Contact us at: sooddram@gmail.com

 

சூளை மேட்டில் என்ன நடந்தது?

இப்போது ஊடகங்களை இடையிடையே ஆக்கிரமிக்கும் செய்திகளில் சூளைமேட்டுச் சம்பவமும் ஒன்று. சூளை மேட்டுச் சம்பவம் என்றால், என்னவென்றே தெரியாதவர்கள் கூட இந்த செய்திகள் வரும் போது பரபரப்போடு படிக்கிறார்கள். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சூளை மேட்டு படுகொலைச் சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவராகவும், அதை விட மேலாக, அவரே இந்தப் படுகொலையை நடத்தியவராகவும், இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சமுகமளிக்காத காரணத்தால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார், என்றும் சில ஊடகங்கள் சொல்லி வருகின்றன.

இந்நிலையில், சூளை மேட்டில் என்ன நடந்தது என்பதை அன்றைய களத்தில் நின்று பார்த்தவர்களில் ஒருவனாக அதன் உண்மை விளக்கத்தை சகலருக்கும் உணர்த்த விரும்புகிறேன். 1986 ஆம் ஆண்டு அப்போது ஈ.பி.டி.பி என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தோன்றியிருக்கவில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப் என்று அழைக்கப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகவும், அதன் மத்திய குழுவின் உயர் அரசியல் பீட உறுப்பினர்களில் ஒருவராகவும், அதன் பிரதான படைத்தளபதியாகவும் இருந்தார்.

ஆனாலும், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்குள் அப்போது உள் முரண்பாடுகள் நிலவியிருந்தன. அந்த அமைப்பின் மத்திய குழுவிற்கும், பிராந்திய குழுக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் முற்றி, வெடித்து உச்ச நிலையில் இருந்தன.

பிராந்தியக் குழுக்களின் பக்கம் சில மத்தியகுழு உறுப்பினர்கள் நின்றிருந்தார்கள். அதில் டக்ளஸ் தேவானந்தா முதன்மையானவர். அப்போது இந்திய மத்திய அரசுடன் பேசுவதற்காகவும், கட்சியின் உள் முரண்பாடுகளை பேசித் தீர்ப்பதற்காகவும் டக்ளஸ் தேவானந்தா தமிழ் நாட்டிற்கு வந்திருந்தார். இருந்தும், கட்சியின் உள் முரண்பாடுகள் தீர்க்கப்படாத நிலையிலும், அந்த முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்க டக்ளஸ் தேவானந்தா தாயகம் திரும்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். 1986 ஆம் ஆண்டு பதினோராம் மாதம், முதலாம் திகதி, அன்றைய தினம் ஒரு தீபாவளித் தினம். தோழர் டக்ளஸ் தேவானந்தா அரசியல் சந்திப்பு ஒன்றிற்காக வெளியே சென்றிருந்தார்.

அதேபோல் கட்சி அலுவலகத்தில் இருந்த ஏனைய தோழர்களில் பலரும் அரசியல் வேலைகள் நிமித்தம் வெளியே சென்று தமது மதிய உணவுக்காக திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது மதியம் இரண்டு மணியளவில் இருக்கும். மதிய உணவிற்காக ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் தமது அலுவலகம் நோக்கி திரும்பும் வழியில், அலுவலகத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் வீதி ஓரத்தில் ஒரு முச்சக்கரவண்டி நின்றிருந்தது. அதன் உள்ளேயும், அதைச் சுற்றியும் சிலர் நின்றிருந்தனர். அவர்கள் அனைவருமே மதுபோதையில் சத்தமிட்டு உரையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த முகங்கள் எதுவும் அந்த சூளைமேட்டுச் சூழலுக்கு பழக்கப்பட்ட முகங்களாகத் தெரியவில்லை. அவர்கள் வெளியூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களைக் கடந்து ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் செல்ல முற் பட்ட போது, அதில் சிலர் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் மீது திட்டமிட்டு முட்டி, மோதி வம்புக்கு இழுத்தனர்.

தம் மீது மோதி, தம்மோடு வரிந்து கட்டி, சண்டைக்கு வந்திருந்த அந்த குழுவினரின் செயற்பாடுகளைக் கண்டு ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் அதிசயத்தோடும், ஆச்சரியத்தோடும் விழித்து நின்றனர். பொதுவாகவே ஈழப்போராளிகள், தமிழ் நாட்டு வீதி வழியாக நடந்து வரும் போது அவர்களை அடையாளம் கண்டு, தமிழ் நாட்டு மக்கள் எந்த நிலையிலும் விலகி நின்று அவர்களுக்கு மரியாதை கொடுப்பது வழமை.

ஆனால் இங்கு வழமைக்கு மாறாக, அன்றுதான் ஈழப்போராளிகள் மீது முட்டிமோதி, வரிந்து கட்டி ஈழப்போராளி அமைப்புகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களோடு அந்த கூட்டத்தினர் ஒரு மோதலையே உருவாக்கிக் கொண்டனர்.

இதைக் கண்டு தம்மீது மோதியவர்களை நிலத்தில் தள்ளி விட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், தம்மை சுதாகரித்துக் கொண்டு தம்மை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, திட்டமிட்டு மோதிக் கொண்ட அந்த கூட்டத்தினர் உரத்து சத்தமிட்டனர். அடே, சிலோன் காரங்க எங்களை அடிக்கிறாங்கடா... என்று ஒருமித்து சத்தமிட்டனர்.

அந்த சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடி வந்தனர். வந்தவர்களில் சிலர் தாக்குதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களுக்கும் இடையில் நின்று விலக்கு பிடிக்க முற்பட்டனர். ஆனாலும், அதையும் மீறி தாக்குதல் நடத்த வந்த கூட்டத்தினர் தொடர்ந்தும் சிலோன் காரங்க அடிச் சிட்டாங்கடா... என்று சத்தமிட்டு தாக்கிக் கொண்டிருந்தனர். இதேவேளை தாம் முச்சக்கர வண்டியில் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த உருட்டுக் கட்டைகள், அரிவாள், போத்தல்கள் போன்றவற்றை எடுத்து வந்து தாக்குதலை தொடர்ந்தனர்.

செய்வதறியாது திகைத்து நின்ற ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், தம்மோடு வரிந்து கட்டி சண்டைக்கு வந்த குண்டர்களின் தாக்குதல் உக்கிரமடைந்ததைக் கண்டு, தமது அலுவலகத்தை நோக்கி சத்தமிட்டுக் கொண்டு பின்வாங்கி ஓடிச் சென்றனர். வெட்டுக் காயங்களுடன் இரத்தம் வழிய, வழிய அவர்கள் ஓடிக் கொண்டிருந்தனர்.

தமது சக உறுப்பினர்கள் இரத்தக் காயங்களுடன் சத்தமிட்டு ஓடி வருவதையும், அவர்களைக் குண்டர்கள் துரத்தி வருவதையும் கண்ட அலுவலகத்திலிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் தமது அலுவலகத்தில் இருந்து வெளியே ஓடி வந்து தமது உறுப்பினர்களை குண்டர்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முற்பட்டனர்.

ஆனாலும், மது போதையில் நின்றிருந்த குண்டர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தினுள் நுழைய முற்பட்டனர்.

தொடர்ந்தும் சிலோன் காரங்க அடிச்சிட்டாங்கடா என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. இதைக் கேட்டு ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தை பலர் சூழ்ந்து கொண்டனர். சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் ஈ.பி. ஆர்.எல்.எப் காரியாலயம் மீது உருட்டுக் கட்டைகள், போத்தல்கள், கற்கள் போன்றவற்றால் வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

இதேவேளை அலுவலகத்தின் முன்பாக இருந்த வேலியை கொளுத்தி எரித்ததோடு, அதன் அருகில் நின்றிருந்த துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் குண்டர்கள் நெருப்பில் தூக்கிப் போட்டு எரிக்கத் தொடங்கினர்.

அந்த வேளையில், தாக்குதல் நடத்த வந்த குண்டர் கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் ஏற்கனவே முரண்பாடு கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் பின் முக்கியஸ்தர்களாக இருந்த சிலரும் வேடிக்கை பார்ப்பது போல் நின்றிருந்தனர்.

சுரேஸ் பிரேமச்சந்திரன், வரதராஜப் பெருமாள், சோமு, ஜயக்கொடி, அம்பாறை காரைத்தீவைச் சேர்ந்த கிருபா, சாவகச்சேரி ஞானம் போன்றவர்களே அவர்கள். நிலைமை மோசமடைந்து விட்டது. அலுவலகத்தின் உள்ளேயும் நுழைந்து குண்டர்கள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். தம்மை பாதுகாப்பதற்காக வேறுவழியின்றி நின்றிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களில் ஒருவர், துப்பாக்கியை எடுத்து வந்து ஆகாயத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்க்கத் தொடங்கினார்.

இதன் போது தாக்குதல் நடத்த வந்த குண்டர்கள் ஓடி வந்து துப்பாக்கியை பறித்தெடுக்க முயன்றனர். அந்த இழுபறிக்குள் தவறுதலாக வெடித்த துப்பாக்கி வேட்டில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் தாக்குதல் நடத்த வந்த குண்டர்களை சேர்ந்தவர்கள் அல்லர். அந்த தாக்குதலின் இடையில் நின்று விலக்கு பிடிக்க வந்தவர்களை சேர்ந்தவர்களே அவர்கள் இருவரும்.

ஒருவர் திருநாவுக்கரசு, மற்றவர் குரு என்று அழைக்கப்படும் குருமூர்த்தி என்பவர். ஆனால் துப்பாக்கியை பறிக்க வந்த குண்டர்களுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்திருக்கவில்லை. நிலைமை மேலும் மோசமடைந்து விட்டது. காயப்பட்டவர்களை அங்குள்ளவர்கள் ஆட்டோ ஒன்றினுள் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் வெளியே சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினார்.

நடந்து முடிந்த சம்பவங்களை அவசரமாக கேட்டறிந்து கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அங்கு சூழ்ந்திருந்தவர்களோடு சமாதானமாக பேச முற்பட்டார். அவரது வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் நின்றிருந்த சிலர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தி அவரைக் காயப்படுத்தினர். உடனே, டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திருப்பித் தாக்காமல், தன்னை சுதாகரித்துக் கொண்டு, பொறுமையுடன் தனது உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இது யாரோ திட்டமிட்டு தூண்டிவிட்ட சதி முயற்சி, யாரும் திருப்பி தாக்குதல் நடத்த வேண்டாம். உடனடியாக அனைவரும் பின்வாங்கி செல்லுங்கள் என்று கூறிவிட்டு அவர்களோடு தானும் அலுவலகத்தினுள் நுழைந்து கொண்டார். தொடர்ந்தும் அந்த கும்பல் ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தை சூழ்ந்து நின்று அகோரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தது.

குண்டர்களில் சிலர் வீட்டின் கொங்கிaட் தட்டின் மேல் ஏறி பிக்காஸால் கொத்தியும், கடற்பாறையினால் குத்தியும் ஓட்டையாக்கி வீட்டிற்குள் பெற்றோல் ஊற்றி வீட்டையே எரிக்க முற்பட்டனர். நிலைமை கட்டுக்கு அடங்காமல் போக, டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு நின்றிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களை பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு போகுமாறு உத்தரவிட்டார். அனைத்து உறுப்பினர்களும் காயப்பட்ட உறுப்பினர்களையும், தமது துப்பாக்கிகளையும் தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு சென்று விட்டனர். டக்ளஸ் தேவானந்தா அவர்களும் அதே மொட்டை மாடியில் ஏறி நின்று தற்காப்பு வியூகம் அமைத்துக் கொண்டதோடு, திரண்டிருந்தவர்களுடன் உரையாடத் தொடங்கினார். ஏன் எம் மீது தாக்குதல் நடத்த வேண்டும்? நாங்கள் உங்களோடு உறவாகத்தானே இருந்து வருகின்றோம். நாங்கள் உங்களுக்கு என்ன தவறிழைத்திருக்கின்றோம்? தாக்குதல் நடத்த காரணம் என்ன? இவ்வாறு கேட்டுக் கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த சூழலில்தான் பொலிஸ் பணிப்பாளர் நாயகம் (டி.ஜி.பி) சிறிபால் அவர்களும், சென்னை மாநகர பொலிஸ் ஆணையாளர் தேவாரம் அவர்களும், உயர் அதிகாரிகளும், காவற்துறையினரும் அங்கு வந்திறங்கினார்கள். மொட்டை மாடிக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் டக்ளஸ் தேவானந்தா அவர்களோடு பேசத் தொடங்கினார்கள்.

இதேவேளை ஏற்கனவே குண்டர்களாலும், கும்பலாலும் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்ட தமது உறுப்பினர்களை காண்பித்தார் டக்ளஸ் தேவானந்தா. காயப்பட்ட உறுப்பினர்கள் இரத்தம் வழிய மொட்டை மாடியில் கிடத்தப்பட்டிருந்தனர். காவற்றுறை அதிகாரிகள் தம்மிடம் இருப்பவற்றைக் கொண்டு காயப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களுக்கு முதலுதவி சிகிச்சையளித்ததுடன், தமது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டனர். காயப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த அவசர நிலையிலும் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் அங்கு வந்திருந்த காவற்றுறை அதிகாரிகளுக்குமிடையில் பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்தன.

நீங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றார் சென்னை மாநகர பொலிஸ் கமிசனர் தேவாரம். அவ்வாறு நாம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை. சகல ஈழப்போராட்ட விடுதலை அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டது போலவே எமது ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திற்கும் இந்திய அரசால் இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆயுதங்களை நாம் ஒரு போதும் தவறாக பயன்படுத்தியதுமில்லை. இந்திய அரசு எமக்கு வழங்கிய இந்த ஆயுதங்களை நாம் துஷ்பிரயோகம் செய்ததுமில்லை. எமது அலுவலகம் நோக்கி மதிய உணவிற்காக வந்துகொண்டிருந்த எமது உறுப்பினர்கள் திட்டமிட்டே தாக்கப்பட்டிருக்கின்றார்கள். காயப்பட்டு எமது அலுவலகம் நோக்கி ஓடி வந்த உறுப்பினர்களைக் கண்டு எமது அலுவலகத்தில் இருந்த உறுப்பினர் ஒருவர் தற்காப்பின் நிமித்தம் வானத்தை நோக்கியே எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்தார். ஆயுதங்களை பறிக்க வந்த குண்டர்களுக்கும் எமது உறுப்பினருக்கும் இடையில் நடந்த இழுபறியில் தவறுதலாக வெடித்த துப்பாக்கி சூட்டிலேயே இருவர் காயப்பட்டிருக்கிறார்கள். நான் சம்பவ இடத்தில் நின்றி ருந்தால் இது கூட இங்கு நடந்திருக்காது. இருந்தும் நடந்து முடிந்த சம்பவத்திற்காக நான் வருத்தப்படுகின்றேன் என்றார் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்...

ஆனாலும் ஆயுதங்களை ஒப்படைத்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக நின்றனர் தமிழ் நாடு காவற்றுறை அதிகாரிகள். தொடர்ந்தும் அவர்களோடு பேசிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நடந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி. எமது இயக்கத்திற்குள் உள் முரண்பாடுகள் வலுப்பெற்றிருக்கின்றன. இதன் காரணமாகவே இந்த சதி நடவடிக்கை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஆகவே ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதை என்னால் ஏற்க முடியாது என வாதிட்டார்.

இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறியிருந்தும் தமிழ் நாடு காவற்றுறை அதிகாரிகள் அதற்கு இணங்கவில்லை. மொட்டை மாடித் தரையில் கிடத்தப்பட்டிருந்த, காயப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் அவசர சிகிச்சைக்காக காத்திருந்தனர். வெளியே தாக்குதல் நடத்துவதற்காக ஏவிவிடப்பட்ட குண்டர்கள் தாமும் சூளைமேட்டு இளைஞர்கள் போல் வேஷமிட்டு அங்கு திரண்டிருந்தவர்களை தூண்டி விட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிலமையை சுமுகமாக்குவதற்காக ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு இணக்கம் தெரிவித்து விட்டார். அதன்படி சென்னை மாநகர பொலிஸ் ஆணையாளர் தேவாரம் அவர்கள் ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவு வழங்கியதோடு, சூளை மேட்டு காவற்றுறை அதிகாரிகளை அழைத்து டக்ளஸ் தேவானந்தா அவர்களையும், ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களையும் அவர்களிடம் ஒப்படைத்தார். காவற்றுறை வாகனங்களில் ஏற்றப்பட்ட டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களும் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதே மருத்துவமனையிலேயே ஏற்கனவே தற்செயலான துப்பாக்கி வேட்டில் காயப்பட்ட சூளைமேட்டு இளைஞர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு டக்ளஸ் தேவானந்தா உட்பட அனைவரும் அமைஞ்சுகரை காவற்றுறை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டனர். அப்போது தான் அந்த துயரச் செய்தி வந்தது. அன்று தீபாவளி தினம் என்பதால் டாக்டர்கள் விடுமுறையில் சென்றிருந்த காரணத்தால் அதிக இரத்தப் பெருக்கு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் உரிய சிசிச்சை வழங்கப்படாமல் சூளைமேட்டு இளைஞர்களில் ஒருவரான திருநாவுக்கரசு மரணமடைந்து விட்டார்.

உண்மையாகவே அந்த மரணம் குறித்து டக்ளஸ் தேவானந்தா உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களும் மிகவும் மனத்துயரமடைந்தனர். வழக்கு தொடரப்பட்டு சுமார் 3 மாதங்களின் பின்னர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அனைத்து ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களும் பிணையில் விடுதலையாகிவிட்டனர். அதன் பின்னர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் அன்றைய ஈ.பி.ஆர்.எல்.எப்பின் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) என்ற அரசியல் கட்சியை உருவாக்கிக் கொண்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்த சம்பவ நேரம் அவ்விடத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நின்றிருக்கவில்லை என்ற உண்மை பலருக்கு இன்னும் தெரியாத ஒன்றாகவேயுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக தற்போது நீதிமன்றத்தின்முன் உள்ள குற்றச்சாட்டு என்னவென்றால், ஈ.பி.கோ 148ம் சட்டத்தின் படி அவர் ஆயுதங்களை வைத்திருந்தார் என்பதேயாகும். இதுதான் அன்று நடந்தது.

சூளை மேட்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது தான். பொலிஸ் முறைப்பாடுகளும், நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கும் இந்த உண்மைகளையே கொண்டிருக்கின்றன. 1990ஆம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக் கொண்டிருந்த போது இலங்கை திரும்பிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களின் போதும் இந்தியா சென்று பல்வேறு அரசியல் தலைவர்களை உத்தியோகபூர்வமாகவே சந்தித்துவந்திருக்கின்றார்.

(தேசவளவன்)

(நன்றி: தினகரன்)

அப்ப குற்றமற்றவர் என்றால் சட்ட ரீதியாக அணுகி தன் மீதுள்ள குற்றச்சாடு தவறானது என்பதை நிரூபிப்பது நல்லது தானே. அமைச்சருடன் உடன் இருப்பவர்களுக்கு தெரியும் பிரபாகரனை மாற்றீடு செய்ய வந்த தலைவர் டக்ளஸ் தேவானந்தா என்பது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com