Contact us at: sooddram@gmail.com

 

ரட்ணஜீவன் கூலும், தோல்வியில் முடிவடைந்த அவரது கனவும்  (பகுதி 3)

(ரகுமானஜான்)

சமய சீர்திருத்தவாதிகளது முயற்சிகளையும் மீறி சில புராதண பழப்பவழக்கங்கள் இன்றும் கூட எல்லா சமயத்தவரிடையேயுங்கூட தொடரவே செய்கின்றன. இவற்றை எவ்வாறு பார்ப்பது என்பது அந்தந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்ய வேண்டியவர்களாவர். ஒவ்வொரு சமயத்திலும் உருவாகிவரும் முற்போக்கு சக்திகளும், ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவினரும், தமது போராட்டங்களில் ஒரு முற்போக்கான மதப்பிரிவை அங்கிகரிக்கவோ அல்லது அந்த மத்தை முற்றாக நிராகரத்து செயற்படவோ முன்வருவர். இப்படியாக ஒவ்வொரு மதத்தினுள்ளும் பல்வேறு சமூக சக்திகளும், தத்தமது இலக்குகளை வென்றெடுக்கும் விதத்தில், அந்த மத்ததின் பல்வேறு பிரிவுகளில் ஏதாவது ஒன்றை முதன்மைப்படுத்துவது அல்லது அதனை முற்றாக நிராரிப்பது வரையிலான பல்வேறு நிலைப்பாடுகளை மேற்கொள்ளலாம். இது மதம் என்ற தளத்தில் நடைபெறும் வர்க்க, சாதிய, மற்றும் பல்வேறு சமூகப்பிரிவுகளது போராட்டங்களின் வெளிப்பாடும் ஆகும். இந்த போராட்டங்களில் வெளியார்கள்அங்குள்ள முற்போக்கான பிரிவினருக்கு தார்மீகரீதியாக ஆதரவை வழங்கலாம். மாறாக, நாமே அந்த போராட்டத்தை நடத்த முன்வருகைளில் இது இரண்டு மதப்பிரிவினருக்கு இடையிலான சகிப்புணர்வின்மையின் வெளிப்பாடாக அமைந்துவிடும் வாய்ப்புண்டு. அந்த வகையில் இங்கு கூல் மேற்கொள்வது சைவர்களுக்கு எதிரான சகிப்புணர்வின்மையாக புரிந்துகொள்ளப்பட்டது சரியானது என்றே நான் கருதுகிறேன். சைவ சமயத்தவர்களுடன் ஒரு விரிவான சகிப்புணர்வை காட்டாத ஒருவர் யாழ் பல்கலைக் கழகத்திற்கு மாத்திரமல்ல, வேறெந்தவொரு நிறுவனத்திற்குமே பொறுப்பாக இருக்க தகுதியற்றவர் என்பதுதான் எனது அபிப்பிராயமாகும். ஏனெனில் குறிப்பிட்ட நம்பிக்கை முறைகளை நாம் ஏற்றுக் கொள்ளாதது என்பதும், அந்த நம்பிக்கை கொண்டவர்கள் மீது சகிப்புணர்வை கொண்டிராததும் வேறுவேறாகும்.

பாலியல் நடத்தை பற்றி கூல் வெளியிடும் கருத்துக்கள் மிகவும் பத்தாம்பசலித்தனமானவையாக, விக்ரோரிய காலத்தில் (Victorian Era) காணப்பட்ட பாலியல் ஒடுக்குமுறைகளுக்கு நிகரானவையாக இருக்கின்றன. சமூகத்தில் ஆங்காங்கே நிகழ்ந்த சில மீறல்களை பெரிதாக எடுத்து பேசும் அளவிற்கு அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்பது புரியவில்லை. இளம் வயதில், பல்கலைக்கழக சூழலில் சிலர் தற்பால் சேர்க்கையில் ஈடுபடுவதும், சில பெண்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதும் இயல்பாக நடைபெறுபவை தான். இது இரண்டு வயதுக்கு வந்தவர்கள், சொந்த விருப்பத்தின் பெயரில், மனமொத்து செய்யும் ஒரு நிகழ்வு. இதில் ஏதோ உலகம் அழிந்து போல கவலைப்படுவதற்க என்ன இருக்கிறது என்பதை கூல் தான் விளக்க வேண்டும். எப்போது கிராமத்து வாழ்க்கையிலிருந்து இளைஞர்களும், யுவதிகளும் நகரங்களை நோக்கி வரவும், சுயமாக தொழில் செய்து சீவிக்கவும் முன்வருகிறார்களோ, அப்போதே, அதுவரையில் இருந்துவந்த கிராமத்து பழக்கவழக்கங்கள் சிறிது சிறிதாக உடைந்துபோக, ஒரு கட்டத்தில் முற்றிலும் வித்தியாசமா பாலியல் அறநெறிகள் சமுதாயத்தில் உருவாகத் தொடங்குகின்றன. தொழில்மய நாடுகளில் இது எப்போதோ நடந்து முடிந்து விட்டது. புலம்பெயர்ந்தவர்களில் இங்குள்ள இளம் பராயத்தினர் யாருமே ஊரில் நடைமுறையில் இருந்த பழக்க வழக்கங்களை அப்படியே பின்பற்றுபவர்கள் அல்லர். கிராமங்களை விட்டு நகருக்கு வந்துவிட்ட இளைஞர்கள் மத்தியிலும் இது நடந்தேறுகிறது. இது மிகவும் இயல்பானவையாகும். இதற்கு கூல் ஏன் நித்திரையைத் தொலைத்தார் என்பதுதான் புரியவில்லை. இங்கு தவறானது, இவர் குறிப்பிடும் சம்பவங்களில் கிடையாது. மாறாக, விக்ரோரிய விழுமியங்களைஇன்னமும் காவிக்கொண்டு திரியும் கூலின் மீதே தவறு இருக்கிறது. 

நமது முன்னோர்கள் பாலியலை ஒரு விரும்பக்கூடாத, தவறான அம்சமாக காணவில்லை. மாறாக அதனைக் கொண்டாடினார்கள். கடவுளை அடைவதற்கான மார்க்கங்களுள் ஒன்றாகவே அதனைக் கருதினார்கள். தமது கோயிலிலும், மற்றும் தமது கலைப்படைப்புக்களிலும் இந்த கருத்தை வெளிப்படையாகவே காட்டும் விதத்தில் பலவித கலைவடிவங்களிலும் அதனை வெளிப்படுத்தினார்கள். சிலைகள், ஓவியங்கள், பாடல்கள், காமசூத்திரம்... போன்ற பல்வேறு கலைவடிவங்களிலும் அதனை கொண்டாடி மகிந்தார்கள். மேற்கு நாடுகளில் அறுபதுகளில் தோன்றிய பாலியல் புரட்சி (Sexual Revolution) என்பது எம்மைப் பொருத்தவரையில் மிகவும் பழைய கதைதான். இப்படிப்பட்ட ஒரு சமூகச் சூழலில் உருவான படைப்புக்களை தமது விக்ரோரியா காலத்துவிழுமியங்களின் ஊடாக மதிப்பீடு செய்ய முனைவது கூல் உடைய அறியாமையை வெளிப்படுத்துகிறதே அன்றி, அவரது புத்திஜீவித்தனத்தை அல்ல. நளவென்பாவை பர்சிவல் பாதிரியார் ஆபாச இலக்கியமாக (Pornography) குறிப்பிட்டதாக இப்போது குறிப்பிடும் கூல், அதே பாடசலையில் ஆசிரியராக இருந்தவரும், பின்னாளில் இலங்கையில் பிரபல பகுத்தறிவுவாதியாக திகழ்ந்தவருமான ஆபிரகாம் கோவூர் பைபிள் தொடர்பாக இதே கருத்தை தெரிவித்ததும், அதனை பாடசாலை மாணவருக்கு கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டதையும் எப்படி கவனிக்கத் தவறியிருக்க முடியும்.   இப்படியாக கூல் அவர்கள், சமூக விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் சாமாண்யரது தரத்தில் நின்றே அணுகுகிறார் என்பதற்கு இவரது கூற்றுக்களே நல்ல சான்றுகளாக அமைகின்றன. இவரது கருத்துக்களானவை, அறிவார்ந்த ஒரு சட்டகத்தில் அமைந்த வெறும் பொதுப்புத்தியே தவிர வேறொன்றும் இல்லை என்பதை காண முடிகிறது.

பெண்கள் கலையாடுவது குறித்தும், புராணத்தில் கூறப்படும் பாலியல் மீறல்கள்குறித்தும் இவரது புலம்பல்கள் அர்த்தமற்றவை. புராணங்களை வெறுமனே நேரடியான அர்த்தத்தில் வாசிக்கும் (Direct and Litrary Reading) ஒரு காலாவதியாகிப்போன ஒரு வாசிப்பு முறையின் வெளிப்பாடு இது. இன்று பின்நவீனத்துவம் போன்ற முறைமைகள் பிரதிகளின் பன்முக வாசிப்பை வேண்டி நிற்கின்றன. வரிகளுக்கு இடையிலும், ஏனைய பிரதிகளுடன் தொடர்புபடுத்தியும் வாசிக்கும் முறைமை விரிவாக பரவியிருக்கும் ஒரு காலகட்டத்தில் நேரடியாக வாசிப்பதன் மூலமாக, இன்னோர் மதப்பிரிவினரை கிண்டலடிப்பது இவரது புத்திஜீவித்தனத்தையே கேள்விக்குள்ளாக்க வல்லது. இங்கே நாம் சமூதாய முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள பிற்போக்கு அம்சங்களைக் களைய வேண்டும் என்ற அவாவை இவரிடம் காணவில்லை. மாறாக, சைவ பழமைவாதிகளது இடத்தில் அங்கிலிக்கன் பழமைவாதத்தை நிலைநிறுத்தும் முயற்சியையே இங்கு காண்கிறோம்.

தான் எழுதிய நூல் பெண்கள் கற்கை நெறியில் (Womens Studies) பயன்படுத்தப்படுவதாக கூறுகிறார். அதே நேரம் தற்பால் கவர்ச்சிக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்குகிறார். இப்போதெல்லாம், தற்பால்கவர்ச்சி சம்பந்தமான கற்கையானது (Queer Studies), பெண்கள் கற்கை நெறியின் ஒரு கூறாகவே அமைந்துவிட்டது. இந்தவிதமான கருத்துக்களை மேற்கு நாடுகள் பக்கம் தலையே வைத்து படுக்காதவர்கள் கூறினால் நாம் அவர்களை அனுதாபத்தோடு நோக்கலாம். ஆனால் மேற்கு நாடுகளில் பலகாலம் வசித்த இவர், அந்த நாடுகளில் தற்பால் கவர்ச்சியனருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நேரடியாக கண்டவர், அது தொடர்பான வாதப்பிரதிவாதங்களை அன்றாடம் செய்திப்பத்திரிகை வாயிலாகவே படிக்கும் வாய்ப்பைப் பெற்றவர், இப்படியாக தற்பால் கவர்ச்சிக்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்துவது (Homophobia) என்பது  இவரது கடைந்தெடுத்த பிற்போக்குத் தனத்தின் அடையாளவே தவிர வேறொன்றும் கிடையாது.

கிறீஸ்தவ மிசனரிமார்கள் தம்மைப்பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளும் இன்னொரு விடயம், அவர்கள் பெண் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் பற்றியதாகும். இலங்கையில் பெண்கல்வி என்பது முதன் முதலாக மிசனரி பாடசாலைகள் மூலமாகத்தான் அறிமுகமாகியது என்ற போதிலுங்கூட, இந்த உரிமை பாராட்டலுக்கு இவர்கள் முழுமையான தகுதி உடையவர்கள் அல்லர். ஏனெனில் ஐரோப்பாவிலேயே பெண்கல்வி பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே அறிமுகமானது. அதுவரையில் கிறீஸ்த்தவர்களும் கூட பெண்கல்விக்கு எதிரானவர்களாகவெ இருந்து வந்தார்கள். அதிலும் மோசமானது என்னவென்றால், பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் சுமார் ஒரு இலட்சம் பெண்கள் சுதந்திரமாக செயற்பட்டவர்கள், நடப்பு ஒழுங்கமைப்பிற்கு சவால் விட்டவர்கள், அந்த காலத்தின் சமூகத்தின் அறிவாக கருதப்பட்ட மகற்போறு, கருத்தடை, பெண் நோயியல், மூலிகை மருத்துவம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் சூனியக்காரிகள் என்ற பெயரில் கைதசெய்யப்பட்டு, சித்திரவதைக்கஉட்படுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டபின்னரதீக்கிரையாக்கப்பட்டார்கள் (Witch Hunting). இந்த விதமான நடவடிக்கைகளில் கிறீஸ்த்தவ மதபீடங்களும், அரசுகளும் இணைந்து செயற்பட்டன. இப்படியாக இரத்தக் கறைபடிந்த கரங்களுடன்தான் இந்த மிசனரிமார்கள் எமது நாடுகளை நோக்கி வந்து சேர்ந்தார்கள். இவர்களை கடந்த கால தவறுகள் எல்லாவற்றிற்குமாக பலிபோடுவதில் முறையில்லைதான். ஆனால், இவர்கள் தாம்தான் பெண்குலத்தில் விமோசகர்களாக எமது சமுதாயத்திற்கு வந்து சேர்ந்ததாக மார்தட்டும் போது, இந்த இருண்டு பக்கத்தை திரும்பிப் பார்ப்பது தவிர்க்க முடியாத்தாகிறது அல்லவா?

(தொடரும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com