Contact us at: sooddram@gmail.com

 

பிரதமர் உருத்திரகுமாரனால் மறக்கப்பட்ட மாவீரர்களும், மறைக்கப்பட்ட தேசியத் தலைவரும்!

கே.பி. அவர்களால் முன்மொழியப்பட்ட நாளிலிருந்து 'நாடு கடந்த தமிழீழ அரசு' தமிழ்த் தேசியத்திற்கெதிரான அச்சுறுத்தல் தளமாகவே தன்னை நிறுவி வருகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் அவைகளும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தமிழீழ விடுதலைத் தளத்தில் இணைந்து பயணிக்கும் என்ற தனது முன்னைய வாக்குறுதியையும் மீறியே திரு. உருத்திரகுமாரன் அவாகள் செயற்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டும் தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை நடாத்தி முடிக்கும்வரை புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களுடன் சமரசம் செய்து கொண்ட திரு. உருத்திரகுமாரன், அதன் பின்னரான இன்று வரையிலான நாட்கள் வரை புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்.
 
தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களுக்குச் சார்பானவாகள் எனக் கருதப்படுபவர்களின் தேர்தல் தெரிவுகளை இரத்துச் செய்ததில் ஆரம்பித்த இந்த முரண்பாடு தமிழ்த் தேசியத் தளத்தில் நாடு கடந்த தமிழீழ அரசு சார்பான ஒரு குழுவை உருவாக்கியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் களமுனை இழப்பினைச் சாதகமாகக் கொண்டு, தேசியத் தலைவர் அவர்களது இடத்திற்கு கே.பி.யை நகர்த்த முயன்ற குழுவினர், அதில் தோல்வியுற்ற நிலையில், தமிழ்த் தேசியத் தளத்தைச் சிதைக்கும் எண்ணக் கருவுடன் நாடு கடந்த தமிழீழ அரசில் உள் நுழைந்து, தம்மைப் பலப்படுத்திக்கொண்டனர்.
 
குழப்பமான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தேர்தலில் விருப்பத்துடன் பங்குபற்றப் பலர் முன்வராத நிலையிலும், கே.பி. மீது உருவான நம்பிக்கையீனத்தின் அடிப்படையில், கே.பி.யால் முன்மொழியப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை தமிழ்த் தேசிய உணர்வாளாகள் பலர் நிராகரித்தும் இருந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசு என்ற தளத்தில் கே.பி. குழுவினர் இலகுவாக உள் நுழைந்து கொண்டனர். பெரும்பான்மை பலம் கொண்ட இவர்களிடம் திரு. உருத்திரகுமாரன் அவர்கள் சூழ்நிலைக் கைதியாகச் சிக்கிக்கொள்ள நேர்ந்தது.  

பிரான்சில் இடம்பெற்றதாகப் புனையப்பட்ட தேர்தல் மோசடி நாடகமும், அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய தளத்தின் முன்னணிப் பணியாளர்கள் இருவரது தெரிவுகள் இரத்துச் செய்யப்பட்டதும் தவறான அணுகுமுறை என்று திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கு மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் விளக்கப்பட்டது. ஆனாலும், நீதிக்குச் சார்பாக நிற்க முடியாத நிலையில் திரு. உருத்திரகுமாரன் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில்களை வழங்கியதுடன், அந்தத் தேர்தல் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பை கே.பி. குழுத் தலைவரிடமே விட்டிருந்தார். இன்றுவரை, அந்தத் தேர்தல் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே நாடாளுமன்றம், பிரதமர், சபாநாயகர், மந்திரிகள் என்ற தொடர் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

திரு. உருத்திரகுமாரன் அவர்களது தளம்பல் போக்கினாலும், முன் - பின் முரணான முடிவுகளாலும் அச்சத்துக்குள்ளான தமிழ்த் தேசிய உணாவாளர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் தடம் மாறிய திசையை நேர் படுத்தும் முயற்சியில் இறங்கிளார்கள். தமிழ்த் தேசிய உணாவாளாகளது இந்த நீதிக்கான போராட்டமும் கே.பி. குழுவினரால் முறியடிக்கப்பட்டது.
 
இதனால், நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகளில் 38 பேர் வெளிநடப்புச் செய்த நிலையில், கே.பி. குழுவினரின் ஆலோசனையுடன் புதிய அரசியல் அமைப்புக்கான அங்கீகாரமும், பிரதமர், சபாநாயகர் தெரிவும், தொடர்ந்து மந்திரி சபை நியமனங்களும் ஜனநாயக விழுமியங்களின் படுகொலை மீது நிகழ்த்தப்பட்டது.

கே.பி. குழுவினரது தமிழ்த் தேசிய சிதைவு முயற்சியினைத் தடுத்து நிறுத்தி, தேசியத் தலைவர் அவர்களது பாதையில் இணைந்து பணியாற்றுமாறு தமிழ்த் தேசிய உணர்வாளாகளால் விடுக்கப்பட்ட  உருக்கமான வேண்டுகோளும் பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
புது வருடத்தை முன்னிட்டு, தமிழ்த் தேசிய விடுதலைத் தளம் சார்பாக பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை விடுத்த ஒன்றிணைந்த போராட்டத்திற்கான அழைப்பும் நிராகரிக்கப்பட்டுள்ளது. திரு. உருத்திரகுமாரன் அவர்களது இந்தக் குழுநிலைவாதம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை வெகு தூரம் பின் நகர்த்தி வருகின்றது.

இந்த நிலையில், திரு. உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள புது வருடத்திற்கான செய்தி தமிழ்த் தேசியவாதிகளை மிகுந்த அதிருப்திக்கும், கோபத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. அவரது அறிக்கையில் திட்டமிட்ட வகையில் மாவீரர்களது அர்ப்பணிப்புக்கள், விடுதலைப் புலி வீரர்களது தியாகம் மறக்கப்பட்டும், தேசியத் தலைவர் அவர்கள் குறித்த செய்தி மறைக்கப்பட்டும் உள்ளது.
 
தமிழீழ விடுதலை நோக்கிய எந்த நகர்வுக்கும் விதைகளாகவும், வேர்களாகவும் இருந்து வழிகாட்டும் மாவீரர்களையும், சூரியத் தேவனாகத் தமிழீழம் நோக்கிய அத்தனை நகர்வுகளுக்கும் ஒளி வழங்கி உயிர்ப்பிக்கும் தேசியத் தலைவர் அவர்களையும் திட்டமிட்ட வகையில் மறைப்புச் செய்துள்ள உருத்திரகுமாரன் அவர்களது செயல் தமிழ்த் தேசிய தளத்தில் பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

சிங்கள தேசம் அறிவித்துள்ள, ''கே.பி. ஊடாக, புலம்பெயர் தமிழர்கள் மீதான தாக்குதல் ஆரம்பமாகிவிட்டது'' என்ற செய்தி இதுவாக இருக்குமோ என்ற அச்சம் தற்போது புலம்பெயர் தமிழீழ மக்களை முற்றாக ஆக்கிரமித்துள்ளது. இதனைத் தெளிவு படுத்த வேண்டிய கடமை திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கு உண்டு எள்பதையும் இந்தத் தருணத்தில் அவருக்கு நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும்.
 
அத்துடன், புலம்பெயர் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும், தமிழீழ விடுதலை நோக்கிய பாதையில் ஒன்றாகப் பயணிப்பதற்கும் தனக்கு இருக்கும் சந்தேகங்களையும், அச்சத்தையும் திரு. உருத்திரகுமாரன் அவர்கள் தமிழ் மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும்.

- சுவிசிலிருந்து கதிரவன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com