Contact us at: sooddram@gmail.com

 

நச்சுத்தன்மையற்ற உலகை உருவாக்கும் வகையில் இரசாயன சக்தியின் பயன்பாடு

(கலாநிதி யசோதரா பிரபாகரர் இராசாயனவியல் துறை)

இரசாயனவியலானது உலகளாவிய ரீதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது. இன்றைய காலத்தின் தேவைகளை புதியவகை சக்தி மூலங்களை உருவாக்கி காலநிலை மாற்றங்களை புரிந்துகொள்ளல், நிலம், நீர், வளி என்பவற்றை உள்ளடக்கிய நச்சுத் தன்மையற்ற சூழலை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இரசாயனவியல் அறிவு வேண்டப்படுகிறது.

திண்மங்கள், திரவங்கள், வாயுக்கள் ஆகிய சடப்பொருட்கள் யாவும் இரசாயன மூலகங்கள் அல்லது அவற்றின் சேர்வைகளால் ஆனவை. அத்துடன் ஆழ்ந்து நோக்கினால் உயிர்வாழ்வதற்குரிய எல்லாச் செயற்பாடுகளும் இரசாயனத் தாக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இரசாயனவியற் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டுவது மிகப் பெரிய தேவையாகும்.

2011 ஆண்டு இரசாயனவியலாளர்களுக்கு ஒருவரப்பிரசாதமாகும். ஐக்கிய நாடுகள் சபையானது 2011ம் ஆண்டை சர்வதேச இரசாயனவியல் ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. உண்மையில் இந்தப் பிரகடனத்திற்கு முக்கிய காரணகார்த்தாக்கள் தூய மற்றும் பிரயோக இரசாயனத்திற்கான சர்வதேச ஒன்றியமும்  (IUPAC)  கல்வி, விஞ்ஞானம், கலாசாரத்திற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு (UNESCO) ஆகும்.

இதற்கு இரசாயன ஆர்வலர்களிடமிருந்து பெருவரவேற்புக் கிடைத்துள்ளது. முன்பும் ஐ.நா. சபையானது வெவ்வேறு துறை களுக்கு சர்வதேச ஆண்டுகளை அறிவித் துள்ளது. சமாதான (Peace) ஆண்டாக 1986 உம் எழுத்தறிவு (Literacy) ஆண்டாக 1994 உம் பெளதீகவியல் (Physics)  ஆண்டாக 2005 உம் பிரகடனம்படுத்தப்பட்டன. இவ்வருடம் இரசாயனவியலுக்குரியதாகும்.

சர்வதேச இரசாயனவியல் ஆண்டுஇரசாயனவியல் எமது வாழ்வு எமது வருங்காலம்என்னும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும். இதன் ஆரம்ப நிகழ்வானது பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 27ம், 28ம் திகதிகளில் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இரசாயனவியல் ஆண்டின் நிகழ்வுகள் உலகளாவியதாகவும், நாடாளவியதாகவும், பிரதேச ரீதியாகவும் நடாத்தப்படவுள்ளன.

இலங்கையில் இலங்கை இரசாயனவியற் கழகத்தில் (IChemc) தேசிய செயலகமொன்று உருவாக்கப்பட்டு நாடாளாவிய ரீதியில் விழாக்களை நடாத்துவதில் முன்னின்று செயற்பட்டு வருகின்றது. பாரிஸில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறும் அதேவேளை இலங்கை இரசாயனவியற் கழகமானது. சிaமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தின் (பி. எம். ஐ. சி. எச்.) இன் (புதியகட்டப் பகுதி) இம்மாதம் 27 முதல் 30ம் திகதிவரை இரசாயனவியல் விநோதங்கள் எனும் தலைப்பில் ஒரு கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தது.

இதன் ஏனைய செயற்பாடுகளாக கட்டுரை எழுதுதல் மற்றும் சித்திரம் வரைதல் போட்டிகள், நினைவு முத்திரை வெளியிடல் புலமைப்பரிசில்கள் வழங்கல், நாடமாடும் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தல், பல்கலைக்கழகங் களுக்கிடையிலான விவாதப் போட்டிகள் நடத்துதல், பாடசாலைகளுக்கிடையிலான புதிர்ப்போட்டி, மாயாஜாலவித்தை போன்றன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாண்டில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இரசாயனவியலின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறை பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளது.

இரசாயனவியல் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை வடமாகாணத்தில் இயங்கும் பத்திரிகைகளில் பிரசுரித்தல், க. பொ. த. உயர்த்தரத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்குரிய இரசாயனப் பரிசோதனைகளடங்கிய இறுவட்டு (CD) ஒன்றை வெளியிடல், இப்பரிசோதனைகளை நேரில் காண்பதற்கு மாணவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்தல், விரிவுரையுடன் செய்து காட்டுதல் (Lecture Demenstration)  என்பன இவ்வருடத்தில் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச இரசாயனவியல் ஆண்டின் (2011) முக்கிய இலக்குகளாவன: 1. உலகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் இரசாயனவியலின் முக்கியத்துவத்தை பொதுமக்களை உணரச்செய்தல். 2. சிறுவர்கள் மாணவர்கள் மத்தியில் இரசாயனவியலில் சிரத்தையை ஊக்குவித்தல் 3. இரசாயனவியலின் ஆக்கபூர்வ எதிர்காலத்திற்கான ஆர்வத்தை ஏற்படுத்தல் 4. மேரி கியூரி அம்மையார் நோபல் பரிசு பெற்றதன் நூற்றாண்டு விழாவையும் இரசாயனக்கழகங்களின் சர்வதேச அமைப்பு உருவாகிய நூற்றாண்டு விழாவையும் கொண்டாடுதல்.

பொதுமக்களை இராசாயனவியலின் முக்கியத்துவத்தை உணரச்செய்தல் ஒவ்வொரு பொதுமக்களும் உலகத்தில் தேவைகளை பூர்த்திசெய்வதில் இரசாயனவியலானது எவ்விதத்தில் உதவுகின்றது என்பது பற்றி அறிந்திருத்தல் நன்று. இரசாயனவியல் என்றால் என்ன? அதன் தன்மைகள், அதனைப் பற்றிய அறிவு போன்றவற்றை தெரிந்து கொண்டால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.

சர்வதேச இரசாயனவியல் ஆண்டில் இரசாயன ஆர்வலர்கள் இரசாயனவியலின் விஞ்ஞானம் மற்றும் கலை, மனிதவள அறிவை மேம்படுத்துவதிலும் அதன் பொருளாதார வளத்தை அதிகரிப்பதிலும் நல்லதொரு வளமான சூழலை உருவாக்குவதிலும் அதன் பங்கு போன்றவற்றை கொண்டாடவுள்ளனர்.

சேதன இரசாயனத்தை கற்கின்ற மாணவர்களில் ஒரு பகுதியினர் சுகாதாரம், சம்பந்தமான வேலைகளைப் பெற்றுக் கொண்டாலும் இன்னொரு பகுதியினர் மருந்தாக்க தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர். ஆம் இதுவும் இரசாயனவியலின் ஓர்படிக்கல்லாகவே இருக்கின்றது.

ஏனெனில் இத்தொழிற்சாலைகள் உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் சூழலியல் மாற்றங்களையும் கருத்தில் எடுத்து செயற்படுகின்றன. முற்றுமுழுதாகப் பார்த்தால் இரசாயனவியலின் தாக்கம் எங்கெல்லாம் புகுந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

சிறுவர்கள் மாணவர்கள் மத்தியில் இரசாயனவியலுக்கான விருப்பை ஊக்குவித்தல்.

இரசாயனவியலில் ஆசிரியர்கள் இரசாயனவியலில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவதில் முக்கியபங்கு வகிக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாது இரசாயனம் தெரிந்த அனைவரும் இதில் பங்குகொண்டு வகுப்பறைகளில் மாணவர்களின் ஈடுபாட்டை குறிப்பாக ஆரம்பவிருப்புகளில் அதாவது சிறுவயது முதற்கொண்டு அவரவர்க்கு ஏற்ற விதத்தில் இரசாயன அறிவை வளர்க்க வேண்டும்.

மாயாஜால விந்தைகளை இரசாயன மூலகங்கள் கொண்டு செய்தல், கையால் செய்யக் கூடிய சிறு சிறு தொழிற்பாடுகள், தேசிய இரசாயன வாரத்தை பிரதேசங்களில் அறிமுகப்படுத்தி செயற்படுத்துதல் போன்றவற்றின் மூலம் சிறுவர்களை இரசாயனவியல் தெரிந்தவர்களாக மாற்றவும் பிற்காலத்தில் அவர்களால் புதிய வகை கண்டுபிடிப்புகளையும் தயாரிப்புகளையும் செய்யக் கூடியதாக ஆக்கவும் முடியும். சிறு உதாரணமாக நீரை எவ்வாறு சுத்தப்படுத்தலாம் என்பதை சிறுவர்களிடத்தில் செய்து காட்டலாம்.

பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுடைய பாடவிதானங்களுடன் தொடர்புடைய தொழிற்பாடுகளை பொதுமக்களுடன் இணைந்து பொது இடங்களிலோ பல்கலைக்கழகங்களிலோ செயற்படுத்துவதன் மூலம் பல்வேறு தரப்பினரையும் இரசாயனவியலுடன் ஒன்றிக்கச் செய்யலாம்.

இரசாயனத் தொழிற்சாலைகளில் உள்ளவர்கள் தங்களது உற்பத்திகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வதனால் எதிர்காலத்தில் அவர்களை நல்லதொரு உற்பத்தியாளர்களாக உருவாக்கலாம். எனவே, 2011ம் ஆண்டு இரசாயனவியலாளர்களுக்கு நல்லதொரு எதிர்பார்ப்புள்ள ஆண்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இரசாயனவியவின் ஆக்கபூர்வ எதிர்காலத்திற்கான ஊக்கத்தை ஏற்படுத்தல்: எமது மாணவர்களின் பொது அறிவு கூடியுள்ளதை அவதானிக்கும் அதே நேரத்தில் ஆக்கத்திறனானது எதிர்பார்க்காத அளவுக்கு குறைந்துள்ளதைக் காணலாம்.

இரசாயனவியலானது ஆக்கத்திறனை ஏற்படுத்துவதற்கு ஓர்சிறந்த வழியாகும். ஏனெனில் இரசாயனவியலாளர்கள் மூலக்கூறுகளை வடிவமைக்கும் படைப்பாளிகளாவர்.

அதாவது தங்களது திறமைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு வழிகளில் புதிய உற்பத்தி பொருட்களையோ அல்லது அவற்றை உருவாக்குவதற்கான முறைகளையோ கண்டுபிடிப்பார்கள். இன்றைய உலகின் சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றிகாணக் கூடிய முறையில் இவர்கள் செயற்படுவார்கள்.

கியூரி அம்மையாரின் நோபல்பரிசின் நூற்றாண்டு, சர்வதேச இரசாயனவியல் கழகங்கள் அமைப்பின் நூற்றாண்டு விழாக்கள் இரசாயனவியலின் வளர்ச்சியில் மேரி கியூலி அம்மையார் முக்கிய பங்காற்றியுள்ளார்கள். இரசாயன நாகங்களை ரேடியம், போலோனிய என்பவற்றை கண்டுபிடித்தமைக்காக இராயனவியலுக்கான நோபல் பரிசில் 1911ம் ஆணடில் இவருக்கு வழங்கப்பட்டது. கியூரி அம்மையார் நோபல்பரிசில் பெற்றது இது முதற்தடவையல்ல.

1903ம் ஆண்டு கதிரியக்கத்தை கண்டுபிடித்தமைக்காக பெளதிகவியலாளர்களுக்கான நோபல் பரிசை இவரது கணவரான பியர் கியூரி உடனும் ஹென்றி பெக்கியூஸ் உடனும் இணைந்து பெற்றுக்கொண்டார். இன்றுவரையும் இவரைப் போன்ற மிகச் சிலரே இரண்டு நோபல் பரிசுகளுக்குரியவர்களாகவுள்ளனர்.

லீனஸ் போலிங் (இரசாயனவியல்- 1954, சமாதானம்- 1962), ஜோன் பாட்டீன் (பெளதிகவியல் 1956, 1972) பிரைட் சங்கர் (இரசாயனவியல் 1958- 1980) ஆகியோர் மற்றைய இரட்டைப் பரிசுக்குரியவர்களாவர்.

கியூரி அம்மையாரின் காலத்துடன் ஒப்பிடும் போது தற்போது குறைவான தடைகளை பெண்கள் எதிர்நோக்கினாலும் ஒப்பிட்டளவில் 1901ம் ஆண்டிலிருந்து இப்போது மட்டும் ஒரேயொரு பெண்மணி பெளதிகவியல் பரிசிகளையும் வேறு மூவர் இரசாயனவியல் பரிசிலையும் பெற்றுள்ளார்கள்.

கியூரி அம்மையாரின் இரசாயனவியலுக்கான பங்களிப்பைக் கொண்டாடுவதும் சர்வதேச இரசாயனவியல் ஆண்டின் முக்கியமானதொன்றாக விளங்குகின்றது.

இதைவிட 2011ம் ஆண்டானது சர்வதேச இரசாயனவியல் கழகங்களின் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டாகவும் விளங்குகின்றது. இதன்மூலம் சர்வதேச ரீதியாக இரசாயனவியலாளர்களுக்கிடையில் ஓர் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி சர்வதேச பொதுத்திட்ட பெயரீடு, அணுநிறை, பெளதிகமாறிலிகள் போன்றன விஞ்ஞான தொடர்பாடல்களை இலகுவாக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச இரசாயனவியல் இண்டானது இரசாயனவியலின் நடந்துமுடிந்த வெற்றிகளை கொண்டாடுவதற்கும் எதிர்கால தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாகும். அதன்பயன் இரசாயனம் தெரிந்தவர்களைவிட தெரியாதவர்களிற்கே பெரிதாக இருக்க வேண்டும்.

மாணவர்கள், குடும்ப அங்கத்தவர்கள் நண்பர்கள் எனப்பலருடனும் ஒன்று சேர்ந்து வாழ்வில் ஒருமுறையே வரக்கூடிய இந்தசந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரசாயனவியலின் முக்கியத்துவத்தை இரசாயனவியல்- எமது வாழ்வு எமது வருங்காலம் என்னும் தொனிப் பொருளோடு உலகெங்கும் பரவச் செய்வோமா !

(சர்வதேச இரசாயனவியல் ஆண்டை ( 2011 ) முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com