Contact us at: sooddram@gmail.com

 

ஜனநாயக ஆட்சிக்கு ஏற்பட்ட கதி!

மாலைதீவு மக்கள் மனக் கொதிப்பு

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் அன்னி நஷித் கடந்த 08ம் திகதி பதவி பறிக்கப்பட்டு பரிதாபத்துக்குள்ளானார். செய்தியைக் கேள்வியுற்றோரின் கண்கள் அகல விரிந்தன. காதுகள் கனத்து அடைத்துப் போயின. எவ்வளவு பெரிய பதவி. எத்தகைய செல்வச் செழிப்பு வாழ்க்கை இவ்வளவும் இல்லாமற் போனதே இறைவா. மாலைதீவின் முப்பது வருட தனிமனித ஆட்சியை (மஹ்மூத் அப்துல் கையும்) தவிடு பொடியாக்கி 2008 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவர்தான் மொஹமட் அன்னி நஷித். ஆசியாவிலே மிக நீண்ட காலம் ஜனாதிபதியாகவிருந்தவர் என்ற மஃமூன் அப்துல் கையுமின் ஆட்சி அதிகாரம், அட்டகாசம், அதிகாரக் கெடுபிடிகள் அனைத்தையும் எடுத்த எடுப்பில் வீசியெறிந்து ஜனாதிபதியாகத் தெரிவானவரின் நிலைமை இன்று நடுத்தெருவில்.

2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமோக வாக்குகளைப் பெற்ற மொஹமட் அன்னி நஷிதை இனிமேல் அரசியல் களத்திலிருந்து அகற்றவே முடியாது என்று சோர்ந்து போன எதிர்க் கட்சி 2013 நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலைப் பொருட்படுத்தவேயில்லை. எமக்கு எதிர்காலமேயில்லையென்றெண்ணிய மஃமூன் அப்துல் கையும் ஓய்வெடுக்க எண்ணி மூலையில் போய் சுருண்டு படுத்துக்கிடந்தார். இப்போது கையுமின் ஆதரவாளர்களே நஷிதைப் பதவி விலக்கியதாக கூறுமளவிற்கு மாலைதீவில் நிலைமைகள் மாறிவிட்டன.

கையுமின் முப்பது வருடகால ஆட்சியில் இடம்பெற்றதாகக் கருதப்படும் துஷ்பிரயோகங்கள், மோசடிகளை விசாரணை செய்ய நஷித் பல குழுக்களை நியமித்திருந்தார். இக்குழுக்களின் வேண்டுகோளுக்கமைய சில முக்கியமானவர்களைத் தண்டிக்குமாறு மொஹமட் அன்னி நஷித் பிரதம நீதியரசரைப் பணித்தார். ஜனாதிபதியின் உத்தரவை பிரதம நீதியரசரான அப்துல்லா மொஹமட் நிறைவேற்றாது நிராகரித்தார். ஆத்திரமடைந்த அன்னி நஷித் உடனடியாக பொலிஸாரைத் தலையிட்டு பிரதம நீதியரசர் அப்துல்லா மொஹமட்டை கைது செய்யுமாறு கோரியும் பொலிஸார் எதுவும் செய்யவில்லை. இதற்கிடையில் ஜனாதிபதி மெஹமட் அன்னி நஷிதை பதவி விலகுமாறு கோரும் ஆர்ப்பாட்டங்களும் தலைநகரில் தயாராகின. உடனே பொலிஸ் தலைமையகம் நோக்கிப் பறந்தார் நஷித். பொலிஸாரே இவரைத் தலைமையகம் அழைத்துச் சென்றதாகவும் தகவல். அங்கே சென்ற அன்னி நஷிதுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொலிஸ் உயரதிகாரிகள் 18 பேர் கொண்ட குழு துப்பாக்கியுடன் சில பேர், முகமூடியுடன் பல பேர், பேனாவையும் ஜனாதிபதி செயலக கடிதத் தலைப்பு காகிதத்தையும் வழங்கி ஒப்பமிட்டு பதவி விலகுமாறு கோரியது. தனியே சென்ற அன்னி நஷித் என்ன செய்வார், ஆண்டவனை அழைத்துப் பார்த்திருப்பார். ஆனால் அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்குமே. ஆண்டவனை நம்பி அரசியலைத் துறந்தார். இந்த ஜனாதிபதி பதவிக்கு வர எவ்வளவு பாடுபட்டிருப்பார் எவ்வளவு செலவழித்திருப்பார். முப்பது வருடங்களாக மாலைதீவு மன்னனாகயிருந்த மஃமூன் அப்துல் கையுமை தோற்கடிப்பதென்றால் சாதாரண விடயமா.

இத்தனைக்கும் அவரது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் ஒருவருடமுள்ள நிலையிலா இந்நிலை. இரண்டு பிள்ளைகளின் தந்தையான 44 வயது அன்னி நஷித் தனக்கிழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக் கேட்குமாறு அயல் நாடுகளையும், வெளிநாடுகளையும் கேட்கின்றார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை பதவி கவிழ்ப்பதும் ஒன்றுதானே என்றும் நெஞ்சங்களைத் தொடுமளவிற்கு கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்கின்றார் அன்னி நஷித்.

போதாது என்று தற்போது படையினரால் ஜனாதிபதியாக்கப்பட்டுள்ள மொஹமட் வாஹிட் (இவரே முன்னர் உப ஜனாதிபதியாக இருந்தவர்) பதவி வகிக்க முடியாது எனது கட்சியே அதைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் வேண்டியுள்ளார். மாலைதீவின் வரலாற்றில் மாத்திரமல்ல உலக வரலாற்றிலே கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி சாதனை படைத்தவர். காலநிலை மாற்ற மாநாடு டென்மார்க்கின் தலைநகர் கொபன் ஹேகில் நடைபெற்ற வேளை, புதுமையான கருத்துக்களை வெளியிட்டு சகல ஊடகங்களிலும் பிரபலமானதும் இந்த நான்கு வருட ஆட்சிக் காலத்திலேதான். மூன்று இலட்சம் மக்களையுடைய மாலைதீவு எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை. கடல் மட்டம் உயர்ந்து முழு மாலைதீவுமே கடலுக்குள் மூழ்கும் நிலைமையை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதுடன், கடுமையான புயல் சூறாவளிகளும் மாலைதீவின் இருப்புக்கு ஆபத்து என்பதும் வானிலை, காலநிலை, அவதான நிலையங்களின் கருத்து. அப்படியானதோர் புவியமைப்பில் மாலைதீவுள்ளது. இத்தனை இயற்கை பிரச்சினைகளையுடைய நாட்டில் இப்படியொரு அரசியல் பிரச்சினையுமா தேவை. மாலைதீவை இஸ்லாமிய வாடைக்குள், சூழலுக்குள் கொண்டு செல்ல வேண்டும். மொஹமட் அன்னி நஷித் ஆட்சியிலிருந்தால் ஆங்கில மோகமும் கிறிஸ்தவ நாகரிகமும் பற்றிக்கொள்ளும் என்கின்றனர் அல்கைதா அமைப்பினர்.

அரசாங்கத்தின் பெறுமதி வாய்ந்த கலையகங்கள் கட்டடங்களை சிலர் உடைத்துச் சேதப்படுத்தியதுடன், பண்டைய நாகரிகங்களை பிரதிபலிக்கும் கலாசாரச் சின்னங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். அரசாங்கத்தின் நூதனசாலைக்கு தீவைத்த இவர்கள் பெளத்த கலாசார சிலைகளையும் உடைத்துள்ளனர்.

இதுவரை 18 பொலிஸ் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மொஹமட் அன்னி நசீதுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் மாலைதீவு தெருக்களின் புழுதிகளை கிளறியுள்ளன. அன்னிநசீதை கைது செய்வதற்கான உயர்நீதிமன்ற உத்தரவு புதிய ஜனாதிபதியின் நிர்வாகத்தினால் கவனத்திலெடுக்கப்படவில்லை. வீட்டுக்காவலோ, தடுப்புக்காவலோ, சிறைவாசமோ இன்றைய நிலைமைகளில் இவருக்கு சாத்தியமில்லை எனத் தோன்றுகிறது. தீவிரமடைந்துவரும் நிலைமைகளைத் தணிய வைக்க ஐ.நா. உயரதிகாரிகள் மாலைதீவுக்குப் புறப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலைகளாம் இவை. அப்படியானால் இப்பதவி கவிழ்ப்புக்குப் பின்னால் நிச்சயமாக அமெரிக்காவோ, ஐரோப்பாவோ இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இப்போது மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹிட் கூட்டு அரசாங்கமொன்றை அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இது இவ்வாறுள்ள நிலையில், ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டுக் கொள்கைக்குப் பொறுப்பான கெதரின் அஸ்தன் மாலைதீவு ஜனாதிபதி ஆயுத முனையில் பதவி கவிழ்க்கப்பட்டமைக்கு கடும் மனவருத்தத்தை தெரிவித்துள்ளார். மாலைதீவு அரசியலமைப்பு மதிக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட உடனடியாக கருமமாற்றல் அவசியம். மாலைதீவு மக்கள் அச்சம், பீதியின்றி வாழ வழியேற்றப்பட வேண்டுமெனக் கேட்டுள்ளார். பதவி கவிழ்க்கப்பட்ட அன்னி நஷித் தலைநகரிலேயுள்ள போதும் வீட்டுக்காவலிலோ அல்லது தடுப்புக்காவலிலோ வைக்கப்படவில்லை. புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹிட் பொம்மையாகவே செயற்பட வேண்டும். எங்களது மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களையே நிறைவேற்ற வேண்டும்.

தலைநகர் மாலியில் பாரிய வீட்டுத்திட்டங்கள் மற்றும் வசதியற்றோருக்கான நகர்ப்புற வசதிகளைச் செய்து கொடுப்பதும் எங்கள் தேர்தல் கால வாக்குறுதிகள் என்பதை அன்னி நஷித் ஞாபகமூட்டியுள்ளார். மொஹமட் வாஹிட் முன்னர் ஜ.நா.வில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எஞ்சியுள்ள 2013 நவம்பர் வரை வாஹிதா ஜனாதிபதி அல்லது வேறு மாற்றங்களும் வருமா என்பதை இப்போது எதிர்வுகூற முடியாத நிலை எனக்குள்ளதால் எதையும் சொல்லாமலே மாலைதீவுக்கு விடைகொடுப்போம்.

ஏ.ஜி.எம். தெளபீக்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com