Contact us at: sooddram@gmail.com

 

மகிந்த அணியும் - எதிரணியினரும் முன்னெடுக்கும் புலிப்பிரச்சாரம்!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில், அழிந்து போன புலியை அரசும் எதிரணியும் தமது தேர்தல் வெற்றிக்காக இனவாத நோக்கில் உயிர்ப்பிக்கின்றன. மகிந்த அணியும் - எதிரணியும் பரஸ்பரம் மற்ற அணியினரை புலியாகவும், புலிக்கு உதவியதாகவும், உதவுவதாகவும் குற்றம்சாட்டுவதன் மூலம் இனவாதம் முன்வைக்கப்படுகின்றது. இந்த பிரச்சாரங்கள் மூலம் தமிழ் மொழி பேசுகின்ற மக்களுக்கு தங்கள் எதிரானவர்களாக, சிங்கள மொழி பேசும் மக்கள் முன் மறைமுகமாக முன்வைக்கின்றனர். புலிகள் இருந்த காலத்தில் மக்களை சார்ந்து நிற்காத புலி எதிர்ப்பு அரசியல் எப்படி அரசு சார்பாக சாரம்சத்தில் இயங்கியதோ, அதேபோல் இனப்பிரச்சனையை ஜனநாயக பூர்வமாக தீர்க்காது, புலியை முன்வைத்து மகிந்தா அணி - எதிரணி செய்யும் பிரச்சாரங்கள் சாரம்சத்தில் இனவாதத்தையே முன்தள்ளுகின்றன.

இந்த அரசியல் பின்னணியில் இன்று வடக்கு - கிழக்கில் இராணுவத்தின் துணையுடன் தொடரும் இனவொடுக்குமுறையை, எதிரணி "ஜனநாயகம்" இனவொடுக்குமுறையாகக் கூட இனம் காணவில்லை. இதேபோல் புலிகளை உருவாக்கிய குறுந்தேசிய இனவாதத்தை வித்திட்டு வளர்த்தெடுத்த பேரினவாதத்தை, ஒழிப்பதற்கு கூட தயாரில்லாத பொது வேட்பாளரின் "ஜனநாயகமானது" போலியானது புரட்டானது.

அடிப்படையான ஜனநாயக விரோத தன்மையை இனம் கண்டு கொள்ளாத புலிப் பிரச்சாரமானது, இனவாதமாக கொப்பளிக்கின்றது. இனவொடுக்குமுறையும், இனவாதமும் நீடிப்பதை எதிர்த்து போராட்டத் தயாரற்றவர்கள், முரணற்ற முதலாளித்துவ ஜனநாயக தீர்வை இனப்பிரச்சனைக்கு வைத்துவிடப் போவதில்லை. ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகமல்ல, இனவாதமே வெல்வதற்கான நெம்புகோல் என்பதால், அது புலி பற்றிய பிரச்சாரமாக வெளிப்படுகின்றது.

இந்த வகையில் இந்தத் தேர்தலிலும் இனவாதம் என்பதே, பேரினவாத அரசியல் கட்சிகளின் பொதுத்தெரிவு. சிங்கள மக்களுக்கு சேவை செய்வதாக காட்டுவதன் மூலம், முழு மக்களை அடக்கி ஆட்சி செய்யும் அதிகாரத்தைக் கோருகின்றனர்.

திரும்பிப் பார்த்தால் 1948 முதல் இந்த இனவாதம் இன்றிய தேர்தல்களும், ஆட்சிகளும் அமைக்கப்பட்டதில்லை. சிங்கள மொழி அல்லாத, பௌத்த மதம் அல்லாத மக்களின் சமவுரிமைகளை பறிக்கின்ற போட்டிக் கோசங்கள் மூலமே, அதிகாரத்தைப் பெற்றவர்கள் இன-மத வாத ஆட்சிகள் மூலம் மக்களை இன-மத ரீதியாக பிரித்தாண்டடு வந்துள்ளமை தெளிவாக தெரியும் உண்மை. இது தான் இன்று வரையான, இலங்கையை ஆட்சி செய்தவர்களின் வரலாறு, இது தான் இந்த தேர்தலிலும் அரங்கேறுகின்றது.

இதற்கு எதிரான போராட்டங்கள் கூட, இறுதியில் இன-மத ரீதியாக குறுகி எதிர் நிலை இன - மத வாதமாக மாறியது. அது மட்டுமின்றி, இவை கூட தேர்தலில் மக்களை பிளக்கும் அணி சேர்க்கையாகியது. பேரினவாதமானது குறுந்தேசியமாகவும், தமிழ் இனவாதமானது எதிர்நிலை குறுந்தேசியமாகவும் மாறி, மக்களை இன ரீதியாக பிளந்தது.

தேர்தல்களில் இன மத அரசியலானது இரு எதிர்முனை இனக் கூறாக மாறி, ஆட்சியை பிடிக்கவும் - பேரம் பேசுகின்றதுமான முரணிலை அரசியலாகியது. சிறுபான்மை மக்களை பெரும்பான்மை சிங்கள மக்களில் இருந்து பிரித்து ஒடுக்கின்ற அரசியல் கூறாக அரசு மாறிவிட்ட நிலையில், பேரம் பேசுகின்றதன் மூலம் அதற்கு தீர்வுகளை காண முடியாது போனது. ஆனால் இதை முன்னிறுத்தி மக்களை ஏமாற்றுவதே, எதிர்நிலை இனவாத அரசியலாகியது.

இந்த அரசியல் விளைவால் ஒடுக்குமுறைக்கு தீர்வு, அதே இன-மத ரீதியான எதிர் ஒடுக்குமுறையாக பரிணாமம் பெற்று வந்தது. இதன் வளர்ச்சியே இலங்கையில் இன ரீதியான யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது. இதன் மூலம் ஆட்சியாளர்களின் இனவாதம், புதிய அரசியல் பரிணாமத்தை பெற்றது.

இப்படி யுத்தகால இன ஒடுக்குமுறையானது, யுத்தத்துக்கு முந்தையில் இருந்தும் வேறுபட்டது. முந்தைய இன ஒடுக்குமுறையானது காலத்துக்கு காலம் மொழி - மத சமவுரிமைகளை மறுக்கும் செயற்பாடுகள் மூலம் அரசியலுக்கு வந்தது. அதற்கான அதிகாரத்தை பெற்று, சமவுரிமையை மறுக்கும் இன ஒடுக்கு முறைகள் அமுலுக்கு வந்தன. யுத்தகால இன ஒடுக்குமுறை தமிழ் மொழி பேசும் மக்களுக்கு எதிரான யுத்தமாக காட்டி, இனவாதம் மேலெந்தது. யுத்தத்தை வெல்வதன் மூலம், தமிழனை ஒடுக்கும் அதிகாரத்தை தருமாறு, சிங்கள மக்களிடம் மாறி மாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர் கோரினர்.

2009 இல் யுத்தத்தை வென்ற பின்னான இனவாதம், முந்தைய இரு வேறுபட்ட சூழலில் இருந்து வேறுபட்ட அரசியல் பரிணாமத்தை பெற்று இருக்கின்றது. வடக்கு - கிழக்கில் இன்று முன்னெடுக்கப்படும் இனவாதத்துடன் கூடிய இராணுவ முன்நகர்வுகளை, பெரும்பான்மை மக்கள் கண்டு கொள்ள முடியாத பிரதேச ரீதியாக குறுகிய ஒரு பகுதிக்குள் மாறி இருக்கின்றது. அதாவது பெரும்பான்மை சிங்கள் மொழி பேசும் மக்கள் தெரிந்து கொள்ள முடியாத, அவர்கள் வாழாத பிரதேசத்தில் நடந்தேறுகின்றது.

தங்களை சிங்கள இனத்தின் பாதுகாலர்கள் என தொடர்ந்தும் தங்கள் இனவாத நடத்தையை சிங்கள மக்கள் முன் வைத்து, இனரீதியாக அணிதிரட்ட ஆள்வேரால் முடியாதுள்ளது. இதற்கு பதில் யுத்ததுக்கு முந்தையது போல், சமவுரிமைகளை மறுக்கும் கோசம் ஒன்றை புதிதாக கொண்ட வர வேண்டும். அதை புதிதாக கொண்டு வருவதல் என்பது, அரசியல் நெருக்கடிகளை முரண்களை உருவாக்கும்.

அதனாலேயே இல்லாத புலியை ஒழிப்பது பற்றியும், எதிர் தரப்பை புலியாக முத்திரை குத்துவதுமாக, இனவாதம் மறைமுகமாக மேலேழுகின்றது.

யுத்தம் மூலம் அழித்த புலியை, தேர்தல் பிரச்சாரம் மூலம் மீண்டும் கொண்டு வந்து சிங்கள மக்களது வாக்குகளை வெல்ல முயற்சிக்கின்றனர். அதற்காக வெளிநாட்டுப் புலிகள் பற்றி கூச்சல் போடுகின்றனர். சரி யார் இந்த வெளிநாட்டுப் புலிகள் என்று பார்த்தால்

1. யுத்தம் நடந்த காலத்தில் இலங்கையில் இருந்த புலித் தலைமையை யுத்தம் மூலம் அழிக்க, மேற்குடன் கூடி சதி செய்தவர்கள் தான், புலியை தடை செய்த மேற்குடன், அதை அழிக்கும் அதன் சதியுடன் பயணித்தவர்கள் தான், ஆள்வோரும் - ஆளவிரும்புவோரும் காட்டும் புலிகள்.

2. போராட்டத்தின் பெயரில் திரட்டிய புலிகளின் பணத்தை தமதாக்கி கொண்டு, தமிழ் மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்கின்ற வியாபாரிகள் தான் இவர்கள் காட்டுகின்ற புலிகள்.

3. புலிகளின் முந்தைய அடையாளங்களை முன்னிறுத்தி, அதைக்காட்டி பணத்தை திரட்டி பிழைக்கின்றவர்களையே இவர்கள் புலிகள் என்கின்றனர்.

4. ஏகாதிபத்திய உலக முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு இலங்கையின் சொந்த முரண்பாட்டை பயன்படுத்தி, மேற்கு ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் கைக் கூலிகளையே இவர்கள் புலிகள் என்கின்றனர்.

இப்படி புலிகளின் பெயரில் ஏய்த்துப் பிழைக்கும் புலம்பெயர் கூட்டத்தையே, அரசு புலியாக காட்டுகின்றது. இதன் மூலம் இனவாதத்தை முன்னிறுத்தி, சிங்கள மக்களை இவர்களிடமிருந்து காப்பற்றப்போவதாக இனவாத பாசங்கு செய்கின்றது. இல்லாத புலியை இருப்பதாக காட்டும் இந்த இனவாதம் மூலம், மக்களை பிளந்து விடுகின்றனர். இதன் மூலம் இனவாத ஆட்சி அதிகாரத்தைக் கோருகின்றனர். இந்த அதிகாரம் மூலம் நவதாரளவாத மூலதனத்தை கொண்ட எஜமானர்களுக்கு விசுவசமாக இருப்பதை, ஆள்வோரும் - ஆளவிரும்புவோரும் முரணரற்ற வகையில் உறுதி செய்கின்றனர். இதை தோற்கடிக்கும் இடதுசாரிய அரசியல் தான் இதற்கான மாற்று.

(இரயாகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com