Contact us at: sooddram@gmail.com

 

ஈழப் போராட்ட இயக்கத் தோழர்கள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் யாரும் தோழர் என்று அழைத்துக் கொள்வதில்லை. அதனால் ஈழத்து புலி ஆதரவாளர்களுக்கும் தோழர் என்ற வார்த்தை பிடிப்பதில்லை. ஆனால், அதற்கு அவர்கள் கூறும் காரணம் மிகவும் அபத்தமானது.  "அரச ஆதரவு ஒட்டுக் குழுக்கள் தமக்குள் தோழர் என்று சொல்லிக் கொள்வதால், புலிகளுக்கு அந்தச் சொல் பிடிக்காது. ஆகவே, தமக்கும் பிடிக்காது" என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர். இது ஒரு குதர்க்கமான வாதம். ஈழப் போராட்ட வரலாறு தெரியாதவர்களின் பிதற்றல். உலகில் எல்லாவற்றையும் கருப்பு வெள்ளையாக பார்க்க முடியாது. ஒரு தூய தமிழ்ச் சொல்லான தோழர், தமிழ் மாணவர் பேரவையில் இருந்த தமிழ் தேசியவாத இளைஞர்களின் விருப்பத் தெரிவாக இருந்தது. தோழர் எனும் சொல்லினை, பாராளுமன்றத் தமிழ் தேசியவாதிகளான கூட்டணியினரிடம் இருந்து தம்மை பிரித்துக் காட்டப் பயன்படுத்தினார்கள். முதலாவது ஆயுதப் போராளி சிவகுமாரனும் தோழர் என்று அழைக்கப் பட்டார்.

 1986 ம் ஆண்டு, ஈழப் போராட்ட இயக்கங்களுக்கு இடையில், யாழ் குடா நாட்டில் நடந்த அதிகாரப் போட்டியின் விளைவு தான், "ஒட்டுக் குழுக்கள்" எனும் அரச ஆதரவு துணைப் படைகளின் தோற்றம். அது வரைக்கும் அரசுடன் இருந்த ஒரேயொரு ஒட்டுக் குழு, தமிழர் விடுதலைக் கூட்டணி (இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னோடி) மட்டும் தான். 1982 ஆம் ஆண்டில் இருந்தே, புலிகள் "கூட்டணி ஒட்டுக்குழு உறுப்பினர்களை" சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

 1984 ஆம் ஆண்டு நடந்த திம்புப் பேச்சுவார்த்தைகளில், புலிகளும், "ஒட்டுக் குழுக்களும்" சேர்ந்து ஒன்றாக கலந்து கொண்டார்கள். அதற்குப் பின்னர் உருவான ஈழ தேசிய விடுதலை முன்னணி (ENLF) என்ற நான்கு இயக்கங்களின் ஐக்கிய முன்னணியில் புலிகள் இயக்கமும் ஒன்றாக இருந்தது. அப்போது புலிகளின் தலைவர் பிரபாகரன், "ஒட்டுக்குழுக்களின்" தலைவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு புகைப்படம் எடுத்திருந்தார்.
தோழர் என்ற சொல், எல்லாக் காலங்களிலும் புலிகள் இயக்கத்தில் ஒரு தீண்டத் தகாத சொல்லாக கருதப் படவில்லை. எழுபதுகளில் ஓர் இடதுசாரி தேசியவாத இயக்கமாக காட்டிக் கொண்ட புலிகள் அமைப்பில், தோழர் என்றழைப்பது அனுமதிக்கப் பட்டது, அல்லது கண்டுகொள்ளாமல் விடப் பட்டது.

பிற்காலத்தில் ஒட்டுக்குழுவாக கருதப் பட்ட புளொட் இயக்கம், புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களாலேயே உருவானது. அதன் தலைவர் உமா மகேஸ்வரன், சில வருடங்கள் புலிகள் இயக்கத் தலைவராக இருந்தார். 1971 ஆம் ஆண்டு இயங்கிய புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் கலைக்கப் பட்டதும், பிரபாகரன் சில காலம் டெலோ உடன் சேர்ந்திருந்தார்.

தொண்ணூறுகளில் புளொட் ஒட்டுக்குழுவில் இருந்து வந்த "தோழர்" சிவராம், புலிகளின் உலகப் புகழ் பெற்ற ஊடகவியலாளராக இருந்தார். எதிரிகளால் கொலை செய்யப்பட்ட பின்னர், மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டார். ஆகவே, எல்லாவற்றையும் கருப்பு வெள்ளையாக பார்க்க முடியாது.

1976 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் உருவான போது, பிரபாகரனுடன், நிறைய மார்க்சிஸ்டுகள் சேர்ந்திருந்தார்கள். இன்றைக்கும் எல்லோராலும் மதிக்கப்படும், பழைய கம்யூனிஸ்டுகளான "தோழர்" தமிழ்ச் செல்வன், "தோழர்" புதுவை இரத்தினதுரை ஆகியோர், புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்பு அளப்பெரியது. பழைய ட்ராஸ்கிஸ்ட் "தோழர்" அன்டன் பாலசிங்கம், புலிகளின் அரசியல் தத்துவாசிரியர் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

எழுபதுகளில், தீவிர மார்க்சிய லெனினிசம் பேசிய ஈரோஸ் இயக்கத்துடன், புலிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. வெளிநாட்டுத் தொடர்புகள் மிகக் குறைவாக இருந்த ஒரு காலத்தில், ஈரோஸ் ஊடாக லெபனான் பயிற்சிக்கு ஆட்களை அனுப்பினார்கள். கியூபாவில் நடந்த, சோஷலிச நாடுகளின் மாணவர் இளைஞர் மகாநாட்டில், புலிகளின் பிரதிநிதி ஒருவர் கலந்து கொண்டு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

 தமக்குள்ளே தோழர்கள் என்று அழைத்துக் கொள்ளும் மார்க்சிய ஈரோஸ் காரர்களுக்கும், புலிகளுக்கும் இடையில் என்றைக்குமே பெரிய முரண்பாடுகள் ஏற்படவில்லை. நீண்ட காலமாக மறைமுகமான நட்புறவு நிலவியது. இந்திய இராணுவம் வந்த பின்னர் நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், புலிகள் முழுமூச்சாக ஆதரித்த, ஈரோஸ் தோழர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டனர்.

 1987 ஆயுதங்களை ஒப்படைத்த காலம் முதல் இயங்காமல் இருந்த ஈரோஸ், 1990 ம் ஆண்டு மீண்டும் ஈழப் போர் தொடங்கியதும் கலைக்கப் பட்டது. ஏராளமான ஈரோஸ் தோழர்கள், புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்கள். ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார், புலிகளின் பிரதானமான பேச்சாளராக மாறினார். புலிகளுடன் சேர்ந்த மார்க்சிய ஈரோஸ் தோழர்களும், தலைவர் பாலகுமாரும், இறுதி யுத்தம் வரையில் அந்த இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்தார்கள்.

அதே நேரம், புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினர், அரச ஆதரவு ஒட்டுக்குழு ஆனார்கள். அவர்கள் இன்றைக்கும் தமது கட்சியின் பெயரில் (TMVP)"தமிழ்", "விடுதலை", "புலிகள்", ஆகிய வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். புலிகளின் சிவப்பு - மஞ்சள் தேசியக் கொடியை தமது கட்சியின் கொடியாக வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தோழர் என்று அழைப்பது அவர்களுக்கும் பிடிக்காத விடயம்.

(Kalaiyarasan Tha)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com