Contact us at: sooddram@gmail.com

 

யுத்தத்தின் பின் பெண்களின் இன்றைய நிலை?

(பைரவி)

இன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் நிலையை யார் அறிவீர்கள ? புலம் பெயர்ந்த உறவுகளாகிய நீங்கள் இவற்றை அறிவீர்களா? அல்லது அறிந்தும் அறியாத மாதிரி இருக்கிறீர்களா? உதவி என்கிற பெயரில் புலம்பெயர்நாடுகளில் உள்ள சில அமைப்புகளின் ஆண் பணியாளர்கள் போரால் பாதிக்கப்பட்ட பெண்களைத் தமது இச்சைகளுக்குப் பயன்படுத்துவதையெல்லாம் நீங்கள் அறிவீர்கள ? இத்தகையவர்களுக்குப் பல பெண்கள் பலியாகியிருக்கிற சோகக்கதைகள் தெரியும ? பணத்திற்காக....வாழ்வாதரத்திற்காக.....உங்கள் வெளிநாட்டுப்பணங்கள் எங்களை வாழ வைக்கும் என்ற நப்பாசையில் உதவிகளை நாடி கடைசியில் பலரது பாலியல் தேவைகளுக்குப் பலியாகின்ற பெண்களைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள ?

ஒரு மனிதன் பிறக்கும் போது எதையுமே கற்றுக் கொண்டு பிறப்பதில்லை. எம்மை நல்லவராக வளர்ப்பதும் நல்ல அறிவுடன் ஒழுக்கமாக வளர்ப்பது பெற்றோரின் கடமை மட்டுமன்றி சேரும் நபர்கள் சூழல் எல்லாவற்றிலும் தான் தங்கியிருக்கிறது. மற்றும் நல்ல விடயங்களைத் தேடி அறிந்து படிப்பதிலும் தான் இருக்கிறது. பணம் என்ற ஒன்றுக்காக உறவு நட்பு எல்லாவற்றிலும் இன்று சுயநலமே மேன்மையாக இருக்கிறது.

கடந்த காலங்களில் புலம் பெயர் உறவுகளாகிய நீங்கள் பாதுகாப்பாக எல்லாச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு போராட்டம் வளர்வதிற்கும் நாங்கள் இருக்கிறோம் என குரல் கொடுத்துத் கொடுத்து வளர்த்தீர்கள். உதவிகளைப் பலர் உவந்து வழங்கினீர்கள். உங்களில் சிலர் உயிரைக் கூட பணயமாக்கி வெளிநாடுகளில் போராட்டத்திற்காக உழைத்தீர்கள். அதனை நான் இல்லையென்று மறுக்கவில்லை.

ஆனால் இப்போது என்ன நடந்தது. ஏன் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தீக்குளித்தீர்கள்? உண்ணாவிரதம் இருந்தீர்கள்? ஆர்ப்பாட்டம் செய்தீர்கள்? வணங்காமண் கப்பல் வருகிறது உணவுப் பொருட்கள் வருகிறது என்றெல்லாம் சொல்லி சொல்லிக் குரல் கொடுத்து குழந்தைப்பிள்ளையை ஏமாற்றுவது போல எங்களையும் ஏமாற்றிய போது நாங்கள் இங்கு செல் மழைக்குள் வழ்ந்து கொண்டிருந்தோம். கடைசி நேரம் கூட இராணுவத்தினரிடம் சரணடையும் போது உங்களுக்குக் கப்பல் வருது வெள்ளைக்காரர் வாறாங்கள். ICRC , UNHCR வந்து பொறுப்பெடுப்பார்கள் என்று சொல்லிச் சொல்லிக் காத்திருந்து காத்திருந்து எத்தனை உறவுகளை இழந்திருக்கிறோம்.....?

தங்களையே கொண்டு நடக்க முடியாத போராளிகளை காயமடைந்து குருதிபெருகத் துடித்தவர்களையெல்லாம் நாய்களைத் தெருவில் போட்டது போல எங்களுக்கு வழிகாட்டிய பெரியவர்கள் போட்டுவிட்டுத் தாங்கள் தப்பித்துவிட்டார்கள் தப்பித்தார்கள்.

ஊனமடைந்தவர்களையேனும் ஏன் கடைசி நேரத்தில் பாதுகாப்பாக அனுப்ப முடியவில்லை....? அல்லது பொறுப்பெடுக்க முடியவில்லை....? இவர்கள் யார்? நீங்கள் போராடுங்கள் என்று பரணிபாடி எங்களை நெருப்பில் வீழ்த்திவிட்டு வெளிநாடுகளில் ஊர்வலம் போக எங்களுக்குத் தானே துயரம் நிகழ்ந்தது. நீங்கள் என்னத்தைத்தான் சர்வதேச அரங்கில் எங்களுக்காகப் போராடித் தந்தீர்கள ? புரியவில்லை.

நாங்களும் உங்கள் போல உங்களது பிள்ளைகள் போல எங்களது பெற்றோருடன் வீட்டில் இருந்திருந்தாலோ அல்லது உங்களைப்போல யுத்தம் நடக்காத பிரதேசத்திற்குள் வாழ்ந்திருந்தால் இந்த நிலை நேர்ந்திருக்கும ? இப்படித்தான் என்போன்ற முன்னாள் போராளிகள் பலர் எண்ணுகிறோம். 

நடந் தது நடந்து போனதாக இயற்கை தனது இயல்பில் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் நடந்து முடிந்தவற்றின் சாபமாக நாங்கள் இங்கே அன்றாட வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு மக்களுக்கும் இப்போது நிறையத் தேவைகள் இருக்கிறது. அன்றாடம் வாழ்க்கையை கொண்டு நடத்தும் சிரமத்தோடு சமூகச்சவால்கள் பலவற்றை நாங்கள் தாங்கவும் தாண்டவும் வேண்டியுள்ளது.

யுத்தம் முடிந்து ஊனங்களும் உறவுகளை இழந்தவர்களும் ஒருபுறம் அவலப்பட வாழ்கின்றவர்கள் ஒரு பெரிய சமூகச் சீர்கேட்டுக்கள் சிக்கியிருப்பதன் பயனாக தந்தையே மகளை வல்லுறவு புரிவதும் பெற்ற தாயே தனது சிசுவைக் கொல்வதும் கணவனை விட்டு மனைவியும் மனைவியை விட்டுக் கணவனும் பிற உறவுச் சேர்க்கையில் ஈடுபடுவதுமென நாறிக்கிடக்கிறது நீங்கள் வெளிநாடுகளிலிருந்து கனவுகாணும் உங்களது தாயகம்.

இன்று எமது பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறைமையின் சிலருடைய வாழ்வை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் கதைககளில் சிலவற்றைச் சொல்கிறேன்:-

தடுப்புமுகாமில் கணவர்மார் உள்ள பெண்களின் நிலை:

இவளின் கணவர் தடுப்பு முகாமில், 03 பிள்ளைகள , சின்னப்பிள்ளைகள். இவளுக்கும் 29 வயது தான் சிறிய வயதிலேயே திருமணம் முடித்து வன்னிக்குள் வாழ்ந்து படாத துன்பங்கள் பட்டு வந்தவள். சிறிய வயதிலேயே தாயை இழந்தவள். தந்தை ஆண் சகோதரன் ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்வை நடத்தப்படும் வறுமையால் இவளைக் கவனிப்பதில்லை. ஆனால் அவளது கண்ணியத்தில் சந்தேகம் எல்லோருக்கும். தேவைகளை ஒட்டி எந்த ஆணுடனாவது கதைத்தால் அவன் அவனுடன் வாழ்வதாக சுற்றம் அவளைச் சந்தேகிக்கத் தொடங்கியது.

கணவர் தடுப்பு முகாமில் இவளிடம் போதிய கல்வியறிவும் இல்லை. மூன்று பிள்ளைகளின் கல்விச் செலவு, உணவுச் செலவு உடுப்புப் செலவு கணவனைப் பார்க்கப்போகும் செலவுகள் என்று அன்றாட செலவுகள் இவளுக்கு தலைக்கு மேல் சுமை. வருமானம் இல்லாமல் எப்படி இவற்றுக்கெல்லாம் செலவு செய்வது?

ஊரில் இவளது தனிமை ஆண்துணையற்ற வாழ்வுபற்றி அதிகமான விமர்சனங்களும் வீண் கதைகளும். தனக்கொரு வேலையைத்தேடிச் செய்ய முயன்றாள். அவளது தகைமைக்கேற்ப வேலைகள் எதையும் எவரும் வழங்கவில்லை. சில ஆண்களின் தொடர்புகள் அவளைத்தேடி வரத்தொடங்கியது. பணத்தைக் காட்டினார்கள். அவளது குழந்தைகளுக்கும் அவளுக்கும் வாழத்தேவையான பணத்தை வழங்கியவர்கள் அவளைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். கடைசியில் அவள் அவர்களது பணத்துக்காக அடிமையானாள்.

இன்று கணவன் தடுப்பிலிருந்து வெளியில் வந்துள்ளான். தடுப்பிலிருந்து வந்த கணவன் ஒரு முன்னாள் போராளி. அவனால் வேலை செய்யுமளவுக்கு உடல் வலுவில்லை. களத்தில் நின்று ஊனமடைந்தவன். இதனால் அவள் தான் குடும்பத்தைச் சுமக்க வேண்டிய நிலமையில் வேலையென்ற பெயரில் வெளியில் சென்று வருகிறாள். தற்போது ஆடைத்தொழிற்சாலைக்குப் போவதற்கான ஒழுங்குகளைச் செய்துள்ளாள். தனது பிள்ளைகளை யாரிடமாவது கொடுத்துவிட்டுப் போகத்தயாராக சிறுவர் இல்லங்களைத் தேடித் திரிகிறாள். மாதவருமானம் அவளுக்கு எப்படியாவது வந்தால் போதுமென்ற நிலமையில் விபச்சாரம் செய்யக்கூடத் தயாராயிருக்கிறாள். வறுமை ஒருத்தியின் வாழ்வை எத்தகைய நிலமைக்கு உட்படுத்தியுள்ளது பாருங்கள ? 

 

வளைப்போல் பல பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி நீங்கள் அறியும் போது கலாச்சாரம் பண்பாடு தமிழினம் என்று குத்தி முறிவீர்கள். ஆனால் யதார்த்தம் இதுதான்.

அண்மையில் ஒரு கட்டம் ஆண்களை விடுதலை செய்வதென்று அறிவித்தார்கள். எத்தனை பெண்கள் தங்களின் கணவர்மாரின் வருகைக்காக எதிர்பார்த்திருந்தவர்கள்...? கடைசியில் ஏமாற்றம் தான். இதெல்லாம் யாரால் நடந்தது? தங்கள் கணவர்கள் வெளியில் வந்து தமக்குச் சுமையாவதைவிட தடுப்பில் இருக்கட்டுமென்றதே பல பெண்களின் விருப்பமாகவுள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம ? நீங்கள் தான். புலம்பெயர்ந்து எங்களைப் பலிக்கு விட்டுவிட்டுப் போராட்டம் நடத்தினீர்கள். உங்கள் பொழுது போக அமைப்புகளை நிறுவி விடுமுறை நாட்களைக் கொண்டாடும் இடமாக ஊர்வலம் போகிறீர்கள்.

உலகம் எங்களை அழிக்காமல் எங்களையும் வாழ வைக்க எப்போது நீங்கள் அரசியல் செய்தீர்கள். இளையோரை எழுபதாம் ஆண்டு அரசியல்வாதிகள் உசுப்பிவிட்டு ஆயுதம் ஏந்த வைத்தார்கள். இன்றும் அதே பாணிதான் அதே வாய்வீரம் தான் எதுவும் எங்களுக்கென்று இல்லை. நாங்கள் ஊனங்களானதும் உயிர்களை இழந்ததும் தான் கண்ட மிச்சம்.

வேலை தருகிறோம் என்று பலர் கொழும்புக்கு அழைத்து செல்கிறார்கள். அது எது என்று பார்த்தால் விபச்சார விடுதிகள் ஆக உள்ளது. இவற்றைச் செய்வது கூட தமிழ் ஆடவர்கள் தான்.

இப்போது உதவி என்று சொல்லிக் கொண்டு கொஞ்சப்பேர் விபரம் திரட்டுகிறார்கள். எங்கு திரும்பினாலும் 'நம்பிக்கை ஒளி' தான். யாரை நம்புவது. விபரங்கள் திரட்டுகிறார்கள். உதவி செய்யிறம் செய்யிறம் என்று ஒருத்தன் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறான். ஒருத்தன் உதவி கேட்டு வரும் பெண்களை தன்னுடன் வா வந்தால் உதவி செய்யிறன் என்று கூறுகிறான் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நம்பிக்கை ஒளியின் சின்னம் தயாளன்.. இன்னுமொருவன்; உங்களுக்கு மாதம் மாதம் 20000 ரூபா கிடைக்க கூடிய வகையில் கதைத்திருக்கிறேன் நீங்கள் எனக்கு தொலைபேசிக்கு றிலோட் போட்டு விடுங்கோ. காசு கிடைத்தவுடன் 7000 ரூபா தர வேணும் நான் உங்களுக்கு கதைத்து ஒழுங்கு செய்ததிற்கு என்று கேட்கிறான் வவுனியா நெடுங்கேணியில் இருக்கும் சூரி என்று அழைக்கப்படும் நம்பிக்கை ஒளியின் இன்னுமொரு நபர் இவர். 'நம்பிக்கை ஒளி' யின் நம்பிக்கை இதுவா? நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் பணியாளர்களாக இங்கு இருக்கிற பாதிப்பேரின் இலட்சணம் இதுதான். பணியாளர்கள் என்ற பெயரில் மோசமான சமூகச் சீர்கேடுகளுக்கு பெண்களை இட்டுச் செல்லும் வேலையைத் தான் செய்கிறார்கள்.

அடுத்து விழுதுகள் என்று ஒரு பகுதி உதவி புரிகிறார்கள். தீபன் தமிழ்மறவன் என்பவர்கள் ஊடாக... இவர்கள் பார்வையிழந்தவர்கள். புதிய வாகனம் சொந்தமாக எடுத்து இரு குடும்பமும் மட்டக்களப்பு கண்டி என்று சுற்றுலா செல்கிறார்கள். இது தான் விழுதுகள். அவுஸ்ரேலியாவில் இருந்து இன்னொரு குழு காண்டீபன் என்பவர் ஊடாக யாழ்ப்பாணத்தில் இவர்கள் உதவி புரிந்தார்கள். இவரும் ஒரு பெண் பைத்தியக்காரன். இவர்கள் யாரோ அனுப்பும் பணத்தை வைத்தே உடல் சுகத்தை அனுபவிக்கிறாங்கள். இவ்வாறு நீங்கள் உதவி புரியும் போது எப்படி ஒருவன் சுய தொழிலை முன்னெடுத்து வாழ்க்கையை கொண்டு நடத்துவது.

உங்கள் உதவிகள் சரியாக எங்களுக்குக் கிடைக்கிறதா என்பதனை முதலில் சரிபாருங்கள். உதவிகள் சிதறாமல் எல்லாரும் ஒற்றைமையாக இணைந்து உதவி புரிவீர்களாக இருந்தால் எத்தனை பேரை வளர்த்திடலாம். எத்தனை பேருக்கு நிம்மதி கிடைக்கும்.

உண்மையிலே இப்போ எங்கள் மக்கள் நன்றாகவே உழைக்கிறார்கள். எப்படியென்று கேட்கிறீர்கள ? எங்கள் மக்களே எங்கள் மக்களை ஏமாற்றியும் உதவி செய்கிறோம் என்று வெளிநாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்திப் பொய்யான பெயர்கள் சொல்லியும் ஏஐன்ட் வேலை செய்தும், சமுகச்சீரழிவுச் செயல்களிலும் இறங்கிப் பிழைக்கிறார்கள். இது உங்களுக்கு தெரியுமா? இதற்கும் கூட நீங்களும் தான் காரணமாக இருக்கிறீங்கள். உங்கட பணம் தான் செலவாகிறது. உண்மையிலே உழைத்து மக்களுக்காக நீங்கள் அனுப்பும் பணத்தை இங்கு பலர் தாங்கள் வாழவே பயன்படுத்துகிறார்கள்.

(பைரவி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com