Contact us at: sooddram@gmail.com

 

இப்படித்தான் முஸ்லிம் அரசியற் கட்சிகள் தீர்மானம் செய்யும்...!

(எஸ். ஹமீத்)

இது ஓர் எதிர்வு கூறல். இன்றைய அரசியல் களத்தின் நிகழ்வுகளிலிருந்தும் கடந்த கால முஸ்லிம் கட்சிகளின்-குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் செயற்பாடுகளிலிருந்தும் ஊகிக்கக் கூடுமாயிருக்கிற ஓர் அரசியல் ஆரூடம் இது.

'எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு'

இப்படித்தான் இந்த முஸ்லிம் கட்சிகளின் இறுதி முடிவு அமையப் போகிறது.

இவ்வாறு ஹேஷ்யம் கூறுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதிற் பிரதானமானது பயம். மகிந்தவைப் பற்றியும் அவரது சகோதரர் கோத்தபாய பற்றியும் இவர்களிடமிருக்கும் அந்த அதீத பயம்தான் முதலாவதும் முக்கியமானதுமான காரணம். தனது வெற்றிக்காக எதையும் செய்யும் துணிச்சலும் சண்டித்தனமும் மகிந்தவிடமும் கோத்தபாயவிடமும் இருப்பதாக நம்பி இந்த முஸ்லிம் தலைவர்கள் தொடை நடுங்குவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஒருவேளை தாம் மைத்திரிக்கு ஆதரவளித்தும் மகிந்த வென்றுவிட்டால் மிக மோசமான பழிவாங்குதல்களுக்குத் தாமும் தம்மைச் சார்ந்தவர்களும் ஆளாக நேரிடுமென்ற அந்த அச்சத்தின் காரணமாக ,இவர்களது இறுதித் தீர்மானம் மகிந்தவுக்கு ஆதரவாகவே இருக்கும்.

இரண்டாவது மைத்திரியோடு இணைந்து கொள்ள இருக்கும் சாவகாசம் அல்லது கால அவகாசம். தாம் மகிந்தவுக்கு ஆதரவு வழங்கி,ஒருவேளை மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுவிட்டாலும் கூட இவர்களுக்கு அது அரசியல் ரீதியான இலாபம்தான். ஏனெனில் இருக்கவே இருக்கிறது தொடர்ந்து வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தல். சாவகாசமாக அத்தேர்தலில் தமது ஆதரவை மைத்திரிக்கு வழங்கிக் கூட்டுச் சேர்ந்து கொள்ளலாம் என்பது இவர்களின் இப்போதைய கணிப்பீடு.இது எப்படிச் சாத்தியமெனில், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி வென்றால் கூட அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அவருக்குச் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு நிச்சயமாகத் தேவைப்படும். அதனால், தனக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்காதவர்களையும் அணைத்துக் கொண்டு ஒரு பலமுள்ள அரசாங்கத்தை அமைக்கவே அவர் முடிவு செய்வார். எனவே அப்போது மைத்திரிக்கு ஆதரவை வழங்கிக் கொள்ளலாம் என்று இந்த முஸ்லிம் கட்சிகள் இப்போது முடிவு செய்து விட்டன. இந்த முடிவு இன்னும் சில தினங்களில் தெரியவரும்.

இதனை இன்னொரு கோணத்திலும் சொல்லலாம். அதாவது 'மைத்திரிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆதரவை வழங்கிக் கொள்ளலாம். அதனால் எந்த நட்டமும் ஆபத்துக்களும் ஏற்பட்டுவிடப் போவதில்லை' என நம்பும் இந்த முஸ்லிம் அரசியல் கட்சிகள் - அல்லது இக் கட்சிகளிலுள்ள பெரும்பாலோனோர், மகிந்தவுக்கு இப்போது ஆதரவு வழங்காவிட்டால் அதன் பின்னர் எப்போதும் ஆதரவு வழங்க முடியாது என்பதோடு மிக மோசமான விளைவுகளுக்கும் உள்ளாகலாமென எண்ணுகிறார்கள். இந்த எண்ணத்தின் வெளிப்பாடாக 'எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு' என்ற அறிவிப்பு மிக விரைவில் வெளிவருமென்று நம்பலாம்.

உண்மையிலேயே , இலங்கை முஸ்லிம் உம்மத்தின் ஆதங்கம் வேறு மாதிரியாகவிருக்கிறது. மிகப் பெரும்பாலான இலங்கை முஸ்லிம்கள் தமது சமூகத்தின் மீது கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட அநியாயங்களுக்கெதிரான குரலாகத் தமது வாக்குச் சீட்டைப் பயன்படுத்த நினைக்கிறார்கள். பொது பல சேனா செய்த அட்டூழியங்களின் பின்னணியில் இருந்ததாக அவர்கள் நம்பும் ஜனாதிபதிக்கெதிராகத் தமது வாக்கைப் பாவித்து 'வஞ்சம்' தீர்க்க முயல்கிறார்கள். தமது ஆத்திரத்தை-எதிர்ப்பை-அதிருப்தியை-மனக் குமுறலை வாக்காயுதத்தின் மூலம் வெளிப்படுத்த எண்ணுகிறார்கள். அவ்வாறான ஒரு மன நிலைமையில்தான் இந்தக் கட்டுரையாளனும் காணப்படுகின்றான். ஆனால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமூகத்தின் எண்ணங்களுக்கப்பால் தமது சொந்த இருப்புப் பற்றியும்
சிந்தித்துச் செயல்பட வேண்டியுள்ளதே!

எல்லாவற்றையும் அலசிப் பார்க்கும்போது நமது அரசியற் கட்சிகளின் முடிவு நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 'மகிந்தவுக்கே ஆதரவு' என்றுதான் இருக்கும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com