Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் அகதிகளும் பிழைப்புவாதிகளும்

(வியாசன்)

ஈழப் போராட்டத்தில் இந்தியத் தலையீடு என்பது கொலைகளையும் ரணங்களையும் அவலங்களையும் எச்சமாக விட்டுவைத்த சாபக்கேடு என்றால் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் தலையிடு அதற்கும் மேலானது. பரந்துபட்ட தமிழ்நாட்டு மக்களுக்கோ அங்கே வாழ்வதற்காகப் போராடும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கோ முகவரி தெரியாத அரசியல் பிழைப்பு வாதிகள் ஈழம் பெற்றுத்தருகிறோம் என்று நரம்பு புடைக்கக் கொக்கரிக்கும் போது மனிதம் மறுபடி மறுபடி சாகடிக்கப்படுவதாய் உணர்கிறோம். புலம்பெயர் நாடுகளில் உணர்ச்சியூட்டும் கவர்ச்சிக் கூச்சல்களுக்கு விசிலடிக்கும் ஒரு சிறிய கூட்டத்தைத் தவிர இந்தப் பிழைப்பு வாதிகளை யாரும் கண்டுகொள்வதில்லை. வைகோ, திருமாவளவன், ராமதாஸ், நெடுமாறன், சீமான் என்ற ஒரு நீண்ட வரிசையைக் காணலாம். ஈழத்தில் மக்கள் சாரி சாரியாக் கொன்று குவிக்கப்பட்ட போதெல்லாம் இந்த வரிசைப் படுத்தல்களில் உள்ளடங்கியவர்கள் ஒரு துரும்பைக் கூட அசைக்க முயலவில்லை.

வழக்குரைஞர்கள், மாணவர்கள் என்ற தன்னெழுச்சியான மற்றும் ஒடுக்கப்பட்ட அமைப்புக்களின் போராட்டங்கள் முன்னெழுந்த ஒவ்வோரு தடவையும் அவற்றை அழிப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர்கள் இவர்கள். அழிவுகளுக்கு எதிராகப் போராடியவகளிடம் நீங்கள் வாயை மூடுங்கள் நாங்கள் பேசித் தீர்த்த்துக் கொள்கிறோம் என்று நந்திக்கடல் இரத்தச் சிவப்பாகும் வரை பேசிக்கொண்டிருந்தனர்.

ஈழத் தமிழர்கள் மீது கைவத்தால் தமிழகம் பற்றி எரியும் என்று இன்று பேசும் அதே உணர்ச்சியோடு புலம்பெயர் மக்களை நம்பவைத்து ஏமாற்றியவர்கள்.

மிருகத்தின் வெறியோடு பல்தேசிய நலன்களுக்காக தமிழக மக்களை ஒடுக்கும் அரச படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு அனாதரவாகத் தெருவோரங்களில் வீசியெறியப்பட்ட ஒடுக்கப்பட்ட தமிழகத் தமிழர்களின் பிணங்களைக் கடந்து புலம் பெயர் நாடுகளுக்கு இலவச விமானச் சீட்டோடு வந்திறங்கி மேடைகளில் முழங்கிவிட்டுச் செல்லும் இந்த அரசியல் வியாபாரிகள் விலகிக் கொண்டாலே ஈழப் போராட்டத்திலும் அதன் வரலாற்றிலும் ஆயிரம் பூக்கள் மலரும்.

இவர்கள் மௌனமாக இருந்திருந்தாலே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழந்த வேளைகளில் தமிழக மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்திருக்கக் கூடும்.

அத்தனையையும் நடத்தி முடித்துவிட்டு தமிழின விரோதியாக தன்னைத் தானே பிரகனப்படுத்திக்கொண்ட ஜெயலலிதாவை நம்பக் கோரினார்கள். ரஜீவ் கொலையில் சட்டவிரோதமாகக் குற்றம் சுமத்தப்பட்ட முன்று பேரையும் தூக்கில் போட வேண்டும் என்று ஜெயலலிதா அரசு நீதிமன்றத்தில் மனுக் கொடுத்த பின்னரும் இவர்களிகளில் பெரும்பாலம்னவர்கள் ஜெயலலிதாவை ஈழத்தாய் என மகுடம் சூட்டினார்கள்.

ஜெயலிதா அரசு ஆட்சிக்கு வந்த மறுகணமே பரமக்குடியில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள உத்தரவிட்டதை இந்த ஈழம் பெற்றுக்கொடுக்கும் பேர்வழிகள் கண்டுகொண்டதில்லை. மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் மனிதாபிமானம் இவர்களுக்கு வந்ததில்லை. ஈழத் தமிழர்களுக்காக மட்டும் தெரிந்தெடுத்த மனிதாபிமானம் கூரையைப் பிய்த்துக்கொண்டு இவர்களது தலைகளில் ஏறிவிடும்.

இன்றுவரை இவர்கள் செய்த கைங்கரியம் எல்லாமே ஒடுக்கப்பட்ட, போராடுகின்ற தமிழ் மக்களை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வாழும் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் போராட்ட சக்திகளை அன்னியப்படுத்தியமையே ஆகும்.

சரி, இவர்கள் எல்லாம் பிழைப்புக்காக அன்றி, உண்மையிலேயே ஈழ மக்களுக்காக தமிழகத்திலிருந்து போராடுகிறவர்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். 20 வருடங்களாக சிறப்பு முகாம் என்ற சித்திரவத்கைக் கூடங்களில், அகதிகளாக தமிழ் நாட்டிற்கு வந்த ஈழத் தமிழர்கள் வதைக்கப்படுகிறார்களே இவர்கள் இது குறித்து மூச்சுக்கூட விட்டதில்லையே ஏன்?

கியூ பிரிவு என்ற தமிழ் நாட்டு அரசின் ஈழத் தமிழர்களுக்கான போலிஸ் பிரிவின் நேரடிக் கட்டுப்பாட்டினுள் இயங்கிவரும் இந்தச் சிறப்பு முகாம் செங்கல்பட்டு என்ற இடத்தில் இன்னும் இயங்கிவருகிறது.

இதுவரை ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள், ஈழ அகதிகள் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் இந்தச் சிறைகளில் அடக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இரட்டைப்பட்டு தங்கச் சங்கிலியோடுஉணர்ச்சிக் கவிஞர்காசியானந்தன் தமிழகத்தின் தலையில் உட்கார்ந்து ஈழப் போர் நடக்கும் என சுதந்திரமாக கூச்சலிடும் அதேவேளை சிறப்பு முகாம்கள் என்ற சித்திரவதைக் கூடங்களில் சுதந்திரத்திற்காகப் போராடிய ஈழப் போராளிகள் கூடச் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

காசியானந்தனும் அவரது பரிவரங்களும் ரோவினால் இயக்கப்ப்படுகிறார்களா இல்லையா என்பதெல்லாம் எமது ஆய்வில்லை. ஈழத்தமிழர்கள் அவரது காலடியில் அவல நிலைக்கு உள்ளாக்கப்படும் போது எப்படி மௌனித்திருக்க முடிகிறது என்பதே எமது கேள்வி.

சர்வதேசச் சட்டங்களுக்கு எதிராக மட்டுமல்ல இந்தியச் சட்டங்களுக்கும் எதிரான இந்தச் சட்டவிரோத சிறப்பு முகாம்களில், தமிழ் நாடு காவல்படை விரும்பிய போதெல்லாம் சித்திரவதை செய்யலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விசாரணையின்றி தடுத்துவைத்திருக்கலாம். செத்துப் போகாமல் இருப்பதகற்காக மட்டுமே உணவு வழங்கப்படும்.

காற்றோட்டமற்ற விலங்குகள் வாழும் இடம் போன்ற இருட்டறைகள்! வெளி உலகில் இருந்து முற்றாகத் தனிமைப்படுத்தப்ப்ட்ட சட்டவிரோத செயற்பாடுகள்!! இந்திய ஜனநாயகத்தின் விம்பத்தை ஈழத்தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் நுளை வாயில்!!!.

இலங்கை அரச பேரினவாதிகளின் கொலைக்கரங்களிலிருந்து தப்பியோடிப் பல இன்னல்களைக் கடந்து தமிழ் நாட்டில் வந்திறங்கிய அனாதரவான அப்பாவிகள் இன்னொரு அழிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள 28 அகதிகளில் 13 பேர் சாகும்வரை உண்ணாவிரதமிருக்கிறார்கள். இதில் மூன்று பேரின் நிலை கவலைகிடமாக உள்ளது.

சிறப்பு முகாம் தவிர ஈழத் தமிழ் அகதிகள் வாழும் ஏனைய முகாம்களிலும் அடிபடை மனித உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை. இவர்கள் குறித்தும் பிழைப்புவாத அரசியல்வியாபாரிகள் மூச்சுக்கூட விடுவதில்லை.
103 முகாம்களில் அகதிகள் வாழ்கிறார்கள். இந்த முகாம்களின் தெளிவற்ற புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஒரு லட்சம் அகதிகள் வாழ்கிறார்கள். பல அகதிகள் 25 வருடங்களுக்கு மேலாக அங்கே வாழ்கிறார்கள். அவர்களது குழந்தைகள் திருமணம் செய்துகொண்ட பின்னர் கூட அங்கே அகதி முகாம்களிலேயே வாழ்கிறார்கள். இவர்களுக்கு இந்தியப் பிராஜா உரிமை வழங்கப்படுவதில்லை. இலங்கை
மண்ணையே மிதிக்காத மனிதர்கள் இன்னமும் அகதி என்ற அடைமொழியுடனேயே வாழ்கிறார்கள்.

முகாம்களிலும் அதற்கு வெளியிலும் வாழ்கின்ற அகதிகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக்கலாம். அகதிகளின் குழந்தைகளுக்கு பல்கலைக் கழக அனுமதி பெறுவதே இயலாத காரியம். இந்தியப் பிரஜை இல்லை என்பதால் வெளி நாட்டவர்களுக்கான கட்டணக்மே அறவிடப்படுகின்றது. இதே காரணத்தால் முழு நேர வேலையில் இணைந்து கொள்வது பல சந்தர்ப்பங்களில் சாத்தியமற்றதாகின்றது.

உலகில் இந்த நூற்றாண்டின் அடிமைகள் போன்று நடத்தப்படும் இந்த அகதிகள் குறித்து பிழைப்பு வாதிகள் தமது மாளிகைகளில் இருந்து கண்துடைப்பு அறிக்கை கூட எழுதியது கிடையாது.

- செங்கல்பட்டு சித்திரவதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

 - ஏனைய முகாம்களில் வாழும் அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

- பல வருடங்களாக தமிழ் நாட்டில் வாழ்பவர்களும் அங்கேயே பிறந்தவர்களும் விரும்பினால் இந்தியப் பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டும்.

- சரவதேசச் சட்டங்களின் அடிப்படையில் அந்த மக்களின் உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.

புராணக் கதைகளில் ஞானச்மபந்தர் என்ற பிராமணர் இலங்கையை நோக்கி ராமேஸ்வரத்திலிருந்து தேவாரம் பாடியது போன்று தமிழ் இனவாதிகள் ஐரோப்பிய புலம்பெயர் நாடுகளில் வாழும் அகதிகளின் பணத்தைக் குறிவைத்து உணர்ச்சிவசப்பட்டது போதும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். முடியாவிட்டால் போராடுங்கள். ஈழம் பெற்றுக்கொடுப்பதை விட இது இலகுவானது. சீமான் தனது கட்சி ஆவணத்தில் குறிப்பிட்டது போன்றேஇந்திய ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் பாதிப்பின்றியேஇந்த இலகுவான கோரிக்கைகளை நிறைவேற்றலாம்.

இவற்றை நிறைவேற்றாமல் ஈழம் பெற்றுக் கொடுக்கிறோம் பேர்வளிகள் என்று யாராவது வந்தால் அவர்களது முகத்தில் ………………!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com