Contact us at: sooddram@gmail.com

 

கல்லடி மாமியும் இந்திய இராணுவமும்


மட்டக்களப்பில் பெருமெடுப்பில் இந்திய அமைதிப்படை (ஐபிகேஎஃப்) நின்றிருந்த காலம். கல்லடிப்பாலத்தில் நடந்த ஒரு சம்பவம்
. செம்மறி ஆடுகளை ஏற்றிக்கொண்டு பாலத்தில் ஐபிகேஎஃப் வாகனங்கள் வந்துகொண்டிருந்தன. (இந்தியாவில் இருந்து வரும் செம்மறி ஆடுகள்தான் அவர்களுக்கு உணவு. ஆனால், அதன் ருசி கசந்துபோன இந்தியப் படையினர் கோழி சாப்பிடும் ஆசையால், இரண்டு கோழிகளுக்கு பதிலாக ஒரு செம்மறி ஆட்டை உள்ளூரவர்களோடு பண்டமாற்றுச் செய்த காலம் அது. உள்ளூர் நாட்டுக் கோழியும், வெள்ளாடும் அவர்களுக்கு சரியான உசிர்.) அப்படி வரும் போது வண்டியில் இருந்த செம்மறிகளுக்கு இடையில் நின்றிருந்த ஒரு வெள்ளாட்டுக்குட்டி, அந்த வழியாக பாலத்தில் வந்துகொண்டிருந்த எங்களுடைய மாமிக்கு அருகில் வண்டி வந்ததும் கனைத்து, கத்தத் தொடங்கி விட்டது.

மாமிக்கு அப்போது கிட்டத்தட்ட 70 வயது. மாமி திரும்பிப் பார்த்தார் ஆட்டை அடையாளம் கண்டுகொண்டார். ஆடு கடத்தப்படுகிறது என்று விளங்கியும் விட்டது, அடுத்தது அதிரடிதான்.

ஐபிகேஎஃப் வண்டியை மறித்து, தாக்குதலை ஆரம்பித்து விட்டார் மாமி. ஆர்மி வண்டியால் மாமியை கடந்து போக முடியவில்லை.

அது எண்ட ஆடு, இறக்கு கீழஇது மாமியின் வாதம். இல்லை அது எங்கள் ஆடு என்பது அவர்களது கூற்று.

ஆர்மிக்காரர் துவக்க, லோட் பண்ற மாதிரியெல்லாம் கரச், கரச் என்று சத்தம் செய்து மாமியை மிரட்டப் பார்த்திருக்கிறார். மாமி மிரண்டாவோ தெரியாது, ஆனால் எதனையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை, பின்வாங்கவும் இல்லை.

சண்டை முடியாது தொடரவே, ஐபிகேஎஃப் அதிகாரி ஒருவர் இறங்கி வர, அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாரானார்கள். எங்கள் மாமியை பொறுத்த வரை சண்டை என்றால் சண்டை, சமரசம் என்றால் சமரசந்தான்.

ஆனால், அவருடைய சண்டையோ, சமரச பேச்சோ பிரச்சினையை தீர்க்கும் நோக்கிலானது மாத்திரந்தான். அடுத்த கணமே ஆயுதங்களை கைவிட்டு பேச்சுக்கு ரெடியாகிவிட்டார் மாமி. ஆனால், மற்றப் பேச்சுக்கள் மாதிரியில்லை மாமியின் பேச்சு, எப்பவும் தர்க்க ரீதியாகவும், இலக்கை நோக்கியதாகவும் இருக்கும்.

அம்மா, இது எங்கட ஆட்டு லாறி, இதில் இருக்கும் எல்லா ஆடும் எங்களுடையது என்றது ஐபிகேஎஃப், ஒரு லொஜிக்கோடு. அடேய், உங்கடதெல்லாம் செம்மறி, எண்டது வெள்ளாடு,இது மாமி. பேச்சு நீண்ட நேரம் நீடிக்கவில்லை, மாமி புத்தியோடு ஒரு டீலுக்கு தயாரானார்.

‘’நீ, ஆட்டை இறக்கி றோட்டில விடு, அது உன்னோட வந்தா உண்ட ஆடு, என்னோட வந்தா எண்ட ஆடு’’, இதுதான் மாமியின் டீல். அதிகாரிக்கு அந்த டீல் பிடித்திருந்தது. சிப்பாயிட்ட சொன்னார், ஆட்டை இறக்கி விடு , அதால எங்கையும் ஓட முடியாது எண்டு. சிப்பாய் ஆட்டை இறக்கினார். ஆடு மாமியிட்டையும் போகவில்லை, ஐபிகேஎஃபிட்டயும் போகவில்லை, பாலத்து இறக்கத்தால, பாய்ந்து, மாமி வீட்டில இருக்கிற, அதனுடையை தாய் ஆட்டிட்ட ஓடிவிட்டது.

ஐபிகேஎஃப் ஆடிப்போய்விட்டது. அதிகாரிக்கு சிரிப்பும் வந்து விட்டது.

ஆனால், அதற்கு பிறகு நடந்ததுதான் எந்த போராட்டமும் இதுவரை காணாத ஒன்று. அதாவது, பிரச்சினை தீர்ந்த பின்னர்தான் மாமியின் கடுமையான அதிரடியை ஐபிகேஎஃப் நேரடியாக பார்த்தது. அடேய், ஆட்டுக்கள்ளன் ஐபிகேஎஃப்…. என்று தொடங்கி மாமி சாத்தத் தொடங்க பின்வாங்கிறத தவிர, இந்திய இராணுவத்துக்கு வேற வழி இருக்கவில்லை. வண்டி பின்வாங்கி பாலத்தால நகர்ந்து சென்றுவிட்டது. இது உண்மையாக நடந்தது.

எங்கள் மாமி, மிகச் சாதாரணமானவர். ஆனால், எங்கள் ஊரில் மிகச் சாதாரண பெண்கள் மத்தியில் புதைந்து கிடக்கும், அநீதியை கண்டால், அடித்துப் போராடும் குணத்தை பிரதிபலிப்பவர் அவர். அதேவேளை, அந்த போராட்டத்தில் மிகுந்த ஒரு புத்திக் கூர்மையும் அப்படியே மறைந்திருக்கும். அமைப்பு ரீதியான போராட்டங்களில் காணாத பல நுட்பங்களை எங்கள் மாமியை போன்ற பலரிடம் அங்கே ஊருக்கு உள்ளே சாதரணமாகவே காணலாம்.

மாமி பிறந்தது 1917இல் மட்டக்களப்பு பிள்ளையாரடியில். பெயர் நாகரத்தினம். அப்பவே ''பேபி'' என்ற செல்லப்பெயரும் உண்டு. அவரது அப்பா நல்லையா உடையார்(சாதிப் பெயரல்ல, தொழில் பெயர்). வெள்ளையர் ஆட்சியின் போது மாவட்ட நிர்வாகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் கிட்டத்தட்ட இரண்டாவது நிலையில் இருந்த அதிகாரி உடையார்மார்.

கல்லடியில் விதானையாரான எங்கள் மாமா (தம்பிஐயா), தேடி வந்து, காதலித்து மாமியை கல்யாணம் செய்ததால், எங்களுக்கெல்லாம் அவர், நாங்கள் பிறக்கும்போதே கல்லடி மாமியாகிவிட்டார்.

மாமியின் தாய்வழி பாட்டியார், செங்கலடி மெதடிஸ்த பெண்கள் பள்ளிக்கூடத்தின் நிறுவனரும், முதலாவது தலைமை ஆசிரியரும் ஆவார்.

ஆனால், உடையாரின் மகள், விதானையாரின் மனைவி, ஆங்கிலம் கற்ற மெதடிஸ்த ஆசிரியரின் பேத்தி என்ற அடிப்படையிலான மேட்டுக்குடி பாங்கு எதனையும் எங்கள் மாமியிடம் எவரும் பார்க்க முடியாது.

அவருடைய அதிகாரம், போர்க்குணம் எல்லாம் அவர் ஏற்படுத்திய அன்பு வலையமைப்பை மையமாகக் கொண்டவைதான்.

எங்கள் அப்பைவை விட கிட்டத்தட்ட 15 வயது மூத்தவர் எங்கள் கல்லடி மாமி. அப்பா மற்றும் அவருக்கு முன்ன பின்ன இருந்த அவரது சகோதரங்கள் எல்லாருக்கும் மாமிதான் கிட்டத்தட்ட அம்மா மாதிரி. வேறு நிறையப் பேரை மாமி வளர்த்து விட்டிருக்கிறார். அவரது வீடு எப்பவும் சனம் நிரம்பியே காணப்படும்.

நானும், எனது ஒன்றுவிட்ட சகோதரன் ராஜனும் மாமியின் சேலையை பிடித்துக்கொண்டு அந்த கல்லடி எங்கிலும் சின்ன வயதில் சுற்றி வந்திருக்கிறோம். மாமியின் தேய்ந்துபோன ‘’பாட்டா’’ படாத இடம் கல்லடியில் கிடையாது. பார்ப்பவர்கள் எல்லாரும் அவரை விதானை அம்மா என்றுதான் சொல்லுவார்கள். ஆனால், அந்த விதானையாரின் மனைவியின் தோரணையை எங்கள் மாமியிடம் காணமுடியாது. ஒருவருக்கு திட்டினாலும், அடுத்த கணமே அவரைப் பார்த்து வாயை முற்றாக விரித்து சிரித்தும் வைப்பார். மாமியின் சேலை முடிச்சில் இருந்து காசை லாவகமாக எடுக்கும் தந்திரம் ராஜனுக்கு கைவந்த கலை.

கல்லடி மாமா கல்லடியில் அப்போது ஒரு முக்கிய புள்ளி. விதானையாருக்கு உரிய கறாரும் சண்டித்தனமும்கூட அவரிடம் கொஞ்சம் இருக்கும்.

அவர் ஒரு சத்தம் போட்டாலே, நான் அந்த திசையில நிற்க மாட்டேன். அவ்வளவு பயம் எனக்கு. கல்லடியும் அப்போது அப்படித்தான் பயப்படும். ஆனால், இதெல்லாம் எங்கள் மாமியிடம் செல்லாது.

மாமி திட்டி சத்தம் போட்டா மாமா எங்களை பார்த்து சைகை காட்டி சிரிப்பார். திருப்பி பெரிசா பேசமாட்டார். மாமி மேல் அவருக்கு பயம் இல்லை. அது ஒருவகை பக்தி. அந்தக் காதலை உணரும் வயது எனக்கு இன்னும் வரவில்லை.

எங்கள் அப்பாவை எல்லாம் கல்லடி கடற்கரையில் வைத்து சொறி, சிரங்கு தேய்த்து மாமா குளிப்பாட்டினதாக எங்கள் அப்பா என்றும் சொல்வார். இதற்கெல்லாம் நிச்சயமாக எங்கள் மாமியின் மீது மாமா வைத்திருந்த காதல்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

என்னால் கூட இதுவரை எனது மனைவியின் உறவினர்கள் மீது இந்த அளவுக்கு பாசத்தை காண்பித்திருக்க முடிந்ததில்லை.

ஆனால், மாமி, மாமா மீது தனது காதலை எப்போதும் காட்டியதாக எனக்கு நினைவில்லை. இப்படியெல்லாம் சொல்றதால் எங்களுடைய கல்லடி மாமி ஒன்றும் தமிழ் கட்டுப் பெட்டி என்று நினைத்து விடாதீர்கள். மாமா இறந்த பிறகு ஒரேயொருதரம் மாமி தன் காதலைக் காட்டினார். ஒரு தரந்தான், ஆனால், அது ஒரு பானைக்கான பதச்சோறு.

ஆனால், அதை சொல்வதற்கு முன்னதாக ஒரு சிறு குறிப்புஒரு நாள் ரொமான்ஸ் என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று தெரியாமல், பேராசிரியர் சிவத்தம்பி ஐயாவுக்கு போன் செய்து கேட்டேன். அவர் சொன்ன பதில், “சீவகன், ரொமான்ஸ் என்ற விசயம் நம்மட தமிழ் இலக்கியத்தில இல்லாத ஒரு விசயம்டா, காதலர்கள் பொது இடத்தில ஒருவரை ஒருவர் சந்தித்தால், முன் பின் தெரியாத ஏதிலியர்(முன்ன, பின்ன தெரியாதவர்) போலத்தான் இருப்பார்களாம். இதுதான் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. ரோமியோ-ஜூலியட் போல பொதுவில காதலை வெளிப்படையாக, பட்டவர்த்தனமாக வெளிக்காட்டமாட்டார்களாம் என்றார்.

இனி விசயத்துக்கு வருவம். கல்லடி மாமா இறந்தது 1989இல். இறுதி நிகழ்வுகளுக்கு முன்னதாக மாமி மாமாவுக்கு பக்கத்தில வந்தார். நான் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தேன். நேரே மாமாவின் உடலைக் கட்டிப் பிடித்து மாமி அவருக்கு முத்தமிட்டார்.

அன்று நான் எடுத்த புகைப்படங்களில் அந்த படம் மாத்திரந்தான் ஓரளவு நன்றாக வந்திருந்தது.

ஆனால், எனது மாமியை அதுவரை மிகச் சாதரணமான மனிசியாக பார்த்து வந்த எனக்கு அந்த முத்தத்தை சாதாரணமாக எடுக்க முடியவில்லை. அது ஒரு கணவரின் சடலத்துக்கு ஒரு சாதாரண வயோதிபத் தமிழ் பெண் கொடுத்த ஒன்றல்ல. அதற்கும் மேலானது.

ரொமான்ஸ் என்ற ஒன்று இல்லாததாக, கட்டுப்பெட்டியாக இருந்திருக்கக்கூடிய ஒரு சமூகத்தின் இறுக்கங்களை, கட்டுக்களை வெட்டி எறிந்த ஒரு முத்தம் அது. பெண்ணியத்தின் கூறுகளின் அடிப்படையில், மிகச் சாதாரணமானவர்களாக தமிழ் பெண்கள் மீது குத்தி வைக்கப்பட்டிருந்த முத்திரையை உடைத்தெறிந்த செயல் மாமியினுடையது. அதில் எல்லாவற்றையும் கடந்த அந்த ரொமான்ஸ் இருந்தது.

1989இலேயே இப்படியென்றால், தனது சிறிய வயதில் எனது மாமி எப்படி துணிச்சலோடு, காதலோடு, ரொமான்சோடு இருந்திருப்பார் என்று நினைத்துப் பார்க்க, நான் பிறந்து வாழ்ந்த சமூகத்தின் மீது ஒரு மரியாதையே ஏற்படுகிறது. போலியான போர்வைகள் இல்லாமல்தான் எங்கள் முன்னோர் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எங்கள் கல்லடி மாமி அன்று நிரூபித்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதற்கு பின்னர் பல ஆண்டுகள் வாழ்ந்து, நான் லண்டனுக்கு வந்த பின்னர்தான் மாமி இறந்து போனார். தனது இறுதி நாட்களில் தன்னிலை மறந்தவராகத்தான் அவர் வாழ்ந்து, காலமானார்.

ஆனால், அவரது மறைவை சோகமான ஒன்றாக எடுத்துக்கொள்ள என்னால் முடியவில்லை. அநீதி கண்டபோது கிளர்ந்து, துணிவோடும், தனது உணர்வுகளை கௌரவமாக, ஆனால், அனாவசிய கட்டுப்பாடுகளுக்கு அடங்காமலும் வெளிப்படுத்தி ஒரு வெளிப்படைத்தன்மையோடு அவர் வாழ்ந்து முடித்திருக்கிறார்.

அவர் இறந்து சில வருடங்கள் ஓடிவிட்டன. அவருடைய சிரிப்பு இன்னமும் கண்ணுக்குள் நிற்கிறது. நான் குடும்பத்துக்கு சொல்லாம, அவர்களுக்கு விருப்பமில்லாம இந்தியாவில கல்யாணம்(காதல்தான்) செய்திட்டு வந்து நின்ற நேரத்தில, எனக்கு திட்டாம இருந்தவங்களில் மாமியும் ஒருத்தர். அப்பவும் அதே புன்னகைதான். அது கூறும் அர்த்தங்கள் நூறு. அதனால், நான் இன்னும் அவரை முழுமையாக புரிந்துகொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். அவரது பிள்ளைகளுக்கும் அவரை முழுமையாக புரிந்திருக்குமோ தெரியவில்லை.

ஆனால், ஒன்று இவரைப்போல் இன்னும் பலர் எம்மத்தியில் யதார்த்தமாக வாழ்ந்துகொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

(Seevagan Poopalaratnam)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com