Contact us at: sooddram@gmail.com

 

மாடுகளின் பருமனையே ஒத்திருக்கும் ஆடுகளைத் தேடி அனலைதீவுக்கு...

இன்று ஒரு பிரகாசமான நாளாகும். அதுவரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய கடும் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து கொண்டு இருக்கின்றது. வானத்தின் முகில்கள் தெளிவாக நீல நிறத்தில் பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றது. இதுவரை தரைமார்க்க தீவுகளுக்கிடையே பயணம் செய்த எமக்கு கடலின் கடும் அலைகளின் மோதுதலின் தன்மைக்கேற்ப மீண்டும் மோட்டார் ஜெட் கப்பலின் மூலம் கடலின் தூரத்தில் வாழும் மற்றுமொரு மக்கள் கூட்டத்தின் தகவல்களைத் தேடிச் செல்ல முடியும்.

குறிகட்டுவான் தரிப்பிடத்தில் பிரதான கடற்தளபதியும் இன்று பயணம் செய்ய நிலைமை சாதகமாக இருப்பதாகக் கூறினார். இலங்கைப் படத்தில் ஓர் ஒரத்தில் அமைந்திக்கும் அனலை தீவின் மக்கள் குடியேற்றத்தைப் பற்றி ஆராய்வது எமது நோக்கமாகும்.

அனுரங்கவின் வாகனம் யாழ்ப்பாணத்தில் நாம் இருந்த விடுதியில் இருந்து புறப்பட்டது. இறால் பண்ணைகளுக்கிடையில் சிறு பட்டிகை போல் நீண்டு செல்லும் ஓரளவு இடவசதியுள்ள பாதையின் இருபக்கங்களிலும் சிறியளவில் வியாபாரத்தில் ஈடுபடும் மீனவர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். திடீரென பயணத்தின் வேகம் குறைந்து அனுரங்கவும் விமலும் எதையோ மிக உன்னிப்பாக பார்ப்பது எனக்கும் தெரிந்தது.

பாதையோரத்தில் நீண்ட ஒரு நாகபாம்பின் தோலை உரித்துக் கொண்டிருக்கும் ஒரு கழுகைக் கண்டோம். நாக பாம்பின் தலையை ஓரளவு சாப்பிட்டிருக்கும் கழுகைச் சுற்றி இன்னும் ஒரு கழுகுக் கூட்டம் வானத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றது. நான் அதற்கருகாமையில் வாகனத்தை நிறுத்தி நன்றாக உற்று நோக்கினேன். ஆனால் அவ்வாறில்லை எமது தீர்மானம் பிழையானது. அது ஒரு நாக பாம்பல்ல. அந்த தோற்றத்துக்கு சமமான விசாலமான ஒரு களப்பு ஆந்தை வகையாகும். கடி எறும்புகளைப் போல் வேலை செய்யும் இந்த மீனவர்கள் அந்தப் பக்கம் பார்ப்பது கூட இல்லை. அதை விரட்டி அந்த ஆந்தை, மீனை பிடிக்க சில மனிதர்களைப் போல் முயற்சி செய்யவுமில்லை. அவர்கள் பாட்டில் தம் வேலையோடு இருந்தார்கள். கழுகுகள் அவற்றின் வேலையில் மும்முரமாக இருந்தன.

நாங்கள் குறிகட்டுவான் தரிப்பிடத்திலிருந்து அனலை தீவுக்கு பயணத்தைத் தொடர்ந்தோம். கடலை இரண்டாகப் பிளந்து கொண்டு செல்லும் மோட்டார் ஜெட் படகு எமது சிந்தனைகளை மேலும் ருசிப்படுத்தியது. நான் நினைத்தளவில் அந்த பயணத்துக்கு 20 நிமிடங்களே எடுத்திருக்கும். அனலை தீவில் ஏனைய தீவுகளை போல பெரிய ஒரு தரிப்பிடம் இல்லை. அது தீவைப் போலவே சாதாரணமான ஒன்றாகும்.

தீவு வாசிகள் யாழ்ப்பாணத்துக்கு சென்று வரும் போது அவர்களை வீட்டுக்குக் கொண்டு செல்லும் கையால் இயக்கம் டிரக்டர் பின்னால் இருந்தது. அதில் நெருங்கிக் கொண்டு பயணம் செய்த அந்த மக்கள் எமது தனியார் பஸ்களைப் போல் தேங்காய்களை அடுக்கினாற் போல பயணம் செய்கின்றனர். தரிப்பிடத்தின் ஓரத்தில் கடற்படை வீரர்கள் 4-5 பேர் இருந்த காவல் துறை காணப்பட்டது.

நாம் கடற்படை காவல் துறைக்கு வந்து அதிகாரிகளுடன் பேசினோம். அவர்கள் மிகவும் அன்போடு எம்மை வரவேற்று எமக்கு அனலை தீவின் வரைபடத்தைக் காண்பித்து தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள். அனலை தீவானது 5.5 சதுர கிலோமீற்றர் விசாலமானது. இத்தீவின் எல்லா இடங்களிலும் திரிந்து செல்ல ஒரு முச்சக்கர வண்டி (திரி வீலர்) இருந்தால் என்ன என்று நான் கூறினேன்.

இத்தீவுக்கு இருப்பது 2 முச்சக்கர வண்டிகளாகும் (திரி வீலர்) ஒன்று தனிப்பட்ட ஒருவருக்குரியது. மற்றையது மருத்துவமனையின் நோயாளிகளைக் கொண்டு செல்லும் “அம்பியூலன்ஸ் திரிவீலர்” ஆகும். அந்த அதிகாரி அவ்வாறு சொன்னாலும் தனிப்பட்ட திரிவீலர் சொந்தக்காரருக்கு அவசர தொலைபேசி அழைப்பொன்றைக் கொடுத்தார்.

“இப்போது அவர் வருவார்” அந்த அதிகாரி கூறினார். அவருக்கு சாதாரண கணக்கொன்றை கொடுக்க நாம் தீர்மானித்தோம்.

திரீவீலர் காவல்துறைக்கு வருவதற்கு சென்ற அந்த சிறிது நேரத்துக்குள் வாலிப வயதுடைய சில ஆண் பிள்ளைகள் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தனர். எமக்கு இந்த தமிழ் மக்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதில் சிக்கலொன்றும் இருந்தது. கடற்படை அதிகாரி எமக்கு உதவிக்கு வந்தது இந்த தருணத்தில் தான்.

ஏன் இந்தத் தீவுக்கு “அனலை தீவு” என்று சொல்வது என்று நான் அந்த அதிகாரியின் உதவியோடு அந்த இளைஞர்களிடம் கேட்டேன். அதில் ஒரு இளைஞன் கொடுத்த பதிலால் நாம் சிறிது திகைப்படைந்தோம். நீல நிற கடலால் சூழப்பட்ட இந்த சிறிய தீவில் பிறந்து இங்கு மிகக் கஷ்டத்துக்கு மத்தியில் படித்த அந்த இளைஞன் தமிழ் பேராசிரியர் ஒருவரைப் போல் பேசினார். அந்த அறிவை எமக்கு ஊட்டும் அதிகாரியின் மொழிபெயர்ப்பும் அதைவிட மேலாக இருந்தது.

“அனலை” என்பதற்கு தமிழ் மொழியில் பல அர்த்தங்களுண்டு, அதிலொன்று தான் கலப்பம் என்று சொல்வது, அது சரியாக கலப்படம் போன்ற தொன்றாகும். அடுத்தது வெட்கை என்று சொல்வது. என்பது அதிக உஷ்ணத்துடன் கூடிய சூடான அல்லது வெப்பத்துடன் கூடியது என்று சொல்வதாகும்.

“எமது மூதாதையர் கூறும் கதைகளின்படி இந்த யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள தீவுகளில் அதிக வெப்பத்தைக் கொண்ட தீவு அனலை தீவாகும். சிலர் இதற்கு அனல் தீவு” என்றும் கூறுகின்றனர். அது சரியென்று தான் எமக்கும் தோன்றுகின்றது.

அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனார். இந்தக் கதை உண்மையாகவோ பொய்யாகவோ இருந்தாலும் அது தமிழ் மக்களின் கருத்தாகும். இதற்கிடையில் எமது திரீவீலர் “மாதலி” அவ்விடத்துக்கு வந்தது. நாம் கடற்படை அதிகாரி குமார உடன் திரீவீலரில் ஏறிக் கொண்டோம். அவர் எங்களை குறுகிய பாதைகளினூடாகக் கூட்டிச் சென்றார். இங்கு கதிகால் என்ற கம்பியாலான வேலி எமது கவனத்தை ஈர்த்தது. நீண்ட முற்களைக் கொண்ட இந்த கம்புகள் பலம் வாய்ந்தவை. அனலை தீவு வாசிகள் வேலிகளின் எல்லைகளை அமைத்துக் கொண்டது இந்த கதிகால் வேலியினாலாகும்.

இந்த கதிகால் வேலியால் எல்லைப் படுத்தப்படும் ஒரு தோட்டத்துக்கு ஆடு, மாடு அல்லது ஒரு கோழிக்குக் கூட உள் நுழைய முடியாது. பாருங்கள் இருக்கின்ற வளங்களைக் கொண்டு அம்மக்கள் தமது வேலைகளைச் செய்து முடிக்கும் விதம் என்று எனக்கு எண்ணத் தோன்றியது. தமது ஆடுகளை மற்றவர்களின் தோட்டத்துக்கு அனுப்பவோ மற்றவர்களின் ஆடுகளை தமது தோட்டத்துக்கு வரவழைத்துக் கொள்ளவோ முடியாத சந்தர்ப்பத்தில் கூட சகவாழ்வு கட்டியெழுப்பப் பட்டிருக்கின்றது.

இடைக்கிடை தென்னை, பனைத் தோப்புகளுக்கிடையில் நீளமான புதர்களுக்கிடையில் பாய்ந்து நாங்கள் விசாலமான பழைய வீடொன்றை வந்தடைந்தோம்.

“ஐயா வாங்க. இது தான் தீவின் ஆகப் பழைய மனிதன் இருக்கும் வீடு. ஆரம்பத்தில் இந்த அனலைத் தீவின் பாடசாலையின் அதிபராக இருந்து பிற்காலத்தில் யுத்தத்தோடு நாட்டிலிருந்து வெளியேறி சில காலம் கழித்து வந்திருக்கிறார்.” கடற்படை அதிகாரி எமக்கு அவரைப் பற்றி ஒரு கதையையே கூறினார்.

நான் சிவப்பிரகாசம் காராள பிள்ளை என்ற அந்த மனிதனைச் சந்தித்தேன். பல கேள்விகளைக் கேட்டேன். எழுபத்தைந்து வயதுடைய அவர் தமது இளம் பராயத்துக்குத் திரும்பி நல்ல ஞாபகத்தோடு எனக்குப் பதிலளித்தார்.

“அத்தீவில் இன்று ஓரளவு மக்கள் குறைந்துள்ளனர். ஆனால் அப்போது இவ்வாறிருக்கவில்லை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த 50-60 குடும்பங்களால் தான் முதலில் இத்தீவில் முதல் குடியேற்றங்கள் உருவாகின. எழுபதுகளில் இங்கு ஐந்தாயிரம் மக்கள் இருந்தனர். 1031 குடும்பங்கள் இருந்தன. யுத்தத்தினாலேற்பட்ட துன்பங்களினால் பெரும்பாலானோர் தீவை விட்டு கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேலைகளைத் தேடிக் கொண்டார்கள். இன்று இங்கு சுமார் 1090 பேர் இருக்கின்றனர். வளமான மண்ணைக் கொண்ட வயல்கள் எமது அப்பாமாருக்கு இருந்தன. இந்து மத மக்கள் தான் கூடுதலாக இங்கு இருந்தனர்.

அன்று தீவிலிருந்த மக்களினதும் இன்றிருக்கும் மக்களினதும் ஜீவனோபாயத்தைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா? நான் குமார மூலமாக அவரிடம் கேட்டேன்.

“இன்று அவர்கள் சகலவற்றிலும் முழுமையானவர்களல்ல. மீனவத் தொழிலால் சீவிக்கவும் முடியாது. முன்னர் புகையிலை, மரக்கறி, நெல் என்பவற்றை பயிரிட்டார்கள், மிளகாய் பயிரிடலையும் நன்றாகவே செய்தார்கள். இன்றும் சிற்சில இடங்களில் பயிரிடுகிறார்கள். ஆனால் மக்கள் பயங்கரவாதிகளின் தாக்குதல்களினால் பல வருடங்கள் பின்தள்ளப்பட்டார்கள். அவர்களின் வயல்கள் பாழடைந்தன. ஒரு மீனைப் பிடித்து அந்த நாள் சாப்பிட்டு வேலையை பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

நான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களின் காலத்தில் மற்றவர்களைப் போல ஆசிரியத் தொழிலை விட்டு இங்கிலாந்தில் ரொடர்டாமில் வாழ்ந்தேன்.

எவ்வளவு சுகமான சொகுசு வசதிகள் இருந்தாலும் நாம் பிறந்த இந்தப் பூமி எமக்கு பெறுமதி மிக்கது. இன்று சமாதானமாக வாழ்வது நாட்டின் தலைவர்கள் எம்மை பாதுகாத்தமையினாலாகும். இல்லாவிட்டால் அந்த காலத்தில் பயங்கரவாதிகள் இந்த வீடுகளைக் கூட அழிக்கப் பார்த்தார்கள்.

சிவப்பிரகாசத்தின் கருத்துக்கள் தெளிவாகவும் உணர்ச்சி பூர்வமானவையாகவும் இருந்தன.

எமது இந்தப் பயணத்தில், இத்தீவின் கரையானது ஒரு காலத்தில் தரைப்பகுதியில் ஒரு மண் வரிசையால் மாத்திரம் பிரிக்கப்பட்டிருக்கும் “புளியந் தீவு” பற்றியும் கேட்டோம். அது 750 சதுர அடி பரப்பளவைக் கொண்ட சிறியதோர் தீவாகும்.

“இந்த புளியந் தீவு எங்களது சிறு வயதில் எமக்கு தடை செய்யப்பட்ட ஒரு தீவாகும். அதில் பயங்கர பாம்புகள், மலைப் பாம்புகள், இருக்கின்றன. கடலில் தண்ணீர் அதிகரிக்கும் போது தீவானது எம்மிலிருந்து பிரிக்கப்படும். நீர் குறைந்ததும் இந்த மண் வரிசையினால் இத்தீவிலிருந்து அடுத்த தீவுக்குப் போகலாம். சின்னஞ் சிறு வயதில் நாமும் பெடியன்களோடு சென்று அதை சிறிது எட்டிப் பார்த்து வருவோம். அதிக தூரம் செல்வதில்லை. அந்தக் காலத்தில் பாருங்கள் மாடுகளைப் போல் பெரிய கொம்புகளையுடைய ஆடுகளும் அங்கு இருந்திருக்கின்றன.

அடுத்த காரியங்கள் ஒரு பக்கம் இருக்க புளியந் தீவைப் பார்க்கும் ஆசை என்னுள் கொழுந்து விட்டது. அப்பக்கம் போகும் படி திரிவீலர் சாரதிக்கு நான் கூறினேன்.

இயற்கை அமைப்பின் புதினமான ஒரு காட்சியை நான் கண்டேன். புற்களால் நிறைந்த தீவானது மிக அருமையானது. அந்த நாட்களில் பெய்த பெரும் மழையினால் மண் குவியல்களும் அசுத்தமான வகையில் தீவை ஒன்றிணைக்கும் இடத்தில் பிற்பக்கமாக இருந்தாலும் நான் மாதலிக்கு மண் வரிசையினூடாக புளியந் தீவிற்குள் செல்லுமாறு கூறினேன். விமலிடமும் அனுரங்கவிடமும் கூட எவ்விதப் பயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

நாங்கள் அத்தீவின் ஒரு கிலோ மீற்றர் அளவில் உள்ளே சென்றோம். கடற்படை அதிகாரி குமார காட்டிய பாதை ஊடாக சென்று கொண்டிருந்தோம். அங்கு ஒரு பெரிய சிவன் கோயில் இருந்தது. தீவு இவ்வாறு கடலிலிருந்து பிரிக்கப்படாத காலத்தில் ஞாயிறு பகலில் வந்து சிவன் தெய்வத்துக்கு ஆராதனைகளை செய்வது அனலைத் தீவு வாசிகளின் ஒரு பழக்கமாகும். கோயிலின் முற்றம் ஆயிரம் பேர் வந்து இருக்கக்கூடிய ஒரு மைதானமாகவும் இருந்தது.

அக்கோயிலைக் கட்ட அவ்வளவு தூரம் வாகனங்களில்லாத இந்த மனிதர்கள் சீமெந்து, மணல், பலகைகள், கட்டட நிலைகளை (பால்க) என்பவற்றை எவ்வாறு கொண்டு வந்தார்கள்? என்று நான் நினைத்தேன். பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை பலமாக நடத்திச் செல்ல இம்மனிதர்களிடம் இருப்பது ஒரு அபூர்வ சக்தியாகும்.

எனக்கு நாக தீபத்தின் நாகம்மா கோயில் நினைவுக்கு வந்தது. நாகம்மா கோயிலின் வருடாந்த பெரும் பூஜைக்கு தங்க பூவொன்றை எடுத்துக் கொண்டு வரும் இராட்சதத் தலைவன் கடலைத் தாண்டி நீந்தி வருவது இன்று நாம் இருக்கும் புளியந்தீவிலிருந்து தான் என்பதை இம்மக்கள் நம்புகிறார்கள். இத்தீவில் ஒரேயொரு மனிதன் எந்நாளும் வாழ்கிறான். அது கோயிலின் பூசாரியாவார். அன்று அவரைத் தேடி கண்டு பிடிக்க முயன்ற போது தேடிக் கொள்ள முடியவில்லை.

எனவே நாம் மீண்டும் அனலை தீவுக்கு வந்தோம். அனலை தீவின் மருத்துவமனை சாதாரண கிராமிய மருத்துவமனையாகும். அது 1952ல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பிள்ளை பேற்றுக்கு ஏனைய தீவுகளைப் போல யாழ்ப்பாணத்துக்குச் செல்ல நேர்ந்தாலும் சாதாரண நோய்களுக்கு இங்கு மருந்துகள் கொடுக்கப்படும். பெரிய ஒரு சுகயீனத்துக்கு திரிவீலர் அம்புலன்ஸினால் அனலைத் தீவு தரிப்பிடத்துக்கு வந்து யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்வது கடற்படை படகொன்றினாலாகும். கடற்படையினர் இவர்களுக்கு தாய், தந்தையர் போல துணை புரிகின்றனர். அவர்கள் பெரும் பக்தியோடு கடற்படையினருக்கு மதிப்பளிக்கின்றனர். சைக்கிள் இம்மக்களின் பெரிய ஒரு பொக்கிஷமாகும். தமது பிள்ளைகளை முதுகில் ஏந்திக் கொண்டு பயணம் செய்வது இந்த சிறிய வாகனத்திலாகும்.

இத்தீவு இரவு நேரங்களில் வெளிச்சமாவது ஒரு ஜெனரேட்டரினால் மாத்திரமே. அதுவும் சலாகை முறையில் மின்சாரம் கிடைப்பதினாலாகும். அதுவும் உடைந்து போனால் இவர்கள் நட்சத்திர ஒளியினால் இரவை கடத்த வேண்டிய நிலையிலுள்ளனர்.

இத்தீவின் விசாலமான கோயில் அய்யனார் தெய்வத்தின் கோயிலாகும். அய்யனார் சிவன் தெய்வத்தின் ஒரு மகன் என்றாலும் பார்வைக்கு விநாயகர் சிலைக்கு ஒப்பாக இருப்பினும் அங்கு வாழும் தமிழ் மக்கள் அய்யனார் என்பவர் விநாயகர் தெய்வமல்ல என்று கூறுகின்றனர். 1931 ல் ஆரம்பிக்கப்பட்ட இக்கோயிலின் 125 ம் ஆண்டு விழா நாம் அங்கு செல்ல சில தினங்களுக்கு முன் நடைபெற்றதாக அங்கு பிரதான பூசாரி எனக்கு கூறினார்.

அய்யனார் தெய்வம் பற்றி வரலராற்று கதையை கேட்பதற்காக நான் குமாரவின் மொழிபெயர்ப்பை நாடினேன்.

இலங்கையில் மிகப் பெரிய தேர் வண்டி இருப்பது இக்கோயிலில் தான். இத் தேர் வண்டியை இழுக்கும் காலத்துக்கு இங்கு வந்தீர்களானால் உங்களுக்கு நிறைய விடயங்கள் தெரிந்து கொள்ள முடியும். பிள்ளைகளில்லாதவர்களுக்கு பிள்ளை கருத்தரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும், இந்த அப்பாவி மக்களின் விவசாய நடவடிக்கைகள், மீன்பிடி தொழில் யாவற்றுக்கும் கை கொடுப்பது அய்யனார் தெய்வம் தான். காலை மாலை கடலில் பயணம் செய்யும் அவர்களைப் பாதுகாப்பதும் இந்த அய்யனார் தெய்வம் தான்.

பூசாரி இவ்வாறு சொல்லிக் கொண்டு விளக்குகள் பலவற்றை எரித்து சுற்றிலும் பெரியதோர் விளக்கினால் அந்த அய்யனார் தெய்வத்தின் சிலையைச் சுற்றி புகை பிடித்தவண்ணம் எங்களையும் ஆசிர்வதித்தார்.

நான் திடீரென்று இடையில் ஒரு கதையை ஆரம்பித்தேன். ஆனால் இவ்விடயம் அய்யனார் தெய்வம் பற்றிய அவர்களின் விசுவாசத்தோடு ஒன்றிணைந்த முக்கியமான ஒரு விடயமாகும். ஒரு முறை இந்த கடற்பிரயாணத்தின் போது எமது வோட்டர் ஜெட் வாகனத்திலிருந்த சிப்பந்தியொருவர் விமல் கேட்ட கேள்விக்கு இவ்வாறு கூறினார்.

ஆபத்துக்கள் ஏற்படாமல் இல்லை. ஒருமுறை சாதாரண மக்கள் பயணிக்கும் படகொன்று விபத்தில் சிக்கி மக்கள் அழுது புலம்பும் காட்சியை எமது காவற்றுறை வாகனம் கண்டிருக்கின்றது.

நாம் மிக வேமாக அமிழ்ந்து கொண்டிருக்கும் அந்த படகை நோக்கி சென்றோம். அதில் சிறிய பிள்ளைகள் இருவர், ஒரு கர்ப்பிணித்தாய், முதிய பாட்டிமார் இருவர் சில ஆண்களும் இருந்தனர். நாங்கள் அங்கு சென்ற போது மக்கள் அனலைத் தீவு கோயில் பக்கம் பார்த்துக் கொண்டு கடவுளைக் கும்பிடுகின்றனர். அந்த சிறிய படகு ஒரு பக்கம் நீரில் மூழ்கியிருந்தது. நாம் அங்கு சென்று காப்பாற்றினோம். அம்மக்கள் எமக்கு நன்றி செலுத்தியதை விட அய்யனார் கடவுளுக்கே அதிக நன்றியை செலுத்தினார்கள்.

படங்கள்: விமல் கருணாதிலக

சிங்களத்தில் : உபாலி சமரசிங்க

தமிழில் : நிசா...

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com