Contact us at: sooddram@gmail.com

 

பயங்கரவாதத்தை அழிக்க புறப்பட்ட பயங்கரவாதம்

(நந்தன்)

உலகில் மேலான இரு இனம் ஒன்று மனித இனம், மற்றையது மிருக இனம், அது ஒவ்வொன்றுக்குள்ளும் தனியான ஒரு இனம் உண்டு, ஒன்று மனித வடிவில் மிருகம் மற்றையது மிருக வடிவில் மனிதம். பெரும்பாலும் மனித இனத்தை ஆள்பவர்களோ அல்லது ஆளத்துடிப்பவர்களோ இந்த மனித வடிவில் மிருக இனத்திலிருந்துதான் தோன்றுகிறார்கள் போலும் . இதைத்தான் சனல் 4 தொலைக்காட்சியும் சொல்வது. இந்த வீடியோ பதிவில் பொய்கள் பல சேர்க்கபட்டிருக்கலாம் அல்லது உண்மைகள் பல தவிர்க்கபட்டிருக்கலாம் ஆனாலும் இந்த போர்க்குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இந்த இரு பகுதிக்கும் நாங்கள் 'இப்படிப்பட்ட குற்றங்கள் செய்பவர்கள் அல்ல' என்று அடித்து சொல்வதற்க்கு எந்த தகுதியும் இல்லை. மொத்தத்தில் இந்த இருபகுதிக்கும் அப்பாவி பொதுமக்களின் மரணத்தில் எந்த சஞ்சலமும் இல்லை. வேணுமானால் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதற்க்கு பொதுமக்கள் மேல் அக்கறை இருப்பது போல் நடித்திருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த போர்க்குற்றங்களை பற்றி ஓங்கி தட்டிக்கேட்ப்பதற்கு பெரும்பாலான இலங்கை தமிழர்களுக்கும் அருகதை இல்லையென்பதுதான்.

கண்மூடித்தனமாகவோ, கட்டாயத்தின் பேரிலியோ புலிகளை ஆதரித்து வந்த பொதுமக்களுக்குகோ அல்லது பதவி ஒன்றுக்காய் பத்தையும் பறக்கவிட்டு புலிகளின் வால்பிடித்து வயிறு வளர்த்த அரசியல்வாதிகளுக்கோ, ஏன் இப்படி வயிறு வளர்த்தவாகள் பின்னால் சென்றாவது தங்களை மக்களுக்கு அடையாளம் காட்ட புறப்பட்டு புலிகளின் பயங்கரவாத்தில் கணிசமான பங்கை கடைசி நேரத்தில் எடுத்து கொண்டவர்களுக்கோ, ஆளும் அரசு என்ன செய்தாலும், சொன்னாலும் வேதவாக்காய் வியாக்கியானம் செய்து வேண்டியதை பெற்றுக்கொண்டு வாழ்வை ஓட்டி வருபவர்களுக்குகோ இப்படி ஒருவருக்கும் இந்த குற்றங்களை பற்றி மனசாட்சியை விட்டு தட்டிக்கேட்க்கும் உரிமை கிடையாது. ஏன் புலிகளின் பயங்கரவாத்தை முற்றுமுழுதாய் தெரிந்து வைத்திருந்தும் ஏதோ ஒரு காரணதுக்காய் பலகாலமாய் வாய்மூடி மௌனியாய  இருந்து வந்து வெளிநாட்டு சமூகங்களுக்கும் இந்த குற்றங்களை பற்றி கண்டனம் தெரிவிப்பதற்கும் அருகதை இல்லை.

சிறீலங்கா அரசாங்கமோ! அறிக்கைகளும் சரி, வீடியோ காட்சிகளும் சரி பொய்யானது, போலியானது பக்கசார்பானது என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாலும் அது இன்றைய காலகட்டத்தில் எல்லோராலும் முற்றுமுழுதாக நம்மபட முடியாது ஒன்று என்பதை புரிந்து கொள்ளாது காலத்தை கடத்தி வருகிறது. தொழில் நுட்பங்களை கொண்டு பொய்களை ஜோடிக்கலாம் என்பதை பற்றி வாதித்து வருகின்ற சிங்கள அரசு அதே தொழில் நுட்பத்தின் உதவியுடன் மற்றவர்களால் உண்மையையும் வெளிக்கொணரலாம் என்பதை ஏனோ உணராமல் இருக்கின்றுது. சனல் 4 தொலைக்காட்சியிலினால் வெளிக்கொணரப்பட்ட அந்த வீடியோ காட்சிகளில் பாதி உண்மைகள் இருந்தால் கூட அது மனித இன குலத்தினால் நடத்தப்பட்ட வெட்க்ககேடான வெறியாட்டம் என்பதே உண்மை.

இத்தனை அழிவுக்கு பின்னால்தான் பயங்கரவாதத்தை எங்களால் அழிக்க முடிந்தது என்பதை வேதனையுடன் வெளிக்கொணரவேண்டிய கட்டாயத்தில் மாறாக வெற்றிக்கழிப்புடன் எக்காளம் போட்டு சொன்னது (அதாவது இந்த வீடியோ காட்சிகளிலுள்ள சம்பவங்கள் பலவற்றை வீடியோ காட்சிகள் மூலமாகவோ அல்லது வாய்வழி செய்திகள் மூலமாகவோ ஏற்கனவே பார்த்தும் அறிந்தும் வைத்திருக்ககூடிய சந்தர்ப்பத்தில்) பொதுமக்களின் அழிவில் சிறிலங்கா அரசுக்கு கொஞ்சமும் சலனமேற்ப்படவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாதிகளை மட்டும் அழித்தால் போதும் என்று உண்மையாகவே நினைத்திருந்தால் இறுதிப்போரில் சற்று தாமதம் ஏற்ப்பட்டிருந்தாலும் பெருமளவு பொதுமக்களின் உயிர் இழப்புக்களை தவிர்த்திருக்கலாம், அதை ஏனோ சிங்கள அரசு செய்ய விரும்பவில்லை.

சரி இவ்வளவு உயிர் இழப்பு தவிர்க்க முடியாது என்று போயிருந்தால் கூட இன்னமும் தமிழ் பேசும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய கௌரவமான அதிகாரங்களை எவ்வளவுக்குகெவ்வளவு இழுத்தடித்து குறைத்துக்கொள்ள முடியுமோ என்ற அரசாங்கதின் முயர்ச்சி, சனல் 4 ஆவணம் பொய்யாய் இருந்தால் கூட இந்த போர்க்குற்றங்கள் அனைத்தும் அது செய்ய நினைத்திருக்காது என்பதற்க்கு வலு சேர்க்கவில்லை. முழுப்பூசணிக்காயை சோற்றுப்பானைக்குள் மறைக்கமுடியாது என்ற உண்மையை புரிந்துகொண்டு, தமிழ்பேசும் மக்களுக்கு தரவேண்டிய நியாயமான உரிமைகளை தந்து இந்த போர்க்குற்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வழி தேடுவதை காலம் தாழ்த்தாமல் உணர்வதே சிறிலங்கா அரசுக்கு இருக்ககூடிய ஒரே வழி. இதன்மூலம் இந்தியாவின் உதவியாவது கிடைக்ககூடும் என்பதை இந்த அரசு நம்பித்தான் ஆகவேண்டும். இப்பொழுது தமிழ் பிரதேசங்கள் முழுவதும் சிங்கள மயமாக்குவதில் காட்டும் அவசரமும், புத்த சின்னங்களை தமிழ் பிரதேசங்களில் ஆங்காங்கு நிறுவும் செயலகள் எதுவுமே தமிழ் மக்கள் இந்த அரசை நம்பி செயலாற்றுவதற்க்கு ஏதுவாக அமையாது. மாறாக சுமத்தபப்பட்டுள்ள குற்றங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் செயலாகும்.

புலிகள் முற்றுமுழுவதமாக அழிந்த விட்ட நிலையில் புலிகளை இன்றுவரை நியாயப்படுத்தி வரும் புலன் பெயர்ந்த புலிக்கூட்டங்களுக்கு எதிராகவே புலிகளால் நடத்தப்பட்ட அனைத்து போர்க்குற்றத்திற்க்கு எதிரான நடவடிக்கை எடுக்கபடவேண்டும். இதுகள் குற்றங்களுக்க முன்னால் 'போர்' என்ற ஒரு சொல் இருப்பதானால் தான் என்னவோ பயங்கரவாதிகளாகிய எங்களுக்கு இது பொருந்தாது என்று முடிவு கட்டி சிறிலங்கா அரசாங்கத்திற்க்க எதிராக கங்கணம் கட்டி நிற்க்கின்றன. புலிகளை பொறுத்தவரை தங்களை எவ்வளவுதான் நியாயப்படுத்தினாலும் தங்களை விட மற்றவர்கள் நியாயமானவாகளோ? இரக்கமுள்ளவர்களோ? என்றொரு எண்ணம் அடி மனதளவில் எப்பவும் இருந்துதான் உள்ளது, அதனால் தான் என்னவோ ஏனையவர்களின் தவறுகள் எல்லாவற்றையும் இவர்கள் பெரிதாய் எடுத்து சொல்வார்கள். (இறுதி யுத்தத்தில் நடந்த தவறுகளை இங்கு குறிப்பிடவில்லை)

இல்லாவிடில் சிறிலங்கா அரசாங்கத்தால் செய்யப்பட்டதாக சொல்லப்படும் குற்றங்களில் எதுதான் இவர்களால் செய்யப்படவில்லை?, கொன்றொழித்த உயிர்களின் எண்ணிக்கையிலும் சரி இவர்கள் சிங்கள அரசை விட எந்தளவுக்கும் சளைத்து போனவர்கள் அல்ல. புலிகள் இதுவரை காலமும் செய்து வந்த கொலைகளின் எண்ணிக்கையும், அதை செய்த வழி முறைகளையும் ஒரு வீடியோ பதிவில் எடுத்து வந்திருந்தால் அது இந்த சனல் 4 வீடியோ பதிவை ஏப்பம் விட்டிருக்கும் என்பதே உண்மை. ஏன் கந்தன்கருணை கொலை வெறியாட்டம் ஒன்றே போதும். மொத்தத்தில் அப்பாவி பொது மக்களின் உயிர் இந்த இருபகுதியினருக்கும் அரசியல் செய்வதற்க்கு கிடைத்த அல்வா போன்றது.

புலன் பெயர்ந்த புலிக்கூட்டங்களே!! புலிகள் என்றுமே மக்கள் நலம் சார்ந்து எதுவுமே செய்ததில்லை என்று தெரிந்திருந்தும், இன்று நீங்கள் போர்க்குற்றம் அது இது என்று கூக்குரலிடுவதும் புலிகளை அழித்தவர்களை பழி தீர்த்து உங்கள் சுகபோக வாழ்வுக்கு கிடைத்த முற்றுப்புள்ளிக்கு மனச்சாந்தி பெறவே. உங்கள் சுயநலபோக்கு தனத்தால், தாய்மண்ணில் வாழும் உறுவுகளுக்கு மேலும் நெருக்கடி கொடுப்பதை தவிர வேறு ஒன்றும் உருப்படியாய் நடந்திடப்போவதில்லை. இறந்து போன மக்கள் எவ்வளவு முக்கியமோ இருக்கின்ற மக்களும் முக்கியமே! போர்க்குற்றங்களுக்காக சிங்கள அரசை தண்டிக்க நினைப்பதை விட (அப்பிடி தண்டிக்க நினைத்தால் அது உங்களையும் சேர்த்து தண்டிக்க வேண்டி வரும்)  இருக்கின்ற மக்களுக்கு கௌரவமான அதிகார பகிர்வை சிங்கள அரசிடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்க்க நீங்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் அரசுகளை ஜனநாயக வழிகளில் முக்கியமாக யாரும் முகம் சுழிக்க வைக்காமல் கேட்டுப்பாருங்கள். அதுவே புலிகளால் தமிழ் மக்களுக்கு ஏற்ப்படுத்தப்பட்ட அழிவுகளுக்கு புலிகள் சார்பாக நீங்கள் செய்யும் பரிகாரம்.

இது சனல் 4 போன்ற தொலைக்காட்சி நிலையங்களுக்கும், சர்வதேச புலி சார்பு அரசியல்வாதிகளுக்கும் குற்றங்கள் என்பது எப்போதுமே குற்றங்களே, அது போர்சூழலில் நடந்தாலென்ன சமாதான காலத்தில் நடந்தாலென்ன. இப்பொழுது இருபகுதியையும் குற்றம் சாட்டும் மனித உரிமை அமைப்புக்களெல்லாம் இலங்கை மண்ணில் இதுவரை காலம் நடந்து வந்த கொடூரங்களையெல்லாம் சகித்து கொண்டுதான் வந்தன. முக்கியமாக புலிகளால் நடத்தப்பட்ட வன்முறைகளை பார்த்து வாய் திறவாமல் தான் இருந்தன. நோர்வேயின் மத்தியஸ்தின் ஊடாக இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்ப்பட்ட சமாதான உடன்படிக்கையில் இரு தரப்புக்கும் பல நிபந்தனைகள் விதிக்கபட்டன, ஆனால் புலிகளால் அது ஆயிரம் தடைவுக்குள் மேலால் மீறப்பட்டன முக்கியமா அந்த நேரத்திதான் அமைதி வழியில் வாழ்ந்து கொண்டிருந்த பல மாற்று இயக்க போராளிகளெல்லாம் வகை தொகை இல்லாமல் கொல்லப்பட்டனர். ஒரு அயல்நாட்டு அரசுடன் ஏற்ப்பட்ட ஒப்பந்ததத்தின் மூலம் பல நிபந்தனைகளுடன் திறந்துவிடப்பட்ட புலிக்கூட்டங்கள் நடந்து கொண்ட வெறியாட்டங்களை எந்த மனிதநேய அமைப்புகளும் சரி இது போன்ற தொலைக்காட்சி நிலையங்களும் வெளி உலகத்துக்கு கொண்டு வரவில்லை.

ஏன் சமீபத்தில் ஒரு குறிப்பு சொல்கிறது 2001 செப்டம்பர் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி 1 லட்சத்து 72 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 70.8 லட்சம் மக்கள் அகதிகளாக போயுள்ளனர். இந்த போர்க்குற்றங்களுக்கு எதிராக விசாரணை செய்ய வேண்டுமென்று அல்ல வாய் திறந்து சொல்வதற்க்கு கூட யாரும் முன்வரவில்லை. அதனால் தான் சனல் 4 வீடியோ காட்சி ஏதோ உள்நோக்கம் கொண்டதாக இருக்குமோ என்று அதைப்பற்றி குற்றம் சொல்பவர்களின் வாதங்களுக்கு வலு சேர்க்கிறது. எது எப்படியோ நடந்து முடிந்தது போர்க்குற்றங்களாகவே இருந்து விட்டு போகட்டும், அதற்க்கு காரணமானவர்களை தண்டிக்க நினைப்பதை நிறுத்திவிட்டு அதைக்காரணமாக சுட்டிக்காட்டி தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு வலுவான அதிகாரங்கள் கொண்ட ஆட்சியை பெற்றுத்தருவதற்க்கு முயற்ச்சி செய்யலாம். இதுவே எஞ்சியுள்ள மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் செய்து தரப்படும் நன்மையான விடயமாகும்.

(நந்தன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com