Contact us at: sooddram@gmail.com

 

பட்டறிவினால் பகுத்தறியும் கிழக்குமக்களின் மாகாண தேர்தல் 

(படுவான்கரையான் )

இலங்கையின் வரலாற்று காலம்தொட்டு கிழக்குமாகாணமானது பொருரளாதாரம் அரசியல் வரலாற்றில் ஒரு தேசிய நோக்கோடு ஒருமித்த இலங்கைத்திருநாட்டின் அபிவிருத்தியில் தன்பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. கமத்தொழில், கடற் தொழில், உல்லாசப்பயணத்துறை மற்றும் சிறுகைத்தொழில்களுடன் காகிதஆலையும் கிழக்கின் வளத்தை மெருகூட்டின. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பல கிராமியகளியாட்ட நிகழ்வுகளுடன் தங்களையும் இணைத்து வாழ்ந்து வந்தனர். எங்கும் எப்போதும் சுதந்திரமாக நடமாடவும் தாங்கள் விரும்பியதை எந்தவித தடையுமின்றி செய்து அவர்களது சீவியம் சிறந்ததாக இருந்தது.

1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல் கிழக்கு மக்களின் கண்ணை திறந்த ஒரு தேர்தலாக இருந்ததை யாவரும் அறிந்ததே. அப்பொதுத்தேர்தல் வடக்கு கிழக்கு என்ற இனபேதத்தை துப்பிக்காட்டும் ஒரு தேர்தலாக தமிழ்க்கட்சியின் தலைவர்களால் திட்டமிட்டு தொகுதிகளில் பிரதிநிதிகளை நியமித்து அரங்கேற்றப்பட்டது. இவ்வாறாக அன்றய நாட்களில் கிழக்கு மக்களை அடிமட்ட மடையர்களாக்கி அவர்கள் முதுகில் சவாரி செய்ய நினைத்த பல தமிழ்கட்சிகளின் தலைவர்களுக்கு கிழக்கு மக்கள் நல்லொதொரு பாடம் புகட்டினர். மூதூர்,கற்குடா, மட்டக்களப்பின் இரட்டைதொகுதிகளும், கல்முனை ஆகிய தொகுதிகளிலும் யாழ் தலைமையில் போட்டியிட்ட கிழக்குமக்கள் ஏனைய மாகாணத்தவர்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டாலும் தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் தமிழ்க்கட்சிக்கு வெற்றியீட்டி இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக தமிழர்கூட்டணி எதிர்க்கட்சி அந்தஸ்தத்தை பெறுவதற்கான வாய்ப்பையும் அளித்தனர்.

தமிழ்மக்களின் தேசியத்தையும் பொதுவான தமிழ் மொழிக்கான அதிகாரத்தையும் அதனை பாதுகாக்க வேண்டிய வரலாற்றுக் கடமையிலிருந்தும் கிழக்கு மக்கள் என்றுமே தவறவில்லை என்பதை எடுத்துக்காட்டவே இதனை குறிப்பிடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டு முதலாக நாட்டில் ஏற்பட்ட விடுதலைப்போராட்டமானது. திட்டமிட்டு கிழக்கு மாணவர்களை குறிவைத்தே ஆரம்பிக்கப்பட்டது. கருணா உட்பட பலர் அந்த மாயவலைக்குள் சிக்கி விடுதலை போராட்டத்தில் இணைந்தனர். சுமாh 28 ஆயிரம் கிழக்கிலங்கையைச் சோந்த மாணவர்கள் சகல விடுதலைஇயக்கங்களில் போராளிகளாகி தங்கள் எதிர்காலத்தை பாழுங்கிணற்றில் தள்ளினார்கள்.

989-1992 காலப்பகுதியில் யாழ்மாவட்டத்தில் நடைபெற்ற இராணுவ படைமுகாம்களின் தாக்குதல்களில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த 18 வயதிற்குட்பட்  3500 போராளிகள் முன்னணிப் போராளிகளாக நிறுத்தப்பட்டு உடல் சின்னாபின்னாமாக்கப்பட்டு இராணுவத்தால் அழித்தொழிக்கப்பட்டனர்.இது ஒருபுறமிருக்க இலங்கையின் கல்விதரத்தில் மிகவும் பின்தங்கிய மாகாணமாகவும் பல்கலைக் கழத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் மிகவும் குறைவான மாகாணமாகவும் கிழக்கு இருந்துவந்துள்ளது. மாவட்ட அடிப்படையில் அரசால் வழங்கப்பட்ட கிழக்குமக்களுக்கான வேலைவாய்ப்புகள் பிறமாவட்டத்தினர்களால் திட்டமிட்டு தமதாக்கியும் கிராமசேவகர்கள் பிரிவுகளின் தங்கள் உறவுகளை கொணர்ந்து பதிவு செய்து உள்ழூர் மக்களின் சுயஉரிமைகளை தட்டிப்பறித்தனர். அரசால் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் கிழக்கு மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.

இதன் மூலமாக ஓன்று, ஐந்து, பத்தென்று மிகவும் சொற்ப அளவிலே வருடா வருடம் கிழக்கு மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லத்தொடங்கினர். அதனை பொறுக்காத சகதமிழச்சகோதரர்கள் வடமாகாண த்திலிருந்து தங்கள் மக்களை அழைத்துவந்து இங்கு பரீட்சை எழுதி அந்த வாய்ப்புக்களையும் மறை முகமாக பறித்தெடுத்தே வந்தனர். அதிஸ்டவசமாக அனுமதி கிடைத்து தரப்படுத்தல் மூலம் தெரிவான ஒருசில கிழக்கு மாணவர்கள் யாழ்பல்கலைக்கழகம் சென்ற போதும் அங்கு அவர்களுக்கு ஏற்பட்ட அவலம் அவமானம் என்பன இன்றும் அவர்களின் மனதில் பதிந்துள்ளமை வேதனைக்குரியதாகும். அதுபற்றி எந்ததமிழர்தேசியம் ஒற்றுமைபற்றிப் பேசுபவர்கள் கண்டும்காணதவர்போல் இருந்துவிட்டார்கள்.

கிழக்கில் முதன்முதலாக பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு அங்கு மாணவர்கள் தங்கள் ஊரிலேயே தன்மானத்துடன் உயர் கல்வியை கற்கும் பேறுபெற்றனர். அதற்கு முக்கிய கர்த்தாவாக விளங்கியவர் திரு.கே.டப்ள்யு.தேவநாயகம் அவர்களே. ஆரம்ப கட்டமாக சாதாரண பல்கலைக்கல்லூரியாக அமைக்கப்பட்டபோதும் அதற்கு நமது சகமாகாண உறவுகளால் கொடுக்கப்பட்ட அழுத்தங்களும் எதிர்ப்புகளும் ஏராளாம். சகல எதிர்ப்புகளளும் சாகசமாக வெற்றியாக்கி இன்று ஒரு சிறந்த பல்கழலக்கழகமாக மருத்துவபீடத்துடன் விளங்குவதற்கு கிழக்கு மக்களின் நல்ல மனமே காரணமாகும்.இருந்த போதிலும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது இன்னமும் பின்தங்கிய நிலையிலிருப்பதே வேதனை தருகின்றது.

இந்திய இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கு மாகாணமென ஒன்றாக இருந்து கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணம் என மீண்டும் தனித்தனியான அதிகார மாகாணமாக பிரிக்கப்பட்டபின் நடை பெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆட்சி அமைத்து திரு. சிவநேசதுரை சந்நிரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக ஆட்சி செய்கின்றார். கிழக்குமாகாணத்திற்கான தேர்தல் நடைபெற்று திரு. சிவநேசதுரை சந்நிரகாந்தன் அவர்களால் அதிகாரம் மக்கள் நலன்நோக்கி திருப்ப பட்டது முதல் இன்றுவரைக்கும் அவர்கள் பல தடைகளை தாண்டி பல அபிவிருத்திகளையம் நற்பணி திடங்களையும் குறிப்பாக கல்விசார் துறையில் அபரிவிதமான திட்டங்களையும் நடைமுறைப் படுத்தி வருவது கண்டு கிழக்கு மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். முதலமைச்ரை பரிகாசம் பண்ணிய பலர் அவரது சாணக்கியமான அரசியல் அணுகுமுறை கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றனர்.

வெளிநாட்டுபிரமுகர்களுக்கும் தூதுவர்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்களில் அவர் தெரிவித்த கருத்துக்களைக் கண்டு பலர் அவர் மேல் வைத்திருந்த தவறான கருத்துக்களை மாற்றிக் கொண்டுள்ளனர்;. காலமாற்றமும் நல்லதொரு குடும்பத்திலிருந்து வந்த பின்புலமும் உடனிருந்து ஆலோசனை வழங்கும் சிலராலும் திரு சந்திரகாந்தன் கிழக்கு மண்ணை ஒரு விடிவை நோக்கிய பிரகாசமான வெளிச்சத்திற்கு இட்டுச் செல்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இதில் குறிப்பாக கல்விக் கூடங்கள் அமைத்தல் வாசிகசாலைகள் கட்டுதல் விளையாட்டு மைதானங்கள் விர்pவாக்குதல் குளங்களை திருத்தி புனரமைப்புச் செய்தல் மின்சாரம் வழங்குதல் போன்ற வேலைத் திட்டங்கள் கிழக்கு மண்ணை வளங்கொளிக்கும் ஒரு வளமான எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்லும் செயற்பாடுகளாகும்.

இன்றய காலகட்டத்தில் கிழக்கு மாகாணம் தன் 1980களின் முந்திய கால வரலாற்று நிலைக்கு அபிவிருத்தியில் சிறிது சிறிதாக முன்னேறி வருவது யாவரும் அறிந்ததே. அதற்கான காரணங்கள் பல இருந்தாலும் மிக முக்கிய காரணமாக மாகாண முதலமைச்சரின் பங்கு அபரிவிதமானது. அவரது அன்றாட நிர்வாகத்திறமையும் அரசியல் நகர்வும் அபிவிருத்தித் திட்டங்களை ஒழுங்கமைத்து செயல்படுத்தும் விதமும் பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் பொதுமக்களின் அன்றாட தேவைகளையும் குறைகளையும் நேரில் சென்று அறிந்து தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதும  பலரை வாயில் விரல் வைக்க வைத்துள்ளது. அவரது ஒவ்வொரு நகர்வும் மாகாண வளர்ச்சியை நோக்கி செயல்படும் விதமும் அவரை முதலமைச்சராக பெற்றது கிழக்கு மக்கள் செய்த தவப்பயனே. இவற்றை எல்லாவற்றையும் விட எல்லா இனமக்களையும் அவர்களின் அபிலாசைகளுக்கும் ஏற்க கூடிய அளவில் சேவையாற்றுவதுடன் அவர்களின் மத உரிமையையும் மதித்து அதில் பங்கு கொள்வதும் கண்டு வியந்து நிற்கின்றனர் கிழக்கு மக்கள்.

கிழக்கிலங்கை வரலாற்றில் மட்டக்களப்பில் திரு.வ.நல்iயா, ராஜன் செல்வநாயகம், திரு. கே.டப்ள்யு. தேவநாயகம். திரு.செ..இராசதுரை திரிகோணமலையில் திரு.அ.தங்கத்துரை, போன்றவர்கள் எம்மண் மறவாத பலநற்காரியங்களை தங்கள் பதவிக்காலத்தில் செய்துள்ளனர். இவர்களில் அரசியலிலு; மக்கள் செல்வாக்கிலும் என்றும் மண்ணின்மைந்தனாக உயர்ந்து நிலைத்து நிற்பவர் திரு. இராஜதுரை அவர்கள் மட்டுமே. அவரது அரசியல் சாணக்கியம் தமிழ் மொழி மீதும் மக்கள் மீதும் கொண்டிருந்து பற்றும் பாசமும் மறக்கமுடியாதது. இன்று வரைக்கும் தாங்கள் தான் ஒரு முதிர்ந்த அறிவுடைய அரசியல்வாதியாக இன்று திகழ்வதையிட்டு கிழக்கிலங்கை மண் பெருமைப்படுகின்றது.

இவர் மூலம் வளர்க்கப்பட்ட தமிழக்கட்சி அதன் மூலம் அரசியலுக்கு அறிமுகமானர்கள் பலர். அவர் மூலம் நன்மை பெற்றவர்கள் ஆயிரமாயிரம் பேர். அவர் பெயரைச் சொல்லி வயிறு வளர்த்தவர்கள் இன்னும் பலர். அரசியலுக்கு தற்செயலாக அதிஸ்டவசமாகவோ அல்லது ஏதாவதொரு எதிர்பாரா  ிபத்தின் மூலம் வந்து அதில் தங்கள் ஆயுத செல்வாக்கால் உயர்ந்து  இன்று அவரை பற்றி தவறாக கூறுவதானது கிழக்குமக்களை மேலும் புண்படுத்துவதாகவே அமையும்.மேலும் எமது பிரதேச அரசியல்வாதினகளையும் மக்களையும் மிகவும் அவமதிக்கத்தக்க வகையில் அவர்களை புறக்கணிப்பதும் அவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அவர்களின் கருத்துக்களை கேட்க மறுத்து நடப்பதையும் கிழக்குமண் மிகவும் அவதானமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது.

தமிழர்களின் கட்சியில் மட்டுமன்றி அரசமற்றும் தனியார் பதவிகளிலும் யாழ்மக்களின் எதேச்சதிகார அதிகாரம் கொண்ட தலைமைப்பொறுப்பினையும் கட்டுப்பாட்டையும் தாங்களே வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு அகங்காரம் பல ஆண்டுகளாக தொடர்ந்து இன்றும் அவர்கள் மனதிலும் இரத்தத்திலும் பேச்சிலும் செயல்களிலும் கலந்து தெளிவாக கக்கபடுவதை நாம் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் பாhக்க கூடியதாகவுள்ளது.தொடந்தும் எமது மக்களின் சுய உரிமையிலும் உயர்கல்விக்கான அனுமதி, வேலை வாய்ப்புகள், பதவி உயர்வுகள், பொரளாதார அபகரிப்பு அரசியலிலும் கட்சியிலும் முக்கிய பொறுப்புகளையும் முக்கிய பதவி வழங்க மறுப்பதையும், எதிரி, துரோகி. அறிவற்றவர்கள் என்று மட்டமாக கூறுவதையும், பல்கலைக்கழகம் சென்றாலே ஒரு முக்கிய பதவியில் இருந்தாலோ எம்மக்களை தரக்குறைவாக பேசுவதுடன் உரிய மதிப்பளிப்பதை தடுப்பதையோ நாம் உடைத் தெறிவது நமது மண்ணில் பிறந்த ஒவ்வொருவரது கடமையாகும்.

நாம் நமக்கான கட்சியை உறுதி செய்வோம். அதற்கான தலைமையை தேர்ந்தெடுப்போம். அந்தத் தலைமையின் கீழ் ஒன்று பட்டு எமது மண்ணின் எதிர்கால சகலவளத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாம் ஒன்றுபட்டு உழைப்போமாக.தற்போது கிழக்குமாகாண அரசு கலைக்கப்படுமா? அல்லது அதன் காலம் முடிவடைந்த பின்புதான் தேர்தல் நடைபெறுமா? என்னுகின்ற பல எதிர்பார்ப்புக்கள் கிழக்கு மக்களை மட்டுமன்றி உலகத் தமிழர்களையும் மிகவும் உன்னிப்பாக இன்று பார்க்க வைத்துள்ளதுகடந்த அரைநூற்றாண்டு காலமாக நடைபெற்ற போர்ச் சூழலால் கிழக்குமக்கள் சகலதையும் இழந்து எல்லாராலும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிழக்கிலங்கைத் தமிழர்களின் உயிhகள் சகலவிடுதலை போராட்ட இயக்கங்களாலும் இராணுவத்தாலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ காவு கொள்ளப்பட்டது. அதன் காரணமாக தமிழர் சனத்தொகை சுமார் 2 வீதமளவில் கிழக்கிலே குறைந்துள்ளது. கல்வி பாதிக்கப்பட்டதால் சகல திணைக்களங்களிலும் தலைமைப்பதவிகள் யாவும் கைமாறிப் போய்விட்டதால் நாம் தற்போது கைகட்டி நிற்கின்றோம்.

வயல் நிலங்கள் உபயோகப்படுத்தப்படாமல் தடுக்கப்கபட்டால் இன்று காணி அபகரிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். வைத்தியர்கள் வெளிநாடு சென்றதால் வைத்தியத்திற்காக காத்துக் கிடக்கின்றோம். பலபக்கமும் ஏற்பட்டுள்ள நெருக்குவாரத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். கணவனை இழந்த மனைவியும் தந்தையை இழந்த பிள்ளைகளும் அங்கவீனமாக்கப்பட்ட இனமாக இயலாத்தன்மையுடன் வாழ்க்கையை தள்ளுகின்றோம். இவற்றிற்கெல்லாம் ஒரு விடிவு நமக்கு அவசியம் தேவைப்படுகின்றது. அதற்காக நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நம்முன்னே விரிந்து கிடக்கின்றது. அதை நாம் முறையாகப் பயன்படத்தி வெற்றி கொள்வோம். நமது தலைமையில் நமது கட்சியின் கீழ் நமது ஆளுமையால் நம்மை நாமே ஒழுங்குபடுத்துவோம்.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நமக்கென்று ஒரு கட்சியை உருவாக்கி அதன் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்று திரு.சந்திரகாந்தன் அவர்கள் நடத்தி வருகின்றார்.

நமது பிரதேசத்திலே நான் மேலே குறிப்பிட்ட பலகுறைகளையும் பலவீனத்தையும் தீவிரமாகவும் நிதானத்துடனும் நிவர்த்தி செய்யும் பக்குவப்பட்ட அரசியல் தலைவராக நாம் திரு.சந்திரகாந்தன் அவர்களை காண்கின்றோம். போட்டிகளையும் பொறாமைகளையும் மறந்து தற்போதய மாகாண முதல்வரின் கரங்களை பயன்படுத்தி மீண்டும் அவரையே முதல்வராக்குவோம். நேர்மையும் நற்பண்பும் கொண்ட அரசியல் நிர்வாகத்தை நடத்திவரும் திரு.சி.சந்திரகாந்தன் அவர்களின ஆட்சியின் மூலம்; நம் பொருளாதாரம் கல்வி மற்றும் வாழ்க்கை தரம் நிச்சயம் உயரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதன் மூலம் நம்எதிர்கால சந்ததியரின  நல்வாழ்வினை மேம்படுத்துவோம். இன்றைய மாணவர்களை எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாகவும் அதிகாரிகளாகவும் மாற்றுவோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com