Contact us at: sooddram@gmail.com

 

குறியீடுகளின் புனிதம் முன்வைக்கும் அரசியலும் புலிக்கொடியும்

(சபா நாவலன்)

'தேசியம் அடையாளம் குறித்த புனினதமான விம்பங்களைக் கட்டமைத்து அவற்றை தங்கள் நலனுக்கான மூலதனமாக்கிக் கொள்கிறார்கள்' – லண்டனில் அருந்ததி ராய்.

21 ம் நூற்றாண்டின் அழிவு அரசியல் என்பது இவ்வாறான 'புனிதமான' அடையாளங்களை அடிப்படையாக முன்வைத்து உருவாகியிருக்கின்றது. அடையாளங்களை உருவாக்கும் செயன்முறை என்பது அனேகமாக அனைத்துத் தளத்திலும் சில படிமுறைகளைக் கடந்து செல்கின்றது. குறிப்பாக இனக் குழுக்களும்இ மக்கள் பிரிவுகளும்இ மதப் பிரிவுகளும் அழிவுக்குரிய அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைத்து இந்த அடையாளங்களை உருவகப்படுத்திக் கொள்கின்றனர்.

தாம் ஏனையோரிலும் மேலானவர்கள் இதனால் தனித்துவமானவர்கள் இதனால் புனிதமானவர்கள் என்ற தொடர்ச்சியான படிநிலைகளூடாக வளர்க்கப்படும் சிந்தனை இறுதியில் ஒரு அடையளத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த அடையளம் என்பது பின்னதக விமர்சிக்கப்பட முடியாததாகவும்இ வழிபாட்டிற்குரிய புனிதத்தன்மை வாய்ந்ததாகவும் கடமைக்கப்படுகின்றது. இறுதியில் இந்தப் அடையாளம் குறித்த புனிதத்தை சந்தர்ப்ப வாதிகளும்இ அரசியல் வியாபாரிகளும்இ மிக இலகுவில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அடையாளம் என்பது பல சந்தர்ப்பங்களில் சின்னங்கள்இ தனிமனிதர்கள் அவை கட்டமைக்க முனையும் விம்பங்கள் ஆகியவற்றோடு தொடர்புடயது.

இந்த அடையாளம் குறித்த புனிதம் ஹிட்லர் காலத்தில் பல அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஜேர்மனிய மக்களின் மிகப் பெரும்பான்மையினர் ஹிட்லரின் கொடிஇ சின்னம்இ வணக்கம் செலுத்தும் முறைமை ஆகிய 'புனித்தை' வழிபடும் நிலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். இந்த அடையாளத்தின் பின்னணியில் தாம் மேலானவர்கள்இ உயரிய ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் போன்ற மக்கள் விரோத அரசியல் சிந்தனை உருவாக்கப்பட்டிருந்தது. ஹிட்லர் தலைமையில் புனையப்பட்ட இந்தச் சிந்தனையை மூலதனமாக்கி மக்களை அழித்தொழித்த வரலாற்றை உலகம் இன்னமும் முற்றாக மறக்கவில்லை.

இந்து தத்துவா என்ற அடையாளமும் இதே பண்புகளைக் கொண்டிருந்ததுஇ இந்துக்கள் புனிதமானவர்கள். ஏனையோர் குறிப்பாக இஸ்லாமியர்கள் தமது எதிரிகள் என்பது இவர்களின் மக்கள் விரோதக் கருத்தாக அமைந்தது. இந்து அடையாளம் குஜராத்தில் 2000 அப்பாவி முஸ்லீம்களைச் சாகடித்திருக்கிறது. இந்தியா முழுவதும் பார்பனீய அதிகாரத்தின் காவலனாக அமைந்திருக்கிறது. இவர்கள் காவியுடைஇ இந்துத்துச் சின்னம்இ இராமரின் புனித பூமி போன்ற பல்வேறு அடையாளங்களை முன்வைக்கின்றனர்.

இதன் இன்னொரு அடையாள உருவாக்கம் தான் இலங்கைத் தீவை பிணக் காடாக மாற்றிய சிங்கள பௌத்தம் குறித்த புனித அடையாளம். பௌத்த மதத்தின் நவீன காலக் காவலராக இன்றுவரை போற்றப்படும் அனகாரிக தர்மபால என்பவர் கூறுகிறர் 'இலங்கை என்ற அழகான தீவு பௌத்தர்களின் புனிதம் நிறைந்த நிலம். இங்கு வாழும் ஏனைய இனங்கள் சிங்கள பௌத்தர்களின் புனிதப்பணிக்கு ஆதரவு நல்க வேண்டும். ஏனைய இனங்களைப் போலன்றி சிங்கள பௌத்தர்கள் ஆரிய இன அடையாளத்தைக் கொண்டவர்கள்' என்று ஆரம்பித்த அனகாரிக்க தர்மபாலவின் கருத்தாக்கம் சிங்கள பௌத்தக் கொடிஇ புனிதம் நிறைந்த பௌத்த விகாரைகள் போன்றவற்றை உருவாக்கிக் கொண்டது. இந்த அடையாளங்களை தமது மூலதனமாக்கிக் கொண்ட அரசியல் வியாபாரிகள் நடத்துகின்ற அருவருப்பான வியாபாரம் தான் 60 ஆண்டுகள் இடைவெளியின்றி நிகழ்த்தப்படுகின்ற இனபடுகொலைகளின் சித்தாந்தப் பின்னணி.

இவர்களின் எதிரிகள் தமிழ்ப் பேசும் சிறுபான்மை மக்கள்.

இவை அனைத்தையும் போன்றே முப்பது வருட பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டத்தின் இன்னொரு விளைவாக நாம் எம்மைச் சுற்றிக் கட்டமைத்துக் கொள்கின்ற அடையாளம் குறித்த புனிதமும் அவற்றின் அரசியல் அழிவும். இன்று கிழக்கு லண்டனில் 'தமிழ்ப் பேசும் மக்களின் சொத்தான புனித தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் பங்காற்றுமாறு' தமிழ் இளைஞர்கள் அமைப்ப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கான கட்டணம் £10 என்று வேறு குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்குறித்த அழிவுகளை ஏற்படுத்தும் அடையாளம் குறித்த புனித்தை உருவாக்கி அதனை மூலதனமாக்கும் செயற்பாட்டின் ஒரு குறியீடே இந்த நிகழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு புனிதத்தை முன்வைத்து உருவாக்கப்படும் அடையாளங்களை எந்த சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளும் பயன்படுத்திக்கொள்ளும் அபாயகரமான நிலையை நாம் காண்கின்றோம். குறிப்பாக புலிக் கொடி என்ற 'புனித' குறியீட்டை கே.பி போன்ற அரச முகவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் அவரின் எதிர்த் தரப்பும் பயன்படுத்திக்கொள்ளாலாம். ஆகஇ அதன் பின்னணியிலுள்ள அரசியல் இங்கு முன்னிறுத்தப்படுவதில்லை.

புனித அடையாளங்களை உருவாக்கிஇ அதன் மாயைக்குள் அப்பாவி மக்களை அடிமைப்படுத்தி அவற்றை மூலதனமாக்கிக் கொள்கின்ற செயற்பாட்டை அடையாளம் காண்பதும் அதற்கு மாற்றன ஜனநாயக முற்போக்கு சக்திகளின் ஒன்றிணைவும் இன்று அவசியமான அரசியற் செயற்பாடாக மாற்றமடைந்துள்ளது.

தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஜனநாயக முற்போக்கு சக்திகளின் பங்களிப்பைக் கோரிநிற்கின்றது. சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகளின் குறுகிய அரசியல் நலன்களுக்கு எதிரான போராட்டம் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com