Contact us at: sooddram@gmail.com

 

மார்கழி 13

புலிகள் ஈபிஆர்எல்எவ்அழித்தொழிக்க முனைந்து 25 வருடங்கள் கடந்துவிட்டன...

(தோழர் மோகன்)

 'தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் ...தர்மம் மறுபடியும் வெல்லும்.'

1986 மார்கழி 13 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பக்கஙகளில் துயர் தோய்ந்த ஒருநாள். விடுதலை இயக்கங்களை அழித்தொழித்து தனது ஏக அதிகாராத்தை நிலை நிறுத்தும் ஆசையில் பிரபாகரன் தனது ஆயுததாரிகளை ஈபிஆர்எல்எவ் மீது ஏவி விட்ட நாள். தமிழ் மக்களின் விடுதலையை குறிக்கோளாகக் கொண்டு ஆயுதந்தாங்கிய புலிகள் இயக்க இளைஞர்கள் பிரபாகரனதும் அவருக்கு அருகிலிருந்து ஆலோசனை வழங்கியவர்களதும் சூழ்ச்சிக்கு பலியாகி ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

 ஏன் எதற்கு என்று அறியாமல் தலைமையின் கட்டளை என்ற பேரில் ஈபிஆர்எல்எவ்சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். தமது இளமைக்கால ஆசைகளை தூக்கி எறிந்து அர்ப்பண உணர்வோடு தமிழ் மக்களின் விடிவிற்காக போராட முன்வந்த இளைஞர்கள் எவ்வித காரணமுமின்றி கொல்லப்பட்டனர். துன்புறுத்தப்பட்டனர். ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களை பாதுகாத்து வீடுகளில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர்களை தமது முகாம்களில் கொண்டு வந்து ஒப்படைக்குமாறும் கிராமங்கள் தோறும் வீதிகளை வலம் வந்த புலிகளின் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன. ஆனாலும் புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி தோழர்கள் பலர் மக்களாலும் உறவினர்களாலும் பாதுகாக்கப்பட்டனர்.

பல இடங்களில் கிராம மக்கள் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களை கைது செய்ய வந்த புலிகளை பகிரங்கமாக எதிர்த்து நின்று பாதுகாத்தனர். புலிகளின் அராஜகத்தின் முன்னால் தோற்றுப்போய்விட்டாலும் முதல் தடவையாக மக்கள் ஒன்று திரண்டு ஊர்வலமாக சென்று வீதியை மறித்து ஈபிஆர்எல்எவ் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலை தடுக்க முனைந்தனர்.

இவை அனைத்துக்கும் மத்தியில் ஒரு கூட்டம் தமது சொந்த நலன்களை நோக்கமாக கொண்டு புலிகளின் நடவடிக்கைகளுக்கு உந்துதலாயிருந்ததையும் மறந்துவிட முடியாது. எது எப்படியிருந்தபோதும் வீரத்திலும் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் உயர்ந்த தமிழ் சமூகம் புலிகளின் துப்பாக்கிகளால் மௌனமாக்கப்பட்டிருந்தது.

புலிகள் ஈபிஆர்எல்எவ்அழித்தொழிக்க முனைந்து 25 வருடங்கள் கடந்துவிட்டன. அன்று தொடக்கம் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா தோழர் கிருபா தோழர் ஜோர்ச் தோழர் கபூர் தோழர் கதிர், தோழர் பெஞ்சமின், தோழர் றொபேட் போன்ற தலைமைத் தோழர்கள் உட்பட ஈபிஆர்எல்எவ் இன் பல நூற்றுக்கணகாகான தோழர்களை பிரபாகரனின் படைகள் கொன்றொழித்திருந்தன.

துரோகிகள் துணைப்படைகள் அரசாங்கத்தின் எடுபிடிகள் என சரமாரியான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டும் மக்கள் மனங்களிலிருந்து எம்மை துடைத்தழித்துவிட முடியவில்லை.

அதேவேளை முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு இந்த இரண்டு வருடங்களுக்குள்ளாகவே துரோகிகள் - துணைப்படைகள் - அரசாங்கத்தின் எடுபிடிகள் -காட்டிக்கொடுப்பவர்கள் - மோசடிப்பேர்வழிகள் என தங்களுக்குள் மோதிக்கொள்வதை காண்கிறோம்.

தமது சொந்த நலன்களை பாதுகாத்துக்கொள்ள ஈபிஆர்எல்எவ்சேர்ந்த ஒரு சிலர் புலிகளிடம் சோரம் போய் ஈபிஆர்எல்எவ்உருக்குலைக்க முனைந்தபோதும் ஈபிஆர்எல்எவ் இன் கொள்கை கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கவும் மக்களின் நலன் சார்ந்த தோழர் பத்மநாபாவின் இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்லவும் ஆயிரக்கணக்கான தோழர்கள் உள்நாட்டிலும் உலக நாடுகள் பலவற்றிலும் இன்றும் செயற்பட்டுக்கொண்டுள்ளனர். ஆதரவு நல்கி வருகினறனர்.

தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களுக்கு கிடைத்த சட்டவலுவுள்ள ஒரே தீர்வு ஈபிஆர்எல்எவ் இன் காத்திரம் மிக்க பிரதான பங்களிப்போடும் நூற்றுக்கணக்கான தோழர்களின் உயிர் தியாகத்திற்கு மத்தியிலும் கிடைத்த வடக்கு கிழக்கு மாகாணசபை மாத்திரம் தான் என்பதையும் இங்கே குறித்துக்கொள்ளுதல் பொருந்தும்.  

ஏகபிரதிநிதித்துவ கனவில் ஏனைய இயக்கங்களை அழித்தொழிக்க நினைத்த புலிகள் இந்த 25 வருடங்களுக்குள்ளாகவே தம்மையும் அழித்து தமிழ் மக்களின் 50 வருட போராட்டத்தையும் விழலுக் கிறைத்த நீராக்கி தமிழ் மக்களை நிர்க்கதியான நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளனர். உயிரிழப்புக்களும் உடல் ஊனமும் பாரிய சொத்து அழிவும் அதன் விளைவுகளுமே மக்களை ஆட்டிப்படைக்கும் நிலையையே காண்கின்றோம்.

தமிழ் மக்களின் போராட்டம் புலிகளால் முட்டுச் சந்தில் கொண்டுவந்து விடப்பட்டபோதும  எல்லாரும் சுட்டவை எல்லாரும் பிழை விட்டவை என பொதுமைப்படுத்தி இழிவுபடுத்தும் கபடத்தனம் மேற்கிளம்பியுள்ளதை பார்க்கின்றோம்.

மக்களின் உரிமைக்கும் ஜனநாயக மீட்சிக்குமான எமது போராட்டத்தில் கடந்த 30 வருட வரலாற்றில் நாம் பல்வேறு சந்தர்ப்பஙகளில் பல்வேறு தடைகளை எதிர்கொண்டிருக்கின்றோம். அவதூறுகளை கேட்டிருக்கிறோம். அதே வேளை எமது கருத்துக்களுக்கும் நடைமுறைகளுக்கும் செழுமை சேர்க்கும ஆக்க பூர்வமான ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் செவிமடுத்திருக்கின்றோம்.

வரலாறு எம்மை விடுதலை செய்யும். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான எமது பயணத்தை தொடர்வோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com