Contact us at: sooddram@gmail.com

 

ரட்ணஜீவன் கூலும், தோல்வியில் முடிவடைந்த அவரது கனவும் (பகுதி 2)

(ரகுமானஜான்)

அண்மையில் ரட்ணஜீவன் கூல் அவர்கள் சைவ சமயம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களைப் படித்தபோது, அப்படியே கொலனித்துவ காலத்தில் மிசனரிமார்கள் செய்த பிரச்சாரத்தை படித்தது போன்றதொரு உணர்வுதான் ஏற்பட்டது. அதனைவிட இவர் பாலியல் தொடர்பாகவும், தற்பால் கவர்ச்சியாளர்களை (Gay) சித்தரித்தவிதமும், இவரை சமூகத்தின் படுபிற்போக்குத்தனமாக கருத்துக்களை கொண்டிருப்பவர் என்பதை அம்பலப்படுத்துகிறது. இவர் தமிழ் சமூகத்தின் முன்னணி புத்திஜீவியாக இனம் காணப்படுபவர் என்றவகையிலும், யாழ் பல்கலைக்கழகத்தின் ஒரே மீட்பராகவும் சித்தரிக்கப்படும் நிலையில் இவரது கருத்துக்கள் முறைப்படியான பரிசீலனைக்குள்ளாவது அவசியமானதாக ஆகிறது. இவர் பொறியியல் துறையில் போராசிரியராக இருக்கிறார் என்பதும், அந்த துறையில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகும். ஆனால் இவர் அந்த துறையைத் தாண்டி ஏனைய சமூகவியல் துறைகளுக்குள் அடியெடுத்து வைக்கும்போது அந்த துறைகள் தொடர்பான இவரது புலமையை கேள்விக்குள்ளாக்குவது தவிர்க்கப்பட முடியாததாகிறது.

இவர் இந்த துறைகளில் வெளியிட்டுவரும் கருத்துக்களைப் பார்க்கையில் இவர் சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளில் விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தை அறவே கொண்டவராக இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள், தாம் கற்றுத்தேறாத இன்னொருதுறையில் பாண்டித்தியம் பெற்றவர்போல பாவணை பண்ணுவதை போலிப்புலமை (Pseud Intellectual or Sophistry) என்றுதான் அழைக்கப்பட முடியும். முன்பு இவர் எழுதிய சைவ வேளாளர் பற்றிய விமர்சனங்களை படித்தபோது எனக்கு இவர், மக்கள் தரப்பில் இருந்து சைவ வேள்ளாளரது ஆதிக்க சக்திகளுக்கஎதிராக குரல் கொடுப்பவர் போன்றதொரு தோற்றப்பாடுதான் உருவானது. ஆனால் இவரது அண்மைக்கால எழுத்துக்கள் இவர் அங்கிலிக்கன் வேளாளரது தரப்பில் இருந்து குரல் கொடுப்பவர் என்பதை அடையாளம் காட்டுகிறது.

ஒவ்வொரு சமயமும் தனக்குள் பலவிதமான கருத்துப்போக்குகளைக் கொண்டுள்ளது. அந்தவிதத்தில் எந்தவொரு சமயத்தையும் எடுத்த எடுப்பிலேயே முற்போக்கனது என்றோ அல்லது பிற்போக்கானது என்றோ கூறிவிட முடியாது. அது தான் செயற்படும் சமுதாயத்தில் உள்ள பல்வேறு சமூக சத்திகளில் எந்தெந்த பிரிவுகளுடன் தொடர்புபட்டு செயற்படுகிறதோ, எந்த சக்திகளது நலன்களுடன் தன்னை பிணைத்துக் கொண்டுள்ளதோ என்பதைப் பொறுத்தே அதன் கூறுகளது முற்போக்கு மற்றும் பிற்போக்கு தன்மைகளை இனம்கண்டுககொள்ள முடியும். எந்தவொரு சமயமும் புதிதாக ஒரு சமுதாயத்தினுள் நுழையும்போது, அந்த சமுதாயத்தில்  ஏற்கனவெ ஆழமாக வேறூன்றியுள்ள அத்தனை அம்சங்களையும் நிராகரித்துவிட்டு தன்னை நிலைநாட்டிக்கொள்ள முடியாது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அந்தந்த சமுதாயத்தில் ஆழமாக வேறூண்றியுள்ள சில அம்சங்களையும் தவிர்க்க முடியாதவாறு உள்வாங்கிக்கொண்டே தன்னை நிலைநாட்டியாக வேண்டியுள்ளது. அதுபோலவே, குறிப்பிட்ட சமுதாயத்தில் இருக்கும், புதிதாக எழுந்துவரும் பல்வேறு சமூகப் பிரிவுகளும் தமது நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் அந்த சமயத்தில் மூலபாடங்களை (Classics) மீள்வாசிப்பு செய்வதும், தமது தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஒரு சமயத்தினுள் காணப்படும் குறிப்பிட்ட சில பிரிவுகளை பலப்படுத்துவதும் நடந்தேறுகிறது. இதனால் எந்தவொரு சமயத்தினுள்ளும் பலதரப்பட்ட போக்குகளும், அர்த்தப்படுத்தல்களும் (Interpretations) இருப்பது தவிர்க்க முடியாததாகிறது.

ஆதியான சமூகங்களில் மனிதரது உயிர்வாழ்வு என்பது மிகவும் உத்தரவாதமற்றதாக இருந்தது. இதனால் இனப்பெருக்கமானது அந்த சமூகங்களில் மிகவும் முக்கியமான அம்சமாகவும், புனிதமானதாகவும் கூட கருதப்பட்டு வந்ததுண்டு. இந்தவிதமான வழிபாடுகளை கருவளத்தின் மீதான வழிபாடு (Fertility Cult) என்று மானுடவியலாளர்கள் குறிப்பிடுவர். இந்து சமயத்தில் மாத்திரமன்றி ஏனைய பல ஆதியான கலாச்சாரங்களிலுங்கூட இந்த விதமான லிங்க வழிபாடுகள் இருக்கவே செய்கின்றன. இவை பற்றி ஏதுமே அறியாதவர்போல கூல் லிங்க வழிபாடு தொடர்பாக முன்வைக்கும் விமர்சனங்கள் அசிங்கமானவையாக இருக்கின்றன.

புராணங்கள் என்பவை ஐதீகங்கள் என்ற வகையில் கற்பிதமானவையாகும். புராணத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் Myth என்ற சொல் வழங்கப்படுகிறது. அந்தந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தமது வழிபாட்டு முறைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தத்தமது ஐதீகங்களில் பல கதைகளை இதன் பொருட்டு உருவாக்கியுள்ளார்கள். சாமாண்யர்களுக்கு (Layperson) விளக்கும் விதத்தில் அமைந்துள்ள இந்த கற்பிதங்களில், ஒரு நிகழ்வானது ஒன்றுக்கு மேற்பட்ட, ஒன்றிற்கொண்று முரணான கதைகளாக கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இவை அந்தந்த சமயத்தைப் பின்பற்றும் சாமாண்யபவர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இருப்பதில்லை. இந்த கற்பிதங்களுக்குள் சென்று தர்க்கத்தை (Logic) தேடமுனைவது, அவற்றிலுள்ள பிழைகளை கண்டுபிடிப்பதாக மார்தட்டுவது சம்பந்தப்பட்டவர்களது அறியாமையை மாத்திரமே புலப்படுத்துகிறது.

குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்கள், தமது சமுதாயத்தின் பிற்போக்கான அம்சங்களை களையவேண்டும் என்ற நோக்கில் இதனை செய்யும் போது, அதுவும் சாமாண்யர்களை சமய மயக்கங்களில் இருந்து விடுபட வைக்கும் நோக்கில் செய்யும் போது அதற்கு ஒரு அர்த்தத்தை காண முடிகிறது. பெரியாரின் முயற்சிகள் இந்த வகைப்பட்டவையாகும். ஆனால் வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர், அடுத்தவர் மதத்தை விமர்சிக்கும்போது, அதுவும் தனது மதத்தை உயர்வாக காட்டும் நோக்கில் செய்யும் போது, வெறும் அபத்தமே மிஞ்சுகிறது. இங்கே கூல் கிறீஸ்த்துவத்தை நியாயப்படுத்தவில்லை என்ற வாதம் எழலாம். ஆனால் கிறீஸ்த்துவம் தொடர்பாக எந்த விமர்சனங்களையும் முன்வைக்காமல், சைவ சமயத்தை மாத்திரம் விமர்சிப்பதை இந்த அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள முடியும். இவரது கருத்துக்களில் ஐரோப்பியமையவாதம் தான் வெளிப்படுகிறதே ஒழிய, பகுத்தறிவுவாதத்தை அறவே காணமுடியவில்லை.

இந்து சமயத்தில் இயற்கை வழிபாடு தொடக்கம் லிங்க வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு உட்பட ஆழ்நிலைத் தியானம் வரையிலான அத்தனை வழிபாட்டுமுறைகளும் இருக்கின்றன. பல்வேறு சமூக சக்திகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள், குறிப்பான வரலாற்று காரணிகளமற்றுமஅவர்களதஅறிவுத்தரமபோன்ற நிலைமைகளின் காரணமாக குறிப்பிட்ட சில வழிமுறைகளை தீவிரமாக எதிர்த்து, இன்னும் சில வழிபாட்டு முறைகளை முதன்மைப்படுத்தியும் செயற்பட்டுள்ளார்கள். கொலனித்துவ காலாத்தில், மிசனரிமார் சைவசமயம் தொடர்பாக முன்வைத்த விமர்சனங்களை முன்கொடுக்கும் விதத்திலும், வைச சமயத்தை நவீனமயப்படுத்தும்விதத்திலும் ஆறுமுக நாவலர் சில சீர்திருத்தங்களை முன்மொழிந்த்துடன், அப்போது சைவ சமயத்தில் நடைமுறையில் இருந்துவந்த பழமையாசில வழிமுறைகளை எதிர்த்தும் செயற்பட்டார். சிறுதெய்வ வழிபாடு, விலங்குகளை பலியிடுவது, சின்னமேளம் ... போன்ற பல நடைமுறைகளை எதிர்த்த்துடன், ஆகம வழிமுறைகளின்படியே ஆலயங்களில் வழிபாடு நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தினார். புரட்டெஸ்த்தாந்து அறநெறியை (Protestant Ethics) ஒத்த அறநெறியொன்றைதனது சமுதாயத்தில் உருவாக்க இவர் பாடுபட்டார். அந்த வகையில் ஆறுமுகநாவலர் ஒரு சைவசமய சீர்திருத்தவாதியாவார். இப்படிப்பட்ட நடைமுறைகளை எம். என். சிறீநிவாசன் என்ற மானுடவியலாளர், சமஸ்கிரதமயமாக்கல் (Sanskritisisation) என்று குறிப்பிடுவார்.

(தொடரும்...)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com