Contact us at: sooddram@gmail.com

 

ரட்ணஜீவன் கூலும், தோல்வியில் முடிவடைந்த அவரது கனவும்  (பகுதி 5)

(ரகுமானஜான்)

முதவாது அரசியல் தவறானது கல்விக்கு கொடுத்த அதீத முக்கியத்துவத்துடன் தொடங்குகிறது. இரண்டாவது தவறானது நல்ல, நேர்மையான, நிர்வாக திறமைமிக்கவரையாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிப்பதன் மூலமாக சில முக்கியமான மாற்றங்களை கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. மூன்றாவது தவறானது மகிந்த ராஜபக்சவும், டக்லஸ் தேவானந்தாவும் ஒரு சரியான சக்தி யாழ் பல்கலைக் கழகத்திற்கு தலைமை கொடுப்தை, அதன் மூலமாக தமிழ் மக்களுக்கு சரியான கல்வி வழங்கப்படுவதை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. அடுத்த தவறானது, இப்படிப்பட்ட பழம் விழுங்கி கொட்டைபோட்டவர்களுக்கு மத்தியில் எம்மில் சிலர் காய்களை திறமையாக நகர்த்துவதன் மூலாமாக, அவர்களையும் விஞ்சி நாம் எமது சமுதாயத்திற்கு நன்மை பயப்பவையாக கருதும் சிலவற்றை சாதித்துவிடலாம் என்ற எமது அசட்டுத்தனத்தில் அடங்கியிருக்கிறது. 

சரி, இப்போது இந்த முயற்சியில் நாம் கொடுத்த விலை என்ன? என்ற கேள்விக்கு விடைகாண முயல்வோம். இனப்படுகொலை நடைபெற்று ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் நாம் மகிந்த அரசை பகைக்காமல்தான் இதனை சாதிக்க முடியம் என்ற எடுகோளுடன் காரியமாற்றத் தொடங்குகிறோம். அடுத்தாக டக்லசை மகிழ்விக்கும் நோக்கில் சில வஞ்சகப் புகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர் ஆரம்பத்திலிருந்தே புலிகள் போலத்தான் தனது நிர்வாகத்தை நடந்திக் கொண்டிருப்பவர். புலிகளுக்கு சற்றும் குறையாத போர்க்குற்றங்களைப் புரிந்திருப்பவர். அவரை நல்லவர்: தமிழ் மக்களுக்கு சேவை செய்பவர் என்று பாராட்டுகிறோம். அடுத்ததாக மகிந்தாவை கூல் தம்பதியினர் சந்தித்து ஆசி வாங்கிக்கொண்டுதான் களத்தில் குதிக்கிறார்கள். டக்லசுடனான சந்திப்பு தொடர்கிறது. இந்த இடைக்காலத்தில் டக்லஸ் பற்றிய புகழ்பாடல், மகிந்தாவுக்கு எதிராக ஒக்ஸ்போர்ட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கண்டனம்: இப்படியாக ஒரு அரசியல் விபச்சாரமே கூலினால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இப்போதுதானஇவரடக்லசினதஅடாவடித்தனங்களகண்டகொண்டதபோல பாசாங்கசெய்யுமபோதஇவரிடமஇருப்பதாக கூறப்பட்ட நேர்மஎன்பதுமகேள்விக்குரியாகிவிட்டது. கூல் இப்படியாக அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தன்மானம் இன்றி பணிந்து போவது இதுதான் முதல் தடவை என்பதும் இல்லை. முன்பு 2006 இல் இதே பதவிக்காக புலிகளுடனும், டக்லசுடனும் இதேவிதமாக பேரம் பேசியவர் இவர்.

இப்போது ஒரு கேள்வி எழுகிறது. ஒருவேளை இவர் இந்த பதவியைப் பெறுவதில் வெற்றி பெற்றிருந்தாலுங்கூட, இப்படி அதிகாரத்தில் இருப்பவர்களால் பிச்சையாக போடப்பட்ட பதவியின் மூலமாக இவரால் நேர்மையாக பணியாற்றியிருக்க முடியுமா? அதிகாரத்தில் உள்ளவர்கள் வழங்கும் சிபாரிசுகளை மீறி இவரால் முக்கிய நியமனங்களை செய்திருக்க முடியுமா? முடியாது என்றால் அதுதானே ஊழலின் தொடக்க புள்ளியாக அமைகிறது. மேலும் இவர் தனது பதவியை தக்கவைப்பதற்காக அடுத்த ஐந்து வருடங்களில் எந்தளவிற்க இவர் இறங்கிப் போயிருக்க நேர்ந்திருக்கும் என்பதை எம்மால் கற்பனை செய்துபார்க்க முடியாதா? அடுத்ததாக சமூக அளவில் பலவிதமான பிற்போக்கு கருத்துக்களைக் கொண்ட இவரால் தமிழ் சமூகத்தை, அது இன்று முகம் கொடுக்கும் அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் விதத்தில் யாழ் பல்கலைக்கழக சமூகத்தை எவ்வளவு தூரம் இவரால் வழிநடத்தியிருக்க முடிந்திருக்கும் என்பது அடுத்த மிகவும் முக்கியமான கேள்வியாகும். இதில் மிகவும் சோகமான விடயம் என்னவென்றால், கூல் உட்பட பல தமிழ் புத்திஜீவிகளது கனவானது யாழ் பல்கலைக்கழசத்தை தாண்டிச் செல்ல முடியாமல் தவிப்பதுதான். கடந்த காலத்தில் ஐரோப்பாவில் மிக முக்கியமான தத்துவஞானிகளாக கருதப்பட்ட பலரும் தமது அறிவுத்துறை சுதந்திரத்தை பேணுவதற்காகவே பல்கலைக்கழக நியமணங்களை ஏற்க மறுத்தார்கள். இன்னும் சிலரோ, தமது கொள்கைக்காக தமக்கு நியாயமாக கிடைத்தாக வேண்டிய பதவிகளை இழக்க நேரிட்டது. இப்படிப்பட்ட துணிச்சலான புத்திஜீவிகளை நாம் பெறும்மட்டும் எமது சமூகத்தின் அறிவுத்துறை வளர்ச்சியானது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதாகவே தன்னை மட்டுப்படுத்திக் கொள்வது தவிர்க்க முடியாததாக அமைந்திருக்கும். இப்படிப்பட்ட ஒரு துணிச்சலை இந்த நிகழ்வுகளின் போது யாரிடமும் காணமுடியாமல் போனது எமது சமூகத்தின் அறிவுத்துறையின் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.  

இந்த முயற்சியில் ஈடுபட்ட பலரதும் அக்கறையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த முயற்சியானது முன்னர் குறிப்பிட்டவாறு தவறான அரசியல் தொடங்கப்படுவதால் நாம் எதிர்பார்த்த நோக்கங்களை எட்ட முடியாமல் போனதுடன், இடைக்காலத்தில் இன்னும் பல அரசியல் தவறுகளை இளைப்பதிலும் போய்முடிகிறது. யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை சீர்படுத்துவது நீங்கள் குறிப்பிடும் அளவிற்கு முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தத்தாக இல்லாவிட்டாலுங்கூட - ஒரு குறிப்பிட்ட அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த்துதான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இந்த சீர்படுத்தலானது கீழிருந்து தொடங்கப்பட வேண்டியதொன்றாகும். மாணவர்களை அரசியல் சக்திகளின் எடுபிடியாக இருப்பதில் இருந்து விடுவிப்பதிலிருந்து இது தொடங்கப்பட வேண்டியதொன்றாகும். மாணவரை அறிவொளியூட்டி, அமைப்பாக்குவதுடன், அதற்கு துணையாக நாம் செயற்படுவதுடன் தொடங்கப்பட வேண்டியதாகும். இதற்கு மாறாக, இந்த நிலைமைக்கு காரணமானவர்களைக் கொண்டே, அவர்களது முதுகிற்கு பின்னாலேயே இதனை செய்து முடித்துவிடலாம் என்று கருதுவது எமது குட்டிமுதலாளிய கனவேயாகும். அத்துடன் இந்த விதமான சாகசவாதங்கள் தமிழ் மக்களது அரசியலை நீண்டகாலத்தில் பாதிக்கக்கூடியதாகும் என்பதால் ஒரு சமுதாயத்தில் அரசியலை விலையாகக் கொடுத்து இப்படிப்பட்ட சிறிய சீர்திருத்தங்களை செய்ய முனைவதை தவிர்பதே தமிழ் மக்களது நீண்டகால அரசியல் நலன்களுக்கு நல்லது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com