Contact us at: sooddram@gmail.com

 

ரட்ணஜீவன் கூலும், தோல்வியில் முடிவடைந்த அவரது கனவும்  (பகுதி 1)

(ரகுமான் ஜான்)

ஒவ்வொரு கலாச்சாரமும், அது எந்த சூழலில் உருப்பெற்றதோ, எப்படிப்பட்ட சூழலில் கடைப்பிடிக்கப்படுகிறதோ, அந்த சமூகச் சூழலில் வைத்துத்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். வேற்று ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தமது சமூகத்தில் காணப்படும் கலாச்சார பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்டு, வேறொரு சமூகத்தின் கலாச்சாரத்தை மதிப்பிடுவது, அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் பல்வேறு சமூகங்களின் கலாச்சாரங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிப்பது அபத்தமானது. இந்த விதமான மதிப்பீடுகள் வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் ‘அதிகாரப்படிநிலைவரிசையை’ (Hierarchial Order) கற்பிப்பதற்கும், அந்த கற்பிதங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தை இன்னொரு சமூகம் ஒடுக்குவதற்குமே வழிவகுக்கும்.

பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் தமது காலத்தில் தாம் அடைந்திருந்த அறிவியல், கலாச்சார, தொழிற்துறை, பொருளாதார வெற்றிகளை வரலாற்றில் மற்றெவரும் கண்டிராத மகத்தான சாதனைகளாக கருதத் தலைப்பட்டனர். இந்த அளவுகோள்களை அடிப்படையாக வைத்து ஏனைய சமூகங்களை மதிப்பீடு செய்தனர். தமது “தரத்தை” இந்த துறைகளில் அடைந்திராத சமூகங்களை “பின்தங்கியவை”, “பிற்போக்கானவை” என்று கருதத் தலைப்பட்டனர். அந்த சமூகங்களை தமது உயர்ந்த கலாச்சாரத்தை கொண்டு செல்வது தமது கடமை எனவும், அதன் பொருட்டு அந்தந்த நாடுகளை வெற்றி கொள்வதும், அதனூடாக அந்த குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களை தமது கலாச்சாரத்துடன் இணைத்துக்கொள்வதும் தமது கடமை என்று வாதிட்டனர். இதனை ‘ஐரோப்பியமையவாதம்’ (Eurocentrism) என்று இன்றைய சமூக விஞ்ஞானிகள் குறிப்பிடுவர். உண்மையில் இந்த கண்ணோட்டமானது ஐரோப்பிய நாடுகளது கொலனித்துவ ஆதிக்கத்திற்கே துணைபோனது. இதனால் தற்போது எந்தவோரு சமூக அறிஞரும் ஐரோப்பியமையவாதத்தை கண்டிக்கவே செய்வர். இதற்கு மாறாக ‘கலாச்சார சார்புவாதத்தையே’ (Cultural Relativism) முன்மொழிவர். நவீன மானுடவியலாளர்களைப் (Anthropologists) பொருத்தவரையில் ஆடைகளையே அணியாத அமேசன் காட்டு பூர்வகுடிகளாக இருந்தாலென்ன, மனித நாகரீகத்தின் உச்சியல் திகழ்வதாக பறைசாற்றும் மேற்கு, தொழில்மயமான நாடுகளின் தலைநகரத்தில் வாழும் மக்களாக இருந்தாலென்ன இரண்டு தரப்பினருமே ஒத்தவர்கள்தாம். இந்த இரண்டு தரப்பினரும் தாம் வாழும் சமூக சூழ்நிலையில் இருந்து பிறந்த, தமது அன்றாட வாழ்வை நடத்திச் செல்வதற்கு அவசியமான கலாச்சார பெறுமானங்களைக் கொண்டுள்ளார்கள்

அமெரிக்க கண்டத்தை “கண்டுபிடித்த” ஐரோப்பியர்கள் அங்கு வாழ்ந்து வந்த பழங்குடியினரை பின்தங்கியவர்களாகவும், கலாச்சாரம் அற்றவர்களாகவுமே கண்டனர். அவர்களை சரியான வழிக்கு வழிகாட்டுவது தமது மதக்கடமை என்றும் கூறத்தலைப்பட்டனர். உதாரணமாக, அமெரிக்காவை ஆக்கிரமித்த ஐரோப்பிய வெள்ளையினத்தவரது அன்றைய கலாச்சாரத்தை அமெரிக்க பூர்வ குடிகளது கலாச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த வேறுபாட்டை நாம் தெளிவாக காணமுடியும். இந்த பூர்வ குடியினர் தமது பரம்பரை வழியாக வந்த அறிவின் காரணமாக இயற்கையுடன் இசைந்துவாழ பழகிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இயற்கையை தெய்வமாகவே பார்த்தார்கள். இயற்கையில் இருந்து எதனை எடுத்தாலுங்கூட, அதனை தமது அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் எடுத்துக் கொண்டார்கள். அப்படி எடுத்ததற்கு முறைப்படி உரிய ஈட்டையும் இயன்றவரை வழங்குவதை வழமையாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தேவைக்கு அதிகமாக எதனையும் இயற்கையில் இருந்து எடுத்துக்கொள்வதோ, அல்லது இருப்பவற்றை பதுக்குவதோ கிடையாது. மரம் ஒன்றை வெட்டினால் இயன்றவரையில் இன்னொரு கன்றை நட்டிவிட முயல்வார்கள். ஒரு மிருகத்தை வேட்டையாடினால் அதன் மாசிசத்தை புசித்தபின்பு அதன் எலும்புகளை கண்டபடி நிலத்தில் வீசியெறியாமல், மரத்தில் உயரமாக ஒரு பரணை அமைத்து அதில் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்க சென்றாதாக கூறிக்கொண்டு ஐரோப்பியர்களோ, தங்கத்தை தேடுவதிலேயே குறியாக இருந்தார்கள். இதற்காக இவர்கள் எந்தவொரு நாட்டின்மீதும் படையெடுக்கவோ, இனப்படுகொலைகளை கட்டவிழ்த்துவிடவோ தயங்கியது கிடையாது. இவர்களால் பூர்வகுடிகளது கலாச்சார பெறுமானங்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை. தங்களது அறியாமையை அவர்கள் பூர்வகுடிகள் மீது சுமத்தினார்கள். அவர்களுக்கு கலாச்சாரமே கிடையாது என்று சாதித்தார்கள். அமரிக்க கண்டத்தின் மக்களையும், இயற்கை வழங்களையும் கொள்ளையடித்ததுடன், அவர்களை இனப்படுகொலையும் (Genocide) செய்தனர். மிஞ்சியிருந்தவர்களை ஆன்மீகரீதியாக தமக்கு அடிமைப்படுத்துவதற்காக கீறீஸ்துவ மதத்தை பரப்பினார்கள். இப்படியாக செய்வது “வெள்ளையினத்தவரது சுமை” (‘Burden of Whiteman’) என்று குறிப்பிட்டனர்.  ஒரு ஆபிரிக்க கவிஞன் குறிப்பிட்டது போல, “அவர்கள் வரும்போது அவர்களது கரங்களில் பைபிளும், எமது கரங்களில் நிலங்களும் இருந்தன. இப்போது எமது கரங்களில் பைபிலும், அவர்களது கரங்களில் நிலங்களும் இருக்கின்றன”, என்ற வாசகங்கள் கொலனித்துவத்தின் சர்வ்வியாபகமான விதியாகவே அமைந்துவிட்டுள்ளது. உண்மையில் இதுவோர் அப்பட்டமான நிறவெறி பிடித்த கொள்கையே அன்றி வேறெதுவுமல்ல என்பது நிரூபணமான வரலாற்று உண்மையாகும். இதன் மிக அண்மைக்கால உதாரணம்தான், உலகத்திற்கே நாகரீகத்தை கற்றுக்கொடுத்த ஈராக்கிய மக்களுக்கு, நாகரீகத்தை கொண்டு செல்வதற்கா ஈராக் மீது படையெடுப்பதாக ஜோர்ஜ் புஸ் கூறிய அபத்தமான கூற்றாகும். இன்றும் கூட வாரத்தில் சில மணிநேரங்களே வேட்டையாடுவதன் மூலமாக தமது தேவையை பூர்த்தி செய்தபின்பு, மீதமாக உள்ள நேரத்தை ஓய்வாக, தமது குடும்பத்தவருடனும், குலத்தவருடனும் பொழுதுபோக்கில் ஈடுபடும் பல பூர்வகுடியினரது வாழ்க்கை முறையானது, தம்மைச் சுற்றி நுகர்பண்டங்களை வாங்கிக் குவித்துவிட்டு, அவற்றை அனுபவிப்பதற்குக்கூட நேரம் இல்லாது வாரம் அறுபது தொடக்கம் எண்பது மணித்தியாளங்கள் உழைக்க நேரும் அபிவிருத்தியடைந்த நாட்டவரைச் சேர்ந்தவர்களைவிட உயர்வானதாவே மானுடவியலாளர்களால் கருதப்படுகிறது.

இவ்வளவும் பேசுவது ஏன் என்ற வாசகர்கள் கேட்பது புரிகிறது. ‘தேசம்நெற்றில்’ கிறீஸ்தவ விரோதமாகவும், இஸ்லாமிய விரோதமாகவும், பலரும் அண்மைக் காலத்தில் கருத்துக்களை சற்றும் தயக்கமின்றி வெளிப்படுத்தி வந்துள்ளதை பலநாட்காளாக அவதானித்து வந்திருந்த போதிலும், நான் இவற்றைப்பற்றி அதிகம் அலட்டிக் கொண்டது கிடையாது. அவரவரது அறியாமையை அவர்கள் தமது கருத்துக்கள் மூலமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் போது நாம் அதிகம் அலட்டிக் கொள்ள முடியாதுதானே என்பது எனது கருத்தாக இருந்த்து. ஆனால் ‘தேசம்நெற்’ பத்திகளில் தமிழ் சமுதாயத்தின் மீட்பராகவும், மகத்தான புத்திஜீவியாகவும் சித்தரிக்கப்பட்ட ரட்ணஜீவன் கூல் உடைய எழுத்துக்ளில் வெளிப்பட்ட அவரது அறியாமையை கண்டபின்பு, சில வார்த்தைகள் பேசமல் இருப்பது தவறாக அமைந்துவிடும் என்பதனால் இதனை எழுதுகிறேன். அதனைவிட, இவரது யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் நியமனத்திற்காக தனியாக கையெழுத்து இயக்கம் நடத்தியவர்கள் என்றவகையில் ‘தேசம்நெற்’ இனர், இவரது தவறான கருத்துக்களை முறையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதுடன், இப்படிப்பட்ட இயக்கத்தை நடத்தியதன் அரசியலையும் மதிப்பீடு செய்பது அவசியம் என்றவகையில் இந்த எழுத்து அவசியமானதாக ஆகிறது.

(தொடரும்...)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com