Contact us at: sooddram@gmail.com

 

யாழ்.தேவி

தென் மாகாணத்திற்கும் வட மாகாணத்திற்குமான உறவுப் பாலமாக ஆரம்பிக்கப்பட்டயாழ்தேவிபுகையிரத சேவை - 411 மீற்றர் தூரத்தைக் கொண்ட கொழும்பு கோட்டைக்கும் காங்கேசந்துறைக்கு மிடையில் இடம்பெற்றது. இந்த புகையிரத சேவையினூடாக தமிழர்கள், சிங்களவர்கள், மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடனும் பயணம் செய்தனர். கொழும்பில் தொழில்புரியும் வட மாகாணத்தை சேர்ந்தவர்கள் வார இறுதி நாட்களில் தங்களின் சொந்த ஊர்களில் விடுமுறையை கழிப்பதற்காக இந்த புகையிரதத்தையே பயன்படுத்தினர். இதற்கு மேலதிகமாக கப்பல் மூலம் இந்தியாவுக்கு செல்வோரும் இந்த புகையிரதத்தின் மூலமே மதவாச்சி சென்றனர். பின்னர் அங்கிருந்து தலைமன்னார் சென்று இந்தியா செல்வது வழமை.

இவ்வாறான நிலையிலேயே, 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி யாழ்தேவி புகையிரதம் முறிகண்டியில் வைத்து ரெலோ இயக்கத்தினரின் கண்ணிவெடிக்கு இலக்கா கியது. இதனால் இராணுவ வீரர்கள் உட்பட பலர் கொல்லப் பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இதற்கு மேலதிகமாக புகையிரத திணைக்களத்திற்கு பல கோடி ரூபா நஷ்டமும் ஏற்பட்டது.

இதனையடுத்து வட மாகாணத்திற்கான யாழ் தேவி புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டது. எனினும் மதவாச்சி வரை புகையிரத சேவை இடம் பெற்றது. பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது. காங்கேசந்துறை வரையான இச்சேவை இடைநிறுத்தப்பட்ட காலப் பகுதியில் வட மாகாணத்தின் பல பகுதிகள் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இக்காலப்பகுதியில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் புகையிரத நிலையங்கள் என் பன தமிbழ விடுதலை புலிகளினால் அவர்களின் இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டன. கடந்த 2009 ஆம் ஆண்டு வட மாகாணத்தின் பல பகுதிகள் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்ட போதுஉதுரு வசந்தயஎனப்படும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ்தேவி புகையிரத சேவையை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் 2009 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்தேவி புகையிரத சேவை புனர்நிர்மாண பணிகள் இலங்கையிலுள்ள பல தனியார் மற்றும் அரச நிறுவனங் களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக யாழ்தேவி புகையிரதம் தாண்டிக்குளத்தை சென்றடைந்தது. இதனையடுத்து யாழ்தேவி கடந்த மே 27 ஓமந்தையை சென்றடைந்தது. தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையினை இராணுவமும் ரயில்வே திணைக்களமும் இணைந்து புனரமைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த புகையிரத சேவையி னூடாக ஓமந்தையை இலகுவாக சென்றடைய முடிவடைவதை யிட்டு மகிழ்ச்சியடைகிறோம். இச்சேவை மிக விரைவில் காங்கேசன்துறையை சென்ற டைய வேண்டும்என ஓமந்தையை சேர்ந்த பரமசாமி தெரிவித்தார்.

இதேவேளை, கைத்தொழில் முதலீட்டு அமைச்சினால் முதலீட்டு சபை திட்டத்தின் கீழ் ஓமந்தை பிரதேசத்தில் கைத் தொழில் பேட்டை அமைக் கப்பட வுள்ளமையால், ஓமந்தை புகையிரத நிலையத்தில் பொருட்களை ஏற்றி இறக்கக் கூடிய வகையில் மேடை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வவுனியா மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள இன்னும் பல இடங்களில் கைத்தொழில் பேட்டை அமைக்கப்படவுள்ளமையால் செட்டிகுளம் மற்றும் பறையனாலங்குளம் ஆகிய இடங்களில் புகையிரத நிலையங்கள் அமைக்கும் போது பொருட்களை ஏற்றி இறக்க கூடிய மேடைகளையும் அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

கொழும்பு ஓமந்தை புகையிரத சேவையினூடாக அனைத்து இன மக்களும் மிக ஒற்றுமையாக பயணிக்கிறோம்.

சுமார் ஆறு மணித்தியால பயணத்தில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், என்ற வேறுபா டில்லாமல் ஒருவருக்கொருவர் பல விடயங்களை பகிர்ந்துகொள்கின்றோம்என பயணி ஒருவர் குறிப்பிட்டார். யாழ்தேவி புகையிரத சேவை தினமும் கொழும்பு கோட்டையிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் 12 மணியளவில் ஓமந்தையை சென்றடைகிறது. பின்னர் ஓமந்தையிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் கொழும்பு கோட்டையை வந்தடைகிறது.

யாழ்தேவி புகையிரத சேவை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் காங்கேசன்துறையை சென்றடையும் என போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம - ஓமந்தை புகையிரத நிலைய திறப்பு விழாவில் தெரிவித்தார். இதற்கான கடனுதவியை இந்திய அரசு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கடன் திட்டத்தின் கீழ் ஓமந்தை முதல் காங்கேசன் துறை வரையான புகையிரத பாதை புனரமைப்பு நடவடிக் கையில் இந்திய கம்பனி துரிதமாக ஈடுபட்டு வருகிறது.

யாழ்தேவி புகையிரத சேவையின் இறுதி நிலையமான காங்கேசந்துறையை புகையிரதம் சென்றடைய இன்னும் 146 கிலோ மீற்றரே உள்ளது. இதற்கிடையில் சுமார் 15 புகையிரத நிலையங்களும் 11 உப புகையிரத நிலையங்களும் பல பாலங்களும் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளன. எப்போது நாங்கள் யாழ்தேவி புகையிரதத்தில் காங்கேசன்துறையை சென்றடைவோம்? என்ற கேள்வி மக்களிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.சுரேஷ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com