Contact us at: sooddram@gmail.com

 

ஒரு அகதியின் கடுதாசி

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். அதை நிரூபிப்பதுபோல் அண்மையில் தேனாய் ஒரு சேதி நம் காதுகளில் வந்து ஊறியது.

'போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வாழ்வின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப உதவிக்கரம் நீட்டுகிறது ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழக இலண்டன் கிளை. அதற்காக தற்போது ஒரு கிரிக்கெற் சுற்றுப்போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது.

இது தான் அந்த செய்தி.....

இலங்கைத் தீவில் பல மாண்புள்ளோரை உருவாக்கிய யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் விளையாட்டுக்கழகம் தான் ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் என நாம் அறிந்தோம். அத்தகைய ஒரு விளையாட்டுக் கழகத்தின் இலண்டன் கிளை நமக்கெல்லாம் உதவிடப் போகிறது என்றும் இத்தகைய பல உதவிகளை ஏற்கனவே செய்திருக்கிறது என்றும் கூறக்கேட்ட நாம் உண்மையில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன் சிலிர்த்து எழுந்தோம்.

ஓ.... நாம் என்றால் யாரெண்டு அறமுகப்படுத்த மறந்து விட்டோம்.

எமது மண்ணில் நடந்த கொடூரப் போரினால் உறவிழந்து, ஊனமுற்று, இடம்பெயர்ந்து, பொருளிழந்து வெற்று மனிதராய், உளம் நொந்த அனாதைகளாய், இனி இழப்பதற்கு உயிரை மட்டுமே கொண்டவராய், ஓடு கழன்ற ஆமைகளாய் எமது வெறுமையாக்கப்பட்ட நிலத்திலே வேலி கூடப்போட முடியாதவராய் வானத்திலிருந்து தேவர்களை எதிர்பார்த்து அண்ணாந்து காத்திருக்கும் அகதிகள் நாங்கள்.

எங்கள் மண்ணில் மீண்டும் குடியேறினாலும், வெயிலுக்கும் மழைக்கும் ஈடு கொடுக்கப் போராடும் நாங்கள் இன்றும் அகதிகள் தானே!

இல்லை வேறேதும் சொற்பமிருந்தால் சொல்லுங்கள் உறவுகளே!

வாழ்க்கை பற்றிய நம்பிக்கையினத்துடனும், எமது இளம் சந்ததியாகி எதிர்காலம் குறித்த அச்சத்துடனும் இருந்த எமக்கு ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழக இலண்டன் கிளையின் 'கர்ண' கொடை நோக்கம் கேள்விப்பட்டதும் நம்பிக்கை ஒளிக்கீற்று தோன்றியது!

நாம் அநாதைகள் அல்லர் எனக் கூவிடத் தோன்றிற்று!

இனியும் அகதிகள் அல்ல என எக்காளமிடத் தூண்டிற்று!

'எழுந்து நிற்போம் மீண்டும்' என மார் தட்டிட எத்தனித்தது!

ஏனெனில் 'யாழ் இந்துவின் மைந்தர் அல்லவா? பேருக்குக் கிள்ளித் தெளிக்காமல் அள்ளித் தந்து கரம் பற்றி தூக்கி விடுவார்கள் எங்கள் இரத்த சொந்தங்கள்' என மலர்வுடன் ஒருவரை ஒருவர் பாத்துக் கொண்டோம். எமது உதடுகளில் பல வருடங்களின் பின் மெய்யான புன்னகை எம்மை அறியாமலே பிரசவித்தது.

நன்றி உணர்வின் உந்துதலால் உங்களைப் பற்றியும், உங்கள் செயற்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்ள முயன்றோம். ஏற்கனவே உங்கள் உதவிகள் சென்றடைந்தவர்களின் பிரகாசமான வாழ்க்கையைப் பார்க்க வன்னிப்பிரதேசம் எங்கும் தேடிச் சென்றோம்.

ஏனெனில் இனி எமக்கு கிடைக்கப்போகும் வாழ்வின் செழிப்பை நேரில் அறியும் ஆவல்... இது மனித மனத்தின் இயல்பு தானே.

பெரிய பிரித்தானியாவிலுள்ள எமது உறவுகள் ஊடாக உங்களைத் தேடினோம்....

வன்னியின் செம்மண் புழுதிகளிடையே உங்கள் உதவிகளைத் தேடினோம்.....

தேடினோம்..... தேடினோம்......

தேடலின் முடிவு......?

அட நாசமறுப்பாரே......!

என்ன இது ஏமாற்றம்..... நமது அரசியல் தலைவர்கள் உங்களிடம் தோற்றார்கள் போங்கள்....

போர்ப்பிராந்தியத்தில் 'செல்' குண்டுகள் வெடித்த போதும் தீயின் செந்தழல்களிடையே வெந்த போதும் ஏற்படாத நரக வலியை இந்த ஏமாற்றம் எமக்குத் தந்தது.

அன்றும் இன்றும் போரில் ஈடுபட்டவர்களின் சுமைகளையும், தவறுகளின் விளைவுகளையும் தோள்களில் சுமப்பவர்கள் நாமே!

இன்றும் எங்களிடம் எதைக் கேட்கப் போகிறீர்கள். எங்கள் கோவணங்களைக் கட்டும் 'அரைஞாண்' கொடிகளை விற்றா உங்களது சுகபோக வாழ்க்கை நடாத்தப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியத்தின் பெயரால் சகலவற்றையும் நாம் இழந்தோம். அதே தேசியத்தின் பெயரில் நீங்கள் கொள்ளையடிப்பது என்ன நியாயம்....?

ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் இலண்டன் கிளையானது முறையாக நிறுவனமயப்படுத்தப்படாமல் தான்தோன்றித்தனமாக கைவிரல்களின் எண்ணிக்கைகளுள் அடங்கும் உறுப்பினர்களைக் கொண்ட சிறு குழு என்பதை அறிந்தோம். உங்கள் விட்டேற்றித்தனமான உள் நடவடிக்கைகளையும் அறிந்தோம்.

தேசியம் பேசிப்பேசி நீங்கள் ஏற்கனவே இவ்வாறான பல நிகழ்வுகளை நடாத்தியதையும் அறிந்தோம். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவிகள் செய்ததாக நீங்கள் இலண்டன் மாநகரமெங்கும் எமது உறவுகளுக்குப் பிரச்சாரம் செய்ததையும் நாம் அறிந்தோம்.

பிணங்கள் உரமான வன்னி மண்ணிலே கொளுத்தும் வெயிலிலே திரிந்து செல்லும் இடமெல்லாம் அங்கங்கே உயிர் துறந்த எங்கள் சொந்தங்களை நினைவுகூர்ந்தபடி அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் எல்லாம் தொடர்பு கொண்டு கேட்டபோது தான் நீங்கள் டீ.ஆ.று கார்களில் சொகுசு சவாரி செய்வதன் நதிமூலம் தெரிந்தது.

எங்கள் சொந்தங்களிடம் எமக்கு உதவுவதற்காக எனச் சொல்லி நீங்கள் சேகரித்தவை எல்லாம் உங்களுக்குள்ளே சுற்றிச் சுழல்வதையும் நாம் அறிந்து கொண்டோம்.

இதனால் தானா நீங்கள் கடந்த ஐந்து வருடங்களா  வரவ செலவுக் கணக்குகளை பகிரங்கமாக்காமல் வைத்திருக்கிறீங்கள்.....?

'வரவும் உங்களுக்கே! செலவும் உங்களுக்கானதே!' என்ற புதிய தமிழ்த்தேசியம் தான் உங்களது தாரக மந்திரம் என நாம் நன்றாக அறிந்து கொண்டோம்.

எங்கள் பிணங்கள் மீதா உங்கள் மாடமாளிகைகள் கட்டப்பட வேண்டும்.....?

எங்கள் குருதிகள் தானா உங்கள் வாகனங்களின் எரிபொருட்களாக வேண்டும்....?

நாங்கள் உயிரைச்சிந்தி, உயிரைச்சிந்தி குற்றுயிராய்க் கிடப்பதைக் காட்டி நீங்கள் பியரைச்சிந்தி  ியரைச்சிந்தி நைட் கிளப்புகளில் ஆட்டம் போடுகிறீர்கள்.

நீங்கள் அங்கே இனவாதம் பேசி எமது உறவுகளை உணர்ச்சிவசப்படுத்தி எமக்கென காசு பெறுகின்றீர்கள்.

தமிழ்த்தேசியம் பேசிப்பேசி அவர்களை எழுச்சி பெறச் செய்து பணத்தைப் பறித்து அதில் குபேர வாழ்க்கை வாழ்கின்றீர்கள். அந்தப் பணத்தில் இலங்கை வந்து இராணுவ அதிகாரிகளுக்கு 'ஐபோன்' வாங்கிக் கொடுத்து இன விபச்சாரம் செய்கிறீர்கள். சிங்களப் பேரினவாதிகளுக்கு சாமரம் வீசி போதை மருந்து ஏற்றுகின்றீர்கள். 

போலித்தமிழ் தேசிய வாதிகளே!

உங்கள் முகமூடிகள் இங்கு கழன்று விட்டன. இங்கும் உரியப் போகின்றன. பகிரங்கத்தில், அம்பலத்தில் நிர்வாணமாக நிற்கப்போகிறீர்கள்.

உங்கள் கரங்களில் எங்களின் இரத்த வெடில் அடிக்கிறதே. முகரவில்லையா....?

உங்கள் பல்லிடுக்கில் எங்களின் சதைத்துண்டங்கள் சிந்திக் கிடக்கின்றனவே. உறுத்தவில்லையா.....?

அன்றும் அங்கிருந்து தேசியம் பேசியவர்கள் எங்கள் உயிரையும், குருதியையும் குடித்தனர்.

இன்றும் நீங்கள் எங்கள் வாழ்வைக் குடிக்க நினைக்கின்றீர்கள். நீங்கள் கூத்தாட்டம் போடப் பயன்படும் பணம் எங்கள் பணம்.

நீங்கள் 'ஸ்லோமோசனில்' மிதக்கப் பயன்படும் செல்வம் எங்கள் செல்வம்.

குதியன் குத்தும் குத்தியன்களே!

பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்காக இந்தக் 'கடுதாசி'யை எழுதும் நான் இன்னொரு பரிமாணத்தையும் கொண்டிருக்கின்றேன்.

நானும் யாழ்ஃஇந்துக் கல்லூரியின் பழைய மாணவன். அந்தத் தாயின் செல்வப் புதல்வன். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது தாயின் மடியைக் கொச்சப்படுத்த....

உங்களுக்கு ஒரு ஆலோசனை கூறுகின்றேன். இனியும் யாழ்ஃஇந்துத் தாயைக் கேவலப்படுத்தாமல் விபச்சார விடுதி நடாத்துங்கள். அது இதைவிட தூய்மையானது.

நீங்கள் அனைவரும் 'புருடா' விடுவதில் மன்னர்கள் தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து விடுகின்றீர்கள். அதுதான் லேட்டஸ் புருடா. வன்னியில் புற்றுநோய் வைத்தியசாலை கட்டப் போவதாக விடும் பெரும் புருடா. இது இனி இங்கு வேகாத பருப்பு. இனி ஏமாற நாம் தயாராக இல்லை.

ஆனால் ஒரு விடயத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டுகின்றேன். வன்னியில் புற்றுநோயால் இறப்பை எதிர்நோக்கி இருப்பவர்களை விட பல்லாயிரம் மடங்காக உரிய வாழ்வியல் உதவிகன் இன்றி இறக்கும் நிலையில் பல இலட்சம் மக்கள் இருக்கிறார்கள்.

அவர்களது வாழ்க்கைக்கான ஆதாரங்களை முதலில் செய்து முடித்த பின் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றை உருவாக்கலாம்.

உங்களுக்குத்தான் பிரச்சனையே இல்லையே. சுண்டிக் காட்டினாலே எமது உறவுகள் அள்ளிக் கொடுக்குமே.

ஐ.நா.நிபுணர்குழுவின  அறிக்கையைப் பார்த்தீர்கள் தானே. சனல்- 4 விவரணப்படத்தையும் பார்த்தீர்கள் தானே. இதோ இப்போது குறித்துக் கொள்ளுங்கள். இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மட்டுமல்ல போர்க்குற்றவாளிகள்.

எங்கள் நாறிய பிணங்களைத் தின்னும் நீங்களும் போர்க்குற்றவாளிகள் தான் என்பதை இன்னுமொரு அறிக்கை விரைவில் சொல்லும்.

இத்தனைக்கும் மத்தியில் என்னை மகிழ்ச்சிப்படுத்தும் நிகழ்வுகளும் அங்கு நடைபெறுவதை அறிய முடிகிறது. உண்மையான யாழ் இந்துவின் மைந்தர்களின் புதல்வர்கள் தாங்கள் நடாத்தும் இந்தக் காவாலித்தனமான சுற்றுப் போட்டியில் பங்கேற்பதில்லை என்று அறியும் போது உண்மையில் பெருமையாக இருக்கிறது. யாழ்ஃஇந்துத் தாயும் புளகாங்கிதமடைவாள் என்பது திண்ணம்.

எழுத எழுத பக்கங்கள் விரிகின்றன. எனது கையில் வேறு தாள்கள் இல்லை. வாங்கவும் காசில்லை. எனவே எனது 'கடுதாசி'யை இத்துடன் முடிக்கிறேன். காசு கிடைத்ததும் தாள் வாங்கி தொடர்ந்து எழுதுவேன்.

இவ்வண்ணம்

எவரையும் விற்றுப் பிழைக்காத

உண்மையான அகதி.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com