடாக வந்தவர்களும் அதனை ஆற்ற முடியும்.

மக்களுக்கான ஆட்சியை நடத்துபவர்கள் மக்களுக்கு உண்மையானவர் களாகவும், ஒழுக்கநேர்மை கொண்டவர்களாகவும், கொள்கைப்பிடிப்பு உள்ளவர்களாகவும் இருப்பது மிக அவசியமாகும். ஆனாலும் அவர்களோடு சட்ட அறிவாற்றல் கொண்டவர்களும், அரசநிர்வாக அநுபவமுள்ளவர்களும் கணிசமான அளவு பங்காளர்களாக ஆட்சி நிர்வாகத்தில் ஒருங்கிணைந்து உயிர்த்துடிப்பான பாத்திரத்தை வகிக்க வேண்டும்.

ஒரு மத்திய அமைச்சராக இருப்பவருக்கு அவை கட்டாயமாக அவசியம் என்றில்லை. ஏனெனில் அங்கு அந்த அமைச்சுக்குத் தேவையான அரச நிர்வாகக் கட்டுமானம் ஏற்கனவே உண்டு. ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சராக ஆகுபவருக்கு மேற்கூறப்பட்டவை மிகவும் அவசியம். அதிலும் மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு எதிராக நீந்தி ஆட்சி நடத்துவதற்கு இன்னும் பல மடங்கு அவசியம். அதிலும் இப்போது இருந்து கொண்டிருக்கும் வடக்கு மாகாண நிர்வாகம் ஊழற்பேர்வழிகள் நிறைந்ததாகவும், சிங்கள மந்திரிகளுக்குக் கூழைக் கும்பிடு போட்டு தமது சுயநல காரியங்களைச் சாதிக்கும் வல்லவர்களைக் கொண்டதாகவும் உள்ளது. அந்த வளைவுகளை நிமிர்த்தி எடுப்பதே இமாலய வேலை.

இங்கு த.தே.கூ. தொடர்பாக உள்ள அவநம்பிக்கைகளுக்கான காரணம் என்னவென்றால் கையளில் வைத்து நடத்தி வரும் உள்ளுராட்சி மன்றங்களை ஆளுவதிலேயே இத்தனை ஓட்டை விடும் த.தே.கூக்காரர்கள் மாகாண சபை ஆட்சியை நிச்சயமாகக் கோட்டை விட்டு விடுவார்கள் என்ற அபிப்பிராயமே.    

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com