Contact us at: sooddram@gmail.com

 

20 வருடங்களின் பின்னர் எனது ஊரில் நான்........ பகுதி 2

மறுக்கப்பட்ட உரிமைகளுடன  இந்தியாவில்  வாழ்ந்த ஓர் யாழ்ப்பாணப்  பிரஜை !!!

பாடசாலையிலிருந்து அரசடி வீதி வழியாக என் கணவரின் வீட , பனிப்புலம் அம்மன் கோவில் , பகவதி அக்கா வீடு சென்றேன். அங்கு மதிய உணவு அருந்திய பின்பு என் அம்மாவின் சகோதரி வீடுக்கு சென்றேன .

பாழடைந்த மாளிகை போல இருந்தது. கடதாசி பூ மரமும், காய்த்து சொரிந்த நாவல் மரமும் இல்லை. தாத்தாவும், ஆச்சியும் மனசில் வந்து போச்சினம். ஹரன், கிருபா ,ுதாவை பார்க்க போய் gate இல ஆடிய நாட்களும் வந்து போனது.பக்கத்தில் சின்ன  அண்ணாவும், பெரியம்மாவும் இருந்தினம். சின்னக்கா இருக்கவில்லை. பத்ரகாளி கோவில் போகாமல் சத்தியமனைக்கு போனேன்.

அண்மையில் தான் அப்பாவின் விடைபெறுகிறேன் ஒளிநாடா பார்த்தேன். *

மெயின் ரோட்டிலிருந்து சிவப்புகொடிகள் கட்டிய தெரு வெளிச்சுபோய் இருந்தது. ராஜசுந்தரம் மாஸ்டர் வீடு ஒளி இழந்து இருந்தது .ஒழுங்கையில் யாரும் இல்லை. வீட்டடியில் வாகனம் நின்றதும் கனகம் ஓடி வந்தார். என் அப்பாவை, என் அண்ணாவை, ஏன ? என் உறவுகளையெல்லாம் அவளில் பார்த்தேன். வெடித்து அழுதேன்.எனக்காக, என் குழந்தைகளுக்காக அவள் வாழ்ந்தது எனக்கு நன்றாக தெரியும். அதை என் சத்தியமனையில் பார்த்தேன். Fridge குள்ளே வைத்த  எடுத்தது போல  குளிர்மையாக அழகாக "சத்தியமனை" இருந்தது. அந்த அழகை நான் சுப்பிரமணியம் பூங்காவில் கூட பார்கவில்லை. கடவுள் நம்பிக்கையும் மூடநம்பிகைகளும் அற்ற என் அப்பா ,என அம்மாவின் ஆசைக்காக நட்ட துளசி செடி செழித்து வளர்ந்திருந்தது . வாழை, தென்னை, ஜம்ப , மா, வேம்பு, விளாதி ,எலும்பிச்சை எல்லாம் குளிர்மையாக காய்த்து தொங்கியது.

எங்கள் மாமா தான் அந்த நிலத்தை வாங்கி தந்தார். முள்ளுச்செடிகளும் பத்தையுமா  இருந்தது . அப்பா, அம்மா, அண்ணா, தம்பி சேர்ந்து தான் "சத்தியமனை" ஆனது. முதலில் கட்டியது கழிப்பிடம். நான் அப்போது 5ம் வகுப்பு படித்தேன். முதலில் சிறிய குடிசை வீட்டில் ஆரம்பித்து சிறிது சிறிதாக கட்ட தொடங்கினோம். வீட்டுக்கு என்  ெயர் வைப்பது என்ற போது அண்ணா தான் "சத்தியமனை" யை தெரிவு செய்தார். அப்போது அது ஒரு குடிசை.

உண்மை வாழவேண்டும் என்று அப்பா வாழ்ந்தார். ஒரு கம்யூனிஸ்ட் தன் குடும்பத்தை எப்படி அமைக்கவேணும், நாட்டை எப்படி நேசிக்க வேணும , மக்களை எப்படி உணர வைக்கவேணும் என்பதுக்கு உதாரணமாக  அப்பா வாழ்ந்தார். வறுமையிலும் செம்மையாக இருந்தார். சத்தியமாக வாழ்ந்தார். அவருடைய நூல் நிலையம , ஒழுங்காக அடுக்கப்பட்டு இருந்தது. 60ம் ஆண்டிலிருந்து தேவையான பத்திரிகைகளின் சேகரிப்பு இருந்தது. அவரின் சில டயரிகள் இருந்தன. எங்கள் மாமாவின் ஓர் டையரியும் இருந்தது. எங்கள் அப்பா, அம்மாவின் திருமணம் பற்றி குறிப்பிட்டு இருந்தார்.

நாங்கள் 3 பேரும் அடிகடி விழுந்து எழும்புவோம். எப்போதும் முதலுதவி பெட்டி இருக்கும். அதைகூட அப்பா தான் உருவாக்கினார். அவர் ரசித்து சேகரித்த பொருட்கள் பெரும்பாலும் அப்படியே இருந்தது. அவர் படுத்த கட்டில், பார்த்து திரும்பவும் அழுதேன். என்னால் எதை மறக்க முடியும ? அப்பாவை நேசித் , அவரின் கொள்கைகளை புரிந்துகொண்ட ஒருவருடன் வாழும் வாழ்க்கை எனக்கு கிடைத்து. அப்பாவையும், "சத்தியமனை"யும் மீறி ஒரு செக்கனும் என்னால் வாழமுடியவில்லை. அதனால் தான் என் குழந்தைகளையும் என்னால் சரியாக வளர்க்க முடிந்தது.

எங்கள் அம்மா சொல்லுவ , உப்பு கூட நாங்கள் தான் வாங்கி வாழதொடங்கினோம் என்று. எந்த வழியிலும் உதவி கிடைக்கவில்லை. காதல் திருமணம்,கலப்பு திருமணமும் கூட. அப்பா தன்னுடைய வேலையை விட்டு விலகி முழுநேர கட்சி வேலையில் ஈடுபட்டார். அம்மாவின் ஆசிரிய வேலை தான் எல்லாவற்றுக்கும் உதவியது. அம்மாவின் வேலை மாற்றம் காரணமாக பல வீடுகள் வாடகைக்கு இருந்தோம். அப்பாவின் அரசியல் வாழ்க்கையினால் அடிக்கடி போலீஸ் தேடி வந்தது. வீடு வாடகைக்கு எடுப்பதும் கஷ்டமாக இருந்த சூழலில் தான் "சத்தியமனை" அமைந்தது. சண்முகதாசன் மாமா முதல் பல கட்சி தோழர்கள் வந்து போன இடம். எங்கள் வீடுக்கு கடைசியாக வந்தவர் வி .ஏ .கந்தசாமி மாமா (பொதுச் செயலாளர், ஈழத் தொழிற்சங்க சம்மேளனம்) . அப்பா சில அரசியல் பிரச்சனையால் சிக்கலில் இருந்த சமயம் வந்து அப்பாவின் கைகளை பிடித்து அழுதத , பின்னர் நாங்களும் அழுதது இன்றும் நினைவு இருக்கு. ஆனால் அப்பா அவரின் உதவியை மறுத்துவிட்டார்.

ஒரு பெட்டியினுள் பல கடிதங்கள் இருந்தன. அதில் டானியல் மாமா அப்பாவிற்கு எழுதிய கடிதங்கள். தன்னுடைய நிலத்தில் உள்  கட்சியின் புத்தக நிலையத்தை அகற்றுமாறு எழுதியது. இப்படி பல கடிதங்கள் எடுத்து வந்தேன். அதில் எனக்காக அப்பா எழுதியது 23 May 1989.

பல கடிதங்கள், கட்டுரைகள , அவரின் டயரிகள் ,புகைப்படங்கள் என்று நிறைய சேகரிப்புகள் கிடைத்தன.அவருடைய தீர்க்கதரிசனமான எழுத்துகள் வியப்பில் ஆழ்த்தின. இதே போல அண்ணா சிறையில்  இருந்து அனுப்பிய கடிதங்கள் , பின்னர் போராளிகள் அமைப்பிலிருந்து விலகிய பின்பு எழுதிய காரணங்களும், கடிதங்களும் இருந்தன. இவற்றை பார்த்துகொண்டு இருந்தபோது பேபி அக்கா, சின்னக்கா தன் இரு பெண் பிள்ளைகளுடன் வந்தனர். திரும்பவும் கண்ணீர், பல கதிகள், நல விசாரிப்புகள , தழுவல்கள் அந்த அன்புக்கு ஈடுஇணை இல்லை. அந்த நேரம் நல்லை அண்ணாவும் வந்தார். அண்ணாவின் நண்பர் என்பதுடன , இவர் ஆரம்பகாலம் தொட்டு  போராளிகள் அமைப்பிலிருக்கும் ஓர் விசுவாசம் மிக்க போராளி. போராட்டத்தின  ஒர பகுதியாக அவர் வெளிநாட்டில்  சிறை இருந்த போது, அப்பா அவருக்கு புத்தகங்கள் அனுப்புவதை தவறாமல் செய்து வந்தார். அத்துடன , அப்பா, அம்மாவின் திருமணத்தில் இருந்த சாதி முரண்பாடுகளால் அப்பாவுடன் தொடர்புகளை  துண்டித்த அப்பாவின் குடும்பம் , அவரின் தாயின்  மரண நினைவு நூலில் கூட அப்பாவின் பெயரை போடவில்லை.  அக்கா மீது மிக அன்பு கொண்ட அப்ப , அவவின் மரண வீடுக்கு நல்லை அண்ணையுடன் தான் சென்று வந்தார். 1986 August இல் நல்லை அண்ணை கடைசியாக எங்கள் சத்தியமனை இல் பார்த்தேன்.அவர் முள்ளிக்குளம் போவதாக சொல்லி  ென்றார். பின்னர் 1994 இல் என் தம்பியுடன் சென்று மகர சிறையில  ார்த்தேன்.

"சத்தியமன " சந்தோசங்கள், கவலைகள், கண்ணீர், இரத்தம், பெருமைகள் ,சாதனைகள் எல்லாம் பார்த்த வீடு. அண்ணா 9 ஆம் வகுப்பு படிக்கும் போது சிறுபொறி என்று ஓர் கையெழுத்து பத்திரிகை நடாத்தினார். அதற்காக ஒரு சிறு காரியாலயம் கட்டினோம். உண்டியல் நிதி சேகரித்து தொழிலாளி பத்திரிகைக்கு கொடுப்போம .

தொடரும்.......

திருமதி.சத்தியமலர  இரவீந்திரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com