Contact us at: sooddram@gmail.com

 

இயற்கைக்கு முரணானவர்களா இவர்கள்?

“எனது இயல்பை நான் என் கல்லூரி நாட்களில்தான் உணர்ந்தேன். மற்ற நண்பர்கள் இதர பெண்கள் மீதான பாலியல் ஈர்ப்போடு பேசிக்கொண்டிருப்பார்கள். எனக்கோ, இன்னொரு நண்பனின் மீதுதான் ஈர்ப்பு ஏற்பட்டது. இரண்டு மூன்று ஆண்டுகள் இதை வெளிப்படுத்த முடியாத மனப்புழுக்கத்தோடு தவித்தேன். நண்பர்கள் கேலி செய்தார்கள். சிலர் என்னைவிட்டு ஒதுங்கினார்கள். பிறகு ஒருநாள் என் அப்பாவிடம் சொன்னேன். அவர் என் பிரச்சனையைப் புரிந்துகொண்டார் என்றாலும், என்னைப் புறக்கணிக்கவில்லை என்றாலும், ஆலோசனைகள் கூறி திருத்துவதற்குத்தான் முயன்றார். நான் மாறவில்லை என்று தெரிந்த பிறகு மனச் சங்கடத்தோடு இருந்தார். எங்களுடைய போராட்டத்தை வாழ்த்திப் பேசிய நீங்கள், அதையே ஒரு கட்டுரையாக எழுதி ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தீர்கள். அந்தக் கட்டுரையைப் படித்த அப்பா இப்போது என்னை அரவணைத்துக்கொள்கிறார், அந்தக் கட்டுரையைத் தனது பேஸ்புக் அக்கவுன்ட்டில் ஷேர் செய்திருக்கிறார்...”

அந்த இளைஞர் இப்படிச் சொன்னபோது எனக்குப் பெருமித உணர்வை விட, ஒரு பொறுப்புணர்வுதான் ஆட்கொண்டது. ஓரின ஈர்ப்புள்ளோர், இரு பாலின ஈர்ப்புள்ளோர், மூன்றாம் பாலினத்தவர், பாலின அடையாளமற்றோர் (எல்.ஜி.பி.டி.க்யூ.) ஆகிய, பொதுச் சமுதாயத்தின் பொதுத் தளத்திற்கு வர முடியாமல் வெளியே நிறுத்தப்பட்டவர்களுக்கான ‘நிறங்கள்’ என்ற அமைப்பின் சார்பில் சென்னையில் நவம்பர் 16 அன்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அந்த இளைஞர் இதைச் சொன்னார். லெஸ்பியன், கேய் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் தற்பாலின உறவாளர்கள் தங்களை ஊடகத்துறையினரும், சமூகப் போராட்டத்தளத்தில் இயங்குவோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அந்தச் சந்திப்புக்கு அழைத்திருந்தார்கள் (லெஸ்பியன் என்பது, பெண் மீது ஈர்ப்புக்கொள்ளும் பெண்ணையும், கேய் என்பது ஆணால் ஈர்க்கப்படும் ஆணையும் குறிக்கிற ஆங்கிலச்சொற்கள்).

தற்பாலின உறவாளர்கள் இயற்கைக்கு முரணாக வாழ்வதாக அவர்களை அங்கீகரிக்க மறுக்கிறவர்கள் கூறுகிறார்கள். எது இயற்கை? பெரும்பான்மையானவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதுதான் இயற்கை என்று வற்புறுத்தப்படுகிறது. அரசியல் களத்தில் இப்படி பெரும்பான்மையினர் முடிவுக்கு மற்றவர்களும் உட்படுவது ஆரோக்கியமான ஜனநாயகம். ஆனால், மனித உறவுகளிலும் பெரும்பான்மையினரது வாழ்க்கை முறையைத்தான் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருப்போரும் பின்பற்ற வேண்டும் என்பது அராஜகமே.

ஒரு ஆண் இன்னொரு பெண்ணின் உறவை நாடுவது, ஒரு பெண் இன்னொரு ஆணின்பால் ஈர்க்கப்படுவது இரண்டுமே உடலும் உள்ளமும் சார்ந்த இயற்கையான செயல்பாடாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதறகு சற்றும் குறையாத, உடலும் உள்ளமும் சார்ந்த இயற்கைச் செயல்பாடுதான் ஒருவர் தனது பாலினத்தைச் சேர்ந்த இன்னொருவரிடம் ஈர்க்கப்படுவதும். மொத்த மக்கள்தொகையில் இவர்களது எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால் இவர்கள் இயற்கையோடு முரண்பட்டவர்களாகிவிட மாட்டார்கள்.
இவர்களைப் பரிவோடு அணுகுகிறவர்கள் கூட, இது இவர்களின் உடல் சார்ந்த அல்லது உளவியல் சார்ந்த இயற்கை விபத்து என்பதாக நினைக்கிறார்கள். சிகிச்சைகளால், ஆன்மிக நெறிகளால், வழிகாட்டல்களால் இவர்களைத் “திருத்திவிட” முடியும் என்று கருதி அப்படித் “திருத்துவதற்கான” முயற்சிகளில் இறங்குகிறார்கள். இவர்களுக்குத் தேவை சிகிச்சையல்ல, அங்கீகாரமே. ஆன்மிக நெறிகளல்ல, அரவணைப்பே. வழிகாட்டலல்ல, வழியைத் திறப்பதே.
“திருநங்கையர்களுக்கும் திருநம்பியருக்குமான அங்கீகாரமே இப்போதுதான் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. நெடுங்காலமாக இலக்கியத்திலும் வரலாற்றிலும் திருநங்கையர் பங்களித்து வந்திருப்பது இந்த அங்கீகாரத்திற்கு உதவியுள்ளது. ஆனால் தற்பாலின உறவாளர்களுக்கு அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. ...,” என்று தெரிவிக்கிறார் சங்கரி.
திருநங்கையான இவர் ‘நிறங்கள்’ அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.
புராணங்களில் தற்பாலின உறவாளர்கள் தொடர்பான கதைச் சான்றுகளைப் பார்க்கிறபோது, பெரும்பான்மையினர் போல அவர்களும் மாற்றுப் பாலினத்தவரோடு இணைந்து வாழவேண்டும் என்ற நியதியைச் சொல்வதற்காகப் பிற்காலத்தில் திரித்துக் கூறப்பட்ட கதைகளாகவே தெரிகின்றன.

இத்தகைய அங்கீகார மறுப்பின் காரணமாகவே, இதை ஒரு ஒழுக்க மீறலாகவும், சட்டப்படியான குற்றமாகவும் கற்பித்து வந்திருப்பதாலேயே, இவர்கள் கூனிக்குறுகி வாழ்கிறார்கள். “அப்படி கூனிக்குறுகி வாழ்கிற சூழலில்தான் ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. அப்படி தற்கொலை செய்துகொண்ட தற்பாலின உறவு நாட்டமுள்ளோர் பலர். ஆனால் காரணத்தைச் சொல்ல முடியாத மன உளைச்சலோடுதான் இவர்களில் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் யாருமே ஏதோவொரு கட்டத்தில் தற்கொலை எண்ணத்திற்குத் தள்ளப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தவர்கள்தான்,” என்கிறார் ‘நிறங்கள்’ அமைப்பாளர் சிவா.

குழந்தை பிறக்கிறபோதே, பிறப்புறுப்பின் அடிப்படையில் ஆணாக அல்லது பெண்ணாக அடையாளப்படுத்தி, அவன் அல்லது அவள் என்று சுட்டிக்காட்டுவது தொடங்குகிறது. இதுவே பிற்காலத்தில் ஆண் என்றால் இப்படியிப்படித்தான் இருக்க வேண்டும், பெண் என்றால் இப்படியிப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்துருவாக்கங்களைக் கெட்டிப்படுத்துகிறது. இயற்கையாகவே அந்த வரையறைகளுக்குள் அடங்காதவர்கள் இயற்கையை மீறியவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள் என்றும் சிவா சுட்டிக்காட்டினார். இப்படிப் பாலின அடிப்படையில் அல்லாமல், குழந்தையைக் குழந்தையாகவே, மனிதப்பிறவியாகவே அடையாளப்படுத்துகிற சமுதாயப் பக்குவம் மேலோங்க வேண்டும். அப்போது, திருநங்கையர், தற்பாலின உறவாளர்கள் உள்ளிட்டோர் குறித்த வன்மம் மிகுந்த இளக்காரமான பார்வையும் மாறும்

இவர்களது வாழ்க்கையைப் புரிந்துகொள்கிற மற்றவர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு திருநங்கையர், திருநம்பியர், தற்பாலின உறவாளர்கள் உள்ளிட்டோர் குறித்த நேயம் மிகுந்த புரிதலை ஏற்படுத்துவது முக்கியம். அதே போல், தங்கள் வீட்டுக் குழந்தைகள் இதே போன்ற நிலைமைகளை எதிர்கொள்கிறபோது அதைப் புரிந்துகொண்டு கையாளுவதும் அங்கீரித்து அரவணைப்பதும் முக்கியம்.

இதற்கான உளவியல் ஆலோசனை (கவுன்சலிங்) என்ற பெயரில் இவர்களை மாற்றுகிற முயற்சிதான் நடக்கிறது. ஏதோ இவர்களது வாழ்க்கைத் தேர்வு உளவியல் கோளாறு என்பது போலவும், ஆலோசனைகள் மூலம் இவர்களைத் திருத்தலாம் என்பதாகவுமே அந்த முயற்சிகள் நடக்கின்றன. மாறாக, இவர்களுக்கு நம்பிக்கையளிக்கிற, சக மனிதர்களின் ஆதரவைப் பெற்றுத்தருகிற, கவுரவாமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை அறிமுகப்படுத்துகிற நடவடிக்கைகளாகவே அந்த ஆலோசனைகள் நடைபெற வேண்டும். பள்ளிகளில் அறிவியல்பூர்வமான பாலியல் கல்வி, இவர்களைப் பற்றிய புரிதலுக்கும் உதவுகிற ஆலோசனைகளாகவும் அமைய முடியும்.

மதவாதிகளின் ஆலோசனைகள் இவர்களைச் சிறுமைப்படுத்துவதாக, இவர்களின் உரிமைகளை நிராகரிப்பதாகவே இருக்கின்றன. நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக நடைபெறும் வழக்கில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என அனைத்து மதங்களைச் சேர்ந்த அமைப்புகளும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. மதங்கள் அடிப்படையான மனித உரிமைகளை அவமதிக்கின்றன என்பதற்கு இதுவே சான்று.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் அவர்களது சம உரிமைகளுக்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் வாதாடுகிறோம். குறிப்பாக, பெரும்பான்மை மதத்தினரின் தாக்குதல்களிலிருந்து சிறுபான்மை மதத்தினர் பாதுகாக்கப்பட வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், மதம் வலியுறுத்துகிற தர்மங்களின் பெயரால் இப்படி மிகச் சிறுபான்மையினராக இருக்கிற இவர்களது உரிமைகள் மிதிக்கப்படுவதையும் எதிர்க்கிறோம். இவர்களது உரிமைகளும் சம வாய்ப்புகளும் உறுதிப்படுத்தப்படுவதற்காகக் குரல் கொடுக்கிறோம்.
மாற்றங்கள் எளிதில் வந்துவிடாதுதான். சில நாடுகளில் தற்பாலின உறவும் குடும்ப வாழ்க்கையும் சட்டப்படி ஏற்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் அதிகாரிகளாகவும் எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் தற்பாலின உறவாளர்கள் பலரும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். இங்கேயோ தங்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போர், அவர்களுக்கு ஆதரவாகத் தோள் கொடுப்போர் என எல்லோரையும் கொச்சைப்படுத்தத் தயங்காத வன்மச் சூழல்தான் நிலவுகிறது.
இங்கேயும் இத்தகையோர் பலர் பத்திரிகையாளர்களாக, கலை இலக்கியவாதிகளாக, தொழிலதிபர்களாக, நிர்வாகிகளாக வெற்றிகரமாகச் செயல்படுகிறார்கள். ஆனால், அவர்கள் தற்பாலின உறவாளர்களாக இருப்பது அவர்களது நெருங்கிய வட்டத்தினருக்கு மட்டுமே தெரியும். நம்பிக்கையை இழந்துவிடாமல், சோர்ந்துவிடாமல் சம உரிமைகளுக்கான போராட்டமும் அங்கீகாரத்துக்கான கருத்துப் பிரச்சார இயக்கமும் தொடர வேண்டும். மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் அந்த இயக்கம் நடைபெற வேண்டும்.

தேவைப்பட்டால் அதிரடியான அணுகுமுறைகளையும் மேற்கொள்ளலாம்தான். எடுத்துக்காட்டாக, பெரியார் பகுத்தறிவுக் கருத்துகளை நோக்கி மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக சில அதிரடி வழிமுறைகளை, அடையாளப்வூர்மாகக் கையாண்டார். பிள்ளையார் சிலைகளை உடைக்கச் சொன்னது கூட அப்படியொரு அதிரடி வழிமுறைதான். பிள்ளையார் சிலை என்பது வெறும் கல்தான், சிற்பியின் கைத்திறனால்தான் அது பிள்ளையாராகியிருக்கிறது, அதை உடைப்பதால் சாமி எந்தத் தண்டனையையும் தரவில்லை என்று காட்டுவதன் மூலம், கடவுள் என்று கூறப்படுகிற சக்தி எதுவும் கிடையாது என்று நிலைநாட்டவே அவர் முயன்றார். அதன் அர்த்தம் தொடர்ந்து சாமி சிலைகளை உடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல. ஒரு மதத்தின் சாமி சிலைகளையும் வழிபாட்டுக் கட்டடங்களையும் உடைத்து இடிக்கிற வேலையைத்தான் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சாமியின் பெயரால் செய்துகொண்டே இருக்கிறார்களே...!

அதே போல், இவர்கள் மிகச் சிறுபான்மையினராக இருப்பதால், இவர்களுடைய பிரச்சனைகளை இப்போதைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை, ஒட்டுமொத்தமாக சமூக மாற்றம் ஏற்படுகிறபோது, இவர்களுடைய பிரச்சனைகளும் தானாக மாறிவிடும் என்ற சிந்தனை பொது இயக்கத்திற்காக வருவோர் சிலரிடம் இருக்கிறது. அதனால் அந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்காக மட்டும் போராடினால் போதும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சமுதாய மாற்றத்திற்கு அப்படியெல்லாம் நிகழ்ச்சி நிரல் போட்டுக்கொண்டிருக்க முடியாது. சமுதாய மாற்றத்திற்கான பொது இயக்கத்தில், இப்படிப்பட்ட பிரச்சனைகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வுகளுக்காகவும் நீண்டகால விளைவுகளுக்காகவும் சேர்த்தேதான் போராட வேண்டும். இந்தத் தெளிவான பார்வையோடுதான் மார்க்கிஸ்ட் கட்சி, இந்திய அரசமைப்பு சாசனத்தின் தண்டனைச் சட்டத்தில் தற்பாலின உறவாளர்களைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளாக அறிவிக்கும் 377வது பிரிவு விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தலித் பிரச்சனைகளுக்காக தலித்துகள்தான் போராட வேண்டும், பெண்களின் பிரச்சனைகளுக்காக பெண்கள்தான் போராட வேண்டும் என்ற நிலைமை மாறுவது எவ்வளவு முக்கியமானதோ, அதே போல இவர்களுக்காக இவர்களேதான் போராடியாக வேண்டும் என்ற நிலைமை மாறுவதும் முக்கியமானது. இவர்கள் தங்களது உரிமைகளுக்காகவும் அங்கீகாரத்திற்காகவும் போராட்டக்களத்தில் இறங்குகிறபோது மற்றவர்களும் தோள் கொடுக்க வேண்டும். அதே போல், மக்கள் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளுக்காகவும் சமூகநீதிக்காகவும் தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாலின சமத்துவத்துக்காகவும் மொழியுரிமைப் பாதுகாப்புக்காகவும் கல்விக் கோட்பாடுகளுக்காகவும் மதவெறி தடுப்புக்காகவும் என இயக்கங்களும் போராட்டங்களும் நடைபெறுகிறபோது, அந்தக் களங்களில் இவர்களும் வந்து தோள் சேர வேண்டும். அப்படிச் சேர்ந்து நிற்கிறபோது, நம்முடையவர்கள் என்ற எண்ணம் தழைக்கும். நியாயங்களுக்கான போராட்டப் பாதையில் இணைந்து பயணிக்கிற கூட்டுப் பண்பாடு செழிக்கும்.

நிச்சயமாக இது உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைப் போராட்டம் என்ற மாபெரும் எரிமலையில் ஒரு கங்குதான். அதே வேளையில், இத்தகைய கங்குகளும் இணைகிறபோதுதான் அந்த எரிமலையின் வெடிப்பு வலுப்பெறும்.
-‘தீக்கதிர்’ 23-11-2014 ஞாயிறு இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகியுள்ள எனது கட்டுரை.
(Kumaresan Asak)(Theekkthir Editor)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com