Contact us at: sooddram@gmail.com

 

பிரபாகரன் போன்ற தலைவரை வரலாற்றில் கண்டதே இல்லை! ஈழம் மலரும்! - தமிழருவி மணியன்

(சமரன்)

பிரபாகரன் போன்ற தலைவரை தமிழர்களின் வரலாற்றில் கண்டதே இல்லை. தமிழர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் ஈழம் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நான் எனது வாழ் நாளில் நிச்சயமாக ஈழம் மலர்வதைக் காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என  தமிழருவி மணியன் தெரிவித்தார்.

கேரளாவைச் சேர்ந்த திருவெங்கடம் வேலுப்பிள்ளையின் மகன் பிரபாகரனைப் போன்ற ஒரு பயங்கரவாதத் தலைவனை தமிழர்களின் வரலாறு கண்டதே இல்லை. சிட்னி தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெரும்பாலான தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தமிழீழம் உருவாவதற்கு தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்ற கருப்பொருளில் உரையாற்றினார்.

ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் சிங்கள இஸ்லாமிய மக்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்த பயங்கரவாதி பிரபாகரனைப் போற்றும்  காந்தியமக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனின் உரையின் சாராம்சம் வருமாறு.

இனிப்பாகப் பேசினால் அதில் உண்மை இருக்காது உண்மையைப் பேசினால் அது இனிப்பாக இருக்காது. உண்மையென்னவென்றால் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி தமிழகத் தமிழர்களாக இருந்தாலும் சரி தமிழர்கள் நாம் ஒற்றுமையாக இல்லை. தமிழர்களுக்கு ஓர் நாடு அமைய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்.

ஐயா, முதலில் எட்டுக் கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் தமிழர்களுக்கு ஒரு நாடு அமைக்க முயற்சியுங்கள்.

ஈழத்தில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஈழத்தில் ராஜபக்சவின் கொடுங்கோல் அரசு அவர்கள் மீது இன்று முழுமையான ஒரு வன்முறையைப் பிரயோகித்துக்கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

தமிழுருவி மணியன் இலங்கையின் தற்போதைய நிலவரம் பற்றி நிஜம் அறியா கற்றுக்குட்டியாகவே இருக்கிறார். 2011ம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட புலன்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு விடுமுறையைக் கழிக்க சென்றுள்ளார்கள்.

ஈழத்தில் வாழும் தமிழர்களால் இப்போராட்டத்தை முன்னெடுக்க முடியுமா எனக் கேட்டால் இன்றைய சூழலில் இல்லை என்பதே உண்மையான யதார்த்தம். தமிழர் பகுதிகளில் ஏழு தமிழர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் நிறுத்திவைத்துள்ளது சிறிலங்கா அரசு. அங்குள்ள மக்களுக்கு பேச்சுச் சுதந்திரம் கூட மறுக்கப்பட்டு அடக்கு முறைக்குள் வாழ்கிறார்கள்.

பிரபாகரன் வாழ்ந்த காலத்தில் தமிழர்களுக்கு இருந்த பேச்சுச் சுதந்திரம் பற்றி இலங்கைத் தமிழர்களிடம் மணியன் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழக அரசும் தமிழகத் தலைவர்களும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு விடுதலையைப் பெற்றுத்தருவார்களா என்று கேட்டால் வெளிப்படையான உண்மை அதற்கான சாத்தியப்பாடு இல்லை என்பதே.

தமிழகத் தலைவர்களைப் பொறுத்தவரையில் தங்கள் கட்சி சார்ந்த நலன்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். ஈழத் தமிழ் மக்களுக்காக வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் இதய சுத்தியுடன் செயற்பட்டாலும் அவர்களின் பின்னால் மக்கள் பலம் பெரிதாக இல்லை.

வைகோ, நெடுமாறன் கோஷ்டிக்கு புலிகளால் கொட்டிக் கொடுக்கப்பட்ட கோடிகள் பற்றி தமிழுருவி மணியனுக்குத் தெரியாதா?

இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரையில் அவர்களின் கொள்கை வகுப்பென்பது இந்திய நலன் சார்ந்திருக்குமே தவிர அது வேறு எதையும் கருத்திற்கொள்ளாது. அந்த வகையில் இந்துமா கடலில் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் கோட்பாட்டுடன் சிங்கள அரசின் பக்கம் நிற்குமே தவிர அது ஈழத் தமிழ் நலன்சார்ந்து இருக்காது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே முள்ளிவாய்க்காலின் பி்ன்னரான போராட்டம் முழுமையாகத் தங்கியுள்ளது. இதை புலம்பெயர்வாழ் ஒவ்வொரு தமிழர்களும் உணர்ந்து அவரவர் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் இருக்கின்ற அரசாங்கங்களின் கவனத்திற்கு சிறிலங்கா அரசு நடத்தி முடித்தது ஒரு இனப்படுகொலையே என்பதை கொண்டு சென்று சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்துவதோடு சர்வதேச அரசுகளின் ஆதரவை தமிழர்கள் பக்கம் திருப்பவேண்டும்.

அரசின் இனப்படுகொலைகளைப் பேசும்போது, புலிகளின் பயங்கரவாதமும் புலிகள் புரிந்த இனப்படுகொலைகளுமல்லவா முன்னால் வந்து முட்டிபோட்டு நிற்கிறது.

தமிழர்களின் விடுதலைப்போரில் சனல் 4 ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. அதையும் ஆதாரமாகக்கொண்டு சர்வதேச அரசுகளின் ஆதரவையும் கவனத்தையும் எங்கள் பக்கம் திருப்பவேண்டும்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் நாங்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். தமிழகச் சஞ்சிகைகளில் ஈழத் தமிழர்களின் நிலைகுறித்து நான் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்கள் உங்கள் கவனத்துக்குப் பட்டதே இல்லையா?

2014ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அரசு ஆட்சி இழப்பதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக இருப்பதனாலும் இன்று உலகத்தின் கவனம் ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் கரிசனை கொண்டிருப்பதாலும் இந்தியாவில் அமைய இருக்கும் புதிய அரசாங்கத்தை ஈழத் தமிழர்களின் விடுதலைக்குத் தடைபோடாத வகையில் அவர்களது ஆதரவைப் பெற்று எமது விடுதலையைப் பெற்றெடுக்கக் கூடிய சூழ்நிலைகள் நிச்சமாக உருவாகும்.

இவற்றைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் உணர்ந்து ஒற்றுமையாகச் செயற்பட்டால் ஈழம் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நான் எனது வாழ் நாளில் நிச்சயமாக ஈழத்தை காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது' எனத் தெரிவித்தார்.

ஐயா உங்கள் வாழ்நாளில் ஈழத்தைக் காண்பதற்காக இன்னும் எத்தனை இலங்கைத் தமிழர்கள் சாகவேண்டும்.

(சமரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com