Contact us at: sooddram@gmail.com

 

பண்டிதருக்கு பாமரனின் வேண்டுகோள்

(பாமரன்)

இது போன்ற ஆரோக்கிமற்ற கருத்துக்களை சூத்திரம் இணையத்தளத்தில் வெளியிடுவதில் எமக்கு அவ்வளவாக உடன்பாடுகளும் இல்லை. இது தமிழ் மக்கள் அரங்கத்தின் வலுப்பெற்றுவரும் ஐக்கியப்பாட்டையும், ஏற்பட்டுவரும் புரிந்துணர்வுகளை விரும்பாதவர்கள் செய்யும் செயற்பாடாகத்தான் பார்க்க முடிகின்றது. விமர்சனம், சுயவிமர்சத்தில் எமக்கு நம்பிக்கையும், உடன்பாடும் உண்டு. ஆனால் கொச்சைப்படுத்திய வார்த்தை பிரயோகங்களுடன் கூடிய 'தனிப்பட்ட' காழ்ப்புணர்ச்சியை வீசும் பண்டிதர்களின் சலசலப்புகளில் எமக்கு உடன்பாடும் இல்லை. இச் சலசலப்புகளை இனியும் தொடரா வண்ணம் இருத்தல் நாகரிகமாகவும், சரியானதாகவும் இருக்கும் என நம்புகின்றோம். எனவே இவை போன்ற தனி நபர் தாக்குதல்களை இத்தோடு நிறுத்திக் கொள்ளுமாறு விநயமாக யாபேரையும் கேட்டுக் கொள்கின்றோம். - சூத்திரம் ஆசிரியர் குழாம்

ஐயா! சலசலப்பு பண்டிதர் அவர்களே!

"பெருமாளுக்கு ஏனிந்த கோணங்கித்தனம்?" என்ற தலைப்பில் சலசலப்பில் உங்களது பதிவைப் பார்த்தேன்.

வரதராஜப் பெருமாள் அண்மையில் டான் தொலைக்காட்சியில் ஈபிடிபி கட்சி பற்றி என்ன கருத்துக்களைச் சொன்னார் என்று உங்கள் பதிவில் எதுவுமே தெரிவிக்காது, அடிப்படை பத்திரிகை தர்மங்களையும் மீறி, சகட்டுமேனிக்கு, "பெருமாள் ஈ.பி.டி.பி கட்சியை வாங்கு வாங்கென்று வாங்கி தனது வக்கிர புத்திகளை வாந்தி வாந்தியாக எடுத்த அநாகரீகச்செயல் என்று அவரைத் திட்டிக் கொண்ட அவற்றையே நீங்கள்தான் முழுதாகச் செய்திருக்கிறீர்கள்!

 கோணங்கித்தனம், ‘காழ்ப்புணர்ச்சி, ‘சில்லறைத்தனங்கள், ‘கூடப்பிறந்த குணம்முட்டையில் மயிர் பிடுங்குகிறார் என்கிறீர்கள்—ஆனால், அவர் பிடுங்கியமயிர்கள் என்ன என்பதை கட்டுரையில் காட்டியிருந்தால் நாமும் அந்த மயிர்களைப் பார்த்திருக்கலாமே!

 "வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைக்க முனைவது போல் இன்று தமிழ் கட்சிகள் ஒன்று பட்டு சிந்தித்து பேசும் ஆரோக்கியமான தளம் ஒன்று உருவாகி வருகையில் அந்த முயற்சிகளை உடைத்து நாசம் செய்ய கிளம்பி விட்டார் பெருமாள் என்றும், "ஐக்கிய முயற்சிகளுக்கு கடந்த காலங்களை போல் கல்லறை கட்டி விடாதீர்கள் என்றும் கூறிக்கொண்டே அந்த முயற்சிகளில் நீங்கள்தான் ஈடுபட்டு, அந்த நோக்கத்தை எய்துவதற்காக பெருமாளைப் பலிக்கடாவாக்கும் தீர்மானம் செய்து மேற்கொள்ளப்படுவதுபோல் தெரிகிறதே! --- ஒருவேளை, தமிழ்ப் பிரதேசங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் வரும் சாத்தியக்கூறுகள் தென்படுவதால், ஒற்றுமையாகத் தேர்தலில் நிற்பதானால் தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றைய கட்சிகளின் அபேட்சகர்களுக்கும் ஈபிடிபி இடம் கொடுக்க நேரிடும் என்பதால் அதனைத் தவிர்க்க, அதற்கு காணமாக, வரதராஜப் பெருமாளைப் பலிக்கடாவாக்க அட்வான்ஸாக அத்திவாரம் போடப்படும் பின்னணியின் பிரதிபலிப்பாக இருக்குமோ உங்கள் ஆக்கம் என்ற சந்தேகம் தோன்றுகிறது.

பாரிசிக்கு வரதராஜப்பெருமாள் வருகை தந்தபோது ஈ.பி.டி.பியை திட்டித்தீர்த்தாக எழுதியிருக்கிறீர்கள். நானும் நீங்கள் குறிப்பிட்ட அந்த நிகழ்வில் ஒரு பொதுமகனாகக் கலந்து கொண்டேன்; அப்படி அவதூறு வார்த்தைகள் எதுவும் பேசப்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. அப்படியாக வந்திருந்த பார்வையாளர்களுக்குத் தெரியாத திட்டுகள்தான் என்பதைத் நீங்கள் உங்கள் ஆக்கத்தில் தெரிவித்தால் மற்றவர்களும் வரதராஜப் பெருமாளைப் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். தெரிவிப்பீர்களா?

 "ஈ.பி.டி.பி குறித்து பெருமாளுக்கு விமர்சனங்கள் இருக்குமாயின் பேசுவதற்குரிய தளம் ஒன்று இருக்கின்றது, வரட்டும் எனக் குறிப்பட்டிருக்கிறீர்கள். அது என்ன தளம்? எங்கிருக்கிறது? என்பதை உங்கள் பதிவில் குறிப்பிடாது விட்டீர்கள். அநத விபரங்களையும் தந்திருக்கலாமே. நாமும் அந்தத் தளம் பறறி அறியவும் அந்த தளத்திற்குச் செல்லவும் வாய்ப்பாக அமைந்திருக்கும்.

"மனித உரிமைகள் குறித்து பேச பெருமாளுக்கு அருகதை கிடையாது" என்கிறீர்கள்.-சரி! ஆனால் யாருக்கு அந்த அருகதை இருக்கிறது? உங்களுக்கு இருக்கிறதென்றால் அந்த அருகதையை எப்பொழுது? எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்?

 "சுகுத் தோழருக்குச் சொல்லிவிட்டீர்கள்என்று திரும்பத் திரும்ப வேறு எழுதுகிறீர்கள்.-- என்ன சொன்னீர்கள்? அதற்கு அவர் என்ன சொன்னார்? என்பதை எழுதாது விடுகிறீர்கள். இதில், சுகுவிற்கும் வரதராஜப் பெருமாளுக்கும் சிண்டு முடிக்கும் எத்தனங்களல்லவா தெரிகின்றன! --‘சுகு பாவம்!-ஒரு மாதிரி இழுத்துக் கொண்டு போகலாம், பெருமாள்தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் வரமாட்டார் என்ற தொனி தென்படும் உங்கள் வார்த்தைகள், சுகுவைத் தட்டிக் கொடுப்பதாக பாவனை பண்ணி உண்மையிலேயே அவரைக் கீழ்மைப்படுத்துவதுபோல் அல்லவா தெரிகிறது!

 "பெருமாளின் விமர்சனங்கள் அரசியல் நாகரிகம் அற்றவை எனக் கூறி நீங்களே அரசியல் நாகரிகம் எதுவுமில்லாமல் வெறும் வசவுகளால் சரமாரியாகச் சாடியிருக்கிரீர்கள். அப்படியானால் விமர்சனங்களை தன்னிச்சையாக வெறும் வசவுகளால் எதிர்கொள்வதுதான் அரசியல் நாகரிகம் என்பது உங்களது நிலைப்பாடா?

பாமரன் நானும் உங்களைக் கேட்கிறேன்: வாருங்கள் பண்டிதரே! வெறும் வசவுகளை விடுத்து வரதராஜப் பெருமாள் வெளிப்படுத்திய அந்தக் கருத்துக்கள், விமர்சனங்கள்தான் என்ன? அவற்றிற்கு உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள்தான் என்ன? --தெளிவு படுத்துங்கள்; என்னைப் போன்ற சமானியர்கள் அவற்றை ஆராய்ந்து, சீர்தூக்கி, சிந்தனை செய்யஒரு முடிவுக்கு வர!

(பாமரன்)

பெருமாளுக்கு ஏனிந்த கோணங்கித்தனம்?…..(நன்றி: சலசலப்பு இணையத்தளம்)

(பண்டிதர்!)

ஞானி சந்திரனை சுட்டிக்காட்டிக்கொண்டிருக்க முட்டாள் ஒருவன் ஞானியின் சுட்டுவிரலை பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தானாம்.

அது போல அமைச்சர் தேவா தானும் தன் பணியும் என்று அர்ப்பணங்களுக்குள் மூழ்கிக்கிடக்க முன்னாள் முதல்வர் என்ற வரதராஐப்பெருமாள் முட்டையில் மயிர் பிடுங்க கிளம்பி விட்டார். அண்மையில் டான் தொலைக்காட்சியில் தோன்றிய பெருமாள் ஈ.பி.டி.பி கட்சியை வாங்கு வாங்கென்று வாங்கி தனது வக்கிர புத்திகளை வாந்தி வாந்தியாக எடுத்த ஆநாகரீகச்செயல் கண்டு யர்ரும் ஆச்சரியமடைந்துவிடல்லை. காரணம் இது பெருமாளோடு கூடப்பிறந்த குணம்!

ஆனாலும் வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைக்க முனைவது போல் இன்று தமிழ் கட்சிகள் ஒன்று பட்டு சிந்தித்து பேசும் ஆரோக்கியமான தளம் ஒன்று உருவாகி வருகையில் அந்த முயற்சிகளை உடைத்து நாசம் செய்ய கிளம்பி விட்டார் பெருமாள்.

இந்த அருவருக்கத்தக்க செயல்கள் இன்று நேற்றல்ல. பெருமாள் இந்தியாவில் பளிங்கு மாளிகையும், அதனருகே வியாபாரம் பெருக்க மாட்டுப்பண்ணையும் வைத்திருந்து விட்டு, அஞ்ஞாதவாசம  கழிந்து அண்ணை எப்ப சாவான் திண்ணை எப்ப காலி என்று நாட்டுப்பற்றில் இலங்கையில் கால் வைத்த நாட்களில் இருந்து நடக்கின்றது.

ஆனாலும் அவர் நினைத்த படி அண்ணை ஒருவரும் சாகவில்லை என்பது அவருக்கு தீராத கவலை. தம்பியாவது செத்து மடிந்து விட்டான், இருக்கின்ற அண்ணன்மார்களை பொய்யாவது சொல்லி ஏதாவது ஒரு பிடி பிடித்து தனது சில்லறைத்தனமான அரசியல் சேட்டைகளை நடத்தி விடலாம் என்று கற்பனைத்தேரில் ஏறி வருகின்றார்.

இது குறித்து, சுகுத்தோழருக்கு பல தடவைகள் சொல்லி பார்த்தும் பெருமாள் திருந்தவில்லை. பாரிசில் தோழர் நாபாவின் அஞ்சலி நிகழ்வின் போது ஈ.பி.டி.பி தோழர்களை அழைத்து வைத்துக்கொண்டு பெருமாள் தொலை பேசியில் ஈ.பி.டி.பி யை திட்டித்தீர்த்ததும் தெரிந்த கதை. தோழர் நாபாவிற்கு மரியாதை செலுத்த சென்ற தோழர்கள் பெருமாளின் காழ்ப்புணர்சிகளை கண்டும் காணாமல் இருந்து விட்டு பெரு மனத்தோடு திரும்பியிருந்தனர்.

இது போல் பெருமாள் தனது காழ்ப்புணர்ச்சிகளை பல இடங்களிலும் வாந்தி எடுத்து வருகின்றார். சுகுத்தோழரிடமும் செலால்லிப்பயன் இல்லை என்ற அளவிற்கு வந்த பிறகு எழுதித்தான் தீர வேண்டும் என்பது நியாயமான முடிவுதான்.

டான் தொலைக்காட்சியில் தோன்றி சில தினங்களுக்கு முன்னர் பெருமாள் விட்ட சில்லறைத்தனங்களை தொடர்ந்தும் கண்டும் காணமால் இருப்பதென்றால் ஏதோ பெருமாளுக்கு மட்டும்தான் பேசத்தெரியும் என்று அர்த்தமாகிவிடும்.

கசாப்புக்கடைகாரன் ஜீவகாருண்ணியம் குறித்து பேசுவது போல் பெருமாளும் பேச விழைகின்றார். மனித உரிமைகள் குறித்து பேச பெருமாளுக்கு அருகதை கிடையாது.

ஆயுதக்குழு என்றும், வன்முறை என்றும், அது இது என்றும் பேசி தன் முதுகை திரும்பி பார்க்க முடியாத பெருமாள் முதலில் இந்த அநாகரீச்சொல்லாடல்களை நிறுத்த வேண்டும்.

ஈ.பி.டி.பி குறித்து பெருமாளுக்கு விமர்சனங்கள் இருக்குமாயின் பேசுவதற்குரிய தளம் ஒன்று இருக்கின்றது வரட்டும். வந்து பேசட்டும். விமர்சனங்கள் இருந்தால் அதை அரசியல் நாகரிகத்தோடு முன்வைக்கட்டும். விமர்சனங்களில் உண்மை இருக்குமாயின் எற்றுக்கொள்ளப்படும்.

நூறு பூக்கள் மலரட்டும். வாருங்கள் பெருமாள் அவர்களே! வந்து நின்று மக்களுக்காக இனியாவது உழையுங்கள். வாழை கமுக தோரணம் கட்டி தொங்க விட்டு வரவேற்போம்.

அடுத்தவன் வளர்ச்சிகண்டு அடுக்கடுக்காக பொய் புனையும் காழ்ப்புணர்சிகளால்தான் இன்று தமிழ் சமூகத்தின் நிலை இப்படி ஆகியதுதயவு செய்து ஐக்கிய முயற்சிகளுக்கு கடந்த காலங்களை போல் கல்லறை கட்டி விடாதீர்கள்.

இப்போதைக்கு இத்தோடு நிறுத்துவோம்!

(பண்டிதர்!)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com