Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர்களுக்கு இன்று அரசியற் தலைமை இல்லை (பகுதி 4)

இவ்வாறு பரவலாக தமிழ் சமூகத்தவர்கள் கருத்து வெளியிடுகின்றனர்

(அ. வரதராஜப்பெருமாள்)

(இவ் ஆய்வுக் கட்டுரை சம்மந்தமான கருத்துக்கள், விமர்சனங்கள், அபிப்பிராயங்களை சூத்திரம் இணையத்தளம் எதிர்பார்கின்றது. தொடர்புகளுக்கு: sooddram@gmail.com)

 திரு ஆனந்தசங்கரி, திரு சித்தார்த்தன், தோழர் சிறிதரன் போன்றவர்களின் தொடர்ச்சியான தேர்தற் தோல்விகளுக்கு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் புலிகளால் உருவாக்கப்பட்டு இன்றைய தமிழ்ச் சமூகப் பிரமுகர்களால் காப்பாற்றப்பட்டு வரும் இந்த தேசியப் போர்வைக் கலாச்சாரத்தின் செல்வாக்கே காரணமாகும். அடுத்த தேர்தல்களில் தமிழ் சமூகப் பிரமுகர்கள் ஆதரிக்கும் சின்னத்தில் வேட்பாளர்களாக நின்றால் வெல்லலாம். அல்லது தமது கட்சிச் சின்னத்தை இந்த தமிழ் பிரமுகர் சமூகம் ஆதரிப்பதற்கான வழிவகை செய்தாலே வெல்லலாம்..  தமிழ்ப் பிரமுகர்கள் சமூகத்தின் திரண்ட ஆதரவு இல்லாமல் அல்லது அரச வல்லமைகளின் துணையில்லாமல் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஒருவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு அந்தக் கட்சி மக்கள் மத்தியில் வலுவான நிறுவன அமைப்புக்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்த நிலைமை இன்று எந்தத் தமிழ்க் கட்சிக்கும் கிடையாது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வேட்பாளராக சுரேஷ் பிரேமச்சந்திரன் தேர்தலில் நின்ற போது இரண்டாயிரம் வாக்குகள் கூடப் பெறவில்லை. ஆனால் அவரால் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் இருபதாயிரம் விருப்பு வாக்குகளைப் பெற முடிந்தது. அவர் தமிழரசுக் கட்சியின் சின்னத்தை விட்டு மீண்டும  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிச் சின்னத்தில் தனித்து கேட்டாலோ அல்லது வேறேதேனும் சின்னத்தில் தமிழ் சமூகப் பிரமுகர்களின் திரண்ட ஆதரவு இன்றிக் கேட்டாலோ முன்னைய பழைய நிலைதான் அவருக்கு. யாழ்ப்பாணத்தில் மிக அதிகப்படியான எண்ணிக்கை இதழ்களை விற்கும் உதயனின் சரவணபவன் கூட வீட்டுச் சின்னத்தை விட்டு தனியாக ஒரு கட்சிச் சின்னத்தில் கேட்டால் அவரால் ஓராயிரம் வாக்குகளைக் கூட பெற முடியாது அவர் நன்கு அறிந்திருந்த படியினால்த்தான் அவர் ஒற்றைக்காலில் நின்று தனது பத்திரிகைப் பலத்தைக் காட்டி தமிழரசுக் கட்சியின் தலைவர்களை மிரட்டி தமிழரசுக் கட்சியின் வேட்பாளரானார். 

 

இதே நிலைதான் வன்னி மாவட்ட கௌரவ பா. உ க்களுக்கும். திரு. அடைக்கலநாதன் செல்வம், திரு விநோதராதலிங்கம் மற்றும் திரு.சிவசக்தி ஆனந்தன் போன்றோர். தமிழரசுக் கட்சி, அதன் வீட்டுச்சினனம் என்று இல்லாமற் போட்டியிட்டிருந்தால் தேர்தலில் வெற்றியின் கிட்டக் கூட போயிருக்க முடியாது என்பதை அவர்களே அறிவார்கள்.

கௌரவ பா.உ சிறீதரன் அவர்கள் எவ்வளவுதான் வெளிநாட்டுப் புலிகளின் ஆதரவைப் பெற்றிருந்தாலும் கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி அதன் வீட்டுச் சின்னம் என்று இல்லாமல் தானே ஒரு கட்சியாகச் செயற்பட்டு புலிச் சின்னத்தைக் கேட்டு வாங்கி பொட்டியிட்டிருந்தால கூட அவரால் பா.உ வாக ஆகியிருக்க முடியாது.

இதே காரணங்களால்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 'குதிரை' கஜேந்தின், கஜேந்திரன் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் போன்ற புலிகளின் நேரடி வேட்பாளர்களால் வெற்றியை ஈட்ட முடியவில்லை.

உண்மையில், அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் பலர் வென்றமை தமிழரசுக் கட்சியின் பெயர் வீட்டுச் சின்னம் என்பதனால் என்பதைவிட வடக்கு கிழக்கின் தமிழ்ப் பிரமுகர்கள் சமூகம் பெரும்பாலும் தாம் ஆதரவளிக்கும் வேட்பாளர்கள் யார்? எவர்?  எப்படிப்பட்டவர்கள்? பதவி கிடைத்ததற்குப் பிறகு என்ன செய்வார்கள்? என்ற கேள்விகள் எதுவுமின்றி ஆதரவளித்ததாலேயே அந்த வேட்பாளபர்களால் வெற்றி அடைய முடிந்தது..

அதற்குப் பின்னர் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலும் அதுவேதான் நடந்தது. அடுத்து வரவிருக்கும் யாழ்ப்பாண மற்றும் கிளிசொச்சி மாவட்டங்களுக்கான உள்ளுராட்சி மன்றங்பகளுக்கான தேர்தலிலும் இதுவேதான் பெரும்பாலும் நடக்கும். இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற்றால் அதில் எந்தக் கட்சியின் சின்னம் பெரும்பாலான இடங்களை வெல்லும் என்பதுவும் இந்த தமிழ் பிரமுகர்கள் சமூகத்தின் திரண்ட அபிப்பிராயத்தாலேயே நிர்ணயிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக்கட்சி, வீட்டுச் சின்னம் என்று இல்லாமல் தமிழர்களுக்கு எந்த வாக்குறுதியையும் வழங்காமல், இந்த நாட்டில் சிங்களவர்களே முதற்தரப் பிரஜைகள் தமிழர்கள் சிங்களவர்களை அண்டியே வாழ வேண்டும் என மார் தட்டி, புலிகளுக்கு எதிரான போரில் தனது இராணுவத் தலைமையின் திறமையாலேயே புலிகளை அழிக்க முடிந்தது என பெருமிதம் காட்டிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்குத் தானே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலும் தமிழர்கள் வாக்களித்ததார்கள். அந்தப் பெருமையை நிலைநாட்டியது தமிழ்ப பிரமுகர்கள் சமூகம்தானே.

இலங்கையில் நிலவும் அரசியல் அதிகாரக் கட்டமைப்பில் தமிழர்கள் உயிரோட்டமாக ஒருங்கிணைக்கப்படவில்லை, தமிழர்களுக்கு மத்திய ஆட்சியில் உரிய பங்கில்லை, தமிழர்களுக்கு மாகாண அளவிலும் சுயாட்சி இல்லை, தமிழர்களின் பொருளாதார அபிவிருத்திக்கு அரசின் ஒத்துழைப்பு மிகக் குறைவே, தமிழர்களின் பிரதேசங்கள் கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டன, இங்கு தமிழர்கள் இனவாரியாக பல்வேறு தளங்களில் பாரபட்சங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதங்கள் இல்லை, தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் சிங்களமயமாக்கப்பட்டன. பௌத்த மதம் மட்டுமே அரசின் உதவிகளுக்குரிய மதமாக்கப்பட்டது. தமிழர்களுக்கு நீதியின் ஆட்சியில் சமத்துவமில்லை. இராணுவத்தில் தமிழருக்கு இடமேயில்லை, தமிழருக்கு பொலிஸில் தம்மாத்துண்டு பங்கு மாத்திரமே. அமைச்சர் பதவிகளில் தமிழர்களுக்கு ஓரக் குந்துகள் மட்டுமே. சுதந்திர இலங்கையின் ஆளும் அரசியலானது இலங்கையில் வாழும் பெரும்பான்மையான தமிழர்களின் மனங்களில் இலங்கை என்பது எமது தாய்த்திருநாடு, இந்த நாட்டில் நாமும் சமவாய்ப்புக்கள் பெற்ற பிரஜைகள  என்ற எண்ணங்களை வளரவிடாமல் ஆக்கிவிட்டது.  

இவ்வாறான நிலைமைகளின் பின்னணியில் தமிழர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக வகுத்துக் கொள்வதில் தவறில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரே மாகாண நிர்வாகமாக ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு கிழக்கு மாகாணத்தின் தமிழ்ப் பேசும் மக்களிற் பெரும்பான்மையானோர் ஆதரவளிப்பார்களா இல்லையா என்பது ஒருபுறமிருக்க அக்கோரிக்கைக்கு ஆதரவாக ஒரு கோணத்தில் அரசியல்ரீதியான நியாயங்களைக் காட்டலாம்; மாகாண சபைகளுக்கு மாநில சுயாட்சி அளவுக்கு சுய நிர்ணய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனலாம். முஸ்லிம் மக்களுக்கு இலங்கை முழுவதுவும் தாயகமாக இருந்தாலும் இலங்கைத் தமிழர்களுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களே தாயகமாகும். தென்னிலங்கையானது வர்த்தகம் மற்றும் அரச பதவிகள் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு குடியேறிய இடமே.

இவ்வாறான வகைகளில் தமிழர் தேசிய இனம், தமிழர் தாயகம், தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை என தமிழ் பிரமுகர்கள் சமூகம் கொண்டிருக்கும் அபிஷைகளிற் தப்பில்லை. தப்பெல்லாம் இந்தப் போர்வையில் தப்பிலிகளும் தறுதலைகளும் தமிழ் சமூகத்தின் தலைவர்களாவைத் தடுக்காததிற்தான் காணப்படுகிறது.  இங்கு பொய்யர்களும் போக்கிரிகளும் தமிழ்த் தேசியப் போர்வைக்குள் புகுந்து கொண்டு தமிழர்களுக்குத் தலைவர்களாவதற்கு தமிழ் சமூகத்தின் சமயத் தலைவர்களும், பேராசிரியர்களும், பத்திரிக்கைக்காரர்களும், சட்டத்தரணிகளும் மற்றைய சமூகப் பெரியோர்களும் காரணமாக நின்று செயற்பட்டதிற்தான், இன்னமும் அவ்வாறே செயற்பட இருப்பதிற்தான் தவறு இருக்கிறது.

அரசாங்கம் தனக்குச் சார்பான ஆட்களையே தேடும் என்தில் புதினம் ஒன்றுமில்லை. அதிலும் சிங்கள இனவாதிகள் தமிழர்களின் நலன்களுக்கு எதிரான குரல்களை எழுப்புவதற்கா  ஆட்களையே மூன்னிலைப்படுத்துவார்கள்; என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. எனவே அரசாங்கமும் சிங்கள இனவாதிகளும் தமிழர்களில் எப்படிப்பட்டவர்களை தலைவர்களாக்குகிறார்கள் - தலைவர்களாக்க முற்படுவார்கள் என்பதெல்லாம் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையே. இங்கு தமிழ்ச் சமூகத்தின் பொது அபிலாஷைகளை முன்னிலைப்படுத்தும் தமிழ்ப் பிரமுகர்கள  சமூகம் எவ்வாறு நிதானமாகவும் சரியாகவும் பொறுப்பாகவம் தமிழர்களுக்கான அரசியற் தலைவர்களை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தகிறார்கள் - ஆதரவாக நிற்கிறார்கள் என்பதே இங்கு விவாதத்துக்கு உரிய விடயமாகும்..       

தமிழ் இன மக்களுக்கு இன்று அரசியற் தலைமையை வழங்கிக் கொணடிருக்கின்ற தலைவர்களாக உருவாக்கியவர்கள் இந்த சமூகப் பிரமுகர்களே! க்களால் தெரிவு செயயப்பட்ட இந்தத் தலைவர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பாக சரியாகச் செயற்படவில்லை – நேர்மையாக நடந்து கொள்ளவில்லை – திறமையாக விடயங்களைக் கையாளவில்லை என்றால் அதற்கு இந்த சமூகப் பிரமுகர்களும் பொறுப்பாளர்களே! தாம் தலைவர்களாக உருவாக்கியவர்களை சரியாகவும் நேர்மையாகவும் திறமையாகவும் செயற்பட வைக்க வேண்டிய கடமையும் இந்தத் தமிழ்ப் பிரமுகர்களையே சேர்ந்ததாகும்.

ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடக் கூடாது என்பது பொன்மொழி.. தங்களின் மீது நம்பிக்கை வைத்திருந்த தமிழ் வாக்காளர்களை யாருக்கு வாக்களித்து தமிழர்களின் தலைவர்களாக ஆக்க வேண்டும் என்று தமிழ் சமூகப் பிரமுகர்கள் கேட்டுக் கொண்டார்களோ அந்தத் தலைவர்கள் சரியானவாகளல்ல, நேர்மையானவர்களல்ல, திறமையானவர்களல்ல என கருதுவார்களானால் இப்பொழுதே தங்களைத் துணிச்சலோடு சுயவிமர்சனம் செய்வதோடு அந்தத் தவறான தலைவர்கள் மீண்டும் தலையெடுக்காது தடுக்கும் வழிவகைகளைச் செய்தல் வேண்டும்.

அது மட்டுமல்லாது இனியாவது அவ்வாறான தவறு ஏற்பட்டு விடாது கவனமாக இருப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்ும். எந்த சின்னத்தினூடாக தமிழ்த் தலைவர்கள் ஆக்கப்பட வேண்டும் என்பதல்ல பிரச்சினை. ஏந்தச் சின்னத்தினூடாக சரியான தமிழ்த் தலைவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டுமெனக் கருதுகிறார்களோ அந்தச் சின்னத்தில் எப்படிப் பட்டவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் வகையும் ஆற்றலும் தமிழ்ச் சமூகத்தின் பிரமுகர்களுக்கு அவசியமாகும்.

தேர்தலுக்கு யாருக்கு வாக்குப் போட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதோடு ஒரு சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்தில் அக்கறை கொண்டோரின் பொறுப்பு முடிவடைந்து விடுவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களோடு அவர்களைத் தலைவர்களாக்கிய சமூக அக்கறையுடையவர்கள் தொடர்ந்து ஒரு நிறுவனரீதியான ஜனநாயக அரசியல் உறவைப் பேணுவதுவும் அவசியம். தாம் சரியாக நடந்து கொள்ளவில்லையென்றால் தம்மை ஆதரித்த சமூகம் அரசியலிலிருந்து தம்மைத் தூக்கியெறியும் வகையாக அம்பலப்படுத்திவிடும் என்ற பயம் அரசியற் தலைவர்களுக்கு எப்போதும் இருக்கும் நிலையை சமூக அக்கறையுடையோர் நிறுவ வேண்டும்.

கருத்துக்களுக்கு தனிமனித உரிமைகள் இருக்க வேண்டும். ஆனால் சமூகம் தொடர்பான தனிமனித செயல்கள் சமூகத்தைப் பாதிக்காத வகையாக இருக்கும் பொறுப்பை அரசியற் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் கொண்டிருக்க வேண்டும். எனவே அரசியற் தலைவர்களின் ஒவ்வொரு செயல்களும் சமூக அங்கீகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும். சமூக அக்கறையடையோர் அரசியற் தலைவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பவர்களாகவும் ஆலோசனை வழங்குபவர்களாகவும் தேவைப்படுமிடத்து கட்டுப்படுத்துபவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

தமிழ் சமூகத்தின் சமயத் தலைவர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், அரசாங்க நிர்வாக அதிகாரிகள், உயர்கல்வி மாணவர்கள், பத்திரிகைக்காரர்கள், தொழிற் சங்களின் தலைவர்கள், சனசமூக மன்றங்களின் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்களுக்கு தமிழ் இனத்தின் அரசியல் அபிலாஷைகள் மீது உண்மையான அக்கறை இருக்கிறதா இல்லையா என்பதை அவர்களால் ஆதரிக்கப்பட்டு அரசியற் தலைவர்களாக இருப்போரின் செயல்களிலும் நடத்தைகளிலும் இருந்தே கண்டு கொள்ளலாம்..

தலைவர்கள் நல்லவர்களாக இருக்கலாம் அல்லது கெட்டவர்களாக இருக்கலாம். ஏந்த சமூகமும் எந்த வேளையிலும் அதற்கு அரசியற் தலைமையில்லாமல் இருப்பதில்லை. தலைமை இல்லாமல் ஒரு மக்கள் கூட்டம் இருந்தால் அது ஒரு சமூகமாகமாட்டாது. இந்த நவீன காலத்தில் மட்டுமல்ல ஆதி கால சமூகமும் அரசியற் தலைமை கொண்டே இருந்தது. அந்த வகையில் இலங்கைத் தமிழர் சமூகத்துக்கும் அரசியற் தலைவர்கள் உள்ளார்கள். அதில் வெற்றிடம் ஏற்படடிருக்கிறதென்றில்லை. அந்தத் தலைவர்கள் நல்லவர்களாக இல்லை அல்லது நேர்மையானவர்களாக இல்லை அல்லது தமிழர் சமூகத்தின் இன்றைய அரசியற் தேவைகளுக்கு உரிய விதமாக திறமையானவர்களாக இல்லை என்று கருதப்பட்டால் அவர்களைத் தூக்கியெறிந்து விட்டு உரிய தலைமையை ஆக்கும் வல்லமையும் உரிமையும் இலங்கைத் தமிழ் மக்களிடமே உள்ளது.

இன்றைய அரசியல் நாகரீக வளர்ச்சியில் ஒரு சமூகத்தின் தலைவர்கள். அந்த சமூகத்துக்கு அப்பாலிருந்து ஆவதில்லை. வெளிச்சக்திகளின் செல்வாக்கு எவ்வளவுதான் பிரயோகிக்கப்பட்டாலும் ஒரு சமூகத்தின் தலைமை அந்த சமூகத்துக்கு உள்ளேயிருந்துதான் வருகின்றது. அத்துடன் அந்த சமூக மக்கள் பெரும்பான்மையினரின் அங்கீகாரத்தைப் பெற்றதனாலேதான் அந்தத் தலைமைக்கான அரசியல் நியாயாதிக்கமும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  எனவே அதற்குத் தக்கபடி சமூகத்தின் பரந்துபட்ட பொதுமக்களை வழிநடத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்த சமூகத்தில் உள்ள பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகைக்காரர்கள், எழுத்தாளர்கள் சமயத் தலைவர்கள், சமூக சிந்தனையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், இளைஞர் தலைவர்கள் மற்றும் மாணவ தலைவர்கள் போன்றோருக்கே உரியதாகும் என்பதே இந்தக் கட்டுரையில் இழையாக நான் ஓட விட்டுள்ள அடிநாதமாகும்..

 (கட்டுரையாளர் முன்னாள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதல் அமைச்சர், முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர், 1970 களிலிருந்து இலங்கை அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களினூடாக பயணிப்பவர், ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் மூத்த போராளியுமாவார் -ஆர்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com